Shadow

Author: admin

சதுரங்கம் விமர்சனம்

சதுரங்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 சதுரங்கம் - அதிசயமாய் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. கோ படத்தின் பரவலான வெற்றி காரணமாக இருக்கலாம்.'திசைகள்' என்னும் வாரயிதழில் வேலை செய்யும் திருப்பதிசாமி, சமூக அவலங்களை தன் எழுத்தின் மூலம் வெளிக் கொணருபவர். உண்மைகளை பகிரங்கமாக எழுதும் நேர்மையாளனுக்கு ஏற்படக் கூடிய சங்கடங்கள் திருப்பதிசாமிக்கு எழுகிறது. அச்சங்கடங்களில் இருந்து திருப்பதிசாமி எப்படித் தப்பினார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.ஸ்ரீகாந்த நாயகனாக. 2006ல் வர வேண்டிய படம்.துரோகி(2010) படத்திற்குப் பிறகு வெளியாகி உள்ளது. தெனாவட்டனவராய் அறிமுகப்படுத்தப்பட்டு காரியத்தில் வீர்யமுள்ளவரைப் படம் முடியும் வரை தோன்றுகிறார். ஒட்ட நறுக்கிய தலை முடியுடனும், சிறு புன்னகையைத் தேக்கிய முகத்துடனும் வரும் ஸ்ரீகாந்திற்கு இது முக்கியமான படமாக இருக்கும். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் மிரட்டும் பொழுது கா...
மங்காத்தா விமர்சனம்

மங்காத்தா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மங்காத்தா - வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜீத்தின் 50வது படம் என்ற ஒன்றே படத்தின் எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற செய்தது. அந்த எதிர்ப்பார்ப்பை வீண் செய்யாமல் படு அமர்க்களமாய் திரையரங்கைக் கலக்கி வருகிறது மங்காத்தா.தற்காலிக வேலை நீக்கத்தில் உள்ள காவல் துறை அதிகாரி விநாயக், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறுமுக செட்டியாரிடமிருந்து பெரும் தொகையை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அதே திட்டத்துடன் இருக்கும் நான்கு இளைஞர்களுடன் கூட்டு சேர்ந்து, ஆறுமுக செட்டியாரிடமிருந்து கொள்ளையடிக்கிறார். கொள்ளையடித்த பணம் கொள்ளையர்களைச் சுற்றலில் விடுகிறது. இறுதியாக பணம் யார் கையில் சேர்ந்தது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.விநாயக் மகாதேவனாக அஜித். தமிழ்த் திரையுலகம் கண்டெடுத்த நாயகனுக்குரிய இலக்கணத்தைத் தூக்கிப் போட்டு மிதித்து துவம்சம் பண்ணி விட்டார் தல. அசல் நாயகன் என அஜீத் ரசிகர்கள் மார் தட்டிக் க...
தெய்வத்திருமகள் விமர்சனம்

தெய்வத்திருமகள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தெய்வத்திருமகள் - பாரதி கண்ட புதுமை இயக்குனராக ஏ.எல்.விஜய் உருவாகி உள்ளார். பிற மொழிகளில் உள்ள நல்லப் படைப்புகளை தமிழில் கொணர்ந்து வருகிறார். அதற்காக வருடக் கணக்கில் மெனக்கெடுகிறார் என்பது அவரது பேட்டியில் இருந்து தெரிய வருகிறது. "ஐ ஆம் சாம்" என்ற ஆங்கிலப் படத்தின் தழுவி, ஆறு வயது தந்தைக்கும் ஐந்து வயது மகளுக்கும் இடையேயான நேசத்தைச் சித்திரிக்கும் அற்புதமான படத்தினைத் தந்துள்ளார் இயக்குனர்.ஆறு வயதிலேயே மனவளர்ச்சி நின்று விடும் கிருஷ்ணாவை சமூக சேவகி ஒருவர் மணக்கிறார். கிருஷ்ணாவின் மனைவி இறந்து விட, தன் மகள் நிலாவை தனக்கு தெரிந்தவரை வளர்த்து வருகிறார் கிருஷ்ணா. நிலாவின் தாய் வழி தாத்தா, நிலாவை கிருஷ்ணாவிடம் இருந்து பிரித்து விடுகிறார். நிலாவை மீட்க அனுராதா ரகுநாதன் என்னும் வக்கீலின் உதவியுடன் நீதி மன்றத்தின் உதவியை நாடுகிறார் கிருஷ்ணா. நிலா தன் தந்தையுடன் இணைந்தாளா என்ற கேள்விக்கு பதிலுட...
காஞ்சனா விமர்சனம்

