
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 7
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 6ஒன்பது வருடங்களாக குகையில் ஆடாமல் அசையாமல் உண்ணாமல் தியானத்தில் அமர்ந்து இருக்கும் போதி தர்மரின் புகழ் பரவுகிறது. மக்கள் சாரை சாரையாக ஷவோலின் மடத்திற்குப் படையெடுத்து காணிக்கைகளை சிரத்தையாக ஷவோலின் மடத்தில் செலுத்துகின்றனர். போதி தர்மர் தன் சீடனாக சன் க்வாங்கை ஏற்றுக் கொண்ட அதே வேளையில் ஷவோலின் மடத்தைக் கொள்ளையடிக்க கொள்ளையர்கள் வருகின்றனர். தடுக்க வரும் இளம் பிக்குக்களைத் தாக்குகின்றனர். அரவத்தைக் கேட்டு எழுந்து வரும் தலைமை குரு திருடர்களைப் பார்த்து, "இந்தப் புனிதமான இடத்தில் சண்டையிடக் கூடாது. புத்தருக்கு மரியாதை செலுத்த வேண்டும்" என்கிறார்.திருடர்களின் தலைவர் கேலியாக பிக்குக்களைப் பார்த்து சிரிக்கிறார். தலைமை குரு மண்டியிட்டு திருடர்களின் தலைவர் நிற்கும் திசை நோக்கி வணங்குகிறார். மற்ற பிக்குகளும் வணங்குகின்றனர். திருடர்களின் பின்னால் போதி தர்மர்...
















