Shadow

சினிமா

மீண்டும் லஹரி மியுசிக்

மீண்டும் லஹரி மியுசிக்

சினிமா, திரைத் துளி
பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா நடிப்பில் 'ஆல் இன் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா தயாரிக்கும் 'மசாலா படம்' வேகமாகத் தயாராகி வருகிறது. புகழ்பெற்ற ஆடியோ நிறுவனமான லஹரி மியுசிக் மசாலா படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார். “ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘மசாலா படம்’ ஆடியோ உரிமையைப் பெற்றதில் எங்கள் நிறுவனம் பெருமகிழ்ச்சியடைகிறது. இளம் இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யாவின் இசை நன்றாக வந்துள்ளது. படத்தின் ட்ரைலர், டீசர் ஆகியவை பார்த்தேன். இந்த இளம் கூட்டணியின் தயாரிப்பு மிகவும் திருப்தி அளிக்கிறது. லஹரி மியுசிக் தமிழ், தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளில் லஹரி மியுசிக் ஆடியோ உரிமைகளைப் பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘மசாலா படம்’ மூலம் தமிழ் இசையுலகில் மீண்டும் வருவது பெரும் மகிழ்ச்சி அளிக்க...
தயாரிப்பாளராகும் இயக்குநர் சிம்ரன்

தயாரிப்பாளராகும் இயக்குநர் சிம்ரன்

சினிமா, திரைத் துளி
தேர்ந்த நடிப்பாலும் திறமையாலும் சினிமா ரசிகர்கள் அனைவரது மனதிலும் கோலோச்சி நின்றவர் நடிகை சிம்ரன். தற்பொழுது சினிமா தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சிம்ரன். ‘சிம்ரன் அண்ட் சன்ஸ்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் ‘Logo’-வை வெளியிட்டு பேசிய சிம்ரன் கூறியதாவது, “எனது சினிமா ஆர்வம் என் வாழ்வில் பெரும் முக்கிய இடத்தைக் கொண்டது. என் கணவர் தீபக் உடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்க அதுவே காரணமாய் இருக்கிறது. நான் நடிகையாக இருந்த அனுபவமும், எனது சின்னத்திரை நிகழ்ச்சிககளைத் தயாரித்த அனுபவமும் இந்தத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் எண்ணத்திற்கு உறுதுணையாய் இருந்தது. எனது இந்த முயற்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் மற்றும் நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள். எனது ரசிகர்கள் எனக்களித்த ஆதரவிற்கும் நன்மதிப்பிற்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். சின...
நண்பேன்டா விமர்சனம்

நண்பேன்டா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓகே.. ஓகே.. அளித்த நம்பிக்கையில், சந்தானத்தை இணைத்துக் கொண்டு 'நண்பேன்டா" வரை வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். ஒரே நாளில் தனக்குப் பிடித்த பெண்ணை மூன்று முறை பார்த்து விட்டால், சத்யாவின் வாழ்க்கை ஓஹோவென்று ஏற்றம் காணுமென அவனது ஜாதகத்தில் இருப்பதாக சத்யாவின் அம்மா சொல்கிறார். பின் என்ன? அதேதான்.! இயக்குநர் ராஜேஷ் போட்டுக் கொடுத்த கோடில் இருந்து வழுவாதவராய் சத்யா எனும் பாத்திரத்தில் உதயநிதி நாயகனாக நடித்துள்ளார். முந்தைய படத்தை விட, நயன்தாரா உடனான காட்சிகளில் தயக்கம் துறந்து நெருக்கமாக நடித்துள்ளார் உதயநிதி. ஆனாலும் சந்தானம் போதும், புதிதாக கதையில் எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாமென்ற அவரது நம்பிக்கை மெய் சிலிர்க்க வைக்கிறது. சிவக்கொழுந்துவாக மிக வித்தியாசமான பாத்திரத்தில் சந்தானம். இந்தப் படத்தில் உதயநிதியின் காதலுக்கு இவர் யோசனையும் சொல்லவில்லை; உதவியும் செய்யவில்லை. ‘சூப்பர் ஃபிகர்’ ரம்யாவா...
காற்றும் ஒளியும் நிலவொளியும் சிகரங்களும்..

