Shadow

சினிமா

தஞ்சை ‘கேவ்மிக் யு ஆரி’

தஞ்சை ‘கேவ்மிக் யு ஆரி’

சினிமா, திரைச் செய்தி
“டீசரும் ட்ரெயிலரும் பார்த்துட்டு.. யாருய்யா ஒளிப்பதிவு பண்ண கேவ்மிக்? வாயில் பெயரே நுழையலையே எனச் சொன்னாங்க. தென்னிந்தியாவில் இருந்து வரப் போகும் இன்னொரு மிகப் பெரிய கேமிரா மேனாக கேவ்மிக் இருப்பார். இந்தப் படம் வெளிவந்த பின் அனைவரது வாயிலும் அவரது பெயர் சுலபமாக வந்துடும்” என்றார் நடிகர் சித்தார்த். “மஸ்த்ரம் என்ற ஹிந்திப் படத்திற்கு ஒளிப்பதிவு பண்ணேன். அதைப் பார்த்துட்டுதான் கார்த்திக் சுப்புராஜ் கூப்பிட்டார். இது எனது இரண்டாவது படம். தமிழில் முதற்படம்” என்றார் கேவ்மிக் யு ஆரி. தமிழ் நன்றாகப் பேசுகிறார். காரணம் கேவ்மிக் தஞ்சாவூர்க்காரர். பாண்டியிலுள்ள தனது தாத்தாவின் புகைப்பட ஸ்டூடியோவில் அதிக நேரம் செலவழித்த கேவ்மிக், ஃபோட்டோக்ராஃபி மீதிருந்த தனது காதலை உணர்ந்துள்ளார். சினிமேட்டோகிராஃபிக்காக படித்த இவர், 2001 முதல் சந்தோஷ் சிவனின் முதன்மை அசிஸ்டன்ட் கேமிரா மேனாக பணி புரிந்துள்ளார் என்ப...
ஈவிரக்கமற்ற சிம்ஹா

ஈவிரக்கமற்ற சிம்ஹா

சினிமா, திரைச் செய்தி
‘பீட்சா’வைத் தொடர்ந்து தான் இயக்கும் இரண்டாவது படத்தைப் பற்றி, “இது நான் பீட்சாக்கு முன்பே எழுதின ஸ்க்ரிப்ட். பீட்சா தயாரிப்பாளர் C.V.குமார்கிட்ட சொன்னேன். என்னோட பட்ஜெட் ஒன்றரை கோடிதான். ஆனா இதுக்கு பட்ஜெட் அதிகமாகும். உங்க ரைட்டிங் ஸ்டைல் நல்லாயிருக்கு. என் பட்ஜெட்க்குள் எழுத முடியுமா பாருங்கன்னு சொன்னார். நான் விடாம அதுக்கு அப்புறம் நாலு ப்ரொட்யூசரைப் பார்த்து கதை சொன்னேன். ஃபர்ஸ்ட் டைம் டைரக்ட் பண்றீங்க.. பட்ஜெட் அதிகமாகயிருக்குன்னு சொல்லிட்டாங்க. சரின்னு இந்த ஸ்க்ரிப்ட்டை மூட்டை கட்டி வச்சுட்டு பீட்சா பண்ணேன். இப்ப கொஞ்சம் மாத்தி ஜிகர்தண்டான்னு வந்திருக்கு. எனக்கு கதை சொல்ல வராது. ஸ்க்ரிப்ட் கொடுத்து தயாரிப்பாளர் கதிரேசன்கிட்ட படிக்கச் சொன்னேன். பரவாயில்லை கதை சொல்லுங்கன்னு சொன்னார். நான் சொன்னேன். இல்ல.. ஸ்க்ரிப்ட் கொடுங்க என வாங்கிப் படிச்சுட்டு நல்லாயிருக்குன்னு சொன்னார்.படத்த...
“பரீட்சைக்கு நேரமாச்சு” – ‘ஜிகர்தண்டா’ லட்சுமி மேனன்

