Shadow

சினிமா

ஜிகர்தண்டா விமர்சனம்

ஜிகர்தண்டா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பொழுதுபோக்கு என்றால் அது சினிமா மட்டும்தான் என்றாகிவிட்டது. சாவு வீட்டிற்கு ஒரு நடிகன் வந்தால், இறந்தவர் பற்றிய நினைவலைகள் தடைபட்டு நாயகனைப் பற்றிய பிம்பம் அவ்விடத்தில் மேலோங்குகிறது. துக்கத்துடன் நடிகர் ஜீவா ஏதேனும் சாவு வீட்டிற்குச் சென்றால், “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்!” எனச் சொல்லச் சொல்லி அவரை தர்மசங்கடத்திற்கு ஆட்படுத்துவார்களாம். இடம் பொருள் ஏவல் என மூன்றிற்கும் கட்டுப்படாமல், ஒரு கனவுநிலையையோ எக்ஸைட்மென்ட்டையோ உருவாக்கும் சர்வ வல்லமை பெற்றது சினிமா. தனது கனவினை அறுவடை செய்ய எவர் தோளிலும் பயணிக்கும் கார்த்திக்கிற்கும், தன் மீதுள்ள பயத்தை இலக்கற்று அறுவடை செய்யும் சேதுவுக்கும் இடையில் நிகழும் கதை. படத்தின் நீளம் 170 நிமிடங்கள் என்றதும் ஒருவித அயர்ச்சி மனதில் எழுகிறது. ஆனால் படம் பார்க்கும் பொழுது அத்தகைய சலிப்புகள் எழாமல் இருப்பதுதான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் வெற்றி. நே...
சரபம் விமர்சனம்

சரபம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சரபம் - சிங்க முகம் கொண்ட பறவை. ஒருவனின் ஆசையைத் தூண்டி, அவனை பகடையாக்கி விளையாடுகின்றனர் கோடீஸ்வர தந்தை ஒருவரும் அவரது மகளும். அந்த விளையாட்டின் முடிவுதான் படம். இது முழுக்க முழுக்க கதாநாயகி சப்ஜெக்ட். சிங்க முகத்தினைக் கொண்ட பறவை என படத்தின் தலைப்பான சரபமும் நாயகியின் அகத்தைத்தான் குறிக்கிறது போல! ஆனால் இந்தப் படத்திலுமேயே அசத்தலாக நடித்துள்ளார் நாயகன் நவீன் சந்திரா. சின்ன சின்ன முகபாவங்களில்கூட கவர்கிறார். பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்கான கோபங்கள் அவருக்குள் எழுந்தாலும், முடிவில் ஒரு சராசரியாகவே இருப்பது ஆறுதல். நாயகியாக சலோனி லுத்ரா. அறிமுகக் காட்சி முதலே படத்தின் ஓட்டத்திற்கு எண்ணெய் ஊற்றுபவராக உள்ளார். அந்நியமான முகம் என்றாலும் மனதில் சுலபமாகப் பதிகிறது. நடை, உடை, பாவனை என அனைத்திலும் ஒரு அசால்ட்டான தெனாவெட்டை வெளிபடுத்துகிறார். இயக்குநர் அருண்மோகன் நடிகர் அனுமோகனின் (படையப்பரே! பாம்பு பு...
கிளாப் போர்ட் மூவிஸின் ‘மகாபலிபுரம்’

கிளாப் போர்ட் மூவிஸின் ‘மகாபலிபுரம்’

சினிமா, திரைத் துளி
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் டான் சேண்டி இயக்கும் படம் “மகாபலிபுரம்”. கிளாப் போர்ட் மூவிஸ் சார்பாக வினாயக் இப்படத்தைத் தயாரித்துள்ளார். இப்படத்தில் வினாயக், அங்கனா ராய், விகிதா, ‘சூது கவ்வும்’ புகழ் கருணா, ரமேஷ், வெற்றி, கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை ஸ்டுடியோ 9 நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது....
விரட்டும் சூறாவளி

