Shadow

படைப்புகள்

சூது கவ்வும்

சூது கவ்வும்

கதை, படைப்புகள்
குருஷேத்ரப் போர் முடிந்து விட்டது. தர்மருக்கு முடி சூட்டி விட்டனர். ஆனால் அந்த வெற்றி அவரை நாளுக்கு நாள் சோர்வுடையச் செய்கிறது. இந்தப் பாழும் பதவிக்காக இத்தனை கொலைகள் என்று மனம் ஒடிகிறார். முன்பு தர்மர் துவளும் பொழுது எல்லாம் தன் தோளில் சாய்த்துக் கொண்டு ஆறுதல் சொல்ல விதுரர் இருந்தார். ஆனால் இன்று அவர் இல்லை. தர்மர் மனதில் அமைதியும் இல்லை. திசைகள் நான்கினையும் கலங்கிய கண்களோடு கைகூப்பி, 'என் சிற்றப்பா அவ்விடம் உள்ளரா?' என தழுதழுக்கக் கேட்கிறார். ஒரே ஒரு திசையில் மட்டும் மனம் சற்று சலனம் அற்று மீண்டும் விக்கித்துக் குறுகுகிறது. எதுவும் யோசிக்காமல் கிரீடம் அற்ற கலைந்த கேசத்தோடும், மேலாடை மறந்த திறந்த மார்போடும், கலங்கிய கண்களோடும் நடுநிசியில் கானகம் நோக்கி செல்லும் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறார். நடந்து கொண்டிருப்பவன் மன்னர் மன்னன் அல்ல. மன அமைதி தேடிச் செல்லும் சாதாரணன். பரம ஞானியான விதுரரை...
மேற்கு

மேற்கு

கதை, படைப்புகள்
'ஏன் நீ வேலைய விடக் கூடாதா?'ஜான்சனிற்கு ஒன்றரை வயது இன்னும் முழுமையாக ஆகவில்லை, ஆனால் அவன் உடைத்த பொருட்களின் விலை ஒன்றை லட்சத்தை தாண்டியது. ஜெனிலியா இதற்காகவே அலுவலக விடுமுறையை ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்க வேண்டியதாகி விட்டது. ஜேம்ஸ் எவ்வளவோ சொல்லியும் ஜெனிலியா வேலையை விட சம்மதிக்கவில்லை. "இனிமே நீ வேலைக்கு போலாம்."அமெரிக்காவில் பிரபலமாகி வரும் 'மிஸ்டர். மாம்' கலாச்சாரத்திற்கு ஜேம்சும் மாறி விட்டான். கட்டாய ஓய்வினை வாங்கிக் கொண்டு ஜான்சனை நேருக்கு நேராக சமாளிப்பதென முடிவுக்கு வந்து விட்டான்.   ஜெனிலியாவிற்கு இந்த முடிவு பிடிக்கவில்லை எனினும், ஜேம்சிற்கு ஜான்சனுடன் பொழுது நன்றாக போனது. வீட்டு வேலைகள் அனைத்தும் இரண்டு நாட்களிலயே பழகி விட்டது.  மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் மருத்துவ ஆலோசனைக்கு ஜான்சனை அழைத்து சென்றான் ஜேம்ஸ்.இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ம...
தனிமை

தனிமை

கதை, படைப்புகள்
ஊரே பூங்குழலி வீட்டில் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தது. ஆனால் சத்யசீலன் மட்டும் தனியாய் விளக்கும் ஏற்ற மறந்து இருளில் அமர்ந்து இருந்தான். ஏமாற்றமும் அதனால் ஏற்பட்ட எரிச்சலும் சத்யசீலனை பாடாய்படுத்தியது. தனக்கு நேர்ந்த அவமானத்தை எப்படி கலைவது என்று புரியாமல் தவித்தான். கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பியது போல, சத்யசீலன் பூங்குழலிக்கு செய்த நல்லதை அவள் கெட்டதாக மாற்றி விட்டிருந்தாள். பூங்குழலியை உயிருடன் கொளுத்த விரும்பிய சதிகார கூட்டத்திடம் இருந்து, தனி ஒருவனாக போராடி அவளை மீட்டான். ஆனால் பூங்குழலியோ நன்றி மறந்து, தனது முகத்தில் கரி பூசி விட்டதாக புலம்பிக் கொண்டிருந்தான் சத்யசீலன். திடீரென்று தன் பின்னால் யாரோ நிற்பது போல் சத்யசீலனிற்கு தோன்றியது. திரும்பி பார்த்த சத்யசீலனிற்கு கோபத்தில் கண்கள் சிவந்தது. குழந்தை முகம் மாறாத பதிமூன்று வயது பூங்குழலி, மன்னிப்புக் கோறும் பாவனையில் சங்கடத்து...
என்திசை வீசா தென்றல்

