Shadow

சமூகம்

என்னை ஏன் டீ வாங்கிட்டு வரச் சொல்லலை?

என்னை ஏன் டீ வாங்கிட்டு வரச் சொல்லலை?

கட்டுரை, சமூகம்
பொதுவாகவே எனக்கு யாரிடமாவது  பேசுவதென்பதே ரொம்ப கஷ்டமான விஷயம்.  ‘ஆமா என்னத்த பேசி!’ என பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருந்து, இழந்தவைகளின் பட்டியல் ரொம்பப் பெரிது. சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பையே  கூட இழந்திருக்கிறேன். இப்படிப் பட்ட என்னை "சைபர் க்ரைமில்" போய் என் மீதான அவதூறுக்கு எதிராக கம்ப்ளெயின்ட் பண்ணச் சொல்லி ஆளாளுக்கு அட்வைஸ் என்ற பெயரில் விரட்டினார்கள். போனா நிறைய கேள்வி கேட்பாங்களே.. போகணுமா என ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் காட்டுத்தீ போல் பரவும் புரளியை நிறுத்த, சைபர் க்ரைம்க்கு போவதைத் தவிர வேறு வழியிருப்பதாகவும் தெரியவில்லை.. போதாக்குறைக்கு, “மானநஷ்ட வழக்கு போட்டு.. 10 லட்சமாவது  வாங்குடே. ஐடியா சொன்ன என்னை மறந்துடாதே! எனக்கு 30% கொடுத்துடணும்”னு ஆசையை வளர்த்து விட்டார் கே.வி.ஆர் அண்ணன். அட.. பத்து லட்சம் வேணாம் ஒரு பத்தாயிரம் கிடைத்தால்கூட, ‘ஐ.. சூப்...
‘அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி!’

‘அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி!’

கட்டுரை, சமூகம்
மூவரின் விடுதலைக்காக ஒரு இனம் தொடர்ந்து போராடியது. சில தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். நிறைய அமைப்புகள் விடுதலை வேண்டி போராட்டம் நடத்தியது. செங்கொடி என்ற இளம்வயது தங்கை தீக்குளித்தாள். இதெல்லாம் தாண்டி ஒரு தாய், தன் மகனை இளம் வயதில் எதெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ அதையெல்லாம் தொலைத்துவிட்ட மகனை மீட்க 23 வருடங்கள் தொடர்ந்து சிறைக்கும் வீட்டுக்கும் நடந்திருக்கிறாள். அது எவ்வளவு துயரம் எவ்வளவு கடினம் என்று யாருக்கும் தெரியாது. தன் மகன் தனக்கு மீண்டும் வருவான் உயிரோடு என்ற நம்பிக்கையில் காத்திருந்து, பார்க்கும் தலைவர்களிடம் எல்லாம் கதறி அழுத அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி என்பதே உண்மை. எத்தனை முறை நடந்தார் எத்தனை மைல் நடந்தார் என்பதை யார் அறிவார்? இரண்டு வருடங்களுக்கு முன்பு மூவருக்கும் தூக்கு உறுதி என கோர்ட்டும் மத்திய அரசும் உத்தரவிட்டபோது இந்த தாய் எப்படி துடித்தாள் என்பதை அருகி...
“தமிழர்களின் வரலாற்றில் மகத்தான நாள்” – பாரதிராஜா

