Shadow

Author: admin

தீயா வேலைசெய்யணும் குமாரு விமர்சனம்

தீயா வேலைசெய்யணும் குமாரு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
47616542891*வது தடவையாக வெள்ளைத் தோலினையுடைய பெண்கள் காதலிக்கப்பட வேண்டியவர்கள் எனச் சொல்லும் தமிழ்ப் படம்.சஞ்சனாவைப் பார்த்த நொடியிலேயே, குமாருக்கு சில்லென சாரலடித்து அவள் மேல் காதல் வந்துவிடுகிறது. பிறகு குமார் எப்படித் தீயாக வேலை செய்து சஞ்சனாவை காதலிக்க வைக்கிறான் என்பதே கதை.குமாராக சித்தார்த். வாயில் விரல் வைத்தாலும் கடிக்கத் தெரியாத அப்பாவி ஐ.டி. தொழிலாளியாக நடித்துள்ளார். உதயம் NH4-இல் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டிருந்த சித்தார்த், இப்படத்தில் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டிருப்பவராக வழக்கம் போல் வந்து அசத்துகிறார். காதலித்து திருமணம் புரிந்துக் கொள்ளும் வம்சாவழியில் வந்த சித்தார்த், காதலிக்க யோசனைக் கேட்டு ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறார். இந்தச் செலவழித்தல் நகைச்சுவைப் பிரிவில் வருகிறது. காதலிக்க ஐடியா சொல்லி சம்பாதிப்பவராக சந்தானம். சித்தார்த்தின் அறிமுகம் கூட படத்தில் சா...
குட்டிப் புலி விமர்சனம்

குட்டிப் புலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சுந்தர பாண்டியன் குட்டிப் புலியாக உருமாறியுள்ளார். காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு, இளித்த முகத்துடன் நாயகியை சந்துக்குள்ளே பார்ப்பதில் இருந்து வெளிவரும் எண்ணமே இல்லை போலும்.குட்டிப் புலி என்பவன் ஊரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வம்பிழுத்து, உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையில் ஊர் சுற்றும் சண்டியர். அவனுக்கு கல்யாணம் செய்து பார்க்க நினைக்கிறார் அவனது பாசக்கார தாய். தாயின் எண்ணம் ஈடேறியதா என்பது தான் கதை.தொடக்கத்தில் நண்பனுக்கு ஒன்றெனில் முதல் ஆளாக வருவார் சசிகுமார். பின் காதலிப்பவர்களுக்கு ஒன்றெனில் வந்தார். பிறகு தன்னை நம்பியவர்களுக்காக எதையும் செய்பவராக இருந்தார். இப்பொழுது தன் தெருவில் வசிப்பவர்களுக்காக எதையும் செய்பவராக மீசையை முறுக்கிக் கொண்டே இருக்கார். ராஜ் கிரணுக்கு சவால் விடும் வகையில் தொடை தெரிய லுங்கி கட்டியவாறு படம் நெடுகிலும் வருகிறார்.படத்தின் ஒரு காட்சியில், “புலி...
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6 விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குறிப்பிடும்படியான தமிழ்ப் படங்கள் வெளிவராத நிலையில், ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் ஆறாம் பாகம் தமிழகத் திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.இறந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் லெட்டி உயிருடன் இருக்கிறாள். அவ்வுண்மையைத் தெரியபடுத்தி வின் டீசலின் உதவியைக் கோருகிறார் வ்ரெஸ்லிங் புகழ் ராக். வின் டீசல் தனது அணியைச் சேர்க்கிறார். அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் பட்சத்தில், மின் தடையை ஏற்படுத்தும் கருவியை உருவாக்கி விற்க நினைக்கும் ஓவன் ஷாவைப் பிடிக்க ஒத்துக் கொள்கின்றனர். லெட்டி மீட்கப்பட்டாளா, ஓவன் ஷா பிடிப்பட்டானா போன்ற கேள்விகளுக்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.ஸ்பெயினிலுள்ள கேனரி தீவின் மலைப் பாதை கொண்டை வளைவுகளில் போட்டியிடும் இரு கார்களில் இருந்து தொடங்குகிறது. பின் இடைவெளியே இல்லாமல் வெறும் ஆக்ஷன் தான்.ஐந்தாவது பாகத்தைத் தொடர்ந்து வின் டீசலும், ராக்கும் இணைந்து ...
சடுதி மரணம்

