Shadow

படைப்புகள்

இந்தநாள் நல்லநாள்

இந்தநாள் நல்லநாள்

கவிதை, படைப்புகள்
குறுக்கே போனது பூனை எதிரே வந்தால் விதவை புறப்பட்டது ராகுகாலம் எமகண்டம் வருவதற்குள் சீக்கிரம் போய்சேரவேண்டும் கீழ்நோக்கு நாள் போகின்ற காரியம் இன்று உருபட்டமாதிரிதான்மாலை திரும்பிவந்தார் சாலையில் அந்த பூனை விபத்தில் நசுங்கிக் கிடந்தது விதவை அவள் வீட்டினெதிரே அழுதுகொண்டிருந்தாள் திருடப்பட்ட தன் சேமிப்பினையெண்ணியார் ராசிகெட்டவர்! யார் தரித்திரம் பிடித்தவர்?- சே.ராஜப்ரியன்...
இன்னொரு பொட்டலம் கொடுங்கள் அவனுக்கு

இன்னொரு பொட்டலம் கொடுங்கள் அவனுக்கு

கவிதை, படைப்புகள்
தலைவனின் சின்ன வீட்டிற்கு பிறந்த பெரிய பையனின் பிறந்தநாள் ஊரெல்லாம் கொடி, பட்டாசு, தோரணம் தொண்டர்களின் காசில்அவன் வீட்டின் அடுப்பில் பூனை தூங்குகிறது தலைவர் வரும்பொழுது எதுவும் குறுக்கே வரக்கூடாது அதனால் இந்த பூனைப்படைசுவரொட்டிதனில் அவனைப்பார்த்து சிரிக்கிறார் விரைவில் உனக்கு வேலை வாங்கித்தருகிறேன் என பணத்தை வாங்கும்பொழுது சிரித்த அதேதங்கப்பல்லுடன்மேலே கையை தூக்கி காட்டும்பொழுதெல்லாம் நானிருக்கிறேன், உதவிசெய்கிறேன் உங்களுடன் நான் என பேசுவார் இப்பொழுதுதான் புரிகிறது எப்பொழுதுமே எனக்கு கீழேதான் நீங்கள் உங்களுக்கு மேலேதான் நானென்பதை அப்படிச்சொன்னாரெனஇன்னும் சில கொண்டாட்டங்கள் இன்றிரவாம் கூட்டத்தில் மிதிபட்டுக்கொண்டே வாங்கவிருக்கும் அந்த உணவுப்பொட்டலத்திற்காக காத்துக்கொண்டிருகிறான் இன்னுமவன் ...ஒருவனின் பிறந்தநாள் எத்தனை உயிர்களின் இற...
யாசகம்

யாசகம்

கவிதை, படைப்புகள்
பயணசீட்டு வாங்குவதற்கு மட்டுமிருக்கிறது என்னிடத்தில் கூட்டத்திடம் கையேந்திக் கும்பிடு வருபவருக்கு எப்படித் தெரியும் என்நிலைமைசில்லறை போட்டவரெல்லாம் என்னை இப்படிப் பார்ப்பது என்ன நியாயம்?- சே.ராஜப்ரியன்
இன்னுமின்னும்

இன்னுமின்னும்

கவிதை, படைப்புகள்
மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்நாட்டின் எல்லையில் நடந்த துப்பாக்கிசூடுதலைநகரில் குண்டு வைத்து தகர்ப்புதற்கொலைப்படை தலைவர் தப்பியோட்டம்தலைவரின் தலைமகன் நாளை வருகைதிருவல்லிகேணியில் நேற்றிரவு திருட்டுவானூர்திநிலையத்தில் பிடிபட்டனர் போதைப்பொருள் கடத்தல்கள்ளக்காதலனுடன் கைது கணவன் கொலைவழக்கில்வன்கலவி சிறுமியிடம் வாலிபர் கைது விசாரணை நடந்துவருகிறதுகையூட்டு வாங்கிய அரசு ஊழியர் கையும் களவுமாக பிடிபட்டார்இருவேறு சாலை விபத்தில் இரண்டுபேர் உயிரிழந்தனர் கவலைக்கிடமாக ஏழுபேர் மருத்துவமனையில்பிரபல அரசியல்வாதி கொலைவழக்கில் இன்று பிணையம் பெற்றார்வரி ஏய்ப்பு லட்சகணக்கில் தொழிலதிபர் செய்த மோசடி அம்பலம்நடிகையின் விவாகரத்து வழக்கு புது நாயகனுடன் இன்று நேரில் வந்தார்நாடாளுமன்றத்தில் அவை ஒத்...
ம-ர-ண-ம்

