Shadow

Author: admin

தலைவா விமர்சனம்

தலைவா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைவா - எதிர்ப்பார்ப்பிற்கும், எதிர்ப்பிற்கும் காரணமான தலைப்பு. இயக்குநர் விஜயும் நடிகர் விஜயும் இணையும் முதல்படம். சற்றே பெரிய படம். காதலியை அழைத்துக் கொண்டு தந்தையைப் பார்க்க இந்தியா வருகிறான் விஸ்வா. தொழிலதிபர் என நினைத்துக் கொண்டிருந்த தந்தை, மக்கள் கூட்டம் ஒன்றின் தலைவர் எனத் தெரிய வருகிறது. தன் கண் முன்பே இறக்கும் தந்தையின் மறைவிற்குப் பின், விஸ்வாவின் நிலைப்பாடு என்ன என்பது தான் கதை.டான்ஸ் மாஸ்டர் விஸ்வாவாக விஜய். இளமை துள்ளலுடன் அமைதியாக அசத்துகிறார். சுமார் ஒரு மணி நேரம் படம் கவிதை போல் அழகான காதல் கதையாக நகர்கிறது. இடைவேளை வரை பார்த்த அதே விஜய் மீண்டும் இரண்டாம் பாதியிலும். ஆனால் துள்ளல் குறைந்து, முகத்தில் எதையோ சாதிக்கத் (!?) துடிக்கும் தீவிரத்தை பிரதிபலித்தவாறே உள்ளது அவர் முகம். ஆனால் படத்தில் விஜய் அதிர்ந்து ஒரு குத்து வசனம் கூட பேசாதது மிகப் பெரிய ஆறுதல். ஆன...
ஆதலால் காதல் செய்வீர் விமர்சனம்

ஆதலால் காதல் செய்வீர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
101 நிமிடப்படம்.   கல்லூரி மாணவர்களான கார்த்திக்கும், ஸ்வேதாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். கார்த்திகுடனான நெருக்கத்தால் ஸ்வேதா கருவுறுகிறாள். பின் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை.    கார்த்திக்காக நடித்துள்ளவர் சந்தோஷ் ரமேஷ். சில காட்சிகளில் இளித்து பயமுறுத்துகிறார். எனினும் பொறுப்பற்ற கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் அவரை ஏற்றுக் கொள்ளலாம். காதலிக்கவில்லை என்றால் இறந்து விடுவேன் என பேருந்தில் இருந்து விழுகிறார். ஒருவன் உயிரைக் கொடுக்க துணிந்தால், அவன் தன் மீது அதிகமான காதல் வைத்திருக்கான் என நம்புவதை முதலில் தமிழ்ப்பட நாயகிகள் நிறுத்த வேண்டும். உயிரின் மதிப்பை அறியாதவனின் மன முதிர்ச்சி எந்த அளவில் இருக்கும்? தற்கொலை என அச்சுறுத்தி நாயகியிடம் ஈட்டிய வெற்றித் தந்த குதூகலத்தில், கல்யாணத்திற்காக கையை அறுத்து பெற்றோரை அடிபணிய வைக்கிறான். நான் உயிரைக் கொடுக்கப் போ...
ஐந்து ஐந்து ஐந்து விமர்சனம்

ஐந்து ஐந்து ஐந்து விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
555 என்ற இலக்கம் கொண்ட டாலர் ஒன்று படத்தில் வருகிறது. இல்லையெனில் படத்தின் தலைப்பிற்கு காரணம் கண்டுபிடிக்க சிரமமாக இருந்திருக்கும்.விபத்தில் இறந்த காதலி லியனாவையே நினைத்துக் கொண்டிருக்கிறான் அரவிந்த். காதலி என்று யாருமில்லை, தலையில் அடிபட்டதால் அரவிந்திற்கு ஏற்படும் கற்பனை என மருத்துவர் கூறுகிறார். லியனா என்பவர் காதலியா கற்பனையா என்ற அரவிந்தின் தேடலுக்கான விடை தான் படம்.அரவிந்தாக பரத். சிக்ஸ்-பேக் கட்டுடலுடன் களம் இறங்கியுள்ளார். நாயகர்கள் ஈர்க்குச்சி போலிருந்தாலே வில்லன்கள் ஆளுக்கொரு மூலையில் தெறித்து விழுவார்கள். சிக்ஸ்-பேக் ஹீரோன்னா சும்மாவா? மூளையின் மெமரி செல்களை அழிக்க பரத்திற்கு கரன்ட் தருகிறார்கள். பரத் துடிதுடித்துப் போய் விடுகிறார். ஆனால் உடனே எழுந்து அடியாட்களை துவம்சம் பண்ணுகிறார். முகத்தில் வெட்டுகளுடன் உம்மென்று வருகிறார் முதல்பாதியில். இடையிடையில் தாடியில்லாத வழவழப்ப...
பிரதிபலிப்புகளும் புறத்தோற்றங்களும்

