Shadow

சினிமா

தெகிடி விமர்சனம்

தெகிடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நேரத்தைக் கொல்லும் நல்லதொரு த்ரில்லர். டிடெக்டிவ் வெற்றியால் கண்கானிக்கப்படும் ஆட்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்படுகின்றனர். எதற்கு, ஏன், யார் கொலை செய்கின்றனர் என்பதுதான் கதை. மருந்துக்கு கூட வில்லாவில் சிரிக்காத அசோக் செல்வன், இப்படத்தில் சின்னதாய் மிக அழகாய்ப் புன்னகைக்கிறார். அவரின் முதல் இரண்டு படங்களைவிட பார்வையாளர்களுக்கு மிக நெருங்கி வந்துள்ளார். அதற்கு, அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள குரலும் ஒரு காரணம். கண்டிப்பாக அவருக்கு நல்ல பிரேக் கொடுக்கக் கூடிய படமாக இது அமையும். மதுஸ்ரீயாக ஜனனி ஐயர். நீளமான கண்கள். அவர் சிரிக்கும் பொழுது இரண்டு கண்களும் வாயும் ஒரே அளவில் நீள்கின்றன. வழக்கம்போல் காதலிக்கவும் காதலிக்கப்படவும்தான் கதாநாயகி உபயோகப்படுத்தப்பட்டுள்ளார். நாயகனும் நாயகியும் பார்த்துக் கொண்டாலே பாடல் வந்துவிடுகிறது. பாடல்கள் திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஒரு ஸ்பீட்-ப்ரேக்கர் போன்றவை. முக்கிய...
சென்னைத் தமிழில் சரண்யா பொன்வண்ணன்

சென்னைத் தமிழில் சரண்யா பொன்வண்ணன்

சினிமா, திரைத் துளி
‘இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், சென்னை குடிசைப் பகுதியை சேர்ந்த ஒரு சராசரி தாயாக நடிக்கிறார். இதற்காக சென்னைக்கென்று உள்ள பிரத்தியேக சென்னைத் தமிழைக் கற்றுக் கொண்டார். அது மட்டுமல்லாமல்.. அந்த பாஷையில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார் '' என்றார் ‘என்னமோ நடக்குது’ படத்தின் இயக்குநரான ராஜ பாண்டி.'என்னமோ நடக்குது' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஒரு குடிசைப் பகுதியில் நடந்தது . இடைவிடாமல் ஐந்துநாட்கள் நடந்த படப்பிடிப்பில் அனுபவசாலியான தேசிய விருது பெற்ற சரண்யா எல்லாக் காட்சிகளையும் ஒரே டேக்கில் நடித்து முடித்தார். அவருடன் அந்தக் காட்சிகளில் நடித்த விஜய் வசந்த் சற்று சிரமப்பட்டார் . கடைசி நாளில் நாயகன் விஜய் வசந்துக்கு நீண்ட வசனமும், அழுகையுடன் கூடிய நடிப்பும் தர வேண்டிய காட்சி. நடிப்பாரோ மாட்டோரோ என்று பெரும் சந்தேகத்துடன் இருக்கும் போது அங்கிருந்த எல்லோரையும் சரண்யா உட்பட தன்னுட...
‘மாஸ்’ பூலோகம் – ஜெயம் ரவி