ம-ர-ண-ம்

கவிதை, படைப்புகள்
நிற்குமிடத்திலிருந்தே தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு பிறருக்கு தந்துகொண்டும் எத்தனை உயிர்கள் வாழ்ந்துகொண்டிருந்தது அதன் உடம்பில்இதுவரையில் வாழ்வளித்துவந்தது வந்த புயலையெல்லாம் புறம் தள்ளி இன்று நெடுஞ்சாலைத்துறை நெடுகக்கிடத்தி வைத்திருக்கிறது துண்டு துண்டுகளாய்- சே.ராஜப்ரியன்...
காலத்தின் மழையில் நனைகிறோம்

காலத்தின் மழையில் நனைகிறோம்

கவிதை, படைப்புகள்
கொட்டும் மழையில் குளிரும் நிலையில் இரவு பிறந்து பகல் மரிக்கும் வேளையில் தான் நிற்கும் இடத்திலிருந்து எதிர்த்திசையில் வந்துகொண்டு இருக்கும் ஒவ்வொரு பேருந்தாய் பார்த்துக்கொண்டே எவ்வளவு நேரம் கழித்தாரோ தெரியவில்லை ...... !கையைக் காட்டி நிறுத்தினாலும் தன்னுடன் காத்திருந்தோர் வேகமாக ஓடி ஏறிக்கொண்டதும் அவரை மட்டும் தனிமைப்படுத்தி விட்டு சென்றுகொண்டே இருக்கின்றார்கள் அதுவும் ஏனோ ?அவர் ஏறி இறங்க நேரம் அதிகமாகும் என்பதுதானே உங்கள் கவலை உங்களுக்கும் இது பிரதிபலிக்கும் பின்னொருநாளில் ஓய்வூத்தியத்தைப் பெற நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கும்பொழுதுநீயும் பேருந்திற்கு காத்துக்கொண்டிருக்கும் பொழுதுநடக்கமுடியாமல் நாற்காலியில் நாட்களை நகர்த்தும் பொழுதுவீட்டில் வெந்நீர் கேட்டு பல நிமிடங்கள் கழித்துக் கிடைக்கும்பொழுது கழிவறைக்கு செல்ல பிறரி...
நானும் என் நிராசையும்

நானும் என் நிராசையும்

கவிதை, படைப்புகள்
ஊத ஊதப் பெரிதாகிக் கொண்டே போனது ஒரு அளவுக்கு மேல் வெடித்து முடித்து விடை கொடுத்தது என் ஆசைக்குஇன்னுமொரு ஆசை ஊதி பெரிதாக்கிய அதில் மிகச்சிறிய ஊசியின் முனையை உரசினால் எப்படி இருக்கும் என்றுஅதுபோலத்தான் நான் வளர்த்து வைத்திருக்கும் ஆசைகளை சிறு சொல் கொண்டு கொன்று விடுகிறார்கள் யார் யாரோ- சே.ராஜப்ரியன்...
சன்யாசம் கூறாமல் கொள்