பிரதிபலிப்புகளும் புறத்தோற்றங்களும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 26நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகத்தை சிலர் துன்பங்களும் சிக்கல்களும் நிறைந்ததெனக் கூறுவர். ஆனால் நலமும் கேடும் கலந்து காணப்படுவதே இவ்வுலகம் என்ற எண்ணம் பொதுவாக எல்லோருக்கும் உண்டு. உண்மை யாதெனில், நாம் வெளியுலகில் காணும் கேடுகள் எல்லாம் நமது எண்ண விருத்திகளின் பிரதிபலிப்புகளும் புறத்தோற்றங்களுமே. புண்பட்ட மனமுள்ளவர்களுக்கு கேடுகள் வரினும் அவை கெடுதி நிறைந்தவையாகத் தென்படுவதில்லை.சிறு நேரத்து இன்பத்தை அடைவதற்கு பல துன்பங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. அவை இருக்குமளவுக்கு மனிதனுக்கு துன்பமும் இருக்கும். ஆசை அறுபடுமளவுக்கு அமைதி உண்டாகிறது. இந்திரியங்களை வெல்லாத வரை, மனதை அடக்கி ஆள இயலாதவரை, துன்பங்கள் குறைவதில்லை.நாம் நம்மைப் பார்த்துக் கொள்வதெல்லாம் அழிந்து போகும் உடலின் கோணத்திலிருந்தேயொழிய, அழிவற்ற ஆத்மாவின் நோக்கில் அல்ல. ஆகையினால் தான் உட...
சொன்னா புரியாது விமர்சனம்

சொன்னா புரியாது விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"ஏன்டா.. கல்யாணமே வேணாம்னு சொல்ற?""உங்களுக்கு சொன்னா புரியாது" என கிட்டர் எடுத்துப் பாடத் தொடங்கி விடுகிறார் ஷிவா. படத்தின் தலைப்பை எப்படி நியாயப்படுத்தியிருக்கார் பாருங்க இயக்குநர்?வோல்க்ஸ்வேகன் கார் வாங்க வேண்டும் என்பது தான் ஷிவாவின் 20 வருடக் கனவு. அந்தக் கனவு நிறைவேறியதா என்பதற்கு பதிலுடன் படம் சுபமாய் முடிகிறது.டப்பிங் ஆர்டிஸ்ட் ஷிவாவாக ஷிவா. தமிழ்நாட்டின் மானத்தைக் காக்க அறிமுகமாகி, விக்ரமின் ‘லாலா’விலிருந்து, ரஜினியின் ‘அஜக்குன்னா அஜக் தான்’, மொழிபெயர்க்கப்படும் ஜெட்லி பட வசனம், சாம் அன்டர்சனின் நடனம் எனப் பாரபட்சமில்லாமல் அனைவரையும் கலாய்க்கிறார். கோபம், வருத்தம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என அனைத்துப் உணர்ச்சிகளுக்கும் சிரித்தவாறே முகத்தை வைத்துள்ளார். அவரது அனைத்துப் படங்களைப் போலவே, எந்தச் சூழ்நிலையிலும் அசால்ட்டாக வசனம் பேசி ரசிக்க வைக்கிறார். அஞ்சலியாக வசுந்தரா ...
பட்டத்து யானை விமர்சனம்

