தெய்யம் என்னும் கலையை அடிப்படையாகக் கொண்டு, 'உத்தம வில்லன்' ஃபர்ஸ்ட் லுக் டீசரை உருவாக்கியுள்ளனர். வில்லன் என்பது வில்லுப்பாட்டுக்காரன் என்பதின் சுருக்கமாக இருக்குமோ என்ற ஐயத்தையும் இந்த டீசர் ஏற்படுத்தியுள்ளது.
“காவியத்தலைவன் படத்தில் இசை என்பது மிக முக்கியமான விஷயம். வழக்கமா படத்தில் 6 பாட்டு இருக்கணும் என்பதற்காகவே பாடல்கள் வைப்பாங்க. ஆனா இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகவே இசை இருக்கு. இந்தப் படத்தை ‘ரியல் மியூசிக்கல் ஃபிலிம்’னு சொல்லலாம். கால் நூற்றாண்டு காலமாக கேட்ட ரஹ்மான் இசையை இப்படத்தில் கேட்க மாட்டீங்க. அற்புதமான இசைக்காக ரொம்ப உழைச்சிருக்கார்” என்றார் நாசர்.
“நான் சக்கரக்கட்டி படத்தில் நடிக்கவே ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக் பண்றார் என்பதுதான் காரணம். ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக்கில் ஒரு படம் பண்றதே லைஃப் டைம் அச்சீவ்மென்ட். எனக்கு இது அவருடன் இரண்டாவது படம். நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனக்கு இந்தப் படத்தில் சேலஞ்சிங் ரோல். ஒரு நடிகைக்கு இப்படியொரு பெர்ஃபாமன்ஸ் ஓரியன்ட்டட் ரோல் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்” என்றார் வேதிகா.
“நான் சித்தார்த்தைப் பார்த்து அவர் வீட்டில் கதை சொன்...
“எனக்கு டெர்ரரிஸ்ட்னு பெயர் வந்துடுச்சு. நான் 92 இல் சின்மாக்கு வந்தேன். அதிலிருந்து என் வாழ்க்கை, கனவு, ட்ரீம் எல்லாம் சினிமாதான். வெயில் சொன்ன டைம்ல எடுத்து முடிச்சேன். ‘அங்காடித் தெரு’ - ரங்கநாதன் தெருல ஷூட்டிங், புது நடிகர் வச்சு எடுக்கிறதென ஒரு வலியும் வேதனையும் கடந்து எடுத்து முடிச்சோம். ‘அரவான்’ படத்துல பாத்திரங்களுக்கு பச்ச குத்தி விக் வச்சு வெறும் காலுல ‘ஹாட் சன்’ல நடக்க வச்சு ஸ்பாட்டுக்குக் கொண்டு வரவே 11 ஆகிடும். இப்படி நல்ல சினிமா எடுக்கணுங்கிற வேட்கையிலதான் எனக்கு டெர்ரரிஸ்ட் என்ற பெயர் வந்துடுச்சு. ஆனா இந்தப் படத்தில் எனக்குக் கிடைச்ச அனுபவம் முற்றிலும் புதுசு. நடிகர்கள் பற்றி, சினிமா பற்றி எனக்கிருந்த கணிப்பை முற்றிலும் மாற்றிவிட்டது.
அங்காடித் தெரு டப்பிங்கிற்காக திருநெல்வேலி போயிருந்தேன். அங்க நானும் ஜெயமோகனும் லிட்ரேச்சர் சம்பந்தமாக ரொம்ப நேரம் பேசிட்டிருந்தோம். அவ்வை சண...
“முதல்நாள் நானு, சித்தார்த், ப்ரித்வி ராஜ்லாம் நின்னு பேசிட்டிருக்கோம். வசந்தபாலனுக்கு ஒரே டென்ஷன். 'என்ன சார் எப்ப பார்த்தாலும் பேசிட்டே இருக்கீங்க. எனக்கு புது நடிகர்களை வச்சு படமெடுத்ட்ஹே பழக்கமாயிடுச்சு. அவங்க சொல்றதுக்கெல்லாம் கேட்பாங்க. நீங்க ஒண்ணுமே கேட்க மாட்டுறீங்களே!?' எனக் கேட்டார்.
