Shadow

சினிமா

காதல் டாக்டராகிறார் சந்தானம்

காதல் டாக்டராகிறார் சந்தானம்

சினிமா, திரைத் துளி
மனநல மருத்துவரான சந்தானம் தன்னிடம் வரும் நோயாளிகளின் பிரச்சினையை ஒருவரியில் சொல்லச் சொல்லிக் கேட்கிறார். அது பிடித்திருந்தால் மட்டுமே ட்ரீட்மென்ட் கொடுக்கும் வித்தியாசமான டாக்டர். "கண்ணா லட்டு திண்ண ஆசையா" சேது சொல்லும் ஒரு "டபுள் ட்ராக்" ஒன்லைனர் பிடித்துப் போக அவருக்கு உதவுகிறேன் பேர்வழி என களமிறங்கி சந்தானம் கலக்கும் காமெடி பட்டாசுதான் வாங்ஸ் விஷன் தயாரிக்கும் "வாலிபராஜா". “இந்தப் படத்தில் சந்தானத்தின் காமெடி பெரிய அளவில் பேசப்படும். ஹீரோவின் குழப்பத்தைத் தீர்த்து வைக்கும் சைக்யாட்ரிஸ்ட், சந்தானம் மாதிரி ஒருத்தரா இருந்தா காட்சிகள் கலகலன்னு இருக்கும்ல. அதுதான் முழுப் படம்” என்கிறார் இயக்குநர். படத்தில் சந்தானத்தின் பஞ்சுக்கும் பஞ்சமில்லை. ‘உன் காதலை போரடிக்காம பார்த்துகிட்ட, அது உன்னை பீர் அடிக்காம பாத்துக்கும்’, ‘ஒரு டாக்டரால முடியாதது ஒரு குவார்ட்டரால முடியும்’, ‘மாடு முன்னாடி ப...
“நான் முரட்டுப் பொண்ணு” – கார்த்திகா

“நான் முரட்டுப் பொண்ணு” – கார்த்திகா

சினிமா, திரைத் துளி
புறம்போக்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குலு மணாலியில் முடித்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ராஜஸ்தானுக்கு கிளம்பும் உற்சாகத்தில் இருந்தார் கார்த்திகா. "குலுமனாலியில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாகவும், மறக்க முடியாததாக இருந்தது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பிரசித்தி பெற்ற வீடியோகேம் கதாபாத்திரமான லாரா க்ராஃப்டை போல முரட்டுத்தனமான ஆக்‌ஷன் ஹீரோயின் பாத்திரம். இது எனக்கு புதிய அனுபவம், மேலும் இந்தப் படத்தில் நான் ஆடியிருக்கும் "டேப்"டான்ஸ் பெரிய அளவில் பேசப்படும்" என்றார். "என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் ஜனநாதனுக்கு என் உளமார்ந்த நன்றிகள். அவருடைய உலக அறிவு பிரம்மிப்பூட்டுகிறது. என் பார்வையில் அவர் ஒரு சரித்திர பேராசிரியராகவே தோன்றுகிறார். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம்  ஆகியோருடன் நடிப்பதும், ஜனநாதனின் இயக்கத்தில் யூ டி.வி. motion pictures த...
பாஷா இன் ‘சைவம்’ – இயக்குநர் விஜய்

பாஷா இன் ‘சைவம்’ – இயக்குநர் விஜய்

சினிமா, திரைத் துளி
சைவம் என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார் இயக்குநர் விஜய். பொதுவாகவே படத்தின் தலைப்புக்கு மிகவும் மெனக்கெடுபவர் அவர். அது போலவே, தன்னுடைய படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான பெயர் சூட்ட விரும்பினார். பல்வேறு பொருத்தமான பெயர்களின் பரீசிலித்த பிறகு, நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் உதவியோடு ' பாஷா' என பெயர் இட்டு ள்ளார். Guddu என்று செல்லமாக அழைக்கப்படும் ' பாஷா' அறிமுகப் படத்திலேயே இயக்குநரை பாராட்டுப் பத்திரம் வாசிக்க வைத்து விட்டார். 'என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு பொருத்தமான ஒரு கதா பாத்திரம் இருக்கும். அது நான் அவருடைய தீவிர ரசிகர் என்பாதால் மட்டுமன்று. அவர் எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்கு ஜீவன் கொடுத்து விடுபவர். என்னுடைய சைவம் படத்திலும், அவருக்கு கதையின் முதுகெலும்பான ஒரு முதியவர் பாத்திரம் உள்ளது. அந்த முதியவரின் இளம் வயது பேரனாக நடிக்க ...
கோலி சோடா விமர்சனம்

