Shadow

சினிமா

82 வயது அம்மணி

82 வயது அம்மணி

சினிமா, திரைத் துளி
இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் மூன்றாவது படமான அம்மணியை, ‘டேக் எண்டர்டெயின்மென்ட் (Tag Entertainment)’ நிறுவனர் திரு. வெண் கோவிந்தா தயாரிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வேகத்தில் நிறைவுற்று வருகிறது. படத்தைப் பற்றிப் பேசிய தயாரிப்பாளர், “நிஜ வாழ்க்கை கதாப்பாத்திரத்தை அடிப்படையாய்க் கொண்டது இக்கதை. ஒவ்வொரு மனித வாழ்க்கையும் மனிததத்தின் சம நிலையை பேணுவதற்காகவே என்ற அற்புதமான எண்ணத்தின்பால் அமைந்ததே ‘அம்மணி’. இத்தகைய நல்ல கதையை எனக்கு கொடுத்த எனது இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.  ‘விண்ணைதாண்டி வருவாயா’ படத்தில் நடித்த சுப்புலட்சுமி பாட்டி இப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பகல் இரவென பாராமல் பரபரவென ஷூட்டிங்கில் உற்சாகத்துடன் இருப்பார். பாட்டி என்றழைத்தால் பிடிக்காத 82 வயதான இந்நடிகை அவரை ‘‘அக்கா’ன்னு கூப்பிடுங்க’ என்பார். அவரது உற்சாக...
காக்கா முட்டை விமர்சனம்

காக்கா முட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாசாங்கற்ற ஜாலியானதொரு படம். ஆனால், சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய பிரக்ஞையையும், சம கால அபத்தங்களையும் மிகத் தெளிவாகச் சித்தரிக்கிறது ‘காக்கா முட்டை’. இப்படம், சிறந்த குழந்தைகள் படமாக தேசிய விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதே போல் மேலும் பல படங்களைத் தயாரிக்க நடிகர் தனுஷுக்கும், இயக்குநர் வெற்றிமாறனுக்கும் வாழ்த்துகள். சாக்கடையாகிவிட்ட கூவம் நதிக்கரையில் வாழும் குப்பத்துச் சிறுவர்களான சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்கா முட்டையும் சகோதரர்கள். நடிகர் சிம்பு திறந்து வைக்கும் ‘பீட்சா ஹட்’டில் பீட்சா சாப்பிட வேண்டுமென அவர்களுக்கு ஆசை எழுகிறது. அந்த ஆசை நிறைவேறியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. சின்ன காக்கா முட்டையாக ரமேஷும், பெரிய காக்கா முட்டையாக விக்னேஷும் அச்சு அசலாக வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சிறுவன் ரமேஷின் புன்னகையையும், முக பாவனைகளையும் உங்கள் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்வீர்...
சான் ஆன்ட்ரியாஸ் விமர்சனம்

சான் ஆன்ட்ரியாஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
San Andreas சான் ஆன்ட்ரியாஸ் படம் நில நடுக்கத்தை மையமாகக் கொண்ட படம். இப்படம் மே 29ஆம் தேதி வெளியானது. படத்தின் பிரமோஷன் மற்றும் மார்க்கெட்டிங்கில் தீவிரமாக படக்குழுவினர் ஈடுபட்டிருந்த சமயத்தில், ஏப்ரல் 15 அன்று நேபாளத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. படத்தின் பிரமோஷன்களை அப்படியே நிறுத்தி, என்னச் செய்யலாமென யோசிக்கத் தொடங்கினர். படத்தைத் தயாரித்த “வார்னர் பிரதர்ஸ்”, ஒரு பெரிய தொகையை நிவாரண நிதியாக அளித்தாலும், ‘வேறென்னச் செய்ய முடியும்?’ என யோசித்து, நில நடுக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக படத்தை முன்னெடுத்துச் சென்றனர். படத்தைப் பற்றி நாயகனான வ்ரெஸ்லிங் புகழ் ‘ராக்’ கூறும்பொழுது, “சோதனையான காலக்கட்டத்தில் ஒன்றினையும் குடும்பத்தின் பிணைப்புத்தான் உண்மையான பலமென்பதை படத்தில் சொல்லியுள்ளோம். அதுதான் படத்தோடு என்னை ஒன்றிணைத்த விஷயம்” எனக் கூறியிருந்தார். ஆனால் படத்தின் கதையெனப் ப...
மாசு என்கிற மாசிலாமணி விமர்சனம்

