தெனாலிராமன் விமர்சனம்
மக்களின் நிலைமையை அறிந்திராத நல்ல அரசரும், பேராசை மிகுந்த எட்டு அமைச்சர்களும் உள்ள விகட நகரத்து அரண்மனையில்.. ஒன்பதாவது அமைச்சராக கிளர்ச்சியாளர் தெனாலிராமன் நுழைகிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
மறுபிரேவசம் பிரம்மாண்டமாக இருக்கணும் என்பதற்காகக் காத்திருந்து வடிவேலு நடித்திருக்கும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. கதையின் நாயகன் தெனாலிராமன்தான் என்ற பொழுதும், கலக்குவது என்னவோ மன்னராக வரும் வடிவேலுதான். ‘எந்த அறை?’ என 36 மனைவிகள் கொண்ட மன்னர் வடிவேலுக்கு ஏற்படும் குழப்பத்தை அவர் உடல்மொழியில் காட்டுவதைக் குறிப்பிடலாம். இப்படியாக சின்னஞ்சிறு சுவாரசியங்கள் ஆங்காங்கே இருந்தாலும், மையக்கருவுடன் ஒட்டாமல் திரைக்கதை பயணிக்கிறது.
இக்கட்டில் மாட்டிக் கொள்ளும் வடிவேலு காட்டும் பரிதவிப்பான உடல்மொழிதான் அவரது பலமே! ஆனால் தெனாலிராமன் மதியூகி என்பதால்.. மிகப் பொறுமையாக எந்த உணர்ச்சியும் ...