Shadow

சமூகம்

மோடி மஸ்தான் இல்லை

மோடி மஸ்தான் இல்லை

கட்டுரை, சமூகம்
இம்மாதம் 13 மற்றும் 17-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக திரு. நரேந்திர மோடி முதல்வராகிறார். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 115 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் வெறும் 61 இடங்களையே பெற்று மூன்றில் ஒரு பங்கு இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட காந்திகளின் தொடர் பிரச்சாரம் காந்தி பிறந்த மண்ணில் எடுபடாமல் போய் விட்டது. மோடியை வீழ்த்தியே தீருவேன் என்று கங்கணம் கட்டிய மாநில காங்கிரஸ் தலைவரான அர்ஜுன் மோத்வாடியா போர்பந்தர் தொகுதியில்  17, 146 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதே போல் குஜராத் எதிர்கட்சி தலைவர் ஷக்தி சின்ஹ் கோகில் தோல்வி அடைந்தவர்களில் முக்கியமானவர். 'ஒருத்தனுக்கு நிக்கவே முடியலையாம்; ஒன்பது பொண்டாட்டி கேட்டுச்சாம்' என வடிவேலு...
தோனி படத்து பிரகாஷ்ராஜ்கள்

தோனி படத்து பிரகாஷ்ராஜ்கள்

கட்டுரை, சமூகம்
கசாப்பிற்கு மரண தண்டனை கொடுப்பதால், நாட்டில் rarest of the rare குற்றங்கள் குறையும் என எச்சில் தெறிக்க தீர்க்கதரிசணம் சொன்னவர்களின் எச்சில் மண்ணில் விழும் முன் டெல்லியிலொரு கொடுமையான சம்பவம் நடந்து விட்டது. உடனே பெரும்பான்மையோரின் எதிர்வினை, "அவனைக் கொல்லணும்.. இல்லை கொன்றால் இறந்து விடுவான்..  நந்தா படத்தில் வருவது போல் அவன் பிறப்புறுப்பை அறுத்து விடணும்.. இம்மி இம்மியாகத் துடிக்க வைத்துக் கொல்லணும்" என்பதாக உள்ளது. ராம்சிங்கைக் கொன்றால்தான், இனி நாட்டில் இது போல் குற்றங்கள் நிகழாது என மக்கள் நம்புகின்றனர். புரையோடிய சமூகத்தில் குற்றங்களும் குறையப் போவதில்லை. மக்களின் வெகுவான ஆதரவோடு மரண தண்டனை அரசால் படு ஜோராக நிறைவேற்றப்படுவதும் நிற்கப் போவதில்லை.  ('சீரழியும் மாணவர்கள்' - கட்டுரையைப் படிக்கப் படத்தைச் சொடுக்கவும்.)  கசாப் கொடியவன். ராம் சிங் வக்கிரம் பிடிச்சவன்...
ஓடி விளையாடு பாப்பா!!!

ஓடி விளையாடு பாப்பா!!!

கட்டுரை, சமூகம்
நாங்க மூணு பேரு. எதுக்கும், யாருக்கும் பயப்பட மாட்டோம். சிம்புளா சொல்லனும்னா, பயம் இல்லாதது போலவே மெயின்டெயின் பண்ணுவோம்.  வேலை நிமித்தம் ஹாஸ்டல் வாழ்க்கை. ஹாஸ்டல் தான் எங்களுக்கு வீர-தளம் (இந்த ஆடுதளம், ஓடுதளம்னு சொல்வாங்களே அது போல!) ஆனா வீட்டில் நாங்களாம் பூனைதான்.சாம்பார் சரி இல்ல, டீ சூடா இல்ல, டி.வி. தெரில இப்படி எல்லாப் பிரச்சனையும் எங்ககிட்டதான் வரும். எங்க வாய்ஸ பயன்படுத்தி பிரச்சனைய தீர்த்துவைப்போம். அப்படிதான் ஒரு சாயங்காலம் மொட்ட மாடியில்  ஒரு பஞ்சாயத்து பண்ணிட்ருந்தோம்.நாங்க வழக்கம் போல் பேசிட்டு இருந்தோம். பேசிட்டு இருக்கும் போதே எங்களுக்கு வேற பக்கமா கவனம் போச்சு. ரோடு ஓரமா சில பள்ளி மாணவர்கள் ஸ்நாக்ஸ் வாங்கிச் சாப்பிட்டு சிரிச்சிச் சிரிச்சிப் பேசிட்டுப் போனாங்க. கொஞ்சம்தூரம் போனவுடன் ஸ்கூல் பையன்கள் ஒரு இரண்டடி பின்னால நடக்க, மகா இராணிகள் முன்னால் நடக்க ஆ....
காந்தி வழியில்..

காந்தி வழியில்..