என்னடா இவர் இப்படிச் சொல்றார்னு, ‘என்ன சித்தார்த்.. நாம படத்தைப் பற்றித் தான பேசிட்டிருந்தோம்?’னு கேட்டேன். சித்தார்த், ‘இல்ல சார் நாம் ப்ரூவ் பண்ணணும்’ என்றார். நானும், பிரித்வியும் ஏறக்குறைய சதித்திட்டம் தீட்டுற மாதிரிதான் தீட்டணும். நான் சித்தார்த் ப்ரித்வி மூவரும் பிளான் பண்ணோம். சதித்திட்டமே கூடச் சொல்லலாம். எங்க சதித் திட்டம் மிகப் பெரிய வெற்றியைத் தந்திருக்கு” என ‘காவியத்தலைவன்’ படம் நிறைவாக வந்திருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் நாசர்.
இந்தப் படத்தில் எனக்கு வேலையே இல்லாமப் போயிடுச்சு....
நேரத்தைக் கொல்லும் நல்லதொரு த்ரில்லர்.
டிடெக்டிவ் வெற்றியால் கண்கானிக்கப்படும் ஆட்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்படுகின்றனர். எதற்கு, ஏன், யார் கொலை செய்கின்றனர் என்பதுதான் கதை.
மருந்துக்கு கூட வில்லாவில் சிரிக்காத அசோக் செல்வன், இப்படத்தில் சின்னதாய் மிக அழகாய்ப் புன்னகைக்கிறார். அவரின் முதல் இரண்டு படங்களைவிட பார்வையாளர்களுக்கு மிக நெருங்கி வந்துள்ளார். அதற்கு, அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள குரலும் ஒரு காரணம். கண்டிப்பாக அவருக்கு நல்ல பிரேக் கொடுக்கக் கூடிய படமாக இது அமையும்.
மதுஸ்ரீயாக ஜனனி ஐயர். நீளமான கண்கள். அவர் சிரிக்கும் பொழுது இரண்டு கண்களும் வாயும் ஒரே அளவில் நீள்கின்றன. வழக்கம்போல் காதலிக்கவும் காதலிக்கப்படவும்தான் கதாநாயகி உபயோகப்படுத்தப்பட்டுள்ளார். நாயகனும் நாயகியும் பார்த்துக் கொண்டாலே பாடல் வந்துவிடுகிறது. பாடல்கள் திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஒரு ஸ்பீட்-ப்ரேக்கர் போன்றவை. முக்கிய...
‘இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், சென்னை குடிசைப் பகுதியை சேர்ந்த ஒரு சராசரி தாயாக நடிக்கிறார். இதற்காக சென்னைக்கென்று உள்ள பிரத்தியேக சென்னைத் தமிழைக் கற்றுக் கொண்டார். அது மட்டுமல்லாமல்.. அந்த பாஷையில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார் '' என்றார் ‘என்னமோ நடக்குது’ படத்தின் இயக்குநரான ராஜ பாண்டி.'என்னமோ நடக்குது' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஒரு குடிசைப் பகுதியில் நடந்தது . இடைவிடாமல் ஐந்துநாட்கள் நடந்த படப்பிடிப்பில் அனுபவசாலியான தேசிய விருது பெற்ற சரண்யா எல்லாக் காட்சிகளையும் ஒரே டேக்கில் நடித்து முடித்தார். அவருடன் அந்தக் காட்சிகளில் நடித்த விஜய் வசந்த் சற்று சிரமப்பட்டார் . கடைசி நாளில் நாயகன் விஜய் வசந்துக்கு நீண்ட வசனமும், அழுகையுடன் கூடிய நடிப்பும் தர வேண்டிய காட்சி. நடிப்பாரோ மாட்டோரோ என்று பெரும் சந்தேகத்துடன் இருக்கும் போது அங்கிருந்த எல்லோரையும் சரண்யா உட்பட தன்னுட...
