Shadow

சினிமா

கமலின் உத்தமனும் மனோரஞ்சனும்

கமலின் உத்தமனும் மனோரஞ்சனும்

சினிமா, திரைத் துளி
உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் பாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு பாத்திரத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார். மனோரஞ்சனைக் கண்டெடுத்த நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திய, குருவாக சினிமா இயக்குநராக K.பாலசந்தர் அவர்களும் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக திரு.K.விஸ்வநாத்தும், 8ஆம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாறும், 21ஆம் நூற்றாண்டுக் கமலின் ரகசியக் காதலியாக ஆண்ட்ரியா ஜெரமியாவும் நடிக்கின்றனர். முத்தரசன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசரும், ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக கதையின் முக்கிய பாத்திரமொன்றில் பார்வதி மேனனும் நடிக்கிறார்கள். M.S.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற ...
ஆதியும் அந்தமும் விமர்சனம்

ஆதியும் அந்தமும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு பிரச்சனையின் அந்தத்தை படத்தின் முதற்பாதியிலும், அதன் ஆதியை படத்தின் இரண்டாம் பாதியிலும் சொல்லியுள்ளனர். டாக்டர் கரண் உதகமண்டலத்திற்கு ஒரு மெடிக்கல் ரிசர்ச் ஃபெளண்டேஷனில் பணியில் சேர வருகிறார். அவர் தங்கும் அறையில், தினம் இரவு 1 மணிக்கு ஒரு பெண்ணின் உருவம் வந்து அவரை அலைகழிக்கிறது. யார் அந்தப் பெண், ஏன் எதற்காக அலைக்கழிக்கிறாள் என்பதுதான் படத்தின் கதை. இடைவேளை வரையிலான படம் விறுவிறுப்பாகவும் திகிலாகவும் போகிறது. L.V.கணேசனின் பின்னணி இசையும் D.S.வாசனின் ஒளிப்பதிவும் படத்தின் மிகப் பெரிய பலம். முக்கியமாக சுவாசத்தை பின்னணி இசையாக உபயோகித்திருப்பதைச் சொல்லலாம். அதற்கான காரணம் இரண்டாம் பாதியில் தெரிய வருகிறது. இரண்டாம் பாதி படமோ முதல் பாதிக்கு நேரெதிராக உள்ளது. இரண்டாம் பாதி தொடங்கிய சில நொடிகளிலேயே மர்ம முடிச்சை அவிழ்த்து விடுகின்றனர். அதன்பின் சலிப்பேற்படுத்தும் வகையில் நீண்ட ஃப்ளாஷ்-பே...
“விஷால் கருப்பு மனிதன்தான!?”

“விஷால் கருப்பு மனிதன்தான!?”

சினிமா, திரைச் செய்தி
“விஷால் நடிக்கணும்னு ரொம்ப விருப்பப்பட்டது என் மனைவிதான். ‘அவன் இவன்’ பார்த்த பிறகு.. நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். நீ ரொம்ப நல்ல நடிக்கிறன்னு அவன்கிட்ட சொன்னேன். ஸ்டெப் பை ஸ்டெபாக அவன் கோலை (goal) அச்சீவ் பண்றான். அனைவரிடமும் நட்பாகப் பழகுகிறான். இவன் எல்லோரையும் லைக் பண்றான். இவனை மத்தவங்களுக்குப் பிடிக்குது. ரொம்ப சந்தோஷமான அப்பாவாக உணர்கிறேன். ‘நான் சிகப்பு மனிதன்’ என படம் பண்றேன்னு சொன்னான். “நீ எப்படி சிகப்பு மனிதன்? நீ கருப்பு மனிதன்தான?” எனக் கேட்டேன். “இல்ல டாடி.. சிகப்பு மனிதன் என்பது கேரக்டருன்னு சொன்னான். சினிமா தான் நெ.1 எண்டர்டெயினிங் இண்டஸ்ட்ரி உலகத்தில். அந்த இண்டஸ்ட்ரியோட நானும் என் மகனும் நண்பர்களும் அசோசியேட் ஆகியிருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்றார் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி. “கிரிக்கெட்டாகட்டும் சினிமாவாகட்டும் விஷாலிடம் எனக்கு ரொம்ப பிடிச்சது அவருடைய “தில்”லு....
“என்னைப் பழிவாங்குகிறார் விஷால்” – இயக்குநர் பாலா

