32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

சமூகம்

192 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 13 / 13
செய்திகள் வரிசை (பக்கம் 13)
வன்கொடுமையும் வரதட்சணையும் கட்டுரை

வன்கொடுமையும் வரதட்சணையும்

வன்கொடுமை சட்டம் தலித்துகளாலும் வரதட்சணை சட்டம் பெண்களாலும் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதை நீக்க வேண்டும். அல்லது நமக்கு தேவையானபடி மாற்றம் செய்ய வேண்டும்.எந்த சட்டம் நியாயமாக பயன்படுத்தப்படுகிறது? சாதாரண பங்காளி தகராறுக்கு சிவில் கேஸ் போட்டா உள்ள வைக்க முடியாது. கொலை முயற்சின்னு கிரிமினல் கேஸ் தான் பலர் போடுறாங்க. விபத்து நடந்தா விபத்துன்னு கேஸ் பதிக்காம கொலைன்னு கேஸ் குடுக்குறாங்க. இந்த சட்டங்களை எல்லாம் தவறாக பயன்படுத்துவதால் அவற்றை நீக்கி விடலாமா? இவற்றை நீக்க வேண்டும் […]

08/02/2013 Dinesh R
சந்தர்ப்பவாதமும் அதிகாரமும் கட்டுரை

சந்தர்ப்பவாதமும் அதிகாரமும்

பல தடைகளைத் தாண்டி 25 ஆம் தேதி வெளிவர இருந்த விஸ்வரூபம் படத்திற்கு 15நாட்கள் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தவ்ஹீத் ஜமாத்,த.மு.மு.க., இ.மு.லீக் உள்ளிட்ட 24 அமைப்புகள்(?) ஒன்று சேர்ந்து ட்ரைலரை மட்டும் பார்த்து விட்டு இந்திய முஸ்லீம்களை இழிவுப்படுத்துகிறது.இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று உள்துறை செயலரை சந்தித்துமனு கொடுக்கின்றனர். உடனடியாக படத்தை மேற்கண்ட அமைப்புகளுக்கு திரையிட்டு காட்ட கமல்ஹாசன் கேட்டுக் கொள்ளப்படுகிறார். அதை ஏற்று அவர்களுக்கு படம் திரையிடப்படுகிறது. படத்தைப் […]

24/01/2013 Dinesh R
கண்ணியமான ஆண்களுக்காக கட்டுரை

கண்ணியமான ஆண்களுக்காக

பாலியல் தொல்லைகளை எதிர்கொள்வது இந்த இந்திய திருநாட்டில் மாதவம் செய்து பிறந்த மங்கையருக்கு புதிதல்ல. பாலியல் தொல்லைகள் வார்த்தைகள் முதல் வல்லுறவு வரை எத்தகைய அழுத்தத்திலும் இருக்கலாம். ஒவ்வொரு முறை பாலியல் வன்முறை சம்பவம் நடைபெறும்போதும் எல்லா சம்பவங்களும் ஒரே விதமான முக்கியத்துவம் பெறுவதில்லை. உதாரணத்துக்கு சமீபத்தில் டெல்லியில் நடந்த சம்பவத்தின் எதிர்ப்பாக நடைபெறும் போராட்டங்கள் இன்னும் தொடர்கின்றன. ஆனால் ஆதிவாசி பெண்களை காவல் துறை கூட்டம் கூட்டமாக வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் மற்றும் குஜராத்தில் தாயையும் […]

31/12/2012 Dinesh R
மோடி மஸ்தான் இல்லை கட்டுரை

மோடி மஸ்தான் இல்லை

இம்மாதம் 13 மற்றும் 17-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக திரு. நரேந்திர மோடி முதல்வராகிறார். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 115 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் வெறும் 61 இடங்களையே பெற்று மூன்றில் ஒரு பங்கு இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட காந்திகளின் தொடர் பிரச்சாரம் காந்தி பிறந்த மண்ணில் எடுபடாமல் போய் விட்டது. […]

