Shadow

திரைத் துளி

காதலைக் கொண்டாடும் ‘ஆஹா கல்யாணம்’

காதலைக் கொண்டாடும் ‘ஆஹா கல்யாணம்’

சினிமா, திரைத் துளி
ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான 'பேண்ட் பஜா பராட்' படத்தை தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப மாற்றங்கள் செய்து தமிழில் 'ஆஹா கல்யாணம்' என்ற பெயரில் யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் உதவியாளராக பணியாற்றிய கோகுல் கிருஷ்ணா இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். அவர் வெளியிட்டிருக்கும் காதலர் தின வாழ்த்து செய்தியில் தனது முதல் படத்தின் மேல் உள்ள காதல் திருமண பந்தம் போல நீடித்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார். "படத்தின் முதல் பிரதியைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ் ரசிகர்களை குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திழுக்கும் அத்தனை அம்சங்களும் சிறப்பாக வந்திருக்கின்றது" என்று கூறியுள்ளார். மேலும், "சக்தியாக நானியும், ஸ்ருதியாக வாணியும் கலக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு ஃப்ரேமிலும் இவர்களின் இளமை குறும்பு கொப்பளித்துக் கொண்டே இருக்கும். இது போன்ற ஒரு காதல் க...
அசத்தலான பாடல்களுடன் ஆஹா கல்யாணம்

அசத்தலான பாடல்களுடன் ஆஹா கல்யாணம்

சினிமா, திரைத் துளி
யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஹிந்தியில் பெரிய வெற்றியைப் பெற்ற "பேண்ட் பஜா பராத்" தமிழில் ஆஹா கல்யாணம் என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. பிரபல தெலுங்கு ஹீரோவான நானி நேரடியாக தமிழில் நடிக்கும் இந்தப் படம் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் இசை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் படத்தின் இசை அமைப்பாளர் தரன் குமார் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். தன்னுடைய திரையுலகப் பயணத்தில் இந்தப் படம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்குமென்கிறார். படத்தின் இயக்குநரும் தன் நெருங்கிய நண்பருமான கோகுல் கிருஷ்ணா படத்தில் தமிழ் வாசம் தூக்கலாய் இருக்க வேண்டும் என்று கூறியதால் மூலப் படத்தை பார்க்காமல், அதன் பாடல்களைக் கேட்காமல் கதையை மட்டும் வைத்து புதிதாய் தமிழுக்கென பாடல்களை உருவாக்கியதாக தரன் குமார் நிருபர்களிடம் கூறினார். எங்களது கூட...
கணவரைத் தேடும் நயன்தாரா

கணவரைத் தேடும் நயன்தாரா

சினிமா, திரைத் துளி
ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான 'கஹானி' திரைப்படம் தமிழில் "நீ எங்கே என் அன்பே!" என்ற பெயரில் உருவாகி வருகிறது. காணாமல் போன தன் கணவனைத் தேடி நகருக்கு வரும் ஓர் அபலை பெண்னைச் சுற்றி நடைபெறும் பரபரப்பான இந்தக் கதையில் நயன்தாரா கதை நாயகியாக நடித்திருக்கிறார். ஹிந்தியில் வித்யா பாலன் ஏற்று பெரும் புகழை பெற்ற இந்த பாத்திரத்துக்கு நயன்தாரா மேலும் மெருகு ஊட்டி உள்ளார். சுவாரசியமான திருப்பங்களும், வித்தியாசமான கதைக் களமும் கொண்ட இந்தப் படம் இதன் ஹிந்தி பதிப்பான 'கஹானி' படத்துக்கு இணையாக பெயரும் புகழும் ஈட்டும் என இந்தப் படத்தின் இயக்குநர் சேகர் கம்முளா நம்பிக்கை தெரிவித்தார். வயா காம் 18 motion pictures தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது. படத்தின் ட்ரெயிலர் வெளியீடு வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது....
கலக்கலான புதுமையோடு “கள்ளப்படம்”

கலக்கலான புதுமையோடு “கள்ளப்படம்”