“என்னைப் பழிவாங்குகிறார் விஷால்” – இயக்குநர் பாலா

சினிமா, திரைச் செய்தி
‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார் விஷால். ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் அதீத துக்கமோ, மகிழ்ச்சியோ, பயமோ ஏற்பட்டால் தூங்கி விழுந்து விடுவார் விஷால். “எனக்கு இந்த நோயோடு சீரியஸ்னஸ் தெரியும். ஏன்னா என்னுடைய அசிஸ்டென்ட்க்கு இந்தப் பிரச்சனை இருந்தது. போய் பேப்பர் எடுத்துட்டு வரச் சொல்லி அனுப்பினா.. அங்க போய் தூங்கிடுவான். டிஸ்கஷன்ல இருக்கும் பொழுது தூங்கிடுவான். இதனால அவன் ஒரு ஆக்ஸ்டென்ட்ல மாட்டி, 2 மாசம் கோமாவில் இருந்தான்” என்றார் இயக்குநர் விஜய். “இந்தப் படத்தில் வொர்க் பண்ற எடிட்டர் ரூபனும், ஜீ.வி.பிரகாஷூம் என் ஃப்ரெண்ட்ஸ். அவங்க மூலமா படத்தோட கதையைக் கேள்விப்பட்டேன். வழக்கமா புதுசா ஒரு கதைன்னு சொல்வாங்க. ஆனா உண்மையிலேயே இயக்குநர் திரு புதுசா ஒரு கதை பிடிச்சிருக்கார். ஹீரோ எக்ஸைட் ஆனா தூங்கிடுவாரு. நான் ட்ரைலர் பார்...
“லக்ஷ்மி மேனனைப் பாதுகாக்கும் விஷால்” – விஷ்ணு குற்றச்சாட்டு

“லக்ஷ்மி மேனனைப் பாதுகாக்கும் விஷால்” – விஷ்ணு குற்றச்சாட்டு

சினிமா, திரைச் செய்தி
“’பாண்டிய நாடு’ படத்தில் விக்ராந்துக்கும் விஷாலுக்கும் கெமிஸ்ட்ரி நல்லாயிருந்தது. ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் லட்சுமி மேனனை மட்டும் மீண்டும் நடிக்க வச்சிருக்கார். விக்ராந்தை ஏன் கூப்பிடலைன்னு தெரியலை. அவர் ரொம்ப வருத்தப்பட்டார். சரி கவலைப்படாத.. அனைவருக்கும் முன் கேட்டுடலாம் சொல்லி இப்போ நான் கேட்டுட்டேன். விஷால் இதற்கு பதில் சொல்வார்னு எதிர்பார்க்கிறேன். ‘பாண்டிய நாடு’ ஷூட்டிங்கின் பொழுது, எனக்கும் ஷூட் போயிட்டிருந்தது. என்னால செட்டுக்குப் போய் லட்சுமி மேனனைப் பார்க்க முடியலை. இந்தப் படத்திலாவது எப்படியாவது பார்த்து ‘ஹை’ சொல்லணும்னு நினைச்சேன். ஆனா ‘சாரி.. இன்னிக்கு லட்சுமி மேணுடன் நெருக்கமான சில காட்சிகள் இருக்கு. டிஸ்டர்ப் பண்ணாத’ என எஸ்.எம்.எஸ். அனுப்பினார் விஷால். என்னடா இதுன்னு நினைச்சுக்கிட்டு.. ‘சரி இன்னிக்கு வர்றேன்’ என இன்னொரு நாள் சொன்னேன். ‘சாரி.. லட்சுமி மேனனுடன் தண்ணிக்க...
டிஜிட்டல் ‘ஆயிரத்தில் ஒருவன்’

டிஜிட்டல் ‘ஆயிரத்தில் ஒருவன்’

