Shadow

Author: admin

மனதில் மாயம் செய்தாய்

மனதில் மாயம் செய்தாய்

சினிமா, திரைத் துளி
தொலை தொடர்ப்பு சாதனங்கள் எந்த அளவுக்கு சாதகமானதோ  அந்த அளவுக்கு பாதகமானதும் கூட. இந்த உண்மையை பல செய்திகள் வாயிலாக நாம் படித்தும் கேட்டும் இருப்போம். இந்த மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் படம் தான் "மனதில் மாயம் செய்தாய் (M M S)".ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் சார்பில் ஜெய்சன் புலிகுட்டி மற்றும் வின்ஸ் மன்கடன் தயாரித்து உள்ள இந்த காதல் கலந்த த்ரில்லர் படத்தில் நடித்துள்ளோர் சேது (மைனா புகழ்), பிரின்ஸ், ரிச்சா பானாய், திஷா பாண்டே, மனோபாலா மற்றும் பலர். சேதுவின் நடிப்பும், படத்தின் திரைக்கதை வசனமும் மிகப் பெரிய பலம் என்பது பார்த்தவர்களின் கணிப்பு. இந்தப் படத்தை பற்றிய தயாரிப்பாளர்களின் கருத்து, "இது எங்களது நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. படத் தயாரிப்பின் நுணுக்கங்களை நாங்கள் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் எங்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு...
தைரியமூட்டிய அஜீத் – அக்ஷரா

தைரியமூட்டிய அஜீத் – அக்ஷரா

சினிமா, திரைத் துளி
உலகெங்கும் வசூல் சாதனை புரிந்து வரும் 'ஆரம்பம்' படத்தில் மத்திய  மந்திரி மகளாக நடித்து,  அஜீத் குமாரின் குளிர் கண்ணாடியைக்  கழற்ற சொல்லும் காட்சியில் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான  அக்ஷரா..  அந்தக் காட்சியைப் பற்றியும் , ஆரம்பம் திரைப்படத்தை பற்றியும், தன்னைப் பற்றியும் தன்னுடைய கனவையும் இதோ நம்மோடு பகிர்ந்து  கொள்கிறார்.'நான் அஜீத் சாருடைய தீவிர ரசிகை. அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்துக் கொண்டு இருந்தவள். என் நல்ல நேரம் அந்தத் தருணம் என் திரை உலகப் பயணத்தின் ஆரம்பத்திலே அமைந்தது. அஜீத் சாருடைய ரசிகர்கள் பலம், திரை அரங்கில் அந்தக் காட்சியைப் பார்க்கும் போது  தான் தெரிந்தது.  பயமாக இருந்தது என்றால் மிகை ஆகாது.  அந்த காட்சியில் நடிக்கும் போதே அஜீத் சார்தான் என்னை தைரியமூட்டினார். இப்போது எனக்கு இந்த அளவுக்கு நல்ல பெயர் கிட்டி இருப...

பொல்லாதவனாக கணேஷ் வெங்கட்ராமன்

சினிமா, திரைத் துளி
ஹிந்தியில் முதன்முறையாக,  “கன்ஸ் ஆஃப் பெனாரஸ் (Guns of Benares)” என்னும் படத்தில் அறிமுகமாகிறார் கணேஷ் வெங்கட்ராம்.வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பொல்லாதவன்’ படம் தான் ஹிந்தியில், ‘கன்ஸ் ஆஃப் பெனாரஸ்’ என மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது. டேனியல் பாலாஜி நடித்த பாத்திரத்தில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார்.“இயக்குநர் சேகர் சூரி எனது கதாபாத்திரத்தைப் பற்றி சொல்லும் பொழுது எனக்கும் முழுவதும் பிடித்து விட்டது. இதற்கு முன் கேங்ஸ்டராக நடித்ததில்லை. முழுப் படமும் பெனாரசில் தான் எடுக்கப்படவுள்ளது. எனது கதாபாத்திரம் பற்றி சொல்லணும்னா.. கொக்கைனுக்கு அடிமையான பொல்லாதவனாக நடிக்கிறேன். எனது கையில் அகோரியை  பச்சை குத்தியிருப்பேன்.நான் ஹிந்தி நன்றாகப் பேசுவேன் எனினும், 20 நாளுக்கு முன்பே பெனாரஸ் சென்று உ.பி. மாநில தொனியைப் பழகி வர்றேன். அந்த ஊர் மாஃபியாக்களின் பாடி லேங்க்வேஜ...
ஜெய் “ஆந்திரா மெஸ்”

ஜெய் “ஆந்திரா மெஸ்”

