Shadow

Author: Dinesh R

வடம் | ஏரும் தெய்வம் எருதும் தெய்வம் | விமல் – நட்டி

வடம் | ஏரும் தெய்வம் எருதும் தெய்வம் | விமல் – நட்டி

சினிமா, திரைச் செய்தி
மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான 'வடம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர், ''நான் இந்தத் துறைக்குப் புதிது. இயக்குநர் ஆறு மாதத்திற்கு முன் என்னைச் சந்தித்து கதை சொல்வதற்கு முன் மாட்டைப் பற்றிச் சொன்னார். அது எங்களுக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று சந்திப்புகளிலும் கதையைப் பற்றி விரிவாகச் சொன்னார். அதன் பிறகு என்னுடைய பார்ட்னர்களுடன் விவாதித்தோம். இயக்குநர் எங்களிடம் எப்படி கதையைச் சொன்னாரோ, அதை அப்படியே திரையில் கொண்டு வந்து இருந்தார். நாங்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். இதற்காக முதலில் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா நடிகர் நடிகைகளும் நன்றாக நடித்திருந்த...
வடம் – Rural sports entertainer

வடம் – Rural sports entertainer

சினிமா, திரைச் செய்தி
மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ராஜசேகர் தயாரிப்பில், விமல் - நட்டி நட்ராஜ் நடிப்பில் இயக்குநர் கேந்திரன். வி இயக்கத்தில் டி. இமான் இசையில் உருவான 'வடம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கேந்திரன், ''கதை முழுமையாக எழுதி முடித்தவுடன் முதலில் இசையமைப்பாளர் இமானிடம் தான் சொன்னேன். அவர் முழுவதும் கேட்டுவிட்டு நான் இசையமைக்கிறேன் என்று சொன்ன தருணத்திலேயே எனக்குத் தெரிந்து விட்டது இந்த படம் ஹிட் என்று. இதற்காக இமானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரைத் தொடர்ந்து இப்படத்தின் கதையை விமலிடம் சொன்னேன். அதற்குப் பிறகு நட்டியிடம் சொன்னேன். அப்போது அவர், ‘நீங்கள் சொன்ன கதையை மாறாமல் அப்படியே படமாக்கி விடுவீர்களா?’ என்றார். ‘நான் நிச்சயமாக எடுக்கிறேன்’ என்று சொன்னவுடன் அவரும், அவரும் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். இப்படத்த...
மகரம் – தமிழின் முதல் மான்ஸ்டர் படம்

மகரம் – தமிழின் முதல் மான்ஸ்டர் படம்

சினிமா, திரைச் செய்தி
ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் வழங்கும் A. அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் ஜானரில் ஒரு முழுமையான அறிவியல் புனைவாக உருவாகியுள்ள படம் மகரம் ஆகும். ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்கக் கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன், இப்படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இசையமைப்பாளர் ஆதர்ஷ் சந்திரசேகரன், "புதிய டீமாக இருந்தாலும் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து தைரியமாகச் செயல்பட்டுள்ளோம். திரைப்படம் முழுவதும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கடல் காட்சிகளில் பல அபாயங்களை எதிர்கொண்டு படமாக்கியுள்ளனர். அதிலும் தரத்தில் எந்த சமரசமும் செய்யவில்லை. இந்தப் படம் கண்டிப்பாக...
ஆழி விமர்சனம் | Aazhi – The Ocean review

ஆழி விமர்சனம் | Aazhi – The Ocean review

சினிமா, திரை விமர்சனம்
ஆழி என்றால் கடல் எனப் பார்வையாளர்களுக்குத் தெரியாமல் போய்விடுமோ என்று 'தி ஓஷன்' என்பதையும் தலைப்பில் முன்னெச்சரிக்கையாகச் சேர்த்துக் கொண்டுள்ளனர். நாகர்கோவிலில் அரசியல் செல்வாக்கு உள்ள கோடீஸ்வரராகவும் வஸ்தாதாகவும் இருக்கிறார் மூர்த்தி. அவரது மகள் முகிலாவை ஏழையான அருள் காதலிக்கின்றான். இக்காதல் விஷயம் தெரிந்தவுடனே, அருளைப் படகில் கட்டிப் போட்டு கடலுக்குள் அழைத்துச் சென்று நையப்புடைக்கிறார் மூர்த்தி. அதிலிருந்து அருள் தப்பி மூர்த்திக்கு எதிராக ஆற்றும் எதிர்வினையே ஆழி படத்தின் முடிவாகும். ரத்தம் வழிய வழிய மூர்த்தியிடம் அடி வாங்குகிறார் அருள். ஒரு வதை முகாமில் சிக்கிய உணர்வைத் தருமளவுக்கு அடிக்கிறார், அடிக்கிறார், அருளை அடித்துக் கொண்டே இருக்கிறார் மூர்த்தி. நல்லவேளையாக மகள் மீது மூர்த்தி வைத்திருக்கும் பாசத்தையும், முகிலா - அருள் காதலையும், அருள் தன் குடும்பத்து மேல் வைத்திருக்கும் பாசத்தைய...
Fourth Floor விமர்சனம்

