Shadow

சினிமா

மினியன்ஸ் விமர்சனம்

மினியன்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Minions) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூவிடம் பணி புரியும் மினியன்ஸ்களை டெஸ்பிக்கபிள் மீ 1 & டெஸிபிக்கபிள் மீ 2 ஆகிய படங்களிலேயே பார்த்து விட்டோம். ஆனால் அவைகள் யார் என்ன ஏது போன்ற விவரங்கள் அப்படங்களில் சொல்லப்படவில்லை. அவர்களின் வரலாறைத்தான் மினியன்ஸ் படத்தில் சொல்லியுள்ளனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மிக மூத்த சின்னஞ்சிறு உயிரினங்கள்தான் நம் அழகு மஞ்சள் நாயகர்களான மில்லியன்ஸ். அவர்களின் ஒரே லட்சியம் ஒரு வில்லனைத் தங்களுக்குத் தலைவனாகப் பெற வேண்டுமென்பதே.! அதற்காக அவர்கள் அணுகாத வில்லன்கள் இல்லை. நம்மை ஜுராசிக் வேர்ல்டில் அச்சுறுத்திய டைனோசரான டி-ரெக்ஸ் முதல் செங்கிஸ் கான், டிராகுலா என எண்ணற்ற வில்லன்களை நோக்குகின்றனர். என்ன சாபமோ தெரியவில்லை, தாங்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களையே ஒவ்வொரு முறையும் ஒரு விபத்தில் மினியன்ஸே கொன்று விடுகிறார்கள். மனம் வெறுத்து, லட்சியம் நிற...
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

சினிமா, தொடர்
மாயலோகத்தில்..கல்கி என்கிற இலக்கியவாதியை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது என்கிற அளவில் மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர். வெகுஜன வாசகர்களை இவரைப்போல் தன்வசம் இழுத்தவர்கள் மிகவும் குறைவு. 1899இல் புத்தமங்கலம் எனும் ஊரில் பிறந்தார். இது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. படித்துக்கொண்டிருக்கும்போதே பாதியில் படிப்பை உதறிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1922ஆம் ஆண்டில் முதல் சிறைவாசம். விடுதலை ஆகி வெளிவந்த பின் திரு வி. கல்யாண சுந்தரனார் ஆசிரியராக இருந்த 'நவசக்தி' பத்திரிகையில் வேலைக்கு அமர்ந்தார். சிறிது காலம் சென்றபின், நவசக்தியை விட்டு விலகி, திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்தி வந்த பத்திரிகை ஒன்றின் உதவி ஆசிரியராக சேர்ந்து, திருச்செங்கோடு ஆசிரமத்திலேயே வாழ்ந்து வந்தார். 1930இல் மறுபடியும் சுதந்திரப்போராட்டம், சிறைவாசம், 1932இல் விடுதலையாகி வந்த பின், எஸ்.எஸ்.வாசனின...
திருடர்கள் ஜாக்கிரதை – பொற்பந்தல் காவல் நிலையம்

திருடர்கள் ஜாக்கிரதை – பொற்பந்தல் காவல் நிலையம்

சினிமா, திரைத் துளி
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து JSKஃபிலிம் கார்பரேஷன் மற்றும் லியோ விஷன்ஸ் கூட்டாக தயாரிக்கும் திரைப்படம் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும். இப்படம் வரும் 24ஆம் தேதி வெளி வருகிறது. இது ஒரு முழுநீள காமெடி திரைப்படமாகும். மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி  வணிக ரீதியிலும் பெரும் வெற்றி பெறும் என நம்பிக்கையில் உள்ளது தயாரிப்புத் தரப்பு. அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சிங்கம்புலி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பக்ஸ், ராஜ் ஆகியோர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்....
கமர்ஷியல் பரிணாமத்தில் அசோக் செல்வன்

கமர்ஷியல் பரிணாமத்தில் அசோக் செல்வன்

சினிமா, திரைத் துளி
தமிழ்த் திரையுலகில் குறுகிய காலத்தில் தனக்கென இடம்பிடித்த சில கதாநாயகர்களில் அசோக் செல்வன் ஒருவர். தனது மெல்லிய புன்னகையால் காதல் நாயகனாக பல ரசிகர்களை தன் பக்கம் இழுப்பவர். முழுநீள கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாய் உருவாகியுள்ள ' சவாலே சமாளி' படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கியிருக்கிறார். ‘கழுகு’ புகழ் சத்யசிவா இயக்கியிருக்கும் ‘சவாலே சமாளி’ படத்தில் உள்ள தனது கதாபாத்திரத்தைப் பற்றி இவ்வாறுக் கூறினார்.  “ஒரு படத்திற்கு கதையே பிரதானம் என்று திண்ணமாய் நம்புபவன் நான். நான் இது வரை ஏற்று நடித்த பாத்திரங்கள் சீரியஸ் டைப் தான். ஒரு கமர்ஷியல் படத்தில் என்னால் ஈடு செய்ய முடியுமா என்று சந்தேகம் என்னுள் எப்பவும் இருந்தது. அதே நேரத்தில் தான் 'கழுகு' இயக்குநர் சத்யா சிவாவையும், தயாரிப்பாளர் அருண் பாண்டியனையும் சந்திக்க நேர்ந்தது. அருண் பாண்டியன் சார் தயாரிக்க, சத்யசிவா இயக்க உருவாகும் 'சவாலே சமாளி' ப...
டெஸ்பிக்கபிள் மீ 2

