
பெத்தி விமர்சனம் | PEDDI review
பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கும் பெத்தி, கமர்ஷியல் ரூட்டில் ஒரு அரசியலைப் பேசியுள்ளது.
ஒரு பெரும் முதலாளிக்கு ராம்சரணும் அவரது மலையடிவாரத்தைச் சேர்ந்த மக்களும் நியாயமற்றக் கூலிக்கு வேலை செய்கின்றனர். ராம்சரணுக்கு எக்ஸ்ட்ரா திறமைகள் நிறைய உண்டு. அதிலொன்று கிரிக்கெட் ஆட்டம்! "ஆட்டக்கூலி" என அழைக்கப்படும் அவர் யார் தன்னை ஏலத்திற்கு எடுக்கிறார்களோ அவர்களுக்காகப் போய் விளையாடுவார். அது 1990 காலகட்டம். ராம்சரணின் மலையடிவாரம் அருகே ரயில் சேவை வேண்டும், அங்கு ரெயில் நின்று செல்லவேண்டும் என ஜெகபதிபாபு பெரும் போராட்டத்தை நிகழ்த்துவார். ராம்சரணுக்கு அவர் போராட்டத்தின் தேவை ஒரு கட்டத்தில் புரிகிறது. அதற்கு நம் ஊருக்கென ஓர் அடையாளம் தேவை என உணர்கிறார். அந்த அடையாளத்திற்காகக் குஸ்தி வாத்தியார் சிவராஜ்குமாரிடம் குஸ்தி கற்று, தேசியளவில் பிரபலமாகித் தனக்கும் தன் கிராமத்திற்கும் ஒரு அங்கீகாரத்தைப...