‘மாஸ்’ பூலோகம் – ஜெயம் ரவி

சினிமா, திரைத் துளி
தமிழ் நாட்டின் மிக முக்கிய கலாச்சார விழாவாக கொண்டாடப்படும் மசானக் கொள்ளை என்று அழைக்கப்படும் மயானக் கொள்ளை திருவிழா இன்று தமிழகமெங்கும் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையமைப்பில், ஜெயம் ரவி ஜோடியாக த்ரிஷா நடிக்க, வட சென்னையின் குத்து சண்டை கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படம் 'பூலோகம் ' படத்தின் சில முக்கிய காட்சிகள் மசானக் கொள்ளையை முன்னிட்டு படமாக்கப்பட்டது. இந்தக் கலாச்சாரத்தை முழுமையாகக் காண சென்னை அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் விஜயம் செய்தனர். இந்த விழாவைக் கண்ட ஜெயம் ரவி, 'இந்த அனுபவம் முற்றிலும் புதுமையானது. இந்த மண்ணின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு மண்ணின் மணம் சார்ந்த படத்தில் நடிப்பது எனக்கு அளவிட முடியாத பெருமை. பூலோகம் போன்ற 'மாஸ்' கதையும், கதைக்...
தெகிடி என்றால்?

தெகிடி என்றால்?

சினிமா, திரைத் துளி
பகடை, சூது விளையாட்டு, புரட்டு ஆகிய அர்த்தங்கள் கொண்ட வார்த்தை ‘தெகிடி’. ஃபிப்ரவரி 28 வெளியாகவுள்ள தெகிடி க்ரைமும் சஸ்பென்ஸும் கலந்த படம். தொடர் கொலைகளின் பின் இருக்கும் மர்மத்தையும் ட்விஸ்ட்டையும், ஒரு டிடெக்டிவ் கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.நடிகர்கள்: >> அஷோக் செல்வன் >> ஜனனி ஐயர் >> ஜெயப்ரகாஷ் >> ஜெயகுமார் >> காளி >> ப்ரதீப் நாயர் >> கோவர்தன் >> கமலகண்ணன் >> மாதவன் >> சக்கரபாணி பணிக் குழு: >> இயக்கம் – P.ரமேஷ் >> தயாரிப்பு – C.செந்தில் குமார் >> ஒளிப்பதிவு – தினேஷ்கிருஷ்ணன்.B >> படத்தொகுப்பு – லியோ ஜான் பால் >> இசை – நிவாஸ் K.பிரசன்னா >> பாடல் – கபிலன், குறிஞ்சி பிரபா >> சண்டை – ‘பில்லா’ ஜகன் >> கலை – SS.மூர்த்தி >> ஒலி வடிவம் & ஒலித்தொகுப்பு ...
பிரம்மன் விமர்சனம்

பிரம்மன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நமது பொறுமையைச் சோதித்தறிந்து கொள்ள மீண்டுமொரு ஓர் அற்புத வாய்ப்பை நல்குகிறது பிரம்மன். தான் கோயிலாக மதிக்கும் தியேட்டரைக் காப்பாற்ற புறப்படுகிறான் நாயகன். இது முதற்பாதி. நான்காவதுவரை கூட படித்த உயிர் நண்பனுக்காக எல்லாத்தையும் விட்டுக்(!?) கொடுக்கிறான். இது இரண்டாம்பாதி. தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தும் சிவாவாக சசிகுமார். டி-ஷர்ட், ஜீன்ஸ் என மாடர்ன் உடையில் வருகிறார். இம்முறை, “நண்பன் ஜெயிச்சா நாம ஜெயிச்ச மாதிரி” என்ற பன்ச் வேலைக்காமல் போய்விட்டது. காரணம் அவ்வளவு திராபையான திரைக்கதை. டைட்டில் கிரெடிட் போடும் பொழுது பசங்க இருவரின் ஆர்வம் கொஞ்சம் புதுமையாகத் தெரிந்தது. அதோடு சரி. மனிதருக்கு பணிவு இருக்க வேண்டியதுதான். அறிமுக இயக்குநர் சாக்ரடீஸுக்கு அது மிக அதிகமாகவே இருக்கிறது. படத்தில் ஒரு காட்சி வைத்திருக்கிறார். உதவி இயக்குநராக இருக்கும் சூரியை அணுகி சென்ச்சுரி சினிமாஸ் மேனேஜர் கதை ...
ஆஹா கல்யாணம் விமர்சனம்