டெஸ்பிக்கபிள் மீ 2

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Despicable Me 2) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூ, மூன்று பெண் குழந்தைகளின் பாசக்கார தந்தையாக மாறி விடுகிறார். அதுவும் சிறு வயதில் தன் தாயிடமிருந்து கிடைக்கப் பெற்ற அலட்சியமும் அசிரத்தையும், அவர் மனதிலூன்றி க்ரூவை நல்ல தகப்பனாக மாற்றி விட்டிருந்தது. அது மட்டுமின்றி, உலகின் தலை சிறந்த வில்லனாக வேண்டுமென்ற லட்சியத்தை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, ஜாம் & ஜெல்லி செய்து விற்பவராக தொழிலையும் மாற்றி விடுகிறார். யாரோ ஒரு பிரகஸ்பதி, ஓர் ஆய்வுக்கூடத்தையே திருடி விடுகிறான். அவனைப் பிடிக்க, 'பாம்பின் கால் பாம்பறியும்' எனச் சொல்லி க்ரூவின் உதவியை நாடுகிறது ஏ.வி.எல். (Anti-Villian League). க்ரு வில்லனைக் கண்டுபிடிக்கும், முன் ஏ.வி.எல். அதிகாரியான லூசி வைல்ட் மீது காதலில் விழுந்து விடுகிறார். வில்லனைக் கண்டுபிடித்தாரா என்றும் அவரது காதல் என்னானது என்பதும்தான் படத்தின் முடிவு. அந்த பிரகஸ்பதியின் பெயர் எல்...
கண்ணீர் அஞ்சலி – படக்குழுவினர்

கண்ணீர் அஞ்சலி – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> கருணாகரன் >> ராஜேந்திரன் >> பார்வதி நாயர் >> ஆனந்த் ராஜ் >> மனோ பாலா >> மதிவாணன்தொழில்நுட்பக் கலைஞர்கள்:>> தயாரிப்பு – S. சுப்பையா >> நிர்வாகத் தயாரிப்பாளர் – P. ராஜ்குமார் (எ) ராக்கி >> தயாரிப்பு நிர்வாகி – D. முருகன் >> இயக்குநர் – குகன் சென்னியப்பன் >> இசை – சுந்தர மூர்த்தி >> ஒளிப்பதிவு – நிகேத் பொம்மி >> படத்தொகுப்பு – கிருபாகரன் புருஷோத்தமன் >> கலை – சதிஷ்குமார் நாராயணன் >> சண்டை – “மிரட்டல்” சிவா >> உடை வடிவமைப்பாளர் – ஜேம்ஸ் ஆபிரகாம் >> மக்கள் தொடர்பு – நிகில்...
வை.மு. கோதைநாயகி அம்மாள்

வை.மு. கோதைநாயகி அம்மாள்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்..சென்னை திருவல்லிக்கேணியில் 1901 ஆம் ஆண்டு பிறந்தவர் வை.மு. கோதைநாயகி அம்மாள். இவரது குடும்பம் ஒரு ஆசாரமான வைஷ்ணவ குடும்பமாகும். தனது ஆறாவது வயதிலேயே திருமணமான இவர் பள்ளி சென்று முறையாகக் கல்வி பயின்றதே கிடையாது. சுய முயற்சியில் பின்னாட்களில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றார். ஆரம்பத்தல் வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே ஆர் ரங்கராஜு போன்று துப்பறியும் நாவல்களே எழுதி வந்த இவர், நாளடைவில் குடும்பப் பாங்கான நாவல்கள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றார். இவரது முதல் முயற்சி ஒரு நாடகம். 'இந்திர மோகனா' என்று பெயர். தமிழ் எழுதுவதற்கு முறையான தேர்ச்சி அப்போது பெற்றிருக்காத அந்நேரம், வாய்மொழியாக இவர் கூற அவரது தோழி ஒருவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். வை.மு. கோதைநாயகி அம்மாளின் முதல் நாவல் 'வைதேகி'. இந்நூலை பிரபல துப்பறியும் நூலாசிரியர் வடுவூர் துரைசாமி ஐயங்கார் ...
டெஸ்பிக்கபிள் மீ 1