விரட்டும் சூறாவளி

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
இயற்கை அன்னை கோபம் கொண்டால், அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம். சூறாவளிக் காற்று சீறிப் பாய்ந்தால், அதன் விளைவிகளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், இந்த மாதிரியான ஒரு புயலின் கடும் கோபம் பற்றியும் அதன் விளைவாக அங்கு வாழும் மக்கள், உயிர் தப்பிக்க, தலை தெறிக்க ஓட வேண்டிய ஒரு நிலை உருவாகுவது பற்றியும் விளக்குகிறது. சில்வர்டன் என்பது ஓர் அழகிய, சிறு நகரம். அன்றும் என்றும் போல் பொழுது விடிகிறது. ஆனால் ஒரு வித்தியாசம். புயல் உருவாகி, பெரும் வேகத்தில், சுழன்று சுழன்று மக்களை ஓட ஓட விரட்டி அடிக்கிறது. தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, திசை தெரியாமல் ஓட வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்படுகிறது. சீறி வரும் புயலின் தாக்கத்தை, அவர்களால் தாக்கு பிடிக்க முடிந்ததா என்பதே மீதி கதை. Into the Storm என்ற இந்தத் திரைப்படம், தம...
திருமணம் எனும் நிக்காஹ் விமர்சனம்

திருமணம் எனும் நிக்காஹ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் அனீஸ் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாமென யோசிக்கும் பொழுது, வீட்டிலிருந்த ‘நிக்காஹ் எனும் திருமணம்’ என்ற பத்திரிக்கையைப் பார்த்துள்ளார். அதை உல்டா செய்து, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என தலைப்பு வைத்துள்ளார். அபு பக்கர் என்ற பெயரில் விஜய ராகவாச்சாரியும், ஆயிஷா என்ற பெயரில் விஷ்ணு பிரியாவும் ட்ரெயினில் பயணிக்கின்றனர். ஒருவரை ஒருவர் முஸ்லிம் என நினைத்துக் கொண்டு, தங்களை முஸ்லிமாகக் காட்டிக் கொண்டே காதலிக்கத் தொடங்குகின்றனர். இருவருமே ஐயங்கார் வீட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்ற உண்மை தெரியவந்ததும் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. விஜய ராகவாச்சாரியாக ஜெய் நடித்துள்ளார். இப்படத்திலும், உளறலாகக் காதலை வெளிப்படுத்தும் வழக்கமான பாத்திரம்தான். அபு பக்கராக தன்னை நாயகியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதால், இஸ்லாம் மதத்தைப் பற்றியும் அம்மதத்தின் சடங்குகள் பற்றியும் தெரிந்து கொள்ள விருப்பம் காட்டு...
ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

ஞான ராஜசேகரன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

கட்டுரை, சினிமா
மு.கு.: கேணி || ஞாநி || ஞான ராஜசேகரன் || ராமானுஜன் ஒரு படம் எடுத்து வெளியிடுவது என்பது பிரசவ வேதனை மாதிரி. தயாரிப்பாளர்கள் காலில் விழுந்து கிடக்கணும். ஏன்னா இங்க பணம் இன்வால்வ் ஆகுது. தாகூர், கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பில் சொல்லியிருப்பார். ‘இறைவா.. என்னைவிட பலவீனமான ஆட்களிடம் மண்டியிட வைத்திடாதே!’ என. அப்படித்தான் நினைச்சுப்பேன். அப்படி இருக்கு இங்க இயக்குநரின் நிலைமை. நான் ‘மோக முள்’ படமெடுக்கிறப்ப, திருச்சூர் டிஸ்ட்ரிக்ட் கலெக்டராக இருந்தேன். லைட்-மேன் என்னை அனுதாபமாகப் பார்த்து, ‘பார்றா இவர!’ என ஏளனம் பண்றார். அவங்களைத் தப்பு சொல்ல முடியாது. ஏன்னா அவங்கதான், சின்ன படத்திலிருந்து ரஜினி படம்வரை வொர்க் பண்ணும் ஒரே ஆளுங்க. ஒரே விஷயத்தைச் செய்து பழக்கப்பட்டுட்டாங்க. நானோ off-beat சினிமா எடுக்கிறேன். ஆனா இங்க அனைவரையும் அவங்க வழக்கத்திற்கு இழுத்து, குதிரையை கழுதையா ஆக்கப் பார்க்கிறாங்க. ‘நல்...
“மக்கள் நல்லவர்கள்!” – சேரன்

