Shadow

சினிமா

ஆ விமர்சனம்

ஆ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேய் இருக்கா இல்லையா? இருக்கு என நிரூபித்தால் 60 கோடி ரூபாய் வெல்லலாம் என மூன்று நண்பர்களுக்கு பந்தயம் வைக்கிறான் பிராஸ்பர். தமிழ், செர்ரி, சிங்காரம் ஆகிய மூவரும் பேயை வீடியோவாக பதிவு செய்ய செய்து பந்தயத்தில் வெல்ல முனைகின்றனர். என்ன முயற்சி செய்கிறார்கள், பந்தயத்தில் வென்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. அம்புலியாக நடித்த கோகுல்நாத்க்கு நாயகனாக பிரமோஷன் தந்துள்ளனர் இரட்டை இயக்குநர்கள் ஹரி ஷங்கரும் ஹரீஷ் நாராயணனும். பிரபல டி.வி. சேனல்கள் வாயிலாக தனது அவிநயக்கூத்தின் (mime) மூலமாகப் பிரபலமடைந்தவர் கோகுல். அவருக்கு தீனி போடும் விதமாக கானா பாலாவுடன் இணைந்து அவர் ஆடும் அறிமுகப் பாடல் அமைந்துள்ளது. பின் படத்தின் போக்கிற்கு இணையும் கதாபாத்திரமாக மாறிவிடுகிறார் கோகுல். செர்ரியாக மேக்னா நடித்துள்ளார். எப்படியாவது பந்தயத்தில் ஜெயித்து 20 கோடி ரூபாயை அடைய நினைக்கும் பாத்திரத்தில் கச்சிதமாக...
காவியத் தலைவன் விமர்சனம்

காவியத் தலைவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரவானைத் தொடர்ந்து வசந்த பாலனிடமிருந்து மீண்டுமொரு பீரியட் ஃப்லிம். ஸ்ரீலஸ்ரீ பாலசண்முகானந்தா நாடக சபாவை நடத்தி வருகிறார் சிவதாஸ் ஸ்வாமிகள். அவரது சீடர்களில் ஒருவனான கோமதி நாயகம் ராஜபார்ட்டாக நடிக்க ஆசைப்படுகிறான். ஆனால் மற்றொரு சீடரான காளியப்பனுக்கு அந்த வாய்ப்பை வழங்குகிறார் சிவதாஸ் ஸ்வாமிகள். பொறாமைக் கனல் கொழுந்து விட்டெறியும் கோமதி நாயகம், சதித் திட்டம் தீட்டி காளியப்பனை ஓரங்கட்டுகிறான். பின் என்னாகிறது என்பதுதான் கதை. படத்தின் நாயகன் காளியப்ப பாகவதராக சித்தார்த். சூரபத்மனாக நடித்துக் காட்டும்போது அசத்துகிறார். இரண்டாம் பாதியில், இதுநாள் வரை பார்த்துப் பழகிய சித்தார்த்தாகவே திரையில் தெரிகிறார். மலையாள நெடியுடன் வசனம் பேசும் ப்ரித்விராஜ், கோமதி நாயகமாக தன் பொறாமையையும் வன்மத்தையும் கண்களில் தேக்கியபடி படம் முழுவதும் வருகிறார். சித்தார்த் போலில்லாமல் கடைசி வரை கோமதி நாயகமாகவே தெரிகிறா...
திருட்டு ரயில் ஏறியவர்கள் கதை

திருட்டு ரயில் ஏறியவர்கள் கதை

திரைத் துளி
ஐந்து இளைஞர்களுக்கும், ஒரு போலீஸ் அதிகாரிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. அதை சமாளிக்க முடியாமல் நண்பர்கள் திருட்டுரயில் ஏறிச்செல்லும் சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். சென்னையில் இறங்கிய பின் அதைவிட பெரும் பிரச்சனை அவர்களுக்கு காத்திருந்தது.  அதிலிருந்து நண்பர்கள் மீண்டார்களா..? இல்லையா...? என்பதுதான் திருட்டு ரயில் படத்தின் கதை....
‘ஆயா வட சுட்ட கதை’ படக்குழுவினர்

