32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

படைப்புகள்

115 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 5 / 8
செய்திகள் வரிசை (பக்கம் 5)
அன்பானவர்களுகாக கவிதை

அன்பானவர்களுகாக

என்னுடைய பலவீனங்களின் மீது யாரும் கல்லெறியாதீர்கள் கோபத்தில் நான் வசைகளை அடுக்கியே பழக்கப் பட்டவன். அதனால் உங்கள் செயல்களுக்கு ஈடாக என்னால் வேறெதையும் தரமுடியாது சன்மானம் பெற நீங்கள் தயாரென்றால் பிரதியுபகாரமாக கொட்டிக் கொடுக்க காத்திருக்கிறேன் எந்நேரமும் எந்த இடத்திலும் எனக்கு அன்பானவர்களும் அதில் சிலநேரம் மாட்டிக்கொள்வதை என் மனம் எப்படி ஏற்கும் பதிலுக்கு நான் உங்களுக்காகவே வார்த்தையொன்று தயாரித்து வைத்திருக்கிறேன் உங்களிடம் தனியாக சொல்கிறேன் இப்பொழுது வேண்டாம் நேரம் வரட்டும் – சே.ராஜப்ரியன்

20/05/2010 Dinesh R
அவர்களை என்ன செய்யலாம்? கவிதை

அவர்களை என்ன செய்யலாம்?

நான் எப்பொழுதும் சாத்தியமில்லாதவைகளின் மீதே என் பிரியங்களை விதைப்பவன் அறுவடைக்காக காத்திருப்பது தவறுதான் ஆதலினால் என்காதல் செத்துப்போகும் என ஒருவன் சவப்பெட்டி செய்கிறான் இன்னொருவன் புதைப்பதற்கு குழி வெட்டுகிறான் மற்றொருவன் கொல்லிக் கட்டையுடன் அலைகிறான் அவன்கள் மனிதரூபத்தில் உலவிக் கெடுக்கிறார்கள் என்னறுவடை காலம் முன்பே இடையில் அருத்தெடுக்க வேண்டாத உறவில் நுழைந்து என் நேசப்பயிரின் ஆயுளை கெடுத்தழிக்கிறார்கள் அவர்களை என்ன செய்யலாம்? – சே.ராஜப்ரியன்

19/05/2010 Dinesh R
அழகிய பிரியங்கள் கவிதை

அழகிய பிரியங்கள்

என் பிரியங்களில் படிந்துள்ள அழகினை நான் பார்த்து வியக்கிறேன் மற்றவர்களின் வெளிப்பாட்டிலிருந்து என்னுடையதில் மட்டும் ஒரு தனித்துவமிருப்பதால் வழித்தெடுக்க வந்தவர்களுக்கும் அதையே கொடுத்தேன் மாறாக எனக்களித்து சென்றார்கள் அவர்களுக்கு யாரோ கொடுத்த வெறுமைகளை – சே.ராஜப்ரியன்

18/05/2010 Dinesh R
கடைக்கண் கவிதை

கடைக்கண்

அந்த காலத்தில் அவள் பார்வைக்காகவே உயிர் வாழ்ந்தேன் நம்பவில்லை ஆனாலும் அப்படி நடக்கும் என்ற நிரந்தரமில்லா நம்பிக்கை சகவாசியை கட்டாயப்படுத்தி உடன்வசிக்க சொன்னேன். பிற்பாடு உறுதிசெய்தால் சிரிப்பு என்ற ஆயுதத்தாலும் ஒன்றாக சேர்த்தென்னை வீழ்த்தி இந்த நிகழ்காலத்தில் அவளே மறுபடியும் என்னை சிதிலமாக்குகிறாள் விஷம்கொட்டும் பேச்சு வேண்டா வெறுப்பு பார்வை ஒவ்வாத கசக்கும் மருந்தாய் உதட்டசைவு ஒற்றையிலக்கத்தின் முதல்எண் தடவை என்னுடய இறக்கும் இந்தகாலம் அவளுக்கு புதியவனொருவனுடன் நல்ல தொடக்கம் தந்திருக்க நான் என்ற ஒரு ஆள் […]

14/05/2010 Dinesh R
நிலா ஏன் தேய்கிறது? கவிதை

நிலா ஏன் தேய்கிறது?

