32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

படைப்புகள்

115 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 7 / 8
செய்திகள் வரிசை (பக்கம் 7)
தீராத பசி கவிதை

தீராத பசி

நட்சத்திர உணவகத்தில் மிடுக்காக அமர்ந்து மெதுவாக சாப்பிட்டேன் அக்கம் பக்கம் உள்ளவர்களைப் பார்த்து நானும் அந்தஸ்து காரணமாக கொள்ள இடமிருந்தும் மீதி வைத்தேன் எதற்கென்று தெரியவில்லை அப்படித்தான் செய்கிறார்கள் அங்கு வந்த அனைவரும் என் எதிரிலேயே வேண்டுமென்றே நான் வைத்த மிச்சமுள்ள தட்டு அசுத்தமடைந்ததினால் சுத்தம் செய்ய எடுத்து செல்லப்படுகிறது மற்றவர்களின் பாத்திரத்துடன் கழுவப்பட்டு மறுபடியும் வரும் உணவேந்தி என் போன்றவர்களுக்காக டிப்ஸ் கொடுத்ததற்காக நன்றி ஒன்று கிடைத்தது என்னை விட வயதில் மூத்தவரும் ஏனோ அண்ணனென […]

08/02/2010 Dinesh R
சூழ்நிலைக் கைதிகள் கதை

சூழ்நிலைக் கைதிகள்

பொழுது சாய்ந்திருந்தது…அர்ச்சனாவிற்கு சுஜா ஞாபகமாகவே இருந்தது…பள்ளி விட்டு கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆகி விட்டது….வீட்டில் தனியாக என்ன செய்கிறாளோ என்று யோசனையாகவே இருந்தது…பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டாள் அர்ச்சனா .. “சுஜா குட்டி என்ன பண்றீங்க “ “வீடியோ கேம் ஆடுறேன் மம்மி “ “ஹோம் வொர்க் பண்ணீங்களா?” “பண்ணிட்டேன் மம்மி.பசிக்குது.பிஸ்கட் தீந்துடுச்சு “ “அம்மா பேக்ல கேக் இருக்கு …சாப்பிடுங்க ..அதுக்குள்ள மம்மி டிபன் ரெடி பண்ணிடுறேன் என்ன ?” “ஓகே மம்மி “ […]

05/02/2010 Dinesh R
இசை கதை

இசை

நானும் அவளும் எப்பொழுதுமே ஒன்றாகத்தான் விளையாடுவோம் எங்களுக்குள் ஆண் பெண் பேதமெல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நானும் அவளும் உள்ளாடைகளுடன் பலதடவை எங்கள் ஊர் மோட்டர் பாம்பு தண்ணீர் இறைக்க, ஒரே தொட்டியில் குளிப்போம். யார் அதிக நேரம் நீரில் மூச்சடக்கி மூழ்கி இருக்கிறார்கள் என பந்தயம் அவ்வப்பொழுது நடேந்தேரும். அதில் பலமுறை ஜெயிப்பது நான்தான் ஆனால் உண்மையில் ஜெயிப்பது அவள்தான். நான் நீரில் மூழ்கியுடன் உடனே வெளியே தலையை நீட்டி கொஞ்சநேரம் கழித்து நான் மீண்டும் […]

29/01/2010 Dinesh R
கடிவாள மனசு கதை

கடிவாள மனசு

“பதினோராம் வகுப்புக்கு போறேன் .சுப்புலாபுரத்து பள்ளிகொடத்லதான் பதினொனாப்பு இருக்கு …அதுக்கு ஐநூறு ரூவா வேணும்” …. மிகுந்த பயத்துடனும் பணம் கிடைக்குமா என்ற ஐயத்துடனும் பணம் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்துடனும் தன் தந்தை வேலுச்சாமியிடம் பேசினான் கோவாலு…. “ஐநூறு ரூவா வேணும்னு பொசுக்குனு கேட்டா எப்பிடி கொடுக்க…நான் என்ன பணத்த கக்கத்துல வச்சுக்கிட்டு அலஞ்சுகிட்டா இருக்கேன்”, என்றான் வேலுச்சாமி… அவன் அப்போதைய கவலை தன்னை நம்பி இருக்கும் ஆறு உசிர்களுக்கு மூணு வேளையும் அர வயித்து […]

26/01/2010 Dinesh R
சட்டாம்பிள்ளை கதை

சட்டாம்பிள்ளை

“ச்சே.. எத்தன தடவ சொன்னாலும் இந்த அம்மாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை.” வெள்ளைச் சட்டையை நீலமாக்கி விடுவதால் உடன் படிக்கும் மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாக நேருகிறது. ‘கான்வென்ட்ல படிக்கிற தொர வர்றான் பாருங்கடா.’ அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை கான்வென்ட்ல படிக்கிற பசங்கள் எல்லாம் ஒன்றுக்கும் லாயக்கற்றவர்கள். குண்டு அடிப்பது, வயலில் நண்டு பிடிப்பது, ஆலமர விழுதுகளில் தலைக்கீழாக தொங்குவது, பள்ளிக்கு வரும் வழியில் இருக்கும் மாந்தோப்பில் திருட்டு மாங்காய்களை பறிப்பது போன்ற […]