சினிமா, திரைத் துளி
திவ்யா பிலிம்ஸ் உரிமையாளராகிய சொக்கலிங்கம் ஆகிய நான் என்னை ஊக்குவித்த அனைத்து பத்தரிகை மற்றும் மீடியா நண்பர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, ‘கர்ணன்’ என்ற மாபெரும் மகாபாரதக் காவியத்தினை ‘ரெஸ்டோரேஷன்’ மற்றும் ‘டிஐ – டிடிஎஸ்’ (Restoration, DI & DTS) எனும் நவீன தொழில்நுட்பத்தினை இன்றைய இளைஞர்களுக்கு தேவைப்படும் வகையில் செய்ததின் வாயிலாக, அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதற்கு முக்கிய காரணம் பத்திரிகை நண்பர்களும், மீடியா நண்பர்களும் என்பதை நான் நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ‘கர்ணன்’ என்ற வெற்றியைக் கொடுத்தது போல், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கும் , புரட்சித் தலைவி அவர்களுக்கும் இன்றைய காலகட்டத்திற்கு அவர்கள் இணைந்து நடித்த முதல் காவியமான ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தினை...
முதல்வரின் வாழ்த்துச் செய்தி

முதல்வரின் வாழ்த்துச் செய்தி

சினிமா, திரைத் துளி
'திவ்யா பில்ம்ஸ்' திரு.G.சொக்கநாதன் அவர்களுக்கு, திரைப்படங்கள் வழியாக மக்கள் மனதில் உயரிய சிந்தனைகளையும், வாழ்வியல் நெறிகளையும் புகுத்த முடியும் என்பதை உலகிற்கே எடுத்துக் காட்டிய மாபெரும் கலையுலக மேதை, எனது அரசியல் ஆசான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள். எனவேதான், பல கலை விமர்சகர்களும், திரைப்பட ஆய்வாளர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு படங்கள் மட்டுமல்ல; தலைமுறைகளைக் கடந்து நிற்கும் வாழ்க்கைப் பாடங்கள் என்று போற்றுகின்றனர். புரட்சித் தலைவரின் திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய சாதனைக் கல்லாக அமைந்த திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்களை விடுதலை வீரர்களாக மாற்றிக் கொள்கின்ற சம்பவங்கள் உலகின் பல இடங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரு திரைப்படத்தின் வழியாகத் திரட்டி மக்கள் மனதில் சுதந்திர வேட்கையையும், ...
மதயானைகளால் அழிக்க முடியாத சிங்கம்

மதயானைகளால் அழிக்க முடியாத சிங்கம்

சினிமா, திரைச் செய்தி
‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தில், அழிக்க முடியாத சிங்கமாக நடிக்கிறார் சத்யா. இவர் ஆர்யாவின் தம்பி. ஏற்கெனவே ‘புத்தகம்’ படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். எனினும் இந்தப் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டு நடித்திருக்கிறாராம். ஜாலியான நபராக முதற்பாதியில் வருபவர் இரண்டாம் பாதியில் காவல்துறை அதிகாரியாக முறுக்கேறி வருகிறார். இந்தப் படம், சத்யாவிற்குள் இருக்கும் நடிகனை அடையாளம் காட்டும் என நம்பிக்கை தெரிவித்தார் இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.எஸ்.தங்கசாமி. ‘ராட்டினம் பிக்சர்ஸ்’ என தனது முதற்படத்தின் பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார் கே.எஸ்.தங்கசாமி. இந்த நிறுவனத்தின் எல்லாப் படங்களிலும் தன்னுடைய சிறு பங்களிப்பு ஏதாவதொரு வகையில் இருக்கும் என்றார் ராட்டினம் படத்தின் நாயகன் லகுபரன். இந்தப் படத்தில் ஐந்து நிமிடம்தான் தோன்றினாலும், படம் முழுவதும் நிறைந்திருப்பது போன்ற பாவனையைத் தரும் மிக ம...
குக்கூ – கோடையில் மழை போல்!

குக்கூ – கோடையில் மழை போல்!