கோலி சோடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் பாண்டிராஜின் ‘பசங்க’ளை அப்படியே கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அழைத்து வந்து அசத்தியுள்ளார் விஜய் மில்டன். மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் நான்கு பையன்கள், ஆச்சியின் உதவியால் ஒரு மெஸ் திறக்கின்றனர். அதனால் கிடைக்கும் அடையாளத்தை இழந்ததும் அதை மீட்கப் போராடுகின்றனர். இதுதான் படத்தின் கதை. புள்ளி, சேட்டு, சித்தப்பா, குட்டிமணி ஆகியோர் தங்களது பெற்றோர் யாரென அறியாதவர்கள். மெஸ் தொடங்கியதும் ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது. ஒரு பிரச்சனையில் ஆளுக்கொரு திசையாகப் பிரிக்கப்படுகின்றனர். நால்வரில் நாயகன் என கொள்ளத்தக்க ‘புள்ளி’, பெளத்த மடாலயத்தில் வந்து அமரும் புறாவொன்றினால் ஞானதோயம் பெறுகிறான். நால்வருக்கும் இருத்தலைவிட அடையாளத்தை(!?) மீட்டெடுப்பது முக்கியமாகப்படுகிறது (பசங்களுக்கு தாங்கள் ‘மெஸ்’ நடத்துவதால் மதிக்கப்படுகிறோம் என்ற உணர்வே போராட வைக்கிறது. மெஸ் அவர்களது அடையாளமன்று). எட்டு வருடங்களுக...
யாமிருக்க பயமே!

யாமிருக்க பயமே!

சினிமா, திரைத் துளி
  'பயம்' என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கிய ஏராளமான அர்த்தங்களை மையமாகக் கொண்டு முற்றிலும் மாறுபட்ட கதை அம்சமும்  காட்சி அமைப்பும் கொண்ட படம் தான் 'யாமிருக்க பயமே'. விண்ணைத் தாண்டி வருவாயா, முப்பொழுதும் உன் கற்பனைகள் , நீதானே என் பொன் வசந்தம் , ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில், பிரபல ஒளிபதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஏராளமான பொருட்செலவில் தயாராகும் 'யான்' படத்தைத் தயாரித்து வரும் ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் தயாரித்து வழங்கும் அடுத்த படத்தின் தலைப்புதான் 'யாமிருக்க பயமே'. இயக்குனர் கே.வீ.ஆனந்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய டி.கே. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா, ரூபாமஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், கருணா மற்றும் ஓவியா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நைனிடாலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ப...
தொடங்கியது “புறம்போக்கு”

தொடங்கியது “புறம்போக்கு”

சினிமா, திரைத் துளி
குலு மனாலியில், எஸ்.பி.ஜனநாதனின் “புறம்போக்கு” படப்பிடிப்புத் தொடங்கியது. இயக்குநர் அமீர் ஃபர்ஸ்ட் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். இப்படத்தை யூ டி.வி. மோஷன் பிக்சர்சுடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் சேர்ந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வீரம் விமர்சனம்

வீரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தீபாவளிக்கு ஒரு படம், பொங்கலுக்கு ஒரு படமென அடித்து ஆடுகிறார் அஜித். அவரது வெள்ளை-கருப்பு முடி திரையில் தெரிந்ததுமே, திரையரங்கம் அதிர ஆரம்பித்து விடுகிறது. அடிதடிதான் வாழ்க்கை என்றிருக்கும் விநாயகம், அகிம்சாவாதியான நல்லசிவத்தின் மகள் கோப்பெரும்தேவி மீது காதல் வயப்படுகிறார். அடிதடி வாழ்க்கையா அல்லது கோப்பெரும்தேவியா என விநாயகம் முடிவெடுப்பதுதான் படத்தின் கதை. விநாயகமாக அஜித். வெள்ளை தாடி , வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை என திரையில் ஜொலிஜொலிக்கிறார். சும்மா வந்து நின்றாலே விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. எத்தனைபேர் வந்தாலும் அடித்து துவம்சம் பண்ணுகிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு, அஜித்தின் குரலையும் தொழில்நுட்ப உதவியால் கம்பீரமாக்கியுள்ளனர். படத்தில் அஜித்திற்கு நான்கு தம்பிகள். தமிழ் சினிமாவின் வழக்கம்போல், அஜித் ஒரு பாசக்கார அண்ணன். பாலா தான் அஜித்தின் பெரிய தம்பி. மலையாளப் பக்க...
ஜில்லா விமர்சனம்

ஜில்லா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தமுறை பொங்கல், தமிழ்த்திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் விசேடமானது. நீண்ட நாள் கழித்து அதிசயமாய் இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்துள்ளது. போதாக்குறைக்கு பொங்கலைச் சிறப்பிக்க ‘கம்ப்ளீட் ஸ்டார்’ மோகன்லாலும் களத்தில் இறங்கியுள்ளார். மதுரையின் தனிப்பெரும் தாதா சிவன். அவர் ஏதேனும் நினைத்தாலே அதை நிறைவேற்றுவான் அவரது வளர்ப்பு மகன் சக்தி. ஒரு விபத்தினைக் காண நேர்ந்து மனம் மாறும் சக்தி, அவனது தந்தையிடம் அடிதடியை விடச்சொல்கிறான். பின் என்னானது என்பதுதான் கதை. பலமுறை பார்த்துச் சலித்துப் போன ‘போக்கிரி’ பாத்திரத்தில் மீண்டும் விஜய். எதிரில் நிற்பவர் முகத்தைப் பார்த்துப் பேச மாட்டேங்கிறார். மோகன் லால் எவ்வளவு பெரிய ஆள்? கேரளாவிலிருந்து நமக்காக வந்திருக்காரே என்றாவது மோகன்லாலில் முகத்தைப் பார்த்துப் பேசியிருக்கலாம். பாடல் காட்சிகளில் மட்டும் அசின், நயன்தாராவின் பின்புறத்தைத் தொட்டவர்.. இப...
“ஜில்லா”… மனம் திறக்கும் மோகன்லால்.!

“ஜில்லா”… மனம் திறக்கும் மோகன்லால்.!

சினிமா, திரைத் துளி
விஜய் – மோகன்லால் இனைந்து நடிக்கும் படம் ஜில்லா. மலையாள சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் மோகன்லால் தமிழில் நடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டவை.ஜில்லா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பற்றி?ஜில்லா படத்தில் நடிக்க முதல் காரணம் விஜய். அடுத்தது சூப்பர்குட் என்ற தரமான நிறுவனம். இதற்கெல்லாம் மேலாக நான் மலையாளப் படங்களில் பிஸியாக இருந்த வேளையில் விடாமல் என்னைத் துரத்தி கதை சொன்ன இயக்குநர் நேசன். ஏதோ வருகிறோம், போகிறோம் என்றால் மோகன்லால் எதற்கு? கதை அழகாக இருந்தது. அதில் எனது கேரக்டரும் வலுவாகப் பொருந்தும்படியாக இருந்தது.விஜய்க்கும் அப்பாவாக நடிக்கிறீர்களே? ஹீரோ இமேஜ் பாதிக்காதா?படம் பார்க்கும் யாருக்கும் அப்படியொரு கேள்வி எழாது. மதுரை மண்ணுக்கே உரித்தான வீரமும் கெளரவமும் கலந்த பாத்திரத்தில் வந்திருக்கிறேன்.தமிழில் விஜய்க்கு, பெரிய ரசிகர்கள் உள்ளனர். கேரளாவில் உங்களுக்கும்...
புதிய உற்சாகத்தோடு இளையராஜா!

புதிய உற்சாகத்தோடு இளையராஜா!

