Shadow

திரைத் துளி

குக்கூ – கோடையில் மழை போல்!

குக்கூ – கோடையில் மழை போல்!

சினிமா, திரைத் துளி
ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் நெக்ஸ்ட் பிக்ஃபிலிம் இணைந்து தயாரித்து இருக்கும் ‘குக்கூ’ என்ற திரைப்படத்திற்கு தணிக்கைதுறை ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அட்டகத்தி புகழ் தினேஷ் புதுமுகம் மாளவிகா இணைந்து நடித்திற்கும் திரைப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் உதவியாளர் ராஜூமுருகன் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில், P.K.வர்மா ஒளிப்பதிவில், சண்முகம் வேலுசாமி படத்தொகுப்பில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. தணிக்கைத்துறை அதிகாரிகளால் பாராட்டப்பட்ட இத்திரைப்படம் ‘கோடையில மழ போல’ மார்ச் 21 – ஆம் தேதி திரைக்கு வருகிறது....
மீண்டும் கஜாலா!

மீண்டும் கஜாலா!

சினிமா, திரைத் துளி
படிக்கப் போயிருந்த கஜாலா மீண்டும் திரைத்துறைக்கு வந்துள்ளார். “100 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்டுள்ள நாட்டில், கவனிக்கப்படாமல் போக வாய்ப்பு மிக அதிகம். ஆனால் சினிமா எனும் க்ரியேட்டிவ் ஃபீல்டில், நமது திறமையைக் காட்டிப் புகழடையலாம். அப்படி ஆசிர்வதிக்கப்பட்ட நட்சத்திரங்களில் நானுமொருத்தி. நதியா, ரேவதி, ஷாலினி ஆகியோர்தான் என் இன்ஸ்பிரேஷன். இனி தமிழ்த்திரைப்படங்களில் கவனம் செலுத்தி, எனக்கான ஓரிடத்தைப் பிடிப்பதுதான் என் நோக்கம்” என்றார் கஜாலா. மீண்டும் ராம் படத்து ‘கார்த்திகாயினி மலைச்சாமி’ போன்ற பெயர்சொல்லும் கதாபாத்திரங்களில் சிறக்க வாழ்த்துக்கள்!...
இசையமைப்பாளர் ‘ஷான் ரோல்டன்’ – எழுத்தாளர் சாண்டில்யனின் பேரன்

இசையமைப்பாளர் ‘ஷான் ரோல்டன்’ – எழுத்தாளர் சாண்டில்யனின் பேரன்

சினிமா, திரைத் துளி
அப் ஷாட் பிலிம்ஸ் (Ab Shot Films) P. மதுசூதனன் வழங்க, ஸ்கை லைட் கிரியேஷன்ஸ் சுதீர் ஜெயின்-உடன் இணைந்து பி அன்ட் சி பிலிம்ஸ் சார்பில் பத்ரி தயாரித்து இயக்கும் படம் ‘ஆடாம ஜெயிச்சோமடா'. வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு ஆகிய படங்களைத் தொடர்ந்து பத்ரி இயக்கத்தில் வெளிவர உள்ள ஐந்தாவது படம் இது. படத்தைப் பற்றி இயக்குனர் பத்ரி கூறியதாவது, “ஒவ்வொரு விளையாட்டிலும் மைதானத்தில் ஒருவர் ஜெயிப்பார், மற்றொருவர் தோற்பார். ஜெயிக்கிறவனுக்கு கோப்பை கிடைக்கும். தோற்கிறவனுக்கு ஒன்றும் கிடைக்காது. இதுதான் விளையாட்டின் பொதுவான விதி. ஆனால், இப்ப இந்த விதி எல்லாமே மாறிப் போச்சி. ஜெயிக்கிறவனுக்கு ‘கோப்பை’ கிடைக்குதோ இல்லையோ, தோற்கிறவனுக்கு கட்டாயம் நிறைய பணம் கிடைக்குது. அந்த அளவுக்கு சூதாட்டமும், ஊழலும் ஒவ்வொரு விளையாட்டுலயும் எல்லா மட்டத்துலயும் பரவியிருக்கு. முன்னாடிலாம் ஒரு டீம் , மேட்சுல...
கணித மேதை ராமானுஜர் திரைக்காவியமாகிறார்