‘ஆயா வட சுட்ட கதை’ படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> அவிதேஜ் >> சுபுர்ணா >> துரை பாண்டி >> ரங்க பாஷ்யம் >> ஆதி >> நந்தா >> குமார் >> மாடு >> சங்கு >> பாண்டியன் >> ஆறுச்சாமி >> மாணிக்கம்பணிக்குழு:>> தயாரிப்பு - பிக்ஸ்ல் ஃபிலிம்ஸ் >> இயக்கம் - N.ஃபணீந்திரா >> ஒளிப்பதிவு - S.P.பாலாஜி >> இசை - ஷமீர் & ஷிவா >> படத்தொகுப்பு - V.விஜய் >> சண்டை - த்ரில்லர் முகேஷ் >> நடனம் - V.கோபி >> ரீ-ரெக்கார்டிங் - வேத் ஷங்கர் >> பாடல் வரிகள் - வசந்த் & நவின்...
யார் ஆயா? யார் காக்கா? யார் நரி?

யார் ஆயா? யார் காக்கா? யார் நரி?

சினிமா, திரைத் துளி
ஆயா வட சுட்ட கதை படத்தின் கதையை மூன்று வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், ‘முக்கோண ஏமாற்று கதை’ எனச் சொல்லலாம். ஒரு பரபரப்பான நகரத்தில் இருக்கும் ஒரு குடியிருப்புத்தான் படத்தின் களம். இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள், அருகில் வசிப்பவர்களை யார் என்று கூட அறியாதவர்கள். ஆனால் இவர்களுக்கு அன்றாட தேவைகளைச் செய்து தருபவர்கள் உதாரணத்துக்கு பேப்பர் போடுபவர்கள், இஸ்திரீ செய்பவர்கள், காவலாளி, கார் டிரைவர் போன்றவர்கள் அங்கு வசிக்கும் அனைவரைப் பற்றியும் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். அத்தகைய பணியாளர்களக்கும், அங்குப் புதிதாகக் குடிவந்த சட்டவிரோதிகளுக்கும், தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கப்பட்ட போலிஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களால் ஆனது படத்தின் திரைக்கதை. இதில் யார் ஆயா, யார் காக்கா, யார் நரி என்பதைதான் படத்தின் தலைப்புச் சுட்டுகிறது....
‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படக்குழுவினர்

‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> 'அட்டகத்தி' தினேஷ் >> நகுல் >> பிந்துமாதவி >> ஐஸ்வர்யா தத்தா >> சதீஷ் >> ஊர்வசி >> மனோபாலாபணிக்குழு:>> கதை, திரைக்கதை, இயக்கம் - ராம்பிரகாஷ் ராயப்பா >> தயாரிப்பு - V.சந்திரன் >> தயாரிப்பு மேற்பார்வை - R.P.பாலகோபி >> ஒளிப்பதிவு - தீபக்குமார் பாடி >> இசை - S.S.தமன் >> படத்தொகுப்பு - V.J.சாபு ஜோசப் >> கலை - A.வனராஜ் >> வசனம் - R.செந்தில்குமார் >> பாடல்கள் - யுகபாரதி, கார்க்கி >> நடனம் - தினேஷ், தினா >> சண்டைப் பயிற்சி - கணேஷ் >> புகைப்படம் - ஸ்டில் ராபர்ட்...
‘நானும் பிசாசு.. அவனும் பிசாசு..’ – மிஷ்கின் பற்றி பாலா