மாசு என்கிற மாசிலாமணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ் சினிமாவை பேய் பிடித்திருக்கும் காலமிது. அதுவும் எந்த அளவெனில், பேய்கள் ஜாக்கிரதை என தலைப்பின் மூலமே எச்சரிக்கும் அளவு முத்தியுள்ளது. ஒரு விபத்தில், மாஸ் எனும் திருடனுக்கு, ஆவிகளைப் பார்க்கும் அமானுஷ்ய சக்தி கிடைக்கிறது. பேய்களை வைத்து சம்பாதிக்கத் தொடங்கும் மாஸ்-க்கு, சுலபமாக கோடீஸ்வரனாகலாம் என ஆசை காட்டுகிறது சக்தி எனும் ஆவி. 'இந்த டீல் நல்லாயிருக்கே.!' என பணத்தாசையில் இருக்கும் மாஸைக் கொண்டு சாதுரியமாக ஒருவனைக் கொன்று விடுகிறது சக்தி. யாரை ஏன் சக்தி கொல்கிறது என்பதுதான் படத்தின் கதை. மாஸ் என்கிற மாசிலாமணியாகவும், சக்தி எனும் ஆவியாகவும் இரு வேடத்தில் கலக்கியுள்ளார் சூர்யா. மாஸான படத்தில் நாயகி இருந்தே ஆக வேண்டுமென்ற எழுதப்படாத விதியின் பொருட்டு நாயகியாக நயன்தாரா தலை காட்டியுள்ளார். நயனுடன் ஒப்பிடுகையில் ப்ரணிதாவுக்கு வலுவான கதாப்பாத்திரத்தைக் கொடுத்து அழகு பார்த்துள்ளார் இயக்குநர்...
சோன்பப்டி விமர்சனம்

சோன்பப்டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
திடீரென, ஷிவாவின் கார் பின் சீட்டில் ஒரு சிறுவன் இருக்கிறான். "யார்ப்பா நீ? உன் பேரென்ன?" அந்த சிறுவன் காருக்கு வெளியே பார்க்கிறான். தள்ளுவண்டியில் சோன்பப்டி விற்கப்படுகிறது. உடனே தன் பெயரை 'சோன்பப்டி' என்கிறான். யாரிந்த சோன்பப்டி சிறுவன்? அவன் ஏன், எப்படி ஷிவாவின் காருக்குள் வருகிறான் என்பதுதான் படத்தின் கதை. நாயகனாக ஆட்டுக்குட்டி ஸ்ரீ நடித்துள்ளார். இம்முறை டூயட் பாடுமளவுக்கு முன்னேறியுள்ளார். கதைக்கு உதவும் ஒன்றிரண்டு காட்சிகள் தவிர்த்து, முதல் பாதியை பெருமளவு ஆக்கிரமிப்பது ஸ்ரீயும், இவருக்கு ஜோடியாக வரும் நிரஞ்சனாவுமே! வாய்ஸ்-ஓவரில் நண்பர்கள் அறிமுகம், பெண் பார்க்கும் படலம், த்ரிஷா - ஆர்யா மீது ரசிக வெறியிலுள்ள கணவன் - மனைவி காட்சிகள், பீட்சா ஆர்டர் செய்து சாப்பிடுவது, நீச்சல் குளத்தில் குதிப்பது என முதல் பாதியை ஏதோ ஏதோ காட்சிகளின் மூலம் படாதபாடுபட்டு கடக்கின்றனர். அதற்காக மனோபாலா,...
தமிழ் சினிமாவை விடாத பேய்கள்.!

தமிழ் சினிமாவை விடாத பேய்கள்.!

