“ஒரு சிறிய ரோல் கிடைத்தாலும் தனது நடிப்பால் அதைப் பதியச் செய்யும் ஒரு நடிகன் கருணாகரன். ‘உப்பு கருவாடு’ படத்தில் அன்றாடம் நம் பக்கத்து வீட்டில் பார்க்கும் ஒரு இளைஞன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். தன்னை ஒரு கதாநாயகி என்று தன்னை குறுகிய வட்டத்தினுள் அடைக்காமல் தனக்கான நல்ல கதாப்பாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு சரியான கதைகளும் படங்களும் கிடைக்க வேண்டும். அவ்வகையில் இருவருக்கும் ‘உப்பு கருவாடு’ ஒரு சிறந்த படமாய் அமையும்” ” எனக் கூறினார் இயக்குனர் ராதா மோகன்.
மேலும், “படத்தின் திறம் குறையாமல் குறுகிய காலத்தில் நான் எழுதியதை என் எண்ணத்தின்படியே கொண்டு வர உதவிய அத்தனைக் கலைஞர்களுக்கும் எனது நன்றிகள். தரத்திலும் திறத்திலும் சமரசம் செய்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. துரித வேகத்தில் படமெடுக்கும் போது கூட அந்தக் கொள்கையை விட்டுக...
'வாள மீனுக்கு’, ‘கத்தாழ கண்ணாலே’ பாடல்கள் வரிசையில் இயக்குனர் மிஷ்கினின் பேனா முனையில் மீண்டும் ஒரு மஞ்ச சேலை கட்டிய மைனா ஆடும் ‘வெள்ளக்கார ராணி’ என்ற துள்ளல் பாடல் ‘கள்ளப்படம்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது.
இயக்குநர் மிஷ்கினின் சிஷ்யரான வடிவேல் கூறுகையில், “மிஷ்கின் சார் தனது படங்களில் பாடல்களைத் தவிர்க்கப் போவதாகக் கூறியுள்ளார். அவர் படம் பண்றாரோ இல்லையோ, தினமும் ஒரு பாடல் கம்போஸ் செய்வார். அவருக்கு இசை ஞானம் அதிகம். எனது குருவிற்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவருள் இருக்கும் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்தான் இப்பாடல் அவரது முந்தைய பாடல்களை போல் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாட்டு ஒரு ஷூட்டிங் ஸ்பாட் காட்சியாக படத்தில் வருகிறது. மிஷ்கின் சாரின் பாடல்கள் போல் ஒரு துள்ளலுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். தயாரிப்பாளர் ஆனந்த் அவர்களுக்கும் இந்த விஷயம் பிடித்திருந்தது. மிஷ்...
“பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சினிமா பார்க்கக் கூடாது என்று அதட்டுவார்கள். எனக்கு சினிமாவை உணர வைத்தவரே எங்கப்பாதான்” என்றார் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரன். இதிலென்ன என்ன விசேஷம் என்றால், ஆதிக்கின் தந்தையான ரவி கந்தசாமி, தனது மகனிடம் உதவி இயக்குநராக இப்படத்தில் பணி புரிவதுதான்.
“பாரதிராஜா சார், செல்வமணி சார் இப்படி பல பேர்கிட்ட 16 வருடங்களாக உதவி இயக்குநராக பணி புரிந்து வருகிறார். அப்பாவின் போராட்டத்தையோ அவருடைய அங்கீகாரம் தடைப்படும் போதும் எனக்குள்ள ஜெயிக்கனும் அப்படிங்கற வெறி வரும். நானே என்னோட பாதையைத் தேர்ந்தெடுத்து, ஜி.வி.பிரகாஷ் குமாரிடம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் கதையைக் கூறி, இன்று என் முதல் படத்தை இயக்கி வருகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறிய அறிமுக இயக்குனர் ஆதிக், “என் அப்பாவும் ஒரு படம் இயக்குவார். தேவைப்பட்டால் நான் அவருக்கு ...
