
வன்கொடுமையும் வரதட்சணையும்
வன்கொடுமை சட்டம் தலித்துகளாலும் வரதட்சணை சட்டம் பெண்களாலும் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதை நீக்க வேண்டும். அல்லது நமக்கு தேவையானபடி மாற்றம் செய்ய வேண்டும்.எந்த சட்டம் நியாயமாக பயன்படுத்தப்படுகிறது? சாதாரண பங்காளி தகராறுக்கு சிவில் கேஸ் போட்டா உள்ள வைக்க முடியாது. கொலை முயற்சின்னு கிரிமினல் கேஸ் தான் பலர் போடுறாங்க. விபத்து நடந்தா விபத்துன்னு கேஸ் பதிக்காம கொலைன்னு கேஸ் குடுக்குறாங்க. இந்த சட்டங்களை எல்லாம் தவறாக பயன்படுத்துவதால் அவற்றை நீக்கி விடலாமா? இவற்றை நீக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுக்காததன் கள்ளத்தனம் என்ன?வன்கொடுமை சட்டம் யாராலும் தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்று சொல்லவில்லை. அவ்வாறு நியாயமாக இதை சுட்டிக்காட்டுபவர்கள், வச்சாத்தி, தருமபுரி போன்ற சம்பவங்களுக்கு அவர்கள் ஒரு கண்டனமாவது தெரிவித்தார்களா? இல்லை. சரி, பரவாயில்லை. இந்த சட்டத்தின் மூலம் என்ன செய்ய முடியும்? அ...