“பரீட்சைக்கு நேரமாச்சு” – ‘ஜிகர்தண்டா’ லட்சுமி மேனன்

சினிமா, திரைச் செய்தி
“எனக்கு படத்தில் கொஞ்ச நாள்தான் ஷூட்டிங் இருந்தது. என்னுடைய ஃபேவரைட் ஹீரோக்களில் சித்தார்த்தும் ஒருவர். அவருக்கு ஹீரோயினாக நடிச்சது ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்ற லட்சுமி மேனனுக்கு ஒரு பெரிய வருத்தம். பதினோராம் வகுப்பு பரீட்சை தொடங்கியதால்.. ‘ஜிகர்தண்டா’ ஆடியோ லான்ச்க்கு வர முடியாமல் போய்விட்டதென லட்சுமி மேனன் ரொம்பவே ஃபீல் பண்ணார். அதற்கென்னச் செய்ய முடியும்? படிக்கிற பிள்ளைங்களுக்கு சினிமாவால் சோதனைகள் வருவது சகஜம்தானே! “லட்சுமி மேனன்.. லெவன்த்தான் படிக்கிறாங்க. நான் சொல்றதைப் புரிந்து கொண்டு நடிப்பாங்களான்னு சந்தேகமாகவே இருந்தது. அவங்க மெச்சூரிட்டி லெவல் எப்படியிருக்கணும் நினைச்சுட்டிருந்தேன். ஆனா நாம எதிர்பார்க்கிற எக்ஸ்ஃபிரஷன்ஸை அவங்க முகமும் கண்ணும் கொடுத்துடுது. சித்தார்த்துக்கும், லட்சுமி மேனனுக்கும் எமோஷனல் சீன்ஸ் வரும். பயந்துட்டே இருந்தேன். பார்க்க எனக்கே ரொம்ப பிடிச்சிருந்தது”...
சாகசமும் ஆபத்தும் – கார்த்திகேயன்

சாகசமும் ஆபத்தும் – கார்த்திகேயன்

சினிமா, திரைத் துளி
தரமான சின்ன பட்ஜெட் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, அதை போன்று மேலும் பல படங்களைத் தயாரிக்க ஊக்குவிக்கிறது. இந்த தர வரிசையில் தற்போது தயாராகி வரும் படம்தான் 'கார்த்திகேயன் '.Magnus Cine prime pvt ltd மற்றும் Navya visual media என்ற நிறுவனத்தின் சார்பில் B.V.ஸ்ரீநிவாஸும், மல்லிகார்ஜுனனும் தயாரிக்கும் இந்தப் படத்தில் சுப்ரமணியபுரம் சுவாதி கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு இணையாக புது முகம் நிகில் நடிக்க, தமிழ்த்திரை உலகின் படங்களில் தூணாகத் திகழும் ஜெயபிரகாஷும் கிஷோரும் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் எல்லோருடைய பாராட்டுகளையும் அள்ளிய துளசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாகசமும் ஆபத்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை குறித்த படம் 'கார்த்திகேயன்'. புதிய இயக்குநர் சந்து, கதைக்கேற்ப காட்சி அமைப்புடன் ரசிகர்களை நாற்காலியின் ந...
கமல் இன் ‘உத்தம வில்லன்’

கமல் இன் ‘உத்தம வில்லன்’

Teaser, காணொளிகள், சினிமா
  தெய்யம் என்னும் கலையை அடிப்படையாகக் கொண்டு, 'உத்தம வில்லன்' ஃபர்ஸ்ட் லுக் டீசரை உருவாக்கியுள்ளனர். வில்லன் என்பது வில்லுப்பாட்டுக்காரன் என்பதின் சுருக்கமாக இருக்குமோ என்ற ஐயத்தையும் இந்த டீசர் ஏற்படுத்தியுள்ளது. 
எல்லாப் புகழும் ரஹ்மான் ஒருவருக்கே!

எல்லாப் புகழும் ரஹ்மான் ஒருவருக்கே!

