Shadow

சினிமா

36 முத்தங்களின் பின்னணி.!

36 முத்தங்களின் பின்னணி.!

சினிமா, திரைத் துளி
டீஸர் வெளியான பின், ஒரே ஒரு முத்தக் காட்சிக்கு 36 டேக்குகள் வாங்கினாராம் ஜி.வி.பிரகாஷ் குமார் எனச் சொல்லப்பட்டது. “டீஸரைப் பார்த்துட்டு அனைவரும் கேட்டது, ‘ஏன் ஒரு நல்ல பையனை இப்படியாக்கி வச்சிருக்கீங்க?’ என்பதுதான். நான் ஒன்னும் செய்யலை. அவரது இயல்பே அப்படித்தான். வெளில யாருக்கும் அது தெரில. சொன்னாலும் நம்ப மாட்டேங்கிறாங்க. இப்ப இருக்கிற லவ்வுன்னா என்ன? அதை எந்தக் கட்டுப்பாடும் இல்லாம தனது ஃப்ரீ ஜோனில் இருந்து நடிச்சிருக்கார் ஜி.வி. இது முழுக்க முழுக்க பசங்களுக்கான படம். ஒவ்வொரு பொண்ணும், பையனும் படத்தோட தன்னைப் பொருத்திப் பார்த்துப்பாங்க. படத்தின் முதல் பாதி எழுதி முடிச்சதுமே, இவர்தான் நடிக்கணும்னு முடிவு பண்ணிக் கேட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, அப்போ பென்சில் டார்லிங் படம்லாம் ஸ்டார்ட் பணவே இல்லை. ‘என்னடா சொல்றா நீ?’ன்னு கேட்டார். அப்புறம் அவரது டார்லிங் படமும் ரிலீஸ் ஆகிடுச்சு. ...
கேடுகெட்ட கேவலமான லவ் ஸ்டோரி

கேடுகெட்ட கேவலமான லவ் ஸ்டோரி

சினிமா, திரைத் துளி
“த்ரிஷா இல்லனா நயன்தாரா – இந்த காலகட்டத்துக்கான லவ் படம். இன்னும் சரியா சொல்லணும்னா, கேடுகெட்ட கேவலமான லவ் ஸ்டோரி இது. இந்தப் படத்தின் இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரம் தன் சொந்த வாழ்க்கையில் பண்ண லவ், காதல் கேட்ட லவ்வெல்லாம் வச்சு கற்பனை கலந்து கதையாக்கியிருக்கார். இப்பயிருக்கிற யூத் ஆடியன்ஸுக்குப் பிடிக்கிறாப்ல படம் எடுத்திருக்கார்” என்றார் படத்தைத் தயாரித்த கேமியோ பிலிம்ஸ் C.J.ஜெயகுமார். படத்தை வழங்கும் ஸ்டுடியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா, “படம் தர லோக்கல்! இதுக்குன்னு இருக்கிற ஆடியன்ஸ்க்கு படம் வந்து நாளாச்சு” என ஜி.வி.பிரகாஷின் படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் திறமையைப் பாராட்டினார். “ஜி.வி.க்கு எந்த கதாப்பாத்திரமாவும் மாறி நடிக்கிற திறமை இருக்கு. நல்ல டைமிங் சென்ஸ் இருக்கு. ம்யூஸிக் போலவே நடிப்பிலும் கலக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக ஹிட். ஏன்னா.. அரை டஜன் படம் பண்றோம்; அதுல நமக்கே தெரி...
பாபநாசம் விமர்சனம்

பாபநாசம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன் குடும்பத்தை உலகமாக நினைத்து வாழுபவர் அண்ணாச்சி சுயம்புலிங்கம். அந்த சின்னஞ்சிறு உலகத்தில், அழையாத விருந்தாளி ஒருவரால் சிக்கலொன்று ஏற்படுகிறது. அச்சிக்கலால் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் எப்படி சுயம்புலிங்கம் தன் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. படத்தின் முதற்பாதி, அதன் மூலமான மலையாளப் படங்களுக்கே உரித்தான ஆர்ப்பட்டமில்லாத காட்சிகளாய் நகர்கின்றன. அதை கலகலப்பாக்குவது எழுத்தாளர் ஜெயமோகனின் வசனங்களே. அங்காடித் தெரு படத்துக்குப் பின், இப்படத்திற்கே கைதட்டல்களைப் பெறுகின்றன அவரின் வசனங்கள். கதாப்பாத்திரங்களின் வசன உச்சரிப்புக்கு உதவிய எழுத்தாளர் சுகாவின் பங்கும் குறிப்பிடத்தக்கது. த்ரிஷ்யத்தின் ஜோர்ஜ் குட்டி முகத்தில் எந்த பாவனையும் காட்டாதவர்; மன்னிப்பைக் கூட, வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கலங்காமல் கம்பீரமாகவும் அழுத்தமாகவும் கை கட்டிக் கேட்பவர். மாறாக பாபநாசத்தின் ஒட்டு மீசை ...
அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி

அன்புக்காக ஏங்கி அலையும் டெய்சி

சினிமா, திரைத் துளி
டெய்சி என்ற எட்டு வயது குழந்தையின் பாசத்தை எடுத்துக் கூறும் இக்கதை சமீபத்திய திகில்/ பேய் படங்களிலிருந்து பெரிதும் வித்திசயமாய் உருவாகியுள்ளது. உண்மையான நிகழ்வுகளை மையமாக வைத்து செண்டிமென்ட் - திகில் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம். எம்.ஆர்.கே. உடன் இணைந்து கதை இயற்றி இயக்குநராக அறிமுகமாகும் ஸ்ரீநாத் ராமலிங்கம், தனது படத்தைப் பற்றிக் கூறுகையில், "ஒவ்வொரு குழந்தையும் பெற்றோர்களின் வாழ்க்கை என்னும் சுவரை அலங்கரிக்கும் சித்திரமே. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் தங்களது பெற்றோரின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் ஜனிக்கின்றனர் என்ற கூற்றை உறுதிபடுத்தும் கதை இது. டெய்சி அன்புக்காக ஏங்கி அலைபாயும் ஒரு உக்கிரமான எட்டு வயது சிறுமியின் ஆவியைப் பற்றிய கதை. நிஜ வாழ்க்கையில் நான் பார்த்து அறிந்த சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையே டெய்சி. இன்றைய குடும்பங்களுக்குத் தேவையான க...
ஜே.ஆர். ரங்கராஜு

ஜே.ஆர். ரங்கராஜு

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. வடுவூர் துரைசாமி ஐயங்கார் துப்பறியும் நாவல்கள் எழுதி புகழுடன் இருந்து வந்த அதே காலத்தில், அவரைப் போலவே துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் மிகவும் திறமை வாய்ந்த மற்றுமொரு எழுத்தாளர் ஜே.ஆர். ரங்கராஜு. ’ராஜாம்பாள்' என்கிற இவரது நாவல் இதே பெயரில் திரைப்படமாக 1935இல் வெளிவந்தது. மீண்டும் இக்கதை இரண்டாவது முறையாக 1951இல் தயாரிக்கப்பட்டு இதே 'ராஜாம்பாள்' என்கிற பெயரில் வெளிவந்தது. நாடகக்காவலர் என்று பின்னாளில் பெயர்பெற்ற ஆர்.எஸ்.மனோகரின் அறிமுகப்படம் இது. இதில் மனோகர் கதாநாயகனாகத்தான் அறிமுகமானார்.  கதாநாயகி சிலரால் கடத்திச் செல்லப்படுகிறார். கடத்தியவர்கள் அறியாதவாறு ஒரு துண்டுச்சீட்டில் 'மோசம் போனேன் கோபாலா' என்கிற வாக்கியம் ஒன்றை எழுதி அதைத் தரையிலே வீசிவிட்டுச் செல்வார். அதைக் கண்டெடுத்து அதை வைத்தே குற்றவாளிகளைக் கண்டுபிடித்துவிடும் துப்பறியும் நிபுணர் கதாநாயகன் மனோகர். படம் மிக...
வடுவூர் துரைசாமி ஐயங்கார்

வடுவூர் துரைசாமி ஐயங்கார்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்..1931ல் தமிழ் சினிமா பேசத் தொடங்கியதற்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களின் கதைகள் அனைத்துமே புராண இதிகாசங்களிலிருந்து உருவப்பட்டு சினிமாவாகத் தயாரிக்கப்பட்டவை. கதாகாலட்சேபம் மாதிரி பாடல்களுக்கிடையே கதையைத் திணித்துவிடுவார்கள். ஒரு படத்தில் ஐம்பது அறுபது பாடல்கள் என்பது சர்வ சாதாரணம். கச்சேரி கேட்கப்போகிறேன் என்பதற்குப் பதிலாக கச்சேரி பார்க்கப்போகிறேன் என்று சொல்லும் அளவில்தான் அக்காலப் படங்கள் இருந்திருக்கின்றன. அம்மாதிரியான சூழலில் 1935இல் 'மேனகா' என்றொரு படம் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. அது சமகாலப் படம். சமூகப் படம். டி.கே.எஸ் சகோதரர்கள் முதலில் நாடகமாக நடித்துக்கொண்டிருந்ததைத் திரைப்படமாகத் தயாரித்தார்கள். இயக்குநர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த ராஜா சாண்டோ. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இப்படத்தின் மூலமாகத் திரை உலகில் பிரவேசித்தார். இந்தப் படத்தின் கதை வடுவூர் துரைசாமி ஐய...
நடன இயக்குநரின் யாளி