தமிழில் முதுகலைப் பட்டத்தை தஞ்சை பல்கலைகழகத்தில் பெற்றவர் கள்ளப்படத்தின் இயக்குநர் ஜெ.வடிவேல். விகடனில் ஆறு வருடங்கள் (2003 – 2009) நிருபராகப் பணி புரிந்தவர்; பின் இயக்குநர் மிஷ்கினிடம் நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி ஆகிய மூன்று படங்களில் உதவி இயக்குநராகப் பணி புரிந்துள்ளார். புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களைக் குறித்து மட்டுமே பேசும் வடிவேல் ஒரு நல்ல இயக்குநராக வேண்டுமெனச் சொல்லி தொடக்கம் முதல் உற்சாகமூட்டியுள்ளார் ஆடுகளம் நரேன். ஆக கதை எழுதும்போதே அவரை மனதில் எண்ணி ஒரு கதாபாத்திரம் படைத்துள்ளார் வடிவேல்.
படத்தில் ஒரு முரட்டுத்தனமான போலிஸ்காரராக சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் கவிதா பாரதி நடித்துள்ளார். “நான் பாட்டுக்கும் வண்ணதாசன் கவிதை படிச்சுட்டு, என்னை ரொம்ப மென்மையானவனா நினைச்சுட்டு இருந்தேன். அது வெளியில் தெரியாம இருக்க பெரிய மீசை வச்சேன். ஆனா இயக்குநருக்கு முரட்டுத்தனம...
சின்னத்திரை நடிகர் தீபக் நாயகனாக நடிக்கும் முதற்படம். இப்படத்தில், ஜீ டி.வி.யின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பயங்கரமாகக் கலாய்த்துள்ளனர்.
தனக்கு எதுவும் சரியாக நடக்க மாட்டேங்குது என்ற விரக்தியில் நண்பர்களுடன் டாஸ்மாக் செல்கிறான் சரவணன். மிதமிஞ்சிய போதையில் தனக்குத் தானே சரவணன் வைத்துக் கொள்ளும் ஆப்புதான் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தின் கதை.
மார்க் எனும் கதாபாத்திரத்தில் வருகிறார் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன். இரண்டாம் பாதியின் நாயகன் இவர்தான். ஓடாத திரையரங்கத்தில் அவர் அறிமுகமாகும் காட்சியே அட்டகாசமாக உள்ளது. அவரது வேதனையும், லட்சியமும்தான் படத்தின் சுவாரசியமே.!
ஆரண்ய காண்டத்தில் மறக்க இயலாத பாத்திரத்தில் நடித்திருந்த ‘பாக்ஸர்’ ஆறுமுகம், இப்படத்தில் சூடு பாஸ்கராக வருகிறார். ‘என் பணம் எப்ப வரும்’ என அவர் பணம் கேட்கும் மாடுலேஷன் செமயாக உள்ளது. இயக்குநர் வித விதமான கதாபாத்திரங்களின் ம...
லூசியா எனும் கன்னடப் படத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் பிரசாத் ராமர். லூசியா, தென்னிந்தியத் திரைப்பட ரசிகர்கள் பெருமையாக காலரை உயர்த்திக் கொள்ள உதவிய படம். முறைப்படியாக உரிமை வாங்கி தமிழில் எடுத்துள்ளனர். தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்து திரைத்துறையில் நுழைந்த பவன் குமாரின் பெயரே திரைக்கதையில் வருகிறது.
ஒருவன்தான் வாழ நினைக்கும் வாழ்க்கையைப் பற்றி கனவு காண்பதுதான் எனக்குள் ஒருவன் படத்தின் கதை.
