Shadow

Tag: உப்பு கருவாடு

உப்பு கருவாடு விமர்சனம்

உப்பு கருவாடு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சினிமாவைத் தவிர வேறொன்றினை அறியாத சந்திரனுக்கு, படம் இயக்க காசிமேடு தயாரிப்பாளர் ஒருவர் கிடைக்கிறார். பல சிக்கில்களுக்கு மத்தியில், சந்திரனால் அந்தப் படத்தை இயக்க முடிந்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை. ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான குமரவேல் தான் படத்தின் நாயகன். அவர் பீடி பிடித்துக் கொண்டே முதற்பாதி படத்தில் பட்டும் படாமலும் திரையில் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த படத்துக்கே தான் தான் நாயகனென கருணாகரனை மிக இலகுவாக முந்தி விடுகிறார். மாஞ்சா என்ற அந்தக் கதாபாத்திரத்தின் பலம், அது பிரதிபலிக்கும் சாமானிய முகமே! சாமானியர்களை சினிமா எவ்வளவு கவர்கிறது என்பதற்கும், சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தங்கள் திறமையை வெளிக்காட்டிக் கொள்ள எந்த எல்லைக்குப் போவார்கள் என்பதற்கும் அந்தப் பாத்திரம் ஒரு சான்று. மொழி படத்தில் எம்.எஸ்.பாஸ்கரை குணசித்திர வேடத்தில் நடிக்க வைத்...
உப்பு கருவாடு தயார்

உப்பு கருவாடு தயார்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஃபர்ஸ்ட் காப்பி ஃபிக்சர்ஸ் மற்றும் நைட் ஷோ சினிமா தயாரிப்பில் கருணாகரன், நந்திதா ஆகியோர் நடித்துள்ளார்கள். “தேர்ந்த பல படங்களைத் தந்து வரும் இயக்குநர் ராதா மோகன், மீண்டும் ஓர் அழகிய படத்தை எடுத்துள்ளார். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரது திறமையான உழைப்பும் படத்தைக் குறித்த காலத்தில் முடிக்க உதவியுள்ளது. ‘உப்பு கருவாடு’ குழுவினருக்கு எனது நன்றிகள். படத்தின் இறுதிகட்ட வேலைகள் மிக வேகமாய் நடந்து வருகிறது. விரைவில் ரசிகர்கள் சுவைக்கலாம்” என மகிழ்ச்சியுடன் கூறினார் படத்தின் தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன்....
கருவாட்டு கருணாகரன்

கருவாட்டு கருணாகரன்

சினிமா, திரைத் துளி
“ஒரு சிறிய ரோல் கிடைத்தாலும் தனது நடிப்பால் அதைப் பதியச் செய்யும் ஒரு நடிகன் கருணாகரன். ‘உப்பு கருவாடு’ படத்தில் அன்றாடம் நம் பக்கத்து வீட்டில் பார்க்கும் ஒரு இளைஞன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். தன்னை ஒரு கதாநாயகி என்று தன்னை குறுகிய வட்டத்தினுள் அடைக்காமல் தனக்கான நல்ல கதாப்பாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு சரியான கதைகளும் படங்களும் கிடைக்க வேண்டும். அவ்வகையில் இருவருக்கும் ‘உப்பு கருவாடு’ ஒரு சிறந்த படமாய் அமையும்” ” எனக் கூறினார் இயக்குனர் ராதா மோகன். மேலும், “படத்தின் திறம் குறையாமல் குறுகிய காலத்தில் நான் எழுதியதை என் எண்ணத்தின்படியே கொண்டு வர உதவிய அத்தனைக் கலைஞர்களுக்கும் எனது நன்றிகள். தரத்திலும் திறத்திலும் சமரசம் செய்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. துரித வேகத்தில் படமெடுக்கும் போது கூட அந்தக் கொள்கையை விட்ட...
ஒரு புது கதவு திறக்குது

ஒரு புது கதவு திறக்குது

சினிமா, திரைத் துளி
"இப்பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாய் இருந்தது. கௌதம் அவர்களின் குரல் இந்தப் பாட்டிற்கு அந்தத் துள்ளலைத் தந்துள்ளது. இசையமைப்பாளர் ஸ்டீவ், கௌதமின் நண்பர். முதலில் இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், கௌதம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார். படத்தில் ஒரு சோலோ சாங் வைக்கலாம் என்று நானும் ஸ்டீவ் அவர்களும் முடிவு செய்தோம். இப்பாடலுக்கு புதிதாக ஒரு குரல் வேண்டும் என்று நினைத்தோம். ஜி.வி.எம். (கெளதம் வாசுதேவ் மேனன்) பாடினால் நன்றாக இருக்கும் என்று ஸ்டீவ் கூறினார். கௌதம் நன்றாகவே பாடுவார் என்று அறிந்து அவரை அணுகினோம். வியப்பிற்குள்ளான கௌதம் துளியும் தயங்காமல் எங்களையும் வியப்பில் ஆழ்த்தினார். ஒரு வெற்றிக்கான முதல் அடியை எடுத்து வைக்கும் ஒருவனின் கொண்டாட்டமாய் வரும் 'புது ஒரு கதவு திறக்குது' என்ற பாடலை அதே துள்ளலுடனும், கொண்டாட்டத்துடனும் பாடிக் கொடுத்தார் கௌதம். இப்பாடல் கடற்கரைக் காற்று ...
இயக்குநர் ராதா மோகனின் லட்சியப் பயணம்

இயக்குநர் ராதா மோகனின் லட்சியப் பயணம்

சினிமா, திரைத் துளி
மனதின் மென்னுணர்வுகளை வருடிவிட்ட படங்களான அழகிய தீயே, மொழி, அபியும் நானும் போன்ற படங்களை மறக்க இயலுமா? அதனாலேயே தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் ராதா மோகன் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவருடைய அடுத்த படம் உப்பு கருவாடு. ராம்ஜி நரசிம்மனின் First copy pictures மற்றும் ராதா மோகனின் Night show pictures ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் 'உப்பு கருவாடு' ரசிகர்களைக் கவரும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாகும். இந்தப் படத்தின் கதை ஒருவருடைய லட்சியத்துக்கும், அந்த லட்சியப் பயணத்தைத் தொடர விடாமல் சிறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது நமக்குள் நாமே மேற்கொள்ளும் சமரசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றிய கதை ஆகும்.“லட்சியம் உள்ளவர்கள் அதில் சமரசம் ஆகி விடக் கூடாது. இந்த சமரசமே நம்மை லட்சியப் பயணம் மேற்கொள்ள விடாமல் தடுக்கும்.இந்தக் கதையை நகைச்சுவை கலந்து ...