காஞ்சனா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 காஞ்சனா - முனி படம் பெற்ற வரவேற்பை நம்பி தைரியமாக களம் இறங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். தர்க்கத்திற்கே இடமில்லா கற்பனை என முன்னறிவிப்போடு படம் தொடங்குகிறது. கதை, நாயகன் ராகவா லாரன்ஸ், நாயகனின் தாய் கோவை சரளா தவிர முந்தைய படமான 'முனி'க்கும், காஞ்சனாவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பகலில் எதற்கும் அஞ்சாதவனாகவும், இரவானால் பேயிற்கு மட்டும் பயப்படுவனாக ராகவா. கிரிக்கெட் விளையாட மைதானம் கிடைக்காமல் நண்பர்களுடன் காலி மனைக்கு விளையாட செல்லும் இடத்தில் இருந்து ஸ்டம்ப்பில் ஒட்டி வரும் இரத்தத் துளிகள் மூலம் பேயை வீட்டிற்குள் கொணர்ந்து விடுகிறான் ராகவா. பேய்களை விரட்ட ராகவா குடும்பத்தினர் முயல, பேய்கள் ராகவாக்குள் புகுந்து கொள்கின்றன. பேய்களின் வரலாறைத் தொடர்ந்து படம் தனது முதல் பகுதியான முனி போல் நிறைவுறுகிறது.ஆடுதல், பாடுதல், நல்லது செய்தல், அழகான நாயகியை காதலிப்பது போன்றவை தான் நாய...
அழகர்சாமியின் குதிரை விமர்சனம்

அழகர்சாமியின் குதிரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அழகர்சாமியின் குதிரை - இலக்கியத்தை திரைப்படமாக்கும் முயற்சிகள் தமிழில் அவ்வப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன. தமிழில் அத்தகைய முயற்சியில் தேர்ந்த வெற்றியை 'தில்லானா மோகனாம்பாள்' படம் பெற்றது. தங்கர்பச்சானும் தனது படைப்பான 'ஒன்பது ரூபாய் நோட்'டை திரைப்படமாக இயக்கியுள்ளார். அந்த முயற்சியின் சமீபத்திய நீட்சியாக பாஸ்கர் சக்தி அவர்களின் சிறுகதையான 'அழகர்சாமியின் குதிரை'யை இயக்குநர் சுசீந்திரன் படமாக உருமாற்றியுள்ளார்.ஊரை ரட்சிக்கும் அழகர்சாமிக்கு, திருவிழா எடுத்தால் மட்டுமே மழை பெய்யும் என நம்புகின்றனர் மல்லையாபுரத்து மக்கள். ஆனால் ஊர் எல்லையில் உள்ள கோயில் மண்டபத்தில் இருக்கும் மரக் குதிரை காணாமல் போகிறது. திருவிழா தடைப்படுமே என ஊர் மக்கள் அஞ்சும் நேரத்தில் உயிருள்ள குதிரை ஒன்று ஊருக்குள் வருகிறது. அழகரின் குதிரை தான் அது என மகிழ்ந்து, அக்குதிரையைப் பிடித்துக் கொள்கின்றனர். தனது பொதிக் குதி...
கோ விமர்சனம்

கோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோ - ஒழுங்குப்படுத்து, ஒன்றுசேர், எதிர் (oppose), தலைவன் என திரைப்படத்தின் தலைப்பினை பல அர்த்தங்களோடு பொருத்திப் பார்க்கலாம்.மக்களுக்கு ஆரோக்கியமான அரசாங்கத்தை அளிப்பதாக அதகளப்படும் அரசியலுக்குள் வசந்தன் என்னும் பட்டதாரி இளைஞனின் 'சிறகுகள்' அமைப்பு களமிறங்குகிறது. அதைத் தொடர்ந்து ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களோடு படம் நிறைவுறுகிறது.வசந்தனாக அஜ்மல். அரசியலில் ஒரு கட்டாய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற உத்வேகம் கொண்ட படித்த இளைஞனாக வருகிறார். ஆடம்பர விழாக்களில் செலவிடப்படும் பணத்தில் ஆயிரம் குழந்தைகளைப் படிக்க வைக்கலாமே என்ற ஏக்கத்தினைச் சுமந்தவாறு திரையில் அறிமுகமாகிறார். எதிர்ப்புகளைக் கொண்டு துவளாமல் நம்பிக்கையுடன் மேடையில் பேசும் பாத்திரத்திற்கு கச்சிதமாய் பொருந்துகிறார்.அஷ்வினாக ஜீவா. 'தின அஞ்சல்' என்ற நாளிதழின் கலகலப்பான புகைப்படக் கலைஞராய் தொடக்கம் முதல் இற...
பொன்னர் சங்கர் விமர்சனம்

பொன்னர் சங்கர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பொன்னர் சங்கர் - கலைஞரின் கைவண்ணத்தில் அண்ணன்மார் கதை.கொங்கு நாட்டின் செவி வழி கதைகளால் உந்தப்பட்டு, அதைப் பற்றி மேலும் தேடிப் பிடித்துப் படித்து கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட பொன்னர் சங்கர் என்னும் வரலாற்று காவியம் இயக்குநர் தியாகராஜனால் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.நிச்சயிக்கப்பட்ட மாந்தியப்பன் என்பவரை மறுத்து தன் மனதிற்கு உகந்த மணாளான அப்பாவி நெல்லியன் கோடனை மணக்கிறார் தாமரை நாச்சியார். அதனால் சினமுறும் தாமரையின் மூத்த சகோதரனான சின்னமலை கொழுந்து, தங்கையை வீட்டை விட்டு வெளியேற்றுகிறான். பொன்னி வளநாட்டை ஆளும் தாளையார் காளி மன்னன், தாமரையின் மைந்தர்களால் மரணம் ஏற்படும் என்ற ஆருடத்தை நம்பி பிறந்தவுடன் அக்குழந்தைகளை அழிக்க சதி திட்டமிடுகிறார். அச்சதித் திட்டத்தில் இருந்து இரட்டையர்களான அக்குழந்தைகள் எப்படி எவரால் தப்பித்து, வளர்ந்து தாளையார் காளியுடன் போரிட்டு வெல்கிறார்களா என்ற கேள்விக்க...
ஆடுகளம் விமர்சனம்

ஆடுகளம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆடுகளம் - விளையாடுபவர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள், நடுவர்கள், ரசிகர்கள், ஆடுகளத்தினைப் பராமரிப்பவர்கள் என ஆடுகளம் வகை வகையான மனிதர்களை எப்பொழுதுமே  தன்னுடன் வைத்திருக்கும். அதனாலேயே ஆடுகளத்தின் ஆரவாரத்தினை, ஆளரவமற்ற இரவிலும் உணர முடியும். காரணம் மனிதர்கள் அனைவரும் சதா விளையாடிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆடுகளங்கள் தான் ஒருவரிலிருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. வெற்றிமாறன் சேவல் சண்டை நடக்கும் திடல், அத்திடலில் உள்ள மனிதர்களின் மனம் என இரண்டு ஆடுகளத்தினைத் தனது படத்தில் காட்டியுள்ளார்.பேட்டைக்காரர் தயார்ப்படுத்தும் சேவல்களும், அவைப் பெறும் வெற்றிகளும் அப்பிராந்தியத்தில் அவருக்கென ஒரு தனி செல்வாக்கை ஏற்படுத்துகின்றன. காவல்த் துறை அதிகாரியான ரத்தினசாமி தனது தாயாரின் பழம்பெருமை புலம்பல்களைப் பொறுக்க முடியாமல், தாயாரின் கடைசி ஆசையாக எண்ணி பேட்டைக்காரருடன் சேவல் சண்டைக்கு ஒரு யு...
தொப்பை கணபதிக்கு போடு தோப்புகரணம்

