Shadow

படைப்புகள்

நான் பைத்தியம் ஆன கதை

நான் பைத்தியம் ஆன கதை

கவிதை, படைப்புகள்
சந்தைக்கு போன அண்ணன் சாயங்காலம் வரும்போது சகதியோடு வந்து நின்றான் ஏனிந்த கோலமென்று இடைமறித்து கேட்கையில் இதுதான் கட்சி கொள்கை என்றான்அறுவடைக்கு போன அப்பா அரைநாளில் திரும்பி வந்து திருவோட்டை கையில் தந்தார் சோறு போட்ட நிலமெல்லாம் கூறுபட்டு மனையாச்சி ஓடுதான் மீதமென்றார்அம்மாவின் வளையலை அடகு வைத்த காசில் கல்லூரி போன தம்பி கண்ணிரண்டும் குருடாகி வாசலில் வந்து விழுந்தான் கவர்ந்த நடிகருக்கு கற்பூரம் காட்டும்போது கண்களை சுட்டதென்றான்ஆசைக் கனவுகளை அள்ளி சுமந்தப்படி பள்ளிக் கூடம் போன தங்கை கூடாததை படித்து விட்டு கருகலைக்க காசு கேட்டாள்அப்பாவின் முதுகில் ஆயிரம் சுமையேற கணவன் வீடு போன அக்கா குடிகார புருஷனிடம் விடுதலை வாங்கித் தாவென்றாள்மலையேறி படியேறி மண்ணில் உருண்டு புரண்டு கடுந்தவம் இருந்து பெற்ற பி...
ஒரு காதல் பிரயாணம்

ஒரு காதல் பிரயாணம்

கதை, படைப்புகள்
வெள்ளியன்று இரவு இல்லத்தையடைந்து, பாசம் கலந்த அந்த உணவை  உண்டு,இரண்டு நாட்கள் ஓய்வெடுத்த  பின்னர் மீண்டும் திங்களன்று  காலை  சென்னைக்கு பிரயாணம் செய்ய வேண்டும். சற்றே கடினமான ஒன்று தான் இது.அடுத்த வெள்ளியை நினைவில் கொண்டு இடையில்  வரும்  நான்கு நாட்களை கடத்த வேண்டும்.இப்படி ஒரு ஏக்கத்தோடு நான்கு நாட்கள் (வெள்ளிகிழமை கணக்கில்  வருவதில்லை) பனி புரியும் பலருள் நானும் ஒருவன்.சென்னையிலிருந்து  புறப்படும் பேருந்து சரியாக இயங்கினால் (ஓட்டுனரும் சரியான வேகத்தில் இயக்கினால்) அதிகபட்சம் 3.30 - 3.45 மணி நேரத்தில்  விழுப்புரம்   சென்றடையலாம்.(விழுப்புரத்தில் புறப்படும் பேருந்திற்கும் சென்னையை அடைய இதே நேரம் தான்  தேவை படும் என நான் நம்புகிறேன்).  வழக்கம்போல் அந்த வாரமும் வெள்ளியன்று ...
சுயம்வரம் – 5

சுயம்வரம் – 5

கதை, தொடர், படைப்புகள்
உணவு உண்ட பின் இருவரும் ரிசல்ட் வரும் வரை காத்திருந்தனர்.திடிரென்று ஒரு இடத்தில் அனைவரும் கூட்டமாக செல்ல,அருணும் கூட்டத்துள் புகுந்தான்.வேகமாக ராஜேஷை நோக்கி ஓடிவந்தவன்,"மச்சி.. நீ  செலக்ட் ஆயிட்ட." என்றான்"நீ?""என் தலையில நேஹான்னா தான் எழுதியிருக்கு போல!! சரி விடு. என் கஷ்டம் என்னோட. நீயாவது செல்க்ட் ஆகுடா. உனக்கு சான்ஸ் அதிகமா இருக்கு.""எப்படி சொல்ற?""ஏன்னா.. ரெண்டே பேர் தான்டா ஷார்ட்- லிஸ்ட் ஆகி இருக்காங்க.""நீ சீரியசாவே பேச மாட்டியா?" என்று அவனே தகவல் பலகையை காண சென்றான். அருண் சொன்னது உண்மை என்று அறிந்ததும் அவனால் ஆச்சரியத்தில் இருந்து மீளவே முடியவில்லை."டாய்.. ஃபர்ஸ்ட் ரவுன்டுக்கு ட்ரீட் தந்துட்டு செகன்ட் ரவுன்டுக்கு போறியா அல்லது ரெண்டுக்கும் சேர்த்து அப்புறமா தர்றியா?""டேய்.. நானே டென்ஷன்ல இருக்கேன். இருபது பேர்ல...
சுயம்வரம் – 4