28/12/2012 Dinesh R
தோனி படத்து பிரகாஷ்ராஜ்கள் கட்டுரை

தோனி படத்து பிரகாஷ்ராஜ்கள்

கசாப்பிற்கு மரண தண்டனை கொடுப்பதால், நாட்டில் rarest of the rare குற்றங்கள் குறையும் என எச்சில் தெறிக்க தீர்க்கதரிசணம் சொன்னவர்களின் எச்சில் மண்ணில் விழும் முன் டெல்லியிலொரு கொடுமையான சம்பவம் நடந்து விட்டது. உடனே பெரும்பான்மையோரின் எதிர்வினை, “அவனைக் கொல்லணும்.. இல்லை கொன்றால் இறந்து விடுவான்..  நந்தா படத்தில் வருவது போல் அவன் பிறப்புறுப்பை அறுத்து விடணும்.. இம்மி இம்மியாகத் துடிக்க வைத்துக் கொல்லணும்” என்பதாக உள்ளது. ராம்சிங்கைக் கொன்றால்தான், இனி நாட்டில் இது போல் […]

21/12/2012 Dinesh R
ஓடி விளையாடு பாப்பா!!! கட்டுரை

ஓடி விளையாடு பாப்பா!!!

நாங்க மூணு பேரு. எதுக்கும், யாருக்கும் பயப்பட மாட்டோம். சிம்புளா சொல்லனும்னா, பயம் இல்லாதது போலவே மெயின்டெயின் பண்ணுவோம்.  வேலை நிமித்தம் ஹாஸ்டல் வாழ்க்கை. ஹாஸ்டல் தான் எங்களுக்கு வீர-தளம் (இந்த ஆடுதளம், ஓடுதளம்னு சொல்வாங்களே அது போல!) ஆனா வீட்டில் நாங்களாம் பூனைதான். சாம்பார் சரி இல்ல, டீ சூடா இல்ல, டி.வி. தெரில இப்படி எல்லாப் பிரச்சனையும் எங்ககிட்டதான் வரும். எங்க வாய்ஸ பயன்படுத்தி பிரச்சனைய தீர்த்துவைப்போம். அப்படிதான் ஒரு சாயங்காலம் மொட்ட மாடியில்  […]

21/12/2012 Dinesh R
காந்தி வழியில்.. கட்டுரை

காந்தி வழியில்..

எங்க மாவட்டத்தில் தீவிர மரம் வளர்ப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த கலெக்டரால் சட்டமியற்றப்பட்டது. குறைந்த பட்சம் மாவட்டத் தலைநகரில் மட்டுமாவது, தெருவோரம் காலியாக உள்ள இடங்கள், அரசுக்குச் சொந்தமாக உள்ள இடங்கள், யாவையும் மரக்கன்றுகள் நட்டு நகரத்தை பசுமையாக்கி விட வேண்டும் என்று முனைப்போடு சட்டமாகவும் இயற்றினர். அரசு அதிகாரிகள் மும்மரமாக செயல்பட, கலெக்டர் தன் கையால் முதல் கன்றை நட்டு, திட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு அதிகாரிகள் தான் எப்ப எங்க யாரு  மாற்றலாவர்கள் என […]

08/12/2012 Dinesh R
கடவுளும் கணிப்பொறியும் கட்டுரை

கடவுளும் கணிப்பொறியும்

‘தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணாலே(!?) உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனிதன் ஜீவாத்துமாவானான்.’ ‘கடவுள் மனிதனை மண்ணில் இருந்து தான் படைத்தாரா? சரி.. கடவுள் தான் மனிதனைப் படைத்தாரா?’ இது போன்று சிக்கலான கேள்வியை எல்லாம் தொல்லியல் துறையினரிடம்  விட்டு விடுவோம். ஆனால் மனிதன் தன் சொந்த முயற்சியிலும், கடின உழைப்பிலும் இன்று உலகில் அனைவருக்கும் பயனை அள்ளித் தரும் கணிப்பொறியை மண்ணில் இருந்து தான் உருவாக்கி இருக்கிறான். சுமேரியர்கள் காலத்திலேயே இயேசு கிறிஸ்து […]

11/12/2011 Dinesh R
ஆனா.. எம திருடனுங்க!! கட்டுரை

ஆனா.. எம திருடனுங்க!!