‘நானும் பிசாசு.. அவனும் பிசாசு..’ – மிஷ்கின் பற்றி பாலா

சினிமா, திரைத் துளி
"என்னுடைய பாலா. ஒரு கலைஞன் கஷ்டத்தில் இருக்கும்போது கை கொடுத்துத் தூக்கிவிட்டார் பாலா. நான் என்னை கலைஞனென தைரியமாகச் சொல்வேன். ஏன்னா உழைப்பைக் கொட்டுறேன். 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' பார்த்துட்டு, அழுதுட்டே வெளில வந்தார் பாலா. என் ஆஃபீஸ் வரை காரை ஓட்டுடான்னு சொன்னார். அடுத்து என்னப் பண்ணப் போறேன்னு கேட்டார். நாளைக்கு வா படம் ஆரம்பிக்கலாம் என்றார். பிசாசு, டாம்பீகமற்ற எளிமையான படம். ஒரு பெண் இறந்து பிசாசாகி விடுகிறாள். கதை எழுதும்போது, நான் பேரலலாக (parallel) தமிழ்ப் படம், ஆங்கிலப் படம், உலகப் படம், ஹாரர் ஸ்டோரீஸ், கோஸ்ட் (ghost) கதை எழுத தனியாக ஸ்க்ரீன்-ப்ளே புக்ஸ் படிச்சேன். அதிலிருந்து ellam விலகி, நான் ஸ்க்ரிப்ட் எழிதியிருக்கேன். தமிழ் சார்ந்து, உறவு சார்ந்து இருக்கும்" என்றார் மிஷ்கின். "மிஷ்கின் சார் என் குரு. பாலா சார் தயாரிப்பில் அறிமுகமாவது ரொம்ப பெருமையாக இருக்கு" என்றார் அறிம...
‘பிசாசு’ படக்குழுவினர்

‘பிசாசு’ படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> நாகா >> பிரயாகா >> ராதா ரவிபணிக்குழு:>> எழுத்து, இயக்கம் - மிஷ்கின் >> தயாரிப்பு நிறுவனம் - பி ஸ்டுடியோஸ் >> தயாரிப்பாளர் - இயக்குநர் பாலா >> தயாரிப்பு நிர்வாகம் - ஜோயல் பெனட் >> தயாரிப்பு மேலாளர் - R S வெங்கட் >> ஒளிப்பதிவு - ரவி ராய் >> கலை - ஜெயஸ்ரீ >> இசை - ஆரோல் கொரெலி >> படத்தொகுப்பு - கோபிநாத் >> விஷுவல் எஃபெக்ட்ஸ் - WE FX >> சிறப்பு சப்தம் - ப்ரேம் குமார் & ஜெய்கர் >> சிறப்பு ஆக்ஷன் கோரியோகிராஃபி - டோனி ல்யெங் >> ஆடியோகிராஃபி - தபஸ் நாயக் >> பாடலாசிரியர் - தமிழச்சி தங்கபாண்டியன் >> சண்டை - நேதன் லீ >> ஒப்பனை - பாலாஜி & பிரசாத் >> மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா & நிகில் >> டிசைனர் - NEXGEN மீடியா >&...
மக்கள் இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களே! – 4 போலிஸ்

மக்கள் இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களே! – 4 போலிஸ்

திரைத் துளி
தமிழ்த் திரை உலகில் தற்போது உலா வரும் புதிய சிந்தனை உடைய நவீன கதைகளுக்கு முன்னோடியாக இருக்கும் ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனமும், லியோ விஷன் நிறுவனமும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா…, தற்போது தயாரிப்பில் இருக்கும் 'அண்டாவ காணோம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்து தயாரித்து வெளியிட இருக்கும் படம் 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்'. சிந்தனையைத் தூண்டும், குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைச் சித்திரமான இந்தப் படத்தின் தலைப்பே கதை சொல்லும். 'நல்ல பொருத்தமான தலைப்பே படத்தின் வெற்றியை 50 சதவீதம் தீர்மானிக்கும்' என்கிறார் லியோ விஷன் ராஜ்குமார். அவரது முந்தைய படங்களும் இதைப் போலவே நீண்ட தலைப்பு உடைய படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் இதுவரை கேட்டிராத, பார்த்திராத ஒரு புதிய கதையாகும். புதிய இயக்குநர் ஸ்ரீ ...
நைட் க்ராலர் (Nightcrawler) விமர்சனம்

