Shadow

திரைத் துளி

வருகிறது கொரியன் ‘கொரில்லா’

வருகிறது கொரியன் ‘கொரில்லா’

சினிமா, திரைத் துளி
தென் கொரியாவும் சீனாவும் இணைந்து தயாரிக்கும் படம், மிஸ்டர் கோ (Mr. Go). ஆசியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மிஸ்டர் கோ படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.நவம்பர் 14 அன்று இப்படம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளியாகவுள்ளது. குழந்தைகளுக்கான படமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் முழுவதும் 3டி-யில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் முதலிய மொழிகளில் வெளியாகும் முதல் கொரியப்படம் ‘மிஸ்டர் கோ’ என்பது குறிப்பிடத்தக்கது.பேஸ்பால் விளையாடும் லிங் லிங் எனும் 3டி டிஜிட்டல் கதாபாத்திரமான கொரில்லா தான் படத்தின் சிறப்பம்சம். படத்தில் 100% கொரியன் தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது. கொரியன் பட வரலாறில் இது முதல்முறையாகும்.‘200 பவுண்ட்ஸ் ப்யூட்டி’ மற்றும் ‘டேக் ஆஃப்’ படங்களின் இயக்குநரான கிம் யாங்-க்வா (Kim Yong Hwa) தான் இப்படத்தி...
தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்

தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்

சினிமா, திரைத் துளி
விளம்பரங்களுக்குப் பணம் இல்லாமையாலும், பெரிய பேனர்களின் விளம்பரங்களுடன் போட்டியிட முடியாததாலும், இயக்குநர் மிஷ்கின் சாலையில் இறங்கி படத்தின்  போஸ்டரை அவரே ஒட்டி வருகிறார்.                “தோள் கொடுத்த ஊடக நண்பர்களுக்கும்,                 இதயம் கொடுத்த பார்வையாளர்களுக்கும்,                 கை கொடுத்த விநியோகிஸ்தர்களுக்கும்,                 தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நன்றி”என அப்போஸ்டரில் உள்ளது.நேற்றிரவு கோவையில் விடியற்காலை 03:00 மணிக்கு படத்தின் போஸ்டரை ஒட்டினார். மேலும் அவரது பயணம் மதுரை, திருச்சி, செலம் என பல ஊர்களுக்கும் தொடரும். இந்தப் பயணத்தில், அவரது படம் வெளியிடப்பட்டிருக்கும் திரையரங்க...
முருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி – ராஜா ராணி!

முருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி – ராஜா ராணி!

சினிமா, திரைத் துளி
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் வழங்கும்  தொடர் வெற்றி  'ராஜா ராணி'.அக்டோபர் 1. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து வழங்கிய, அட்லியின் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா இணைந்து நடித்து வெளி வந்த 'ராஜா ராணி' முதல் வார இறுதியில் 12.2 கோடி வசூல் செய்து உள்ளது. இது இதுவரை இந்த வருடம் வெளி வந்த படங்களில் நான்காவது பெரிய வசூல் என கூறப்படுகிறது. ஆர்யா நடித்து  இதுவரை வந்த படங்களில்  இதுவே பெரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டுமல்ல வெளி நாட்டிலும் இந்தப் படத்தின் சாதனை பிரமிப்பு ஊட்டுகிறது.டாலர் கணக்கில் இந்த படத்தின் வெளிநாட்டு வசூல் 800,000 டாலரையும் தாண்டுகிறது. மலேசியாவில் 'ராஜா ராணி'யின்  வசூல் சாதனை பிரம்மாண்டமாய் இருக்கிறதாக விவரங்கள் தெரிவிக்கிறது.2011 ஆம் ஆண்டு வெளி வந்த 'எங்கேயும் எப்போதும்' படத...
ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி

ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி

சினிமா, திரைத் துளி
'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியைக்  கேட்டு பரபரப்பாகப்  பிரபலமானவர் கணேஷ். அந்தப் படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ' இங்க என்ன சொல்லுது'  படம் வரை தொடர்ந்து, சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்தப் படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து  வருகிறது . இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைபெற்று வந்தது . இதுவரை வந்திராத ஜோடியாக இருக்க வேண்டும் என்ற கணேஷின் எண்ணத்துக்கு ஏற்ப தேர்வு நடந்தது . இறுதியில் சிம்பு ஜோடியாக ஆண்ட்ரியா தேர்ந்து  எடுக்கப்பட்டார்.இந்த ஜோடி தேர்வைப் பற்றி கணேஷ் கூறும் போது, “சிம்புவும் ஆண்ட்ரியாவும் மிகச் சரியான ஜோடி. என் கணிப்பில், என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது. ரசிகர்களுக்கு இந்த ஜோடியை ரொம்பவே பிடிக்கும் . இந்தக் கதா...
“அம்மா அம்மம்மா” – சரண்யா

“அம்மா அம்மம்மா” – சரண்யா

சினிமா, திரைத் துளி
ஆ.சந்திரசேகர் திரைக்களம் என்ற பட நிறுவனம் சார்பாக மாம்பலம் ஆ.சந்திரசேகர் கதை எழுதி தயாரிக்கும் படத்திற்கு “அம்மா அம்மம்மா” என்று பெயரிட்டுள்ளனர்.இந்தப் படத்தில் சம்பத், சரண்யா, ஆனந்த், சுஜிதா, தேவதர்ஷினி, T.Pகஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.“நான் மோகமுள், பாரதி, பெரியார் போன்ற படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றி உள்ளேன். இந்தப் படத்தில் சரண்யா – சம்பத் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை பேறு கிட்டாத தம்பதி.ஒருநாள் குழந்தைவரம் வேண்டி கோயிலுக்குச்  சென்றிருந்தபோது ஆனந்த் – தேவதர்ஷினி குடும்பத்தைச் சந்திகிறார்கள். அவர்களுக்கு இரண்டு சிறுவர்கள். அடுத்த சில நாட்களில் இவர்களுக்குள் நட்பு மலர்கிறது.இந்நிலையில் பெண்குழந்தை ஒன்றை பிரசவித்துவிட்டு தேவதர்ஷினி இறந்து போக, அந்தக் குழந்தையை தாங்கள் வளர்க்க விரும்புவதாக சரண்யா  கெஞ்ச, குழந்தையை அவர்களிடம்...
“மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி

“மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி

சினிமா, திரைத் துளி
பிரபல விளம்பர மாடல் காவ்யா ஷெட்டி இப்போது ' ஷிவானி'  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.ஷிவானி ஒரு திகில் படம் என்றும் அதில் அவருடைய பாத்திரம் திகில் ஊட்டுவதாக இருக்கும் என கூறப்படுவதைக் கேட்டு சிரித்த ஷிவானி,  “என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தியாக இருந்தது , அது தவிர  படப்பிடிப்பு குழுவினரும் என்னை பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சியே. நான் கதையை சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும்.  நான் இயல்பாகவே பயந்த பெண் தான். இரவில் தனியாக செல்ல இன்னமும் அச்சம் தான். பயம் பேய் , பிசாசினால் அல்ல. மனித உருவில் திரியும் மிருகங்களால் தான். பெண்களுக்கு எதிராகத் தொடரும் வன்கொடுமைகள் மனதை காயப்படுத்துகிறது. என் மனம் மும்பை பெண்  புகைப்பட நிருபருக்காக அழுகிறது.  என் கருத்தின் படி சினிமா உலகம், பொதுவான சமுதாய உலகை விட பாதுகாப்பானது என்று தான் கருதுகிறே...
அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

