Shadow

சினிமா

வானவில் வாழ்க்கை ஜனனி

வானவில் வாழ்க்கை ஜனனி

சினிமா, திரைத் துளி
“எனது சிறு வயது முதலே இசை மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. 13 வருடமாக கர்நாடக இசை கற்று வருகிறேன். பள்ளி, கல்லூரி காலங்களிலிருந்தே பல இசை நிகழ்ச்சிகள் பாடியுள்ளேன். இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் இசையால்தான். இங்குப் பாடவும் நடிக்கவும் தெரிந்தவர்களே மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஜேம்ஸ் சார் ஆரம்பத்திலயே கூறிவிட்டார். பாட மட்டும் அனுமதி கொடுத்த பெற்றோர் முதலில் நடிக்க அனுமதிக்கவே இல்லை. நிறைய பாட்டு வாங்கி நிறைய ஆட்டம் ஆடி வாங்கிய அனுமதி இது. நிச்சயம் நல்ல பெயர் வாங்காமல் விட மாட்டேன்” என்று ராகத்தோடு கூறினார் ஜனனி....
அஜித் படத்தில் கின்னஸ் சாதனையாளர்

அஜித் படத்தில் கின்னஸ் சாதனையாளர்

சினிமா, திரைத் துளி
பார்வதி நாயர். அபுதாபியில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தகர். இவரது தந்தை பொறியாளர், தாய் கல்லூரி ஆசிரியர் ஆவர். படிப்பில் இருந்த ஆர்வத்தினால் எஞ்ஜினீயரிங் பயின்றார். ஒரு மாடலுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்த பார்வதி பல விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். பின்னர் கன்னட, மலையாளப் படங்களில் நடித்தார். பல படங்களில் நடித்து வந்தாலும் ஓவியம் தீட்டுவதைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பள்ளிப்பருவத்தில் உலகின் மிக நீளமான ஓவியம் தீட்டும் குழுவில் இடம் பெற்று கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் பெற்றுள்ளார். “காலம் என்னைக் கனிவாய் வழி நடத்தி வந்துள்ளது. எனது முதல் தமிழ்ப்படமே அஜித் சார் மற்றும் கௌதம் சார் உடன் அமைத்திருக்கிறது. எனக்கு தமிழ்ப் படங்களில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாகவே இருந்து வந்தது.” அஜித் சார் அனைவரிடமும் மிக அன்பாக நடந்து கொள்வார். அஜித் சார் நகைச்சுவை உணர்வு கொண்ட...
இயக்குநர் ராதா மோகனின் லட்சியப் பயணம்

இயக்குநர் ராதா மோகனின் லட்சியப் பயணம்

சினிமா, திரைத் துளி
மனதின் மென்னுணர்வுகளை வருடிவிட்ட படங்களான அழகிய தீயே, மொழி, அபியும் நானும் போன்ற படங்களை மறக்க இயலுமா? அதனாலேயே தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் ராதா மோகன் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவருடைய அடுத்த படம் உப்பு கருவாடு. ராம்ஜி நரசிம்மனின் First copy pictures மற்றும் ராதா மோகனின் Night show pictures ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் 'உப்பு கருவாடு' ரசிகர்களைக் கவரும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாகும். இந்தப் படத்தின் கதை ஒருவருடைய லட்சியத்துக்கும், அந்த லட்சியப் பயணத்தைத் தொடர விடாமல் சிறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது நமக்குள் நாமே மேற்கொள்ளும் சமரசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றிய கதை ஆகும்.“லட்சியம் உள்ளவர்கள் அதில் சமரசம் ஆகி விடக் கூடாது. இந்த சமரசமே நம்மை லட்சியப் பயணம் மேற்கொள்ள விடாமல் தடுக்கும்.இந்தக் கதையை நகைச்சுவை கலந்து வழ...
தி தியரி ஆஃப் எவரிதிங்

தி தியரி ஆஃப் எவரிதிங்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
The THEORY of EVERYTHING ஸ்டீஃபன் ஹாக்கிங் – நம் காலத்தின் மாபெரும் விஞ்ஞானி (கோட்பாட்டு இயற்பியலாளர்). அவரது மனைவி ஜேன் ஹாக்கிங்ஸ், ஸ்டீஃபன் ஹாக்கிங்குடன் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுகூரும் விதமாக எழுதிய Travelling to Infinity: My Life with Stephen என்ற நூலினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர். பத்தொன்பது வயது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான ஸ்டீஃபனுக்கு சக மாணவியான ஜேன் மீது காதல் வருகிறது. இருபத்தியொரு வயதில் ஸ்டீஃபன் ஹாக்கிங், நரம்பியல் இயக்க நோயால் (Motor neuron disease) பாதிக்கப்படுகிறார். அவர் அதிகபட்சம் இரண்டு வருடம்தான் வாழ்வாரென மருத்துவர் கெடு விதிக்கிறார். அச்சூழ்நிலையில் ஜேன், ஹாக்கிங்கின் பெற்றோர்களைச் சந்தித்து ஹாக்கிங்கை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெறுகிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பின்னர்தான் படத்தின் உண்மையான கதை தொடங்குகிறது. அத்தம்பதிக்குள் நிலவும...
உழுத வயலின் சேறு வாசனை

