Shadow

சினிமா

உத்தம வில்லன் விமர்சனம்

உத்தம வில்லன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பரம(க்குடி) நாத்திகரான கமல்தான், சக மனிதர்களை நேசிப்பவர் கடவுள் என அன்பே சிவம் படத்தில் சொல்ல வேண்டியிருந்தது. இம்முறை, உத்தம வில்லனில் வாழ்வின் நிலையாமையைக் குறித்த ஆத்ம விசாரம் செய்துள்ளார். யாருமே வில்லன் இல்லை என்பதுதான் படத்தின் கரு. பின் யார்தான் உத்தம வில்லன்? இந்த வசீகரமான தலைப்புக்குத்தான் எத்தனை அர்த்தங்களைக் கொணர்ந்துள்ளார் கமல்!? 1. உத்தமன் என்பவர் கதை சொல்ல தமிழக வில்லுப்பாட்டையும் (வில்லன்), கதையின் களம் செல்ல கேரள தெய்யத்தையும் இணைத்து கூத்து கட்டுபவர். 2. உத்தமன் கட்டும் பிரதான வேடம் வில்லனான (வில்லாளியான) அர்ஜூனன் வேடம். 3. தன் பெண்ணின் விருப்பத்துக்காக, ஒரு காதல் ஜோடியைப் பிரிக்கிறார் உத்தம அப்பாவான பூர்ண சந்திர ராவ். 4. கள்ளக் காதலியுடன் தொடர்பில் இருந்தாலும், குடும்பத்தின் மீது பாசத்தைப் பொழிகிறார் உத்தம ஹீரோவான மனோரஞ்சன். 5. படத்துக்குள் எடுக்கப்படும் படத்தின் பெ...
மெல் கிப்சனில்லா ‘மேட் மேக்ஸ்’

மெல் கிப்சனில்லா ‘மேட் மேக்ஸ்’

சினிமா, திரைத் துளி
1979 இல், ஒரு ஆஸ்ட்ரேலியப் படம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. அது சிட்னி மருத்துவர் ஜார்ஜ் மில்லர் இயக்கிய “மேட் மேக்ஸ்” படம். அவசர சிகிச்சைப் பிரிவில் பணி புரிந்த வந்த மில்லர், விபத்தில் பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சை அளித்துள்ளார். அந்த சிகிச்சை அனுபவங்கள் அவருக்களித்த தாக்கங்கள் அவர் படத்தில் பிரதிபலித்தது. அன்றைய தேதியில், ‘ரோட் மூவிஸ்’ படங்களுக்கு இப்படம் ஒரு ட்ரெண்ட் செட்டராக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் நாயகன் நமக்கு மிகவும் பரிச்சயமான ஹாலிவுட் ஹீரோ மெல் கிப்சன். இதன் அடுத்தடுத்த பாகங்கள் 1981இலும், 1985இலும் வந்தன. 1998 இல் நான்காவது பாகத்திற்கான விதை எழுந்ததாக தன் முயற்சிகளை மேற்கொண்டார் ஜார்ஜ் மில்லர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக படம் ஆரம்பக் கிடப்பிலேயே இருந்தது. தன் பாதையை மாற்றிக் கொண்ட மெல் கிப்சனும், மேட் மேக்ஸ் சீரிசின் நான்காவது படத்திலிருந்து விலகிக் கொண்ட...
நாள் வாடகைக்கு அவெஞ்சர்கள்

நாள் வாடகைக்கு அவெஞ்சர்கள்

சினிமா
பேட் மேனைத் தொடர்ந்து, இம்முறை அவெஞ்சர்களை தென்னிந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது புட் சட்னி. இந்தக் காணொளியின் சர்ப்ரைஸான விஷயம் டைரக்டர் ஃப்யூரியாக வரும் மனோபாலா. ஒவ்வொரு ஹீரோவாக அவர் அறிமுகம் செய்து, வெட்டியாகத்தான் இருக்கோம், எந்த வேலைன்னாலும் சொல்லுங்க எனக் கலாய்ப்பது அதகளம்.
ஒ காதல் கண்மணி விமர்சனம்