சினிமா, திரைத் துளி
தலைப்பில் என்ன இருக்கிறது என்ற காலம் போய்  தலைப்பில் தான் எல்லாமே இருக்கிறது என்கிற காலம் இது போலும். ரசிகர்களைக் கவரும் வண்ணம் தலைப்பு  சூட்டியுள்ள படங்கள் உடனே பிரபலமாகாவது  வித்தியாசமான தலைப்புகளைப் புதிய இயக்குனர்களை யோசிக்க வைக்கிறது.  ‘ஷோ போட் (Show boat)’  ஸ்டூடியோஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும்  படத்தின் தலைப்பு 'ஆந்திரா மெஸ்'. சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது . அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மன மில்லாமல் , யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்கை பயணமே  'ஆந்திரா மெஸ்'.  ...
“திருடன் போலீஸ்” பற்றி எஸ்.பி.சரண்

“திருடன் போலீஸ்” பற்றி எஸ்.பி.சரண்

சினிமா, திரைத் துளி
சென்னை 28, குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் , மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் ஆகிய படங்களைத் தயாரித்த  S .P.சரணின்  கேபிடல் பிலிம் வொர்க்ஸ் நிறுவனத்துடன் கெனன்யா பிலிம் சார்பில் J . செல்வகுமார்  இணைந்து தயாரிக்கும் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம் 'திருடன் போலீஸ்'.திருடன் போலீஸ் படத்தைப் பற்றி, அப்படத்தின் தயாரிப்பாளர்    எஸ்.பி.சரண், “நான் எப்போதுமே என் படங்கள் வித்தியாசமாக  இருக்க வேண்டும் என மெனக்கெடுவேன். எனது முந்தையப் படங்கள்,  எனக்கு அத்தகைய படங்களாகவே அமைந்தன. சிறிது காலம் படத்தயாரிப்பில் நான் ஈடுபடாமல் இருந்தாலும், இப்போது 'திருடன் போலீஸ்' படத்தின் இயக்குனர் கார்த்திக் கூறிய கதை மீண்டும் உடனடியாகப் படம் எடுக்கும் ஆவலைத் தூண்டியது. எனது முந்தையப் படங்கள் போலவே இந்தப் படமும் எனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு மணி மகுடமாகத் திகழு...
இல்ல ஆனாலும் இருக்கு

இல்ல ஆனாலும் இருக்கு

சினிமா, திரைத் துளி
மனம் கவரும், இளமை தளும்பும், தொழில் நுட்பத்தில் முத்திரை பதிக்கும் தரமான படங்களை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம்,  விண்ணை தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், நீதானே என் பொன் வசந்தம்  ஆகிய படங்களை  தொடர்ந்து தற்போது ரவி. கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக துளசி நடிக்கும் 'யான்' படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. தலைப்பில் மட்டுமின்றி படத்தின் தரத்திலும் வித்தியாசமாக இருக்க முனையும் இந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு  'இல்ல ஆனாலும் இருக்கு'. நகைச்சுவை கலந்த திகில் படமான 'இல்ல ஆனாலும் இருக்கு' திரைப்படத்தில் 15 புதிய தொழில் நுட்ப கலைஞர்கள் அறிமுகமாக உள்ளனர். 'ஒரே படத்தில் இவ்வளவு கலைஞர்களை அறிமுகப்படுத்துவது   மிகவும் பெருமைக்குரியது. இவர்கள் எல்லோருமே நிச்சயமாகத்  திரையுலகில்  பிரக...
ஆரம்பம் விமர்சனம்

ஆரம்பம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஜீத், விஷ்ணுவர்தன், சுபா, ஆர்யா, நயன்தாரா என ஏகத்துக்கும் கூட்டப்பட்ட எதிர்பார்ப்பு, கிஞ்சித்தும் குறையாமல் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளது. அஜீத் ரசிகர்களுக்கும், தமிழ்த்திரை  ரசிகர்களுக்கும் இந்த தீபாவளி நல்லதோர் ஆரம்பமாக இருக்கும்.ஊழல் செய்யும் அரசியல்வாதி ஒருவர் லஞ்சம் வாங்கிக் கொண்டு, தீவிரவாதி ஒருவனைத் தப்பிக்க வைக்கப் பார்க்கிறார். பின் என்னானது என்பதுதான் கதை.அமர்க்களமாக அறிமுகமாகிறார் அஜித். மங்காத்தாவில் மிச்சம் வைத்திருந்த வில்லத்தனத்தை இப்படத்தில் தொடர்கிறார். தனது வயதிற்கேற்ற பாத்திரத்தில் தோன்றுகிறார். இளம் வெண்தாடியிலும் செம ஸ்டைலிஷாக இருக்கிறார். ‘டொக்.. டொக்..’ என சத்தமிட்டு அனைவருக்கும் டைம் ஃபிக்ஸ் செய்கிறார். படத்தில் இவருக்கு ஜோடியும் இல்லை; டூயட்டும் இல்லை. நாயகனாக நடிப்பவருக்கு 60 வயது என்றாலும், திரையில் கண்டிப்பாக 20>30 வயதுடைய நாயகி, காதலியாக இருந்தே ஆகவே...
பாயிம் சனங்களுக்கு அஞ்சுனனே!