பட்டத்து யானை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பட்டத்து யானை – அரச சின்னங்களைத் தாங்கியதும், அரசன் பவனி வரவும் அரண்மனையில் வளர்க்கப்படும் யானை. அப்படி யார் இந்தப் படத்தில் யானை என்று தெரியவில்லை. ஐஸ்வர்யாவை வில்லன்களிடமிருந்து ஏன், எதற்கு, எப்படி சரவணா காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.சமையல்காரர் சரவணனாக விஷால். படத்தின் முதற்பாதியின் கடைசியில் அடிக்கத் தொடங்குபவர், அதன்பின் படம் முடியும் வரை அனைவரையும் சகட்டுமேனிக்கு பறக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். டி.வி.எஸ். 50, கோயில் உண்டியல், பெரிய இரும்பு ஜல்லிக் கரண்டி, சோடா பாட்டில், பீர் பாட்டில் என ஒருமுறை உபயோகித்த ஆயுதத்தை மறுமுறை உபயோகிக்க மாட்டேங்கிறார். எத்தனையோ பேருடன் எவ்வளவோ சண்டைப் போட்டாலும்.. சட்டை கிழிந்து விடாமல் அலேக்காக வில்லன்களை துவம்சம் செய்யும் மாபெரும் சண்டக்கோழியாக உள்ளார். ஒரு துளி ரத்தம் சிந்தாமல், அனைவரையும் இரத்தக்களறியாக்கி சிதறவிடுகிறார். பிரதான வில்லனாக்...
சிரார்த்த கிரியைகள்

சிரார்த்த கிரியைகள்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 25இந்து வேதங்கள், சிரார்த்த கிரியைகள் மூதாதையர்களின் ஆவிகளின் ஷேமத்துக்காக செய்யப்படுவதையும் அவைகளுக்கு உணவு பானம் முதலியன படைக்கப்படுவதையும் விவரிக்கின்றன. இந்த வழக்கங்கள் இந்துக்கள் மத்தியில் மாத்திரமன்றி, கிரேக்கர்கள், யூதர்கள், ஆஃப்ரிக்க ஆதிவாசிகள், பிரித்தானியர்கள் போன்ற வேறு பல இனமக்கள் மத்தியிலும் காணப்பட்டன. ஆங்கிலத்தில் இவ்வழக்கத்தை Libation என்று கூறுகிறார்கள்.இறந்தவரை நினைத்து அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்திப்பதும் அவருடைய நினைவாக ஏழைகளுக்குத் தானம் வழங்குவது போன்ற புண்ணிய கருமங்களைச் செய்வதும் இறந்தவருக்கு நன்மை பயக்கும் காரியங்களாகும். இறந்தவர் புதிய பிறப்பொன்றை எடுத்துவிட்ட பின்னரும் அவருடைய மனோசரீரத்தில் சிரார்த்தக் கிரியைகளால் நல்விளைவுகள் ஏற்படுகின்றன. மனிதனின் மனதில் இருந்து எழும் சிந்தனை அலைகள் மிகவும் சக்தி வாய...
ஆவிகளின் தொடர்பு

ஆவிகளின் தொடர்பு

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 24ஆவிகளுடன் பூவுலக மனிதர்களால் தொடர்பு வைக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் அழைக்கும் ஆவிதான் உண்மையில் எங்களுடன் வந்து பேசுகிறது என்பதும், நமது கேள்விகளுக்கு அவைகள் தரும் விடைகள் உண்மையானவை தான் என்பதும் கேள்விக்குறிகளாகவே இருக்கின்றன.மேற்கு நாடுகளில் தான் ஆவிகளுடன் தொடர்பு கொள்பவர்கள் கூடுதலாகக் காணப்படுகிறார்கள். இதறக்கென்றே குழுக்கள் அமைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். “மீடியம்” களாக செயல்படுவதை தொழிலாக ஏற்றுள்ளவர்களும் இருக்கிறார்கள்.“மீடியம்” ஆக செயல்படுபவரின் மனமும் உடலும் ஆவியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் அவர் தன் வயமிழந்த நிலையை அடைந்து விடுகிறார். ஆவியானது அவருடைய உடலின் சக்தியையும் மனோசக்தியையும் தனதாக்கிக் கொண்டு அவர் மூலமாக பேசுகின்றது. சில சமயங்களில் அவருடைய உடலிலிருந்து “எக்டோபிளசம்” (ectoplasm) என்ற ஊனம் ப...
தேவதைகளும், பேய் பிசாசுகளும்