நிலா வந்து போகிறது வானம் நட்சத்திரங்களைக் கொட்டி மீண்டும் பொறுக்கி எடுக்கிறது சூரியன் தோன்றி மறைகிறது மழை நனைத்துப் போகிறது மின்னல் மீண்டும் வானிற்கே போனது இடி சத்தமிட்டு சாகிறது பனித்துளி பூத்துக் கரைகிறது பூக்கள் மலர்ந்து உதிர்கிறது பலகவிதை எழுந்து விழுகிறது இசை ஒலித்து ஓய்கிறது வண்ண விளக்குகள் எரிந்து அணைகிறது குயில் கூவிச் சோர்கிறது மயில் ஆடி முடிக்கிறது அலைகள் கரையைத் தொட்டு விளையாடி செல்கிறது இன்னும் என்னென்னவோ நடக்கிறது எதுவும் முழுமையடையவில்லை சந்தோஷங்களைப் […]

12/05/2010 Dinesh R
அறிவாளிகள் கதை

அறிவாளிகள்

எவ்ளோ தடவ சொல்றது ஊரு பக்கம் போகாதன்னு இப்ப அழுது என்ன புண்ணியம் என்று சொன்னவாரு கூட்டத்திற்குள் நுழைந்தாள் எட்யாங். ஆம் அனுபவமும் அறிவும் ஒருங்கே பெற்றவள் அவள். அதனால் தான் கூட்டத்தின் தலைமை பொறுப்பை ஏற்று வழி நடத்தி கொண்டிருந்தாள். அனைவரும் வானத்தை நோக்கி ஊளையிட்டு,  தலைவிக்கு மரியாதை செலுத்தினார்கள்.   கூட்டத்தின் செல்ல பிள்ளையான ரூஸ்  மனிதர்களால் கொடூரமாக கொல்லப்பட்டு மூன்று நாட்களே ஆன நிலையில், மாயா காயத்துடன் திரும்பி உள்ளான். ” நாம்ப எல்லாம் […]

12/05/2010 Dinesh R
தணல் நெஞ்சம் கவிதை

தணல் நெஞ்சம்

என் இதயம் தீப்பிடித்து எரிகிறது கண்ணீர்விட்டு அணைத்துக் கொண்டிருக்கிறேன் எந்நேரமும் முன்பு போலில்லை நீ நான் பார்த்தால் முகம் சுளிக்கிறாய் வார்த்தைகளில் வெறுப்பள்ளி வீசுகிறாய் நான் சிரித்தால் பதிலுக்கு என்னை சிலுவையில் அறைகிறாய் முகம் திருப்பி நான் செய்தபாவம் என்னவோ? – சே.ராஜப்ரியன்

04/05/2010 Dinesh R
காதல் மழை கவிதை

காதல் மழை

மண்ணில் விழுந்த மழைத்துளி மீண்டும் தெறித்தது சிறு சிறுத்துளிகளாய் உன்மேல் படுவதற்கென்றே! நீ கதவுகளை பூட்டியே வை மழையை ரசிக்கிறேன் என ஜன்னலோரத்தில் போகாதே சாரலென்றபெயரில் சட்டென நுழையும் மழை உன்மேல் கொண்ட ஆசையால். – சே.ராஜப்ரியன்

01/05/2010 Dinesh R
நானும் அவளும் கவிதை

நானும் அவளும்

நானும் அவளும் காதலித்தோம். நானும் அவளும் பேசிக்கொள்வோம். நானும் அவளும் ஒரே தட்டில் உணவு உண்போம். நானும் அவளும் ஒன்றாக ஒரே படுக்கையில் துயில் கொள்வோம். நானும் அவளும் எங்கள் உடையை மாற்றி மாற்றி உடுத்திக் கொள்வோம். நானும் அவளும் ஒரே இருக்கையில் இறுக்கமாக அமர்ந்துக் கொள்வோம். நானும் அவளும் எழுதுகோல் விரல்களால் காகித கட்டுடலில் கவிதை எழுதுவோம். நானும் அவளும்.. ‘நீயும் நானும் கல்யாணம் செய்துக் கொள்வோம்’ என பேசினோம். நானும் அவளும் இப்படி எத்தனையோ […]

28/04/2010 Dinesh R
பறவையின் ஒலிகேட்டு கவிதை

பறவையின் ஒலிகேட்டு

என்னை மறந்து உயரத்தில் பறந்துக் கொண்டிருக்கிறேன் எப்படிப் போனேன் தெரியவில்லை பூமியின்மீது பார்வை படர்ந்திருக்கிறது எல்லாமே எனக்கு கீழேதான் நானும் வானத்தோடு சேர்த்து அதிலிருப்பதையும் தவிர இவ்வளவு சிறியதா இந்தபூமி? ஏமாந்திருக்கிறேன். யாரோ சொல்லிக் கொடுத்ததைக்கேட்டு சட்டென தெளிகிறேன் எந்த பறவையின் பார்வையிலிருக்கிறேனோ!! அதன் இறக்கையின் ஒலிகேட்டு விழித்துப் பார்க்கிறேன் வழக்கம் போல கனவுதான்.. விழுந்துவிடவில்லை. – சே.ராஜப்ரியன்