சினிமா, திரைத் துளி
பேய்கள் ஜாக்கிரதை என்ற தலைப்பில் ஒரு படம் வரப் போகின்றது. அதில் ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவ்வுலகில் பேய்கள் இருக்கிறது என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும், பேய்கள் உள்ளது என்று கூறுபவன் மூடனெனக் கூறும் ஒரு கதாப்பாத்திரமும் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்கிறது. இவ்விருவரையும் இணைக்கும் வண்ணம் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. அந்த சம்பவம் எதனால் நடைபெறுகிறது? சம்பவத்திற்கு பின் அவர்கள் படும் குழப்பங்களை நகைச்சுவைப் பிண்ணனியுடன் கலந்து கூறியிருக்கும் படமே “பேய்கள் ஜாக்கிரதை” இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளிவந்த பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிபடங்களில் இணை இயக்குனராகவும், தெலுங்கு படவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “பீருவா” உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கண்மணி முதன்முறையாக இப்படத்தின் மூலம் தமிழ்த் திர...
கமரகட்டு விமர்சனம்

கமரகட்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தான் கற்ற மொத்த வித்தையும் இறக்குவது என்றால் என்ன? அதைத் தெரிந்து கொள்ள அவசியம் நீங்க கமரகட்டு பார்க்கவேண்டும். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை, இயக்கம் என அனைத்துக்கும் சொந்தக்காரர் ராம்கி ராமகிருஷ்ணன் ஆவார். திருவண்ணாமலையில் பன்னிரெண்டாவது படிக்கும் இரண்டு மாணவர்கள் உடன் படிக்கும் இரண்டு மாணவிகளைக் காதலிக்கிறார்கள். கல்லூரி போன முதல் நாளே காசு, பணம், துட்டு, நகை, சொத்து என வேறிருவரை அம்மாணவிகள் காதலிக்கத் தொடங்குகின்றனர். வெகுண்டெழும் 12வது தேறாத அம்மாணவர்கள், காதலியின் (மாணவிகள் இருவரும் சகோதரிகள்) தாயிடம் நியாயம் கேட்கின்றனர். அந்தம்மாவும், ‘எவ்ளோ நல்ல பசங்களா இருக்கீங்க?’ என அடுத்த நாளே ரெஜிஸ்டர் மேரேஜ்க்கு ஏற்பாடு செய்து கல்யாணம் செய்ய வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்குகிறார். பசங்க செம ஹேப்பியாகி, தனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்டான கமரகட்டை காதலியின் அம்மாவுக்குத் தர...
திறந்திடு சீசே விமர்சனம்

திறந்திடு சீசே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்குள் இருக்கும் பூதத்தை, ‘திறந்திடு சீசே’ என பாட்டிலை ஓப்பன் செய்து விழிக்க வைத்துவிடுகிறான் மனிதன். அப்படி ஒருவனுக்குள் விழித்துக் கொள்ளும் பூதத்தால், அவனைச் சுற்றியிருப்பவர்கள் எப்படிப் பாதிக்கப்படுகின்றனர் என்பதை மிகத் தெளிவாகச் சித்தரிக்கிறது படம். பப்-க்கு (Pub) வரும் சார்மி, பாத்ரூமில் வைத்து வன்புணர்வு செய்யப்படுகிறார். போதையில் இருந்த அவருக்கு வன்புணர்ந்தது யாரெனத் தெரியவில்லை. ஆனால், பார் அட்டெண்டர்களான ஜான் மற்றும் ஹூசைன் இருவரில் ஒருவர்தான் என உறுதியாகத் தெரிகிறது. யார் வன்புணர்ந்ததென சார்மி கண்டுபிடிப்பதுதான் படத்தின் முடிவு. ஹூசைனாக நடித்திருக்கும் நாராயணன் கலக்கியுள்ளார். படம், ஓரிரவு ஒரு பப்-க்குள் நடக்கும்படியான கதையைக் கொண்டது. ஆனால், ஒரே லோக்கேஷன் என்ற அலுப்புத் தெரியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இவரது நடிப்புத்தான். எல்லையை மீற விருப்பம் கொண்ட, ஆனாலும் அதற்கான போத...
பெண்ணும் அவளது உணர்வுகளும் – தன்ஷிகா