சுயம்வரம் – 4

கதை, படைப்புகள்
வினாத் தாளை திறந்ததும்,தேர்வு அறையில் இருந்த அனைவரும் சிரித்தனர். ராஜேஷ், 'அப்படி என்ன இருக்கு?' என ஆச்சரியமாகி வேகமாக வினாக்களை படித்தான்.1. சிறு வயதில் உங்களுக்கு பிடித்த லாலி பாப்பின் நிறம் என்ன?2. அமெரிக்கா ஏன் இப்படி இருக்கு?3. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை எப்படி நிமிர வைக்கலாம்?4. பெண்களிடம் சொல்லக் கூடாத ரகசியம்?5. ஒருவேளை இந்த தேர்வில் வென்று மணப்பெண்ணை பிடிக்கவில்லை எனில்?'அடப்பாவிங்களா.. என்ன இது உலக மகா மொக்கையா இருக்கே!!' என ராஜேஷும் சிரித்தான். அப்பொழுது அந்த அறையே அதிருவது போல ஒருவன் வினாத் தாளை வீசி எறிந்து,"வாட் தி ஹெல் இஸ் திஸ்? டோட்டல் ஹம்பக்!! டூ யூ திங்க் வீ  ஹேவ் நோ ஜாப்!! ரிடிகுலஸ். நான்சென்ஸ். ஐ ரைஸ் எ கொஸ்டின்.. கூ கேவ் யூ பெர்மிஷன் டூ ப்ளே வித் மை ப்ரிசீயஸ் டைம்" என்று ஆங்கிலத்திலே கத்தோ கத்...
சுயம்வரம் – 3

சுயம்வரம் – 3

கதை, தொடர், படைப்புகள்
முதல் பகுதி.. இரண்டாம் பகுதி.. ராஜேஷ் ஈ மெயில் அனுப்பி இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. அலுவலகத்தில் வேளை பளு அதிகம் இருந்தது அவனுக்கு. பணி முடித்து வீடு திரும்பும் முன் அலுவலக நண்பர்களுடன் அருகே இருந்த 'கஃபே டே(cafe day)' போனான் ராஜேஷ். அன்றைய வேலை பளுவின் அலுப்பு மிகுதியாக இருந்தது.தேனீர் அருந்திக் கொண்டே  ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவனது நண்பன் அருண், "உனக்கு வர போற பொண்ணு, பார்க்க எப்படி இருக்கணும்னு எதிர்பாக்குற?" என்றான் ராஜேஷிடம். "ரொம்ப சிம்பிள். பார்த்த உடனே 'ஷீ இஸ் லுக்கிங் ப்யூட்டிஃபுல்' அப்படின்னு சொல்ல தோனனும், 'ஷீ இஸ் சோ ஹாட்' ன்னு சொல்ற மாதிரி இருக்க கூடாது" என்றான் ராஜேஷ்."அப்போ என் ஆளு நேஹா பார்க்க எப்படி இருக்கா?" என்று அருண் கேட்க, "வேணாம் டா சொன்னா உனக்கு கஷ்டமா இருக்கும்" என்று சொல்லி வீட்டுக்கு செல்ல தொடங்கி...
காதல் தூதன்

