Shadow

Author: admin

ராஜபாட்டை விமர்சனம்

ராஜபாட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 ராஜபாட்டை - அரசர் செல்வதற்கான அகன்ற பாதை அல்லது நேர்முறையான வழி.படத்திற்கும், தலைப்பிற்கும் எந்தளவு தொடர்பு இருக்கும் என சரியாக ஊகிக்க முடியவில்லை. கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவர் தன் வெளிநாட்டு ஜீப்பில் செல்லும் சாலைகளைக் குறிக்கலாம் அல்லது நாயகன் தங்கி இருக்கும் விடுதிக்கு செல்லும் சாலையைக் குறிக்கலாம். ஆனால் கண்டிப்பாக நேர்முறையான வழி என்ற பொருள் வருமாறு தலைப்பு வைக்கப்பட்டிருக்காது என்பது மட்டும் திண்ணம்.அனல் முருகன் இரண்டாம் வரிசையில் நிற்கும் ஸ்டன்ட் ஆர்டிஸ்ட். தற்செயலாக முருகனுக்கு.. தட்சணாமூர்த்தி என்பவரை சில ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றி அடைக்கலம் தர நேருகிறது. தட்சணாமூர்த்திக்கு சொந்தமாக இருக்கும் ஓர் ஆசிரமத்தை, அது அமைந்திருக்கும் இடத்திற்காக 'அக்கா' என்றழைக்கப்படும் ரங்கநாயகி ஆக்கிரமிக்க முயல்கிறார். தட்சணாமூர்த்தியின் இடத்தை ஒரு கட்சியின் தலைவி ஆன அக்கா வள...
உச்சிதனை முகர்ந்தால் விமர்சனம்

உச்சிதனை முகர்ந்தால் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உச்சிதனை முகர்ந்தால் - தமிழகத்தில் தஞ்சம் புகும் ஈழத்துச் சிறுமி பற்றிய நெகிழ்வான படம்.புனிதா என்றழைக்கப்படும் புனிதவதியின் வயது 13. அவளின் சொந்த ஊர் கிழக்கிலங்கையின் முக்கிய நகரங்களில்(!?) ஒன்றான மட்டக்களப்பு.  சிங்கள இராணுவத்தினரால் களவியல் வன்முறைக்கு ஆளாகி கர்ப்பமுறுகிறார். இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பகிரங்கமாக பேசி சிறைச் செல்லும் பேராசிரியர் நடேசனும் அவரது மனைவி நிர்மலாவும், கள்ளப் படகில் வந்து சேரும் புனிதவதி மற்றும் அவரது தாயாருக்கு அடைக்கலம் அளிக்கின்றனர். தன் கணவர் சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருப்பாரோ என அச்சத்தில் தன் மகளை விட்டு விட்டு மீண்டும் இலங்கைத் திரும்புகின்றார் புனிதவதியின் தாயார். நடேசன் தம்பதியினருடன் தனித்து விடப்படும் புனிதவதியின் நிலை என்ன ஆனாது என்பதற்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.கடலில் கரைத்த பெருங்காயம் போல் வணிகக் குப்பைய...
ஸ்வாமி சரணம் ஐயப்பா!

ஸ்வாமி சரணம் ஐயப்பா!

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
[youtube]http://www.youtube.com/watch?v=rcQCkkVKC5w[/youtube]ஹரிவராசனம் விஷ்வ மோஹனம்ஹரித தீஷ்வரம் ஆராத்ய பாதுகம்ஹரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..சரண கீர்த்தனம்.. பக்த மானஸம்..பரண லோலுபம்.. நர்த்தனாலஸம்..அருண பாசுரம்.. பூத நாயகம்..ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..ப்ரணய சத்யகம்.. ப்ராண நாயகம்ப்ரணத கல்பகம்.. சுப்ர பாஞ்சிதம்ப்ரணவ மந்திரம்.. கீர்த்தனப்ரியம்..ஹரிஹராத்மஜம்.. தேவமாஷ்ரயே..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..சரணம் ஐயப்பா.. ஸ்வாமி சரணம் ஐயப்பா..துரஹ வாகனம்.. சுந்தரானனம்வரக தாயுதம்.. வேதவர்ணிதம்குருக்ருபாகரம்.. கீர்த்தனப்ரியம்ஹரிஹராத்மஜம்.. ...
மெளனகுரு விமர்சனம்

