
ஜீ5 வெளியீடாக ஜூலை 18, 2025 இல் வெளியான சட்டமும் நீதியும் தொடரில் நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 15 வருட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இந்தத் தொடர் மூலம் நாயகனாகத் திரும்பியிருக்கிறார் சரவணன்.
அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ், இந்தத் தொடரை இயக்கியிருக்கிறார். “18 கிரியேட்டர்ஸ்” என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் இந்தத் தொடரைத் தயாரித்துள்ளார். உணர்வுப்பூர்வமான கதையுடன், சமூக அக்கறை மிக்க படைப்பாக இந்தத் தொடர் உருவாகியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தத் தொடர், வெளியான மூன்று நாட்களுக்குள் 51 மில்லியன் நிமிடப் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

ZEE5 இன் புதுமையான, தனித்துவமான விளம்பரங்கள், மக்கள் மத்தியில் சீரிஸ் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. மக்களைப் பார்க்கத் தூண்டும் வகையில், ZEE5 ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல் அத்தியாயத்தை இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் சந்தாதரர்கள் அல்லாத அனைவரும் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸின் முதல் அத்தியாயத்தைக் கண்டுகளிக்கலாம்.
சட்டமும் நீதியும் தொடர், ‘குரலற்றவர்களின் குரல்’ எனும் கருத்திலிருந்து உருவாகியுள்ளது. நம்மைச் சுற்றியுள்ள பலர் தங்களது குரலை வெளிப்படுத்த முடியாமல் அமைதியாக இருக்கும்போது, அந்த அமைதியை உடைத்து, தனது உரிமைக்கும் மற்றொருவரின் நலனிற்காகவும் நிற்கும் ஒரு சாதாரண மனிதரின் கதைதான் இது.

