Shadow

Tag: அஜயன் பாலா

மயிலாஞ்சி விமர்சனம் | Mylanji review

மயிலாஞ்சி விமர்சனம் | Mylanji review

சினிமா, திரை விமர்சனம்
தனது காதலை ஏற்காவிட்டால், முகத்தில் அமிலம் ஊற்றும் இளைய தலைமுறையின் போக்கைக் கண்டு கவலையுறும் மனநல மருத்துவரான அர்ஜுனன், ஒரு மென்மையான, மேன்மையான காதலைத் திரையில் சொல்ல விழைந்துள்ளார். அதற்காகத் தனது அஜய் அர்ஜும் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படமே மயிலாஞ்சியாகும். மயிலாஞ்சி (அல்லது மைலாஞ்சி) என்பது மருதாணி (Henna) தாவரத்தைக் குறிக்கும் சொல்லாகும். புகைப்படக் கலைஞரான சூர்யா, அரிய வகை பறவையினத்தைப் படமெடுக்க நீல்கிரி வந்து சேருகிறார். அங்கே வசிக்கும் சாரு மீது காதல் வயப்படுகிறார். சாருவோ, தான் வேறு ஒருவரைக் காதலிப்பதாகத் தெரிவித்து, சூர்யாவிடமே காதலுக்கு உதவும்படி கேட்கிறார். அவர்களது காதல் என்னானது என்பதே படத்தின் கதை. சூர்யாவாக நடித்துள்ள கன்னிமாடம் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக்கும், சாருவாக க்ரிஷா குரூப்பும் நடித்துள்ளனர். ஓவியம் போல் திரைச்சட்டகங்களை (Frames) அழகுறச் செதுக்...
தீயவர் குலை நடுங்க தர்மமே ஜெயிக்கும்

தீயவர் குலை நடுங்க தர்மமே ஜெயிக்கும்

சினிமா, திரைச் செய்தி
ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், 'ஆக்சன் கிங்' அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் த்ரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் 'தீயவர் குலை நடுங்க' ஆகும். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், எழுத்தாளர் அஜயன் பாலா, “தமிழில் வரவர எல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போது, தமிழ்த் தலைப்பு வைத்துள்ள இந்தக் குழுவிற்கு நன்றி. தயாரிப்பாளரைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது. இம்மாதிரி தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் வர வேண்டும். அர்ஜூன் சாரைத் திரையில் பார்க்கப் பொறாமையாக உள்ளது. உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார்” என்றார். விசிக கட்சி துணை பொதுச் செயலாளர் திரு. வன்னியரசு, “கலைஞர் தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என அறிவித்தார். இப்போ...
மெமரீஸ் விமர்சனம்

மெமரீஸ் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மிகச் சிக்கலான சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என மெமரீஸ் படத்தைப் பற்றி படக்குழு விளம்பரப்படுத்தினர். அதற்கு ஏற்றாற்போலே அமைந்துள்ளது திரைக்கதை. பார்வையாளர்களின் அதீத கவனத்தைக் கோரும் ஒரு படம். பிரதான கதாபாத்திரத்தின் கோணத்திலேயே படம் பார்க்கப் பழகிவிட்ட பார்வையாளர்களுக்கு, இப்படம் சவாலானதாக இருக்கும். கதை மூன்றாக விரிகிறது, பிரதான கதாபாத்திரமான வெற்றி, ஒவ்வொரு உப கதையிலும் ஒவ்வொரு ரோலில் வருகிறார். முதல் கதையில், மருத்துவர் பெருமாளின் குடும்பம் கொல்லப்படுகிறது. அந்த நான்கு கொலைகளையும் செய்தது உதவி இயக்குநர் வெங்கி எனத் தெரிய வருகிறது. வெங்கிக்கோ, விபத்தில் ‘மெமரி லாஸ்’ ஏற்பட்டுவிட, மருத்துவர் அபிநவ் ராமானுஜத்தின் உதவியோடு, வெங்கியின் நினைவைத் தட்டியெழுப்பி, அவன் புரிந்த கொலைகளைப் பற்றி அவனையே வாக்குமூலம் செய்ய வைக்கின்றார். இரண்டாவது கதை, நான்கு கொலைகளையும் செய்தது வெங்கி அல்ல என எட்டு வருடங்...
6 அத்தியாயம் விமர்சனம்

6 அத்தியாயம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆறு இயக்குநர்களின் குறும்படங்களை தொகுத்து '6 அத்தியாயம்' என்று ஒரே படமாக இணைத்துள்ளனர். அமானுஷ்யம் தான் இந்த ஆறு படங்களையும் இணைக்கும் கண்ணி. பொதுவாக இப்படி இணைக்கப்படும் படங்கள், ஒரு குறும்படம் முடிந்த பின் இன்னொன்று எனத் தொடங்கும். ஆனால், எல்லாப் படத்தின் க்ளைமேக்ஸையும் கடைசி அரை மணி நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டியுள்ளனர். இந்தப் பரீட்சார்த்த பாணி உலக அளவில் இதுவே முதல் முறை என்பது படத்தின் தலையாய சிறப்பு. 1. சூப்பர் ஹீரோ இயக்கம் - கேபிள் சங்கர் தன்னை சூப்பர் ஹீரோவாக ஒருவன் கருதுகிறான். அவனது வீட்டினரோ அவனுக்கு மனநலக் கோளாறு உள்ளதாக நினைக்கின்றனர். அதனால் அவனை மனநல மருத்துவரிடம் அழைத்து வந்து விடுகின்றனர். அவருக்கும் மனநல மருத்துவருக்கும் நடக்கும் உரையாடலே படத்தின் கதை. 2. இது தொடரும் இயக்கம் - சங்கர் தியாகராஜன் சிறுமியைப் பாலியல் தொந்தரவு செய்த ஒருவனைப் பேய்கள் எப்படிப...
மனிதன் விமர்சனம்

மனிதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாமானியர்களுக்கு சட்டத்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தும் படம். குடிப்போதையில் காரோட்டி, நடைப்பாதையில் படுத்திருப்பவர்கள் மீது காரேற்றிக் கொல்லும் பணக்கார வீட்டுப் பையனின் வழக்கை மையமாகக் கொண்டு நகர்கிறது கதையின் களம். பொள்ளாச்சியில் கிடைக்கும் ஒன்றிரண்டு வழக்குகளிலும் சொதப்பும் வக்கீல் சக்தியாய் அறிமுகமாகிறார் உதயநிதி. தான் ஓட்டப்படுகிறோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், அவர்களோடு இணைந்து சிரிக்கும் அப்பாவி வேடத்திற்குப் பொருந்துகிறார். பணத்துக்கு விலை போய், பின் காதலியின் உதாசீனத்தால் 'ஏழைப் பங்காளன்' ஆகிறார். வெள்ளைத் தோலினரைக் காதலிப்பதே தம் பிறவி நோக்கமென்ற கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் வெளிவந்து கெத்து காட்டுகிறார் உதயநிதி. அவரது கேரியரில் இது மறக்க முடியாததொரு படமாக அமையும். மதியின் ஒளிப்பதிவில் ஹன்சிகாவை விட உதயநிதி கூடுதல் பொலிவோடு தெரிகிறார். அதே போல், நிருபர் ஜெனிஃபராக ...