சினிமா, திரைத் துளி
கூத்துக் கலையினை மையமாக வைத்துத் தயாராகி வரும் படம்தான் "கள்ளப்படம்" . அறிமுக இயக்குநர் வடிவேல் தனது இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆச்சர்யமான ஒரு புதுமையை செய்திருக்கிறார். இந்த படத்தில் ஒரு இயக்குநர், ஒரு ஒளிப்பதிவாளர், ஒரு இசையமைப்பாளர், ஒரு எடிட்டர் ஆகியோர்தான் படத்தின் பிரதான கதாபாத்திரங்கள். இந்தக் கதாபாத்திரங்களில் அந்தந்த தொழில்நுட்ப கலைஞர்களே நடித்திருக்கிறார்கள். இயக்குநர் வேடத்தில் படத்தின் இயக்குனர் வடிவேலுவும், ஒளிப்பதிவாளர் வேடத்தில் படத்தின் ஒளிப்பதிவாளரான ஶ்ரீராம் சந்தோஷும், இசையமைப்பாளர் வேடத்தில் படத்தின் இசையமைப்பாளரான "கே" வும், எடிட்டர் வேடத்தில் படத்தின் எடிட்டரான கௌகினும் நடிக்கின்றனர். படத்தின் நாயகியாக லஷ்மி ப்ரியா நடிக்கிறார். "ஸ்க்ரிப்ட் நன்றாக வந்திருக்கு. ஒவ்வொரு ஃப்ரேமிலும் அதை உணரலாம். முன்னேறணும் என ஆசைப்படுவர்களுக்குள் உள்ள நட்பும் அன்னியோன்யமு...
ஹலோ கோச்சடையான்

ஹலோ கோச்சடையான்

சினிமா, திரைத் துளி
கோச்சடையான் ரிலீஸ் தேதி சொன்னாலும் சொன்னார்கள்.. ஆளாளுக்கு கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டனர். இந்தியாவின் பிரபல செல் போன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கார்பன் மொபைல் ரஜினி ரசிகர்களுக்காக கோச்சடையான் ஸ்பெஷல் எடிஷன் போன்களை சந்தைக்கு கொண்டுவருகிறார்கள். பத்து லட்சம் போன்களை தங்களுடைய 27000 அவுட்லெட் கடைகளின் மூலம் தென்னிந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கோச்சடையான் முகமுடிகளும் கிடைக்கும். மொபைல் வெளியிடப்படும் முன், விளம்பரத்திற்காக தென்னிந்திய ரேடியோ ஸ்டேஷன்களில் 60000 நொடிகளையும், டி.வி. சேனலில் 600 நொடிகளும் விளம்பரத்திற்காக வாங்கியுள்ளது கார்பன். அதே போல், அனைத்து மொழி தினசரிகளிலும் மூன்று முழுப் பக்கங்களுக்கு விளம்பரம் தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கார்பன் மொபைலின் இயக்குநரான திரு. சுதிர் ஹசிஜா செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்....
ஆஹா கல்யாணம், சந்தோஷத்தில் நானி

ஆஹா கல்யாணம், சந்தோஷத்தில் நானி

சினிமா, திரைத் துளி
காலத்தை வென்ற பல காதல் படங்களைத் தயாரித்த பெருமைக்குரிய யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தமிழ்த் தயாரிப்பான "ஆஹா கல்யாணம்" படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் முடிவடைந்தது. தெலுங்குத் திரையுலகின் பிரபல கதாநாயகனான நானி நடிக்கும் முதல் நேரடி தமிழ்ப்படம் என்கிற வகையில் "ஆஹா கல்யாணம்" படத்திற்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. இளைஞர்களைப் பெருமளவில் கவர்ந்து இழுக்கும் வகையில் இளமைத் துள்ளளுடன் கூடிய கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நடித்த அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது என்கிறார் நானி. மேலும் படத்தின் நாயகி வாணியுடன் பணியாற்றியது இனிமையான அனுபவம். அவரது உற்சாகமும்  ஈடுபாடும் பங்களிப்பும் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்றார். “இயக்குநர் கோகுல் கிருஷ்ணா, எனக்கு நெருங்கிய நண்பரும் ஆவார். தனக்கு என்ன வேண்டுமோ, அது கிடைக்கும் வரை அயராத அவரது உழைப்பும் நேர்த்தியும்தான் அ...
காதல் டாக்டராகிறார் சந்தானம்