“தமிழர்களின் வரலாற்றில் மகத்தான நாள்” – பாரதிராஜா

கட்டுரை, சமூகம்
என் இனிய தமிழ்மக்களே! 22 வருட கடுஞ்சிறைக்கு பின் விடுதலை. 22 வருட அனைத்துலக தமிழர்களின் போராட்டத்திற்குப் பின் விடுதலை. செங்கொடியின் வீரமரணத்திற்குப் பின் விடுதலை. இந்த 22 வருடங்களாய் என்னென்னவோ பார்த்தாயிற்று. ராமேஸ்வரத்து மீனவர்களின் இடர், இறுதியுத்தம் எல்லாவற்றிற்கும் மேலாய் தாங்கொணா வலியையும் வேதனையையும் தமிழர் வாழ்வில் வீசிப்போயிற்று. இத்தனை பேரிடரை சமன் செய்யாவிட்டாலும் எம் தமிழ் வாழ்வும் தமிழ்மனமும் இந்த 2014 பிப்ரவரியில் முதன்முறையாக தன்னிறைவு அடைந்தது. பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் அவர்களின் தூக்குத் தண்டனை ரத்து என்ற தீர்ப்பின் மூலமாக இத்தனை பெரிய இந்திய கண்டத்தில் தமிழர்கள் முன்வைக்கும் நீதியை நம்புவதற்கும், கோரும் கருணையைப் புரிந்து கொள்வதற்கும் ஜனாதிபதிகளாலேயே முடியாதபோது தமிழர்களின் உயிர்வலியை உணர்ந்த நீதியரசர் சதாசிவம் மற்றும் அவர் குழுவினர் இந்நாட்டின் மீதும் நீத...
ஔரங்கசீப்பின் உயில்

ஔரங்கசீப்பின் உயில்

கட்டுரை, சமூகம்
இந்தியாவை ஆண்ட கொடுங்கோலர்களில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பை அடித்துக் கொள்ள இன்றுவரை யாருமில்லை. பெற்ற தகப்பனை சிறையில் அடைத்து சகோதரர்களை கொலை செய்து ஆட்சியைப் பிடித்தவர். தீவிரமான மதவாதி, தன் நம்பிக்கைகளை மீறுகிறவர்களை ஈவிரக்கமில்லாமல் அழித்தொழித்தவர். இத்தனை மோசமான  பின்புலம் இருந்தாலும் தன் தனிப்பட்ட வாழ்வில் மிகவும் எளிமையாய் வாழ்ந்த மனிதர். இவரது வாழ்க்கை வரலாற்றினை  மெளல்வி ஹமீதுத்தீன் என்பவர் பாரசீக மொழியில் எழுதியிருக்கிறார். அதன்  எட்டாவது அத்தியாயத்தில் ஔரங்கசீப் எழுதிய  உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. . 1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாய் இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது. ஆனால் நான் என் வாழ் நாளில் ஒரு நல்ல காரியம் கூட செய்ததில்லை என்பதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். எனினும் இப்போது வருந்துவதால் எந்த பயனும் இல்லை. என் இறுதிச் சடங்குகளை எ...
18 தீக்குச்சிகளும் யட்சியும்

18 தீக்குச்சிகளும் யட்சியும்

கட்டுரை, சமூகம்
ஒரு சனிக்கிழமை (நவ. 23) அன்று இரண்டு குறும்படங்களை ஏவி.எம். ப்ரிவியூ தியேட்டரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இரண்டையும் இயக்கியது மணிமாறன் எனும் திரைப்படக் கல்லூரி மாணவர். அரங்கம் நிறைந்திருந்தது. நின்று கொண்டும் சிலர் பார்த்தார்கள். இதற்கே படத்தை இரண்டு முறை திரையிட்டனர். முதற்படம் 18 STICKS. முதலில் ஆங்கிலக் குறும்படமோ என நினைத்தேன். நல்லவேளையாக தமிழ்ப்படம். அதுவும் ஈழம் சம்பந்தமான படம். 2009 இல் தன் குடும்பத்தை இழந்த யோகன், முள்ளிவாய்க்காலில் குண்டுகள் வீசப்படும் இடத்தில் சிக்கிக் கொள்கிறார். இறப்பது உறுதியாகிவிட்டது. அவரைச் சுற்றி கும்மிருட்டு. அவரிடம் ஒரு தீப்பெட்டி உள்ளது. அதில் 18 தீக்குச்சிகள் இருக்கின்றன. வீடியோ கேமிராவை இயக்கி விட்டு, ஒவ்வொரு தீக்குச்சியாகப் பற்ற வைத்தவாறு, தனது குடும்பத்திற்கு என்னானது என பேசத் தொடங்குகிறார். கேமிராவைப் பார்த்துப் பேசுகிறார். ...
காவு வாங்கும் புகையிலை

