Shadow

Tag: A.ஜான்

தமிழ் ‘மம்மி’ – ஹாரர் த்ரில்லர்

தமிழ் ‘மம்மி’ – ஹாரர் த்ரில்லர்

சினிமா, திரைத் துளி
நீண்ட இடைவெளிக்குப் பின் ஹாரர் த்ரில்லர் மூலம், மீண்டும் நடிக்க வந்துள்ளார் அஜித், விக்ரம் படங்களில் நாயகியாக நடித்த ப்ரியங்கா த்ரிவேதி. இந்தப் படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அஜித், விக்ரம் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ-என்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகளாக பேபி யுவினா நடிக்கிறார். பா.விஜயின் ஸ்ட்ராபெர்ரி, அஜித்தின் வீரம் என பல படங்களிலும் மற்றும் நூற்றுக்கும் அதிகமான விளம்பரங்களிலும் நடித்தவர் தான் பேபி யுவினா. இவர்களுடன் கிறிஸ்துவப் பாதிரியாராக முக்கிய கேரக்டரில் ‘கோலிசோடா’ மதுசூதனன் நடித்துள்ளார். கோவாவில் வசிக்கும் ஒன்பது மாத கர்ப்பிணியான தாய்க்கும் அவரது ஆறுவயது மகளுக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்தப் படத்தின் கதை. ஒரு பங்களா, அதற்குள் பேய், அதன் பழிவாங்கும் போக்கு, அதற்க...
சென்சார் போர்டின் மர்மமென்ன?

சென்சார் போர்டின் மர்மமென்ன?

சினிமா, திரைத் துளி
இயக்குநர் மோகன் ராஜாவின் உதவியாளர் ராகேஷ், “மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன” எனும் படம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நடிக்கின்றனர். எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக V மதியழகன், R. ரம்யா இப்படத்தைத் தயாரித்துள்ளனர். “இந்தத் தலைப்பிற்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. காரணம் இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது. இன்று பெண்கள் தாங்கள் தங்கள் சுதந்திரத்தோடு இயங்கும்போது, பலவிதமான பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். சமூகத்தில் ஒரு ஆண் எதிர்கொள்ளக் கூடிய சுதந்திரத்தின் எல்லை பெண்களுக்கு உண்டா என்று கேட்டால் இல்லை. இன்னும் பாரதியின் கனவு முழுமை பெறவில்லை. இன்னும் பயத்தோடுதான் பெண்கள் வெளியில் நடமாடும் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். காதல், காமம், கற்பழிப்பு, கந்து...
களத்தூர் கிராமம் விமர்சனம்

களத்தூர் கிராமம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திடீரென்று ஒரு படம் நல்லதொரு ஆச்சரியத்தை ஏற்படுத்திவிடும். அப்படி ஒரு படம் தான் ‘களத்தூர் கிராமம்’. பழி வாங்கும் கதை என மூன்றே வார்த்தையில் படத்தின் கதையைச் சுருக்கி விடலாம். ஆனால், எந்தச் சமயத்தில் யார் யாரைப் பழி வாங்குகிறார்கள் என்பதும், கதைக்களமும் காலமும் தான் படம் ஏற்படுத்தும் ஆச்சரியத்திற்குக் காரணம். ஒரு மகன் தனது தந்தையைக் கொல்ல நினைக்கின்றான்; தந்தையின் மரணத்தித்திற்காக ஓர் ஊரையே காவு வாங்க நினைக்கின்றான் அதிகாரத்தில் இருக்கும் ஒரு மகன்; தனது திருமணம் நின்றதற்குக் காரணமாக இருந்ததால் நண்பனைப் பழி வாங்குகிறான் சபலன் ஒருவன்; தனக்கொரு பிரச்சனை என வந்த பொழுது உதவாதவனை நேரம் பார்த்துச் சிக்கலில் மாட்டி விடுகிறான் பூசாரி; மகன் சாவிற்குக் காரணமான ஒருவனை அவனது மகனைக் கொண்டே கொல்லத் துடிக்கும் ஒரு முதிய தம்பதி; தந்தையின் மரணத்திற்குப் பழி வாங்க நினைக்கும் பண்ணையார் மகன் எனப் படத்தில் அத்த...
புதுமுக இயக்குநரின் மனக் குமுறல்

