Shadow

Tag: A.ஜான்

கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சாயா படம்

கல்வியின் அவசியத்தை உணர்த்தும் சாயா படம்

சினிமா, திரைத் துளி
பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்தப் படம் பயமுறுத்துவது போல் தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்து உருவாகியுள்ளது 'சாயா'.  சாயா படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காக எடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப் பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும். ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனது உடலைப் பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலளிக்கும் ”சாயா” படம், ஒரு மாணவியின் ஆத்மா சம்பந்தப்பட்டது. ஆத்மா விட்ட சவாலை மாணவியின் ஆத்மா ஜெயித்துக் காட்டியதா? என்பதற்கான விடை படத்தில் இருக்கிறது என்கிறார் படத்தின் இயக்குநர் V.S. பழனிவேல். இவரே படத்தின் கதை, பாடல்கள், பின்னணி இசையையும் கவனித்திருக்க...
‘அறிவே பலம்’ – பலசாலி

‘அறிவே பலம்’ – பலசாலி

சினிமா, திரைத் துளி
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்பார்கள். அதாவது புத்திசாலித்தனம் தான் உண்மையான ஆயுதம் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. ஒருவனுடைய பலத்தை நிர்ணயிப்பது அவனுடைய நேரமும், சமயோசித அறிவும் தான். இதை சுந்தர்.சி படப் பாணியில் முழுக்க முழுக்கக் காமெடியாக சொல்லும் படம் தான் பலசாலி. பலமே இல்லாத ஒரு ஆள் எப்படித் தன்னை விட பலசாலிகளைத் தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்லும் கதைதான் 'பலசாலி'. சூது கவ்வும் பாணியிலான ‘ப்ளாக் ஹ்யூமர்’ படமாக உருவாகிறது 'பலசாலி'. பொதுவாக இதுமாதிரியான படங்களில் கோழையான ஹீரோவைப் பின்பகுதியில் வீரனாக்குவது போல் கதை இருக்கும். ஆனால், பலசாலி படத்தின் ஆரம்பம் முதல் கடைசி காட்சி வரையுமே ஹீரோ ஒரு சாதாரண ஆளாகத் தான் இருப்பார். ஆனால் அவன் எதிர்த்து வெல்வது எல்லாமே அவனை விட பலசாலியான ஆட்கள் தான். சண்டைக்காட்சிகள் கூட வயிறு வலிக்...
“மோகன்லால் ஒரு இன்டெலெக்ச்சுவல்” – நமீதா

“மோகன்லால் ஒரு இன்டெலெக்ச்சுவல்” – நமீதா

சினிமா, திரைத் துளி
தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை நமீதா, தனது ரீ-என்ட்ரிக்காக சுமார் 20 கிலோ அளவுக்குத் தனது உடல் எடையைக் குறைத்துள்ளார் . ’இனி படங்களைத் தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று சொன்னவர் தேர்வு செய்து நடித்த படம் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ”புலிமுருகன்”. நேற்று வெளியான ”புலிமுருகன்” இதுவரை மலையாளத் திரையுலகமே பார்த்திராத வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமாகி உள்ளது. தனது ரீ-என்ட்ரி படம் தான் நினைத்தது போலவே அமைந்த உற்சாகத்தில் உள்ளார் நமீதா. புலிமுருகனில் நடித்த அனுபவத்தைக் குறித்து, “கடந்த ஆண்டு ரீ-என்ட்ரிக்காக கதைகள் கேட்டபோது இந்தப் படத்தின் இயக்குநரிடமும் கேட்டேன். நம் தென்னிந்திய மொழிகளில் இதுவரை வந்திராத அளவுக்கு அட்வென்ச்சர் வகை கதையாக இருந்தது. மிகவும் வித்தியாசமான இந்தக் கதையை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமான...
சமுத்திரக்கனி – ஓர் ஆண்தேவதை

சமுத்திரக்கனி – ஓர் ஆண்தேவதை

சினிமா, திரைத் துளி
ஆண் தேவதையாக நடிக்கிறார் சமுத்திரக்கனி. பெண்தானே தேவதை? இது என்ன 'ஆண் தேவதை' எனத் தலைப்பின் மூலமாகவே யோசிக்க வைக்கின்றனர். இப்படத்தை தாமிரா இயக்குகிறார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மாணவரான இவர், ஏற்கெனவே பாலசந்தர்-- பாரதிராஜா இருவரையும் 'ரெட்டச்சுழி' படத்தில் இணைந்து நடிக்க வைத்தவர். இது முழுக்க முழுக்க சென்னைப் பின்னணியில் நடக்கும் கதை. இன்று உலக மயமாக்கல், நகரமயமாக்கல் சூழல்தான் பெரும்பாலான நகரவாசிகளை இயக்குகிறது. போடுகிற சட்டை முதல் பேசும் அலைபேசியின் நெட்வொர்க் வரை எதையும் அதுவே முடிவு செய்கிறது. இப்படிப்பட்ட இன்றைய பரபர சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன என்பதைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம். ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? இன்று நிலவும் பொருளாதாரச் சூழலும், கடன் வாங்க...
பகிரி விமர்சனம்