ஒ காதல் கண்மணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், பி.சி.ஸ்ரீராம், வைரமுத்து ஆகியோரின் கூட்டணி எதிர்பார்ப்பையும், அந்த எதிர்பார்ப்பில் எண்ணெயும் ஊற்றியது படத்தின் ட்ரைலர். கல்யாணத்தில் விருப்பமில்லாமல் வாழும் காதலர்கள் ஆதியும் தாராவும். அவர்கள் தங்கள் வாழ்க்கை பற்றி எடுக்கும் முடிவுதான் படத்தின் க்ளைமேக்ஸ். இளமை, காதல், மகிழ்ச்சி, காமம் என முழப் படமுமே கொண்டாட்டமாக உள்ளது. அந்தக் கொண்டாட்டத்தை படம் நெடுக்கக் குறையாமல் பார்த்துக் கொள்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். ரஹ்மானின் துள்ளலான இசைக்குத் தகுந்தவாறு பி.சி.ஸ்ரீராமின் ஃப்ரேம்களையும் பாடல் காட்சிகளில் துள்ள வைத்துள்ளார் ஸ்ரீகர் பிரசாத். இந்தத் திறமையாளர்களின் சங்கமம் செய்துள்ள மேஜிக், திரையில் விஷூவல் விருந்தாக ரசிகர்களுக்குப் படைக்கப்பட்டுள்ளது. எந்த அடுக்குகளும் சிக்கிலுமில்லாத கதையை எடுத்து தனக்கே உரித்தான அழகியலோடு எளிமையாக திரைக்கதை அமைத்துள்ளார் ...
புட் சட்னி.!

புட் சட்னி.!

சினிமா
கல்ச்சர் மெஷினின் என்பது டிஜிட்டல் வீடியோ பொழுதுபோக்கு நிறுவனம். அவர்களின், “என்னடா ராஸ்கல்ஸ்” என்ற பாடல், தென்னிந்தியர்களை நையாண்டி (parody) செய்யும் விதமாக எடுக்கப்பட்டுப் பிரபலமானது. அவர்கள் இப்போது தென்னிந்தியாவை மனதில் வைத்துக் கொண்டு, “புட் சட்னி” என்றொரு பிரத்தியேக அலைவரிசையைத் தொடங்கியுள்ளனர். தென்னிந்தியக் கதைகளை நகைச்சுவையுடன் அணுகும் காணொளிகளைத் தயாரிக்கவுள்ளது இந்த ‘புட் சட்னி. “விந்திய மலைகளின் கீழுள்ள இந்தியா வண்ண வண்ணமான அடையாளங்களையும், பொக்கிஷமான திறமைகளையும் பெற்றுள்ளது. அதை வெளிக்காட்டுவதே ‘புட் சட்னி’யின் நோக்கம்” எனச் சொல்கிறார் கல்ச்சர் மெஷினின் நிறுவனாரன சமீர் பிட்டல்வாலா. ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோக்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தால் எப்படியிருக்கும் என்ற கருவின் முதல் கட்டமாக, பேட்மேன் சென்னையில் இருந்தால் எப்படி இருக்குமென, ‘What If Batman was From Chennai...
வீரவன் ஸ்டாலின் திறந்திடும் சீசே

வீரவன் ஸ்டாலின் திறந்திடும் சீசே

சினிமா, திரைத் துளி
ஒவ்வொரு மனிதனும் ஒரு அலாவுதீன் விளக்கு போல அவர்களுக்குள் இருக்கும் பூதம் அவ்வபோதுதான் வெளி வரும். அந்த தருணம் அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு என்ன நன்மை தீமைகள் நடக்கிறது என்பதை சுவாரசியம் நிறைந்த திருப்பங்களுடன் காட்சி படுத்துகிறது ‘திறந்திடு சீசே‘ திரைப்படம். சுதாஸ் புரொடக்ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிப்பில் ‘திறந்திடு சீசே’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் நிமேஷ்வர்ஷன். இவர் இயக்குநர் ஷங்கரின் இணை இயக்குநராவார். 'வீரவன் ஸ்டாலின் இப்படத்தை தயாரிப்பதோடு கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இவ்வளவு துணிவான ஒரு கதையை தயாரிக்க முன் வந்ததோடு, மற்றவர் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்த வகையில் அவருக்கு என் நன்றி. தன்ஷிகா ஒரு திறமையான நடிகை என்பதில் யாருக்கும் இரண்டாவது அபிப்பிராயம் இருக்கப் போவதில்லை. அதையும் மிஞ்சிய ஒரு நடிப்பை இந்தப் படத்தில் அவர் வழங்கி உள்ளார். ச...
கோ 2 – படக்குழுவினர்