உழுத வயலின் சேறு வாசனை

சினிமா, திரைத் துளி
தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று நம் நாசியைத் துளைத்திடும் வாசனைகள் பல உண்டு. மண்பானை வாசனை, பொங்கல் வாசனை, கரும்பு வாசனை, மஞ்சள் கிழங்கு வாசனை, ஜல்லிக்கட்டு வாசனை என சொல்லிக் கொண்டே போகலாம். ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைத்துள்ள வானவில் வாழ்க்கை திரைப்படத்தில் கவிஞர் யுகபாரதி எழுதியுள்ள வாசனை என்னும் பாடல் தமிழர் மரபின், மண்ணின் வாசனைகளை எடுத்துக் கூறும் வரிகளைக் கொண்டுள்ளது. "அறுவடை திருநாளாம் பொங்கல் அன்று கிராமங்களில் வைக்கோல் வாசனை, வெல்லம் வாசனை, காளைமாட்டு கொம்பு வாசனை என தொன்மையான பல வாசனைகள் வீசக்கூடும். அதை மையமாகக் கொண்டு தினசரி வாழ்வில் நாம் நுகரும் பல வாசனைகளைப் பட்டியலிட்டிருக்கிறோம் இப்பாடலில் " என்கிறார் கவிஞர் யுகபாரதி. வாசனை ஈச்சம்பழத்து ஈர வாசனை இஞ்சி முரபா கார வாசனை எலந்தபழத்து புளிப்பு வாசனை பலா இனிப்பு வாசனை கரிச காட்டு மண்ணு வாசனை காத்திரு அடிச்ச நெல்லு வாச...
ஐ விமர்சனம்

ஐ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்றாகிவிட்டது. அதை ஐ படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார். தியாவுக்கும் லிங்கேசனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், லிங்கேசனின் அழகையும் உடற்கட்டையும் ஐவர் கூட்டணி இணைந்து உருக்கலைக்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அந்நியன் அம்பி கூவக்கரையில் பிறந்தால் எப்படியிருக்கும்? அதுதான் லீ எனும் லிங்கேசன். ஆனால் விக்ரமுக்கு சென்னைத் தமிழ்தான் கொஞ்சம் ஒட்டவில்லை. கட்டுடல், மெல்லுடல், கோர முகமென விக்ரம் அபிரிதமான உழைப்பைக் கொட்டியுள்ளார். சுமார் இரண்டே முக்கால் வருட தவம் இவருக்கு! எல்லாத் தவத்திற்கும் வரம் கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டமான விஷயம். அந்நியனில், மல்டிபிள் பெர்ஸனாலிட்டி செய்த வேலையை இப்படத்தில் நாயகியும் வில்லன்களும் செய்கின்றனர். அம்பியை நாயகியே ரெமோவாக்குகிறாள்; வில்லன்கள் அந்நியன் ஆக்குகின்றனர். தியாவாக எமி ஜாக்சன். ஷங்கர்...
வளரும் கலைஞர்கள்…

வளரும் கலைஞர்கள்…

சினிமா
கடந்த 2014 ஆம் ஆண்டில் தமிழில் சுமார் 200 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது. இவற்றில் பெண் இயக்குநர்கள் இயக்கிய படங்களின் எண்ணிக்கை நான்குதான். துணை இயக்குநர்கள், இணை இயக்குனர்கள் மட்டத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் கூட, ஏனோ இயக்குநர்களாக பெரிய அளவில் பெண்கள் வரவில்லை என்பது ஏமாற்றம்தான். முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் தமிழ்த் திரையுலகில் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு கவனிக்கத்தக்க வகையில் இருந்தது என்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி. கோச்சடையான் - நூற்றாண்டைக் கொண்டாடும் இந்திய சினிமாவின் முதல் ‘மோஷன் கேப்சர்’ படம் ஒரு தமிழ்படம், அதிலும் ஒரு பெண் இயக்குனர் இயக்கிய படம் என்கிற வகையில் கோச்சடையான் இந்திய சினிமா வரலாற்றின் முக்கியமான மைல்கல். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றின் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார் செளந்தர்யா அஸ்வின். இனி இந்திய சின...
இளவரசி ஹன்சிகா!