காற்றும் ஒளியும் நிலவொளியும் சிகரங்களும்..

சினிமா, திரைத் துளி
இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ திரைப்படம் நிறைவுறும் தருவாயை எட்டியுள்ளது. UTV மோஷன் பிக்சர்ஸ் சித்தார்த் ராய் கபூர் தயாரிப்பில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் முன்னர் ‘புறம்போக்கு’ என அழைக்கப்பட்டு வந்தது. தனது முதல் படமான ‘இயற்கை’ மூலம் தேசிய அங்கீகாரத்தை இயன்றதோடு, தனது அடுத்த படங்களான ‘ஈ’ மற்றும் ‘பேராண்மை’ ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் நம் ரசனைகளை ஆக்கிரமிக்க உள்ளார்.  ஒளிப்பதிவாளர் NK ஏகாம்பரம் கண்கவர் ஒளிப்பதிவில், செல்வ குமார் அவர்களின் வியத்தகு கலை இயக்கத்தில், கணேஷ் குமார் படத்தொகுப்பில், கேட்போரை மயக்கும் வண்ணமுள்ள அறிமுக இசையமைப்பாளர் வர்ஷனின் இசையமைப்பில், மிராக்கல் மைக்கல் அவர...
கோடையைக் குதூகலமாக்க வரும் வைகைப்புயல்

கோடையைக் குதூகலமாக்க வரும் வைகைப்புயல்

சினிமா, திரைத் துளி
எலி படத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாப்பாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்கச் சம்மதித்துள்ளார் நடிகை சதா. சதாவின் நகைச்சுவைக் காட்சிகள் புது அனுபவம் தரும். 1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி.சதிஷ் குமார் தயாரிக்கிறார்.பின்னி மில் வளாகத்தில் அமைக்கப் பெற்ற நட்சத்திர வீடு, பழமையான வீடுகள், பிரம்மாண்டமான வீடுகளின் உள்க ட்டமைப்புகள், வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் கோடிக்கணக்கில் கலை இயக்குநர் தோட்டாதரணியால் அமைக்கப்பட்டு, வசனக் காட்சிகள், சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. மேலும் பல கோடி ரூபாய்க்கும் செலவில் நடன வீடு செட் அமைக்கப்பட்டு அதில் 15 நாட்களுக்கு மேலாகப் புகழ் பெற்ற மும்பை நடனக்கலைஞர்கள் ஆட, பழம்புகழ் நடன இயக்குநர் தாரா அவர்களின் நடன அமைப்பில் பாடல் படமாக்கப்பட்டது. பூனைகள் துரத...
ரு – அதுக்கும் மேல.!

ரு – அதுக்கும் மேல.!

சினிமா, திரைத் துளி
மரணத்தையும் தாண்டின தண்டனை ஏதேனும் உண்டா? உண்டு என்கிறார் தனது படத்துக்கு ரு என்ற வித்தியாசமான தலைப்பு வைத்திருக்கும் இயக்குநர் C. சதாசிவம்.“ரு” என்றால் ஐந்து. படத்தில் ஐந்து குற்றவாளிகள் உள்ளனர் என யூகிக்க முடிகிறது. பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தருபவர்களுக்கு நாயகன் எத்தகைய தண்டனை வழங்குகிறான் என்பதுதான் ரு படத்தின் கதையாம். இப்படத்தில் நாயகனாக இர்ஃபானும், நாயகியாக ரக்ஷிதாவும் நடித்துள்ளனர். P.R.ஸ்ரீநார்த் என்பவர் இசையமைத்துள்ளார். நடிக்க முதல் முறையாக சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துள்ள இயக்குநர் பேரரசு, “இந்தப் படத்துல எனக்குப் பிடிச்ச தங்கச்சி செண்ட்டிமென்ட் இருக்கு” என்றார். சரி.. அந்த ‘அதுக்கும் மேல’ என்னவாக இருக்கும்?...
ரு – படக்குழுவினர்

