
சூது கவ்வும்
குருஷேத்ரப் போர் முடிந்து விட்டது. தர்மருக்கு முடி சூட்டி விட்டனர். ஆனால் அந்த வெற்றி அவரை நாளுக்கு நாள் சோர்வுடையச் செய்கிறது. இந்தப் பாழும் பதவிக்காக இத்தனை கொலைகள் என்று மனம் ஒடிகிறார். முன்பு தர்மர் துவளும் பொழுது எல்லாம் தன் தோளில் சாய்த்துக் கொண்டு ஆறுதல் சொல்ல விதுரர் இருந்தார். ஆனால் இன்று அவர் இல்லை. தர்மர் மனதில் அமைதியும் இல்லை. திசைகள் நான்கினையும் கலங்கிய கண்களோடு கைகூப்பி, 'என் சிற்றப்பா அவ்விடம் உள்ளரா?' என தழுதழுக்கக் கேட்கிறார். ஒரே ஒரு திசையில் மட்டும் மனம் சற்று சலனம் அற்று மீண்டும் விக்கித்துக் குறுகுகிறது. எதுவும் யோசிக்காமல் கிரீடம் அற்ற கலைந்த கேசத்தோடும், மேலாடை மறந்த திறந்த மார்போடும், கலங்கிய கண்களோடும் நடுநிசியில் கானகம் நோக்கி செல்லும் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறார்.
நடந்து கொண்டிருப்பவன் மன்னர் மன்னன் அல்ல. மன அமைதி தேடிச் செல்லும் சாதாரணன். பரம ஞானியான விதுரரை...
