சித்தார்த்தின் கேரியரில் கண்டிப்பாக இது முக்கியமானதொரு படமாக அமையும். வாழும், வாழ நினைக்கும் என இரண்டு வாழ்க்கையையும் நடிப்பில் வித்தியாசப்படுத்திக் காட்டியுள்ளார். ஜிகர்தண்டா, காவியத் தலைவன் எனும் படங்களுக்குப் பிறகு, படத்தின் தனியொரு பிரதான பாத்திரமாக அவர் நடிப்பில் வந்திருக்கும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. தியேட்டர் ஓனராகவும், நடிகரின் மேனேஜராகவும் வழக்கம் போல் நரேன் அசத்தியுள்ளார்....
குற்றப் பரம்பரையைச் சேர்ந்த பட்டியல் இனத்தவனான சித்தன், தனது லட்சியமான காவல் துறையில் சேருகிறானா இல்லையா என்ற கேள்விக்கான பதில்தான் கதை.
படத்தின் தலைப்பு போடும்பொழுதே, பொம்மலாட்ட பாணியில் குற்றப்பரம்பரை எப்படி உருவாகின என்ற செய்தியைச் சொல்லி விடுகிறார் இயக்குநர் யுரேகா. படத்தின் பலம் அதன் இயல்பான கதாபாத்திரங்கள். படத்தின் முதற்பாதி மிகவும் கலகலப்பாகப் பயணிக்கிறது. மலைவாசிகளின் தலைவராக வரும் G.M.குமார் அதகளம் செய்துள்ளார். திருடச் செல்பவர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்புதல், ஏ.டி.எம். மெஷினைப் பெயர்த்தெடுப்பது, பேயோட்டுவது, பேயைக் கொண்டு போலிஸை ஓட்டுவது என G.M.குமார் படத்தின் கலகலப்பிற்குப் பொறுப்பேற்கிறார்.
காவல்துறை அதிகாரியாக வரும் அருள்தாஸும் பிரமாதப்படுத்தியுள்ளார். பில்லி சூனியத்திற்குப் பயப்படுவது, சித்தனின் வளர்ச்சியைக் கண்டு பொறுமுவது, உறவாடிக் கெடுக்கும் நைச்சியத்துடன் நடந்து கொள்வ...
கோஸ்ட் கோபல்வர்மாவாக நடித்த ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் அடுத்த அவதாரத்தை, ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தினைக் காணலாம். இரண்டு மணி நேர முழு நீள நகைச்சுவைப் படம். குமரவேல், செண்ட்ராயன், மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன், சுப்பு பஞ்சு, “கானா” பாலா என நகைச்சுவைக்கு தீனி போட படத்தில் பலருள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. A7 Band என்ற பெயரில் மூன்று இளைஞர்கள் இணைந்து இசையமைத்து உள்ளனர்.
“எல்லோரும் சொன்னாங்க.. குமரவேல் சார் ராதாமோகன் சார் படத்துலயும், பிரகாஷ்ராஜ் சார் படத்துலயும்தான் நடிப்பார்னு! நானும் அவர்ட்ட கேட்டேன். ‘யோவ்.. யாருய்யா சொன்னது?’ எனக் கேட்டார் அவர்” எனச் சிரித்தார் தீபக்.
“என்னிடம் வசனகர்த்தா கார்த்திக் வந்து கதை சொன்னாப்ல. பாதி கதை கேட்டதும் நடிக்கிறேன் என ஒத்துக்கிட்டேன். மீதி கதையைக் கேட்டதும், நல்ல முடிவுதான் எடுத்திருக்கேன் எனத் தோணுச்சு” என்றார் குமரவேல்...
"இப்பாடல் ஒரு இளைஞனின் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாய் இருந்தது. கௌதம் அவர்களின் குரல் இந்தப் பாட்டிற்கு அந்தத் துள்ளலைத் தந்துள்ளது. இசையமைப்பாளர் ஸ்டீவ், கௌதமின் நண்பர். முதலில் இசையமைப்பாளர் ஸ்டீவ் வாட்ஸ், கௌதம் மூலமாகத்தான் எனக்கு அறிமுகமானார். படத்தில் ஒரு சோலோ சாங் வைக்கலாம் என்று நானும் ஸ்டீவ் அவர்களும் முடிவு செய்தோம். இப்பாடலுக்கு புதிதாக ஒரு குரல் வேண்டும் என்று நினைத்தோம். ஜி.வி.எம். (கெளதம் வாசுதேவ் மேனன்) பாடினால் நன்றாக இருக்கும் என்று ஸ்டீவ் கூறினார். கௌதம் நன்றாகவே பாடுவார் என்று அறிந்து அவரை அணுகினோம். வியப்பிற்குள்ளான கௌதம் துளியும் தயங்காமல் எங்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.