சடுதி மரணம்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 21சடுதி மரணத்தினால் மனிதனுக்கு ஏற்படும் தீய விளைவுகளை உணர்ந்ததினால் தான் போலும் கிறிஸ்தவ தேவாலயங்களில், “பிதாவே, போர்முனை இறப்புகள், கொலைச்சாவுகள், சடுதி மரணங்கள் ஆகிய தீமைகளிலிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள்” என்று பிரார்த்திக்கின்றார்கள்.ஒவ்வொரு மனிதனும் பூவுலகில் வாழவேண்டிய காலம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் ஒரு சிலர் தமது முற்பிறப்புகளில் ஏதோ பெருந்தவறுகள் புரிந்த காரணத்தினால் அவைகளின் பிரதிபலனாக கர்மாவின் நியதிகளுக்கேற்ப சடுதி மரணத்தை அடைய வேண்டிய நிர்க்கதிக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.இயற்கையின் படைப்புகளில் பிறழ்வுகள் (Freaks) ஏற்படுவதுபோல நமது வாழ்விலும் நமது அறிவுக்குப் புலனாகாத காரணங்களின் வினைப்பயனாக விபரீதங்களும் விபத்துக்களும் நடைபெறுகின்றன.சடுதி மரணம் அடைந்தவர் இவ்வுலகில் பரிசுத்த வாழ்வு வாழ்ந்தவராகவோ, ஆன்மீக முன்...
நேரம் விமர்சனம்

நேரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காலத்தோடு இயைந்து, “சூது கவ்வும்” என்றே திரைப்படத்திற்கு பெயர் வைக்கும் அளவு தமிழ்த் திரையுலகம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், “தர்மம் வெல்லும்” என்ற காலாவதியான ஆதி நம்பிக்கையை தூசி தட்டி இப்படத்தின் கருவாக வைத்துள்ளார் இயக்குநர்.வேலையை இழந்த வெற்றிக்கு, தங்கை கல்யாணத்திற்கு வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டிய நெருக்கடி. நண்பன் அளிக்கும் பணமும் களவாடபடுகிறது. போதாக்குறைக்கு தங்கையின் கனவன் வேறு மீதமுள்ள வரதட்சனை தொகையைக் கேட்கிறான். மும்முனை தாக்குதலில் சிக்குண்ட வெற்றியின் நிலையென்ன என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு அசட்டுத்தனம் வழியும் முகத்துடன், ‘சூது கவ்வும்’ படத்தில் நடித்திருப்பார் சிம்ஹா. இந்தப் படத்தின் முரட்டு முதுகெலும்பே வட்டிராஜாவாக வரும் அவர் தான். முகபாவம், உடல்மொழி, மிரட்டலான...
நாகராஜ சோழன் MA, MLA விமர்சனம்

நாகராஜ சோழன் MA, MLA விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1994 இல் வெளிவந்து, இன்றளவும் அதன் அரசியல் நையாண்டிக்காக நினைவு கூரப்படும் படம் “அமைதிப்படை”. 19 வருடங்களுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக நாகராஜசோழன் MA, MLA படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மணிவண்ணன்.ஒரு வருட அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு, மீண்டும் தீவிர அரசியலுக்குள் வருகிறார் நாகராஜ சோழன். அவரின் வரவால் என்னென்ன அரசியல் மாற்றங்கள் நடக்கின்றன என்பதுடன் படம் நிறைவுறுகிறது.நாகராஜ சோழனாக சத்யராஜ். முகத்திலொரு நக்கலான சிரிப்புடன் படம் முழுவதும் வருகிறார். தன் பாத்திரத்தை அனுபவித்து நடித்திருப்பார் போலும். எதிர்கட்சித் தலைவரைப் போல் நாக்கைத் துருத்திக் காண்பிப்பது என சில நொடிகள் எங்கேனும் படத்தில் சிரித்த முகமாக இல்லாமல் இருப்பாரேயன்றி, மற்றபடி கடைசிக் காட்சி வரை சிரித்தபடியே உள்ளார். ‘அமைதிப்படை’யில், அமாவாசை பாத்திரத்தில் ஒரு வில்லத்தனம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் நோக்கமே ஆளுங்கட்சி...
சூது கவ்வும் விமர்சனம்