கட்டுரை, சமூகம்
எங்க மாவட்டத்தில் தீவிர மரம் வளர்ப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த கலெக்டரால் சட்டமியற்றப்பட்டது. குறைந்த பட்சம் மாவட்டத் தலைநகரில் மட்டுமாவது, தெருவோரம் காலியாக உள்ள இடங்கள், அரசுக்குச் சொந்தமாக உள்ள இடங்கள், யாவையும் மரக்கன்றுகள் நட்டு நகரத்தை பசுமையாக்கி விட வேண்டும் என்று முனைப்போடு சட்டமாகவும் இயற்றினர். அரசு அதிகாரிகள் மும்மரமாக செயல்பட, கலெக்டர் தன் கையால் முதல் கன்றை நட்டு, திட்டத்தை தொடங்கி வைத்தார்.அரசு அதிகாரிகள் தான் எப்ப எங்க யாரு  மாற்றலாவர்கள் என தெரியாதே!! அந்த சிங் கலெக்டருக்கு மாற்றல் கிடைச்சது. சில வருடங்கள் கழித்து, சிறப்புக் கலெக்டராக எங்க மாவட்டத்திற்கே ஆய்விற்கு வந்தார். ஒரு நகரம் பசுமையானதற்கு தான் காரணமென மகிழ்ச்சியோடு வந்தவர் கண்களுக்கு சாலையோரங்களில் செடிகள் எதுவும் தென்படவில்லை. கோவத்தில் சூடு தணிவதற்குள் என்ன நடந்தது என கண்டுபிடிக்க முழு வீச்சில் வி...
கடவுளும் கணிப்பொறியும்

கடவுளும் கணிப்பொறியும்

கட்டுரை, சமூகம்
'தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணாலே(!?) உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனிதன் ஜீவாத்துமாவானான்.''கடவுள் மனிதனை மண்ணில் இருந்து தான் படைத்தாரா? சரி.. கடவுள் தான் மனிதனைப் படைத்தாரா?' இது போன்று சிக்கலான கேள்வியை எல்லாம் தொல்லியல் துறையினரிடம்  விட்டு விடுவோம். ஆனால் மனிதன் தன் சொந்த முயற்சியிலும், கடின உழைப்பிலும் இன்று உலகில் அனைவருக்கும் பயனை அள்ளித் தரும் கணிப்பொறியை மண்ணில் இருந்து தான் உருவாக்கி இருக்கிறான். சுமேரியர்கள் காலத்திலேயே இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே கணிப்பொறியை உருவாக்கினார்கள். இன்றைய எலக்ட்ரானிக் கணிப்பொறியின் வளர்ச்சியை, சார்லஸ் டார்வினின்  பரிணாமக் கொள்கையினோடு ஒப்பிட்டு சொல்லலாம். அதாவது எப்படி உயிரினங்களின் தோற்றம் படிப்படியாக ஒரு செல் உயிரில் இருந்து ஊர்வன, பறப்பன என தொடங்கியதோ, அதே போல் சிலிக்கா எனும் மண்ணில் இருந்து...
ஆனா.. எம திருடனுங்க!!

ஆனா.. எம திருடனுங்க!!

கட்டுரை, சமூகம்
இது தான்டா போலீஸ்!!ஹிஹி.. என்னத்த சொல்ல? புனைவுன்னு வேணுமின்னா வச்சுக்கலாம்.காந்தி சொன்ன மாதிரி இரவுல தனியா பொண்ணுங்க நடந்து போய் அறுபத்து நாலு வருஷத்துக்கு முன்ன சுதந்திரம் வாங்குனது உண்ம தான்னு நிருபிச்சுடுவாங்க போல. ஆனா பசங்களால தான் பகல்ல கூட தைரியமா நடமாட முடியாது போல. ஒவ்வொரு தெரு முக்குக்கும் வெள்ளச் சட்ட போட்ட பணம் பிடுங்கி பூச்சாண்டி 'லிஃப்ட்' கேக்குற மாதிரியே கைய காட்டி உசுர வாங்குறாங்க.ஹெல்மட் போடாமல் போய் அவர்களிடம் சிக்கினால்.. எங்கப்பா காசை நான் வீணா செலவழிச்சு கெட்டுப் போறேன்னு எம்மேல இருக்கிற  அக்கறையில் காசைப் பிடுங்கி வச்சுக்கிறாங்க. மாமாக்கு தான் என் மேல எவ்ளோ அக்கறை!? நான் ப்ரென்ட்ச எல்லாம் மாமான்னு தான்னு கூப்பிடுவேன். நீங்க பாஸூ!? அதான் 'போலீஸ் உங்கள் நண்பன்'னு விவேக் ஏதோ படத்துல சொல்வாரே!! அத பாத்ததில் இருந்து தான்.எல்லா டாக்குமென்ட்சும் சரியா இர...
ஒரு விஞ்ஞானியின் சீற்றம்