தொப்பை கணபதிக்கு போடு தோப்புகரணம்

ஆன்‌மிகம்
      அரசமரத்தடி விநாயகர் அதிக சக்தி வாய்ந்தவரா? கணபதியின் திருநாமங்கள் எத்தனை?                                                                                 வேங்கடவரதன் காணிப்பாடிஅரச மரத்தடி விநாயகர் மட்டுமல்ல அரசமரமே சக்தி வாய்ந்தது தான்.  பெரியவர்கள் பஞ்சாயத்து பேசுவதற்கும் சிறியவர்கள் பம்பரம் விளையாடுவதற்கு மட்டுமே அரசமர நிழல் பயன்படுவதாக நினைப்பது தவறு.  சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் மதிய நேரம் அந்த நிழலில் இளைப்பாறினாலே தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.  இருக்கும் நோய் கூட வீரியம் குறையும். அரசமர காற்றிலிருக்கும் ஒரு வித மருத்துவ தன்மை கருப்பையில் கருதங்காது இருக்கும் நிலையை மாற்றுகிறது.  கண்ணை மூடி தியானம் செய்தால் மனம் குவியவில்லை எங்கெங்கோ அலைபாயுகிறது என கஷ்டப்படுபவர்கள் அரச மரத்தடியில் தியானம் செய்ய பழகுவார்களானால் சீக்கிரம் மனம் குவிந்து விடுவதை உணருவ...
தயவு செய்து பதில் எழுது

தயவு செய்து பதில் எழுது

ஆன்‌மிகம்
அன்புள்ள கடவுளுக்கு,   தம்மா துண்டு தமிழ்நாட்டை ஆளுகின்ற தலைவர்களே நிக்க நேரமில்லை, உட்கார பொழுதில்லை என்று லொங்கு லொங்குயென வேலையிருக்கோ இல்லையோ ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள்.  நீ ரொம்ப பாவம் இவ்வளவு பெரிய உலக்கத்தை ஒத்த ஆளா ஆட்சி நடத்தற, உனக்கு எம்புட்டு வேலையிருக்கும்.கண்ணுக்கே தெரியாம நிறைய உசுரு இருக்காமே.  அதுங்க தொடங்கி வயிறு பெருத்த மனுஷன் வரைக்கும் தினசரி நீ சோறு போட்டாகனும்.  கோடம்பாக்கத்துல மழை வந்துதா?  கோவில்பட்டியில வெயில் அடிக்கிறதா? என்பதையும் பார்த்தாகனும்.செத்தது எத்தனை பேரு, புதுசா பொறந்தது எத்தனை பேரு, அவனுக்கு என்ன கதை, என்ன பாத்திரம் என்று பிரிச்சு கொடுத்தாகனும்.ரெண்டு செகண்டு கண் மூடி உன் வேலையை பற்றி யோசிச்சா தலையே கிறுகிறுத்து போகிறது.  இருந்தாலும் எங்கோ ஒரு மூலையில் உன்னால் படைக்கப்பட்ட இந்த சின்ன ஜீவனின் கடிதத்தை நீ படிப்பாய் என்ற நம்பிக்கையில் எழுதுக...
டவுன்லோடர் – ஓர் அறிமுகம்