சினிமா, திரைத் துளி
ஹன்சிகாவை ஒரு அதிர்ஷ்ட தேவதை என திரையுலக வல்லுனர்கள் கூற ஆரம்பித்ததாக  வந்த   செய்தியின் பிண்ணனியில் இந்த வருடம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற இரு படங்கள்: தீயா  வேலை செய்யணும் குமாரு மற்றும் சிங்கம் 2 இல் நடித்தது தான் காரணமாகக் கூறப்படுகிறது.இந்தப் புதிய பட்டதை பற்றி ஹன்சிகாவை விசாரித்த போது, ' இதை வெறும் அதிர்ஷ்டம் என கூற முடியாது. என்னைப் பொறுத்த வரை அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பு வரும் போது  அதை இரண்டு கைகளாலும் பற்றி கொள்ள தயார் நிலையில் இருப்பதுதான். ஒரு  ஃப்ரொஃபஷ்னல்l நடிகையாக  மழை வெயில் எனப் பாராமல் உழைப்பதும், இரவு பகல் என தூக்கமின்றி உழைப்பதும், நல்ல கதை , நல்ல தயாரிப்பு நிறுவனம் , நல்ல இயக்குநர் என தேர்ந்து எடுப்பதும் , என் பல பலவீனத்தை உணர்ந்து நடிப்பது என என் கடமையை ஆற்றுகிறேன். இதற்கும் மேலாக என் தாயின் அறிவுரையும் , ஊக்கமும்  என் வெற்றிய...
சரண்ராஜின் மகன் தேஜ்ராஜ்

சரண்ராஜின் மகன் தேஜ்ராஜ்

சினிமா, திரைத் துளி
“நீதிக்கு தண்டனை” படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அதிரடியாய் நுழைந்தவர் சரண்ராஜ்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உட்பட அனைத்து மொழிகளிலும் சேர்த்து நானூறு படங்களுக்கு மேல் நடித்த சரண்ராஜ், அடுத்து தனது மகன் தேஜ்ராஜ் என்பவரை நடிகராக களம் இறக்குகிறார் .“என்னை எல்லா மொழிகளிலும் நடிகனாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு ரசிகனுக்கும் நான்    நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது மகன் தேஜ்ராஜ் நடிக்கணும்னு ஆசைப்பட்டார். உடனே ஏத்துக்கொண்ட நான் அவனை வாழ்த்தினேன்.பல இயக்குனர்கள் என் மகன் தேஜ்ராஜை வாழ்த்தி இருக்கிறார்கள். நிறைய இயக்குனர்கள் அறிமுகப்படுத்த ஓகே சொல்லி இருக்கிறார்கள். அதுபற்றி அறிவிப்பு விரைவில் வரும்” என்றார் சரண்ராஜ். “பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டன்ட், ரகுராம் மாஸ்டரிடம் நடனம், பாலு மகேந்திராவின்  பயிற்சி பட்டறையில் நடிப்பு எனப் பயிற்சியு...
சுய புகழோ, சுய விளம்பரமோ வேண்டாம்- ‘அஜீத்’ ஆரம்பம்

சுய புகழோ, சுய விளம்பரமோ வேண்டாம்- ‘அஜீத்’ ஆரம்பம்

சினிமா, திரைத் துளி
சுய விளம்பரம் செய்யும் வகையில்  வரும் தலைப்பையோ, சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்க கூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும்  அஜீத் குமார்  கோரிக்கை வைக்க, கதையின் கருவுக்கு ஏற்றவாறு தலைப்பு பரிசீலிக்கப்பட்டது.தலைப்பு வைக்கப்படாத படமென, படத்தின் ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இது வரை எந்த ஒரு படத்துக்கும் 'தலைப்பு' குறித்து இப்படி ஒரு விவாதமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை. ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் சார்பில் A.ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் குமாரின் நடிப்பில் வெளிவர உள்ள படத்துக்கு ஆரம்பம் என  பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர்கள்:>> அஜீத்  >> நயன்தாரா >> ஆர்யா >> ராணா டகுபதி >> தாப்ஸி >> கிஷோர் >> அதுல் குல்கர்னி >> மகேஷ் மஞ்சுரேக்கர் >> சுமா ரங்கநாத்பணிக...
கிரிமினல்களாக யாரும் பிறப்பதில்லை”- கஸ்தூரிராஜா