“மக்கள் நல்லவர்கள்!” – சேரன்

சினிமா, திரைச் செய்தி
‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தினை சேரன் முடித்து எட்டு மாதங்கள் ஆகிறது. தன் படத்தை வெளியிட்டால், வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை நிலுவுகிறது என்பதால் மாற்றுவழியை யோசித்தார். 2013இல், 298 படங்கள் தணிக்கைச் சானிறிதழ் பெற்றுள்ளன. அவற்றில் 155 படங்கள்தான் வெளியாகியுள்ளன. மீதி படங்களுக்கு திரையரங்கு கிடைக்கவில்லை. இதற்குத் தீர்வு காண, கடந்த எட்டு மாதமாக மக்களை அணுகி, திரையரங்கிற்கு வராமல் ஏன் திருட்டு டி.வி.டி.களையும், இணையத்தில் தரவிறக்கம் செய்தும் படம் பார்க்கிறார்கள் என ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதை வீடியோவாகத் திரையிட்டனர். அனைவருக்குமே தெரிந்த பதிலைதான் ஆய்வில் சேரன் பெற்றுள்ளார். டிக்கெட் விலை ஏற்றம் மற்றும் தியேட்டர் கேண்டீனில் விற்கப்படும் பாப்-கார்ன், கோலா முதலியவைகளுக்கு ஆகும் செலவுதான் பிரதான குறையாக மக்களால் சொல்லப்படுகிறது. மல்ட்டிஃப்ளக்ஸில் நடக்கும் பார்க்கிங் கொள்ளையைப் பற...
அர்னால்ட் பற்றி ரேம்போ!

அர்னால்ட் பற்றி ரேம்போ!

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
வழக்கம் போல் ‘எக்ஸ்பேண்டபிள்ஸ்’ படத்தின் மூன்றாம் பாகமும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகச் சிறந்த ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவரான சில்வஸ்டர் ஸ்டலோன் உருவாக்கியுள்ள இப்படத்தில், அர்னால்ட் ஸ்வாஸ்னேகர், மெல் கிப்ஸன், ஹாரிசன் ஃபோர்ட் போன்ற பல பிரபலமான நட்சத்திர ஆக்ஷன் ஹீரோக்கள் ஸ்டலோனோடு அணிவகுத்துள்ளனர. “ஆக்ஷன் ஹீரோக்கள் அழகானவர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை! ஏன், பெரிதான அளவில் உடற்கட்டு அமைந்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் கூட கிடையாது.ஆரம்ப நாட்களில் நானும் அர்னால்ட்டும் போட்டியாளர்களாக ஒருவரையொருவர் நினைத்திருந்தோம்! பகைவர்களைப் போலத்தான் நடந்து கொண்டோம். வயதாகி, காலம் மாறிய பிறகு, நேசத்தோடு பழகி, படங்களிலும் இணைந்து பணியாற்றத் தொடங்கினோம். எனது திரையுலக வளர்ச்சிக்கு, தெரிந்தோ தெரியாமலோ அர்னால்ட் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார்” எனச் சிரிக்கிறார் ஸ்டலோன்....
வீட்டிற்கே வரும் புது சினிமா!

வீட்டிற்கே வரும் புது சினிமா!