பாயிம் சனங்களுக்கு அஞ்சுனனே!

கட்டுரை, புத்தகம்
சாதிய உள்முரண்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தான் எழுத்தாளர் இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ மீது எழுந்த குற்றச்சாட்டு. அதற்கு, “சமூகத்தின் மொத்த ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்கிற பறையர் சமூகம், தனக்குக் கீழுள்ள வண்ணார், சக்கிலியர் இன சமூகங்களை ஒடுக்குகிற ஓர் ஆதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது என்பது உண்மை’ என பதிலுரைத்தார் இமையம். நாவல் வெளிவந்த ஆண்டு 1994 ஆகும்.  நாவலின் பிரதான கதாபாத்திரம் ஆரோக்கியம். அவர் வண்ணாத்தி. பறையர் சமூகத்தை நம்பிப் பிழைப்பவர். அவருக்கான கூலிகள் வருடாவருடம் குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அவரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. அவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். ஒரு கட்டத்தில் அனைவரைமே இவரை விட்டுப் பிரிந்து விடுகின்றனர். பிள்ளைகளின் பிரிவும், ஊராரின் அலட்சியமும் அவரை நொறுக்கி விடுகிறது. அந்த நிலைமையிலும் அவருக்கு ஊர்ப்பாசமும், ஊர்மக்கள்...
சிங்கமுக ஆசிரியர்

சிங்கமுக ஆசிரியர்

கதை, படைப்புகள்
ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாண மண்ணில் தொடங்கிய நான் சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்து நாவலப்பிட்டி எனும் ஊருக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தேன். அங்கே அடுத்த வகுப்பினில் ஓராண்டு படித்தேன். பின் தந்தையின் வேலை மாற்றத்தால் எட்டியாற்தோட்டை எனும் ஊருக்குச் சென்றோம். அங்குள்ள தமிழ்ப் பாடசாலையில் அடுத்த இரண்டாண்டுகள் படித்தேன். மீண்டும் மாற்றலான தந்தையைப் பின்தொடர்ந்த நாங்கள் இரத்தினபுரி என்ற நகரில் சுமார் ஆறாண்டுகள் வாசம் செய்தோம்.இரத்தினபுரி தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரம் வரை பயின்று அதில் சித்தியும் பெற்றதோடு ஆசிரியர்களின் செல்லப்பிள்ளையாகவும் திகழ்ந்தேன். அந்தப் பாடசாலையில் ஸ்திரமாக எனது பெயரை, கல்வி மற்றும் பிற துறைகளில் நிலை நாட்டினேன். கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தையும் அங்கே தொடரலாம் என்ற என் கனவு பொய்யானது.தந்தை மீண்டும் மாற்றலுக்குத் தயா...
சுட்ட கதை விமர்சனம்

சுட்ட கதை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சுட்ட கதை – முழு நீள ஃபேண்டசி தமிழ்ப்படம்.‘பாஸ்மார்க்’கில் (BOSSMARK) குடித்து விட்டு ஒருவரை ‘சுட்டு’க் கொலை செய்து விடுகிறார் கோரமலை கான்ஸ்டபிள் ராம்கி. பின் என்னானது என்பது தான் சுட்ட கதை.கான்ஸ்டபிள் ராம்கியாக பாலாஜி. அவர் அனிச்சைத் திருட்டு (Kleptomania) எனும் உளக்குறையால் பாதிக்கப்பட்டவர். இவரும் வலப்பக்க காது கேளாதவருமான கான்ஸ்டபிள் சங்கிலிராயனும் லட்சியவாதிகள். கோரமலையில் தர்மத்தை நிலைநாட்டுவது தான் அவர்களின் அந்த உயரிய லட்சியம். சிலந்தி எனும் மலைவாசிப் பெண்ணால் அவர்களின் லட்சியம் கொஞ்சம் சறுக்கினாலும், ஒரு கட்டத்தில் “ஃபிகரை விட தர்மமே முக்கியம்” என சிலந்தியையே தூக்கி எறிகின்றனர். கான்ஸ்டபிள் சங்கிலிராயனாக வெங்கி. இந்த இருவர் தான் படத்தின் கதாநாயகர்கள்.  சிலந்தியாக லக்ஷ்மி பிரியா. அறிமுக நாயகி. கோரமலையின் மலைவாழ் மக்களின் சாமி (அ) வீராங்கனை. இடுப்பில் ஒரு குறுவாள...
ரகளபுரம் விமர்சனம்

ரகளபுரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரகளபுரம் - கருணாஸ் மிக சிரமப்பட்டு தயாரித்து நடித்துள்ள படம். பயந்தாங்கொள்ளி வேலுவிற்கு கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. பிறகு என்னாகிறது என்பது தான் கதை.படத்தின் கதாநாயகன் தொடைநடுங்கி வேலுவாக கருணாஸ். தன்னை ‘கதையின் நாயகன்’ என்றே சொல்லிக் கொள்கிறார். கதாபாத்திரத்திற்கு அவர் முகம் பொருந்துகிறது. நன்றாக நடனம் ஆடுகிறார். கதைப்படி, துப்பறியும் சாம்பு பாணியில் இன்ஸ்பெக்டராகி விடுகிறார். ஆனால் அதற்கான சுவாரசியமும் திருப்பமும் போதிய அளவு திரைக்கதையில் இல்லை. மேலும் கருணாஸ் நாயகன் என்றால் நகைச்சுவைப் படமாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், முழுவதுமாக திருப்திப்படுத்தப்படவில்லை. அறிமுக நாயகியாக அங்கனா ராய். அதாவது கருணசுக்கு ஜோடியாக ஒருவர் தேவை என்பதால் படத்தில் உள்ள ஒரு பாத்திரம். கருணாசின் அம்மாவாக உமா பத்மநாபன். சரண்யா பொன்வண்ணனை ஏனோ ஞாபகப்படுத்துகிறார். கோவை சரளா, சிங்கம்புலி ...
உலகநாயகனைச் சந்தித்த அட்லி

உலகநாயகனைச் சந்தித்த அட்லி

சினிமா, திரைத் துளி
இயக்குநர் அட்லி தன்னுடைய முதல் படமான 'ராஜா ராணி' திரைப்படத்தின் மூலம் நல்ல தரமான காதல் படங்களை இயக்குவதில் ஒரு நிபுணர் என்பதை தன்னுடைய முதல் படத்தின் வெற்றியிலே  நிருபனம் செய்துள்ளார். இந்த அரிய வாய்ப்பு எல்லா அறிமுக இயக்குநருக்கும் கிட்டுவதில்லை. ஆனால் இந்த  இளம்  இயக்குநர் அவர் மீது  உள்ள எதிர்பார்ப்பையும் மீறி பெரும் வெற்றி அடைந்துள்ளார். இன்று படத்தின் 25ஆம் நாளை முன்னிட்டு பத்மஸ்ரீ கமலஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அட்லி.'ராஜா ராணி படத்தை கமல் சார் தான் துவக்கினார். வெற்றி பெற்றதும் அவரிடமே ஆசி  பெற வேண்டும் , அவருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். என்னுடைய  உழைப்பு அதன்  பிரதிபலனாகக் கிடைத்த வெற்றி ஆகியவைப் பற்றி விவரமாகக் கேட்டு அறிந்தவர் , படத்தின் சிறு நுணுக்கத்தையும் விசாரித்த பொது அந்த மனிதரின்  திரையுலக...
வருகிறது கொரியன் ‘கொரில்லா’

வருகிறது கொரியன் ‘கொரில்லா’

சினிமா, திரைத் துளி
தென் கொரியாவும் சீனாவும் இணைந்து தயாரிக்கும் படம், மிஸ்டர் கோ (Mr. Go). ஆசியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மிஸ்டர் கோ படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.நவம்பர் 14 அன்று இப்படம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளியாகவுள்ளது. குழந்தைகளுக்கான படமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் முழுவதும் 3டி-யில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் முதலிய மொழிகளில் வெளியாகும் முதல் கொரியப்படம் ‘மிஸ்டர் கோ’ என்பது குறிப்பிடத்தக்கது.பேஸ்பால் விளையாடும் லிங் லிங் எனும் 3டி டிஜிட்டல் கதாபாத்திரமான கொரில்லா தான் படத்தின் சிறப்பம்சம். படத்தில் 100% கொரியன் தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது. கொரியன் பட வரலாறில் இது முதல்முறையாகும்.‘200 பவுண்ட்ஸ் ப்யூட்டி’ மற்றும் ‘டேக் ஆஃப்’ படங்களின் இயக்குநரான கிம் யாங்-க்வா (Kim Yong Hwa) தான் இப்படத்தி...