
நான் பைத்தியம் ஆன கதை
சந்தைக்கு போன
அண்ணன்
சாயங்காலம் வரும்போது
சகதியோடு
வந்து நின்றான்
ஏனிந்த கோலமென்று
இடைமறித்து கேட்கையில்
இதுதான்
கட்சி கொள்கை என்றான்அறுவடைக்கு
போன அப்பா
அரைநாளில்
திரும்பி வந்து
திருவோட்டை கையில் தந்தார்
சோறு போட்ட
நிலமெல்லாம்
கூறுபட்டு மனையாச்சி
ஓடுதான்
மீதமென்றார்அம்மாவின்
வளையலை
அடகு வைத்த காசில்
கல்லூரி போன தம்பி
கண்ணிரண்டும்
குருடாகி
வாசலில் வந்து
விழுந்தான்
கவர்ந்த நடிகருக்கு
கற்பூரம் காட்டும்போது
கண்களை
சுட்டதென்றான்ஆசைக் கனவுகளை
அள்ளி சுமந்தப்படி
பள்ளிக் கூடம்
போன தங்கை
கூடாததை
படித்து விட்டு
கருகலைக்க காசு கேட்டாள்அப்பாவின்
முதுகில்
ஆயிரம் சுமையேற
கணவன்
வீடு
போன அக்கா
குடிகார புருஷனிடம்
விடுதலை
வாங்கித் தாவென்றாள்மலையேறி படியேறி
மண்ணில்
உருண்டு புரண்டு
கடுந்தவம்
இருந்து பெற்ற பி...