தமிழ் நாட்டின் மிக முக்கிய கலாச்சார விழாவாக கொண்டாடப்படும் மசானக் கொள்ளை என்று அழைக்கப்படும் மயானக் கொள்ளை திருவிழா இன்று தமிழகமெங்கும் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையமைப்பில், ஜெயம் ரவி ஜோடியாக த்ரிஷா நடிக்க, வட சென்னையின் குத்து சண்டை கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படம் 'பூலோகம் ' படத்தின் சில முக்கிய காட்சிகள் மசானக் கொள்ளையை முன்னிட்டு படமாக்கப்பட்டது.
இந்தக் கலாச்சாரத்தை முழுமையாகக் காண சென்னை அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் விஜயம் செய்தனர். இந்த விழாவைக் கண்ட ஜெயம் ரவி, 'இந்த அனுபவம் முற்றிலும் புதுமையானது. இந்த மண்ணின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு மண்ணின் மணம் சார்ந்த படத்தில் நடிப்பது எனக்கு அளவிட முடியாத பெருமை. பூலோகம் போன்ற 'மாஸ்' கதையும், கதைக்...
பகடை, சூது விளையாட்டு, புரட்டு ஆகிய அர்த்தங்கள் கொண்ட வார்த்தை ‘தெகிடி’.
ஃபிப்ரவரி 28 வெளியாகவுள்ள தெகிடி க்ரைமும் சஸ்பென்ஸும் கலந்த படம். தொடர் கொலைகளின் பின் இருக்கும் மர்மத்தையும் ட்விஸ்ட்டையும், ஒரு டிடெக்டிவ் கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.நடிகர்கள்:
>> அஷோக் செல்வன்
>> ஜனனி ஐயர்
>> ஜெயப்ரகாஷ்
>> ஜெயகுமார்
>> காளி
>> ப்ரதீப் நாயர்
>> கோவர்தன்
>> கமலகண்ணன்
>> மாதவன்
>> சக்கரபாணி
பணிக் குழு:
>> இயக்கம் – P.ரமேஷ்
>> தயாரிப்பு – C.செந்தில் குமார்
>> ஒளிப்பதிவு – தினேஷ்கிருஷ்ணன்.B
>> படத்தொகுப்பு – லியோ ஜான் பால்
>> இசை – நிவாஸ் K.பிரசன்னா
>> பாடல் – கபிலன், குறிஞ்சி பிரபா
>> சண்டை – ‘பில்லா’ ஜகன்
>> கலை – SS.மூர்த்தி
>> ஒலி வடிவம் & ஒலித்தொகுப்பு ...
நமது பொறுமையைச் சோதித்தறிந்து கொள்ள மீண்டுமொரு ஓர் அற்புத வாய்ப்பை நல்குகிறது பிரம்மன்.
தான் கோயிலாக மதிக்கும் தியேட்டரைக் காப்பாற்ற புறப்படுகிறான் நாயகன். இது முதற்பாதி. நான்காவதுவரை கூட படித்த உயிர் நண்பனுக்காக எல்லாத்தையும் விட்டுக்(!?) கொடுக்கிறான். இது இரண்டாம்பாதி.
தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தும் சிவாவாக சசிகுமார். டி-ஷர்ட், ஜீன்ஸ் என மாடர்ன் உடையில் வருகிறார். இம்முறை, “நண்பன் ஜெயிச்சா நாம ஜெயிச்ச மாதிரி” என்ற பன்ச் வேலைக்காமல் போய்விட்டது. காரணம் அவ்வளவு திராபையான திரைக்கதை. டைட்டில் கிரெடிட் போடும் பொழுது பசங்க இருவரின் ஆர்வம் கொஞ்சம் புதுமையாகத் தெரிந்தது. அதோடு சரி.
