Shadow

திரைத் துளி

அனைகா – பலம் வாய்ந்தவள் | நிறைவானவள்

அனைகா – பலம் வாய்ந்தவள் | நிறைவானவள்

சினிமா, திரைத் துளி
"இந்தியாவில் பிறந்தாலும் ஹாங் காங்கில் ஒரு பிரபல கட்டடக் கலை  அதிபரின் ஒரே மகளான நான் இந்தியாவுக்கு வந்திருந்த போது..  என் தோழியுடன்   மும்பையிலுள்ள ஒரு உயர்ந்த கட்டடத்தின் லிப்ஃடில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை  சந்திக்க நேர்ந்தது. என்  தோழி அவர் தான் RGV  என அறிமுகபடுதியபோதுக் கூட எனக்கு அவரை தெரியவில்லை. பின்னர் என் தோழி மூலம் அவர்  படத்தில் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்றதும் முதலில் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டேன். அந்த முடிவுக்கு அவரது கதையும் அவருடைய மேக்கிங்  ஸ்டைலும் முக்கிய காரணம். லிப்ஃட் பயணம் என்னை இவ்வளவு தூரம் தூக்கி செல்லும் என்பதை நான் எதிர்பார்கவில்லை. அவர் இயக்கத்தில் அறிமுகமாகும் பாக்கியம் எனக்கு கிட்டியது  என்னால்  நம்பவே முடியவில்லை. இரு மொழிகளில் தயாராகும் 'நான்தாண்டா' திரைப் படம் என்னை நி...
“இவ்வுலகில் எல்லோருக்கும் இடமுண்டு” – ஆதி

“இவ்வுலகில் எல்லோருக்கும் இடமுண்டு” – ஆதி

சினிமா, திரைத் துளி
விஜய் சேதுபதி , சிவ  கார்த்திகேயன் , அதர்வா, விக்ரம் பிரபு  என்ற தன்னுடைய சக வயது நடிகர்களை சிலாகித்துப் பாராட்டிப் பேசுகிறார் ஆதி."அவர்களுடைய வெற்றி என்னைப் போன்ற மற்ற நடிகர்களுக்கு ,எங்களது நேரம் வரும் போது  நல்ல கதைகள் கிட்டக் கூடும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது .இது என் தாய் எனக்கு கற்று தந்த பாடம். இவ்வுலகில் எல்லோருக்கும் இடம் உண்டு என்பது தாரக மந்திரம் போல் சொல்லியே வளர்த்தார். அந்தப் பாடமே என்னை வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மாதிரியான மன நிலையில் நிதானமாக செயல் பட வைக்கிறது" என் கிறார் ஆதி.இந்த மனநிலைக்கு அவரது  சகோதரர் சத்யா பிரபாஸ்  இயக்கத்தில் உருவாகும் 'யாகாவாராயினும் நா காக்க' படத்தின் தலைப்பும் காரணமாக இருக்குமா என்றக் கேள்விக்கு ,'இருக்கலாம்..  இந்தப் படம் நிச்சயமாக  என் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும்" என்றார்.  ...
சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹன்சிகா

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹன்சிகா

சினிமா, திரைத் துளி
"இயக்குநர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் நடிக்கவிருப்பதை பெருமையாகவும், கௌரவமாகவும் கருதுகிறேன். இப்படத்தின் கதையும், திரைக்கதையும் என்னை மிகவும் கவர்ந்தது. இது ஒரு முழு நீள காமெடிப் படம். இப்படத்தின் கதாநாயகனாக சிவா கார்த்திகேயன் நடிக்க உள்ளார். இவரது திறமையும் வளர்ச்சியும் எல்லோரையும் கவர்ந்துள்ளது. இப்படம் ரசிகர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்'' என்கிறார் மகிழ்ச்சியுடன் ஹன்சிகா மோத்வாணி....
இயக்குநராகும் சின்னத்திரை நடிகர் பிரேம் சாய்

இயக்குநராகும் சின்னத்திரை நடிகர் பிரேம் சாய்

சினிமா, திரைத் துளி
இயக்குநரும் தயாரிப்பாளருமான கௌதம் வாசுதேவ மேனனுக்கும், அவரது பட தயாரிப்பு நிறுவனமான 'ஃபோட்டான் கதாஸ்' நிறுவனத்துக்கும் இது தங்கமான நேரம் என்றுதான் சொல்ல வேண்டும் .தங்க மீன்கள் படத்துக்கு கிடைக்கும் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து  தரமான வித்தியாசமான கதைகளை,  தகுதியான திறமையானவர்களை தேர்ந்தெடுக்கும் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தங்களது அடுத்த தயாரிப்பான 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்' திரைப்படத்தின் தொடர்ந்து நடைபெற்று வரும் படப்பிடிப்பால் மிகவும் உற்சாகமாக உள்ளனர். ஹைதராபாத் நகரில் நடை பெறும்  இந்த தமிழ் தெலுங்கு இரு மொழியில் தயாராகும் இந்தக் காதல் கலந்த நகைச்சுவை படத்தின் இயக்குனர் பிரபு தேவாவிடம் இணை இயக்குனராகபணியாற்றிய பிரேம் சாய். இவர் சின்னத் திரையில் நடித்துக் கொண்டிருந்த பிரபலமான நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தின் இயக்குநர் பிரேம் சாய் பற்றி தயாரிப்பாளர் கௌ...
ஆஸ்கார் நாயகன் பற்றி ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன்

ஆஸ்கார் நாயகன் பற்றி ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன்

சினிமா, திரைத் துளி
தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்  சமீபமாக எல்லா புகழும் ரஹ்மானுக்கே என்று சொல்லி கொண்டு இருக்கிறார் . மரியான் படத்தின் இசை கடந்த சில வருடங்களாக தமிழ் திரை உலகம் கேட்டிராத மாபெரும் இசையாகும்.இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க உரியவர் A.R .ரஹ்மான் மட்டும் தான் . இதை தவிர படத்தின் பின்னணி இசை கோர்புக்காக  இரவு பகலாக அயராது உழைத்து தன்னுடைய  வெளிநாட்டு இசை நிகழ்சிகளையும் ஒத்தி வைத்து இதுதான் தன்னுடைய முதல் படம் போல் பாவித்து பணி  புரிவதை பார்க்கும் போது  பிரமிப்பு அடைந்தேன். வெறும் திறமை மட்டும் நம்மை உச்சத்தில் உட்கார வைக்காது அதற்குரிய உழைப்பும் தொழில் பக்தியும் வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம்  A.R.rahmaan தான் என்று கூறுகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன் .  ...
“அது நான் இல்லை!!” – வி.டி.வி கணேஷ்

“அது நான் இல்லை!!” – வி.டி.வி கணேஷ்

சினிமா, திரைத் துளி
தன் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் ட்விட்டர் கணக்கிலிருந்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் வி.டி.வி. கணேஷ். இதனால் வேதனையடைந்திருக்கும் அவர், இது சம்பந்தமாக புகார் பதிவு செய்யவும் உள்ளார். தற்போது"சரஸ்வதி சபதம்" பட ஷூட்டிங்கிற்காக மலேசியா செல்கிறார்