26/01/2010 Dinesh R
வெள்ளை மனசு கதை

வெள்ளை மனசு

மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த விக்னேஷ், தான் கொண்டுவந்த இரு சக்கர வாகனத்தை கூட மறந்து, நடந்தே வீட்டை சென்றடைந்தான் .. வழியில் யாரையும் நிமிர்ந்து பார்க்கவுமில்லை,பேசவுமில்லை.. வீட்டினுள் நுழைந்தவன் நேராக சென்று ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.. ஏதோ யோசித்துக்கொண்டிருந்தவன் ஒரு முடிவுக்கு வந்தான். அம்மாவின் அருகில் சென்றான், “எனக்கு கேன்சர் இருக்குன்னு டாக்டர் மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்து சொன்னாரு. அதுவும் இப்போ குணப்படுதுற நிலையில இல்லை. முத்திபோயிடுசாம்.. இன்னும் அதிகபட்சம் 3 மாசம் ” என்றான்… […]

22/01/2010 Dinesh R
இது வேற மாதிரி கதை

இது வேற மாதிரி

எல்லோர் கண்களும் அவர்கள் மேலயே இருந்தது. ஒன்றாய் வந்திருந்தார்கள். பின்னால் அமர்ந்திருந்த நானும் அவர்கள் வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஒருவரை ஒருவர் ஒட்டி உரசாமல் காற்று நுழையும் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள். அந்த பெண் தலையில் துப்பட்டா சுற்றப்பட வில்லை. இடைவெளியில் மட்டும் இரண்டு வார்த்தைகள் மற்றும் ஒரு புன்னகையினை பகிர்ந்துக் கொண்டார்கள். நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாதி கூட புரிந்து விடும் போலிருந்தது. இவர்கள் கதை […]

21/01/2010 Dinesh R
கள்ளநோட்டு கவிதை

கள்ளநோட்டு

சூரியன் வரும் முன்பே சுருக்காகப் புறப்பட்டு அவிழ்த்துப்போட்ட அனைத்தையும் அவசரமாக அள்ளி போட்டுக்கொண்டே பொத்தானை மாற்றி மாற்றிப் பூட்டினான் மேலுக்குக் கீழ்.. கீழுக்குக் கீழென.. அடுத்து வேறொரு அறையில் மீண்டும் மற்றொன்றுடன் படுக்கையில் நான், விடுதியில் நுழைந்த காவல்காரர் கைதுசெய்தார் என்னைமட்டும் அன்று என்னுடன் இருந்ததை மறந்து, விட்டுவிடுகிறேன் “எனக்கு வேண்டியதை கொடு”வென சரியாகக் கேட்டார். சலித்துக்கொண்டே நேற்றிரவு வந்ததை இன்றிரவு பிடித்துவிடலாமென கொடுத்தால்.. ” இந்த வேலை என்றிலிருந்தென?” ஏதுமறியாத என்னை அறைந்தார். எந்த வேலையென […]

14/01/2010 Dinesh R
என்ன மரியாதை! என்ன மரியாதை? கதை

என்ன மரியாதை! என்ன மரியாதை?

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.. உண்மையாக என்னுடன் படித்த, நண்பன் பாபுவை புண்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை.. உலக நாயகனே இவரோட அழகை பார்த்து வாயை பொலந்து நிற்பார்.இவரு எதிர்ல நடந்து வந்தா அரவிந்த் சுவாமி கூட எங்கையாவது போய் மறைஞ்சி நின்னுபார். இப்படி இன்னும் நெறைய சொல்லிட்டே போகலாம்,அப்படி ஒரு அழகு நம்ம பாபுக்கு.. பாபுவுடன் இருக்கும் நண்பர்களும், அவனைவிட அறிவில் குறைந்து விளங்குவதால்,அவன் தான் உலக மகா புத்திசாலி என்ற ஒரு எண்ணம் […]