காதல் டாக்டராகிறார் சந்தானம்

சினிமா, திரைத் துளி
மனநல மருத்துவரான சந்தானம் தன்னிடம் வரும் நோயாளிகளின் பிரச்சினையை ஒருவரியில் சொல்லச் சொல்லிக் கேட்கிறார். அது பிடித்திருந்தால் மட்டுமே ட்ரீட்மென்ட் கொடுக்கும் வித்தியாசமான டாக்டர். "கண்ணா லட்டு திண்ண ஆசையா" சேது சொல்லும் ஒரு "டபுள் ட்ராக்" ஒன்லைனர் பிடித்துப் போக அவருக்கு உதவுகிறேன் பேர்வழி என களமிறங்கி சந்தானம் கலக்கும் காமெடி பட்டாசுதான் வாங்ஸ் விஷன் தயாரிக்கும் "வாலிபராஜா". “இந்தப் படத்தில் சந்தானத்தின் காமெடி பெரிய அளவில் பேசப்படும். ஹீரோவின் குழப்பத்தைத் தீர்த்து வைக்கும் சைக்யாட்ரிஸ்ட், சந்தானம் மாதிரி ஒருத்தரா இருந்தா காட்சிகள் கலகலன்னு இருக்கும்ல. அதுதான் முழுப் படம்” என்கிறார் இயக்குநர். படத்தில் சந்தானத்தின் பஞ்சுக்கும் பஞ்சமில்லை. ‘உன் காதலை போரடிக்காம பார்த்துகிட்ட, அது உன்னை பீர் அடிக்காம பாத்துக்கும்’, ‘ஒரு டாக்டரால முடியாதது ஒரு குவார்ட்டரால முடியும்’, ‘மாடு முன்னாடி ப...
“நான் முரட்டுப் பொண்ணு” – கார்த்திகா

“நான் முரட்டுப் பொண்ணு” – கார்த்திகா

சினிமா, திரைத் துளி
புறம்போக்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குலு மணாலியில் முடித்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ராஜஸ்தானுக்கு கிளம்பும் உற்சாகத்தில் இருந்தார் கார்த்திகா. "குலுமனாலியில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாகவும், மறக்க முடியாததாக இருந்தது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பிரசித்தி பெற்ற வீடியோகேம் கதாபாத்திரமான லாரா க்ராஃப்டை போல முரட்டுத்தனமான ஆக்‌ஷன் ஹீரோயின் பாத்திரம். இது எனக்கு புதிய அனுபவம், மேலும் இந்தப் படத்தில் நான் ஆடியிருக்கும் "டேப்"டான்ஸ் பெரிய அளவில் பேசப்படும்" என்றார். "என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் ஜனநாதனுக்கு என் உளமார்ந்த நன்றிகள். அவருடைய உலக அறிவு பிரம்மிப்பூட்டுகிறது. என் பார்வையில் அவர் ஒரு சரித்திர பேராசிரியராகவே தோன்றுகிறார். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம்  ஆகியோருடன் நடிப்பதும், ஜனநாதனின் இயக்கத்தில் யூ டி.வி. motion pictures த...
பாஷா இன் ‘சைவம்’ – இயக்குநர் விஜய்