நடன இயக்குநரின் யாளி

திரைத் துளி
ஏ.பி. க்ரியேஷன்ஸ் (A.B Creations) சார்பில் நடிகை அக்ஷயா தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் ‘யாளி’. கதையும் அவருடையதே! அக் ஷயா ஏற்கனவே “கலாபக் காதலன்”, “உளியின் ஓசை” போன்ற படங்களில் நடித்துள்ளார். அக்ஷயாவின் கதைக்கு, ‘காதல் கந்தாஸ்’ திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் காதல், வெயில், அங்காடித் தெரு, எம் மகன், நான் மகான் அல்ல, டார்லிங் போன்ற படங்களுக்கு நடன இயக்குநராக பணி புரிந்தவர். கந்தாஸ் ஏற்கனவே “நீ நாதே நா” என்ற நேரடி கன்னட வெற்றிப் படத்தை இயக்கிவர். யாளி, இவருக்குத் தமிழில் முதல் திரைப்படம். இது காதல், காமெடி கலந்த த்ரில்லர் படமாம். இதில் தமன், அக்ஷயா, அர்ஜுன், மனோபாலா, ஊர்வசி ஆகியோர் நடிக்கின்றனர். முழுத் திரைப்படமும் மலேசியா நாட்டில் பினாங்கு, மலாக்கா, லங்காவி, டாப்பிங், ஜெண்டிங் மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் மிகப் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.  இசையமைப்பாளராக திரு. S...
சகுந்தலை (1940)

சகுந்தலை (1940)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: ஜி.என்.பாலசுப்ரமணியம்; எம்.எஸ்.சுப்புலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.எஸ்.துரைராஜ்) 1940 ஆம் வருஷம் தமிழ்த்திரையுலகிற்கு ஒரு முக்கியமான வருஷம். இந்த வருஷம் வெளிவந்து பெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் சகுந்தலை. ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் கதையை விட தலையாய அம்சமாக இருந்தது அவற்றின் பாடல்கள் தாம். புதிதாகத் தோன்றியிருந்த சினிமாவை, நாடகத்தின் தொடர்ச்சியாகவே கருதினர் அன்றைய மக்கள். பவளக்கொடி, ஸ்ரீவள்ளி போன்ற அக்கால பிரபல நாடகங்களில் பாடப்பட்டுவந்த பாடல்களினால் வெகுவாகக் கவரப்பட்டிருந்த மக்கள், அதைப் போலவே திரையிலும் எதிர்பார்த்ததன் விளைவு தான் ஆரம்பகாலப் படங்களின் ஏராளமான பாடல்களுக்கான காரணமாக இருக்க முடியும். பின்னணி பாடுவது என்கிற ஏற்பாடுகள் எல்லாம் தோன்றியிராத காலம், எனவே சினிமாவில் நடித்தவர்கள் பெரும்பாலும் பாடத் தெர...
மாயலோகத்தில்

மாயலோகத்தில்

சினிமா, தொடர்
1931இல் பேச ஆரம்பித்தது தமிழ்த் திரைப்படங்கள். ஆரம்ப கால திரைப்படங்கள் அனைத்தும் புராண இதிகாசக் கதைகளையே உள்ளடக்கியதாக இருந்தன. இந்நிலையில், தமிழ்த்திரையின் முதல் சமூகப் படமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட திரைப்படம் 'மேனகா'. என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமான இத்திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் டி.கே.எஸ்.சகோதரர்களின் 'ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் கம்பெனி'. இது 1934இல் வெளிவந்தது. இக்கதையின் ஆசிரியர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். இவர் அக்காலத்தில் வெகுஜன ரசிகர்களால் நன்கு படிக்கப்பட்ட பல துப்பறியும் நாவல்களின் ஆசிரியர். எனவே திரைப்படம் சென்ற முதல் எழுத்தாளர் என்கிற பெருமை இவருக்கே உரியது. இவரைத் தொடர்ந்து பல எழுத்தாளர்கள் திரைத்துறைக்குள் நுழைந்தார்கள்; அல்லது அந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் திரையில் பயன்படுத்தப்பட்டன. ஆரம்ப காலங்களில் திரைத்துறையில் நடப்பவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. படப்பிடிப்பு நிலையங...
பழைய பயோஸ்கோப்

பழைய பயோஸ்கோப்

சினிமா, தொடர்
'பயாஸ்கோப்' என்றதும் பயாஸ்கோப் காலத்திற்குப் போய்விடவேண்டாம். பழைய திரைப்படங்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகவே இந்தத் தலைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தொடரில் 1940 தொடங்கி 1960 முடிய மொத்தம் ஐம்பது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் இடம்பெறுகின்றன. ஆரம்பகால திரைப்படங்கள் பற்றிய நமக்குக் கிடைக்கும் செய்திகள் போதுமானதாக இல்லை. திரைப்படம் சார்ந்து எழுதிய சில எழுத்தாளர்களும் ஏராளமான புள்ளி விவரங்களையே தந்து சென்றிருக்கிறார்கள். சிலர் கதையை மட்டும் எழுதியிருக்கிறார்கள். 'ராண்டார்கை', ஹிந்துவில் எழுதி வரும் திரைப்படம் பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை. அவைகள் மிகச் சுருக்கமாக இருக்கின்றன. நினைவில் வைத்துக் கொள்ள தேவையில்லாத தோல்வியுற்ற படங்களைப் பற்றியும் ஏனோ எழுதி வருகிறார்! பழைய வெற்றி பெற்ற திரைப்படங்கள் பற்றி சற்று விரிவாக (விமர்சனம் அல்ல) எழுதிப் பார்க்கவேண்டுமென்று தோன...