13/01/2010 Dinesh R
ஒத்துக்குறேன் நீ திறமைசாலி தான் கதை

ஒத்துக்குறேன் நீ திறமைசாலி தான்

இந்திய நாட்டில், இருசக்கர வாகனம் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய  நிறுவனத்தின் முதலாளி திரு.ராஜசேகர்.   வழக்கம் போல் தனது இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு தனது காரில் சென்றுகொண்டிருந்தவர்,வழியில் தனது நிறுவனத்தை சேர்ந்த ஒரு இருசக்கர வாகனத்தின் விளம்பர பலகையை பார்த்தார்.   பார்த்ததும்,அவர் முகத்தில்  மகிழ்ச்சி பரவியது. மக்களை கவரும் வண்ணம் அந்த விளம்பர பலகை அமைந்ததே அதற்கான காரணம்.   இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அலுவலகம் செல்லும்பொழுது,அந்த இடத்தில் அதே வாகனத்திற்கு வேறு ஒரு வித்யாசமான […]

12/01/2010 Dinesh R
சூ.. தேசி கவிதை

சூ.. தேசி

ஒலிவாங்கியில் உரக்கப் பேசினார் கூட்டத்தை நோக்கி அந்நியப் பொருட்களை நாம் வெறுப்போம் நம் நாட்டுப் பொருட்களை மதிப்போம் முடித்தவுடன் குளிர்பானம் அருந்தினார் “கூலிங் கம்மியாயிருக்கு பெப்சி குடுங்க எனக் கேட்டார் கொக்க கோலாவைக் கொடுத்தபடி” – சே.ராஜப்ரியன்

11/01/2010 Dinesh R
காவ்ய நட்பு கதை

காவ்ய நட்பு

குப்பன் சுப்பனெல்லாம் தங்களை உயிர் நண்பர்கள் என சொல்லிக் கொள்ளும் காலம் இது. இந்தத் துரித யுகத்தில் பெற்றவர்களையே மறந்து விடுகின்றனர். ஆனால் சில விதி மீறல்கள் எங்கும் அனைத்து காலத்திலும் இருக்க தான் செய்யும். அப்படி ஒரு அதிசயம் தான் காவிய வித்தகர்களான காந்தப்பன்னும், சாந்தப்பன்னும். அவர்களது முதல் சந்திப்பு காற்றில் ஜவ்வுத்தாள் பை பறப்பது போல ஒரு சாதாரன சந்திப்பு தான். ஆனால் மெல்ல அது வரலாறாய் மாறி வருகிறது. அவர்களின் முழு வரலாறை […]

08/01/2010 Dinesh R
ஓர் அழகியின் வரவு கவிதை

ஓர் அழகியின் வரவு

தன்வீட்டு மாடு பெண்கன்று ஈன்றதுக்கு புல்லரித்துப் போனான் மாட்டுக்கு புண்ணாக்கு, தவிடு பொங்கல் வைத்துப் படைத்தான் தன் குலச் சாமிக்கு அவன் மனைவி பெற்ற பெண் குழந்தையை சனியனே என ஏசினான் தரித்திரம் பிடித்தவள் இந்தமுறையும் செலவைப் பெற்றெடுத்தாளென அவளுடைய புண் என்றாறும் மனத்திலும் கத்திக் கிழித்த இடத்திலும்? – சே.ராஜப்ரியன்

05/01/2010 Dinesh R
பயர்த்தனை கவிதை

பயர்த்தனை

குடையுமாம் காக்கி காவாக்கள் – அதனையும் குமையச் செய்யும் மாநரகப் பேரோட்டிகள் பால் ஊத்தும் தண்ணீர் லாரிகள் கிறீச்சிட்டு வழுக்கும் வழுக்கை பணக்கார்கள் மிதிவண்டி பிளவில் சர்க்கஸ் புரியும் பிள்ளைபொதி சுமக்கும் மூனுசக்கர ஆனைகள் விர்ரூமென சீறும் ரெண்டுகால் சாத்தான்கள் நாற்சந்தி கருஞ்சாலை கொண்டவெண் பட்டைமீது நேற்று கடந்தவனின் கறை படிந்த சொச்சங்களின் மீதேறிய சக்கர தடங்களென பச்சொளி கண்டும் ஓசோனைத் துளையிடும் புகைசூழ் வாகண அணிவகுப்பை நோக்குங்கால் நமனை நினையாமல் நடுக்க மின்றி கடக்கும் நாளும் […]

22/12/2009 Dinesh R
மாமனிதர் கவிதை

மாமனிதர்

நாதியற்று நின்றுகொண்டிருக்கும் அவரை யாரும் கண்டுகொள்ளவதில்லை வந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள பிறந்தநாள், நினைவுநாள் தவிர தினமும் நாங்கள் சென்று அன்பை பொழிகிறோம் எச்சங்களாய் இறந்தபிறகும் எங்களை சுமந்துகொண்டு உலகத்தை உயரமான இடத்திலிருந்து பார்த்து புரிந்துகொள்ள சொன்னார் காய்ந்துபோய் அவர்கழுத்தில் கிடக்கும் பூமாலை மூலம் – சே.ராஜப்ரியன்

12/12/2009 Dinesh R