காவு வாங்கும் புகையிலை

கட்டுரை, சமூகம்
அக்டோபர் 27. முகேஷ் ஹரானே இறந்த தினம். இன்றோடு நான்காண்டுகள் நிறைவாகிறது. அவர் இறக்கும் பொழுது அவர் வயது 24. திரைப்படங்களில் வரும் நாயகர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர் அல்லர் அவர். இளம் வயதிலேயே வேலைக்குச் சென்று, தனது தம்பியைப் படிக்க வைத்துள்ளார். திணறடிக்கும் ஏழ்மை நிலையிலும், விழிப்புணர்வு விளம்பரங்களுக்கு பணமேதும் வாங்கிக் கொள்ளவில்லை முகேஷ். இன்று நாயகர்களாகத் திரையில் சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்களை விட மிகவும் உயர்ந்தவர் முகேஷ்.ஓர் ஆண்டுக்கு சுமார் 1,30,000 பேர் இந்தியாவில், வாய் புற்றுநோயால் இறக்கிறார்கள். புகையிலை உபயோகிப்பவர்களுக்கு புற்றுநோயின் தீவிரம் பற்றிய புரிதல் சரியாக இருப்பதில்லை. ‘புற்றுநோய் தானே.. வந்தா பார்த்துக்கலாம்’ என்ற அலட்சியமே மேலோங்கியிருக்கிறது. எதையும் தாங்கிக் கொள்ளலாம் என இளமை தரும் உடல்வலு காரணமாக இருக்கலாம்.சிகரெட் பிடிப்பவர்களின் அருகி...
இனியாவது ஒரு விதி செய்வோம்!

இனியாவது ஒரு விதி செய்வோம்!

கட்டுரை, சமூகம்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்த காலம் எல்லாம் மலையேறி, இன்று பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. தற்போதைய நிலையில் ஒருவரின் வருமானத்தில் குழந்தைகளின் படிப்பு, குடும்பச் செலவுகள், விலைவாசி உயர்வு, மற்றும் இன்ன பிற செலவீனங்களை சமாளிப்பது கடினம் என்றாகி விட்டதால் கணவன் மனைவி என இருவருமே வேலைக்குப் போக வேண்டிது அவசியமாகிறது. இப்படி வேலைக்குப் போகும் பெண்களில் இரண்டு வகையினர். ஒரு சாரார் தாங்கள் கற்ற கல்வியின் பயனை அடைய வேண்டி, தாங்களே விரும்பி வேலைக்குச் செல்பவர்கள், மற்றவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நிர்பந்தங்களுக்குப் பணிந்து வேலைக்குச் செல்கிறவர்கள். எது எப்படி இருந்தாலும், ஆண்களோடு ஒப்பிடுகையில் இந்தப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், சவால்களும் கடினமானவையே.என்ன தான் கிடுகிடுவென்று காலம் மாறி முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று நாம் சொல்லிக்...
அக்கரைச் சீமை அழகினிலே மனம் மாறக் கண்டேனே!

அக்கரைச் சீமை அழகினிலே மனம் மாறக் கண்டேனே!

கட்டுரை, சமூகம்
  கல்வியையோ, செல்வத்தையோ தேடி வெளிநாடு வருகிறவர்கள், வந்த வேலை முடிந்தவுடன் தாயகம் திரும்புகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை என்பது தான் நிதர்சனம். படிக்க வந்தவர்கள் வேலை தேடி செட்டிலாகிறார்கள். வேலை கிடைத்தவர்கள்  மெல்ல மெல்ல வெளிநாட்டு வாழ்க்கையில் உழல ஆரம்பித்து,  இன்னும் சில வருடம் சில வருடம் எனத்  தள்ளிப் போட ஆரம்பித்து, திருமணம் முடியட்டும் எனக்  காத்திருந்து,  பிறகு குழந்தை, அப்பா, அம்மா, மாமனார், மாமியார் விஜயம் எல்லாம் முடிந்த பிறகு, சரி! ஊருக்குப் போய் விடலாம் என நினைக்க ஆரம்பிக்கும் போது , எனக்கு இங்கு தான் பிடித்திருக்கிறது  என கலங்கும் அன்பு மனைவியின்  கண்களை காணச் சகிக்காமல் அமைதியாக செட்டிலாகி விடுகிறவர்கள் ஒரு பக்கம், இப்படி வெளிநாட்டுச் சூழலுக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டோ அல்லது அடிமையாகியோ செட்டிலாகி விடுகிறார்கள்.   ...
இக்கரைக்கு அக்கரை பச்சை!

