Shadow

சினிமா

பிரம்மாண்டமாய் வளர்கிறது “யான்”

பிரம்மாண்டமாய் வளர்கிறது “யான்”

சினிமா, திரைத் துளி
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குநராக களமிறங்கும் திரைப்படம்தான் "யான்". RS infotainment சார்பில் திரு.எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகி வரும்  ஜீவா, துளசி, நாசர், ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, 'சூது கவ்வும் ' கருணா ஆகியோர் நடிக்கின்றனர். 60% படப்பிடிப்பு இங்கு முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு மொரோக்கோ நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் அங்கே வரலாறு காணாத பனி பெய்த போதும் அதைப் பொருட்படுத்தாமல் மிகுந்த சிரமத்துடன் உக்கிரமான சண்டை காட்சிகளையும், கண்களைக் கவரும் பாடல் காட்சிகளையும் படமாக்கி உள்ளனர். துரித வேகத்தில் படப்பிடிப்பை நடத்திய திரு. ரவி கே.சந்திரனின் வேகத்தையும், படமாக்கும் நேர்த்தியையும் கண்டு Bourne ultimatum, The Mummy, Zero dark 30, Body of lies , Kingdom of heaven ஆகிய உலக தரம் வாய்ந்த படங்களில் பணியாற்றிய மொராக்கோ நாட்டு படக் ...
மௌனம் கலைத்தார் பாலுமகேந்திராவின் துணைவி.. மௌனிகா

மௌனம் கலைத்தார் பாலுமகேந்திராவின் துணைவி.. மௌனிகா

சினிமா, திரைத் துளி
இயக்குநர் பாரதிராஜா, வெற்றிமாறன், விடுதலை ஆகியோர் எடுத்த முயற்சியினாலும், பாலுமகேந்திராவின் மகன் கௌரிசங்கரின் பெருந்தன்மையாலும்தான் தன் கணவரின் முகத்தை கடைசியாகப் பார்க்க முடிந்ததாக நடிகை மௌனிகா தெரிவித்துள்ளார். 1985இல், 'உன் கண்ணில் நீர்வழிந்தால்' படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த போதுதான் அவரை முதலில் சந்தித்தேன். அன்று தொடங்கிய உறவு கடந்த 28 ஆண்டுகளில் அன்பும் காதலும் புரிதலும் நிறைந்த உறவாக இருந்தது. கடந்த 2000இல் நாங்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டாலும் அவருக்கு இரண்டாவது அட்டாக் வந்தபோதுதான் அவர் எங்கள் திருமணத்தை வெளிப்படையாக அறிவித்தார். அதன் பிறகே எனக்கும் அவருடைய முதல் குடும்பத்தினருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தனக்கு ஏதும் நேர்ந்துவிட்டால் அழாமல் வந்து தன் முகத்தைமட்டும் பார்த்துவிட்டுச் சென்றுவிடும்படி கூறியிருந்தார். அவர் ஓரு பெர்ஃபக்‌ஷனிஸ...
காதலைக் கொண்டாடும் ‘ஆஹா கல்யாணம்’

காதலைக் கொண்டாடும் ‘ஆஹா கல்யாணம்’

சினிமா, திரைத் துளி
ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான 'பேண்ட் பஜா பராட்' படத்தை தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப மாற்றங்கள் செய்து தமிழில் 'ஆஹா கல்யாணம்' என்ற பெயரில் யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் உதவியாளராக பணியாற்றிய கோகுல் கிருஷ்ணா இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். அவர் வெளியிட்டிருக்கும் காதலர் தின வாழ்த்து செய்தியில் தனது முதல் படத்தின் மேல் உள்ள காதல் திருமண பந்தம் போல நீடித்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார். "படத்தின் முதல் பிரதியைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ் ரசிகர்களை குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திழுக்கும் அத்தனை அம்சங்களும் சிறப்பாக வந்திருக்கின்றது" என்று கூறியுள்ளார். மேலும், "சக்தியாக நானியும், ஸ்ருதியாக வாணியும் கலக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு ஃப்ரேமிலும் இவர்களின் இளமை குறும்பு கொப்பளித்துக் கொண்டே இருக்கும். இது போன்ற ஒரு காதல் க...
இது கதிர்வேலன் காதல் விமர்சனம்