மெளனகுரு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 மெளனகரு - ஒரே பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படங்கள் மத்தியில் வந்துள்ள நல்லதொரு மாற்றுப் படம்.பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு கொலை செய்கிறார் காவல் துறை உதவி ஆணையர். அவருக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் உதவி செய்கின்றனர். பின் அந்தத் தவறை மறைக்க அவர்கள் மேலும் தவறுகள் செய்ய வேண்டி வருகிறது. இவர்களிடம் கருணாகரன் என்னும் கல்லூரி மாணவன் சந்தர்ப்ப வசத்தால் சிக்கிக் கொண்டு அல்லாடுகிறான். கருணாகரனின் எதிர்காலம் என்ன ஆனது என்பதற்கும், தவறிழைக்கும் காவல்துறையினர்கள் நிலைமை என்ன ஆனது என்பதற்கும் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.மருத்துவ மாணவி ஆர்த்தி ஆக இனியா. படத்தின் நாயகி என்றே சொல்ல முடியாது. திரையில் மட்டுமே தோன்றக் கூடிய பெண் போலில்லாமல் அன்றாட வாழ்வில் நாம் காணும் எண்ணற்ற கல்லூரிப் பெண்களில் ஒருவராக தெரிகிறார்.  எந்தவித பூச்சுகளும் அற்று நெற்றியில் பருக்கள் கொண்ட பெண...
மம்பட்டியான் விமர்சனம்

மம்பட்டியான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மம்பட்டியான் - 1983ல் தான் நடித்து வெற்றிப் பெற்ற படத்தை தற்போது தன் மகன் 'டாப் ஸ்டார்' பிரஷாந்த்தை நடிக்க வைத்து தயாரித்து இயக்கி உள்ளார் தியாகராஜன். இந்தப் படத்தின் நாயகன் பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து ஏழைகளுக்கு அளிக்கும் உத்தம தமிழ் ராபின்கூட்.சின்னசாமியையும், அவரது மனைவியையும் பெரியப் பண்ணையின் அடியாட்கள் வைத்து அடித்து எரித்து விடுகிறார். சின்னசாமியின் மகன் வீறு கொண்டு பெரியப் பண்ணையையும் அவருடன் இருக்கும் ஏழு பேரையும் கொன்று விடுகிறார். கத்தி எடுத்தது தான் எடுத்தாச்சு.. அப்படியே ஏழைகளைக் கொடுமைப்படுத்தும் பணக்காரர்கள்களை எல்லாம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவ முடிவு செய்கிறார். காட்டுக்குள் பதுங்கி இருக்கும் மம்பட்டியான் சட்டத்தின் நீண்ட கைகளில் சிக்கினாரா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.பெண் சிங்கம், இளைஞன் எனத் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்தாலும் மீரா ஜாஸ்மினை ரொம...
ஊளைச்சதைக் கோளாறு

ஊளைச்சதைக் கோளாறு

மருத்துவம்
சிலர் உடல் பருத்து சதைகள் தொங்கி நடக்கக் கூட சிரமப்படுவதைப் பார்க்கிறோம். இதே போல் உடல் எடை அளவிற்கு அதிகமாக அதிகரிப்பதை தான் ஊளைச்சதை (Obesity) என்கிறோம்.மேலை நாடுகளில் இது ஒரு சமூக நோயாகக் காணப்படுகிறது. இந்நோயால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்படுவதால் இது ஓர் சமூக நோயாகக் கருதப்படுகிறது. ஆனால், கீழை நாடுகளில் இது போன்ற பாதிப்புகள் பெரும்பாலானவர்களிடம் காணப்படாததால் இதை ஒரு சமூக நோயாகப் பார்ப்பதில்லை. எனினும் இந்நோய் அதிகரிக்காமல் காக்க வேண்டும். எனவே மக்கள் இதைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.உடலில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு படிவதாலேயே ஊளைச்சதை ஏற்படுகிறது.பொதுவாகவே பல்வேறு காரணங்களை இதற்கு குறிப்பிடலாம். உடல் பயன்படுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு உணவு வகைகளை உண்ணுதல் ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாறு அதிகமாக உண்ணப்படும் உணவால் கலோரிகள் கொழுப்புத் திசுவாக மாற்றப்பட்...
உணர்ச்சிகள்

