
என்னை ஏன் டீ வாங்கிட்டு வரச் சொல்லலை?
பொதுவாகவே எனக்கு யாரிடமாவது பேசுவதென்பதே ரொம்ப கஷ்டமான விஷயம்.
‘ஆமா என்னத்த பேசி!’ என பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருந்து, இழந்தவைகளின் பட்டியல் ரொம்பப் பெரிது. சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பையே கூட இழந்திருக்கிறேன். இப்படிப் பட்ட என்னை "சைபர் க்ரைமில்" போய் என் மீதான அவதூறுக்கு எதிராக கம்ப்ளெயின்ட் பண்ணச் சொல்லி ஆளாளுக்கு அட்வைஸ் என்ற பெயரில் விரட்டினார்கள். போனா நிறைய கேள்வி கேட்பாங்களே.. போகணுமா என ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் காட்டுத்தீ போல் பரவும் புரளியை நிறுத்த, சைபர் க்ரைம்க்கு போவதைத் தவிர வேறு வழியிருப்பதாகவும் தெரியவில்லை..
போதாக்குறைக்கு, “மானநஷ்ட வழக்கு போட்டு.. 10 லட்சமாவது வாங்குடே. ஐடியா சொன்ன என்னை மறந்துடாதே! எனக்கு 30% கொடுத்துடணும்”னு ஆசையை வளர்த்து விட்டார் கே.வி.ஆர் அண்ணன். அட.. பத்து லட்சம் வேணாம் ஒரு பத்தாயிரம் கிடைத்தால்கூட, ‘ஐ.. சூப்...