தேவதைகளும், பேய் பிசாசுகளும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 23டாக்டர் ஆப்ரஹம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகள் எக்காலத்திலும் எல்லா நாடுகளிலும் இருந்திருக்கிறார்கள். எவ்வளவுதான் இப்பகுத்தறிவுவாதிகள் தெய்வங்கள், தேவதைகள்,பேய்கள், பிசாசுகள், ஆவிகள் எல்லாம் வெறும் கற்பனைகள் என்று அடித்துக் கூறினாலும், அவர்களுடைய விவாதங்களை ஏற்றுக் கொண்டவர்கள் வெகுசிலரே. மக்கள் இவைகளில் கொண்டுள்ள நம்பிக்கைகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் கைவிடப்படாமல் தொடர்ந்து வந்திருக்கின்றன.கனிப்பொருளிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து மனித உருவை எய்திய மனிதன் வேறுவகைகளிலும் பரிணமித்து இயற்கை ஆவி உருக்களாக (Nature Spirits) தோற்றம் பெற்ற உயிரினங்களும் இருக்கின்றன. இயற்கையின் மூலப்பொருட்களை இயக்குவதற்கென்றே ஆவி உருக்கள் இயற்கையின் திட்டத்தில் அமைந்துள்ளன.ஆரணங்குகள் (Fairies), கந்தர்வர்கள், நிலத்தெய்வம், நீர்த்தெய்வம், அனல்தெய்வம் ஆகியவைகளைப் பற்ற...
தற்கொலையும், அதன் விளைவுகளும்

தற்கொலையும், அதன் விளைவுகளும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 22கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற ஒருவர் தான் புரிந்த கொலையின் பயங்கரத்தையும், தான் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையின் பின் தூக்கிலிடப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து, அவை திரும்பத்திரும்ப நிகழ்வது போன்ற கற்பனையில் ஈடுபட்டிருந்து கொண்டு அதே துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.பெரும் தீவிபத்தில் உயிர்நீத்த பெண்மணியொருவர், இறந்து ஐந்து நாட்களின் பின்னரும் தீயின் கோரப்பிடியில் தான் சிக்குண்டதையும் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள தான்பட்ட அவஸ்தைகளையும் திரும்பத் திரும்ப மனக்கண்முன் நிறுத்தி அவை மறுபடியும் மறுபடியும் நிகழ்வது போன்ற மனப்பிரமையில் இருக்கக் காணப்பட்டார் என்று கூறப்படுகின்றது.தனது குழந்தையை மார்போடு அணைத்துப் பால் கொடுத்துக் க...
மரியான் விமர்சனம் விமர்சனம்

மரியான் விமர்சனம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனுஷின் 13 வருட காத்திருப்புஒருவழியாகத் திரையேறி விட்டது.சூழலால் நீரோடி கிராமத்தில் இருந்து சூடான் நாட்டிற்கு வேலைக்கு செல்லும் மரியான், அந்நாட்டில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து தப்பினானா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.அம்பிகாபதியில் அசத்திய தனுஷின் நடிப்பு கண்ணிலிருந்து மறையும் முன் மரியானில் மீண்டும் தனது நடிப்புத் திறமையை மேலும் அழுத்தமாகப் பதிக்கிறார். 2011 இல் வெளிவந்த மயக்கம் என்ன படத்திலிருந்தே பெரிதும் வியக்க வைக்கிறார். காதல், பிரிவு, வலி, உறுதி, எழுச்சி எனப் படத்தினை ஐந்தாகப் பிரித்துள்ள இயக்குநரின் எதிர்பார்ப்பை, தனது நடிப்பால் சிந்தாமல் சிதறாமல் பூர்த்தி செய்துள்ளார் தனுஷ். முதல் காட்சியிலிருந்து படம் முடியும் வரை தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலான காட்சிகளில் நீக்கமற நிறைந்துள்ளார். தனுஷின் நண்பன் சக்கரையாக வரும் அப்புக்குட்டி எப்பொழுதும் போல் பாத்திரமாகவே வந்து ...
சிங்கம் II விமர்சனம்