நைட் க்ராலர் (Nightcrawler) விமர்சனம்

அயல் சினிமா, திரை விமர்சனம்
நைட் க்ராலர் என்பது பிரபலமான மார்வல் காமிக்ஸ் பாத்திரம். ஆனால் இப்படத்தின் தலைப்போ, இரவு வேளையில் வேலை செய்யும் சுவாரசியமான மனிதன் ஒருவனைச் சுட்டிக் காட்ட வைக்கப்பட்டுள்ளது. தமிழில் பிரபலமாகி வரும் 'சூது கவ்வும்' பாணி திரைப்படமிது! லூ என்கிற லூயிஸ், தொழில்முறை திருடன் அல்லன். அவனுக்கு ஒரு வேலை தேவைப்படுகிறது. சாலையில் நடக்கும் ஒரு விபத்தில், எதேச்சையாகப் பார்க்கும் ஒன்றைத் தனக்கான தொழிலாக வரித்துக் கொள்கிறான். அதற்கு மூலதனமாக ஒரு சைக்கிளைத் திருடுகிறான். எதையும் விரைந்து கற்றுக் கொள்ளும் லூ, நினைத்ததை சாதிக்க எதையும் செய்யத் தயாராக உள்ளவன். பெரிதும் திருப்பங்கள் அற்ற கதை எனினும், விறுவிறுப்பான திரைக்கதையாக அதை மாற்றியுள்ளார் அறிமுக இயக்குநர் டேன் கில்ராய். ஜேக் க்லைன்ஹால் தனியொருவராக படத்தைச் சுமக்கிறார். அவரது முக பாவனைகளும், வசனம் உச்சரிக்கும் த்வனியும்தான் படத்தின் மீது ஈர்ப்பு உண்டாக...
டிராகுலா – சாத்தானின் மகன்

டிராகுலா – சாத்தானின் மகன்

சினிமா, திரைத் துளி
டிராகுல் என்றால் ரொமேனிய மொழியில் டிராகன் என்று பொருள். மனித ரத்தம் குடிக்கும் குணம் கொண்ட காட்டேரிகளுக்கு, டிராகுலா என்ற பெயர் வந்தது வலாக்கிய அரசாங்கத்தின் மன்னான மூன்றாம் விளாட்டி என்னும் சிற்றரசனால். நாடோடிக் கதைகளும் பழம்பாடல்களும் விளாடின் ‘பெருமை’களை இன்னும் ஊதிப் பெரிதாக்கிவிட்டன. டிராகுலா என்பதற்கு சாத்தானின் மகன் என்ற அர்த்தத்தையும் கொடுத்துவிட்டன. மனித ரத்தம் குடிக்கும் டிராகுலா பற்றிய படங்கள் பல முறை திரையில் உலா வந்ததுள்ளன. ஆனால் டிராகுலாவின் முந்தைய சரித்திரத்தைப் பற்றி விவரிக்கிறது, “டிராகுலா அன்டோல்ட் (Dracula Untold)” என்ற புதிய படம். கதை, 1492இல் நடக்கிறது. ட்ரான்சில்வேனியா வில் ஆட்சி புரிந்த அரசன், மூன்றாம் விளாட், டிராகுலாவாக மாறுவதாகக் காட்டப்பட்டுள்ளது. ட்ரான்சில்வேனியாக்கு அருகே உள்ள ஒட்டோமான்அரசாங்கம் மூன்றாம் விளாடு க்கு பல கஷ்டங்களைக் கொடுக்கிறது. இதற்கிடையே, இ...
ஜீவா விமர்சனம்

ஜீவா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீண்டுமொரு பள்ளிப் பருவக் காதலையும், தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பெறும் சாதி அரசியலையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். ஜீவாவாக விஷ்ணு விஷால். மீசை தாடியை நன்றாக ஷேவ் செய்துவிட்டு, பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவராக திரையில் அறிமுகமாகிறார். என்னடா இது சோதனை என்றிருந்தாலும் திரைக்கதை ஓட்டத்தில் அந்த எண்ணம் மெல்ல மறையத் தொடங்குகிறது. கல்லூரிக்கு வந்து கிரிக்கெட்தான் வாழ்க்கை என ஜீவா முடிவெடுத்து, அரசியலால் காயப்படும் பொழுதெல்லாம் மனதில் அப்பாத்திரமாகவே நிற்கிறார். நான் மகான் அல்ல படத்தில், ‘இறகை போல் அலைகிறேன்’ என்ற பாடலில் செய்த மாயத்தை, இப்படத்தில் ஸ்ரீதிவ்யாவைக் கொண்டு செய்துள்ளார் சுசீந்திரன். பள்ளி மாணவியாக அவர் காட்டும் குறும்புத்தனமான முகபாவங்கள் ரசிக்க வைக்கின்றன. விஷ்ணு பள்ளி மாணவர் என்ற கொடுமையை சகிக்க வைக்க பெரிதும் உதவி செய்பவர் ஸ்ரீதிவ்யாவே! ஆனால் என்ன, நாயகனின் தாய் ...
அரண்மனை விமர்சனம்