ஒரு விஞ்ஞானியின் சீற்றம்

கட்டுரை, சமூகம்
உலக விஞ்ஞானிகள், மாவட்ட ஆட்சியர், பத்திரிக்கை ஆசிரியர்கள் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. சகட்டு மேனிக்கு அனைவரையும் டா, டோய் என தான் உரிமையாக அழைப்பார். உப்பைக் கடலில் இருந்து எடுத்தால் தான் உலகத்தைக் காப்பாற்ற முடியும்; விழித்துக் கொள்ளுங்கள் என களப்பணியில் இருப்பவர். அவர் இந்த உலகிற்கு ஏதோ சொல்ல வர்றார் என தமிழ்ப் பேசும் நல்லுலகம் பயன்படுத்தும் கூகிள் பஸ்சின் மூலை முடுக்கெல்லாம் ஒரே பரபரப்பு. சமீபமாக வந்த ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் ஆழிப் பேரலைகள் தாக்குதலின் பொழுது தான் அவரது பேச்சைத் தீவிரமாக கவனிக்கத் தொடங்கினர் என நினைக்கிறேன். ஈரோடு விஞ்ஞானி, வால்பையனின் அண்ணன் என அறியப்பட்டவரின் அவசரம்டா என்ற வலைத்தளத்தில் உள்ள இந்தக் காணொளி மிகவும் பிரசித்தம் (பார்க்காதவர்கள்.. பார்த்து விடவும்). சும்மாதான்டா, கல்கிடா, அவசரம்டா, அவசரம்டா1, அவசரம்டா2, அவசரம்டா3, டாப் சேர் (Top Chair), கூகிள...
காந்தி என்கிற நெருப்பு

காந்தி என்கிற நெருப்பு

கட்டுரை, சமூகம்
தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி நினைவுச்சின்னமாக்க இந்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  உண்மையில் இக்காரியம் நடைபெற்றால் இந்தியர்கள் அனைவருக்குமே பெருமிதமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும். காந்தி என்ற மகாபுருஷனின் நினைவுகள் கூட ஒருமனிதனை புனிதனாக்கும்.பயங்கரவாதமும் வெறித்தனமும் அதிகரித்து விட்ட இந்த உலகம் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் காந்தியக் கொள்கைகளை கடைப்பிடிப்பதைத் தவிற வேறு வழியில்லை.இதை உலகம் இப்போது சற்று மறந்து போய் இருக்கலாம் ஆனால் பட்டறி கெட்டறி என்பதிற்கினங்க ஒரு நாள் உலகத்தின் புத்திதெளியும் அன்று அண்ணலின் அருமைத் தெரியும். அதற்காக தொடர் முயற்சிகளை நல்லமனம் படைத்தவர்கள் மனச்சோர்வு இல்லாமல் செய்து கொண்டே வரவேண்டும் எறும்பூற கல்லும் தேயும் போது மனிதமனங்கள் மாறாதா என்ன?அதற்கு இத்தகைய நினைவுச்சின்னங்கள் நிச்சயம் உதவும்.இந்த...
இது தான்டா போலீஸ்!!

இது தான்டா போலீஸ்!!

கட்டுரை, சமூகம்
1973, சிதம்பரம்..சைக்கிளில் டைனமோ இல்லாமல் சென்ற இருவரை மடக்குகிறார் காக்கி சட்டை காவல்காரர். சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தவர் மிடுக்காக இறங்கி, தனது பையில் கை விட்டு தபால் ஆபீசில் தரப்படும் அடையாள அட்டையை எடுத்து நீட்டுகிறார். காவல்காரர் அதைப் பார்த்து விட்டு, "நீங்க போகலாம் சார்" என்று பம்முகிறார்."இவன் என் பையன்" என்று பின்னால் அமர்ந்திருந்த பையனை காட்டி, "இந்த காலேஜுல தான் படிக்கிறான். ஏதாச்சும் பிரச்சனைன்னா பார்த்துக்குங்க" என்று ஆங்கிலத்தில் சொல்கிறார். "சரிங்க சார்."1989, கடலூர்..வேகமாக சென்றுக் கொண்டிருந்த இரு சக்கர வண்டியை நிறுத்துகிறார் காவல்காரர்."எங்கடா போற?" "சகாயம் சார் ட்யூஷனுக்கு." "துரை ஏன் இவ்ளோ வேகமா போறீங்க? லைசென்ஸ் இருக்கா?" "இல்ல சார்." "ஓ.. துரைக்கு லைசென்ஸ் வேற இல்லையா?" என்று மீசை கீழ் நான்கு பற்கள் தெரிவது போல் நமுட்டு சிரிப்பை உதிர்ந்த...