ஆஹா கல்யாணம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நானியின் நேரடி தமிழ்ப்படமிது என்ற போதிலும்.. தெலுங்கு ரசிகர்களுக்கும் சேர்த்துத் தயாரிக்கப்பட்டதாலோ என்னமோ படம் முழுவதும் வண்ணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. முதல் பாதியின் அத்தனை ஃப்ரேமிலும் பாதி ஸ்க்ரீனுக்கு மேல் இடம்பிடிப்பது சிவப்பு நிறம்தான். இதுவே தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும். சக்தியும் ஸ்ருதியும் இணைந்து, ‘ஃபினான்சும் ரொமான்சும் ஒண்ணு சேரக்கூடாது’ என்ற விதிமுறையை ஏற்படுத்திக் கொண்டு ‘கெட்டிமேளம்’ எனும் நிறுவனம் தொடங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ரொமான்ஸ் வந்துவிடுகிறது. பின் என்னானது என்பதுதான் கதை. ‘நான் ஈ’யில் பார்த்தே அதே நானி. ‘வெப்பம்’ படத்தில் அவர் சீரியசாக நடித்தது எதுவும் ஞாபகமில்லை. ஆனால் ‘நான் ஈ’ படத்தில் கொஞ்ச நேரம் வந்தாலும், ‘ஈ’ தான் அதில் நாயகன் என்றாலும்.. நானி மனதில் பதியுமளவு அழகாக நடித்திருப்பார். அங்கு அவருக்கு அற்பாயுசு என்பதால் அவரை படம் நெடுகும்...
டமால் டுமீல் – இசை வெளியீட்டூ விழா

டமால் டுமீல் – இசை வெளியீட்டூ விழா

சினிமா, திரைச் செய்தி
‘கேமியோ ஃபிலிம்ஸ் (Cameo Films) எனும் புது தயாரிப்பு நிறுவனம், வைபவை நாயகனாகக் கொண்டு டமால் டுமீல் படத்தைத் தயாரித்துள்ளது. ‘ப்ரொக்ளைம் அட்வர்டைசிங் ஏஜென்சி (Proclaim Advertising Agency)’ என்ற விளம்பர நிறுவனம்தான், கேமியோ ஃப்லிம்ஸ் என வெள்ளித்திரையை நோக்கி தனது அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது.நூறு விளம்பரப் படங்கள் தயாரித்த பின்னரே திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டமால் டுமீல்’ படம் க்ரைம் காமெடி த்ரில்லர் வகையைச் சார்ந்த படமாம்.படத்தின் நாயகி ரம்யா நம்பீசன். படத்தின் இசையமைப்பாளர் தமன். படத்தின் இயக்குநரான ஸ்ரீ, ஷங்கரின் உதவியாளர். எந்திரன் படத்தில் இவருடன் இன்னொரு உதவியாளராக பணி புரிந்த இயக்குநர் அட்லி, “என்னுடைய முதற்படத்திற்கு இந்த டெக்னிக்கல் டீமைதான் உபயோகிக்கணும்னு நினைச்சேன். ஆனா ஸ்ரீ முந்திக்கிட்டார்” என்றார். பாண்டிய நாடு படத்தில், ‘ஃபை.. ஃபை.....
நண்பனையும் காப்பாத்துவோம்.. பிரபஞ்சத்தையும் காப்பாத்துவோம்… ஆங்!

நண்பனையும் காப்பாத்துவோம்.. பிரபஞ்சத்தையும் காப்பாத்துவோம்… ஆங்!