Fourth Floor விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது காதலி அனு எனும் அனுபமாவைத் தேடிச் சென்னைக்கு மாற்றலாகி வருகிறார் தீரன். ஒரு குடியிருப்பு வளாகத்தில், அவரது நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் வீட்டில் தங்குகிறார். அங்கு குடி வந்ததில் இருந்து, மரணத்தைப் பற்றிய கனவுகளாக வந்து தீரன் தூக்கமின்றி அலைக்கழிக்கப்படுகிறார். தனது தூக்கமின்மைக்கும், தன்னைச் சுற்றி நிகழும் அமானுஷ்ய சங்கதிகளுக்கும், காணாமல் போய்விட்ட தனது காதலி அனுபமாவிற்கும் ஏதோ தொடர்பிருப்பதாக உணர்கிறார் தீரன். தீரனின் தேடல் தொடங்கி முடியுமிடமாக அக்குடியிருப்பின் நான்காவது மாடி உள்ளது. அமானுஷ்ய புதிர் அவிழ்ந்து தீரன் எதிர்கொள்ளும் சவால்களே படத்தின் மீதிக் கதை. படத்திற்குள் ஒரு நல்ல திகிலான குறும்படம் ரசிக்கும் படி வருகிறது. பார்க்கிங்கிற்குப் படியிறங்கும் ஆதித்யா கதிர், மொட்டை மாடியில் தனியாகப் பார்க் செய்யப்பட்டுள்ள காரிடம் வந்து சேருகிறார். இப்படி சிறு சிறு சுவாரசியங்கள் படம் ந...
Made in கொரியா | பிரியங்கா மோகன் | NetFlix

Made in கொரியா | பிரியங்கா மோகன் | NetFlix

சினிமா, திரைத் துளி
ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ரா.கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன் மற்றும் தென் கொரிய நடிகர் பார்க் ஹை-ஜின் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ’மேட் இன் கொரியா’ இரண்டு கலாச்சாராங்களை ஒன்றிணைக்கிறது. தமிழ்நாட்டின் ஒரு சிறிய ஊரில் தனது அன்றாட வாழ்க்கையைத் தாண்டி, ஒருநாள் தென் கொரியாவுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு செண்பாவுக்கு இருக்கிறது. கொரியக் கலாச்சாரத்தின் மீது சிறுவயது முதலே ஈர்ப்பு கொண்டவளான செண்பா அதை அனுபவித்து பார்க்க வேண்டும் என விரும்புகிறாள். சியோலில் எதிர்பாராத விதமாக அவளுக்கு அந்த அனுபவம் கிடைக்கிறது. ஆனால், அவள் கற்பனை செய்ததை விட யதார்த்தம் பல சவால்களை அவள் முன் நிறுத்துகிறது. அதைத்தாண்டி அவளின் சுயத்தை கண்டுபிடிக்கும் நெகிழ்ச்சியான வாழ்க்கைப் பயணமே ‘மேட் இன் கொரியா’. படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக், “கொரிய மற்றும் தமிழ்க் கலாச்சாரங்கள...
ஹபீபி – நன்றி, உண்மை, அன்பு | ரோமியோ பிக்சர்ஸ்

ஹபீபி – நன்றி, உண்மை, அன்பு | ரோமியோ பிக்சர்ஸ்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் மீரா கதிரவன் இயக்கிய ‘ஹபீபி’ திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடவுள்ளதாக தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் ராகுல் அறிவித்துள்ளார்.இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘ஹபீபி’ திரைப்படம் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை உண்மைக்கு நெருக்கமாகப் பதிவு செய்கிறது. உண்மையான அன்பு, உறவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட இந்தப் படத்தின் தலைப்பின் அர்த்தம் ‘என் அன்பே’ என்பதாகும்.‘அவள் பெயர் தமிழரசி’ மற்றும் ‘விழித்திரு’ போன்ற படங்களில் சமூக அக்கறையுள்ள கருத்துகள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மீரா கதிரவன் ‘ஹபீபி’ படத்தில் மீண்டும் அழுத்தமான கதைக்களத்தோடு வருகிறார். புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உணர்வுப்பூர்வமான இந்த கதைக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.படம் குறித்து இயக்குநர் மீரா ...
தடயம் விமர்சனம் | Zee 5