இக்கரைக்கு அக்கரை பச்சை!

கட்டுரை, சமூகம்
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற மேலை நாடுகளின் மீது நம்மில் பலருக்கும் ஏதோவொரு இனம் புரியாத மோகம் இருக்கும். அல்லது அது மாதிரி நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். மேலை நாடுகள் என்றாலே, அங்கே தேனும் பாலும் ஓடுவதைப் போலொரு மாயத்தோற்றத்தை நமது கல்விமுறையும், சமூகக் கருத்தியலும் நமக்குள் உருவாக்கி விட்டிருக்கிறது. அதிலும் இந்த நாடுகளில் வேலை கிடைத்து, நாம் அங்கே போகப்போகிறோம் என்றவுடன் வாழ்க்கையில் ஏதோ பெரிதாய் சாதித்ததைப் போன்று ஓர் உணர்வு ஏற்படுவதை தவிர்க்க இயலாது. இது மேல்படிப்புக்காக செல்லும் மாணவர்களுக்கும் பொருந்தும். இப்படிக் கனவுகளோடு வருகிறவர்கள் எதிர்கொள்ளும் ஆரம்பக்கால அவஸ்தைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. என்ன தான் போகப்போகிற ஊரை/நாட்டைப் பற்றி விவரங்கள் தெரிந்திருந்தாலும் கூட, வந்து இறங்கியவுடன் ஒரு அந்நிய உணர்வும், வெறுமையும் சூழ்ந்து கொள்வதை தவிர்க்க முடியாது. இதன...
கல்லா கட்டப்படும் சித்தர்களின் மூச்சுக் கலை

கல்லா கட்டப்படும் சித்தர்களின் மூச்சுக் கலை

கட்டுரை, சமூகம்
“நம்மிடம் ஒரு பொருள் இருந்து, அதை நாம் உபயோகிக்கா விட்டால்.. அந்தப் பொருள் நம்மிடம் இல்லாததற்கு சமம்.” இந்த அற்புத தத்துவத்தை சொன்னது எந்தவொரு மேதையும் இல்லை. ஏவாளை வழிக்குக் கொண்டு வந்து ஆப்பிளைச் சாப்பிட வைக்க சாத்தான் சொன்னது. அதையே இப்ப நான் உங்களுக்கு சொல்கிறேன்.நம்மிடம் உள்ளது என்ன?“என்ன வளமில்லை இந்த தமிழ்நாட்டில்” என நான் பாட்டாவே படிச்சிடுவேன். சரி வேணாம் விடுங்க. சித்தரியல் என்ற அரிய விஷயம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுப் போன பெரும் கொடை. சித்தர்கள் தான் உலகின் முதல் விஞ்ஞானிகள் என ஆதாரங்களுடன் நிருபித்தாலும்.. அதை சந்தேகிக்க தான் துணை புரிகிறது மெக்காலே கல்வித் திட்டம். நம்ம நம்பிக்கைகள் இப்படிப் பாதாளத்தில் இருக்க.. பாபா ராம்தேவ்வும், ஸ்ரீலஸ்ரீயும் அதில் நம்பிக்கை வைத்து கோடிகளில் உழல்கின்றனர். அப்படி நாம் கோடிகளில் உழலா விட்டாலும் கூட, மகிழ்ச்சியாகவும் ஆரோக்கி...
மனுஷ்ய புத்திரனைப் போல கவிதை எழுதுவது எப்படி?

மனுஷ்ய புத்திரனைப் போல கவிதை எழுதுவது எப்படி?