பாஷா இன் ‘சைவம்’ – இயக்குநர் விஜய்

சினிமா, திரைத் துளி
சைவம் என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார் இயக்குநர் விஜய். பொதுவாகவே படத்தின் தலைப்புக்கு மிகவும் மெனக்கெடுபவர் அவர். அது போலவே, தன்னுடைய படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான பெயர் சூட்ட விரும்பினார். பல்வேறு பொருத்தமான பெயர்களின் பரீசிலித்த பிறகு, நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் உதவியோடு ' பாஷா' என பெயர் இட்டு ள்ளார். Guddu என்று செல்லமாக அழைக்கப்படும் ' பாஷா' அறிமுகப் படத்திலேயே இயக்குநரை பாராட்டுப் பத்திரம் வாசிக்க வைத்து விட்டார். 'என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு பொருத்தமான ஒரு கதா பாத்திரம் இருக்கும். அது நான் அவருடைய தீவிர ரசிகர் என்பாதால் மட்டுமன்று. அவர் எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்கு ஜீவன் கொடுத்து விடுபவர். என்னுடைய சைவம் படத்திலும், அவருக்கு கதையின் முதுகெலும்பான ஒரு முதியவர் பாத்திரம் உள்ளது. அந்த முதியவரின் இளம் வயது பேரனாக நடிக்க ...
யாமிருக்க பயமே!

யாமிருக்க பயமே!

சினிமா, திரைத் துளி
  'பயம்' என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கிய ஏராளமான அர்த்தங்களை மையமாகக் கொண்டு முற்றிலும் மாறுபட்ட கதை அம்சமும்  காட்சி அமைப்பும் கொண்ட படம் தான் 'யாமிருக்க பயமே'. விண்ணைத் தாண்டி வருவாயா, முப்பொழுதும் உன் கற்பனைகள் , நீதானே என் பொன் வசந்தம் , ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில், பிரபல ஒளிபதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஏராளமான பொருட்செலவில் தயாராகும் 'யான்' படத்தைத் தயாரித்து வரும் ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் தயாரித்து வழங்கும் அடுத்த படத்தின் தலைப்புதான் 'யாமிருக்க பயமே'. இயக்குனர் கே.வீ.ஆனந்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய டி.கே. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா, ரூபாமஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், கருணா மற்றும் ஓவியா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நைனிடாலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ப...
தொடங்கியது “புறம்போக்கு”

தொடங்கியது “புறம்போக்கு”

சினிமா, திரைத் துளி
குலு மனாலியில், எஸ்.பி.ஜனநாதனின் “புறம்போக்கு” படப்பிடிப்புத் தொடங்கியது. இயக்குநர் அமீர் ஃபர்ஸ்ட் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். இப்படத்தை யூ டி.வி. மோஷன் பிக்சர்சுடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் சேர்ந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“ஜில்லா”… மனம் திறக்கும் மோகன்லால்.!

“ஜில்லா”… மனம் திறக்கும் மோகன்லால்.!

சினிமா, திரைத் துளி
விஜய் – மோகன்லால் இனைந்து நடிக்கும் படம் ஜில்லா. மலையாள சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் மோகன்லால் தமிழில் நடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டவை.ஜில்லா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பற்றி?ஜில்லா படத்தில் நடிக்க முதல் காரணம் விஜய். அடுத்தது சூப்பர்குட் என்ற தரமான நிறுவனம். இதற்கெல்லாம் மேலாக நான் மலையாளப் படங்களில் பிஸியாக இருந்த வேளையில் விடாமல் என்னைத் துரத்தி கதை சொன்ன இயக்குநர் நேசன். ஏதோ வருகிறோம், போகிறோம் என்றால் மோகன்லால் எதற்கு? கதை அழகாக இருந்தது. அதில் எனது கேரக்டரும் வலுவாகப் பொருந்தும்படியாக இருந்தது.விஜய்க்கும் அப்பாவாக நடிக்கிறீர்களே? ஹீரோ இமேஜ் பாதிக்காதா?படம் பார்க்கும் யாருக்கும் அப்படியொரு கேள்வி எழாது. மதுரை மண்ணுக்கே உரித்தான வீரமும் கெளரவமும் கலந்த பாத்திரத்தில் வந்திருக்கிறேன்.தமிழில் விஜய்க்கு, பெரிய ரசிகர்கள் உள்ளனர். கேரளாவில் உங்களுக்கும்...
புதிய உற்சாகத்தோடு இளையராஜா!

புதிய உற்சாகத்தோடு இளையராஜா!

