Shadow

Tag: கிருஷ்ணன் வெங்கடாசலம்

ஜே.ஆர். ரங்கராஜு

ஜே.ஆர். ரங்கராஜு

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. வடுவூர் துரைசாமி ஐயங்கார் துப்பறியும் நாவல்கள் எழுதி புகழுடன் இருந்து வந்த அதே காலத்தில், அவரைப் போலவே துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் மிகவும் திறமை வாய்ந்த மற்றுமொரு எழுத்தாளர் ஜே.ஆர். ரங்கராஜு. ’ராஜாம்பாள்' என்கிற இவரது நாவல் இதே பெயரில் திரைப்படமாக 1935இல் வெளிவந்தது. மீண்டும் இக்கதை இரண்டாவது முறையாக 1951இல் தயாரிக்கப்பட்டு இதே 'ராஜாம்பாள்' என்கிற பெயரில் வெளிவந்தது. நாடகக்காவலர் என்று பின்னாளில் பெயர்பெற்ற ஆர்.எஸ்.மனோகரின் அறிமுகப்படம் இது. இதில் மனோகர் கதாநாயகனாகத்தான் அறிமுகமானார்.  கதாநாயகி சிலரால் கடத்திச் செல்லப்படுகிறார். கடத்தியவர்கள் அறியாதவாறு ஒரு துண்டுச்சீட்டில் 'மோசம் போனேன் கோபாலா' என்கிற வாக்கியம் ஒன்றை எழுதி அதைத் தரையிலே வீசிவிட்டுச் செல்வார். அதைக் கண்டெடுத்து அதை வைத்தே குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிடும் துப்பறியும் நிபுணர் கதாநாயகன் மனோகர். படம் மிக...
வடுவூர் துரைசாமி ஐயங்கார்

வடுவூர் துரைசாமி ஐயங்கார்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்..1931ல் தமிழ் சினிமா பேசத் தொடங்கியதற்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களின் கதைகள் அனைத்துமே புராண இதிகாசங்களிலிருந்து உருவப்பட்டு சினிமாவாகத் தயாரிக்கப்பட்டவை. கதாகாலட்சேபம் மாதிரி பாடல்களுக்கிடையே கதையைத் திணித்துவிடுவார்கள். ஒரு படத்தில் ஐம்பது அறுபது பாடல்கள் என்பது சர்வ சாதாரணம். கச்சேரி கேட்கப்போகிறேன் என்பதற்குப் பதிலாக கச்சேரி பார்க்கப்போகிறேன் என்று சொல்லும் அளவில்தான் அக்காலப் படங்கள் இருந்திருக்கின்றன. அம்மாதிரியான சூழலில் 1935இல் 'மேனகா' என்றொரு படம் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. அது சமகாலப் படம். சமூகப் படம். டி.கே.எஸ் சகோதரர்கள் முதலில் நாடகமாக நடித்துக்கொண்டிருந்ததைத் திரைப்படமாகத் தயாரித்தார்கள். இயக்குநர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த ராஜா சாண்டோ. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இப்படத்தின் மூலமாகத் திரை உலகில் பிரவேசித்தார். இந்தப் படத்தின் கதை வடுவூர் துரைசாமி ஐய...
சகுந்தலை (1940)

சகுந்தலை (1940)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: ஜி.என்.பாலசுப்ரமணியம்; எம்.எஸ்.சுப்புலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.எஸ்.துரைராஜ்) 1940 ஆம் வருஷம் தமிழ்த்திரையுலகிற்கு ஒரு முக்கியமான வருஷம். இந்த வருஷம் வெளிவந்து பெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் சகுந்தலை. ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் கதையை விட தலையாய அம்சமாக இருந்தது அவற்றின் பாடல்கள் தாம். புதிதாகத் தோன்றியிருந்த சினிமாவை, நாடகத்தின் தொடர்ச்சியாகவே கருதினர் அன்றைய மக்கள். பவளக்கொடி, ஸ்ரீவள்ளி போன்ற அக்கால பிரபல நாடகங்களில் பாடப்பட்டுவந்த பாடல்களினால் வெகுவாகக் கவரப்பட்டிருந்த மக்கள், அதைப் போலவே திரையிலும் எதிர்பார்த்ததன் விளைவு தான் ஆரம்பகாலப் படங்களின் ஏராளமான பாடல்களுக்கான காரணமாக இருக்க முடியும். பின்னணி பாடுவது என்கிற ஏற்பாடுகள் எல்லாம் தோன்றியிராத காலம், எனவே சினிமாவில் நடித்தவர்கள் பெரும்பாலும் பாடத் தெர...
மாயலோகத்தில்