27/04/2010 Dinesh R
வராத கடிதத்திற்கு பதிலாக கவிதை

வராத கடிதத்திற்கு பதிலாக

இதுவரை யாரும் எனக்கு எழுதாத காதல் கடிதத்தை படிக்கப் போகிறேன் கதவை தாழிட்டு இருள் நிரம்பி வழியும் அறையினுள் ஒற்றை விளக்கின் ஒளிதனில்… வார்த்தைகள் என்னவாகயிருக்கும் என பதட்டத்தில் கடிதத்தை பிரிக்கிறேன் கைகள் நடுங்குகிறது வியர்வையால் குளித்துக்கொண்டிருக்கிறேன் அதனால் நான் போட்டிருக்கும் ஆடையினாலே என்னுடம்பு துவட்டிகொள்கிறது. ஈரமாகிப்போனது கடிதத்தின் சிலபகுதிகள் எத்தனை முறைப்படித்தாலும் புரியவில்லை முடிவில் வெறு(ம்)மைதான் மிச்சம். இனிமேலெனக்கு யாரும் கடிதம் எழுதாதீர்கள் தயவுசெய்து. – சே.ராஜப்ரியன்

22/04/2010 Dinesh R
நீ மட்டும்தானழகு கவிதை

நீ மட்டும்தானழகு

டுளிப்ஸ் மலர்களின் தோட்டத்திலொருநாள் நீயும் நானும் கைகோர்த்து நடந்தோம் நினைவிருக்கிறதா உனக்கு? எல்லாமே நிறம் மாறியது உன் அழகைக்கண்டு பூக்களெல்லாம் அழகாயிருக்கிறது எனச் சொன்னாய் உன்னைவிட எதுவும் அழகில்லை இவ்வுலகத்தில் என நான் சொன்னேன் வெட்கத்தில் நீயென் தோளில் சாய்ந்தாய் நானும் மலரானேன் உன்கரம் பற்றியதால். ஆண்டுகள்தான் கடந்தன அப்படியே இருக்கிறது அந்த நினைவுகள் ஒருமுறை உன்விரல்நகம் கீறி தழும்பாய் என்னுடன் ஒட்டிக்கொண்ட உன் தீண்டல்போலவே அன்று பூக்களின் நடுவில் நீ நின்று எடுத்துக்கொண்ட புகைப் படத்தினை […]

21/04/2010 Dinesh R
ஒரே கூத்து தான் போங்க கதை

ஒரே கூத்து தான் போங்க

மார்கெட்டிலிருந்து மதிய உணவுக்காக வீட்டிற்க்கு வந்தான் நல்லதம்பி . அடியேய் சீக்கிரம் சோத்த போடு என்றான் தன் மனைவி சுமதியிடம். ஏனுங்க இந்தாங்க என்று  3000 ரூபாய் எடுத்து நீட்டினாள்.  யாரு கொடுத்தா என்று கேட்டவனிடம், “ம.மு.க  கட்சி ஆளுங்க வந்தாங்க, தேர்தல்ல  அவங்க கட்சிக்கு வாக்களிக்க சொல்லி கொடுத்துட்டு போனாங்க” என்றால். பணத்தை பார்த்து எரிச்சல்கொண்ட நல்லதம்பி,  “எப்போ வந்தாங்க வீட்டுக்கு” என்று கேட்டான் கோவமாக. கால்மணிநேரம் இருக்கும் என்றால் சுமதி. தட்டில் இருக்கும் உணவை […]

12/04/2010 Dinesh R
மின்மினிப் பூ கவிதை

மின்மினிப் பூ

இரவில் மட்டும் பூக்கிறது அந்த மரம் அதுவும் மின்மினிப் பூக்களாய்! விடியலில் ஒரு பூ கூட இருப்பதில்லை மொட்டுகள் இருக்கிறதா என தேடிப்பார்த்தேன் அதுவும் பார்ப்பதற்கில்லை இருட்டில் மட்டும் தெரிகிறது வெளிச்சம் வருவதற்கு முன்னே மறைகிறது யார் பறிக்கிறார்களோ தினம் தினம் – சே.ராஜப்ரியன்

10/04/2010 Dinesh R