உணர்ச்சிகள்

மருத்துவம்
 உடலும், மனமும் வெளிப்படுத்தும் தெரிவிப்புக் குறிகளே உணர்ச்சிகள். சில நேரங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறோம். சில நேரங்களில் கட்டுப்படுத்திக் கொள்ள முயல்கிறோம். இரண்டுமே தவறில்லை. ஆனால் உணர்ச்சிகளை அடக்கி வைப்பதுதான் தவறு.அடக்கி வைக்கிற உணர்ச்சிகள் எரிமலையாய் வெடிக்கும். உடல் சார்ந்த விதத்திலும், மனம் சார்ந்த விதத்திலும் அது தீங்கினயே விளைவிக்கும். நம் உடல் சார்ந்த நோய்களில் எழுபது சதவீதமானவை அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளாலேயே வருபவை. அவை கொஞ்சம் கொஞ்சமாய் நம் உடலையும், மனத்தையும் அரித்துத் தின்றுவிடும். "மனக் காயத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளவே நாம் உணர்ச்சிகளை அடக்கி வைக்கிறோம்" என்கிறார் தீபக் சோப்ரா. ஆனால் உணர்ச்சிகளை அடக்க முயல்வது தான் உண்மையில் நம்மை வேதனைக்குள்ளாக்கி விடும் என்பதை நாம் உணருவதில்லை. நாம் உணர்ச்சிகளை எவ்வளவு தான்அடக்கி வைக்க...
ஒஸ்தி விமர்சனம்

ஒஸ்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒஸ்தி - மேன்மை. மேதகு குணம் கொண்டவனாக நாயகன் இருப்பான் என தலைப்பைக் கண்டு யூகிக்கலாம். ஆனால் காவல்துறை அதிகாரியாக வரும் நாயகனின் காக்கிச் சட்டையில் இணைக்கப்பட்டிருக்கும் பெயர்த் தகட்டிலேயே அவரது பெயர் "ஓஸ்தி வேலன்" ஆக உள்ளது.நாயகன் பாலனாக இருக்கும் பொழுது அவனது தாய் மறுமணம் புரிந்துக் கொள்கிறார். சிறு வயது முதலே மாற்றாந்தகப்பனுடனும், அவர் மூலமாக பிறந்த தன் தம்பியிடமும் நாயகன் பகைமைப் பாராட்டி வருகிறான். நாயகனின் காளை பருவத்தில் அவனது தாய் இறக்க, மாற்றாந்தகப்பன் மற்றும் அவன் தம்பியுடனுனான உறவில் மேலும் சிக்கல் எழுகிறது. அந்தச் சிக்கல்களை நாயகன் எவ்வாறு கலைகிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.சந்தானம் இல்லாத தமிழ்ப் படம் நமுத்து போன பஜ்ஜி ஆகி விடும் போல. படத்தின் கலகலப்பிற்கு காரணமாக உள்ளார். வையாபுரி, மயில்சாமி, தம்பி இராமையா என நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் சந்தானம் மட்டுமே தனித்த...
எக்ஸைல் – சாருவின் மானசீக குரு யார்!?

எக்ஸைல் – சாருவின் மானசீக குரு யார்!?

கட்டுரை, புத்தகம்
Exile- அஞ்ஞாத வாசம், புகலிட வாழ்வு, அரசியல் தஞ்ச வாழ்க்கை இந்த மூன்று அர்த்தத்தில் எது எக்ஸைலுக்கு நெருக்கமாகப் பொருந்துகிறது என டின்னுக்கு சந்தேகம். புத்தக வெளியீட்டு விழாவின் பொழுது அருகில் அமர்ந்திருக்கும் ம.ரா.விடம் டின் கேட்டான். ஊரை விட்டு ஒதுங்கி வாழுறது என சொல்லி இருந்தார் ம.ரா. டின்னுக்கு குழப்பம் வந்து விட்டது. ஏன் பாவம் சாரு ஊரை விட்டு ஒதுங்கி வாழணும் என்று டின்னுக்கு புரியவில்லை. தமிழ்நாட்டில் எழுத்தாளனின் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு என்ற வெறுப்பு சாருவிற்கு. சாரு நிவேதிதா இதை பலமுறை புத்தக வெளியீட்டு விழாவில் சொல்லி விட்டார். போன ஆண்டை விட இந்த முறை காமராஜர் அரங்கில் கூடிய கூட்டம் அதிகம். ஆனா சாருவிற்கு வந்தவர்களை விட வராதவர்களைப் பற்றியே அக்கறை. இதுவே கேரளமாக இருந்தால் அவ்வளவு பேர் வந்திருப்பாங்க. இங்க சினிமாக்காரன் பின்னாடி தான் போவீங்க என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். எ...
போராளி விமர்சனம்

போராளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
போராளி - தனக்குள் மிருகங்களைப் மறைத்தவாறு போலியான முகங்களோடு சில மனிதர்கள் வாழ்கிறார்கள். அத்தகைய மிருக மனிதர்கள் மத்தியில் வாழும் ஒவ்வொருவருமே போராளி தானென்று படம் தொடங்குகிறது. தந்தையின் இரண்டாம் மனைவி மற்றும் அவள் தம்பி் என உறவினர்கள் சேர்ந்து அதி புத்திசாலி பள்ளி மாணவனான குமரனைப் படிக்க அனுப்பாமலும், எவருடனும் பழக விடாமலும் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். குமரனினுடைய பெரியப்பாவின் நண்பரும் அவர் மகளும், குமரனுக்குச் செய்யப்பட்ட கொடுமைகளை எடுத்துச் சொல்கின்றனர். சொத்துக்கள் குமரன் பெயரில் உள்ளது எனத் தெரிய வரும் குமரனுடைய சித்தியின் கோபம் அவருக்கு உதவியாய் இருப்பவர்கள் மேல் விழுகிறது. விளைவு குமரனினுடைய பெரியப்பாவின் நண்பரும் அவர் மகளும் கொல்லப்படுகின்றனர். நாயகன் வீறு கொண்டு எழுந்து எய்தவர்களை விட்டு எய்யப்பட்ட அம்புகளை (அடியாட்கள்) கொன்று தீர்க்கிறான். முன்பே சித்தியால் வள...
மயக்கம் என்ன விமர்சனம்

மயக்கம் என்ன விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மயக்கம் என்ன - கலக்கத்திலோ, குழப்பத்திலோ, உணர்வுநிலைத் தடுமாற்றத்திலோ உள்ளவரைப் பார்த்து வாஞ்சையுடன் கேட்கப்படும் அன்பாக  தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.வனவிலங்கு புகைப்படக்காரர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் உள்ளவர் கார்த்திக் சுவாமிநாதன். கார்த்திக்கின் நெருங்கிய நண்பனான சுந்தர், யாமினி என்னும் பெண்ணை அவனது நட்பு வட்டத்திடம் தன் தோழியாக அறிமுகப்படுத்துகிறான். யாமினிக்கு கார்த்திக்கைப் பிடிக்கத் தொடங்குகிறது. நண்பனின் தோழி என கார்த்திக் விலகப் பார்த்தாலும் இயற்கையின் வேதியியலில் இருந்து தப்ப இயலாமல் யாமினியிடம் காதல் வயப்படுகிறான். சுந்தருக்கு உண்மைத் தெரியும் பொழுது, சுந்தரின் தந்தை இடையில் புகுந்து கார்த்திக்கிற்கும் யாமினிக்கும் மணம் புரிந்து வைக்கிறார். தான் எடுத்த புகைப்படத்திற்கு விருதை வேறொருவர் பெறுகிறார் எனத் தெரிந்ததும் மயக்கமுற்று விழுகிறான் கார்த்திக். அந்த மயக்கத்தில் இருந்து க...
பாலை விமர்சனம்

பாலை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாலை - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டின் வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படம் என்று பெருத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படம். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கினாராம் இப்படத்தின் இயக்குனர் ம.செந்தமிழன்.முல்லை நிலப்பகுதியான ஆயக்குடி (ஆயர்க்குடி) -யில் வாழும் தமிழர்களை வடக்கில் இருந்து வரும் தமிழறியா வந்தேறிகள் பாலை நிலப்பகுதிக்கு துரத்தி விட்டு விடுகின்றனர். முல்லைக்கொடி என தற்காலிக தங்குமிடத்திற்கு பெயர் வைத்துக் கொண்டு வாழுகின்றனர் தமிழர்கள். பாலை (!?) வருகிறது என அறிகுறி தென்படுவதால் குழப்பமுறும் தமிழர்கள், இழந்து விட்ட தன் சொந்த மண்ணான ஆயக்குடியைக் கைப்பற்ற விரும்புகின்றனர். அவர்கள் விருப்பம் நிறைவேறியதா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.தமிழர்கள் வந்தேறிகளால் பாலை நிலத்திற்கு துரத்தப்பட்டதாகவும், அத...
தம்பி வெட்டோத்தி சுந்தரம் விமர்சனம்