சினிமா, திரைத் துளி
Captain America -The winter soldier என்ற பெயரில் வெளியிடப்படும் இந்த வருடத்தின் மிகப் பெரிய அதிரடிப் படம் தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு ஆகிய மற்ற பிராந்திய மொழிகளிலும் 'எதற்கும் அஞ்சாதவன்' என்ற பெயரில் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் 4ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இங்கே தமிழகத்திலும் வெளியாகிறது . நியூ யார்க் நகரில் நடக்கும் பேரழிவுக்கு பிறகு, ஸ்டீவ் ரோகேர்ஸ் அமைதியான முறையில் வாஷிங்டன் நகரில் வசித்து, நவீன உலகிற்கு பழகி வருகிறார். தன்னுடைய சகாவுக்கு ஒரு ஆபத்து ஏற்படும் போது, அவரைக் காக்க ஸ்டீவ் முற்படும் போது, பிரபஞ்சத்துக்கு ஏற்பட இருக்கும் ஒரு பேரழிவு ஆபத்தை எதிர் நோக்குகிறார். தனக்கு எதிரான சதிகளை முறியடித்து, தன்னை ஒடுக்க வரும் ஆதிக்க சக்திகளை எதிர்க்க ப்ளாக் விடோவுடனும் பால்கனுடன் இணைந்து போராடும் போது தான் தான் ஒன்றை அறிகிறார். அவர் இப்போது போராட போவது, “தி வின்ட்டர் சோல்...
சிநேகாவின் காதலர்கள் – இசை வெளியீட்டு விழா

சிநேகாவின் காதலர்கள் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் விக்ரமணனே அசந்துவிடுவார். அப்படியொரு நெகிழ்வான பின்னணிக் கொண்டது ‘சினேகாவின் காதலர்கள்’ படத்தின் முதற்புள்ளி. பேச்சுலர்களாக இருந்த பொழுது, ஒரே அறையில் தங்கியவர்கள் தயாரிப்பாளர் கா.கலைக்கோட்டுதயமும் இயக்குநர் முத்துராமலிங்கனும். அப்பொழுது முத்துராமலிங்கன் ‘சத்ரியன்’ அரசியலிதழின் ஆசிரியர்; கலைக்கோட்டுதயம் அந்த இதழில் பணி புரியும் தலைமைச் செய்தியாளர். அந்த நட்பு இப்பொழுது அவர்களை படம் பண்ண வைத்திருக்கிறது. “நான் 12 வருஷத்துக்கு முன்னாடி சின்னத் திரைக்கு வந்தேன். ‘தமிழன்’ தொலைக்காட்சி தொடங்கினேன். அப்பவே வெள்ளித் திரைக்கு வரணும்னு ஆசை. ஆனா என் தம்பிகள் இருவர், எஸ்.பி.சரணையும் வெங்கட் பிரபுவையும் வைத்து “ஞாபகம் வருதே” என படமெடுத்து நஷ்டமடைந்தவர்கள். நஷ்டமாகிடுவோமோன்னு பயமாக இருந்தது. இப்போ போட்ட பணம் முழுவதுமாக இழந்தாலும் சமாளித்துக் கொள்ளும் நிலையில் இருக்கேன். படம் நன்றாகப் போனால்...
ஏனோ தெய்வம் சதி செய்தது!?

ஏனோ தெய்வம் சதி செய்தது!?

கட்டுரை, சினிமா
இங்கு எவரும் அவரவர் விருப்பப்படி பிறப்பதில்லை. அவரவர் தேர்விற்கு முகம் கிடைப்பதாக இருந்தால், பிறக்கும் முன்பே அடிதடியும் குழப்பமும் ஏற்பட்டு கண்டிப்பாக சிருஷ்டியே ஸ்தம்பித்திருக்கும். ஆனால் சினிமாவில் தான் விருப்பப்பட்ட முகத்தை காட்டமுடியும் என தனது பிரத்தியேக ஒளிச் சேர்க்கையினால் மாயங்கள் நிகழ்த்தியவர் பாலு மகேந்திரா. அப்படி ஒரு நாய்க்குட்டிக்கு அவர் ‘சுப்பிரமணி’ எனப் பெயரிட்டு, தமிழர்கள் மனதில் அதை படரவிட்டு இன்றோடு 32 வருடங்கள் ஆகிறது. ஆம், ‘மூன்றாம் பிறை’ வெளியிடப்பட்ட தினம் இன்று. இன்னமும் எவரும் சுப்பிரமணியை மறந்திருக்க வாய்ப்பில்லை.கமல், பாலு மகேந்திரா ஆகிய இருவருக்குமே தேசிய விருதினைப் பெற்றுத் தந்த படம். அப்பொழுது கொண்டாடப்பட்ட படங்கள் பலவும் இன்று பார்க்க நகைப்புக்குரியதாய்த் தோன்றுகிறது. ரசனைகளின் மாற்றத்தால் நிகழும் புரிதல்கள் இவை. ஆனால் அன்று போல இன்றும் ரசனை மாற்றங்களையும...
குக்கூ – இசை வெளியீட்டு விழா