சூது கவ்வும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படம் தொடங்கிய சில நிமிடங்களில் இருந்து படம் முடியும் வரை விலா நோகச் சிரிக்க வைத்துள்ளனர் 'சூது கவ்வும்' குழுவினர்.   ஆட்களைக் கடத்தி, மிரட்டி (!?) பணம் சம்பாதிக்கும் நல்ல கடத்தல்காரர் தாஸ். ஊரை விட்டு சென்னை ஓடி வந்த ஒருவனும், வேலையை இழந்த அவனது இரண்டு நண்பன்களும் தாஸுடன் இணைந்து அமைச்சர் மகனைக் கடத்துகின்றனர். அதன் பின் தாஸ் குழுவினருக்கு என்ன நடந்தது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.   தாஸாக விஜய் சேதுபதி. 2012 இல் இறுதியில், விஜய் சேதுபதி நடிப்பில் வந்து அசத்திய நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை விட பல மடங்கு அசத்துகிறது இப்படம். இரண்டிலுமே நாயகனாக நடித்திருந்தாலும், விஜய் சேதுபதி பின் வரிசையில் நிற்கும் நபர் போலவே வருவார். எனினும் படத்தை சுமப்பவர் அவரே! கதை கேட்டு படங்களை தேர்ந்தெடுப்பதால் தான் பெரிய ஹீரோக்கள் என அறியப்படுபவர்கள் மண்ணை கவ்வும் பொழுது, விஜய் சேதுபதி திரையர...
மூன்று பேர் மூன்று காதல் விமர்சனம்

மூன்று பேர் மூன்று காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குறிஞ்சி, மருதம், நெய்தல் என மூன்று திணைகளில் வாழும் மூன்று இணைகளின் காதல் பற்றிய படம்.கண்ணுக்கு குளிர்ச்சியாய் மலையில் தொடங்குகிறது படம். வாய் ஓயாமல் பேசும் வருணாக விமல். ஏதாச்சும் பேசிய வண்ணமே உள்ளார். 'உங்க வலதுக் கையைப் பிடிச்சுக்கவா?" என விமல் கேட்பதற்கு மறுக்கிறார் நாயகி. உடனே விமல், 'அப்ப என் கையையாவது நீங்க பிடிச்சுக்குங்க' என்கிறார். உடனே வேறொரு காட்சி. வேறென்னவோ பேசுகிறார். நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். அறிமுக நடிகையான லாசினி அஞ்சனாவாக நடித்துள்ளார். நிச்சயமாகிவிட்ட அஞ்சனாவை துரத்தித் துரத்தி, மன்னிக்க, பேசிப் பேசி காதலிக்கிறார். லாசினிக்கு நிச்சயிக்கப்பட்டவருடன் பிணக்கு ஏற்பட்டு காதல் விலக, விமலின் காதலை ஏற்கிறார். லாசினிக்கு நடிக்க அதிகம் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கிடைத்ததிலும் சோபிக்கவில்லை. விமல் திடீரென லாசினியுடன் பேசுவதை தவிர்க்கிறார்.ஏன...
எதிர்நீச்சல் விமர்சனம்