தம்பி வெட்டோத்தி சுந்தரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தம்பி வெட்டோத்தி சுந்தரம் - உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்கிறது படத்தின் சுவரொட்டி. 'கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் படித்தவர்கள் சதவிகிதம் அதிகம்; அதே போல் குற்ற எண்ணிக்கைகளின் அளவும் அதிகம்' என ஓர் ஆய்வு குறிப்பிடுவதாக சொல்லும் இயக்குனர் வி.சி.வடிவுடையானின் சொந்த மாவட்டமும் அஃதே.எம்.ஏ., பி.எட். படித்த சுந்தரத்திற்கு 'வெட்டோத்தி இல்ல'த்தை மட்டும் விட்டுவிட்டு அவனின் பெற்றோர் காலமாகின்றனர். அரசு வேலைக்கென்றே காத்திருக்கும் சுந்தரம், தன் வீட்டை வங்கி ஏலத்திற்கு விடாமல் இருப்பதைத் தடுக்க கடத்தல் தொழிலில் இறங்குகிறான். படித்தவனின் வாழ்க்கை எப்படித் திசை திரும்பியது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.கரண் சலிப்படையாமல் மீண்டும் நாயகனாக தோன்றியுள்ளார். சுந்தரம் என்னும் பாத்திரத்திற்கு பொருந்துகிறார். முடிந்த வரை நல்லவனாக தம் பிடித்து பார்த்து விட்டு, கடத்தல்...
ஏழாம் அறிவு விமர்சனம்

ஏழாம் அறிவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஏழாம் அறிவு- ஆறு வருடங்களுக்குப் பிறகு தமிழில் படம் இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். கஜினி திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைகிறார்; கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார் என்று எதிர்பார்ப்புகளை ஏகத்திற்கு வளர்த்து, கர வருடத்தின் ஐப்பசி 9ஆம் தேதி அன்று வந்த தீபாவளி திருநாளில் வெளியிடப்பட்டது. ஆறாவது அறிவினும் உயர்ந்த அறிவு என தலைப்பைப் பொருள் கொள்ளலாம். தனது குருமாதாவால் பணிக்கப்படும் போதி தர்மர் சைனாவில் பரவும் தொற்று நோயைத் தடுக்க பல்லவ நாட்டின் தலைநகரமான காஞ்சியில் இருந்து புறப்படுகிறார். குருமாதாவின் கட்டளையை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களுக்கு தற்காப்புக் கலையையும் பயிற்றுவித்து, அம்மக்களுக்காகவே இறக்கிறார். 1598 வருடங்களுக்குப் பிறகு அவரது மரபணு அமைப்பை இணையத்தில் காணும் சுபா ஸ்ரீனிவாசன், போதி தர்மரின் வாரிசுகள் எவரேனும் காஞ்சியில் வாழக் கூடும் என த...
வேலாயுதம் விமர்சனம்

வேலாயுதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வேலாயுதம் - நவீனத்துவத்தால் சோடைப் போயிருக்கும் தமிழ்க் கலாச்சாரம், வீரம் மற்றும் இன்னபிற போன்றவைகளைத் தட்டி எழுப்பும் ஓர் உன்னத திரை முயற்சி.  குறியீடான படத்தின் தலைப்பில் இருந்தே அதை உணரலாம். வேல் பண்டையத் தமிழர்களின் ஆயுதம். வேலாயுதன் என்பது முருகனைக் குறிக்கும். முருகன் தமிழ்க் கடவுள்; வேலாயுதம் தமிழ்ப் படம். ஒவ்வொருவருக்கு உள்ளும் வேலாயுதம்(கடவுள்) வீற்றிருக்கிறார் என்ற வேதாந்த சாரத்தினை படத்தின் இறுதியில் நாயகனின் வசனமாக வைத்து மக்களை விழிப்புற செய்கிறார்கள்.பவுனூர் என்னும் கிராமத்தில் பாசக்கார அண்ணன், தங்கை வாழ்கிறார்கள். மனிதர் உணர்ந்துக் கொள்ள அவர்களுடையது மனித பாசம் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது. புனிதமானவர்களின் வாழ்க்கையில் சோதனைக்கு பஞ்சமிராது. அப்படித் தான் அண்ணன், தங்கை இருவரும் சென்னைக்கு பயணிக்கும் பொழுது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் அவர்கள் வாழ்க்கையில் சோதனை நேர்கிறது...