கோ 2 – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> பாபி சிம்ஹா >> பிரகாஷ் ராஜ் >> நிக்கி கல்ராணிபணிக்குழு:>> தயாரிப்பு – RS இன்ஃபோடெயின்மென்ட் >> இயக்கம் – ஷரத் >> ஒளிப்பதிவு – ஷங்கர் >> இசை – லியோன் ஜேம்ஸ் >> படத்தொகுப்பு – ரூபன் >> கலை – செந்தில் ராகவன் >> வசனம் – பாக்கியம் ஷங்கர்
சிம்ஹா இன் கோ-2

சிம்ஹா இன் கோ-2

சினிமா, திரைத் துளி
“எங்கள் நிறுவனத்தினுடைய ‘கோ’படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. விஷ்ணுவர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குநராய் பணி புரிந்துள்ள சரத் அவர்களின் கதையைக் கேட்க நேர்ந்தது. கதையைக் கேட்டு முடிக்கும் முன்னரே, இப்படத்தை எங்கள் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒரு படத்தின் ‘Sequel’ என்றால் அதே குழு, மற்றும் நடிகர்கள் நடிக்க வேண்டும் என்றல்லாமல் அந்தக் கதை அந்தத் தலைப்புக்கு ஏற்றவாறு உள்ளது என்று யோசித்தோம். அதன் விளைவே ‘கோ-2’ விரைவில் தயாராகவுள்ளது. அந்தக் கதாப்பாத்திரத்தின் வலிமைக்கு தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா கனக் கச்சிதமாய்ப் பொருந்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி. மேலும், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பு கண்டிப்பாய் அனைவரது எதிர்பார்ப்பிற்கும் வித்தாய் அமையும் என்று நம்புகிறோம். ‘க...
ஒ காதல் கண்மணி – பரிசோதனை முயற்சி

ஒ காதல் கண்மணி – பரிசோதனை முயற்சி

சினிமா, திரைச் செய்தி
மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி இசை தெரிந்த அளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தமிழிசையும் தெரிந்தவர் எனப் பாராட்டிய வைரமுத்து, “ஓ காதல் கண்மணி படத்தில் நான் ஐந்து பாடல்களை எழுதியுள்ளேன். ‘மென்ட்டல் மனதில்’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மானும் மணிரத்னமும் எழுதியுள்ளனர். அன்று நான் வெளியூர் சென்றுவிட்டேன். அதனால் இரண்டு கவிஞர்கள் உருவாகிவிட்டனர். இந்தப் பாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார் மணிரத்னம். ‘நான் இனி வெளியூர்க்குப் போகக் கூடாது’ எனச் சொன்னேன்” என்றார். மேலும், “மணிரத்னம் 24 படங்கள்தான் இயக்கியுள்ளார். எண்ணிக்கை அளவில் அது குறைவும். ஆனால் தர அளவில் அது அதிகம். இன்னும் சில ஆண்டுகளில் கல்யாணம் எனும் சடங்கு நிலவுமா என்பது சந்தேகமே! மணிரத்னம் இப்படத்தில் அதைப் பற்றித்தான் விவாதித்துள்ளார். இப்படத்தின் கதை மணிரத்னத்தின் பரிசோதனை முயற்சி” என்றார் வைரமுத்து. “சில கனவுகளில் வாழ்ந்துடலாம் போல் தோணும். அப்...
வர்ஷனின் புறம்போக்கு இசை