சினிமா, திரைச் செய்தி
“காவியத்தலைவன் படத்தில் இசை என்பது மிக முக்கியமான விஷயம். வழக்கமா படத்தில் 6 பாட்டு இருக்கணும் என்பதற்காகவே பாடல்கள் வைப்பாங்க. ஆனா இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகவே இசை இருக்கு. இந்தப் படத்தை ‘ரியல் மியூசிக்கல் ஃபிலிம்’னு சொல்லலாம். கால் நூற்றாண்டு காலமாக கேட்ட ரஹ்மான் இசையை இப்படத்தில் கேட்க மாட்டீங்க. அற்புதமான இசைக்காக ரொம்ப உழைச்சிருக்கார்” என்றார் நாசர். “நான் சக்கரக்கட்டி படத்தில் நடிக்கவே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் பண்றார் என்பதுதான் காரணம். ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக்கில் ஒரு படம் பண்றதே லைஃப் டைம் அச்சீவ்மென்ட். எனக்கு இது அவருடன் இரண்டாவது படம். நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனக்கு இந்தப் படத்தில் சேலஞ்சிங் ரோல். ஒரு நடிகைக்கு இப்படியொரு பெர்ஃபாமன்ஸ் ஓரியன்ட்டட் ரோல் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்” என்றார் வேதிகா. “நான் சித்தார்த்தைப் பார்த்து அவர் வீட்டில் கதை சொன்...
“என் கனவு ட்ரீம்லாம் சினிமாதான்” – வசந்தபாலன்

“என் கனவு ட்ரீம்லாம் சினிமாதான்” – வசந்தபாலன்

சினிமா, திரைச் செய்தி
“எனக்கு டெர்ரரிஸ்ட்னு பெயர் வந்துடுச்சு. நான் 92 இல் சின்மாக்கு வந்தேன். அதிலிருந்து என் வாழ்க்கை, கனவு, ட்ரீம் எல்லாம் சினிமாதான். வெயில் சொன்ன டைம்ல எடுத்து முடிச்சேன். ‘அங்காடித் தெரு’ - ரங்கநாதன் தெருல ஷூட்டிங், புது நடிகர் வச்சு எடுக்கிறதென ஒரு வலியும் வேதனையும் கடந்து எடுத்து முடிச்சோம். ‘அரவான்’ படத்துல பாத்திரங்களுக்கு பச்ச குத்தி விக் வச்சு வெறும் காலுல ‘ஹாட் சன்’ல நடக்க வச்சு ஸ்பாட்டுக்குக் கொண்டு வரவே 11 ஆகிடும். இப்படி நல்ல சினிமா எடுக்கணுங்கிற வேட்கையிலதான் எனக்கு டெர்ரரிஸ்ட் என்ற பெயர் வந்துடுச்சு. ஆனா இந்தப் படத்தில் எனக்குக் கிடைச்ச அனுபவம் முற்றிலும் புதுசு. நடிகர்கள் பற்றி, சினிமா பற்றி எனக்கிருந்த கணிப்பை முற்றிலும் மாற்றிவிட்டது. அங்காடித் தெரு டப்பிங்கிற்காக திருநெல்வேலி போயிருந்தேன். அங்க நானும் ஜெயமோகனும் லிட்ரேச்சர் சம்பந்தமாக ரொம்ப நேரம் பேசிட்டிருந்தோம். அவ்வை சண...
நாசர் தீட்டிய சதித்திட்டம்

நாசர் தீட்டிய சதித்திட்டம்

சினிமா, திரைச் செய்தி
“முதல்நாள் நானு, சித்தார்த், ப்ரித்வி ராஜ்லாம் நின்னு பேசிட்டிருக்கோம். வசந்தபாலனுக்கு ஒரே டென்ஷன். 'என்ன சார் எப்ப பார்த்தாலும் பேசிட்டே இருக்கீங்க. எனக்கு புது நடிகர்களை வச்சு படமெடுத்ட்ஹே பழக்கமாயிடுச்சு. அவங்க சொல்றதுக்கெல்லாம் கேட்பாங்க. நீங்க ஒண்ணுமே கேட்க மாட்டுறீங்களே!?' எனக் கேட்டார். என்னடா இவர் இப்படிச் சொல்றார்னு, ‘என்ன சித்தார்த்.. நாம படத்தைப் பற்றித் தான பேசிட்டிருந்தோம்?’னு கேட்டேன். சித்தார்த், ‘இல்ல சார் நாம் ப்ரூவ் பண்ணணும்’ என்றார். நானும், பிரித்வியும் ஏறக்குறைய சதித்திட்டம் தீட்டுற மாதிரிதான் தீட்டணும். நான் சித்தார்த் ப்ரித்வி மூவரும் பிளான் பண்ணோம். சதித்திட்டமே கூடச் சொல்லலாம். எங்க சதித் திட்டம் மிகப் பெரிய வெற்றியைத் தந்திருக்கு” என ‘காவியத்தலைவன்’ படம் நிறைவாக வந்திருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நாசர். இந்தப் படத்தில் எனக்கு வேலையே இல்லாமப் போயிடுச்சு....
தெகிடி விமர்சனம்

தெகிடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நேரத்தைக் கொல்லும் நல்லதொரு த்ரில்லர். டிடெக்டிவ் வெற்றியால் கண்கானிக்கப்படும் ஆட்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்படுகின்றனர். எதற்கு, ஏன், யார் கொலை செய்கின்றனர் என்பதுதான் கதை. மருந்துக்கு கூட வில்லாவில் சிரிக்காத அசோக் செல்வன், இப்படத்தில் சின்னதாய் மிக அழகாய்ப் புன்னகைக்கிறார். அவரின் முதல் இரண்டு படங்களைவிட பார்வையாளர்களுக்கு மிக நெருங்கி வந்துள்ளார். அதற்கு, அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள குரலும் ஒரு காரணம். கண்டிப்பாக அவருக்கு நல்ல பிரேக் கொடுக்கக் கூடிய படமாக இது அமையும். மதுஸ்ரீயாக ஜனனி ஐயர். நீளமான கண்கள். அவர் சிரிக்கும் பொழுது இரண்டு கண்களும் வாயும் ஒரே அளவில் நீள்கின்றன. வழக்கம்போல் காதலிக்கவும் காதலிக்கப்படவும்தான் கதாநாயகி உபயோகப்படுத்தப்பட்டுள்ளார். நாயகனும் நாயகியும் பார்த்துக் கொண்டாலே பாடல் வந்துவிடுகிறது. பாடல்கள் திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஒரு ஸ்பீட்-ப்ரேக்கர் போன்றவை. முக்கிய...
சென்னைத் தமிழில் சரண்யா பொன்வண்ணன்

சென்னைத் தமிழில் சரண்யா பொன்வண்ணன்

சினிமா, திரைத் துளி
‘இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், சென்னை குடிசைப் பகுதியை சேர்ந்த ஒரு சராசரி தாயாக நடிக்கிறார். இதற்காக சென்னைக்கென்று உள்ள பிரத்தியேக சென்னைத் தமிழைக் கற்றுக் கொண்டார். அது மட்டுமல்லாமல்.. அந்த பாஷையில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார் '' என்றார் ‘என்னமோ நடக்குது’ படத்தின் இயக்குநரான ராஜ பாண்டி.'என்னமோ நடக்குது' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஒரு குடிசைப் பகுதியில் நடந்தது . இடைவிடாமல் ஐந்துநாட்கள் நடந்த படப்பிடிப்பில் அனுபவசாலியான தேசிய விருது பெற்ற சரண்யா எல்லாக் காட்சிகளையும் ஒரே டேக்கில் நடித்து முடித்தார். அவருடன் அந்தக் காட்சிகளில் நடித்த விஜய் வசந்த் சற்று சிரமப்பட்டார் . கடைசி நாளில் நாயகன் விஜய் வசந்துக்கு நீண்ட வசனமும், அழுகையுடன் கூடிய நடிப்பும் தர வேண்டிய காட்சி. நடிப்பாரோ மாட்டோரோ என்று பெரும் சந்தேகத்துடன் இருக்கும் போது அங்கிருந்த எல்லோரையும் சரண்யா உட்பட தன்னுட...
‘மாஸ்’ பூலோகம் – ஜெயம் ரவி