சினிமா, திரைத் துளி
இசைஞானி இளையராஜா கடந்த சில வாரங்களுக்குமுன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய இளையராஜா மருத்துவர்களின் அலோசனையின்படி கட்டாய ஓய்வில் இருந்தார். இதனால் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இருந்தும் ரசிகர்களை ஏமாற்றாமல், வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் தோன்றி ரசிகர்களை நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தினார். தற்போது பூரண நலம்பெற்று மீண்டும் தன் இசைப்பயணத்தைத் தொடங்கிய இளையராஜா, புதிய உற்சாகத்தோடு கவிஞர் சினேகன் நடிக்கும் இராஜராஜ சோழனின் போர்வாள் திரைப்படத்திற்காக ஒரு பாடலை ஞாயிற்றுக்கிழமை (05.01.2014) அன்று, பிரசாத் தியேட்டரில் கம்போஸ் செய்துள்ளார். திங்கட்கிழமை (06.01.2014) அன்று, அந்தப் பாடலுக்கான குரல்பதிவு செய்யும் பணியையும் தொடர்கிறார். இசைஞானி உடல்நலம் பெற்று திரும்ப...
அனன்யா, ஓவியா இணையும் ‘புலி வால்’

அனன்யா, ஓவியா இணையும் ‘புலி வால்’

சினிமா, திரைத் துளி
இன்றைய இளைய சமுதாயத்தினரின் தவிர்க்க முடியாத அல்லல்களை நகைச்சுவையுடன் சொல்லவரும் ஒரு திரைப்படம். நம் சமுதாயத்தின் இரண்டு கோடிகளில் உள்ள இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சுவாரசியமான நிகழ்வுகளும் அதன் விளைவுகளும்தான் புலி வால் எனும் இத்திரைப்படம்.எந்த விலை கொடுத்தும் வெற்றியை மட்டுமே தக்க வைக்க நினைக்கும் உயர் அந்தஸ்த்தில் இருக்கும் ஓர் ஐ.டி. நிறுவனர் கார்த்திக். கார்த்திக்கின் காதலியான மோனிகா தான் அவனின் பி.ஏ.வும் கூட. கார்த்திக்காக பிரசன்னா; மோனிகாவாக ஓவியா. சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் காசி. காசியுடன் வேலை பார்க்கும் செல்வியும் காசியும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். காசியாக விமல்; செல்வியாக அனன்யா. கார்த்திக்கின் பெற்றோரால் அவனுக்கு நிச்சயிக்கப்படும் பெண் பவித்ரா. பவித்ராவாக இனியா.நீரோடையாக சென்றுகொண்டிருந்த அவரவர் வாழ்க்கையில், பவித்ரா கார்த்திக்குக்காக...
கனவில் சஞ்சரிக்கும் ‘சாகச’ நாயகன்

கனவில் சஞ்சரிக்கும் ‘சாகச’ நாயகன்

சினிமா, திரைத் துளி
குறிப்பிட்ட அளவு  திறமைகள் உள்ள சிலர், தனது வாழ்நாளில் கற்பனைக்கு எட்டாத அளவில் பெரிய சாதனைகளையும்  சாகசங்களையும் நிகழ்த்தி அசத்த விரும்புகிறார்கள். அவர்களின் சாகசக்கனவு நிறைவேற நிஜ வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத வகை வகையான சோதனைகளைச் சந்திக்கிறார்கள்.சதா சர்வகாலமும் கனவுலகில் சஞ்சரிக்கும் நாயகன்தான் வால்டெர் மிட்டி. லைஃப் பத்திரிகையில்  வேலை செய்யும் அவன், தன்னை ஒரு விமான ஓட்டியாகவும், மருத்துவராகவும், கொலைக்காரனாகவும் வினோத விபரீதக் கற்பனையில் மிதக்கிறான்.ஆனால் நிஜ வாழ்வில் அவன் ஒரு பயந்த  சுபாவம் கொண்டவன். சின்ன விஷயத்தைக்கூட சரியாக  அவனால் புரிந்துகொள்ள் முடியாது! அப்படிப்பட்டவன் தன் வேலை சம்பந்தமாக உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செல்கிறான். அப்போது  நடக்கும் சுவாரசியமான தடாலடிச் சம்பவங்கள்தான் படத்தில் வரும் மீதி கதை.1939இல் ...