என்திசை வீசா தென்றல்

கதை, படைப்புகள்
எவ்வளவு நாள்? வசந்தம் போய் கோடையும் வந்து விட்டது.துவைக்கப் பட்ட கருஞ்சேலையாய் சாலை ஈரத்தில் மின்னிக் கொண்டிருந்தன. வழுக்கிக் கொண்டிருக்கும் வாகனங்களின் மறுபுறம் செவ்வண்ண தென்றலாய் அவள். நான் பார்க்க.. நான் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன் தென்றல் பேருந்தில் ஏறும் வரை. மழைக் காலத்தில் சாரல் தானே அடிக்கும்.. எங்கிருந்து தென்றல் வந்தது என என்னால் யோசிக்க முடியவில்லை. ஒருவேளை செவ்வண்ணம் என்னுள் வானவில்லை தோற்றுவித்திருக்கலாம். கடைசியில் நானுமா? ஆனால் வெளியில் தெரிந்தால் தானே நான் நாண வேண்டி இருக்கும் என பீறிட்டு எழும் கவிதை எழுதும் ஆசையையும் அடக்கிக் கொண்டேன். நான் சாப்பிடும் அளவு குறைகிறதா, தூக்கம் சரியாக வருகிறதா,காதல் பாட்டு பிடிக்கிறதா என என்னை உள்நோக்கி பார்த்தேன். வானவில்லும், மழையும் ஒருங்கே தெரிந்தது.ம்ம்..நடப்பவை எல்லாம் இயற்கைக்கு மாறாகவே நடக்கின்றன. அக்னி நட்சத்திரம் அனைத...
கெளரி வீட்டு பஞ்சாங்கம்

கெளரி வீட்டு பஞ்சாங்கம்

கதை, படைப்புகள்
"எங்க வச்சேள்?"சோமு ஐயர் தன் வீட்டில் உள்ளவர்களிடம் ஆயிரம் தடவைக்கு மேல் இந்த கேள்வியை கேட்டு விட்டார். ஆனால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் ஊர் தலைவர் முருகேச முதலியாரிடம் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தார் ஐயர். இரண்டு நாட்களாக முருகேச முதலியார் ஐயர் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்."நம்பிக்கிட்ட புதுசு வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன். புதன்கிழமை வந்துடும்" என்றார் ஐயர். "ஆனா.. பெளர்ணமி செவ்வாய்கிழமை தானே!" சில நாட்களுக்கு முன் நடந்த கோயில் திருவிழாவின் போது, "பாப்பானுக்கு புரோகிதமும், செட்டிக்கு வணிகமும் சொல்லி கொடுக்காமலே வந்துடும் அந்த மாதிரி...." என்று ஏதோ மேற்கோள் காட்டி பேசினார் ஆறுமுகக் கவுண்டர். அங்கிருந்த முருகேச முதலியார், கவுண்டரின் மேற்கோளை மறுத்தார். அதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாத முடிவில், கடை ஒன்று வைத்து தன்னாலும் வணிக...
திருடி – சவால் சிறுகதை

திருடி – சவால் சிறுகதை

கதை, படைப்புகள்
காமினி. எந்த தேவதைகளாலும் ஆசிர்வதிக்கப் படவில்லை. ஆனால் அனைத்து சாத்தான்களாலும் சபிக்கப்பட்டவள். அவளைப் பற்றி முதலில் கேள்விபடுபவர்கள் அப்படி தான் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் பார்த்து பழகினால் தான் தெரியும் காமினியே ஒரு தேவதை என்று. அப்படி காமினி ஒரு தேவதை என அவளை நம்ப வைக்க அவளின் தாத்தா பரந்தாமன் கடந்த ஐந்து வருடங்களாக முயன்று வருகிறார். ஆனால் கடந்த ஐந்த நாட்களாக அவர் மருத்துவமனையில் தன்னிலை இழந்து சிகிச்சை பெற்று வருகிறார். பரந்தாமன் மருத்துவமனைக்கு சென்ற தினத்தில் இருந்து காமினியை கவனிக்க ஆள் இல்லை. சிவா மட்டும் தான் அடிக்கடி வந்து அவள் உயிரை வாங்கிக் கொண்டிருந்தான். சிவாவின் தொல்லை பொறுக்க முடியாமல் எங்கேயாவது ஓடிவிடலாம் என காமினி நினைத்தாள். ஆனால் எங்கே ஓடுவது என அவளுக்கு தெரியவில்லை. ஏன் தான் தாத்தாவிற்கு உடம்பு சரி இல்லாமல் போனதோ என கோபம் கோபமாக வந்தது. எல்லாம் அந்த சாமியறையில் ...
நடுநிசி மர்மம் – சவால் சிறுகதை