சினிமா, திரைத் துளி
திரையுலகில் அவ்வப்போது விஞ்ஞான வளர்ச்சியால் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சில மாற்றங்கள் உடனடியாக நடந்து விடும். சில மாற்றங்கள் நடக்க கால தாமதம் ஆனாலும் நடந்தே தீரும். காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த ஃபிலிம் சுருள் HARD DISKகளிலும், SD CARDகளிலும் சுருண்டு கொண்டது. 10 கிலோ எடையுடன் ஒரு மனிதன் தூக்கிச் சுமந்து அதன் மூலம் பதிவு செய்யப்பட்ட ஃபிலிம் கேமரா தடாலென டிஜிட்டல் கேமராவாக கைகளுக்கள் வந்தது. அதைப் போலவே, அகன்றத் திரையில் மிரண்டு பார்த்த அந்த அழகிய சினிமா வேறு தளங்களுக்கு நகர்ந்து பார்வையாளர்கள் அவரவர் வசதிக்கேற்ப தேவையான சினிமாவைப் பார்க்கும் வண்ணம் விஞ்ஞானம் தொலைக்காட்சியாகவும், கணினியாகவும் மாற்று சாதனங்களை நமக்கு வழங்கியது. இருப்பினும், காட்டு யானைகளை அழிப்பது கஷ்டம்; அழிக்கவும் கூடாது என்பது போல திரையரங்கம் என்பது ஓர் அபரிதமான உணர்வுகளைத் தரும் ஓரிடம். இன்றைய ஜாம்...
சபீரின் “கரர் – தி டீல்”

சபீரின் “கரர் – தி டீல்”

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
நிகிதா தன் தாத்தாவுடன் தென் ஆஃப்ரிக்காவில் வாழ்கிறார். நகரின் ஒதுக்குப்புறமான மாளிகையொன்றில் இருவரும் வசிக்கிறார்கள். அன்னே எனும் நர்ஸ், நிகிதாவின் தாத்தாவைப் பார்த்துக் கொள்ள அம்மாளிகையிலேயே தங்குகிறார். ஒருநாள், நிகிதாவின் தாத்தாவிற்கு உடல்நிலை மோசமாகிறது. அம்மாளிகைக்கு வழக்கமாக வரும் மருத்துவரை அன்று தொடர்பு கொள்ள முடியாததால், நிகிதா ஆர்யன் எனும் மருத்துவரை அவசர உதவிக்கு அழைக்கிறாள். நிகிதாவின் தாத்தாவைக் காப்பாற்றுவதோடு, நிகிதாவிற்கும் மருத்துவம் பார்க்கிறார் ஆர்யன். ஆர்யனை நிகிதாவின் தாத்தாவிற்குப் பிடித்து விடுகிறது. தன் பேத்தி நிகிதாவை ஆர்யனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். நிகிதாவின் உடலநலக் குறைப்பாடல் தாம்பத்யம் மேற்கொள்வதில் ஆர்யனுக்கு சிக்கல் ஏற்படுவதால், நர்ஸ் அன்னேவுடன் தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. உண்மையை அறிந்தாலும், தன் தாத்தாவின் உடல்நிலை மேலும் பாதிப்படைந்து விடக்கூடாதென ...
ராமானுஜன் விமர்சனம்

ராமானுஜன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கணக்கு, பிணக்கு, ஆமணக்கு என மகாகவி பாரதிக்கே கணிதம் என்றால் அவ்வளவு கசப்பு. சாதாரண மனிதர்களைப் பற்றிக் கேட்பானேன்? அவர்கள் மத்தியில் கணித மேதை ஒருவர் வாழ்ந்தால் அவர் கதியென்னாகும்? அதோ கதிதான். ராமானுஜரை ஒரு ஜீனியஸாக வாழவிடாமல் அவருக்கு கஷ்டங்கள் கொடுத்து அவரை சராசரி மனிதனாக்கத் துடிக்கிறது அவரது சுற்றமும் சமூகமும். இதையெல்லாம் எதிர்கொண்டு, அவரெப்படி உலகம் புகழும் மேதையாக வெற்றி கண்டார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி சுவாரசியமாகவும், இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாகவும் உள்ளது. கோயிலில் தரும் சுண்டல் அளவின் பற்றாக்குறையைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்வது; பள்ளிக்கு அட்டவணை தயார் செய்வதென சிறுவன் ராமானுஜனின் கணித அறிவினை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது அருமை. சிறுவன் ராமானுஜனாக நடித்திருக்கும் அன்மோல் கவர்கிறார். வளர்ந்த பின் டி.டி.ஆரிடம் ராமானுஜன் சொல்லும் Partition Numbers ...
“என் வியாபாரம் பெருசாகும்” – ‘அட்டகத்தி’ தினேஷ்