ரு – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:   >> இர்ஃபான் >> ரக்ஷிதா >> பேரரசு >> ஆதவன் >> ரவி >> அவினாஷ் >> மீராகிருஷ்ணன்   பணிக்குழு:   >> தயாரிப்பு - வீணா ஆனந்த் >> இயக்கம் - சதாசிவம்.C >> ஒளிப்பதிவு – I .நவீங்குமார் >> இசை – P.R.ஸ்ரீநார்த் >> படத்தொகுப்பு – L.V.K.தாஸ் >> நடனம் – ராபர்ட் – ஜாய்மதி >> பாடல் – S.ஞானகரவேல் – வெ.மதன்குமார்...
கருவாட்டு கருணாகரன்

கருவாட்டு கருணாகரன்

சினிமா, திரைத் துளி
“ஒரு சிறிய ரோல் கிடைத்தாலும் தனது நடிப்பால் அதைப் பதியச் செய்யும் ஒரு நடிகன் கருணாகரன். ‘உப்பு கருவாடு’ படத்தில் அன்றாடம் நம் பக்கத்து வீட்டில் பார்க்கும் ஒரு இளைஞன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். தன்னை ஒரு கதாநாயகி என்று தன்னை குறுகிய வட்டத்தினுள் அடைக்காமல் தனக்கான நல்ல கதாப்பாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு சரியான கதைகளும் படங்களும் கிடைக்க வேண்டும். அவ்வகையில் இருவருக்கும் ‘உப்பு கருவாடு’ ஒரு சிறந்த படமாய் அமையும்” ” எனக் கூறினார் இயக்குனர் ராதா மோகன். மேலும், “படத்தின் திறம் குறையாமல் குறுகிய காலத்தில் நான் எழுதியதை என் எண்ணத்தின்படியே கொண்டு வர உதவிய அத்தனைக் கலைஞர்களுக்கும் எனது நன்றிகள். தரத்திலும் திறத்திலும் சமரசம் செய்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. துரித வேகத்தில் படமெடுக்கும் போது கூட அந்தக் கொள்கையை விட்டுக...
‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம்

‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம்

Songs, காணொளிகள், சினிமா
'வாள மீனுக்கு’, ‘கத்தாழ கண்ணாலே’ பாடல்கள் வரிசையில் இயக்குனர் மிஷ்கினின் பேனா முனையில் மீண்டும் ஒரு மஞ்ச சேலை கட்டிய மைனா ஆடும் ‘வெள்ளக்கார ராணி’ என்ற துள்ளல் பாடல் ‘கள்ளப்படம்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது. இயக்குநர் மிஷ்கினின் சிஷ்யரான வடிவேல் கூறுகையில், “மிஷ்கின் சார் தனது படங்களில் பாடல்களைத் தவிர்க்கப் போவதாகக் கூறியுள்ளார். அவர் படம் பண்றாரோ இல்லையோ, தினமும் ஒரு பாடல் கம்போஸ் செய்வார். அவருக்கு இசை ஞானம் அதிகம். எனது குருவிற்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவருள் இருக்கும் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்தான் இப்பாடல் அவரது முந்தைய பாடல்களை போல் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாட்டு ஒரு ஷூட்டிங் ஸ்பாட் காட்சியாக படத்தில் வருகிறது. மிஷ்கின் சாரின் பாடல்கள் போல் ஒரு துள்ளலுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். தயாரிப்பாளர் ஆனந்த் அவர்களுக்கும் இந்த விஷயம் பிடித்திருந்தது. மிஷ்...
நனவான மாபெரும் கனவு