சினிமா, திரைத் துளி
ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் நெக்ஸ்ட் பிக்ஃபிலிம் இணைந்து தயாரித்து இருக்கும் ‘குக்கூ’ என்ற திரைப்படத்திற்கு தணிக்கைதுறை ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அட்டகத்தி புகழ் தினேஷ் புதுமுகம் மாளவிகா இணைந்து நடித்திற்கும் திரைப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் உதவியாளர் ராஜூமுருகன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில், P.K.வர்மா ஒளிப்பதிவில், சண்முகம் வேலுசாமி படத்தொகுப்பில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. தணிக்கைத்துறை அதிகாரிகளால் பாராட்டப்பட்ட இத்திரைப்படம் ‘கோடையில மழ போல’ மார்ச் 21 – ஆம் தேதி திரைக்கு வருகிறது....
மீண்டும் கஜாலா!

மீண்டும் கஜாலா!

சினிமா, திரைத் துளி
படிக்கப் போயிருந்த கஜாலா மீண்டும் திரைத்துறைக்கு வந்துள்ளார். “100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்டுள்ள நாட்டில், கவனிக்கப்படாமல் போக வாய்ப்பு மிக அதிகம். ஆனால் சினிமா எனும் க்ரியேட்டிவ் ஃபீல்டில், நமது திறமையைக் காட்டிப் புகழடையலாம். அப்படி ஆசிர்வதிக்கப்பட்ட நட்சத்திரங்களில் நானுமொருத்தி. நதியா, ரேவதி, ஷாலினி ஆகியோர்தான் என் இன்ஸ்பிரேஷன். இனி தமிழ்த்திரைப்படங்களில் கவனம் செலுத்தி, எனக்கான ஓரிடத்தைப் பிடிப்பதுதான் என் நோக்கம்” என்றார் கஜாலா. மீண்டும் ராம் படத்து ‘கார்த்திகாயினி மலைச்சாமி’ போன்ற பெயர்சொல்லும் கதாபாத்திரங்களில் சிறக்க வாழ்த்துக்கள்!...
இசையமைப்பாளர் ‘ஷான் ரோல்டன்’ – எழுத்தாளர் சாண்டில்யனின் பேரன்

இசையமைப்பாளர் ‘ஷான் ரோல்டன்’ – எழுத்தாளர் சாண்டில்யனின் பேரன்

சினிமா, திரைத் துளி
அப் ஷாட் பிலிம்ஸ் (Ab Shot Films) P. மதுசூதனன் வழங்க, ஸ்கை லைட் கிரியேஷன்ஸ் சுதீர் ஜெயின்-உடன் இணைந்து பி அன்ட் சி பிலிம்ஸ் சார்பில் பத்ரி தயாரித்து இயக்கும் படம் ‘ஆடாம ஜெயிச்சோமடா'. வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு ஆகிய படங்களைத் தொடர்ந்து பத்ரி இயக்கத்தில் வெளிவர உள்ள ஐந்தாவது படம் இது. படத்தைப் பற்றி இயக்குனர் பத்ரி கூறியதாவது, “ஒவ்வொரு விளையாட்டிலும் மைதானத்தில் ஒருவர் ஜெயிப்பார், மற்றொருவர் தோற்பார். ஜெயிக்கிறவனுக்கு கோப்பை கிடைக்கும். தோற்கிறவனுக்கு ஒன்றும் கிடைக்காது. இதுதான் விளையாட்டின் பொதுவான விதி. ஆனால், இப்ப இந்த விதி எல்லாமே மாறிப் போச்சி. ஜெயிக்கிறவனுக்கு ‘கோப்பை’ கிடைக்குதோ இல்லையோ, தோற்கிறவனுக்கு கட்டாயம் நிறைய பணம் கிடைக்குது. அந்த அளவுக்கு சூதாட்டமும், ஊழலும் ஒவ்வொரு விளையாட்டுலயும் எல்லா மட்டத்துலயும் பரவியிருக்கு. முன்னாடிலாம் ஒரு டீம் , மேட்சுல...
கணித மேதை ராமானுஜர் திரைக்காவியமாகிறார்