கணித மேதை ராமானுஜர் திரைக்காவியமாகிறார்

சினிமா, திரைத் துளி
‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’ போன்ற முற்போக்கான திரைப்படங்களை திரையரங்கிற்கு கொண்டு வந்த ஞான ராஜசேகரனின் அடுத்த படம் ‘ராமானுஜன்’. ஈரோட்டில் பிறந்து, கும்பகோணத்தில் வளர்ந்து தனது கணித அறிவினால் உலகையே வெல்லுகின்ற ஸ்ரீனிவாச ராமானுஜரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகிற திரைப்படம் ‘ராமானுஜன்’ கடைசி கட்ட பணியிலுள்ளது. ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கம் இருந்த வேளையில் – இந்தியர்களை அறிவில் குறைந்தவர்கள் என்று அகங்காரத்தோடு வெள்ளையர் கருதிய காலத்தில் தனது அசாத்தியமான கணித ஆற்றலினால் அவர்களைக் கவர்ந்து ஜி.எச்.ஹார்டி என்கிற கணிதப் பேராசிடியரால் உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்டவர், ராமானுஜன். இப்படிப்பட்ட தமிழ்நாட்டின் கணித மேதையை அவரது வாழ்க்கையை பெரும்பாலான தமிழர் அறியவில்லை. எனவேதான் ராமானுஜரை நம்நாட்டு மக்களிடம் கொண்டு செல்ல இந்தத் திரைப்படத்தை இயக்குநர் ஞான ராஜசேகரன் உருவாக்கி வருகிறார்....
அந்த மூணு வார்த்தை

அந்த மூணு வார்த்தை

சினிமா, திரைத் துளி
‘ஐ லவ் யூ’ - மூணே மூணு வார்த்தை. ‘ஐ ஹேட் யூ’ - மூணே மூணு வார்த்தைதான். ‘ஹெள ஆர் யூ?’ -வும் மூணே மூணு வார்த்தைதான். மூணே மூணு வார்த்தை என்ற தலைப்பு நமக்குள் ஆர்வத்தை உருவாக்கும் ஓர் உன்னத தலைப்பு. காதலைக் குறிப்பிடும் படமாக இருக்குமோ என்ற ஆவலைத் தூண்டுகிறது. கேபிடல் ஃபிலிம் வொர்க்ஸ் சார்பில் எஸ்.பி .பி. சரண் தயாரிக்கும் 'மூணே மூணு வார்த்தை ' படத்தை இயக்குபவர் மதுமிதா. ‘வல்லமை தருவாயோ’, ‘கொலயா கொலயா முந்திரிக்கா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் வரவிருக்கும் மூன்றாவது படமாகும் 'மூணே மூணு வார்த்தை'. காதல் கலந்த நகைச்சுவைப் படமான இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் அர்ஜுன் சிதம்பரம். சுட்ட கதை மற்றும் இரண்டாம் உலகம் படங்களில் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வெங்கடேஷ் ஹரி நாதன் மற்றொரு நாயகனாக நடிக்கிறார். ஆதிதி செங்கப்பா கதாநாயகி ஆக அறிமுகமாகிறார். இந்தப் புத்துணர்ச்சி ஊட...
ஜகஜ்ஜால வடிவேலு

ஜகஜ்ஜால வடிவேலு

சினிமா, திரைத் துளி
நீண்ட இடைவெளிக்குப்பிறகு வைகைப்புயல் வடிவேலு நடிக்கும் படம் 'ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்'. தெனாலிராமன், மன்னர் என இரட்டை வேடங்களில் நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளார் வடிவேலு. இப்படத்திற்காக அரண்மனை, கோட்டைச்சுவர், நகரம் என ஏகப்பட்ட பொருட்செலவில், பிரம்மாண்டமான செட்டுக்கள் போடப்பட்டு, படமாக்கப்பட்டது. மேலும் குற்றாலம், அச்சன் கோவில், பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. வரலாற்றுக்கால பின்னணியில் மிகவும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள நகைச்சுவைப் படம் இது. D.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலை இப்போது நடைபெற்று வருகிறது. கலை இயக்குநர் M.பிரபாகரன் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி தத்ரூபமாக காட்சிகளைப் படமாக்கியுள்ளார். கலைவித்தகர் ஆரூர்தாஸ், சிரிக்கவும் சிந்திக்கவும் தக்க வக...
சாகசமும் ஆபத்தும் – கார்த்திகேயன்