கிரிமினல்களாக யாரும் பிறப்பதில்லை”- கஸ்தூரிராஜா

சினிமா, திரைத் துளி
தனுஷ் நடித்த  3  படத்தைத்  தொடர்ந்து ஆர்.கே.ப்ரொடெக்ஷன்ஸ்(பி) லிட். பட நிறுவனம் சார்பாக விஜயலட்சுமி கஸ்தூரிராஜா தயாரிக்கும் படத்திற்கு “காசு பணம் துட்டு “ என்று பெயரிட்டுள்ளனர்.கஸ்தூரிராஜா இயக்கத்தில் “அசுரகுலம்” என்ற பெயரில் தயாரான படமே “காசு பணம் துட்டு” என்ற பெயர் மாற்றத்துடன் வெளிவர உள்ளது. இதே பெயரில் மலையாளத்திலும் இப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் மித்ரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக சானியா மற்றும் மும்பையைச் சேர்ந்த சுயோசா சாவந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பாலா என்ற புதுமுகம் நடிக்கிறார் மற்றும் வினோத், மினடிஸ், அஜீத்ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.“சென்னை குடிசைப் பகுதி மக்களின் யதார்த்த வாழ்க்கை இது. குடிசை பகுதிகளில் வாழும் மக்களை இந்தச் சமூகம் என்ன மாதிரியான நிலைமையில் வைத்திருக்கிறது?பிறக்கின்ற குழந்தைகள் யாரு...
“ராமைய்யா வஸ்தாவையா” – ஸ்ருதிஹாசன்

“ராமைய்யா வஸ்தாவையா” – ஸ்ருதிஹாசன்

சினிமா, திரைத் துளி
ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்களின் பெயருமே, 'ராமைய்யா வஸ்தாவையா (Ramaiya Vastavaiya)' தான்.ஆனால் இரண்டுமே தமிழ்ப்படங்கள் இல்லை. ஒன்று பாலிவுட்டில். இன்னொன்று டோலிவுட்டில். ஆனால் இரண்டு படமுமே கிராமத்தில் நடப்பதாகவே கதையம்சம் கொண்டது.ஹிந்திப் படத்தில், நாணம் மிகுந்த கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறார். இப்படம் தெலுங்கில் பிரபுதேவாவால் தமிழில் 20005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. சித்தார்த்தும், த்ரிஷாவும் நடித்திருந்தனர. அதே படம் தமிழில், ஜெயம்ரவி த்ரிஷா நடிக்க ரீ-மேக் புகழ் ராஜா இயக்கத்தில், 'சம்திங் சம்திங்' என வெளியானது. எட்டு வருடங்களுக்குப் பின், பிரபுதேவாவே தன் படத்தை ஹிந்தியில் ரீ-மேக்குகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக கிரிஷ் குமார் நடிக்கிறார்.ராமைய்யா வஸ்தாவையா என அதே தலைப்புக் கொண்ட தெலுங்குப் படத்திலோ, அதற்கு எதிர்மாறான முரட்டுத்தனம் மிகுந்த ப...
“என் பெயரில் மோசடி” – பிரபு சாலமன்

“என் பெயரில் மோசடி” – பிரபு சாலமன்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் பிரபுசாலமன் பெயரை சொல்லி பிரபல சினிமா இயக்குநர்களிடமும் நடிகர்கள் நடிகைகளிடமும், " 'நான் பிரபு சாலமன் பேசுகிறேன். என் உறவினரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. நான் இரண்டு லட்சம் கொடுத்துள்ளேன் மீதி மருத்துவச் செலவிற்காக உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள் என்று சொல்லி லட்சக் கணக்கில் பணம் கேட்டுள்ளனர். பணத்தை வங்கிக்கணக்கில் போடுங்கள்' என்று கூறி ஏமாற்றி உள்ளனர். அதை நம்பி சில சினிமா பிரபலங்கள் அந்த வங்கிக்கணக்கில் பல லட்சம் பணம் போட்டுள்ளனர். என் பெயரை சொல்லி ஏமாற்றுகின்றனர்.  அதை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்படி யாரவது கேட்டால் பணம் கொடுக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதுபோல் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மற்றும் வேதம்புதிது கண்ணன், நடிகர் சாந்தனு ஆகியோரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். அதை செய்த நபர்தான் என் ...
“குட்டிப் பயலே, எதை தேடி நீ ஓடுற?” – சிம்பு