காதல் தூதன்

கதை, தொடர், படைப்புகள்
மாலை நேரம், சில்லென்று வீசும்  தென்றலை ரசித்தப்படி பூங்காவினுள்   நுழைந்தேன். வாயிலில் படர்ந்திருந்த  கொடிகள் புன்னகைத்தவாறே  வரவேற்றன. மழையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த மயில் அப்பொழுது  தான் தன் மீது விழும் தூறல்களை உணரத் தொடங்கியது போலும். மெல்ல தன் தோகையை விரிக்க ஆரம்பித்தது.நான் அருகிலிருந்த  புல் தரையில் அமர்ந்துக் கொண்டு ஒரு நொடி கண்களை மூடினேன்.குழந்தையை  பாசத்துடன்  தனது  மடியில்  தாங்கிக்கொள்ளும் அன்னையை   போல், இயற்கை அன்னை  அவள்  மடியில் என்னை தாங்கிக்  கொண்டிருப்பதை உணர்தேன். சுகமான  நொடிகள் அவை.கண் திறந்து சுற்றும்  முற்றும்  பார்த்த போது ,அருகே &nb...
சுயம்வரம் – 2

சுயம்வரம் – 2

கதை, தொடர், படைப்புகள்
"அவன் எங்க சாப்பிட்டானா??" என்று தன் மனைவியிடம் கேட்டார் பத்மநாபன்."வீட்டுக்கு வந்ததுல இருந்து அந்த பொட்டிய வச்சிக்கிட்டு என்னமோ பண்ணிட்டு இருக்கான்" என்றார் அவன் தாய்.மடி கணினிக்கு ராஜேஷின் தாய் வைத்த பெயர் "பொட்டி".ராஜேஷின் அறைக்கு சென்றவர், "என்ன ஆபீஸ் வேலையா??"  என்று கேட்டார்.அசடு வழிந்துகொண்டே, "அந்த பொண்ணுக்கு அனுப்ப என்னுடைய தகவல்கள் அனைத்தையும் தயார் படுத்திகிட்டு இருக்கேன்" என்றான். "அட.. உனக்கு கூட பொறுப்பு வந்துடுச்சு போல!! சரி.. சரி.. காட்டு பார்ப்போம்" என்று அதனை பார்க்க தொடங்கியவர்,"டேய்.. ராஜேஷ்  என்னடா இதெல்லாம். நீ எந்தெந்த கம்பெனில எத்தன வருஷம் வேலை பார்த்த என்ன கிழிச்சன்னு யாரு கேட்டா ??" என்றார் கடுப்பாக."அவ தான் ஈ மெயில் அனுப்ப சொல்லி இருக்காளே!!" என்றான் ராஜேஷ்... "அதுக்காக ஏதோ வேலைக்கு அப்ளை பண்ற மாதி...
சுயம்வரம் – 1

சுயம்வரம் – 1

கதை, தொடர், படைப்புகள்
வழக்கம் போல் அன்று காலை "The Hindu" நியூஸ் பேப்பர் படித்துகொண்டிருந்தார் பத்மநாபன்.திடிரென்று பலமாக சிரிக்க தொடங்கியவர், தன் மகனிடம்,"டேய் ராஜேஷ் நீ இன்டெர்வியுக்கு ரெடியாக வேண்டிய நேரம் வந்துடுச்சி  டா " என்றார்."இன்டெர்வியூவா?? என்னப்பா சொல்லுறீங்க??  இப்போ நான் இருக்கும் கம்பெனிநல்லா தானே இருக்கு, நான் ஏன் வேற கம்பெனி மாறனும்" என்றான் குழப்பத்துடன்.ஹா ஹா சரி இதை பாரு என்று செய்தித்தாளை அவனிடம் நீட்டினார்.அதில் கீழ்கண்டவாறு ஒரு விளம்பரம் கொடுக்கபட்டிருந்தது.26 yrs old gal working as a HR in a MNC looking for a bridegroomInterested candidates can forward their details to crazy....gal@gmail.com   Shortlisted profiles will be called up for selection procedure which comprises of following rounds 1. Written test 2. Group Discussion   Can...
பூக்காரி