எதிர்நீச்சல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உங்க பெயர் குஞ்சிதபாதம் என்றிருந்திருந்தால்.. உங்க நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்தப் படத்தின் நாயகனுக்கு அது தான் பிரச்சனை. அவனது பெயருடன் எதிர்நீச்சல் போட்ட வண்ணம் உள்ளான்.நாயகன் ஹரீஷாக சிவகார்த்திகேயன். இவரது பூர்வாசிரம பெயர் தான் குஞ்சிதபாதம். அசட்டுத்தனமாய் சிரித்தபடி முகத்தை வைத்திருப்பதில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார். விஜய் டி.வி.யில் பெற்ற அடையாளங்களை, 3 படத்திற்குப் பிறகு முடிந்த மட்டும் உதறியுள்ளார். நாயகி கீதா மிஸ்ஸாக ப்ரியா ஆனந்த். வாமனன், புகைப்படம், 180 என தமிழில் முன்பே நடித்துள்ளார். ஸ்ரீதேவியின் கம்-பேக்கான இங்கிலீஷ் விங்கிலீஷிலும் நடித்திருப்பார். ஆனால் இப்படம் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கும். இப்படத்தில் குழந்தைகளுடன் சிரித்து சிரித்துப் பேசிப் பழகும் ஆங்கில ஆசிரியையாகவும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பணம் 'கலெக...
ஐவரிட்ட ஞானம்

ஐவரிட்ட ஞானம்

கட்டுரை, மற்றவை
மு.கு.: கடவுள் வந்திருந்தார் || சுஜாதா || பாரதி மணி || நடிப்பனுபவம் (!?)விதியாகப்பட்டது வலியது. சிவனேயென அனைத்துக்கும் பார்வையாளனாக இருந்த என்னை கவிஞர் பத்மஜா நாராயணன் பாரதி மணியின் நாடகத்தில் கோர்த்து விட்டு விட்டார். ‘ஒன்னுமில்ல தினேஷ். சின்னதா மாப்பிள்ளை கேரக்டர். அஞ்சாறு வசனம் தான். சிரிச்சுட்டே இருக்கணும். உங்களால் பண்ண முடியாதா? சும்மா நடிக்காதீங்க!!’ என்றார் நான் நடிக்க மறுத்த பொழுது. அவருக்கென்ன அச்சு அசல் மாமியாய் கலக்கி விட்டார்.முதல் நாள் நாடகம் முடிந்ததும் என் நண்பரிடம் என் நடிப்புத் திறமையைப் பற்றிக் கேட்டேன்.“மாப்பிள்ளை மாதிரி பளபளன்னு இருந்தீங்க.”“அலோ நடிப்பைப் பற்றிச் சொல்லுங்க. நிச்சயதார்த்தம் தடைப்பட்டவுடன் நல்லா பதட்டப்பட்டேனா!?”“பதட்டமா? நீங்களா!! உங்களால் அதெல்லாம் முடியுமா? சீன் முடியுற வரை சிரிச்ச முகமா தான் இருந்தீங்க.”பதட்டப்படா விட்டாலு...
நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்

நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன்னை போல் இருக்கும் ராஜாவைத் தேடி, இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து சென்னை புறப்படுகிறான் ஜீவா. ஜீவா ராஜாவை சந்திக்கிறானா இல்லையா என்பதற்கு பதிலுட்ன் படம் நிறைவேறுகிறது.நாயகனாக நகுல். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவரது படம் மீண்டும் வந்துள்ளது. அவரது முதற்படமான 'பாய்ஸ்' வந்து பத்து வருடங்கள் ஆகிறது. எனினும் அவர் கொஞ்சி பேசும் தமிழ் மட்டும் இன்னும் மாறவே இல்லை. இந்தப் படத்தில் கிக்-பாக்சிங் வித்தகராக, திலீப் சுப்பராயனின் ஸ்டன்ட்டில் ரசிக்க வைக்கிறார். ரேனிகுண்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிஷாந்த் நகுலின் நண்பன் வஹாப்பாக நடித்துள்ளார். நன்றாக நடித்திருந்தாலும், அவரது வாயிலும் வசம்பைத் தேய்க்கணும்.நாயகியாக அவின் மோடி. ரீமா என்ற பாத்திரத்தில் நாயகனுக்கு தோழியாக நடிக்கிறார். திடீரென வில்லியாகி அவதாரம் எடுத்து கிலியை ஏற்படுத்துவார் என பல திரைப்படங்கள் பார்த்த அனுபவத்...
யாருடா மகேஷ் விமர்சனம்