இது கதிர்வேலன் காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கதிர்வேலனின் அப்பாக்கு காதலென்றால் பிடிக்காது. ஆனால் ஆஞ்சனேய பக்தனான கதிர்வேலனுக்கு காதல் வந்துவிடுகிறது. பின் என்னானது என்பதுதான் கதை. ஓகே.ஓகே.வில் நடித்தவரா என அதிசயிக்க வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தலையை மட்டும் வேண்டிய மட்டும் ஆட்டிவந்தவரின் முகத்தில் சில பாவனைகளும் எட்டிப் பார்க்கின்றன. மீண்டும் அவருக்கு தோதான கதாபாத்திரத்தினைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். நடனமும் முயற்சி செய்திருக்கார். கேமிரா பற்றிய பிரக்ஞை கூடியுள்ளதால், சிரமமில்லாமல் தன்னை அழகாக திரையில் எக்ஸ்போஸ் செய்கிறார். சந்தானத்தின் துணையில்லாமலேயேகூட அடுத்த படத்தில் துணிந்து தனியாகவே திரையில் தோன்றலாம். அதற்கு அப்படத்திலாவது கதையிருக்க வேண்டியது அவசியம். அட்லீஸ்ட் சுவாரசியமான திரைக்கதையாவது! மயில்வாகனமாக சந்தானம். கிட்டத்தட்ட அவரின் எல்லாப் படத்தினைப் போலவே, கதாநாயகனின் காதலுக்கு யோசனை சொல்லிச் சேர்த்து வைக்கும் மிக முக்கிய...
“மரணித்தது நானல்ல!!” – பாலு மகேந்திரா

“மரணித்தது நானல்ல!!” – பாலு மகேந்திரா

கட்டுரை, சினிமா, மற்றவை
“எனது படைப்புகள் மூலம் மரணத்தின் பின்பும் நான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பேன். மரணிக்கப் போவது என் உடல்தான். நானல்ல!” என நிறைவாகக்கூற ஒரு மகத்தான கலைஞனால் மட்டும்தான் முடியும். தமிழகத்தில், சினிமாவை கலையாகப் பார்த்த சொற்பமானவர்களில் முதன்மையானவர் பாலு மகேந்திரா. அவருள் சினிமா விதையை முதன்முதலில் விதைத்தது ஓர் அமெரிக்கர். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியராக இருந்த ஃபாதர் லோரியோ, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரொஜெக்டரில் சினிமா காண்பிப்பாராம். கண்டியில் இங்கிலாந்து இயக்குநர் மழையை வரவழைத்த அதிசயத்தைப் பார்த்து தாமும் அதைச் செய்ய ஆசைப்பட்டார் பாலு மகேந்திரா. அன்றுதான் அவருக்கு இறவாப் புகழைப் பெற்று தந்திருக்கும் கருவியான கேமிராவை முதன்முறையாகத் தொட்டுப் பார்த்து சொல்லமுடியாத பரவசத்தை அடைந்துள்ளார். சினிமா ஆசை அவரை பூனே திரைப்படக் கல்லூரிக்குத் துரத்தியது. குறைந்த ஒ...
இசையமைப்பாளராகிறார் சூப்பர் சிங்கர் ‘ப்ரவீன் சாய்’

இசையமைப்பாளராகிறார் சூப்பர் சிங்கர் ‘ப்ரவீன் சாய்’

சினிமா, திரைச் செய்தி
நம் அனைவருக்கும் இன்னொரு முகம் இருக்கும். சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் நல்ல முகமோ கெட்ட முகமோ வெளிப்படும். அப்படித் தேவைக்கேற்ப முகத்தைக் காட்டுபவன்தான் “மறுமுகம்” படத்தின் நாயகன். இப்பொழுது ட்ரெண்டில் இருக்கும்  ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ வகையைச் சார்ந்ததுதான் இப்படமும். ‘ஊமை விழிகள்’ படத்திற்குப் பிறகு ஃப்லிம் ஸ்டூடண்ட்ஸ் மாணவர்கள் இணைந்து உருவாக்கும் படம். படத்தின் இயக்குநரான கமல் சுப்ரமணியம் திரைப்படக் கல்லூரி மாணவர். படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் டேனியல் பாலாஜி அவருக்கு கல்லூரியில் சீனியர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சன்ஜய் டாங்கி. “திரைப்படக் கல்லூரியில் இருந்துவரும் ஒவ்வொருவருக்கும் விஜயகாந்தை வைத்து இயக்குவதுதான் கனவாக இருக்கும். கல்லூரியிலிருந்து வெளியே வந்ததும், அவர் அலுவலகம் இருக்கும் ராஜாபாதர் தெருதான் அவர்கள் செல்லும் முதலிடமாக இருக்கும். திரைப்பட கல்லூர் ம...
ஆதியும் அந்தமும் – இசை வெளியீட்டு விழா