பூக்காரி

கதை, படைப்புகள்
"பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம்..""ஆமாங்க""தர்ம சம்ஸ்தா பனார்த்தாய சம்பவாமி யுகே!! யுகே!!""சரி தானுங்க.""என்ன சரி?""நீங்க சொல்றதுங்க.""நான் சொன்னதுக்கு அர்த்தம் தெரியுமா?""தெரியாதுங்க.""அப்புறம் ஏன் சரின்னு சொன்னே!!""நீங்க எது சொன்னாலும் சரியா தான் இருக்குமுங்க.""இது தான் நம்மகிட்ட இருக்கிற தவறான போக்கு. எதையும் கேள்வி கேட்கனும். எதுவா இருந்தாலும் தீர விசாரிக்கனும். அப்ப தான் நமக்கு நிறைய தெரிய வரும். இனிமே நீ கேள்வி நிறைய கேட்கனும் புரியுதா?""கேட்கிறேனுங்க. நீங்க சொன்னதுக்கு என்னங்க அர்த்தம்?""அதுக்கு முன்னாடி உங்கிட்ட ஒரு கேள்வி.. தவறுகள் எங்க ஆரம்பிக்குது?""வயித்துல தான் சாமி. பசியில தான் எல்லாம் ஆரம்பிக்குதுங்க.""உன்னால அப்படி தான் யோசிக்க முடியும். ஆனா உண்ம அது இல்ல. சொத்து இருக்கிறவன் சொத்து இல்லாதவன் மேல் பண்ற வன்முற...
காதல் செய்வீர்!!

காதல் செய்வீர்!!

கவிதை, படைப்புகள்
அன்பு என்பார் காதல் என்பார் ஆனந்தம் கொண்டே உவகை உறுவார் - பின் அல்லல் என்பார் கவலை என்பார் ஆத்திரம் கொண்டே அழுது தீர்ப்பார்.கனவு என்பார் கவிதை என்பார் கடல் நீரும் இனிக்குது என்பார் - பின் காயம் என்பார் கசக்குது என்பார் கடுப்பில் நொந்து வலிக்குது என்பார்.காம இச்சையில் கண்களும் இழப்பார் கண்டதும் வந்ததோ காதலே என்பார் - சிறிதும் தன்னை அறியவோ முயற்சியும் பேணார் தவறில் உழன்றேதம் கொள்கையும் மறப்பார்.மையலில் மயங்கி நெஞ்சம் மகிழ்வார் மன்மத எண்ணமே உன்னதம் என்பார் - பின் ஓர்வழிக் காதலில் விழுந்து புரண்டு வையம் பொய்யென வருந்திப் புலம்புவார்.அழுது தீர்க்காமல், கொள்கை மறக்காமல் வருந்தி புலம்பாமல், நொந்து வேகாமல் - உலகம் அன்புமயமாய் மலரவே காதல் செய்வீர் அனைத்து உயிரினையும் காதல் செய்வீர்.- தினேஷ் ராம்...
கவிதை

கவிதை

கவிதை, படைப்புகள்
உன்னால் என்னை எழுதுகிறேன் என்னால் உன்னை வாசிப்பாயா "காதல்"உனக்குத் தெரியாது உன்னுடம்பில் இன்னொரு உயிராய் நானிருக்கிறேன் பாரம் தாங்கமாட்டாய் என்பதற்காக உருவமற்று உன்னோடு மட்டுமே வசிக்கும் 'உன் நான்'- சே.ராஜப்ரியன்
இயல்பிழந்த நிலை

இயல்பிழந்த நிலை

கவிதை, படைப்புகள்
இயல்பிழந்த நிலையில் இருக்கிறேன் உன்னோடு என்னை சேர்த்த காதலால்இயல்பிழந்த நிலையில் இருக்கிறேன் நடிக்க வேண்டிதானிருக்கிறது அம்மாவின் பாசத்திலிருந்து நண்பர்களின் ஆறுதலிருந்து மற்றவர்களின் அனுதாபத்திலிருந்து அவளின் ஏளன பார்வையிலிருந்து மறைவாய் அழுதுதீர்த்த கண்ணீரிலிருந்து நம்பிக்கை துரோகிகளின் போலிசிரிப்பிலிருந்து ஊருக்கு பேசிவிட்டு உண்மையில் நடக்காத உபதேசவான்களின் அறிவுரையிலிருந்து தப்பிக்கஎப்பொழுதும் போலவே சிரிக்கிறேன் பேசுகிறேன் எல்லாமும் செய்கிறேன் கண்களை வற்ற செய்து- சே.ராஜப்ரியன்...
என் கொலை