இது தான்டா போலீஸ்!! ஹிஹி.. என்னத்த சொல்ல? புனைவுன்னு வேணுமின்னா வச்சுக்கலாம். காந்தி சொன்ன மாதிரி இரவுல தனியா பொண்ணுங்க நடந்து போய் அறுபத்து நாலு வருஷத்துக்கு முன்ன சுதந்திரம் வாங்குனது உண்ம தான்னு நிருபிச்சுடுவாங்க போல. ஆனா பசங்களால தான் பகல்ல கூட தைரியமா நடமாட முடியாது போல. ஒவ்வொரு தெரு முக்குக்கும் வெள்ளச் சட்ட போட்ட பணம் பிடுங்கி பூச்சாண்டி ‘லிஃப்ட்’ கேக்குற மாதிரியே கைய காட்டி உசுர வாங்குறாங்க. ஹெல்மட் போடாமல் போய் […]

02/12/2011 Dinesh R
ஒரு விஞ்ஞானியின் சீற்றம் கட்டுரை

ஒரு விஞ்ஞானியின் சீற்றம்

உலக விஞ்ஞானிகள், மாவட்ட ஆட்சியர், பத்திரிக்கை ஆசிரியர்கள் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. சகட்டு மேனிக்கு அனைவரையும் டா, டோய் என தான் உரிமையாக அழைப்பார். உப்பைக் கடலில் இருந்து எடுத்தால் தான் உலகத்தைக் காப்பாற்ற முடியும்; விழித்துக் கொள்ளுங்கள் என களப்பணியில் இருப்பவர். அவர் இந்த உலகிற்கு ஏதோ சொல்ல வர்றார் என தமிழ்ப் பேசும் நல்லுலகம் பயன்படுத்தும் கூகிள் பஸ்சின் மூலை முடுக்கெல்லாம் ஒரே பரபரப்பு. சமீபமாக வந்த ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் ஆழிப் […]

19/04/2011 Dinesh R
காந்தி என்கிற நெருப்பு கட்டுரை

காந்தி என்கிற நெருப்பு

தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி நினைவுச்சின்னமாக்க இந்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  உண்மையில் இக்காரியம் நடைபெற்றால் இந்தியர்கள் அனைவருக்குமே பெருமிதமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும். காந்தி என்ற மகாபுருஷனின் நினைவுகள் கூட ஒருமனிதனை புனிதனாக்கும்.பயங்கரவாதமும் வெறித்தனமும் அதிகரித்து விட்ட இந்த உலகம் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் காந்தியக் கொள்கைகளை கடைப்பிடிப்பதைத் தவிற வேறு வழியில்லை. இதை உலகம் இப்போது சற்று மறந்து போய் இருக்கலாம் ஆனால் பட்டறி கெட்டறி என்பதிற்கினங்க ஒரு […]

04/01/2011 Dinesh R
இது தான்டா போலீஸ்!! கட்டுரை

இது தான்டா போலீஸ்!!

1973, சிதம்பரம்.. சைக்கிளில் டைனமோ இல்லாமல் சென்ற இருவரை மடக்குகிறார் காக்கி சட்டை காவல்காரர். சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தவர் மிடுக்காக இறங்கி, தனது பையில் கை விட்டு தபால் ஆபீசில் தரப்படும் அடையாள அட்டையை எடுத்து நீட்டுகிறார். காவல்காரர் அதைப் பார்த்து விட்டு, “நீங்க போகலாம் சார்” என்று பம்முகிறார். “இவன் என் பையன்” என்று பின்னால் அமர்ந்திருந்த பையனை காட்டி, “இந்த காலேஜுல தான் படிக்கிறான். ஏதாச்சும் பிரச்சனைன்னா பார்த்துக்குங்க” என்று ஆங்கிலத்தில் சொல்கிறார். “சரிங்க […]

22/01/2010 Dinesh R