கணித மேதை ராமானுஜர் திரைக்காவியமாகிறார்

சினிமா, திரைத் துளி
‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’ போன்ற முற்போக்கான திரைப்படங்களை திரையரங்கிற்கு கொண்டு வந்த ஞான ராஜசேகரனின் அடுத்த படம் ‘ராமானுஜன்’. ஈரோட்டில் பிறந்து, கும்பகோணத்தில் வளர்ந்து தனது கணித அறிவினால் உலகையே வெல்லுகின்ற ஸ்ரீனிவாச ராமானுஜரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகிற திரைப்படம் ‘ராமானுஜன்’ கடைசி கட்ட பணியிலுள்ளது. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கம் இருந்த வேளையில் – இந்தியர்களை அறிவில் குறைந்தவர்கள் என்று அகங்காரத்தோடு வெள்ளையர் கருதிய காலத்தில் தனது அசாத்தியமான கணித ஆற்றலினால் அவர்களைக் கவர்ந்து ஜி.எச்.ஹார்டி என்கிற கணிதப் பேராசிடியரால் உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்டவர், ராமானுஜன். இப்படிப்பட்ட தமிழ்நாட்டின் கணித மேதையை அவரது வாழ்க்கையை பெரும்பாலான தமிழர் அறியவில்லை. எனவேதான் ராமானுஜரை நம்நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ஞான ராஜசேகரன் உருவாக்கி வருகிறார்....
அந்த மூணு வார்த்தை

அந்த மூணு வார்த்தை

சினிமா, திரைத் துளி
‘ஐ லவ் யூ’ - மூணே மூணு வார்த்தை. ‘ஐ ஹேட் யூ’ - மூணே மூணு வார்த்தைதான். ‘ஹெள ஆர் யூ?’ -வும் மூணே மூணு வார்த்தைதான். மூணே மூணு வார்த்தை என்ற தலைப்பு நமக்குள் ஆர்வத்தை உருவாக்கும் ஓர் உன்னத தலைப்பு. காதலைக் குறிப்பிடும் படமாக இருக்குமோ என்ற ஆவலைத் தூண்டுகிறது. கேபிடல் ஃபிலிம் வொர்க்ஸ் சார்பில் எஸ்.பி .பி. சரண் தயாரிக்கும் 'மூணே மூணு வார்த்தை ' படத்தை இயக்குபவர் மதுமிதா. ‘வல்லமை தருவாயோ’, ‘கொலயா கொலயா முந்திரிக்கா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் வரவிருக்கும் மூன்றாவது படமாகும் 'மூணே மூணு வார்த்தை'. காதல் கலந்த நகைச்சுவைப் படமான இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் அர்ஜுன் சிதம்பரம். சுட்ட கதை மற்றும் இரண்டாம் உலகம் படங்களில் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வெங்கடேஷ் ஹரி நாதன் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். ஆதிதி செங்கப்பா கதாநாயகி ஆக அறிமுகமாகிறார். இந்தப் புத்துணர்ச்சி ஊட...
ஜகஜ்ஜால வடிவேலு

ஜகஜ்ஜால வடிவேலு

சினிமா, திரைத் துளி
நீண்ட இடைவெளிக்குப்பிறகு வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் படம் 'ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்'. தெனாலிராமன், மன்னர் என இரட்டை வேடங்களில் நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளார் வடிவேலு. இப்படத்திற்காக அரண்மனை, கோட்டைச்சுவர், நகரம் என ஏகப்பட்ட பொருட்செலவில், பிரம்மாண்டமான செட்டுக்கள் போடப்பட்டு, படமாக்கப்பட்டது. மேலும் குற்றாலம், அச்சன் கோவில், பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுக்கால பின்னணியில் மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள நகைச்சுவைப் படம் இது. D.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலை இப்போது நடைபெற்று வருகிறது. கலை இயக்குநர் M.பிரபாகரன் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி தத்ரூபமாக காட்சிகளைப் படமாக்கியுள்ளார். கலைவித்தகர் ஆரூர்தாஸ், சிரிக்கவும் சிந்திக்கவும் தக்க வக...