சன்யாசம் கூறாமல் கொள்

கதை, படைப்புகள்
"உங்களுக்கும் க்ளைன்ட்டுக்கும் நடுவில் மாட்டிக்கிட்டு இப்படி உயிர விடுறதுக்கு.. பேசாம சாமியாரா போயிடலாம்."கோபத்திலும் சற்று நிதானமாக உதிர்ந்த வார்த்தைகள். ஒரே நாளில் வெவ்வேறு தருணங்களில் மூன்று முறை சாமியார் ஆவதைப் பற்றி ராம்சரண் கூறி விட்டார். அதன் பிறகு அலுவலகத்தில் ஒரு வித மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தனர். அவர் கடந்தவுடன் அவரைப் பற்றி குசுகுசுவெனப் பேசிக் கொண்டனர். எப்பொழுதையும் விட இவருக்கு கீழ் இருப்பவர்கள் நன்றாக வேலை செய்தது போலிருந்தது.நாற்பதுகளை கடந்தும் நல்ல திடகத்திரமான உருவம். எப்பொழுதும் ஒரு புன்னகையை வலுக்கட்டாயமாக முகத்திலே வைத்துக் கொண்டு, கலகலப்பாக வலம் வருவார். ஐந்துமுறை பணி நிமித்தமாக வெளிநாடுகள் எல்லாம் சென்று வந்திருந்தார். அவர் சாமியாராகப் போவதாகக் கூறியதும்..  அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.அவரிடம் யாரும் அதைப் பற்றி நேரிலும் கேட்கவில்லை...
ரசிகன் நான்

ரசிகன் நான்

கவிதை, படைப்புகள்
ஏ தமிழ் சினிமாவே! எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் என்று நீ அறிவாயா?கருப்பு வெள்ளை காலத்திலேயே காண்பவர்களின் கனவுகள் உன்னால் வண்ணம் பெற்றன.இன்று நீயோ வண்ண பெண்ணாய் கனவு தேவதையாய் புவனத்தை பவனி வருகிறாய்.ஆனால் உனது ஆதாரங்கள் அக்கரை சீமையில் இருந்து இறக்குமதி ஆகிறது.ஏன் உனக்கு இந்த அவல நிலை?கதைக்கு நாயகி தேடும் காலம் போய் கவர்ச்சிக்காக நாயகி என்ற இழிவு ஏன் இங்கு என்று உன்னிடம் தொற்றியது?கற்பனைகள் கோடி கொட்டிக் கிடந்தாலும் இங்கே உனக்கு வியாபரம்தான் பிரதானம்.எண்ணற்றவர்களுக்கு வாழ்வு அளிக்கிறாய். எனினும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நீ சுத்திச் சுத்தி வருவதேன்?புரட்சி புரியும் நாயகன் மன்னர் மகளாய் நாயகி சூழ்ச்சி புரியும் வில்லன் இதொருகாலம்.நல்லவன் நாயகன் காதல் நாயகி ரவுடி வில்லன் இதொரு காலம்.ரவுடி நாயகன் காதல் நா...
கூண்டுக்குள் நம்சுதந்திரம்

கூண்டுக்குள் நம்சுதந்திரம்

கவிதை, படைப்புகள்
பூகம்பம், புயல், சுனாமி வந்தால்தான் நமக்குள்ளே தேசிய ஒருமைப்பாடு அப்பொழுதான் அனைவரும் ஒன்றுபடுவோம்...... பரவாயில்லை அடிக்கடி இவைகள் வரட்டும் அந்த சில காலமாவது ஒற்றுமையாய் இருப்போம் .....!நிவாரண நிதியிலும் நித்தம் நித்தம் சீர்கேடு ....!62 ஆண்டுகள் ஆகின்றது ஆயினும் குண்டு துளைக்காத பாதுகாப்புகுள் நம் சுதந்திர உரை ......! சுதந்திரம் இப்பொழுது சுத்தமாக சுற்றாத இயந்திரம் ....!மகாத்மா சொன்னார் எப்பொழுது ஒரு பெண் இரவில் தனியாக பயமில்லாமல் நடமாட முடிகிறதோ அதுதான் உண்மையான சுதந்திரம் என்று .....!இன்று நிலைமை அதைவிட மோசம் இப்பொழுது பகலில் கூட பெண்கள் சுதந்திரமாய் வெளியே வரமுடிவதில்லை பர்தா போடாமல் வெளியே வந்தால் ஆசிட் அபிஷேகம் அதுமட்டுமா ?பாலியல் வன்முறை பேருந்து நிறுத்தம், கல்லூரிகளில்,பள்ளிகளில், அலுவலகங்களில்...!மொட்டுக்களுக்கு மோக உணர்வு ஊட...