
சுந்தர பாண்டியன் விமர்சனம்
பளபளக்கும் நீல கலர் சட்டை, நல்லவர், வல்லவர் என ஏகப்பட்ட பில்டப்களுடன் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு திரும்பியவாறு சசிகுமார் அறிமுகமாகிறார். ஊரில் உள்ள பாட்டிகள், பெண்கள் என போட்டி போட்டுக் கொண்டு அவருடன் ஆடிப் பாட விழைகின்றனர். ஆகா ஒரு முடிவோடு தான் இருக்கார் என எச்சரிக்கை ஒலியை சத்தமாக அடிக்கிறார். ஆனால் படம் பார்ப்பவர்களை திரைக்கதையால் அறிமுக இயக்குனர் பிரபாகரன் ஈர்த்து விடுகிறார்.
நண்பர்களுக்கு ஏதாவது ஒன்றென்றால் முன்ன நிற்கும் பாசக்கார நண்பன் சுந்தர பாண்டியன். அவன் பஸ்சில் ஏறினால் அனைவரும் ஒழுக்கமாக பயணிப்பார்கள். காரணம் சுந்தர பாண்டியன் கண்டமனூர் தலைக்கட்டு குடும்பத்தில் ஒருவன். தனது நண்பனின் காதலிற்கு உதவி செய்ய போக, அந்தப் பெண் சுந்தர பாண்டியனைக் காதலிப்பதாக சொல்லி விடுகிறாள். ஆனால் பார்க்க லட்சணமாக இருக்கும் அந்தப் பெண்ணை காதலிப்பவர்களின் பட்டியலோ மிக நீளம். அ...