என் கொலை

கவிதை, படைப்புகள்
என்னை நானே கொலை செய்கிறேன் என்னை விரும்பாதவளை நான் நேசிப்பதால்தற்கொலை யாகாது படிமுறைகள் பலவுண்டு இந்த என்கொலைக்குஆகவேதான் இப்பொழுதும் அவள் மட்டும் கற்பனையில் அருகாமையில் இருக்கிறாள் சாட்சியாக குற்றவாளி யார் எனச்சொல்ல- சே.ராஜப்ரியன்
சாப்பாட்டுக்கடையில் ஷேக்ஸ்பியர்கள்

சாப்பாட்டுக்கடையில் ஷேக்ஸ்பியர்கள்

கவிதை, படைப்புகள்
டிக்காஷன் ஊற்றாத தேநீர் கோப்பையும் மணக்குது கறுத்துப்போன காபிக் கொட்டைகளும் இனிக்குது சர்க்கரை கட்டியே கொஞ்சம் என்னிடம் பேச்சு சூப்பர் வைசர் வயிறு எரியட்டும் அதில் பால் காய்ச்சுவோம்வெண்டைக்காய் பச்சடியில் ஒழிந்திருக்கும் வெங்காயம் போல சுண்டைக்காய் கிச்சடியில் கலந்திருக்கும் வெந்தயம் போல வாழக்காய் பொறியலில் வெந்திருக்கும் கடலைப் போல வாழ்வோம் சைடிஷ்ஷிக்கு நான் கேரண்டிமைதாவின் வழுவழுப்பில் அடுப்புக்கல்லின் கதகதப்பின் ஆயிரம் பரோட்டாக்கள் குருமாவுக்காக பிறந்திருக்கலாம் ஆனால் இந்த ப்ரோட்ட மாஸ்டர் உனக்காக பிறந்தவன்அரிசி மாவில் கலந்த வெள்ளை உளுந்தே சாம்பாரில் விழுந்த கொத்த மல்லிக் கொழுந்தே எண்ணெய்யில் பொறிந்த துவரம் பருப்பே என்னையும் பொறித்ததடி உந்தன் சிரிப்பேபஞ்சாப் கோதுமையும் பண்ரொட்டி நெய்யும் சேர்ந்து செஞ்சது இந்த மைசூர் பாக்கு ருசித்துப்பாரடி என் பர்மா த...
அலை பேசிக்கவிதைகள்

அலை பேசிக்கவிதைகள்

கவிதை, படைப்புகள்
நீ அனுப்பிய குறுஞ்செய்தியெல்லாம் சேமித்து வைக்கப்படுகிறது என்குட்டி அலைபேசியில்நீ கடைசியாக பேசிய வார்த்தை இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது என் காதினுள்எவ்வளவு வெப்பம் நாமிருவரும் பேசுவதால் செல்லமாய் சுடுகிறது உன் கோவத்தைப்போலமுத்தம் கொடுத்தே நம்முடைய கைபேசி கரைந்துபோகிறதுநான் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் நீ கூப்பிடும்பொழுது மட்டும் அழைகிறதென்னை உனக்கு பிடித்த பாடலுடன்இரவுகள் நீளக்கூடாதா இப்படி சீக்கிரம் முடிந்துபோகிறதே நம் பேச்சைக்கேட்டு பொறாமையில் தேய்கிறது இருட்டென்னும் இரவுநிலாவை பார்த்துக்கொண்டே உன்னுடன் பேசுவது நீரினுளிருந்து கொண்டே பனிக்கட்டி கரைப்பதுபோல்நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு உன்னுடன் பேசுகிறேன் உன் வார்த்தைப்போலவே எல்லாம் மின்னுகிறது அழகாய் சிரிக்கிறது என்னைப் பார்த்துஎன் கண்களில் இப்பொழுது உன் வார்த்த...