அரண்மனை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தில் கதை என்று பார்த்தால் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றே! கொலை செய்யப்பட்ட பெண் பேயாகி பழிவாங்குகிறார். தன் பரம்பரை சொத்தான அரண்மனையை விற்க கிராமத்திற்கு வருகிறான் முரளி. வந்த இடத்தில் அமானுஷ்யமான சம்பவங்கள் அரங்கேறுகின்றன. பேயின் பிடியில் இருந்து அந்தக் குடும்பம் எப்படித் தப்பிக்கிறது என்பதுடன் படம் முடிகிறது. சுந்தர்.சி படத்தில் என்ன எதிர்பார்ப்போமோ அதை அவர் ஏமாற்றாமல் வழங்கியுள்ளார். சந்தானம், கோவை சரளா, மனோபாலா, சாமிநாதன் ஆகிய நடிகர்களைக் கொண்டு நகைச்சுவைக்கு உறுதியளிக்கிறார். படத்தைக் காப்பாற்றுவது பேய் அல்ல. சந்தானமும் கோவை சரளாவுமே! அதுவும் மனோபாலா சந்தானம் வாயில் மாட்டும் பொழுதெல்லாம் திரையரங்கம் அதிர்கிறது. “முருங்கை காய் சாப்பிட்டா மூடு வரும்; இங்க முருங்கை காய்க்கே மூடு வந்துடுச்சே!” என மனோபாலாவைக் கலாய்க்கிறார். வெங்கட் ராகவனின் வசனங்களில், “மூடு (mood)” என்ற வார்த்தையை ...
‘உண்மை’ படக்குழுவினர்

‘உண்மை’ படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> P.ரவிக்குமார் >> சுஜிபாலா >> ராதாரவி >> சார்மிளா >> கோட்டா சீனிவாசராவ் >> ஷகிலா >> சிங்கம் புலி >> வாசு விக்ரம் >> வையாபுரி >> மீனாட்சி தேசாய் >> பாண்டு >> சங்கீதா பாலன் >> 'சூப்பர் குட்' லட்சுமணன் >> சிந்து >> அன்வர் ராஜாபணிக்குழு:>> கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு - P.ரவிக்குமார் >> தயாரிப்பு நிறுவனம் - மதர் கிரீன்லேண்ட் மூவி மேக்கர்ஸ் >> தயாரிப்பு நிர்வாகம் - அஷ்ரப் >> ஒளிப்பதிவு - அன்பு ஸ்ரீராம் >> இசை - ஸ்ரீராம் >> படத்தொகுப்பு - சிகா >> கலை - ராஜசேகர் >> நடனம் - ராபர்ட், ராக் சங்கர் >> சண்டைப் பயிற்சி - மிரட்டல் செல்வா & லோகு...
வில்லியாகும் ஷகிலா

வில்லியாகும் ஷகிலா

சினிமா, திரைச் செய்தி
பொய், ஊழல், பவர் (அதிகாரம்) தான் மக்களை ஆட்டுவிக்கும் சங்கதிகள். நம் நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஓர் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு கதையமைத்துள்ளார் இயக்குநர். தான் முற்றிலும் அழித்துக் காட்டுகிறேன் என்று கட்டை விரலை உயர்த்தி சவால் விடும் அரசியல்வாதி பதவிக்கு வந்தபின், தனது வார்த்தைகளை மறந்துவிட்டு அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்குச் செய்யும் 'ஊழல்'தான் உண்மை படத்தின் கதை. ஊழலால் பாமர மக்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக எடுத்துள்ளனர். கேமிராக்கு முன் அசிஸ்டெண்ட் கமிஷ்ணர், கமிஷ்ணரின் தங்கையாக ஒரு திருநங்கை வேடன், மனநிலை பாதிக்கப்பட்டவராக மூன்று வேடமேற்று நடித்துள்ளார் P.ரவிக்குமார். கேமிராக்கு பின் கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என மூன்று வேலைகளையும் அவரே செய்துள்ளார். சென்னைவாசியான ரவிக்குமார் சினிமா கனவுகளில் மும்பைக்குச் ச...