“குட்டிப் பயலே, எதை தேடி நீ ஓடுற?” – சிம்பு

சினிமா, திரைத் துளி
சிம்பு  செய்தியில்  இல்லாத நாளே இல்லை! தனது ஆன்மீகப் பயணம், அவர் படங்கள் குறித்த சர்ச்சை என்று  செய்தியில் நிறைந்த வண்ணம் இருப்பார். இப்போது அவருக்கு பிடித்தமான, தோதுவான களத்தில் மீண்டும் இறங்குகிறார். அதாவது தானே பாடல் எழுதி, தன்னுடைய குரலிலேயே பாடவும் உள்ளார். தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இவ்விரண்டையும் சிம்பு செய்வது வாடிக்கை. தற்போது தன்னுடைய நண்பரும் தயாரிப்பாளரும் நடிகருமான வி.டி.வி.கணேஷ் தயாரித்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கியமான பிரதானமான பாத்திரத்தில்  நடிப்பதோடு, கதை விவாதத்திலும் கலந்துக் கொள்கிறார்.  பெரும் ஈடுப்பாட்டுடன் இருந்து வரும் சிம்பு தொடர்ந்து தனது பங்களிப்பாக ஒரு பாடலை இயற்றி சொந்த குரலில் பாடவும் செய்து உள்ளார். அவர் இயற்றிப் பாடிய பாடல் வரிகள் இதுதான்.'குட்டிப் பயலே.. குட்டிப் பயலே.. எதை தேடி நீ ஓடுற?சுட்டிப் பயலே.. ...
ஓடும் ட்ரெயினில் இருந்து குதித்த மிஷ்கின்

ஓடும் ட்ரெயினில் இருந்து குதித்த மிஷ்கின்

சினிமா, திரைத் துளி
தனது தயாரிப்பு நிறுவனமான 'லோன் வொல்ஃப் (Lone wolf)' என்கிற தயாரிப்பு நிறுவனத்துக்குக்கு, இயக்குநர் மிஷ்கின்  இயக்கி  நடித்து வரும் படம் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என்பது எல்லோரும் அறிந்த விஷயமே! வழக்கு எண்: 18/9 இல் நாயகனாக நடித்த ஸ்ரீ, ஆட்டுக்குட்டி குணம் கொண்ட கதாபாத்திரத்திலும், மிஷ்கின் ஓநாயின் குணாதிசயம் கொண்ட கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் 'ஃபர்ஸ்ட்  டீசர்' சமீபத்தில் வெளியானது. அதில் ஓடும் ட்ரெயினில் இருந்து மிஷ்கின் குதிப்பது போலொரு காட்சி வருகிறது.இது பற்றி இப்படத்தின் ஃபைட் மாஸ்டர் 'பில்லா' ஜகன், ''ரயில் வேகம் காரணமாகவும் அதன்  தண்டவாளத்தை ஒட்டி நிறைய தூண்களும் கம்பங்களும் இருந்ததால் இக்காட்சியை டூப் வைத்து செய்து விடலாம் என நினைத்தேன். ஆனால் மிஷ்கினோ 'தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் இதை நான் தான் பண்ணுவேன்' என பிடிவாதமாகக் கூ...
“எல்லோரையும் கவர வேண்டும்” – கணேஷ் வெங்கட்ராமன்

“எல்லோரையும் கவர வேண்டும்” – கணேஷ் வெங்கட்ராமன்

சினிமா, திரைத் துளி
அறிமுகமான  'அபியும் நானும்' முதல் கமலஹாசன் மோகன்லால் நடிப்பில் உருவான 'உன்னை போல் ஒருவன்', வெளி வர இருக்கும் 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'சந்திரா' முதல் 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் லிங்குசாமியின் 'இவன் வேற மாதிரி' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன், "நல்ல கதாபாத்திரங்கள் கிடைப்பது அரிது. அதிலும் நல்ல இயக்குனர், நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற கூட்டணியுடன் அமைவது  என்பது அறிய வரம். எனக்காக படம் ஓடும் காலம் வரும் வரை ஓடும் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே  என் குறிக்கோள். மேற்கூறிய ஒவ்வொரு படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் ஒன்றுக்கொன்று வித்தியாசம் காட்டும். இணை நாயகன், துணை நாயகன் என இல்லாமல் படம் பார்க்கும் எல்லோரையும் என் கதாபாத்திரம் கவர வேண்டும். அதுதான் என் உண்மையான வெற்றி. மக்கள்  மத்தியில் என் மு...