சினிமா, திரைத் துளி
இசைஞானி இளையராஜா கடந்த சில வாரங்களுக்குமுன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய இளையராஜா மருத்துவர்களின் அலோசனையின்படி கட்டாய ஓய்வில் இருந்தார். இதனால் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இருந்தும் ரசிகர்களை ஏமாற்றாமல், வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் தோன்றி ரசிகர்களை நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தினார். தற்போது பூரண நலம்பெற்று மீண்டும் தன் இசைப்பயணத்தைத் தொடங்கிய இளையராஜா, புதிய உற்சாகத்தோடு கவிஞர் சினேகன் நடிக்கும் இராஜராஜ சோழனின் போர்வாள் திரைப்படத்திற்காக ஒரு பாடலை ஞாயிற்றுக்கிழமை (05.01.2014) அன்று, பிரசாத் தியேட்டரில் கம்போஸ் செய்துள்ளார். திங்கட்கிழமை (06.01.2014) அன்று, அந்தப் பாடலுக்கான குரல்பதிவு செய்யும் பணியையும் தொடர்கிறார். இசைஞானி உடல்நலம் பெற்று திரும்ப...
அனன்யா, ஓவியா இணையும் ‘புலி வால்’

அனன்யா, ஓவியா இணையும் ‘புலி வால்’

சினிமா, திரைத் துளி
இன்றைய இளைய சமுதாயத்தினரின் தவிர்க்க முடியாத அல்லல்களை நகைச்சுவையுடன் சொல்லவரும் ஒரு திரைப்படம். நம் சமுதாயத்தின் இரண்டு கோடிகளில் உள்ள இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சுவாரசியமான நிகழ்வுகளும் அதன் விளைவுகளும்தான் புலி வால் எனும் இத்திரைப்படம்.எந்த விலை கொடுத்தும் வெற்றியை மட்டுமே தக்க வைக்க நினைக்கும் உயர் அந்தஸ்த்தில் இருக்கும் ஓர் ஐ.டி. நிறுவனர் கார்த்திக். கார்த்திக்கின் காதலியான மோனிகா தான் அவனின் பி.ஏ.வும் கூட. கார்த்திக்காக பிரசன்னா; மோனிகாவாக ஓவியா. சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் காசி. காசியுடன் வேலை பார்க்கும் செல்வியும் காசியும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். காசியாக விமல்; செல்வியாக அனன்யா. கார்த்திக்கின் பெற்றோரால் அவனுக்கு நிச்சயிக்கப்படும் பெண் பவித்ரா. பவித்ராவாக இனியா.நீரோடையாக சென்றுகொண்டிருந்த அவரவர் வாழ்க்கையில், பவித்ரா கார்த்திக்குக்காக...
வீரம் – பத்திரிகையாளர் சந்திப்பு

வீரம் – பத்திரிகையாளர் சந்திப்பு

சினிமா, திரைச் செய்தி
“அஜித் சார், கிராமத்துப் பின்னணில படம் பண்ணி நாளாச்சு. இது மலையாளப் படத் தழுவலோ, ரஜினியின் முரட்டுக்காளை படத் தழுவலோ இல்லை. அஜித் சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவரோட அந்த முகத்தை இந்தப் படத்தில் காட்டியிருக்கோம். படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. எல்லாத் தரப்பினருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஃபேமிலி என்ட்டர்டெயினராக இருக்கும்” என்றார் இயக்குநர் சிவா. “அஜித் சாரோடவும், ஷிவா சாரோடவும் இது எனக்கு முதல்படம்” என மகிழ்ச்சியில் இருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். படத்தின் தீம் மியூசிக் படத்திற்கான எதிர்பார்ப்பை அடுத்த கட்டதிற்கு நகர்த்தியுள்ளதாக இயக்குநர் சிவாவும் இசையமைப்பாளருக்கு நன்றியினைச் சொல்லிக்கொண்டார்.“எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். எனக்கு அஜித் சார் படத்தில் வொர்க் பண்ணணும் என்பது தான் அந்தக் கனவு. அது நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன். 110 நாள் ஷூட்...
கனவில் சஞ்சரிக்கும் ‘சாகச’ நாயகன்