சிங்கம் II விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிங்கம்வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மூன்று வருடங்களுக்குப் பின் வந்துள்ளது.தூத்துக்குடியில் நடக்கும் போதைப் பொருள் வியாபாரத்தை எப்படி துரைசிங்கம் வேரோடு சாய்க்கிறார் என்பது தான் படத்தின் கதை.துரைசிங்கமாக சூர்யா. கையிலும், கண்ணிலும் நெருப்பு எரிகிறது. சராமாரியாக அனைவருக்கும் அட்வைஸ்களை வாரி வழங்குகிறார். ஆனால், “ஆஃப்ரிக்க குரங்கு” என இனவெறியில் பிரதான வில்லனைத் திட்டுறார் ஊருக்கு உபதேசம் செய்யும் சிங்கம். சமீபத்தில் வெளிவந்த எதிர்நீச்சல் படத்தில், மராத்தான் போட்டியில் ஓடும் நைஜிரீயர் ஒருவர் தாகத்தில் தவிக்கும் சிவகார்த்திகேயனுக்கு தண்ணீர் தரும் காட்சி ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கிறது. நீதியையும், தர்மத்தையும் காப்பாற்ற துரைசிங்கம் சுமார் 25 பேரை சுட்டுக் கொல்கிறார். அதில் 14 பேர் இந்தியர்கள். மற்றவர்கள் தென் ஆஃப்ரிக்காவினர். ‘காத்திருத்தல் தான் காதல்’ எனச் சொல்வதற்கு மட்...
அம்பிகாபதி விமர்சனம்

அம்பிகாபதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அம்பிகாபதி – தனுஷ் நடித்த ராஞ்சனா ஹிந்திப் படத்தின் தமிழ் டப்பிங். 1937இலும் 1957இலும் வெளிவந்த ‘அம்பிகாபதி’ படத்தில், நாயகனுக்கு ஏற்படும் முடிவு தான் இப்படத்தின் நாயகனுக்கும் ஏற்படுகிறது. அதனால் தான் இந்தத் தலைப்பை நீதிமன்றம் வரை சென்று சமரசம் பேசி பெற்றனர் போலும்.காசி வாழ் தமிழ் அர்ச்சகரின் மகன் குந்தன் ஷங்கர். அவனுக்கு முஸ்லீம் பெண்ணான ஜோயா மீது காதல். ஜோயாக்கோ ஜஸ்ஜீத் சிங் மீது காதல். இந்த முக்கோணக் காதல் கதை தான் படத்தின் கதை.குந்தன் ஷங்கராக தனுஷ். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட தனுஷ். சோனம் கபூர் தனுஷின் கன்னத்தில் அறைந்தால், கிடைத்தற்கரிய ஏதோ பெற்றதாய் அழகாக பதினைந்து முறையும் இளிக்கிறார். ‘என்னைப் பார்க்கப் பார்க்க தான் பிடிக்கும்’ என வம்படியாகச் சுற்றி காதலிக்க வைப்பதிலிருந்து, கையை அறுத்து அச்சுறுத்தி காதலிக்க வைப்பதற்கு முன்னேறியிருக்கார். குழப்பமும், சுயநலமும் மிக்க இளைய சம...
தில்லு முல்லு விமர்சனம்

தில்லு முல்லு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1981-இல் பாலசந்தரின் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தில்லு முல்லு’ வெளியானது. சிவாவை நடிக்க வைத்து அப்படத்தை ரீ-மேக்கியுள்ளார் இயக்குநர் பத்ரி.முருக பக்தரான சிவகுருநாதரிடம், பக்திப் பழமாக வேடமிட்டு வேலையில் சேருகிறான் பசுபதி.  வேடம் கலையாமல் இருக்க பொய் மேல் பொய் சொல்கிறான் பசுபதி. பசுபதியின் வேடம் எப்படிக் கலைகிறது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.எப்பொழுதும் போல் அதிக சிரமப்படாமல், தன் கதாபாத்திரத்தை சிரித்து முகமாக ரசித்துச் செய்துள்ளார் சிவா. அவரது பலமே சீரியசான நேரத்திலும் அசால்ட்டாக வசனம் பேசுவது தான்.  “இது என்னோட ராஜினாமா லெட்டர். இது என் தம்பியுடைய ராஜினாமா லெட்டர். சைனீஸ்ல எழுதியிருக்கு” என சிவா சொல்லும் பொழுது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது.தமிழ்ப் பேசும் நல்லுலகத்திற்கு "கலாய்" என்னும் வார்த்தையைத் தந்துள்ளார் சிவா. சிவாவால் காதலிக்கப்படும் பெண்ணாக இஷா தல்வார் அறிமுகமாகி உள்ளா...