புதுமுக இயக்குநரின் மனக் குமுறல்

சினிமா, திரைச் செய்தி
ஸ்வஸ்திக் சினிவிஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் சோஹன் அகர்வால் வழங்கும் படம் "முன்னோடி". இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.பி.டி.ஏ. குமார் இயக்கியுள்ளார். விழாவில் படத்தை வெளியிடும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் பி. மதன் பேசும் போது, "பொதுவான நண்பர் ஒருவர் இந்தப் படம் பற்றிப் பேசினார். அப்போது எனக்கு ஆர்வமே இல்லை. ‘ஏற்கெனவே மூன்று படங்கள் போய்க் கொண்டிருக்கிறது வேண்டாம்’ என்றேன். ‘வேற யாரிடமாவது பேசிப் பாருங்கள். விட்டு விடுங்கள்’ என்றேன். ‘பாடல்கள் , ட்ரெய்லரையாவது பாருங்கள்’ என்றார்கள். வேண்டா வெறுப்பாக விருப்பம் இல்லாமல்தான் பார்த்தேன். முதலில் 'அக்கம் பக்கம் 'பாடல் பார்த்தேன். பிடித்திருந்தது. ‘யாரிடம் வேலை பார்த்தீர்கள்?’ என்றேன். ‘எவரிடமும் இல்லை’ என்றார். அவரிடம் பேசியபோது, பொதுவான விஷயங்கள் பேசினோம். தன் குடும்பம் சம்பாதித்த பணத்தில் எடுத்ததாகக் கூறினார். எனக்கு நம்பிக்கை வந்தது. அவரது ...
25 வகை திருஷ்டியும், தமிழகத்தை ஆண்டவர்களும்

25 வகை திருஷ்டியும், தமிழகத்தை ஆண்டவர்களும்

சினிமா, திரைத் துளி
சாயா படத்தில், நாயகி காயத்ரி ஒரே டேக்கில் நீண்ட பெரிய வசனத்தை படத்தில் இரண்டு இடத்தில் பேசி நடித்துள்ளார். ஒரு காட்சியில் நாயகன் வெளியூரிலிருந்து வருவார். அப்போது நாயகி அவரை வரவேற்று திருஷ்டி சுத்திப்போடுவார். கிட்டத்தட்ட இருபத்தைந்து வகையான திருஷ்டியை மூச்சுவிடாமல் ஒரே டேக்கில் பேசி அசத்தியுள்ளார். இன்னொரு காட்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் பத்து முதல்வர்கள் பேர் சொல்ல வேண்டும் எனக் கேட்க, நாயகி காயத்ரி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வரை தமிழகத்தை ஆண்டது யார் யார் என மூச்சுவிடாமல் பேசி நடித்து யூனிட்டின் கைத்தட்டலை வாங்கியுள்ளார். நாயகி காயத்ரி கூறும்போது, நீ”ண்ட வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடிக்கவேண்டும் என்று இயக்குநர் பழனிவேல் கூறியபோது பயந்தேன். ஆனால் இயக்குநர் பழனிவேல் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். தமிழ் தெரிந்த நாயகி என்பதால் புரிந்து பேசி ஒரே ட...
ஓர் இயக்குநரின் ஆசையும் நம்பிக்கையும்