கட்டுரை, சமூகம்
எங்கயாவது ஒரு டாக்டர் டிவி-ல போய் உட்கார்ந்துகிட்டு வாஸ்து படி வீடு எப்படி கட்டுறதுன்னு கருத்து சொல்ல முடியுமா? ஆனா ஒரு கவிஞனா இருந்தா எதுக்கு வேணும்னாலும் கருத்து சொல்லலாம். சாதி பிரச்சினையில இருந்து சாம்பார்ல உப்பு குறைஞ்சா என்ன பண்றதுங்கற வரைக்கும் எல்லாத்துக்கும் தீர்வு சொல்ற ஒரே தகுதி.. இந்தக் கவிஞர்களுக்குத்தான் இருக்கு.அதுனால நீங்களும் கவிஞர் ஆகறீங்க. எப்படி? அதுக்குத்தான் இந்தப்பதிவு.முதலில் கவிதை எழுதனும்னு தீர்க்கமா ஒரு முடிவு பண்ணுங்க. ஆமா கவிதை எழுதணும்னு முடிவு பண்ணின உடனே, கொலதெய்வம் கூகிளாண்டவரை மனசுல நிறுத்தி அவர்கிட்ட கோரிக்கை வச்சிட்டா.. அவர் அள்ளிக்கோ, அள்ளிக்கோன்னு கொடுத்துருவார்.உதாரணம் - http://www.poemhunter.com/poems/alone/இதைப் போல நாலைந்து வெப்சைட்.. ஹைக்கூ கவிதைகள் உள்ள வெப்சைட்ல நமக்கு என்ன வேணுமோ அதை எடுத்து, மறுபடியும் கூகிளாண்டரை கும்பிட்டு ட்...
கற்பழிக்கப்படும் மைனர்கள்

கற்பழிக்கப்படும் மைனர்கள்

கட்டுரை, சமூகம்
2007 - 5,045 2008 - 5,446 2009 - 5,336 2010 - 5,484 2011 - 7,112 2012 - 8, 541கடைசி ஆறாண்டில், இந்தியாவில் கற்பழிக்கப்பட்டுள்ள மைனர்களின் எண்ணிக்கை என National Crime Records Bureau (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கை இது.*டெல்லியில் மட்டும் எப்பொழுதும் 300க்கு குறையாமல் போலீசாரிடம் வழக்குகள் பதியப்படுமாம். 2012 இல் 415 வழக்குகள் பதியப்பட்டிருக்காம்.*எப்பொழுதும் மத்தியப் பிரதேசம் தான் முதலிடமாம் (2008 இல் மட்டும் உத்திரப் பிரதேசம் முதலிடம் பெற்றுள்ளது).2012 இல் கொல்லப்பட்ட மைனர்களின் எண்ணிக்கை: 1,597உத்திரப் பிரதேசம் - 449 மகாராஷ்டிரா - 201 பீகார் - 128 டெல்லி - 39 (ஜம்மு & காஷ்மீரில் மட்டும் எந்த மைனரும் கொல்லப்பட்டதாக வழக்கு பதியப் படவில்லை.)2012 இல் சிசுக்கொலை: 81மத்தியப் பிரதேசம் - 17 (2007 இல் 61) உத்திரப் பிரதேசம் - 14  மகாராஷ்டிரா - 11(200...
சாமீ. அழகப்பனின் வாதங்களும் வயிற்றெரிச்சல்களும்!

சாமீ. அழகப்பனின் வாதங்களும் வயிற்றெரிச்சல்களும்!