ஆதியும் அந்தமும் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
கோலங்கள் புகழ் ஆதி என்கிற ஆதித்யா கதாபாத்திரத்தில் நடித்த அஜய்தான் ‘ஆதியும் அந்தமும்’ படத்தின் நாயகன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு முதன்முறை வந்திருப்பதாக மேடையில் அமர்ந்திருந்த சில பிரமுகர்கள் சொன்னார்கள். ஆனால் பிரியதர்ஷன் இயக்கத்தில் 1993 இல் வெளிவந்த “கர்டிஷ் (Gardish)” எனும் ஹிந்திப் படத்தில், ஜாக்கி ஷெரோஃப் தம்பியாக நடித்திருப்பார். மும்பைவாழ் பஞ்சாபிவாலாவான அவரது பெயர் அப்பொழுது கெளரவ் கபூர். தமிழில் கூட முரளி, ரோஜா நடித்த “ஊட்டி” படத்தில் வில்லனாக 1999 இலேயே நடித்திருந்தார். படத்தின் இசையமைப்பாளர் எல்.வி.கணேசன். இவர் பிரபல இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சைக்காலஜிக்கல் த்ரில்லர்’ படம் என்பதால், படத்தின் பின்னணி இசையும் இணைந்து படத்தில் கதை சொல்ல வேண்டும். அதை அற்புதமாகச் செய்துள்ளாராம் எல்.வி.கணேசன். இப்படம் வெளிவந்த பிறகு, எல்.வி.கண...
“பேய் இருக்கு!!”

“பேய் இருக்கு!!”

சினிமா, திரைச் செய்தி
சத்யா நாகராஜ், S.செல்லதுரை, சாமி.P.வெங்கட், பாலாமணி ஜெயபாலன் என நான்கு நண்பர்கள். குவைத்தில் வாழும் தமிழர்கள். ஒரு தொழில் தொடங்கும் யோசனையின் முடிவாக சினிமாவைத் தேர்ந்தெடுத்தனர். புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரணும் என்ற முடிவுடன், “வரம் கிரியேஷன்ஸ்” என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். சென்னையில் இருக்கும் பழம்பெரும் இயக்குநரான ஏ.கே.வேலனின் மகன் A.K.V.கலைஞானியைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லியுள்ளனர். பின் படத்தில் பணி புரியும் ஒவ்வொருவரையும் சல்லடை போட்டு எடுத்துள்ளார்கள். உதாரணத்திற்கு 60 கதைகளை வாங்கி, அதை பலதரப்பட்ட பின்னணியுடையடவர்களுக்கு மின்னஞ்சல் செய்து, அந்த ரிசல்ட்டின் அடிப்படையில் “இருக்கு ஆனா இல்ல” படத்தின் இயக்குநர் கே.எம்.சரவணனைத் தேர்வு செய்துள்ளனர். 100 பேர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாயகி மனிஷா. ஐ.டி. துறையில் வேலை செய்யும் ஷமீரையும் அப்படித...
ஸ்டைலிஷான ‘பிரம்மன்’ சசிக்குமார்

ஸ்டைலிஷான ‘பிரம்மன்’ சசிக்குமார்

சினிமா, திரைச் செய்தி
ஆட்டோ டிரைவராக இருந்து படத் தயாரிப்பாளர் ஆனவர் K.மஞ்சு. கன்னடத்தில் 38 படங்கள் தயாரித்துள்ளார். அவர் தமிழில் தயாரித்திருக்கும் முதற்படம் “பிரம்மன்”. கமல ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மம்மூட்டி என பலரை தமிழில் முதன்முறையாக அறிமுகம் செய்தவர் இவர்தான். வாய்ப்புத் தேடிய இயக்குநர் சாக்ரடீஸின் கதை பிடித்துவிட, “ஹீரோ யார்” எனக் கேட்டுள்ளார். “சசிக்குமார்.” “அவரது கால்ஷீட் வாங்கிட்டு வாங்க. அதுவரை வெயிட் பண்றேன்” எனச் சொல்லி அனுப்பியுள்ளார் மஞ்சு. பம்மல் கே சம்பந்தம், நள தமயந்தி போன்ற படங்களில் பணியாற்றியிருந்த இயக்குநர் சாக்ரடீஸுக்கு, சசிக்குமாரைச் சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக அமையவில்லை. சசிக்குமாரின் ஆசிரியர்கள் இருவரை தூது விட்டிருக்கிறார். எடிட்டர் ராஜா முகமதுவும் சசிக்குமாரிடம் பேச 2 வருடக் காத்திருப்பு ஒருவழியாக முடிந்துள்ளது. “சசிக்குமார் ஒரு இரும்புக் கோட்டை போல! மற்றவர்களுடன...
“என் மூலதனம்” – கமல்