தடயம் விமர்சனம் | Zee 5

OTT, Web Series, திரை விமர்சனம்
சமுத்திரக்கனி நடித்திருக்கும் முதல் இணையதொடராகும். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஈச்சம்பள்ளம் எனும் தமிழக - ஆந்திர எல்லைப் பகுதிதான் தொடரின் களம். அதிகாரம் எளியவனை எப்படிக் காயப்படுத்துகிறது, காயப்பட்டவன் சமூகத்தில் என்னவாகிறான் என்பதைத் தொடர் அழுத்தமாகப் பதிந்துள்ளது. விருப்ப ஓய்வு பெறத் துடிக்கும் திறமையான காவல்துறை அதிகாரியான சமுத்திரக்கனியை, மரியாதையுடன் நடத்தி, தொடர் கொலைகளை விசாரிக்கும் வழக்கில் குழுவில் சேர்க்கிறார் ஷிவதா. கொலைகாரர்கள் இருவர் எனத் தடயத்தைக் கொண்டு கண்டுபிடிக்கிறார் சமுத்திரக்கனி. மேலும், தமிழக - ஆந்திர எல்லையோர ஊர் என்பதால், கொலைகாரர்கள் எல்லை தாண்டி வந்திருக்கக்கூடும் என ஆந்திராவிற்குச் சென்று விசாரிக்கின்றனர். அதே பேட்டர்னில் நடந்த 70 கொலைகளைப் பற்றித் தெரிய வருகிறது. கொலைகாரர்கள் யார், ஏன் அத்தனை கொலை செய்கிறார்கள் என்பதை விற...
“நான் எம்.ஆர்.ராதாவின் மகள்” – ராதிகா சரத்குமார் | தாய் கிழவி

“நான் எம்.ஆர்.ராதாவின் மகள்” – ராதிகா சரத்குமார் | தாய் கிழவி

சினிமா, திரைச் செய்தி
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகை ஸ்ரீபிரியா, “படத்தின் முன்னோட்டம் மட்டும்தான் பார்த்தேன். அதைப் பார்த்துவிட்டு ராதிகாவிடம் படத்தின் நிகழ்வுக்கு நான் வர வேண்டும் என்று கேட்டேன். ஏனெனில், என் ராதிகாவைப் பலரும் புகழ்ந்து பேசுவதை நான் கேட்க வேண்டும். இந்தப் படத்தில் ராதிகாவின் அப்பாவைப் பார்த்தேன். ராதிகாவின் அம்மா இருந்திருந்தால் இந்தப் படம் பார்த்து எவ்வளவு மகிழ்ந்திருப்பாரோ அதே சந்தோஷம் எனக்கும் இருக்கிறது. ராதிகாவின் நடிப்பை பார்த்து கமல் வியந்துபோய் பாராட்டினார். ராதிகாவுக்குத் தேசிய அளவில் நடிப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. இந்தப் படம்...
ராதிகா: லேடி கமல்ஹாசன் | தாய் கிழவி

ராதிகா: லேடி கமல்ஹாசன் | தாய் கிழவி

சினிமா, திரைச் செய்தி
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார், “’தாய் கிழவி’ கதாபாத்திரத்தில் ராதிகா கலக்கி இருக்கிறார். நான் நடித்த ‘ஆழி’ படமும், ராதிகாவின் ‘தாய் கிழவி’ படமும் பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. எனது மனைவி வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றது போல! ஊர்ப்பக்கம் தாய் கிழவி என்றால் அனைவரையும் அரவணைத்துக் கட்டிக்காப்பவரைதான் அப்படிக் கூப்பிடுவோம். அத்தகைய டைட்டில் ரோலில் நடிக்க உழைப்பு, அர்ப்பணிப்பு, தன் மீது நம்பிக்கை வேண்டும். திரையுலகில் 50 வருடங்கள் நெருங்குகின்ற ராதிகாவிற்கு நான் சொன்ன அனைத்தும் இருப்பதால்தான் இந்தப் படத்தில் தைரியமாக நடித்திருக்கிறா...
A படம் – விவசாயப் புரட்சியும், கார்ப்பரேட் சூழ்ச்சிகளும்