யாருடா மகேஷ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் ட்ரெயிலர் தான் படத்தின் மூளதனமே!! ('ல' குறில் அல்ல நெடிலே!! மூளையின் மழூஉ.)பொறுப்பற்ற ஞாபக மறதிக்காரனான ஷிவா சிந்தியாவைக் காதலிக்கிறான். கல்யாணம் செய்துக் கொள்கிறான். அவர்களுக்கு குழந்தையும் பிறந்து விடுகிறது. மகேஷ் என்பவரிடமிருந்து சிந்தியாவிற்கு ஒரு அழைப்பு வருகிறது. யார் "அந்த" மகேஷ் என்றும், அவனை சிவா கண்டுபிடித்தானா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது. இந்தப் படத்தில் வரும் அனைத்தும் "குறியீடுகள்" என்ற வாசகம் எழுத்தாகவும், அதை மேஜர் சுந்தரராஜன் குரலில் படித்தும் காட்டுகின்றனர். படத்தின் தொடக்கத்தில் இருந்தே இயக்குநரின் சேட்டை தொடங்கி விடுகிறது. கூட்டமாக நிற்பவர்களில் ஒருவர் மீது மட்டும் ஏன் கல் விழுகிறது என தமிழிலும், ஆங்கிலத்திலும் சொல்லி கதையை அனிமேஷனில் தொடங்குகின்றனர். அரைத்த மாவை அரைக்காமல் புதிதாக முயற்சி செய்துள்ளனர். முதல் பாதி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்...
உதயம் விமர்சனம்

உதயம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மழைப் பொய்த்த மாரிக் காலத்திற்கு பின் வரும் கடும்கோடையின் வறட்சி போல தமிழ்த் திரைப்படங்களில் கதைக்கான வறட்சி நிலவுகிறது.கதையில் பல ‘மீண்டும்’. பதின்மத்தில் இருக்கும் நாயகி காதல் வயப்படுகிறாள். அவளை, காவலை மீறி நாயகன் தூக்கிச் செல்கிறான். தங்களை துரத்துபவர்களிடம் இருந்து காதலர்கள் தப்பினரா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வியக்க வைக்கிறார். இது அவரது முதற்படமாக வர வேண்டிய திரைக்கதை என சொல்லப்படுகிறது. பிருத்விராஜ் – சம்யுக்தா கதை எண்ணற்ற முறை சொல்லப்பட்டு விட்டாலும், அதை மற்றொரு முறை சுவாரசியமாக சொல்ல முயன்றுள்ளார். படத்திலிருந்து பார்வையாளனை விலகாமல் பார்த்துக் கொள்கிறார். ஆனால் படம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. உதாரணம் நாயகி போலவே நாயகன் “எப்படி”யும் வந்த...
ஆத்மா

ஆத்மா

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 20ஆத்மா என்று எதுவும் கிடையாது என்று விஞ்ஞானிகளால் நிரூபிக்க முடியாது. விஞ்ஞானத்தால் மனிதனின் எண்ணங்கள் எதில் இருந்து பிறக்கின்றது என்பதை கண்டு பிடிக்கமுடியவில்லை.பருப்பொருளிலும் விசையிலும் (Matter and Force) இருந்து மனிதனின் பிரக்ஞை பிறப்பதாக விஞ்ஞானம் கூறவில்லை. விசையில் இருந்து விசை பிறக்கிறது. மூளை அணுக்கூறுகளின் அசைவிலிருந்து புலஉணர்வோ அறிவோ பிறப்பதில்லை. அவை விஞ்ஞானத்தைக் கடந்த ஒருசக்தியில் இருந்து பிறக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. மூளை மனிதனின் புலன் உணர்வுகளுக்குத் துணை போகும் ஒரு கருவியேயொழிய அது அவனுடைய உணர்வுகளுக்குக் காரணியான உறுப்பு அல்ல.சடப்பொருளுக்கும் உயிர்த்துடிப்புள்ள பொருளுக்கும் உள்ள வித்தியாசம், உயிர்த்துடிப்புள்ள பொருளுக்கு ‘நான் இருக்கிறேன்’ என்ற அறிவு இருப்பதே. சூரியன் இருப்பதை சூரியப் பிரகாசம் வெளிப்படுத்துவதுபோல...