பெண்ணும் அவளது உணர்வுகளும் – தன்ஷிகா

சினிமா, திரைச் செய்தி
“உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைத்திருந்த கதையமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ‘சார்மி’ என்ற பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு இந்தக் கதாப்பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. எனினும் இந்தக் கதாப்பாத்திரத்தில் என்னால் சோபிக்க முடியுமா என்ற ஐயம் என்னுள் இருந்து வந்தது உண்மைதான். ஆனால் படத்தைப் பார்த்த அனைவரும் என்னைப் பாராட்டுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. என்னுடைய நடிப்பில் சிறிது அதிகமாய் உணர்வுகளைக் காட்டினாலும் படத்தின் முழு அளவியலே மாறிவிடக் கூடும். அவை எல்லாவற்றையும் சரி வர அமைத்து இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். பெண்ணுக்கும் அவளது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ‘திறந்திடு சீசே’ படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது. குடி பழக்கம், பாலியல் வன்கொடு...
தமிழின் முதல் பீரியட் பேய்ப்படம்

தமிழின் முதல் பீரியட் பேய்ப்படம்

சினிமா, திரைத் துளி
சிபிராஜ், பிந்துமாதவி, சத்யராஜ், கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் தமிழின் முதல் பீரியட் படமான ஜாக்சன் துரையில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் தமிழில் முதன்முறையாக ஹாலிவுட் நடிகர் ஜக்கேரி அறிமுகமாகிறார். அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ள இப்படத்தை ஸ்ரீ க்ரீன் புரொடக்ஷன்ஸ், எம்.எஸ்.சரவணன் இன்று துவக்கினார். ஹாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற காஞ்சுரிங் (CONJURING) படத்தின் ஒப்பனைத் தொழில்நுட்பம் இப்படத்தில் பயன்படுத்தபடுகிறது. தரணிதரன் இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ஒளிப்பதிவு யுவராஜ், இசை சித்தார்த் விபின், படத்தொகுப்பை இந்த ஆண்டின் தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷன் கவனித்துக் கொள்கிறார். கலை T.N. கபிலன், நிர்வாகத் தயாரிப்பாளர் அருண் புருசோத்தமன், T. ரகுநாதன், தயாரிப்புக் கட்டுப்பாடு M.பூமதி, லைன் ப்ரொட்யூஸர் செல்வா, தய...
இனிது இனிது டைசன்

இனிது இனிது டைசன்

சினிமா, திரைத் துளி
தெலுங்கு படமான ‘ஹேப்பி டேஸ்’ ரீமேக்கான ‘இனிது இனிது’ படத்தில் அறிமுகமானவர் நாராயணன். அந்தப் படத்தின் இணை ஒளிப்பதிவாளர்தான் நிமேஷ் வர்ஷன் இயக்கும் ‘திறந்திடும் சீசே’ படத்துக்கு நாராயணனைப் பரிந்துரைத்துள்ளார். சி.எஸ்.கே. படத்தில் வில்லனாக நாராயணன் கலக்கியிருந்தது நினைவிருக்கலாம். “நிமேஷைப் பார்த்த போது, அவர் கதையை விவரித்த விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தன்ஷிகா, வீரவன் ஸ்டாலின் மற்றும் எனக்கு இடையில் நடக்கும் முக்கோண த்ரில்லர் தான் படத்தின் கதை. இந்தப் படத்தில் எனக்கு முக்கியமான ரோல் என்றார். அந்தக் கதாபாத்திரம், சீரியசாகவும் நகைச்சுவையாகவும் மாறும். அந்தச் சவாலான பாத்திரம் என் நடிப்புத் திறமையைக் காட்ட வாய்ப்பாக அமையும்னு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகரான எம்.ஜி.ஆர்., அலிபாபா படத்தில் சொல்லும் வசனம்தான் படத்தின் தலைப்பு. இந்தப் படம் என் மனதுக்கு மிக நெருங்கிய ப...