பகிரி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பகிரி என வாட்ஸ்-அப்பை (WhatsApp) மொழிபெயர்த்துள்ளனர். காதலை நாயகனும் நாயகியும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றனர்; சமூக விஷயங்களை குழுவில் மக்கள் பகிர்ந்து கொள்கின்றனர். ஆக, இப்படி வாட்ஸ்-அப்பில் உணர்வுகளும் கருத்துகளும் பகிர்ந்து கொள்ளப்படுவதால், வாட்ஸ்-அப் ‘பகிரி’ ஆனது போலும்! (படத்தைத் தயாரித்துள்ள நிறுவனத்தின் பெயர் ‘லட்சுமி கிரியேஷன்ஸ்’. உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் அந்நிறுவனத்தின் பெயர் அதேதான். பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது. தகவல் பரிமாற்றச் செயலியான ‘வாட்ஸ்-அப்’-பை எல்லா மொழியிலும் அப்படியே அழைக்கப்படுவதுதான் நியாயம்). நாஸ்மாக்கில் வேலை செய்யவேண்டும் என்பது முருகனின் லட்சியம். அதற்கு லஞ்சமாக 5 லட்சம் தேவைப்படுகிறது. விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவனது இந்த உன்னத லட்சியம் நிறைவேறியதா இல்லையா என்பதே படத்தின் கதை. நாஸ்மாக் (NASMAC) என்பதன் விரிவாக்கம், ‘நம்மூர் சோமபானம் மார்க்க...
நம்பியார் விமர்சனம்

நம்பியார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐ.ஏ.எஸ். படித்துக் கொண்டிருக்கும் ராமசந்திரன் தன் மனதின் எதிர்மறை எண்ணங்களுக்கு உருவம் கொடுத்து எம்.ஜி.ஆர். எனப் பெயரிடுகிறான். சதா சர்வ காலமும் தொந்தரவு செய்து குழப்பம் நம்பியாரை மீறி, ராமசந்திரன் தான் எண்ணியதை அடைகிறானா இல்லையா என்பதே படத்தின் கதை. குழப்பும் நெகடிவ் மனசாட்சியான நம்பியாராக நடித்துள்ளார் சந்தானம். நண்பனாக வந்து நாயகனைக் கலாய்ப்பதற்குப் பதில், மனசாட்சியாக வந்து கலாய்க்கிறார். சந்தானத்தின் பிம்பம் கண்ணாடியில் தெரியாதது; ராமசந்திரன் போட்டிருக்கும் அதே டீ-ஷர்ட்டை அணிந்திருப்பது; வாய் ஓயாமல் தொணத்தொணவென்று பேசிக் கொண்டிருப்பதென மனசாட்சியை நன்றாக வடிவமைத்திருக்கார்கள். ராமசந்திரனாக ஸ்ரீகாந்த்; சரோஜா தேவியாக சுனைனா. படத்தை ஸ்ரீகாந்தே தயாரித்தும் உள்ளார். கதாபாத்திரத்தை ரசித்து நடித்துள்ளார். உள்ளுக்குள் இருக்கும் நம்பியார் விழித்துக் கொள்ள, சந்தானத்தின் குரலில் குடித்து விட்டு ...
தற்காப்பு விமர்சனம்

தற்காப்பு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வேட்டையாடும் அதிகாரம் பெற்றவர்களே வேட்டையாடப்படுகிறார்கள். யாரால் ஏன் என்பது தான் படத்தின் கதை. போலிஸ் செய்யும் என்கவுன்ட்டர்களை அதீத ஹீரோயிஸமாகச் சித்தரிக்கும் படங்களுக்கு இடையில், அதற்கெதிரான வலுவான குரலைப் பதிந்துள்ளது படம். படத்தின் தலைப்பும் காரணப் பெயர்தான். மனித உரிமை ஆணையத்தின் உயரதிகாரியாக வரும் சமுத்திரக்கனியின் வரவுக்குப் பின் படம் சூடு பிடிக்கத் தொடங்குகிறது. முதல் பாதி படத்தின் நான்-லீனியர் படத்தொகுப்பு, நாயகன் சக்தியின் குணவார்ப்பைப் பற்றிய குழப்பத்தையும், படத்தின் போக்கு பற்றிய கேள்வியையும் அளிக்கிறது. இரண்டாம் பாதியில் எல்லாம் தெளிகிறது என்றாலும், அதற்கு முதற்பாதி பில்டப்ஸ் அவ்வளவாக உதவவில்லை. படத்தில் இரண்டு காதல் கதைகள் வருகிறது. ட்ரெயின் பயணத்தில் ஒன்று; நாயகனின் தற்கொலை முயற்சியில் இன்னொன்று. உப்புக் கருவாடு படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்த சதிஷ் கிருஷ்ணனு...