வர்ஷனின் புறம்போக்கு இசை

சினிமா, திரைத் துளி
“படத்தின் தலைப்பே அனைவரின் கவனத்தை ஈர்த்து அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுது. அந்த எதிர்பார்ப்புக்கு ஈடேற்றும் வகையில் இசையமைப்பது எனக்குப் பெரும் சவாலாக அமைந்தது. எனினும் ஒரு புதுமுகத்திற்கு.. தேசிய விருது பெற்ற இயக்குனரின் திரைப்படத்திற்கோ, UTV போன்ற பெரிய நிறுவனத்தின் படத்திலோ வாய்ப்புக் கிடைப்பது அபூர்வம். ஜனநாதன் சார் இப்படம் முழுவதும் என்னை வழி நடத்தி என்னை இசையமைப்பாளராக உருவாக்கியுள்ளார். லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து பின் இந்தியப் பாரம்பரிய இசையை சென்னை இசைக் கல்லூரியில் பயின்றேன். என்னுடைய சில பாடல்கள் ஜனநாதன் சார் அவர்களுக்குப் பிடித்திருந்தது. அதனால் எனக்கு ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தில் வாய்ப்பளித்தார். இப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும், ஜனநாதன் சாரின் திரைக்கதைக்கு உறுதுணையாய் இருக்கும் வண்ணம் அமைய வேண்டும் என்று நினைவ...
நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க – படக்குழுவினர்

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> இந்திரஜித் >> தேவிகா மாதவன் >> சிங்கமுத்து >> சுவாமிநாதன் >> சிவசங்கர் மாஸ்டர்பணிக்குழு:>> தயாரிப்பு - ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் >> தயாரிப்பாளர் - மாதவன் மோகன் >> இயக்கம் - L மாதவன் >> இசை - AK ரிஷால் சாய் >> ஒளிப்பதிவு - DS வாசன் >> படத்தொகுப்பு - சுரேஷ் அர்ஸ் >> கலை - ராகவா குமார்...
4 பேர் 4 விதம் 4 பேச்சு

4 பேர் 4 விதம் 4 பேச்சு

சினிமா, திரைத் துளி
“நம்முடைய எல்லா நல்லது கேட்டதையும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் கூறிக் கொண்டே இருப்பார்கள். அப்படி, முக்கிய கதாப்பாத்திரங்களின் சூழ்நிலைகளை அடிப்படையாய்க் கொண்டு நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டது நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க திரைப்படம். ஒவ்வொரு மனிதனின் சூழ்நிலை மற்றவர்களுக்கு எவ்வளவு நகைச்சுவையாய் இருக்கக் கூடும் என்பதை சிரிப்புடன் கூறுகிறது இப்படம். படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் மாதவன், “DS வாசன் ஒளிப்பதிவில், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பில், ரிஷால் சாய் இசையமைப்பில் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார் யுகபாரதி. படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுவரை பார்த்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நபர்கள் எல்லோருமே நாலு வார்த்தை நல்ல விதமா தான் படத்தைப் பற்றிச் சொல்லிருக்காங்க. இது ரசிகர்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்” என்றார் நகைச்சுவையுடன். இப்படத்தை, ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் தயாரித்துள்ளது....
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6 ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் தொடர் தொடங்கி 15 வருடங்கள் ஆகிறது. இந்தத் தொடரின் ஆறு படங்களில் ஒன்றில் மட்டும் நடித்திராத முக்கிய கதாநாயகனான பால் வாக்கர், ஏழாவது பாகத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக 2013இல் விபத்தில் இறந்துவிட்டார். இந்தத் தொடர் வரிசை படங்களுக்கு அது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. அதில் இருந்து படக்குழு எப்படி மீண்டது என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. அது மட்டுமில்லாமல், இந்தத் தொடரின் நான்கு படங்களை இயக்கிய ஜஸ்டின் லின்னுக்கு பதிலாக ஹாரர் பட இயக்குநரான ஜேம்ஸ் வான் இப்படத்தை இயக்கியுள்ளது மேலும் எதிர்பார்ப்பைக் கூடுதலாக்கியது. இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம், தாய்லாந்தைச் சேர்ந்த ஏஷியன் ஹீரோவான டோனி ஜா முதல்முறையாக இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். ஜேஸன் ஸ்டாத்தம்தான் படத்தின் வில்லன் என்ற ஆவ...