
தொட்டுத் தொடரும் வன்மம்
நாடு, மொழி, இனம், சாதி என எந்தவித பாரபட்சமும் பார்க்காத ஒன்று இருக்கிறது என்றால் அதுதான் பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை. இத்தகைய வன்முறைகள் நடக்காத நாடும் இல்லை, நாளும் இல்லை.15ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டுக்கு இடைப் பட்ட காலத்தில் சூனியக்காரிகள் என அடையாளப்படுத்தப்பட்டு கொல்லப் பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். ஐரோப்பாவில் தான் இத்தகைய கொடூரச் செயல் மதத்தின் பெயரால் பெரிய அளவில் நிகழ்த்தப் பட்டது. பொதுவில் உலகம் முழுவதுமே சூனியக்காரிகள் என சந்தேகப்பட படும் பெண்களின் நிலை அவலமும், துயரமுமானது.இன்றும் ஆஃப்ரிக்காவில் பெண்களுக்கு எதிராக இத்தகைய கொலைகள் வாடிக்கையாக இருப்பது கவலை தரும் செய்தி.சூனியக்காரிகள் என சந்தேகப்படுபவர்களைக் கொல்வது ஒரு சடங்காகவே பாவிக்கப்பட்டது. அவர்களை எங்கு, எப்படிக் கொல்ல வேண்டும் என வழிகாட்டும் ஒரு புத்தகமே லத்தீன...