‘மாஸ்’ பூலோகம் – ஜெயம் ரவி

சினிமா, திரைத் துளி
தமிழ் நாட்டின் மிக முக்கிய கலாச்சார விழாவாக கொண்டாடப்படும் மசானக் கொள்ளை என்று அழைக்கப்படும் மயானக் கொள்ளை திருவிழா இன்று தமிழகமெங்கும் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையமைப்பில், ஜெயம் ரவி ஜோடியாக த்ரிஷா நடிக்க, வட சென்னையின் குத்து சண்டை கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படம் 'பூலோகம் ' படத்தின் சில முக்கிய காட்சிகள் மசானக் கொள்ளையை முன்னிட்டு படமாக்கப்பட்டது. இந்தக் கலாச்சாரத்தை முழுமையாகக் காண சென்னை அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் விஜயம் செய்தனர். இந்த விழாவைக் கண்ட ஜெயம் ரவி, 'இந்த அனுபவம் முற்றிலும் புதுமையானது. இந்த மண்ணின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு மண்ணின் மணம் சார்ந்த படத்தில் நடிப்பது எனக்கு அளவிட முடியாத பெருமை. பூலோகம் போன்ற 'மாஸ்' கதையும், கதைக்...
தெகிடி என்றால்?

தெகிடி என்றால்?

சினிமா, திரைத் துளி
பகடை, சூது விளையாட்டு, புரட்டு ஆகிய அர்த்தங்கள் கொண்ட வார்த்தை ‘தெகிடி’. ஃபிப்ரவரி 28 வெளியாகவுள்ள தெகிடி க்ரைமும் சஸ்பென்ஸும் கலந்த படம். தொடர் கொலைகளின் பின் இருக்கும் மர்மத்தையும் ட்விஸ்ட்டையும், ஒரு டிடெக்டிவ் கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.நடிகர்கள்: >> அஷோக் செல்வன் >> ஜனனி ஐயர் >> ஜெயப்ரகாஷ் >> ஜெயகுமார் >> காளி >> ப்ரதீப் நாயர் >> கோவர்தன் >> கமலகண்ணன் >> மாதவன் >> சக்கரபாணி பணிக் குழு: >> இயக்கம் – P.ரமேஷ் >> தயாரிப்பு – C.செந்தில் குமார் >> ஒளிப்பதிவு – தினேஷ்கிருஷ்ணன்.B >> படத்தொகுப்பு – லியோ ஜான் பால் >> இசை – நிவாஸ் K.பிரசன்னா >> பாடல் – கபிலன், குறிஞ்சி பிரபா >> சண்டை – ‘பில்லா’ ஜகன் >> கலை – SS.மூர்த்தி >> ஒலி வடிவம் & ஒலித்தொகுப்பு ...
பிரம்மன் விமர்சனம்

பிரம்மன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நமது பொறுமையைச் சோதித்தறிந்து கொள்ள மீண்டுமொரு ஓர் அற்புத வாய்ப்பை நல்குகிறது பிரம்மன். தான் கோயிலாக மதிக்கும் தியேட்டரைக் காப்பாற்ற புறப்படுகிறான் நாயகன். இது முதற்பாதி. நான்காவதுவரை கூட படித்த உயிர் நண்பனுக்காக எல்லாத்தையும் விட்டுக்(!?) கொடுக்கிறான். இது இரண்டாம்பாதி. தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தும் சிவாவாக சசிகுமார். டி-ஷர்ட், ஜீன்ஸ் என மாடர்ன் உடையில் வருகிறார். இம்முறை, “நண்பன் ஜெயிச்சா நாம ஜெயிச்ச மாதிரி” என்ற பன்ச் வேலைக்காமல் போய்விட்டது. காரணம் அவ்வளவு திராபையான திரைக்கதை. டைட்டில் கிரெடிட் போடும் பொழுது பசங்க இருவரின் ஆர்வம் கொஞ்சம் புதுமையாகத் தெரிந்தது. அதோடு சரி. மனிதருக்கு பணிவு இருக்க வேண்டியதுதான். அறிமுக இயக்குநர் சாக்ரடீஸுக்கு அது மிக அதிகமாகவே இருக்கிறது. படத்தில் ஒரு காட்சி வைத்திருக்கிறார். உதவி இயக்குநராக இருக்கும் சூரியை அணுகி சென்ச்சுரி சினிமாஸ் மேனேஜர் கதை ...