மனிதருக்கு பணிவு இருக்க வேண்டியதுதான். அறிமுக இயக்குநர் சாக்ரடீஸுக்கு அது மிக அதிகமாகவே இருக்கிறது. படத்தில் ஒரு காட்சி வைத்திருக்கிறார். உதவி இயக்குநராக இருக்கும் சூரியை அணுகி சென்ச்சுரி சினிமாஸ் மேனேஜர் கதை ...
நானியின் நேரடி தமிழ்ப்படமிது என்ற போதிலும்.. தெலுங்கு ரசிகர்களுக்கும் சேர்த்துத் தயாரிக்கப்பட்டதாலோ என்னமோ படம் முழுவதும் வண்ணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. முதல் பாதியின் அத்தனை ஃப்ரேமிலும் பாதி ஸ்க்ரீனுக்கு மேல் இடம்பிடிப்பது சிவப்பு நிறம்தான். இதுவே தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும்.
சக்தியும் ஸ்ருதியும் இணைந்து, ‘ஃபினான்சும் ரொமான்சும் ஒண்ணு சேரக்கூடாது’ என்ற விதிமுறையை ஏற்படுத்திக் கொண்டு ‘கெட்டிமேளம்’ எனும் நிறுவனம் தொடங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ரொமான்ஸ் வந்துவிடுகிறது. பின் என்னானது என்பதுதான் கதை.
‘நான் ஈ’யில் பார்த்தே அதே நானி. ‘வெப்பம்’ படத்தில் அவர் சீரியசாக நடித்தது எதுவும் ஞாபகமில்லை. ஆனால் ‘நான் ஈ’ படத்தில் கொஞ்ச நேரம் வந்தாலும், ‘ஈ’ தான் அதில் நாயகன் என்றாலும்.. நானி மனதில் பதியுமளவு அழகாக நடித்திருப்பார். அங்கு அவருக்கு அற்பாயுசு என்பதால் அவரை படம் நெடுகும்...
‘கேமியோ ஃபிலிம்ஸ் (Cameo Films) எனும் புது தயாரிப்பு நிறுவனம், வைபவை நாயகனாகக் கொண்டு டமால் டுமீல் படத்தைத் தயாரித்துள்ளது. ‘ப்ரொக்ளைம் அட்வர்டைசிங் ஏஜென்சி (Proclaim Advertising Agency)’ என்ற விளம்பர நிறுவனம்தான், கேமியோ ஃப்லிம்ஸ் என வெள்ளித்திரையை நோக்கி தனது அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது.நூறு விளம்பரப் படங்கள் தயாரித்த பின்னரே திரைப்படத் தயாரிப்பில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘டமால் டுமீல்’ படம் க்ரைம் காமெடி த்ரில்லர் வகையைச் சார்ந்த படமாம்.படத்தின் நாயகி ரம்யா நம்பீசன். படத்தின் இசையமைப்பாளர் தமன். படத்தின் இயக்குநரான ஸ்ரீ, ஷங்கரின் உதவியாளர். எந்திரன் படத்தில் இவருடன் இன்னொரு உதவியாளராக பணி புரிந்த இயக்குநர் அட்லி, “என்னுடைய முதற்படத்திற்கு இந்த டெக்னிக்கல் டீமைதான் உபயோகிக்கணும்னு நினைச்சேன். ஆனா ஸ்ரீ முந்திக்கிட்டார்” என்றார்.
பாண்டிய நாடு படத்தில், ‘ஃபை.. ஃபை.....
Captain America -The winter soldier என்ற பெயரில் வெளியிடப்படும் இந்த வருடத்தின் மிகப் பெரிய அதிரடிப் படம் தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு ஆகிய மற்ற பிராந்திய மொழிகளிலும் 'எதற்கும் அஞ்சாதவன்' என்ற பெயரில் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் 4ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இங்கே தமிழகத்திலும் வெளியாகிறது .