குக்கூ – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
பாலுமகேந்திராவின் குரலுடன் குக்கூ இசை வெளியீட்டு விழா தொடங்கியது. அந்த மகா கலைஞருக்கான மரியாதையை வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று செலுத்தினர். “முருகா.. உன் கனவுகள் நனவாக என்றுமிருப்பேன் துணையாக” என விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் சிம்பிளாகத் தொடங்கி வைத்தார். குக்கூ பட இயக்குநர் ராஜூமுருகனின் முதல் குரு இவர். கண்ணன் கொடுத்த தைரியமும் நம்பிக்கையும்தான், ‘தன்னால் முடியுமா?’ என சந்தேகித்த ராஜூமுருகனை ‘வட்டியும் முதலும்’ எழுதவைத்தது. ராஜூமுருகனின் இரண்டாவது குரு, சினிமா தொழிலைக் கற்றுக் கொடுத்த லிங்குசாமி. தன்னை பேட்டியெடுக்க வந்த ராஜூமுருகனை லிங்குசாமியே விரும்பி , ‘என்னிடம் அசிஸ்டென்ட்டாகச் சேர்த்து கொள்கிறாயா?” எனக் கேட்டுள்ளார். “ஆனால் இவன் என்னைப் போன்ற இயக்குநர் இல்லை. பாலா, சேரன், ‘அழகி’ படம் எடுத்த பொழுதிருந்த தங்கர் பச்சான் போல ஒரு இயக்குநர்” என்றார். “இரண்டு கருத்த இளைஞர்கள், காவே...
“இப்புடு ஹீரோ; ரேப்பூ வில்லன்” – ஆந்திரா மெஸ்

“இப்புடு ஹீரோ; ரேப்பூ வில்லன்” – ஆந்திரா மெஸ்

சினிமா, திரைச் செய்தி
சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது. அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மனமில்லாமல், யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்க்கை பயணமே ’ஆந்திரா மெஸ்’. “அனைவரும் அதென்ன ஆந்திரா மெஸ்னு தலைப்பு என்றே கேட்கிறாங்க. தலைப்பு ரொம்ப கவர்ச்சியாக இருக்கு. அப்புறம் சாப்பாடு. அனைவருக்கும் பிடிச்ச விஷயம். இதுல ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு சுவையைக் குறிக்கிறது. காரம், புளிப்பு, ஸ்வீட் என கதாபாத்திரங்களின் metaphor (உருவகம்) தான் தலைப்பு. படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை மெட்டோஃபர் தான். படத்தில் ஹீரோ, ஹீரோயின் இல்லை. ஏன்னா முதல் சீன்ல ஹீரோவாகத் தெரிஞ்சவன் மூணாவது சீன்ல வில்லனாகத் தெரிவான். ஒருவரிடம் கடன் வாங்கும்பொழுது அவர் ஹீரோவாகத் தெரிவார்; அவரே நாளைக்கு கடனைத் திருப்பிக் கேட்கிறப்ப வில்லனாகத் தெரிவார். ஸ்நூக்கர்...
“குக்கூ” இசை – ‘வட்டியும் முதலும்’ ராஜூ முருகன்