இளவரசி ஹன்சிகா!

சினிமா, திரைத் துளி
தனது வசீகரத்தால் இளைய உள்ளங்களின் மனதைக் கவர்ந்திருந்தாலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் ஈன்றவர் ஹன்சிகா. அவர் பிறக்கப் போகும் 2015 ஆம் ஆண்டை எண்ணி மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். ஏனெனில் அடுத்த வருடம் தனக்கு மிகவும் பொன்மயமாக அமையும் என்ற அவரது நம்பிக்கையே மகிழ்ச்சித் திளைப்பிற்குக் காரணம். அரண்மனை படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பெற்றுத் தந்த விசாலமான இடத்தை, இந்த ஆண்டு டிசம்பரில் வெளிவரவிருக்கும் “மீகாமன்” படம் தக்க வைக்க உதவுமென நம்பிக்கையுடன் இருக்கிறார். ஹாலிவுட படத்துக்கு இணையான அப்படத்தில், ஆர்யாக்கு நிகரான பாத்திரத்தில் நடித்துள்ளதே அவர் மகிழ்ச்சிக்கு காரணம். நடிக ஜெயப்ரதாவின் மகன் சித்துவுக்கு ஜோடியாக நடிக்கும் ‘உயிரே.. உயிரே..’ படத்தில், அவரது வயதுக்கும் துள்ளலுக்கும் ஏற்ப பப்லியான பாத்திரத்தில் வருகிறார். 2015 பொங்கல் நாளன்று வெளியாகும...
சிக்ஸ்-பேக் அருண் விஜய்

சிக்ஸ்-பேக் அருண் விஜய்

சினிமா, திரைத் துளி
2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரவிருக்கும் என்னை அறிந்தால்.. படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கிறார் அருண் விஜய். கடந்த ஆறு மாதங்களாக, ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி வரை உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுகிறார் அருண் விஜய். அப்படி உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுவதை தான் மிகவும் விரும்புவதாக கூறும் அருண் விஜய், “ஷூட்டிங் நாட்களிலும், இரவு ஜிம்க்கு வந்து என் பெர்ஸனல் ட்ரெயினர் ஷிவக்குமாரின் உதவியுடன் வொர்க்-அவுட் செய்வது மிகவும் பிடித்திருக்கிறது” என்கிறார்....
கேரளத் திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும்

கேரளத் திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும்

சினிமா, திரைத் துளி
திக்கெட்டும் பயணித்து, 'பண்ணையாரும் பத்மினியும்’ படம் பல விருதுகளை அள்ளி வருகிறது. ஹபிடெட் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ப்ரேகு ஃபிலிம் ஃபெஸ்டிவல், ஜாக்ரான் ஃபிலிம் ஃபெஸ்டிவல் என பல நாடுகளின் திரைப்பட விழாக்களைப் பார்த்த பண்ணையாரும் பத்மினியும், இந்த வருடம் பெங்களூருவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியப் படங்களுக்கான வரிசையில் தேர்வுக்குழு சிறந்த திரைப்படம் என்ற விருது வாங்கியது. இந்த வருடம் கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஒரே தமிழ் படம் என்ற அந்தஸ்தையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கியுள்ள அருண் கூறுகையில், “இவ்வகையான விருதுகள் எங்களைப் போலுள்ள வளரும் கலைஞர்களுக்கு ஒரு ஊக்கமாய் அமைகிறது” என்கிறார். இப்படம் வரவிருக்கும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிலும் திரையிடப்படவுள்ளது. இவ்வாறான திரைப்படங்கள் அதிகம் தமிழில் வருமானால் தமிழ் ...
ஹீரோவாகும் சிம்ஹா!

ஹீரோவாகும் சிம்ஹா!

சினிமா, திரைத் துளி
இயக்குநரும் தயாரிப்பாளருமான மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் மற்றும் R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் பாம்பு சட்டை. “சதுரங்க வேட்டை” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மனோபாலா தொடுக்கும் புதிய வேட்டையான ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குநர் சங்கரின் இணை இயக்குநர் ஆவார். பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த பாபி சிம்ஹா இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு கச்சிதமாகப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது இந்த கதாபாத்திரம். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற அஸீஸ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பதிவு நாளை முதல் ஆரம்பமாகிறது. திட்டமிட்டப்படி படமெடுத்து வெளியிடும் மனோபாலா இப்படத்தை கோடை வ...
லிங்கா விமர்சனம்