நடுநிசி மர்மம் – சவால் சிறுகதை

கதை, படைப்புகள்
"இப்போ நாம தயார் செய்துள்ள இந்த PX+ மருந்தை குரங்கு மேல செலுத்தி பரிசோதனை செய்து வெற்றியும் அடைஞ்சாச்சி,அடுத்து மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கனும்." "ஆனா தன் உடம்புல செலுத்தி பரிசோதிக்க யார் முன்வருவாங்க ஆல்பர்ட்??" என்று கேட்டார் மருத்துவர் கிருஷ்ணன். அப்பொழுது மருத்துவர் ஆல்பர்டின் அறைக்குள் இரண்டு உயரமான ஆசாமிகள் நுழைந்தனர். "வாங்க.. உங்களுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இரவு நேரத்துல, ரோடுல இருக்குற பிச்சைகாரங்க, வயசானவங்க இப்படி உங்க கண்ணுல படுற யாராவது 2 பேர தூக்கிட்டு வாங்க. பத்தாயிரம் தரேன். ஆனால் எனக்கு எந்த பிரச்னையும் வராம பார்த்துக்கனும் புரியுதா??" என்று புருவங்களை உயர்த்தியபடி இருவரையும் கண்களால் ஆராய்ந்தார் மருத்துவர் ஆல்பர்ட். சரி என தலையை ஆடிவிட்டு அந்த இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். "நடக்க கூட உடம்புல தெம்பில்லாம இருக்குற பிச்சைக்கார பசங்கள தூக்கிட...
அவன்

அவன்

கதை, படைப்புகள்
இராஜ வீதிக்காரர்கள் உண்மையிலேயே அப்படியொரு முடிவுக்கு வந்திருப்பார்கள் என நினைத்துப் பார்க்கவே அவனால் முடியவில்லை. அதை நினைக்க நினைக்க அவனுக்கு இரத்தம் கொதித்தது. வேறேதாவது காரணத்திற்காக இம்முடிவு எடுக்கப் பெற்றிருந்தால், அவனே முன்னின்று தலையைக் கொடுத்தாவது செய்து முடித்திருப்பான்."ஆயிரத்தி தொள்ளாயிரத்தி பதினொன்னு" என்று கண்களை மூடியவாறே எண்ணிக் கொண்டிருந்தான். தூக்கம் வருவதாக இல்லை. 'பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கீழ் வகுப்புப் பெண்ணை அவர்கள் வீதி வழியாக அழைத்து சென்றதற்காக கலெக்டர் ஆஷ் துரையை கொல்லப் போகிறார்கள். இதை மேலிடத்தில் சொல்லி தடுக்கலாம், ஆனால் கலெக்டர் கொல்லப் பட வேண்டியவன். இன்னும் பதினேழு நாட்கள் மீதம் உள்ளது' என்று யோசித்தவாறே சிறிது கண்ணயர்ந்தான்.வாஞ்சிநாதனை எதிர்ப்பார்த்து அவன் முன்னதாகவே மணியாச்சி இரயில் நிலையத்திற்கு சென்று விட்டான். இரயில் வந்து நின்ற சில...
மனிதர்களைக் கண்காணிக்கும் ஒற்றர்கள்

மனிதர்களைக் கண்காணிக்கும் ஒற்றர்கள்

கதை, படைப்புகள்
நமது இந்து மதத்தை பற்றி குறை கூறுபவர்கள் உங்கள் மதத்தில் பல கடவுள்கள் இருக்கிறார்கள் ஒரு தெய்வ வழிபாடு என்பது இல்லைவே இல்லை.  என்று முக்கியமான ஒரு குற்றசாட்டை முன் வைக்கிறார்கள்.  நம்மில் பலரும் அந்த குற்றசாட்டை கேட்டு அவர்கள் சொல்வதும் உண்மைதானே.கல்விக்கு ஒரு கடவுள்,  செல்வத்திற்கு பெற, இறப்பிலிருந்து தப்பிக்க என ஏகப்பட்ட கடவுள்களை வைத்திருக்கிறமே.  என்று தனக்குள்ளேயே சமதானம் சொல்லி கொள்பவர்களும் உண்டு, பல தெய்வ வழிபாடு எல்லாம் இல்லை ஒரே தெய்வம் தான் அதற்கு பல பெயர்களை வைத்திருக்கிறார்கள்  என்று பதில் சொல்பவர்கள் கூட ஒரே தெய்வத்திற்கு பல பெயர்கள் என்றால் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்லப்படுகிறதே யார் அந்த தேவர்கள் என்று கேட்டால் பதில் சொல்ல முடியாமல் பலநேரம் தவிக்கிறார்கள்.  நெருப்பின் கடவுள் அக்கினி காற்றின் கடவுள் வாயு, தண்ணிரின் கடவுள் வருணன் என்று எல்லாம் சொல்லப்படுபவைகள் உண்ம...
புன்னகையின் பின்னால்