மாயலோகத்தில்

சினிமா, தொடர்
1931இல் பேச ஆரம்பித்தது தமிழ்த் திரைப்படங்கள். ஆரம்ப கால திரைப்படங்கள் அனைத்தும் புராண இதிகாசக் கதைகளையே உள்ளடக்கியதாக இருந்தன. இந்நிலையில், தமிழ்த்திரையின் முதல் சமூகப் படமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட திரைப்படம் 'மேனகா'. என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமான இத்திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் டி.கே.எஸ்.சகோதரர்களின் 'ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் கம்பெனி'. இது 1934இல் வெளிவந்தது. இக்கதையின் ஆசிரியர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். இவர் அக்காலத்தில் வெகுஜன ரசிகர்களால் நன்கு படிக்கப்பட்ட பல துப்பறியும் நாவல்களின் ஆசிரியர். எனவே திரைப்படம் சென்ற முதல் எழுத்தாளர் என்கிற பெருமை இவருக்கே உரியது. இவரைத் தொடர்ந்து பல எழுத்தாளர்கள் திரைத்துறைக்குள் நுழைந்தார்கள்; அல்லது அந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் திரையில் பயன்படுத்தப்பட்டன. ஆரம்ப காலங்களில் திரைத்துறையில் நடப்பவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. படப்பிடிப்பு நிலையங...
ஒரு கதையின் கதை | Krishnan Nambi

ஒரு கதையின் கதை | Krishnan Nambi

கட்டுரை, புத்தகம்
தமிழ் இலக்கிய உலகிலிருந்து அனேகமாக மறக்கப்பட்டுவிட்ட ஒரு சிறந்த சிறுகதையாசிரியர் கிருஷ்ணன் நம்பி. மிகக் குறைவாகவே எழுதி, மிகக் குறைவான வாசகர்களையே சென்றடைந்தவர் இவர். இவரது ‘மாஸ்டர் பீஸ்’, 1974 இல் எழுதப்பட்ட ‘மருமகள் வாக்கு’ எனும் சிறுகதை. (ஓவியம்: கார்த்திகேயன் சுகுமாரன்) அசோகமித்திரன் இக்கதையை ‘கணையாழி’ ஆசிரியராக, கையெழுத்துப் பிரதியில் படிக்கும்போதே, ஒரு மகத்தான படைப்பு என்று தனக்குப் பட்டதாகப் பதிவு செய்திருக்கிறார். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு கட்டுரையில்.. பொப்புத்தி, ஆதிக்கக் கலாச்சாரம் என்று கலாச்சாரத் தளத்தில் மக்களின் மனங்களைத் தகவமைக்கும் அரசியலைப் பற்றியெல்லாம் இன்று நாம் பேசத் தொடங்கியுள்ளோம். இதையெல்லாம் விளக்கமாகப் புரிய வைப்பதற்கு கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’ ஒரு கதை போதும் என்கிறார். இக்கதையை மேலும் பல இலக்கியவாதிகள் மிக உயர்வாகச் சொல்லுகிறார்கள். இக்கதை பி...
பழைய பயோஸ்கோப்

பழைய பயோஸ்கோப்

சினிமா, தொடர்
'பயாஸ்கோப்' என்றதும் பயாஸ்கோப் காலத்திற்குப் போய்விடவேண்டாம். பழைய திரைப்படங்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகவே இந்தத் தலைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தொடரில் 1940 தொடங்கி 1960 முடிய மொத்தம் ஐம்பது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் இடம்பெறுகின்றன. ஆரம்பகால திரைப்படங்கள் பற்றிய நமக்குக் கிடைக்கும் செய்திகள் போதுமானதாக இல்லை. திரைப்படம் சார்ந்து எழுதிய சில எழுத்தாளர்களும் ஏராளமான புள்ளி விவரங்களையே தந்து சென்றிருக்கிறார்கள். சிலர் கதையை மட்டும் எழுதியிருக்கிறார்கள். 'ராண்டார்கை', ஹிந்துவில் எழுதி வரும் திரைப்படம் பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை. அவைகள் மிகச் சுருக்கமாக இருக்கின்றன. நினைவில் வைத்துக் கொள்ள தேவையில்லாத தோல்வியுற்ற படங்களைப் பற்றியும் ஏனோ எழுதி வருகிறார்! பழைய வெற்றி பெற்ற திரைப்படங்கள் பற்றி சற்று விரிவாக (விமர்சனம் அல்ல) எழுதிப் பார்க்கவேண்டுமென்று தோன...