ஓர் இயக்குநரின் ஆசையும் நம்பிக்கையும்

சினிமா, திரைத் துளி
“பைரவா படத்துடன் 'சாயா' படத்தை வெளியிடலாமென்று முடிவெடுத்துக் களமிறங்கினோம். நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல். பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும். அதற்கு எப்போ வழிபிறக்கும்னு தெரியலை. போதாக்குறைக்கு நம்ம வீட்டில் ஒரு இளைய தளபதி ரசிகர் இருக்கிறார். அவர், ‘எங்கள் தளபதி படம் வெளியாகும்போது நீங்கள் எப்படி வெளியிடலாம்?’ என ஒரே தகராறு. வீட்டிலேயே எதிர்ப்பிருந்தா எப்படி வெளியிடுறது? தள்ளிப்போட வேண்டியதாயிற்று. மறுபடியும் வெளியிட தேதி குறித்தபோது சல்லிக்கட்டு போராட்டம். ஒட்டுமொத்த நாடே களமிறங்கி நிற்கும்போது நான் எப்படிப் படத்தை வெளியிடுவேன்? தள்ளி வைத்தேன். இப்போதும் போகன் வருகிறது என்கிறார்கள். வரட்டும். ஆனால் இது சமூகத்திற்குச் சொல்லவேண்டிய கருத்துள்ள படம். மக்களுக்கான படம். தைரியமாக வெளியிடுகிறேன்” என்கிறார் இயக்குநர் வி.எஸ்.பழனிவேல்....
பிரஜினாகிய நான்

பிரஜினாகிய நான்

சினிமா, திரைத் துளி
‘2003இல் டிவிக்கு வந்த நான்கு ஆண்டுகள் மட்டுமே அங்கே இருந்தேன். 2007இல் வெளியே வந்து விட்டேன். நான் டிவியிலிருந்து வெளியே வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழில் இதுவரை 3 படங்கள் வந்துள்ளன. இடையில் மலையாளத்தில் 4 படங்கள் நடித்தேன். பிருத்திவிராஜ், லால் படங்களும் அதில் அடங்கும். இடைப்பட்ட காலத்தில் போராட்டங்கள்தான். ஆனாலும் போராடியே நமக்கான இடத்தை அடைவது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் மனதை திசை திரும்ப விடவில்லை. சின்னத்திரையிலிருந்து சினிமாவில் நடிக்க வருவதில் சாதகமும் உண்டு; பாதகமும் உண்டு. டிவி மூலம் எல்லாருக்கும் தெரிந்திருப்பதாலேயே வாய்ப்பு தரத் தயங்குவார்கள். என்னை எல்லாருக்கும் தெரியும். ஆனால் வாய்ப்பு தரமாட்டார்கள். இது ஒரு மாதிரியான சிக்கல். சிலர் இவருக்கு என்ன வியாபார மதிப்பு இருக்கிறது என்பார்கள். இதற்கிடையே நான் 2007இல் திருமணம் செய்து கொண்டேன். என் மனைவி ஒரு சின்னத்திரை நடி...
கோனேரிப்பட்டி பாலத்தில்

கோனேரிப்பட்டி பாலத்தில்

சினிமா, திரைத் துளி
சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு "பவுனு பவுனுதான்" படத்தின் படப்பிடிப்பு கோனேரிப்பட்டிப் பாலத்தில் நடந்தது. அப்பாலம் சேலம் மாவட்டம் பவானி அருகேயுள்ளது. பாக்யராஜும் ரோகிணியும் தண்ணீருக்குள் குதிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. தற்போது, சுமார் இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, “மிக மிக அவசரம்” என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தக் கோனேரிப்பட்டி பாலம் கதைக்குத் தேவைப்படுவதால், 23 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கியிருக்கிறார்கள். நீண்ட காலத்திற்குப் பின் படப்பிடிப்பு நடைபெறுவதால் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள். ‘பவுனு பவுனுதான்’ படம் போலவே இந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்திச் செல்கின்றனர். படத்தின் மிக முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் சீமான் நடிக்கிறார். கதாநாயகனாக கோரிப்பாளையம் ஹரிஷும், க...
குழந்தைகளைப் பாதிக்கும் பாலியல் சீண்டல் – நமீதா