“என் மூலதனம்” – கமல்

சினிமா, திரைச் செய்தி
‘தரமணியின் ஆன்மா (The Soul of Taramani)’ என்ற தனிப்பாடலை ஆங்கிலத்தில் எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரிமியா. இந்தப் பாடலை, இயக்குநர் ராமின் அடுத்த படமான “தரமணி”யின் பிரமோஷனிற்கு உபயோகிக்க அனுமதி அளித்துள்ளார் ஆண்ட்ரியா. படத்தின் இசையமைப்பாளரான யுவனும் சம்மதம் சொல்லிவிட, இந்த தனிப்பாடலை கமல் வெளியிட இயக்குநர் இமயம் பாரதிராஜா பெற்றுக் கொண்டார். “நல்லா பாடுவாங்கன்னு தெரியும். பல திரைப்படங்களில் நாயகிக்காக குரல் கொடுத்திருக்காங்கன்னு தெரியும். ஆனா தமிழ் பேசுவாங்களான்னு ஒரு சந்தேகம் இருந்தது. ஆனா தமிழ் எழுதப் படிக்கப் பேசத் தெரிந்த ஒரு நடிகைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு லகர, ளகர உச்சரிப்பு சரியா வராது. ஆனா ஆண்ட்ரியா அச்சரம் பிசகாம உச்சரிக்கிறாங்க. முதல்முறையாக ஒரு ஆர்டிஸ்டுடன் வேலை செய்த திருப்தி கிடைத்தது. ஷூட்டிங்கின் பொழுது மொபைலில் ஏதோ கேட்டுட்டே இருப்பாங்க. என்னன்னு கேட்டப...
அசத்தலான பாடல்களுடன் ஆஹா கல்யாணம்

அசத்தலான பாடல்களுடன் ஆஹா கல்யாணம்

சினிமா, திரைத் துளி
யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஹிந்தியில் பெரிய வெற்றியைப் பெற்ற "பேண்ட் பஜா பராத்" தமிழில் ஆஹா கல்யாணம் என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. பிரபல தெலுங்கு ஹீரோவான நானி நேரடியாக தமிழில் நடிக்கும் இந்தப் படம் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் இசை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் படத்தின் இசை அமைப்பாளர் தரன் குமார் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். தன்னுடைய திரையுலகப் பயணத்தில் இந்தப் படம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்குமென்கிறார். படத்தின் இயக்குநரும் தன் நெருங்கிய நண்பருமான கோகுல் கிருஷ்ணா படத்தில் தமிழ் வாசம் தூக்கலாய் இருக்க வேண்டும் என்று கூறியதால் மூலப் படத்தை பார்க்காமல், அதன் பாடல்களைக் கேட்காமல் கதையை மட்டும் வைத்து புதிதாய் தமிழுக்கென பாடல்களை உருவாக்கியதாக தரன் குமார் நிருபர்களிடம் கூறினார். எங்களது கூட...
கணவரைத் தேடும் நயன்தாரா

கணவரைத் தேடும் நயன்தாரா

சினிமா, திரைத் துளி
ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான 'கஹானி' திரைப்படம் தமிழில் "நீ எங்கே என் அன்பே!" என்ற பெயரில் உருவாகி வருகிறது. காணாமல் போன தன் கணவனைத் தேடி நகருக்கு வரும் ஓர் அபலை பெண்னைச் சுற்றி நடைபெறும் பரபரப்பான இந்தக் கதையில் நயன்தாரா கதை நாயகியாக நடித்திருக்கிறார். ஹிந்தியில் வித்யா பாலன் ஏற்று பெரும் புகழை பெற்ற இந்த பாத்திரத்துக்கு நயன்தாரா மேலும் மெருகு ஊட்டி உள்ளார். சுவாரசியமான திருப்பங்களும், வித்தியாசமான கதைக் களமும் கொண்ட இந்தப் படம் இதன் ஹிந்தி பதிப்பான 'கஹானி' படத்துக்கு இணையாக பெயரும் புகழும் ஈட்டும் என இந்தப் படத்தின் இயக்குநர் சேகர் கம்முளா நம்பிக்கை தெரிவித்தார். வயா காம் 18 motion pictures தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது. படத்தின் ட்ரெயிலர் வெளியீடு வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது....
கலக்கலான புதுமையோடு “கள்ளப்படம்”