டெஸ்பிக்கபிள் மீ 1

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Despicable Me 1) ‘டெஸ்பிக்கபிள் மீ’ என்றால் ‘வெறுக்கத்தக்க நான்’ எனப் பொருள் கொள்ளலாம். இந்தப் படத்தின் நாயகனான “க்ரூ” தன்னை அப்படித்தான் அழைத்துக் கொள்வார்; மற்றவர்களும் அப்படியே தன்னை நினைக்கவேண்டும் என விரும்புபவர். அவரின் வீட்டு சோஃபாவையே பெரிய முதலை வடிவத்தில் வைத்திருக்கும் கொடிய ரசனைக்காரர். க்ரூவின் அறிமுகத்தின்போதே அவரது குணத்தை அழகாக காட்டியிருப்பார்கள். அழும் சிறுவன் ஒருவனுக்கு பலூன் ஊதி அவனைச் சமாதானப்படுத்திவிட்டு, அவன் மகிழ்ச்சியுடன் பலூனின் மென்மையில் மனம் லயிக்கும்போது, அந்த பலூனை ஊசியால் குத்தி மகிழ்வார். இதுதான் க்ரூ. க்ரூவின் ஒரே லட்சியம், உலகின் ஈடியிணையற்ற வில்லன் எனப் பெயரெடுப்பதுதான். ஆனால், ‘வெக்டர்’ என்பவன் எகிப்தின் பெரிய பிரமிடான கிசாவைத் திருடி விடுகிறான். அதைக் காரணம் காட்டி, ‘எவில் வங்கி (Bank of Evil)’-இல் நமது நாயகரான க்ரூவுக்கு லோன் தர மறுக்கின்றனர். என...
பாகுபலி விமர்சனம்

பாகுபலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
(பாகுபலி - தொடக்கம்) இந்தியாவின் மிக மிகப் பிரம்மாண்டமான படம். மிரட்டியுள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. பேரருவியின் அடிவாரத்தில் வளரும் ‘ஷிவு’-வுக்கு, மலை மீதேறிப் பார்க்க வேண்டுமென்ற தீராத ஆசை, மிகச் சிறிய வயது முதலே கனலாய் எழுகிறது. பலமுறை முயன்றும் மலையில் ஏற முடியாமல் வழுக்கி விழுந்து கொண்டேயிருக்கிறான். அருவியில் இருந்து விழும் மரத்தாலான முகமூடியின் சொந்தக்காரியை எப்படியும் காண வேண்டுமென்ற காதலின் உந்துதலில், ஒருநாள் மலையில் ஏறிவிடுகிறான். அங்கு யார் இருக்கிறார்கள்? அவர்களுக்கும் ஷிவு-வுக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்விக்களுக்கான பதிலைச் சொல்கிறது பாகுபலியின் தொடக்கம். பாகுபலி என்றால் வலிமையான தோள்கள் உடையவன் எனப் பொருள். அந்தப் பெயருக்கு, ப்ரபாஸ் அநாயாசமாக நியாயம் செய்துள்ளார். இவர் மட்டுமல்ல, நடிகர்கள் அனைவருமே அவர்கள் ஏற்ற கதாப்பாத்திரங்களுக்கு கன கச்சிதமாகப் பொருந்துகின்றனர...
பாபநாசம் சுயம்புலிங்கம், ஹேப்பி அண்ணாச்சி!!

பாபநாசம் சுயம்புலிங்கம், ஹேப்பி அண்ணாச்சி!!

சினிமா, திரைத் துளி
படத்தின் வெற்றியைக் கொண்டாட, படக்குழுவினர் அனைவரும் அந்தந்தப் பாத்திரத்தின் உடையலங்காரத்துடனே மேடையேறினர். அது மட்டுமல்லாமல், சுலைமான் பாய் டீக்கடை - ராணி இல்லம் – காவல் நிலையம் என மேடையின் செட்டிங்கிலும் அமர்க்களப்படுத்தியிருந்தனர். ‘வெற்றி தோல்விகள் சகஜம். ஆனால் இப்படியொரு படம், எங்களுக்கும் மனத் திருப்தியை அளித்து ரசிகர்களுக்கும் மனத் திருப்தியை அளித்த இப்படம் வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம்’ என கமல் சொன்னதுபோல், பாபநாசம் படத்தின் மொத்த குழுவும் மகிழ்ச்சியில் திளைத்தவாறு ஊடகத்திற்கும் மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தனர். பாபநாசம் இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம், "யார் சிறப்பாக நடித்திருந்தனர்? த்ரிஷ்யத்தின் ஜார்ஜ் குட்டியா? பாபநாசத்தின் கமலா!?" எனக் கேட்டதற்கு, "இருவரும் தனக்கே உரிய ஸ்டைலில் அந்த பாத்திரத்தை நடித்திருந்தனர். இருவரும் தன் திறமைகளை நிரூபித்தவர்கள். இந்திய அளவி...