குழந்தைகளைப் பாதிக்கும் பாலியல் சீண்டல் – நமீதா

சினிமா, திரைத் துளி
சாயா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நமீதா, "இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச் சொல்லும் படம் என்று அறிந்ததில் மகிழ்ச்சி. சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன. அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன். இந்தப் படம் குழந்தைகள் பேரன்டிங் பற்றியும், கல்வி பற்றியும் எடுக்கப்பட்டுள்ளதெனத் தெரிகிறது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆம், நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன். எனக்கு அவங்கதான் குழந்தைகள். சாக்லேட், கேரமெல், லட்டு என்பது என்னுடைய பப்பீஸ்களின் பெயர். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக் கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொள்கிறேன். ஒரு விஷயம், ஆனால் இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். நான...
ஒற்றுமை அவசியம் – நடிகர் ஸ்ரீகாந்த்

ஒற்றுமை அவசியம் – நடிகர் ஸ்ரீகாந்த்

சினிமா, திரைத் துளி
குழந்தைகள் தினத்தன்று ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடைபெற்றது. பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார். ஜாக்குவார் தங்கமும், நடிகைகள் நமீதாவும் வசுந்தராவும் பெற்றுக் கொண்டனர். பாடல்களை வெளியிட்டு நடிகர் ஸ்ரீகாந்த் பேசும்போது, ''எனக்கு சினிமாவில் ஒவ்வொரு விழா நடக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதில் கலந்து கொள்ள பிரபலங்களை அழைத்து வருவது பற்றிய எண்ணமும் வரும். இதுமாதிரி விழாக்களுக்கு அழைக்கும் போது பிரபலங்கள் யாரும் வர முன்வருவதில்லை. சாக்கு போக்கு சொல்லி பொய்யான காரணம் சொல்லித் தவிர்ப்பார்கள், வரமாட்டார்கள். இதை எண்ணி வேதனை அடைந்திருக்கிறேன். இதை நான் அனுபவத்திலும் கண்டிருக்கிறேன். விழா நடத்துபவர்கள் பலரது தவிப்பையும் உணர்ந்து இருக்கிறேன். அதன் வலிகளைப் புரிந்து பிறகு நான் ஒரு முடிவு செய்தேன். என்னை அழைப்பவர்களின் விழாவுக்குச் சென்று அவர்களை வாழ்த்துவது என்று முடிவு செய்தேன். நான் ச...
இதுவரை வந்திராத கதை – சாயா படம்

இதுவரை வந்திராத கதை – சாயா படம்

சினிமா, திரைச் செய்தி
“இதுவரை தமிழ்ப்படங்களில் சொல்லப்படாத வித்தியாசமான கதை” என்பதில் மிக உறுதியாக உள்ளார் சாயா படத்தின் இயக்குநர் வி.எஸ்.பழனிவேல். ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் மின்காந்த அலைகள் இருக்கும்; அதை ஆரா என்பார்கள்; ஆராவின் ஒளியைக் கொண்டே, உடலிலுள்ள நோயினை அறிய முடியுமெனப் படத்தைப் பற்றிக் கூறும் பொழுது இயம்பினார் இயக்குநர். இந்தப் படத்தின் நாயகன், மனிதர்களைச் சுற்றி இருக்கும் ஆராவைக் காணக் கூடிய சக்தி பெற்றவர் என படத்தின் ட்ரெயிலரில் இருந்து யூகிக்க முடிகிறது. நாயகன் இறந்தவர்களுக்கே உயிர் கொடுப்பது போல் முன்னோட்டத்தில் காட்சிகள் வருகிறது. மேலும், ''ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனது உடலைப் பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘சாயா’ படம் பதிலளிக்கும்'' என்றார் இயக்குநர். இந்தப் படம் அமானுஷ்யமான பேய்ப் படமென நினைத்துக் கொள்ள வேண்டாம். த...
என் முதல் தீபாவளி – நடிகர் ஷாம்

