Shadow

SMCA | சென்னையில் பிரம்மாண்ட துர்கா பூஜை கொண்டாட்டம்

மேற்கு வங்காளத்தைப் பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் வசிப்பவர்கள் மிகப் பிரம்மாண்டமான முறையில் துர்கா பூஜையைக் கொண்டாடுகின்றனர்.

The Secret of religion lies not in theories but in practice; To be good and do good – that is the whole of religion.

– Swami Vivekananda

“சுவாமி விவேகானந்தரின் மேற்கோள்களை உண்மையாகவே உள்வாங்கி, இடையிடையே நடக்கும் பண்டிகைகளைத் தவிர, பொது அறக்கட்டளையாகப் பதிவுசெய்யப்பட்ட SMCA (South Madras Cultural Association) சாரிட்டபிள் டிரஸ்டுடன் ஆண்டு முழுவதும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறோம். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அன்னதானம், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவைச் சிறப்பாக வழங்கி வழங்குகிறோம். சமூகத்தின் விளிம்புநிலை மற்றும் தேவைப்படும் மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதில் SMCA எப்போதும் ஈடுபட்டுள்ளது.

SMCA இல் நடைபெறும் “ஷரதோத்சவ் (இலையுதிர்காலத் திருவிழா)”, அனைத்து தரப்பு மக்களையும், கலாச்சாரங்களையும், சமூகங்களையும், மாநிலங்களையும் ஒன்றிணைத்து, நட்பு மற்றும் நல்லெண்ணத்தின் பிணைப்பிற்குள் கொண்டுவருகிறது. இத்திருவிழாவைத் தொடங்கும் போது, ​​சக்தியின் தேவி – துர்கா மாதாவை வணங்கி, எல்லா நாட்களிலும் கோலாட்ட நிகழ்வுகளுடன் பிரம்மாண்டமாய்க் கொண்டாடுகிறோம். அக்டோபர் 9 ஆம் தேதி மாலை கொல்கத்தாவைச் சேர்ந்த பிரபல பாடகி, சாரேகா மா சாம்பியனான அங்கிதா பட்டாசார்யாவின் நிகழ்ச்சியும் நடக்கிறது. அக்டோபர் 12 அன்று மாலை, தொழில்முறை நடனக் கலைஞர்களின் ‘டாண்டியா இரவு’ நடனக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்லா நாட்களும் உணவுத் திருவிழாவும் நடைபெறுகிறது. மனிதநேயத்தையும், நல்லிணக்கத்தைப் பரப்புவதும்தான், இவ்விழாவின் பிரதான நோக்கமாகும். அக்டோபர் 10, 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெறும் இந்த அற்புதமான திருவிழாவில் கலந்துகொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் போக் (பிரசாதம்) வழங்கப்படும். சென்னை ஈசிஆரில் உள்ல கைலாஷ் கன்வென்ஷன் சென்ட்டரில் இவ்விழா நடைபெறுகிறது. அனைவரும் வருக!

விழாவின் ஓர் அம்சமாக, மெழுகுவர்த்தி ஏந்தி, மருத்துவர் அபயாவின் மரணத்திற்கு நீதி கோரும் அறப்போராட்டத்தையும் மேற்கொள்கிறது SMCA.”

– சுதீப் மித்ரா, SMCA President