“குக்கூ” இசை – ‘வட்டியும் முதலும்’ ராஜூ முருகன்

சினிமா, திரைத் துளி
இந்தப் புகைப்படத்தில் கிராமஃபோனுக்குப் பக்கத்தில் நிற்கிற முருகேசண்ணனை நீங்கள் பார்க்க வேண்டும். குழந்தை மாதிரி திறக்காத கண்களும் நம்மைத் திறந்து வைக்கிற சிரிப்புமாக இருக்கிற முருகேசண்ணன். மூர்மார்க்கெட்டில் கடை நடத்துகிறார். இந்தக் கதையை எனக்கு பரிசளித்தவர்களில் அவரும் ஒருவர். படத்தில் ஒரு மாண்டேஜில் தோன்றுவதற்காக அவரது மனைவியையும் அழைத்தேன். காட்சி எடுப்பதற்கு முன்பாக மனைவியின் கைகளைத் தடவிப் பார்த்தவர், “ஏய்.. வளையல் போடல..” என்றபடி வளையலை வாங்கி மாட்டிவிட்டார். அது நம்மால் யோசிக்கவே முடியாத அன்பின் எட்டாவது வண்ணம்! மாதவரத்தில் பார்வையற்றவர்களுக்கான பயிற்சி வகுப்பில் இளங்கோ. “சார்… ஒங்க முன்னாடி தம்மடிச்சா மரியாத இல்ல… திரும்பி நின்னுக்குங்க சார்…” எனச் சிரித்தான். கழுத்து நரம்பு இழுக்க, இளையராஜாவாகவே மாறி, ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது…’ பாடினான். அவனது சிரிப்பை நீங்கள் ஒருமுறை பார்...
ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்

ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்

சினிமா, திரைத் துளி
ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை எழுதி வருகிறார். உணர்வுபூர்வமான, சென்டிமென்ட்டான, நகைச்சுவை கலந்த படங்களைக் கொடுப்பதில் வல்லவரான இயக்குநர் பி.வாசு இந்தக் கதையை பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக உருவாக்கவிருக்கிறார். 'ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்' என இப்படத்திற்கு தற்போது பெயரிட்டிருக்கிறார்கள். இந்தியத் திரையுலகம் கண்டிருக்காத, ஒரு தனித்துவம் வாய்ந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் இதுவரை நடித்திருக்காத ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.  பல முன்னணி விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்களுடன் இப்படத்திற்கான அதிகப்படியான அனிமேஷன் காட்சிகளை உருவாக்க தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அனிமேட்ரானிக்ஸ் நிபுணர்...
‘தல’ ஹீரோயின் நயன்தாரா

‘தல’ ஹீரோயின் நயன்தாரா

சினிமா, திரைச் செய்தி
சூப்பர்ஹிட் ஹிந்திப் படமான ‘கஹானி’ தமிழில் ‘நீ எங்கே என் என்பே’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும் இயக்கி வருகிறார் இயக்குநர் சேகர் கம்முலா. படத்தினை அப்படியே தழுவாமல் தனது பாணியில் திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கிறார். உதாரணத்திற்கு வித்யா பாலன் ஹிந்திப் படத்தில் கர்ப்பிணியாக நடித்திருப்பார். சேகர் கம்முலாவின் படத்தில் நயன்தாரா படத்தில் கர்ப்பவதி இல்லை. படத்தைப் பற்றி, ‘கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பது வாழ்நாளில் ஒருமுறை நிகழும் அதிசயம். இயக்குநரின் எதிர்பார்க்கும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துவிட்டேன் என்ற நிறைவு எனக்குள்ளது. கண்டிப்பாக ரசிகர்களும் அதை உணர்ந்துபோற்றுவார்கள்’ என்று சொல்லியுள்ளார் நயன்தாரா. இயக்குநர் சேகர் கம்முலாவும், இசையமைப்பாளர் கீரவாணியும்  கலந்து கொண்ட பிரஸ் மீட் சென்னையில் நடந்தது. சேகர் கம்முலாவின் சூப...