Shadow

ஆன்‌மிகம்

கடவுளும் மனிதனும் ஒன்றுதானா…?

கடவுளும் மனிதனும் ஒன்றுதானா…?

ஆன்‌மிகம்
ஏழு வர்ணங்களும் ஒரே ஒரு வர்ணத்திலிருந்துதான் தோன்றியது. ஒரு விதையிலிருந்து தான் ஆயிரக்கணக்கான விதைகள் தோன்றுகின்றன. ஆதி மனிதன் ஒருவனில் இருந்துதான் மனித சமுதாய நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. வேதம் என்ற மூலப்பொருளிலிருந்துதான் இன்றைய நவீன சிந்தனைகள் உருவெடுத்து உள்ளன. இந்த வேத மகுடத்தில் உபநிஷதங்கள் என்ற வைரங்கள் பொறிக்கப்பட்டு அழகுக்கு அழகு சேர்கின்றன. உபநிஷத கருத்துக்கள் பல அந்த கருத்து என்ற வனத்திற்குள் சென்று சாமான்ய மனிதர்களால் பொருட்களை அடையாளம் காண முடியாது. ஆனால் உபநிஷத ஆரண்யங்களுக்குள் வாழுகின்ற மகா புருஷர்கள் மில சுலபமாக அதன் அனைத்து அங்கங்களையும் அடையாளம் காட்டி விடுவார்கள். எனவே அதன் உட்கிடையை புரிந்து கொள்ள யோகி ஸ்ரீ ராமானந்த குருவுடம் எனது சந்தேகங்களை கேள்விகளாக சமர்பித்தேன்.கேள்வி:  உபநிஷதங்கள் பொதுவாக எதைப்பற்றி பேசுகின்றன?குருஜி: மிக சுலபமாக இந்த கேள்வியை நீ கேட்டுவிட...