லிங்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேரன் லிங்கா திருடன்; அவனது தாத்தா லிங்கேஸ்வரனோ மஹாராஜா. மஹாராஜாவின் பேரன் ஏன் திருடனானான் என்பதுதான் கதை. கன்னக்கதுப்புகளில் வயோதிகம் எட்டிப் பார்த்தாலும், ரஜினியின் சின்ன கண்களின் ஷார்ப்னெஸும், துள்ளலான உடல்மொழியும் ஈர்க்கவே செய்கிறது. அதனால்தான் மூன்று மணி நேரம் திரையரங்கில் அமர முடிகிறது. ரஜினிக்கு நிச்சய வெற்றிய அளிக்கும் இரு வேடங்களில் வருகிறார். ஃபிளாஷ்-பேக்கில் பணக்காரராகவும், நடப்பில் சாமானியாகவும் வருகிறார். ஆனால் சாமானியன் திருடனாக உள்ளான் இப்படத்தில். 'சூது கவ்வும்' காலத்துக்கு ஈடு கொடுக்க இருக்குமோ என்னவோ? நறுக்கு தெறித்தாற்போல் இருக்கும் பணக்கார ரஜினியின் ஃபிளாஷ்-பேக். ஆனால் லிங்காவில் படமே அதன் நீண்ட ஃபிளாஷ்-பேக்தான். அத்தனை பெரிய கூட்டத்திலும் தனித்து ஜொலிக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. ஆனால் தன் வயது காரணமான பிரக்ஞையுடன் ரஜினி நடித்திருப்பது படத்தின் சுவாரசியத்தை மட்டுபடுத்தவே...
நண்பேன்டா ரஜினி!!

நண்பேன்டா ரஜினி!!

சினிமா, திரைத் துளி
'நினைத்தாலே இனிக்கும்' உட்பட பல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயப்ரதா. இவர்களின் நட்பு இன்றளவும் தொடர்ந்து வருவது உலகமறிந்ததே! மேலும் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த பல படங்களிலும் ஜெயப்பிரதா நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு, ஜெயப்பிரதா அவர்கள் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக லிங்கா படப்பிடிப்பின்போது சந்தித்துள்ளார். அப்போதுதான் தயாரித்துக் கொண்டிருக்கும் உயிரே.. உயிரே.. படத்தின் முன்னோட்டத்தைக் காண்பித்துள்ளார். படத்தை வெகுவாகப் பாரட்டிய சூப்பர் ஸ்டார் ‘உயிரே.. உயிரே..’ படத்தின் முன்னோட்டத்தை தன் படம் லிங்கா வெளியாகும் திரையரங்குகளில் இணைக்குமாறு தயாரிப்பு தரப்பிடம் கேட்டுள்ளார். சூப்பர் ஸ்டாரின் பெருந்தன்மையைக் கண்டு பெருமகிழ்ச்சியுற்ற நடிகை ஜெயப்ரதா தனது நன்றியைத் தெரிவித்தார். ஏனெனில் அப்படத்தில் அவரின் மகன் சித...
அரசியலைக் கலாய்க்க வரும் பவர் ஸ்டார்

அரசியலைக் கலாய்க்க வரும் பவர் ஸ்டார்

சினிமா, திரைத் துளி
அரசியல்வாதிகளின் உண்ணாவிரதம் முதல் கண்டன அறிக்கைவரை எல்லாத்தையும், ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்டா!’ எனக் கடந்து செல்லும் மனநிலையை மக்கள் எப்பவோ பெற்றுவிட்டனர். ஆனால், சூரியன் படத்தில் மகான் கவுண்டர் (சமூகத்தளம் கவுண்டமணிக்குச் சூட்டியுள்ள கெளரவப்பட்டம்), “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என பகடி செய்ததற்கு பின், பரவலாக இது பேச்சு வழக்குத் தொடராக மாறியது. தற்போதைய அரசியல் நடப்புகளை மையமாக வைத்து, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற தலைப்பில் படம் எடுத்து வருகின்றனர். டிசம்பர் 11, கொடைக்கானலில் இப்படத்திற்கான படப்பிடிப்புத் தொடங்கியது. பவர் ஸ்டார், ஜான் விஜய், மனோ பாலா, சுப்பு அருணாசலம் முதலியோர் நடிக்கின்றனர். தற்காப்பு, கரையோரம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த கணேஷ் பிரசாத்தான் படத்தின் நாயகன். ‘இந்தப் படம் உண்மையை, நகைச்சுவையுடன் உரக்கச் சொல்லும் படமாகும்' என்கிறார் பல்வேறு வெற்றிப் படங்களுக்கு...