புன்னகையின் பின்னால்

கதை, படைப்புகள்
“எப்படியோ கஷ்டப்பட்டு கம்பெனியோட நொய்டா ஆஃபீசுல இருந்து சென்னை ஆஃபீசுக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துட்டீங்க..இப்போ சந்தோஷம் தானே?” என்று புன்னகையுடன் கேட்டாள் ரோகினி."ஏன்? உனக்கு சந்தோஷமா இல்லையா என்ன?? நானும் அங்க 4 வருஷமா இருந்துட்டேன். இப்போ உன்ன என் தலையில கட்டிட்டாங்க, எனக்கும் அத ஒரு காரணமா காட்டி சென்னைக்கு வர வசதியா போச்சி" என்றான் விஜய்."எப்படியோ நான் வந்த நேரம்,நீங்க ஆசை பட்டமாதிரி நடந்திருக்கு பாருங்க.""சரி சரி. இப்படி செண்டிமெண்டா பேசியே அனுப்பிடலாம்னு பாக்காத. இட்லிய கொண்டா சாப்ட. ஆஃபீசுக்கு ஓடுறேன்."சென்னைக்கு மாற்றமாகி முதல் நாள் அலுவலகம் சென்றான் விஜய். எதிர்பார்ப்புகளோ கனவுகளோ அதிகமின்றி காணப்பட்டான்.நான்கு வருட அனுபவங்கள் அவனுக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருந்தது.அவனது புது அலுவலகத்தில் சுதர்ஷன் என்பவரை சந்தித்த விஜய் தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் ...
பிறந்த நாள் பரிசு

பிறந்த நாள் பரிசு

கதை, படைப்புகள்
"என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா?""திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி?""இல்ல.. நாளைக்கு உன் பிறந்த நாள் வேற, எதாவது பிளான் இருக்குமே!! அதான் கேட்டேன்.""அப்படி பிளான் இருந்திருந்தா லீவ் கேட்டு நானே உங்ககிட்ட வந்திருப்பேனே சார். எங்கயும் போகல நாளைக்கும் ஆபீஸ் வருவேன்.""வேணும்னா நாளைக்கு லீவ் எடுத்துக்கோ. ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா சனிக்கிழமை வொர்க் பண்ணி காம்பென்செட் பண்ணிடு.""எனக்கு அப்படி ஒரு லீவ் தேவையே இல்ல சார், நான் வரேன்.""டேய் பாஸ்கர், நான் அருண் பேசுறேன்டா. நீ எங்க  இருக்க??""இப்போ  தான் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தேன். ஏன்டா?""உனக்காக நாங்க விக்னேஷ் வீட்டு மொட்ட மாடியில வெயிட் பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரமா வந்து சேர்." "10 நிமிஷத்துல இருப்பேன்.""டேய் அருண். போன்ல அவன் என்னடா சொன்னான்?""இப்போ தான் ஆபீசுல இருந்து வீ...
அழுமூஞ்சி விளையாட்டு

அழுமூஞ்சி விளையாட்டு

கதை, படைப்புகள்
சீதாவிற்கு பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பொழுது, அவங்க ஊரை பற்றியே யோசனையாக இருந்தது. ஏன் அவங்க ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இல்லை என்றும், தான் ஏன் அத்தை வீட்டில் தங்கி படிக்க வேண்டும் என்றும் எவ்வளவு யோசித்தும் புரியவில்லை. மூன்றாம் வகுப்பு படிக்கும் அவளுக்கு இது மட்டும் புரியாத புதிராகவே இருந்தது.பெற்றோர்களை பிரிந்து இருந்த  ஏக்கம் தானோ என்னவோ ,சராசரி குழந்தையை போல் அல்லாமல் ஏதோ ஒரு வேற்று உலகில் வாழ்வது போல் இருப்பாள். படிப்பிலும் கொஞ்சம் மந்தம் தான்.அவளது ரேங்க் கார்டில் சிகப்பு மை பேனாவினால் எழுதபட்டிருந்த "NIL"  என்பது என்ன என்று கூட புரியாது இருந்தாள்.அவள் அத்தை மகன் குமார் எப்பொழுதும் துறு துறு என்று சுற்றிக்கொண்டிருப்பான். இருவரும் ஒரே பள்ளியில் தான் மூன்றாவது படித்து வந்தனர். சிறு வயதில் குழந்தைகளுக்கு சொந்தமான துடிப்பும் சுட்டி தனமும் அவனிடத்தில் நிறைந...
மன்னிப்பாயா…???