நியூ யார்க் நகரில் நடக்கும் பேரழிவுக்கு பிறகு, ஸ்டீவ் ரோகேர்ஸ் அமைதியான முறையில் வாஷிங்டன் நகரில் வசித்து, நவீன உலகிற்கு பழகி வருகிறார். தன்னுடைய சகாவுக்கு ஒரு ஆபத்து ஏற்படும் போது, அவரைக் காக்க ஸ்டீவ் முற்படும் போது, பிரபஞ்சத்துக்கு ஏற்பட இருக்கும் ஒரு பேரழிவு ஆபத்தை எதிர் நோக்குகிறார். தனக்கு எதிரான சதிகளை முறியடித்து, தன்னை ஒடுக்க வரும் ஆதிக்க சக்திகளை எதிர்க்க ப்ளாக் விடோவுடனும் பால்கனுடன் இணைந்து போராடும் போது தான் தான் ஒன்றை அறிகிறார். அவர் இப்போது போராட போவது, “தி வின்ட்டர் சோல்...
இயக்குநர் விக்ரமணனே அசந்துவிடுவார். அப்படியொரு நெகிழ்வான பின்னணிக் கொண்டது ‘சினேகாவின் காதலர்கள்’ படத்தின் முதற்புள்ளி. பேச்சுலர்களாக இருந்த பொழுது, ஒரே அறையில் தங்கியவர்கள் தயாரிப்பாளர் கா.கலைக்கோட்டுதயமும் இயக்குநர் முத்துராமலிங்கனும். அப்பொழுது முத்துராமலிங்கன் ‘சத்ரியன்’ அரசியலிதழின் ஆசிரியர்; கலைக்கோட்டுதயம் அந்த இதழில் பணி புரியும் தலைமைச் செய்தியாளர். அந்த நட்பு இப்பொழுது அவர்களை படம் பண்ண வைத்திருக்கிறது.
“நான் 12 வருஷத்துக்கு முன்னாடி சின்னத் திரைக்கு வந்தேன். ‘தமிழன்’ தொலைக்காட்சி தொடங்கினேன். அப்பவே வெள்ளித் திரைக்கு வரணும்னு ஆசை. ஆனா என் தம்பிகள் இருவர், எஸ்.பி.சரணையும் வெங்கட் பிரபுவையும் வைத்து “ஞாபகம் வருதே” என படமெடுத்து நஷ்டமடைந்தவர்கள். நஷ்டமாகிடுவோமோன்னு பயமாக இருந்தது.
இப்போ போட்ட பணம் முழுவதுமாக இழந்தாலும் சமாளித்துக் கொள்ளும் நிலையில் இருக்கேன். படம் நன்றாகப் போனால்...
இங்கு எவரும் அவரவர் விருப்பப்படி பிறப்பதில்லை. அவரவர் தேர்விற்கு முகம் கிடைப்பதாக இருந்தால், பிறக்கும் முன்பே அடிதடியும் குழப்பமும் ஏற்பட்டு கண்டிப்பாக சிருஷ்டியே ஸ்தம்பித்திருக்கும். ஆனால் சினிமாவில் தான் விருப்பப்பட்ட முகத்தை காட்டமுடியும் என தனது பிரத்தியேக ஒளிச் சேர்க்கையினால் மாயங்கள் நிகழ்த்தியவர் பாலு மகேந்திரா. அப்படி ஒரு நாய்க்குட்டிக்கு அவர் ‘சுப்பிரமணி’ எனப் பெயரிட்டு, தமிழர்கள் மனதில் அதை படரவிட்டு இன்றோடு 32 வருடங்கள் ஆகிறது. ஆம், ‘மூன்றாம் பிறை’ வெளியிடப்பட்ட தினம் இன்று. இன்னமும் எவரும் சுப்பிரமணியை மறந்திருக்க வாய்ப்பில்லை.கமல், பாலு மகேந்திரா ஆகிய இருவருக்குமே தேசிய விருதினைப் பெற்றுத் தந்த படம். அப்பொழுது கொண்டாடப்பட்ட படங்கள் பலவும் இன்று பார்க்க நகைப்புக்குரியதாய்த் தோன்றுகிறது. ரசனைகளின் மாற்றத்தால் நிகழும் புரிதல்கள் இவை. ஆனால் அன்று போல இன்றும் ரசனை மாற்றங்களையும...