நனவான மாபெரும் கனவு

சினிமா, திரைத் துளி
“பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சினிமா பார்க்கக் கூடாது என்று அதட்டுவார்கள். எனக்கு சினிமாவை உணர வைத்தவரே எங்கப்பாதான்” என்றார் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரன். இதிலென்ன என்ன விசேஷம் என்றால், ஆதிக்கின் தந்தையான ரவி கந்தசாமி, தனது மகனிடம் உதவி இயக்குநராக இப்படத்தில் பணி புரிவதுதான். “பாரதிராஜா சார், செல்வமணி சார் இப்படி பல பேர்கிட்ட 16 வருடங்களாக உதவி இயக்குநராக பணி புரிந்து வருகிறார். அப்பாவின் போராட்டத்தையோ அவருடைய அங்கீகாரம் தடைப்படும் போதும் எனக்குள்ள ஜெயிக்கனும் அப்படிங்கற வெறி வரும். நானே என்னோட பாதையைத் தேர்ந்தெடுத்து, ஜி.வி.பிரகாஷ் குமாரிடம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் கதையைக் கூறி, இன்று என் முதல் படத்தை இயக்கி வருகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறிய அறிமுக இயக்குனர் ஆதிக், “என் அப்பாவும் ஒரு படம் இயக்குவார். தேவைப்பட்டால் நான் அவருக்கு ...
தயாரிப்பாளருக்கு வாய்ப்பளித்த “கள்ளப்பட” இயக்குநர்

தயாரிப்பாளருக்கு வாய்ப்பளித்த “கள்ளப்பட” இயக்குநர்

சினிமா, திரைச் செய்தி
தமிழில் முதுகலைப் பட்டத்தை தஞ்சை பல்கலைகழகத்தில் பெற்றவர் கள்ளப்படத்தின் இயக்குநர் ஜெ.வடிவேல். விகடனில் ஆறு வருடங்கள் (2003 – 2009) நிருபராகப் பணி புரிந்தவர்; பின் இயக்குநர் மிஷ்கினிடம் நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி ஆகிய மூன்று படங்களில் உதவி இயக்குநராகப் பணி புரிந்துள்ளார். புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களைக் குறித்து மட்டுமே பேசும் வடிவேல் ஒரு நல்ல இயக்குநராக வேண்டுமெனச் சொல்லி தொடக்கம் முதல் உற்சாகமூட்டியுள்ளார் ஆடுகளம் நரேன். ஆக கதை எழுதும்போதே அவரை மனதில் எண்ணி ஒரு கதாபாத்திரம் படைத்துள்ளார் வடிவேல். படத்தில் ஒரு முரட்டுத்தனமான போலிஸ்காரராக சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் கவிதா பாரதி நடித்துள்ளார். “நான் பாட்டுக்கும் வண்ணதாசன் கவிதை படிச்சுட்டு, என்னை ரொம்ப மென்மையானவனா நினைச்சுட்டு இருந்தேன். அது வெளியில் தெரியாம இருக்க பெரிய மீசை வச்சேன். ஆனா இயக்குநருக்கு முரட்டுத்தனம...
இவனுக்கு தண்ணில கண்டம் விமர்சனம்

இவனுக்கு தண்ணில கண்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சின்னத்திரை நடிகர் தீபக் நாயகனாக நடிக்கும் முதற்படம். இப்படத்தில், ஜீ டி.வி.யின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பயங்கரமாகக் கலாய்த்துள்ளனர். தனக்கு எதுவும் சரியாக நடக்க மாட்டேங்குது என்ற விரக்தியில் நண்பர்களுடன் டாஸ்மாக் செல்கிறான் சரவணன். மிதமிஞ்சிய போதையில் தனக்குத் தானே சரவணன் வைத்துக் கொள்ளும் ஆப்புதான் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தின் கதை. மார்க் எனும் கதாபாத்திரத்தில் வருகிறார் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன். இரண்டாம் பாதியின் நாயகன் இவர்தான். ஓடாத திரையரங்கத்தில் அவர் அறிமுகமாகும் காட்சியே அட்டகாசமாக உள்ளது. அவரது வேதனையும், லட்சியமும்தான் படத்தின் சுவாரசியமே.! ஆரண்ய காண்டத்தில் மறக்க இயலாத பாத்திரத்தில் நடித்திருந்த ‘பாக்ஸர்’ ஆறுமுகம், இப்படத்தில் சூடு பாஸ்கராக வருகிறார். ‘என் பணம் எப்ப வரும்’ என அவர் பணம் கேட்கும் மாடுலேஷன் செமயாக உள்ளது. இயக்குநர் வித விதமான கதாபாத்திரங்களின் ம...