மன்னிப்பாயா…???

கவிதை, படைப்புகள்
பத்து வருடங்களுக்கு முன் கலைந்த சோனியாவின் குங்கும பொட்டா இன்று ஆறு போல் ஓடுகிறது எம் ஈழத்தில் ...!!! நாம் என்று இருக்க... இடமொன்று இல்லையடா உனக்கு...??? கைதியாய் ஈழதிலும் அகதியாய் பிற நாட்டிலும் வாழ்வதா உன் விதி விலக்கு...??? நாடு ஒன்று இருந்தும் அண்டை நாட்டை கைப்பற்ற துடிக்கும் பாகிஸ்தானியர்களுடனா உன்னை தீவிரவாதி என்று துலாபாரம் செய்வது ...??? கோழையாய் போன தமிழனை நம்பி ஈனமாய் போன ஈழ தமிழ் மண்ணே....!!!!                  - மன்னித்து விடு என்னை...!!!!- சார்லி கவி...
மொழியும் பழியும்

மொழியும் பழியும்

கதை, படைப்புகள்
மதிய நேரம், உண்ட உணவு தனது தாக்கத்தை என்னுள் ஏற்படுத்த,மெல்ல மெல்லஎன் முன்னே இருந்த அலுவலகத்தின் கணினி, மேஜை என அனைத்தும் மங்கலாகி கொண்டேபோகும் மாயம் நிகழத்தொடங்கியது.அமைதி என்னை சூழ்ந்த அந்த நேரத்தில் மேஜை அதிர.ச்சே,இந்த நேரத்துல தான் நமக்கு போன் வரணுமா!!. உள்ளத்தில் இருந்த எரிச்சலை பேச்சில் காட்டாமல்,"சொல்லு டா" என்றேன். "டேய் என் நண்பன் ஒருத்தனுக்கு ஏதோ ப்ரோக்ராம்மிங்ல (programming)டவுட் இருக்காம், அவன் கிட்ட உன் நம்பர் கொடுத்து இருக்கேன். போன்பண்ணுவான் பேசிக்கோ சரியா??"   "ஹ்ம்ம் சரி பேசுறேன்".அழைப்பை துண்டித்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகவில்லை,வேறொரு க்ரஹதிர்க்கு பயணிக்க தயாரானேன்.மீண்டும் அதே அதிர்வு,வேறு வழியில்லை தற்காலிகமாக பயணத்தை ரத்து செய்துவிட்டு அழைப்புக்கு செவி சாய்த்தேன்.தன்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படிதிக்கொண்டவன், மேலும் ஆங்கி...
இன்னுமா இப்படி மனிதர்கள்

இன்னுமா இப்படி மனிதர்கள்

கதை, படைப்புகள்
   சென்னையில் புறப்பட்டு விழுப்புரத்திற்கு நுழைந்த பிறகு தான் திருக்கோவிலுருக்கு எந்த ரோட்டில் போக வேண்டுமென்ற குழப்பம் ஏற்பட்டது அரசு மருத்துவமனை அருகில் திரும்ப வேண்டும் என்று சொன்னார்கள், அங்கு வந்து பார்த்தால் நான்கு ரோடு பிரிகிறது, எந்த ரோடு எங்கே போகிறது என்று தெரிந்து கொள்ள விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கிறது தான், ஆனால் அதை படிப்பதற்கு எங்கே முடிகிறது. நீத்தார் அறிவிப்பு, பிறந்த நாள் வாழ்த்து என்று ஏகப்பட்ட நோட்டிஸ் ஒட்டும் பலகையாக தான் வழிகாட்டும் பலகை பயன்படுகிறது.    மருத்துவமனை மூலையில் காரின் வேகத்தை குறைத்து கையில் துணிப்பையுடன் நின்ற ஒருவனிடம் அரகண்டநல்லுருக்கு எப்படி போக வேண்டும் என்று வழி கேட்டேன். இதோ இப்படி மேற்கு பக்கமா போற ரோடுதான் சார். இங்கிருந்து சரியா பதினாறு மைல்தான் சார், என்றார் சரி ரொம்ப நன்றி என்று வண்ட...