கலக்கலான புதுமையோடு “கள்ளப்படம்”

சினிமா, திரைத் துளி
கூத்துக் கலையினை மையமாக வைத்துத் தயாராகி வரும் படம்தான் "கள்ளப்படம்" . அறிமுக இயக்குநர் வடிவேல் தனது இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆச்சர்யமான ஒரு புதுமையை செய்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு இயக்குநர், ஒரு ஒளிப்பதிவாளர், ஒரு இசையமைப்பாளர், ஒரு எடிட்டர் ஆகியோர்தான் படத்தின் பிரதான கதாபாத்திரங்கள். இந்தக் கதாபாத்திரங்களில் அந்தந்த தொழில்நுட்ப கலைஞர்களே நடித்திருக்கிறார்கள். இயக்குநர் வேடத்தில் படத்தின் இயக்குனர் வடிவேலுவும், ஒளிப்பதிவாளர் வேடத்தில் படத்தின் ஒளிப்பதிவாளரான ஶ்ரீராம் சந்தோஷும், இசையமைப்பாளர் வேடத்தில் படத்தின் இசையமைப்பாளரான "கே" வும், எடிட்டர் வேடத்தில் படத்தின் எடிட்டரான கௌகினும் நடிக்கின்றனர். படத்தின் நாயகியாக லஷ்மி ப்ரியா நடிக்கிறார். "ஸ்க்ரிப்ட் நன்றாக வந்திருக்கு. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அதை உணரலாம். முன்னேறணும் என ஆசைப்படுவர்களுக்குள் உள்ள நட்பும் அன்னியோன்யமு...
ஹலோ கோச்சடையான்

ஹலோ கோச்சடையான்

சினிமா, திரைத் துளி
கோச்சடையான் ரிலீஸ் தேதி சொன்னாலும் சொன்னார்கள்.. ஆளாளுக்கு கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டனர். இந்தியாவின் பிரபல செல் போன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கார்பன் மொபைல் ரஜினி ரசிகர்களுக்காக கோச்சடையான் ஸ்பெஷல் எடிஷன் போன்களை சந்தைக்கு கொண்டுவருகிறார்கள். பத்து லட்சம் போன்களை தங்களுடைய 27000 அவுட்லெட் கடைகளின் மூலம் தென்னிந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கோச்சடையான் முகமுடிகளும் கிடைக்கும். மொபைல் வெளியிடப்படும் முன், விளம்பரத்திற்காக தென்னிந்திய ரேடியோ ஸ்டேஷன்களில் 60000 நொடிகளையும், டி.வி. சேனலில் 600 நொடிகளும் விளம்பரத்திற்காக வாங்கியுள்ளது கார்பன். அதே போல், அனைத்து மொழி தினசரிகளிலும் மூன்று முழுப் பக்கங்களுக்கு விளம்பரம் தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கார்பன் மொபைலின் இயக்குநரான திரு. சுதிர் ஹசிஜா செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்....
ஆஹா கல்யாணம், சந்தோஷத்தில் நானி

ஆஹா கல்யாணம், சந்தோஷத்தில் நானி

சினிமா, திரைத் துளி
காலத்தை வென்ற பல காதல் படங்களைத் தயாரித்த பெருமைக்குரிய யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தமிழ்த் தயாரிப்பான "ஆஹா கல்யாணம்" படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் முடிவடைந்தது. தெலுங்குத் திரையுலகின் பிரபல கதாநாயகனான நானி நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப்படம் என்கிற வகையில் "ஆஹா கல்யாணம்" படத்திற்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. இளைஞர்களைப் பெருமளவில் கவர்ந்து இழுக்கும் வகையில் இளமைத் துள்ளளுடன் கூடிய கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நடித்த அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது என்கிறார் நானி. மேலும் படத்தின் நாயகி வாணியுடன் பணியாற்றியது இனிமையான அனுபவம். அவரது உற்சாகமும்  ஈடுபாடும் பங்களிப்பும் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்றார். “இயக்குநர் கோகுல் கிருஷ்ணா, எனக்கு நெருங்கிய நண்பரும் ஆவார். தனக்கு என்ன வேண்டுமோ, அது கிடைக்கும் வரை அயராத அவரது உழைப்பும் நேர்த்தியும்தான் அ...