கனவில் சஞ்சரிக்கும் ‘சாகச’ நாயகன்

சினிமா, திரைத் துளி
குறிப்பிட்ட அளவு  திறமைகள் உள்ள சிலர், தனது வாழ்நாளில் கற்பனைக்கு எட்டாத அளவில் பெரிய சாதனைகளையும்  சாகசங்களையும் நிகழ்த்தி அசத்த விரும்புகிறார்கள். அவர்களின் சாகசக்கனவு நிறைவேற நிஜ வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத வகை வகையான சோதனைகளைச் சந்திக்கிறார்கள்.சதா சர்வகாலமும் கனவுலகில் சஞ்சரிக்கும் நாயகன்தான் வால்டெர் மிட்டி. லைஃப் பத்திரிகையில்  வேலை செய்யும் அவன், தன்னை ஒரு விமான ஓட்டியாகவும், மருத்துவராகவும், கொலைக்காரனாகவும் வினோத விபரீதக் கற்பனையில் மிதக்கிறான்.ஆனால் நிஜ வாழ்வில் அவன் ஒரு பயந்த  சுபாவம் கொண்டவன். சின்ன விஷயத்தைக்கூட சரியாக  அவனால் புரிந்துகொள்ள் முடியாது! அப்படிப்பட்டவன் தன் வேலை சம்பந்தமாக உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செல்கிறான். அப்போது  நடக்கும் சுவாரசியமான தடாலடிச் சம்பவங்கள்தான் படத்தில் வரும் மீதி கதை.1939இல் ...
ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம்

ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணையும் ஷாம்

சினிமா, திரைத் துளி
ஆர்யா, விஜய் சேதுபதியுடன் புறம்போக்கு படத்தில் ஷாமும் இணைகிறார். குலு மணாலியில் ஜனவரி 14, 2014 முதல் படப்பிடிப்புத் தொடங்கவிருக்கிறது. பிக்கேனர், ஜெய்ப்பூர், பொக்ரான், ஜெய்சால்மர் என முதலில் வடஇந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்திவிட்டு ஹைதராபாத், சென்னைக்கு படப்பிடிப்பிற்காக வரவுள்ளனர்.“என் முதல்படம் இயற்கைக்குப் பிறகு ஷாமுடன் மீண்டும் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன். ஷாம் வேலையில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பவர். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் என 2014இன் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும். பல நடிகர்கள் ஒரே படத்தில் நடிக்கும் ட்ரெண்ட்டையும் தொடங்கி வைக்கிறோம். தலைப்பைப் போலவே படத்தின் கதையும் வித்தியாசமானது” என்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். “புறம்போக்கு பவர்ஃபுல்லான கரு கொண்ட கதை. மூன்று ஹீரோக்களுக்குமே முக்கியத்துவம் உள்ளது. ஷூட்டிங்கிற்காக ஆர்வமாகக் காத்திருக்கேன்” என்றார் ஷ...
ஆர்வக்கோளாறில் அனிருத்

ஆர்வக்கோளாறில் அனிருத்

சினிமா, திரைத் துளி
இளம் இசையமைப்பாளர் அனிருத் இருக்கும் இடத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நடிக்க வரும் பல வாய்ப்புகளைத் தட்டிக் கழித்தே வருகிறார் அனிருத். இசைக்கு மட்டுமே தனது திரையுலகப் பணி  என்று திட்டவட்டமாக இருக்கும் அனிருத், அதை உரக்கச் சொல்லியும் வருகிறார்.'ஆக்கோ' - சமீபத்தில் அனிருத் மிகவும் ரசித்துக் கேட்டு வியந்த கதை. தன்னுடைய பங்களிப்பு ஓர் இசையமைப்பாளராக மட்டுமே  என்று கூறியதோடு மிகச் சிறந்த பாடல்களை இசை அமைத்துக் கொடுத்து  இருக்கிறார். இவரது ஒத்துழைப்பின் பிரதிபலனாக இயக்குநர் எம்.ஷ்யாம் குமாரும்,  தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி, ரதீஸ் வேலுவும் தங்களது நிறுவனமான ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில்  அனிருத்தைப் பிரதானப்படுத்தி ஃபர்ஸ்ட்-லுக் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் இடையே  அனிருதுக்கு இருக்கும் புகழுக்கு இதுவே சான்று.படத்தின் ஒளிப்பதிவாளர் சிவா ...