என் முதல் தீபாவளி – நடிகர் ஷாம்

சினிமா, திரைத் துளி
திருமணமான புதுமணத் தம்பதிகளைப் போல திரையுலகக் கதாநாயகர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அந்தத் தீபாவளிக்கு அவர்கள் நடித்த படம் வந்தால் அவர்களுக்கு அது தலை தீபாவளியைப் போன்ற மகிழ்ச்சி தரும். அந்த வகையில் எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை எதிர்கொள்கிறார் நடிகர் ஷாம். அவரது உற்சாக எதிர்பார்ப்புக்குக் காரணம், அவர் நடித்த, 'ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்ட்' என்ற கன்னடப் படம் தீபாவளி அன்று வெளியாகிறது. இப்படத்தில் கதாநாயகனாக அங்கே முன்னணிக் கதாநாயகனான யஷ் நடித்துள்ளார். நாயகியாக வருகிறவர் ராதிகா பண்டிட். இதுவரை நாயகனாக நடித்து வந்த ஷாம், அப்படத்தில் எதிர் நாயகனாக நடித்திருக்கிறார். அதுவும் முழு நீள வில்லனாக நடித்துப் படத்தின் எடையில் சரி பாதியைச் சுமந்து இருக்கிறார். பட அனுபவம் பற்றி ஷாம் பேசத் தொடங்கும் போதே பேச்சில் உற்சாக வெள்ளம் அலையடிக்கிறது, "நான் '6' படம் வெளியான ...
சினிமாவிற்கு வந்த முன்னோடி தொழிலதிபர்

சினிமாவிற்கு வந்த முன்னோடி தொழிலதிபர்

சினிமா, திரைத் துளி
சினிமா மீது கொண்ட காதலால், யாரிடமும் உதவியாளராக இல்லாமலேயே இயக்குநர் ஆகியிருக்கிறார் தென்காசியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். அவரது பெயர் எஸ்.பி.டி.ஏ.குமார். ‘முன்னோடி’ என்று தலைப்பிடப்பட்ட அப்படத்திற்கு, கதையும் திரைக்கதையும் வசனமும் அவரே! யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றாத குமார், மணிரத்னம் போன்ற ஆளுமைகளைத் தன் முன்னோடியாக எண்ணி சினிமாவுக்கு வந்திருக்கிறாராம். அவருடன் இணைந்து சோஹம் அகர்வால் படத்தைத் தயாரித்துள்ளார். ஒருவன் யாரை முன்னோடியாகப் பின்பற்றுகிறானோ, அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும். 'வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம்' என்கிற கருத்தை முன் வைக்கிறது படம். தெலுங்கில் வளர்ந்து வரும் ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். 'கங்காரு' படத்தின் நாயகன் அர்ஜுனா, 'குற்றம் கடிதல்' படத்தில் குணச்...
சாயா – படக்குழுவினர்

சாயா – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> சந்தோஷ் கண்ணா >> காயத்ரி >> சோனியா அகர்வால் >> Y.G.மகேந்திரன் >> பாய்ஸ் ராஜன் >> ஆர்.சுந்தர்ராஜன் >> பயில்வான் ரங்கநாதன் >> நெல்லை சிவா >> மனோகர் >> பாலா சிங் >> மூகாம்பிகை ரவி >> கராத்தேராஜா >> கொட்டாச்சிபணிக்குழு:>> தயாரிப்பு - V.S. சசிகலா பழனிவேல் >> கதை, இயக்கம், பாடல்கள், பின்னணி இசை - V.S. பழனிவேல் >> இசை - ஜான் பீட்டர் >> சண்டை - பவர் ஃபாஸ்ட் >> நடனம் - ரமேஷ் கமல் >> தயாரிப்பு மேற்பார்வை - மதுபாலன் >> மேலாளர் - ஆத்தூர் ஆறுமுகம் >> மக்கள் தொடர்பு - A. ஜான்...