A படம் – விவசாயப் புரட்சியும், கார்ப்பரேட் சூழ்ச்சிகளும்

சினிமா, திரைச் செய்தி
மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில், ராஜகணபதி தயாரிப்பில், கேஸ்ட்லெஸ் சிவா.கோ இயக்கத்தில், ஜோஸ் பிராங்கிளின் இசையில், சதீஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் “ஏ படம்” ஆகும். இப்படம் விவசாயப் புரட்சியையும், விவசாய மக்களை கார்ப்பரேட் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்ற மையக்கருத்தையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது இப்படம். இப்படத்தில், கதையின் நாயகனாக ராஜகணபதியும், கதாநாயகியாக மேகா ஸ்ரீயும் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சந்திர போஸ், இயக்குநர் கேஸ்ட்லெஸ் சிவா.கோ, மஸ்காரா அஸ்மிதா, சுஷ்மிதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஏலகிரி மற்றும் ஏற்காடு பகுதியில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இப்படத்தைப் பற்றித் தயாரிப்பாளர் V. ராஜகணபதி, “நாங்கள் திரைப்படத்தை அழகாக எடுத்தோம். ஆனால் தணிக்கைச் சான்றிதழ் வாங்கும்போது தான் மிகவும் சிரமத்திற்கு உள்ளானோம். சுமார் ...
Second case of சீத்தாராம் விமர்சனம்

Second case of சீத்தாராம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தொடர் கொலைகள் நடப்பதைத் தடுக்க முடியாமல் தடுமாறுகிறார் காவல்தூறை அதிகார் சீத்தாராம். கிடைக்கின்ற துப்புகளை இணைத்து, இருவரை அணுகிக் கைது செய்தாலும், எதிர்பாராத ஒருவரே அனைத்துக் கொலைகளுக்கும் காரணமாக உள்ளார். அவரை எப்படி சீத்தாராமன் கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் முடிவு. படத்தின் த்ரில்லிங் அம்சத்தைத் தனது இசையால் மிக அழகாகக் கொண்டு வந்துள்ளார் இசையமைப்பாளர் நவனீத் ஷாம். கொலை நடந்த ஒவ்வொரு வீட்டிலும், ஒரு சின்ன மர வீணை பொம்மை கிடைக்கிறது. அவ்விஷயத்தைத் தனது இசையால் சுவார்சியப்படுத்தியுள்ளார் நவனீத். படத்திற்கான உளநிலை அமைப்பதைக் (mood set) கச்சிதமாகத் தனது கோணங்களால் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஹேமந்த். நாயகன் விஜய ராகவேந்திராவுடன் இணைந்து, Seetharam Benoy Case No. 18 (2021), Case of Kondana (2024) எனும் படங்களைத் தொடர்ந்து மூன்றாம் முறையாகப் போலீஸ் கதையை எடுத்துள்ளார் இயக்குநர் தேவிபிரசா...
“மை லார்ட்: இது படம் கிடையாது; பெரும் பொறுப்பு” – ஷான் ரோல்டன்

“மை லார்ட்: இது படம் கிடையாது; பெரும் பொறுப்பு” – ஷான் ரோல்டன்

சினிமா, திரைச் செய்தி
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் 'மை லார்ட் (My Lord)' திரைப்படமாகும். பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படக்குழுவினர் நன்றி நவில்தல் சந்திப்பில் கலந்து கொண்டனர்.இந்நிகழ்வினில் பேசிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், "சில படங்கள், நாம் ஒரு பணி எடுத்திருக்கிறோம், நாம் அதை நன்றாகச் செய்யவேண்டும் என தோன்றும். ஒரு சில படங்கள் மட்டுமே இது வெறும் படம் கிடையாது, ஒரு இசையமைப்பாளராகவும் சரி, ஒரு மனிதனாகவும் இது நமக்கு ஒரு பெரிய பொறுப்பு, இதில் வேலையை மட்டும் முடித்தால் பத்தாது, இதை நாம் பதிவாகவும் அமைக்க வேண்டும் என இரு பொறுப்புகள் ஆகிவிடும். எப்போதுமே ராஜு முருகன் சார் ...
Fourth Floor – எந்த ஜானருக்குள்ளும் அடங்காத படம்

Fourth Floor – எந்த ஜானருக்குள்ளும் அடங்காத படம்

சினிமா, திரைச் செய்தி
மனோ க்ரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் A.ராஜா தயாரிப்பில், இயக்குநர் L.R. சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்” ஆகும். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், "இன்றைக்குத் தமிழ் சினிமாவில் நிறைய புதுப் புதுத் திறமையாளர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வருகிறார்கள். எல்லாருமே சரியான வழிகாட்டுதலோடு, குறைந்த பட்ஜெட்டிலேயே அவங்க படங்களை எடுக்க உதவி செய்தால், இன்னும் நிறைய நல்ல படைப்பாளிகள், தமிழ் சினிமாவுக்குள் வர முடியும். இந்தப் படத்தின் ட்ரெய்லரிலேயே நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள். அனிமேஷன், திரில்லர், கனவுகள்,ஒரு மனிதன...