சாகசமும் ஆபத்தும் – கார்த்திகேயன்

சினிமா, திரைத் துளி
தரமான சின்ன பட்ஜெட் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு, அதை போன்று மேலும் பல படங்களைத் தயாரிக்க ஊக்குவிக்கிறது. இந்த தர வரிசையில் தற்போது தயாராகி வரும் படம்தான் 'கார்த்திகேயன் '.Magnus Cine prime pvt ltd மற்றும் Navya visual media என்ற நிறுவனத்தின் சார்பில் B.V.ஸ்ரீநிவாஸும், மல்லிகார்ஜுனனும் தயாரிக்கும் இந்தப் படத்தில் சுப்ரமணியபுரம் சுவாதி கதாநாயகியாக நடிக்கிறார். அவருக்கு இணையாக புது முகம் நிகில் நடிக்க, தமிழ்த்திரை உலகின் படங்களில் தூணாகத் திகழும் ஜெயபிரகாஷும் கிஷோரும் வலுவான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் எல்லோருடைய பாராட்டுகளையும் அள்ளிய துளசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாகசமும் ஆபத்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை குறித்த படம் 'கார்த்திகேயன்'. புதிய இயக்குநர் சந்து, கதைக்கேற்ப காட்சி அமைப்புடன் ரசிகர்களை நாற்காலியின் ந...
சென்னைத் தமிழில் சரண்யா பொன்வண்ணன்

சென்னைத் தமிழில் சரண்யா பொன்வண்ணன்

சினிமா, திரைத் துளி
‘இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், சென்னை குடிசைப் பகுதியை சேர்ந்த ஒரு சராசரி தாயாக நடிக்கிறார். இதற்காக சென்னைக்கென்று உள்ள பிரத்தியேக சென்னைத் தமிழைக் கற்றுக் கொண்டார். அது மட்டுமல்லாமல்.. அந்த பாஷையில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார் '' என்றார் ‘என்னமோ நடக்குது’ படத்தின் இயக்குநரான ராஜ பாண்டி.'என்னமோ நடக்குது' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஒரு குடிசைப் பகுதியில் நடந்தது . இடைவிடாமல் ஐந்துநாட்கள் நடந்த படப்பிடிப்பில் அனுபவசாலியான தேசிய விருது பெற்ற சரண்யா எல்லாக் காட்சிகளையும் ஒரே டேக்கில் நடித்து முடித்தார். அவருடன் அந்தக் காட்சிகளில் நடித்த விஜய் வசந்த் சற்று சிரமப்பட்டார் . கடைசி நாளில் நாயகன் விஜய் வசந்துக்கு நீண்ட வசனமும், அழுகையுடன் கூடிய நடிப்பும் தர வேண்டிய காட்சி. நடிப்பாரோ மாட்டோரோ என்று பெரும் சந்தேகத்துடன் இருக்கும் போது அங்கிருந்த எல்லோரையும் சரண்யா உட்பட தன்னுட...
‘மாஸ்’ பூலோகம் – ஜெயம் ரவி

‘மாஸ்’ பூலோகம் – ஜெயம் ரவி

சினிமா, திரைத் துளி
தமிழ் நாட்டின் மிக முக்கிய கலாச்சார விழாவாக கொண்டாடப்படும் மசானக் கொள்ளை என்று அழைக்கப்படும் மயானக் கொள்ளை திருவிழா இன்று தமிழகமெங்கும் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையமைப்பில், ஜெயம் ரவி ஜோடியாக த்ரிஷா நடிக்க, வட சென்னையின் குத்து சண்டை கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படம் 'பூலோகம் ' படத்தின் சில முக்கிய காட்சிகள் மசானக் கொள்ளையை முன்னிட்டு படமாக்கப்பட்டது. இந்தக் கலாச்சாரத்தை முழுமையாகக் காண சென்னை அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர் விஜயம் செய்தனர். இந்த விழாவைக் கண்ட ஜெயம் ரவி, 'இந்த அனுபவம் முற்றிலும் புதுமையானது. இந்த மண்ணின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு மண்ணின் மணம் சார்ந்த படத்தில் நடிப்பது எனக்கு அளவிட முடியாத பெருமை. பூலோகம் போன்ற 'மாஸ்' கதையும், கதைக்...
தெகிடி என்றால்?

தெகிடி என்றால்?