டவுன்லோடர் – ஓர் அறிமுகம்

தொழில்நுட்பம்
தினமும் இணையம் பயன்படுத்தும் நாம் அதிக அளவில் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு நாம் இரண்டு விதமான பதிவிறக்குபவர்களை (downloader) பயன்படுத்த வேண்டியுள்ளது.ஒன்று டைரக்ட் டவுன்லோடர் (அர்பிட், பிளாஷ் கெட், டவுன்லோட் அக்சிலேட்டர் பிளஸ், ப்ரீ டவுன்லோட் மேனேஜர்,..). அதாவது 100 மெகா பைட்டு குறைவாக உள்ள ஒரு கோப்பை பதிவிறக்கம் செய்வதற்கு பயன்படுத்தப் படுவது. இவ்வகை டவுன்லோடர்கள் பைல்களை ஒரு பரிமாறியிலிருந்து (செர்வெர்) மட்டுமே பதிவிறக்கம் செய்யும். அது மட்டும் இல்லாமல் ஒரு சில கோப்புளின் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி பின்னர் தரவிறக்கம் செய்ய முடியாது. இரண்டாவது டோர்ரன்ட் டவுன்லோடர் (பிட்டோர்ரன்ட் ,யுடோர்ரன்ட், பிட்கோமெட்,...). இவை 100 மெகா பைட்டுகளுக்கு மேல் உள்ள கோப்புகளை அதாவது படம், திருட்டு மென்பொருள், நிகழ்பட விளையாட்டுகள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்வதற்கு பயன்படுத்...
கடவுள் ராமனும் நாத்திகன் கேள்வியும்

கடவுள் ராமனும் நாத்திகன் கேள்வியும்

ஆன்‌மிகம்
   கேள்வி: உங்கள் பதிலால் எனது சந்தேக மனம் ஆறுதல் அடைகிறது. ராமன் வாழ்ந்து முடித்த பிறகுதான் ராமாயணம் எழுதப்பட்டிருக்க வேண்டும். அது எப்போது எழுதப்பட்டது அதை எழுதிய வால்மீகி என்பவர் யார்?                 ராமாயணம் நடந்த காலம் இதுதான் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று இதுவரை எவராலும் உறுதி செய்ய முடியவில்லை. இருந்தாலும் மகாபாரதம் எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பே ராமாயணம் எழுதப்பட்டு விட்டது. இதற்கு ஆதாரம் வியாச முனிவர் எழுதிய மகாபாரத்தில் வனபருவத்தில் ராமோ பாக்யாஞனாம்  என்ற பெயரில் ராமனின் கதை கூறப்பட்டுள்ளது. அதில் வால்மீகியின் சில சுலோகங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இதிலிருந்து மகாபாரதத்திற்கு முந்தியது ராமாயணம் என்பது எந்த விதமான ஐயங்களும் இல்லாது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலவிதமான சர்ச்சைகளும் வாதப்பிரதிவாதங்களும் ஏற்பட்ட நிலையிலும் மகாபாரதம் கி.மு. நான்காம் நூற்றாண்டில் எழுதப்...
ஜிமெயிலில் யாகூ மெயில் பார்க்கலாம்