ஒரு வெற்றிக்கான முதல் அடியை எடுத்து வைக்கும் ஒருவனின் கொண்டாட்டமாய் வரும் 'புது ஒரு கதவு திறக்குது' என்ற பாடலை அதே துள்ளலுடனும், கொண்டாட்டத்துடனும் பாடிக் கொடுத்தார் கௌதம். இப்பாடல் கடற்கரைக் காற்று போ...
தனது முதற்படத்தின் பெயரிலேயே ‘ராட்டினம் பிக்சர்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தனது இரண்டாவது படத்தை இயக்கித் தயாரித்துள்ளார் இயக்குநர் K.S.தங்கசாமி. சாகித்திய அகாதமி விருது வாங்கிய நாஞ்சில் நாடனின் நாவலொனின் தலைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
சாதீயமும் அதிகாரமும் பண ஆசையும் இணைந்து தமிழின் தம்பியான பிரபாவைக் கொன்று விடுகிறது. தமிழ் எப்படிப் பழி வாங்குகிறான் என்பதுதான் கதை.
ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடித்துள்ளார். ஆனாலும் இது நாயகனுக்குரிய படமில்லை. நாயகனும் மற்றொரு பாத்திரமாகவே வருகிறார். ஆனால் சாராவாக வரும் ஸ்ரீமுகியை படத்தின் நாயகி எனச் சொல்லுமளவு நடித்துள்ளார். இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியமான கதாபாத்திரமான தமிழாக படத்தில் தோன்றியுள்ளார் K.S.தங்கசாமி. படத்தின் முக்கியமான அந்தக் கதாபாத்திரத்தை வேறு எவரையேனும் நடிக்க வைத்திருக்கலாம் அவர். காவல்துறை அதிகாரி ரகுபதியாக நடி...
(Kingsman: The Secret Service)
கிங்ஸ்மேன் என்பது ஒரு தையற்கடை. எனினும், இது ஜேம்ஸ் பாண்ட் பாணி படமென்று தலைப்பைக் கொண்டே யூகிக்கலாம்.
மனிதாபிமானத்தை வைரஸாகவும், புவி வெப்பமயமாதலை காய்ச்சலாகவும் உருவகிக்கும் கோடீஸ்வரரான ரிச்மாண்ட் வேலண்டைன்.. வைரஸ் உலகை அழிக்கும் முன் தீர்வு காணத் துடிக்கிறார். அதாவது மக்களுக்குள் வன்முறை உணர்ச்சியைக் கிளிர்ந்தெழச் செய்து, ஒருவரை ஒருவர் தாக்கி அழிந்து போகவைப்பது. இதை கிங்ஸ்மேன் குழுவினர் எப்படித் தடுக்கின்றனர் என்பதுதான் படத்தின் கதை.
முதல் ஃப்ரேமில் இருந்தே படம் நம்மை ஈர்த்துக் கொள்கிறது. ‘Manners maketh man’ என கதவைப் பூட்டி விட்டு, கொலின் ஃபிர்த் குடையை வைத்து சண்டை போடும்பொழுது திரையரங்கமே கலகலப்பாகிறது. படத்தின் நாயகன் டரோம் எகெர்ட்டன் என்றாலும் குடையுடன் வலம் வரும் கொலின் ஃபிர்த் தான் ரசிக்க வைக்கிறார். மிகவும் ஸ்டைலிஷான் ஸ்டண்ட் கா...