சினிமா, திரைத் துளி
பகடை, சூது விளையாட்டு, புரட்டு ஆகிய அர்த்தங்கள் கொண்ட வார்த்தை ‘தெகிடி’. ஃபிப்ரவரி 28 வெளியாகவுள்ள தெகிடி க்ரைமும் சஸ்பென்ஸும் கலந்த படம். தொடர் கொலைகளின் பின் இருக்கும் மர்மத்தையும் ட்விஸ்ட்டையும், ஒரு டிடெக்டிவ் கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.நடிகர்கள்: >> அஷோக் செல்வன் >> ஜனனி ஐயர் >> ஜெயப்ரகாஷ் >> ஜெயகுமார் >> காளி >> ப்ரதீப் நாயர் >> கோவர்தன் >> கமலகண்ணன் >> மாதவன் >> சக்கரபாணி பணிக் குழு: >> இயக்கம் – P.ரமேஷ் >> தயாரிப்பு – C.செந்தில் குமார் >> ஒளிப்பதிவு – தினேஷ்கிருஷ்ணன்.B >> படத்தொகுப்பு – லியோ ஜான் பால் >> இசை – நிவாஸ் K.பிரசன்னா >> பாடல் – கபிலன், குறிஞ்சி பிரபா >> சண்டை – ‘பில்லா’ ஜகன் >> கலை – SS.மூர்த்தி >> ஒலி வடிவம் & ஒலித்தொகுப்பு ...
நண்பனையும் காப்பாத்துவோம்.. பிரபஞ்சத்தையும் காப்பாத்துவோம்… ஆங்!

நண்பனையும் காப்பாத்துவோம்.. பிரபஞ்சத்தையும் காப்பாத்துவோம்… ஆங்!

சினிமா, திரைத் துளி
Captain America -The winter soldier என்ற பெயரில் வெளியிடப்படும் இந்த வருடத்தின் மிகப் பெரிய அதிரடிப் படம் தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு ஆகிய மற்ற பிராந்திய மொழிகளிலும் 'எதற்கும் அஞ்சாதவன்' என்ற பெயரில் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரல் 4ஆம் தேதி அமெரிக்காவில் வெளியாகும் அதே நாளில் இங்கே தமிழகத்திலும் வெளியாகிறது . நியூ யார்க் நகரில் நடக்கும் பேரழிவுக்கு பிறகு, ஸ்டீவ் ரோகேர்ஸ் அமைதியான முறையில் வாஷிங்டன் நகரில் வசித்து, நவீன உலகிற்கு பழகி வருகிறார். தன்னுடைய சகாவுக்கு ஒரு ஆபத்து ஏற்படும் போது, அவரைக் காக்க ஸ்டீவ் முற்படும் போது, பிரபஞ்சத்துக்கு ஏற்பட இருக்கும் ஒரு பேரழிவு ஆபத்தை எதிர் நோக்குகிறார். தனக்கு எதிரான சதிகளை முறியடித்து, தன்னை ஒடுக்க வரும் ஆதிக்க சக்திகளை எதிர்க்க ப்ளாக் விடோவுடனும் பால்கனுடன் இணைந்து போராடும் போது தான் தான் ஒன்றை அறிகிறார். அவர் இப்போது போராட போவது, “தி வின்ட்டர் சோல்...
“குக்கூ” இசை – ‘வட்டியும் முதலும்’ ராஜூ முருகன்

“குக்கூ” இசை – ‘வட்டியும் முதலும்’ ராஜூ முருகன்

சினிமா, திரைத் துளி
இந்தப் புகைப்படத்தில் கிராமஃபோனுக்குப் பக்கத்தில் நிற்கிற முருகேசண்ணனை நீங்கள் பார்க்க வேண்டும். குழந்தை மாதிரி திறக்காத கண்களும் நம்மைத் திறந்து வைக்கிற சிரிப்புமாக இருக்கிற முருகேசண்ணன். மூர்மார்க்கெட்டில் கடை நடத்துகிறார். இந்தக் கதையை எனக்கு பரிசளித்தவர்களில் அவரும் ஒருவர். படத்தில் ஒரு மாண்டேஜில் தோன்றுவதற்காக அவரது மனைவியையும் அழைத்தேன். காட்சி எடுப்பதற்கு முன்பாக மனைவியின் கைகளைத் தடவிப் பார்த்தவர், “ஏய்.. வளையல் போடல..” என்றபடி வளையலை வாங்கி மாட்டிவிட்டார். அது நம்மால் யோசிக்கவே முடியாத அன்பின் எட்டாவது வண்ணம்! மாதவரத்தில் பார்வையற்றவர்களுக்கான பயிற்சி வகுப்பில் இளங்கோ. “சார்… ஒங்க முன்னாடி தம்மடிச்சா மரியாத இல்ல… திரும்பி நின்னுக்குங்க சார்…” எனச் சிரித்தான். கழுத்து நரம்பு இழுக்க, இளையராஜாவாகவே மாறி, ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது…’ பாடினான். அவனது சிரிப்பை நீங்கள் ஒருமுறை பார்...
ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்

ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்

சினிமா, திரைத் துளி
ரஜினிகாந்த் நடித்த மாபெரும் வெற்றிப் படமான ‘சந்திரமுகி’ படத்திற்குப் பிறகு இயக்குநர் பி.வாசு கடந்த இரண்டரை வருடங்களாக ஒரு கதையை எழுதி வருகிறார். உணர்வுபூர்வமான, சென்டிமென்ட்டான, நகைச்சுவை கலந்த படங்களைக் கொடுப்பதில் வல்லவரான இயக்குநர் பி.வாசு இந்தக் கதையை பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளுடன் அனிமேட்ரானிக்ஸ் படமாக உருவாக்கவிருக்கிறார். 'ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும்' என இப்படத்திற்கு தற்போது பெயரிட்டிருக்கிறார்கள். இந்தியத் திரையுலகம் கண்டிருக்காத, ஒரு தனித்துவம் வாய்ந்த கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் இதுவரை நடித்திருக்காத ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.  பல முன்னணி விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்களுடன் இப்படத்திற்கான அதிகப்படியான அனிமேஷன் காட்சிகளை உருவாக்க தேர்வு செய்யப்பட உள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அனிமேட்ரானிக்ஸ் நிபுணர்...
பிரம்மாண்டமாய் வளர்கிறது “யான்”

பிரம்மாண்டமாய் வளர்கிறது “யான்”

சினிமா, திரைத் துளி
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குநராக களமிறங்கும் திரைப்படம்தான் "யான்". RS infotainment சார்பில் திரு.எல்ரெட் குமார் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகி வரும்  ஜீவா, துளசி, நாசர், ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, 'சூது கவ்வும் ' கருணா ஆகியோர் நடிக்கின்றனர். 60% படப்பிடிப்பு இங்கு முடிவடைந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு மொரோக்கோ நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் அங்கே வரலாறு காணாத பனி பெய்த போதும் அதைப் பொருட்படுத்தாமல் மிகுந்த சிரமத்துடன் உக்கிரமான சண்டை காட்சிகளையும், கண்களைக் கவரும் பாடல் காட்சிகளையும் படமாக்கி உள்ளனர். துரித வேகத்தில் படப்பிடிப்பை நடத்திய திரு. ரவி கே.சந்திரனின் வேகத்தையும், படமாக்கும் நேர்த்தியையும் கண்டு Bourne ultimatum, The Mummy, Zero dark 30, Body of lies , Kingdom of heaven ஆகிய உலக தரம் வாய்ந்த படங்களில் பணியாற்றிய மொராக்கோ நாட்டு படக் ...
மௌனம் கலைத்தார் பாலுமகேந்திராவின் துணைவி.. மௌனிகா

மௌனம் கலைத்தார் பாலுமகேந்திராவின் துணைவி.. மௌனிகா

சினிமா, திரைத் துளி
இயக்குநர் பாரதிராஜா, வெற்றிமாறன், விடுதலை ஆகியோர் எடுத்த முயற்சியினாலும், பாலுமகேந்திராவின் மகன் கௌரிசங்கரின் பெருந்தன்மையாலும்தான் தன் கணவரின் முகத்தை கடைசியாகப் பார்க்க முடிந்ததாக நடிகை மௌனிகா தெரிவித்துள்ளார். 1985இல், 'உன் கண்ணில் நீர்வழிந்தால்' படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த போதுதான் அவரை முதலில் சந்தித்தேன். அன்று தொடங்கிய உறவு கடந்த 28 ஆண்டுகளில் அன்பும் காதலும் புரிதலும் நிறைந்த உறவாக இருந்தது. கடந்த 2000இல் நாங்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டாலும் அவருக்கு இரண்டாவது அட்டாக் வந்தபோதுதான் அவர் எங்கள் திருமணத்தை வெளிப்படையாக அறிவித்தார். அதன் பிறகே எனக்கும் அவருடைய முதல் குடும்பத்தினருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தனக்கு ஏதும் நேர்ந்துவிட்டால் அழாமல் வந்து தன் முகத்தைமட்டும் பார்த்துவிட்டுச் சென்றுவிடும்படி கூறியிருந்தார். அவர் ஓரு பெர்ஃபக்‌ஷனிஸ...