ஜிமெயிலில் யாகூ மெயில் பார்க்கலாம்

தொழில்நுட்பம்
நம்மில் பலர் கட்டாயம் இரண்டிற்கு மேல் மின்னஞ்சல் முகவரிகள்(Mail id) வைத்திருப்போம், அவை தொழில் சார்ந்தோ அல்லது நண்பர்கள் சார்ந்தோ அல்லது பதிவுலகம் சார்ந்தோ இருக்கலாம். எத்தனை முகவரிகள் வைத்திருந்தாலும் அவற்றை இனி ஒரே ஜிமெயில் அக்கவுண்ட் மூலமாக இயக்கலாம்.  அவை கட்டாயம் மற்றொரு ஜிமெயில் அக்கவுண்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் POP access வசதிக் கொண்ட எந்தவொரு மின்னஞ்சல் சேவையாகவும் இருக்கலாம் உ.தா. யாஹூ, லைவ் போன்றவையும் ஜிமெயிலில் பயன்படுத்தலாம். அது எப்படி?முதலில் ஜிமெயில் settings செல்லவும் அங்கே இந்த Check mail using POP3 வரிசையில் add பட்டனை சொடுக்கவும் [படம்1] பின்னர் உங்களுக்கு தனியாக வரும் பெட்டியில் எந்த மின்னஞ்சல் முகவரியை இதனுடன் இணைக்க வேண்டுமோ அதை இங்கே கொடுக்கவும். அடுத்ததாக உங்கள் கடவுச்சொல்லைத் தரவும் (இது இணைக்கப்படும் அஞ்சலுடையது) அதன் கீழுள்ள விருப்ப தேர...
கூகுள் தொடும் ரிஸ்க்

கூகுள் தொடும் ரிஸ்க்

தொழில்நுட்பம்
மனித மூளையின் அதீத படைப்புகளில் ஒன்றான கணிப்பொறி.. வன்பொருள் (ஹார்ட்வேர்) மற்றும் மென்பொருள் (சாஃப்ட்வேர்) என்னும் இரண்டு வேறுபட்ட பிரிவுகளின் தொகுப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டும் பெரும்பாலும் தனி தனி நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு பின் ஒன்றிணைக்கப் படுகின்றன. இதில் மென்பொருள் கட்டளைகளை இடுகிறது. வன்பொருள் அவற்றை நிறைவேற்றுகிறது. மென்பொருள் தொகுப்பின் மையமாக இயங்கு தளமும் (ஆப்ரேட்டிங் சிஸ்டம்), வன்பொருள் தொகுப்பின் மையமாக நுண்செயலியும் (மைக்ரோ ப்ராசஸர்) செயல்படுகின்றன. பொதுவாக கணிப்பொறியின் செயல்திறன் அதன் வேகத்தைக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. கணிப்பொறியின் வேகத்தை பல்வேறு காரணிகள் நிர்ணயிக்கின்றன. எனினும் மைக்ரோ ப்ரோசெசசெர் முக்கிய பங்குவகிக்கிறது. நுண்செயலி கணினியின் இதயமாகவும், இயங்கு தளம் கணினியின் மூளையாகவும் செயல்படுகிறது. மென்பொருள் தொகுப்புகள் நுண்செயலியின் வடிவமைப்பிற்கு ...
ஈரம் விமர்சனம்

ஈரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"ஈரம்" என்ற பெயரைப் பார்த்தவுடன் இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வந்திருக்கும் சில்லென்ற மற்றொரு "காதல்" படம் என நினைத்திருந்தால் அது பாதி தான் உண்மை. இது த்ரில்லர் படமும் கூட என்பது தான் மீதி பாதி உண்மை. ஆனால் இரண்டு பாதி உண்மையும் தலைப்பை போல் சில்லென்றே உள்ளது என்பது மற்றொரு உண்மை.ரம்யா என்னும் மணமானப் பெண் தனது கள்ளத் தொடர்பு தெரிந்ததால் தற்கொலை செய்துக் கொள்ள, அதை விசாரிக்க வாசுதேவன் என்னும் காவல் துறை அதிகாரி வருகிறார். வாசுதேவனும் ரம்யாவும் கல்லூரி படிக்கும் பொழுது காதலித்தவர்கள். தன் காதலியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக நினைக்கும் வாசுதேவன் மேலும் விசாரிக்கிறார். எதிர் வீட்டு மாமி, அந்த பிளாட்டில் வசிக்கும் முதியவர், வாட்ச் மேன் என அனைவரும் ரம்யாவின் பிளாட்டுக்கு ஒருவன் வந்து விட்டு போவதாக குறைக் கூறுகின்றனர். அதைத் தொடர்ந்து குறை கூறிய மாமி ஒரு விபத்திலும், முதியவர் மர்மமான முற...