கட்டுரை, சமூகம்
சித்தமருத்துவம் சித்தர்களால் பாடல்களாகப் பாடப்பட்டு தலைமுறை தலைமுறையாக கொண்டு வரப்பட்டது. அது பின்னாளில் குடும்ப சொத்தாக கருதப்பட்டு, சுயநலத்துடன் மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டதால் மெல்ல அழியத் தொடங்கியது. பின்னர் நல்லோர் சிலரால் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக சித்தமருத்துவ நூல்கள் பாதுகாக்கப்பட்டதுடன், அந்தத் தகவல்கள் மக்கள் மத்தியில் சென்றடையவும் தொடங்கியது. ஆயினும் இன்றும் கூட, சிலர் தங்களது சொத்துப்போல் சித்தமருத்துவத்தினைக் கருதுவது சித்தமருத்துவதிற்கு ஏற்பட்ட சாபக்கேடாகும்.சித்த மருத்துவ விழிப்புணர்வை மக்களிடையே இணையம் மூலமாக ஏற்படுத்தும் பதிவர்கள் பலர்  உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர்களில் பதிவர் சாமீ. அழகப்பனும் ஒருவர். அவரது தளத்தின் பெயர் மச்சமுனி.காம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான மச்ச முனி சித்தரின் பெயரால் ஒரு தளம் இயங்குகிறது என்பது தமிழர்கள் ...
சிதிலமடையும் மோளப்பாளையம் மலை

சிதிலமடையும் மோளப்பாளையம் மலை

கட்டுரை, சமூகம்
1.மோளப்பாளையம் கிராமத்தின் இயற்கை அமைப்பு:நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மோளப்பாளையம் கிராமம் இயற்கையாக மலைகள் கொண்ட கிராமம் ஆகும். இங்கு உள்ள மக்கள் வேளாண்மை செய்து வருகிறார்கள் .ஆடு, மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார்கள். மோளப்பாளையம் கிராமத்தைச் சுற்றி இருபது விவசாய கிராமங்கள் உள்ளன . இந்த கிராமங்களை மலைகள் சூழ்ந்து உள்ளன.வனவிலங்குகள், தேசிய பறவை மயில் மற்றும் பல்வேறு மூலிகை மரங்கள் இந்த மோளப்பாளையம் மலைப்பகுதிகளில் உள்ளன. மோளப்பாளையம் கிராமத்தில் இருந்து ஏழு கிலோமீட்டரில் புகழ்ப் பெற்ற கொல்லிமலை மற்றும் னைனாமலை ஆகியவை உள்ளன. மோளப்பாளையம் கிராமத்தில் உள்ள மலைகைளச் சுற்றி இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் மூன்று பெரிய ஏரிகள் உள்ளன (பொன்பரப்பு ஏரி, கதிரானல்லூர் ஏரி, சிங்களாந்தபுரம் ஏரி). இதில் பொன்பரப்பு ஏரி நூற்று ஐம்பது ஏக்கர் பரப்பு கொண்டது. இந்தமைலகளில் இருந்து வரும் நீரோடைகளி...
‘நாடக’ திருமணங்களும் சப்பை கட்டுகளும்

‘நாடக’ திருமணங்களும் சப்பை கட்டுகளும்

கட்டுரை, சமூகம்
காதல் திருமணம் செய்ய நினைக்கிறவர்களுக்கு இலவசமாய்க் கிடைக்கும் ஆலோசனைகள் அல்லது அறிவுரைகள் பெரும்பாலும் சாதி என்கிற ஆயிரங்காலத்து காரணத்தை நேரடியாக ச்சொல்லாமல், அதைப் பல்வேறு வகையில் மறைமுகமாக வலியுறுத்துவதை நாம் பல்வேறு இடங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த ஆலோசனைகள் எல்லாம் பெரும்பாலும் அச்சுறுத்தும் தொணியில்தான் இருக்கும்."அவங்க குடும்பப் பழக்கவழக்கம் வேற, நம்ம குடும்பப் பழக்கவழக்கம் வேற, அதெல்லாம் ஒத்து வராது.""நமக்கு ஏதாவது பிரச்சினைன்னா யாரும் சப்போர்ட்டுக்கு இருக்க மாட்டாங்க.""அவன் உன்னை ஏமாத்திருவான். சொத்துக்காக உன்னை ஏமாத்துறான்.""உறவினர்கள் நம்மைத் தனிமைப்படுத்தி விடுவார்கள். மானம் மரியாதை என்னாவது?""நீ அவனைக் கல்யாணம் பண்ணிகிட்டா, நான் செத்துருவேன்.""அவனைத் தவிர வேற யாரை வேணாலும் கல்யாணம் பண்ணு. இல்லே, கல்யாணம் பண்ணாமையே இரு."மேலோட்டமாய் இந்த...