“என் வியாபாரம் பெருசாகும்” – ‘அட்டகத்தி’ தினேஷ்

சினிமா, திரைத் துளி
“அட்டகத்தியில நான் நானாவே இருந்துட்டேன். குக்கூல கொஞ்சம் வெளில போய் பண்ணியாச்சு. அதை முடிச்சுட்டு.. திருடன் போலிஸ் பண்றப்ப, கண் பார்க்கிறது என சில விஷயங்கள் எல்லாம் டஃப்பாக இருந்தது. அரங்கேற்ற வேளை க்ளைமேக்சில் வரும் சாங்கில், வி.கே.ராமசாமி சாரை ஜனகராஜ் துரத்துவார்ல? அந்த ஃபீல்தான் ‘திருடன் போலீஸ்’ படம் தரும். என்னுடைய வியாபாரத்தை இந்தப் படம் பெருசு பண்ணும்தான்னு நினைக்கிறேன்” என்றார் ‘திருடன் – போலீஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ‘குக்கூ’ புகழ் தினேஷ். இரண்டு படங்களில் நாயகனாக நடித்து விட்டாலும், அட்டகத்தி தினேஷின் முதல் டூயட் சாங் இப்படத்தில்தான் இடம் பெறுகிறது. அப்பாடலும், ‘ஆரண்ய காண்டம்’ படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்டது. படத்தொகுப்பாளர் பிரவீன் K.L.க்கு மிகவும் பிடித்த பாடலாம் அது. அவர் தயாரிப்பாளரிடம் வாங்கிக் கேட்டு, இப்படத்தில் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ...
ஆயிரம் மடங்கு உழைப்பில் “பூலோகம்”

ஆயிரம் மடங்கு உழைப்பில் “பூலோகம்”

சினிமா, திரைத் துளி
பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது பூலோகம். பாக்சிங்கை மையமாகக் கொண்ட கதையம்சமுள்ள படம். இந்தப் படத்திற்கென பிரத்தியேகமாக அதிக உழைப்பைச் செலுத்தியுள்ளார் ஜெயம் ரவி. மதன் என்ற பாக்சரிடம் இரண்டு மாதங்கள் முறைப்படி பயிற்சி பெற்றுள்ளார் ஜெயம் ரவி. மேலும் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனது எடையையும் 15 கிலோ கூட்டி, பூலோகம் படப்பிடிப்பின் பொழுது 90 கிலோ எடையை மெயின்டெயின் செய்துள்ளார். “பாக்சிங்கில் லீகலாக 6 பன்ச்சஸ்தான் அனுமதிப்பாங்க. அந்த 6 பன்ச்சை வச்சுக்கிட்டு படம் பண்றது கஷ்டம். ஆனா ஹீரோ எதுக்காக அடிக்கிறான். தங்கச்சிக்காவா, அப்பா அம்மாக்கா அடிக்கிறானா. மக்களுக்காகவா, காசுக்காகவா வெறிக்காவா, பழிவாங்குறதுக்காவா என்பதுதான் இந்தப் படத்தில் முக்கியமான விஷயம். எமோஷன்ஸ்தான் முக்கியமே தவிர படத்தில் பாக்சிங் முக்கியம் கிடையாது. படத்தில் எங்க பாக்சிங் முக்கியம்னா.. ஹீரோக...
ஆர்யா நிகழ்த்திய அமரவிழா

ஆர்யா நிகழ்த்திய அமரவிழா

சினிமா, திரைச் செய்தி
ஆர்யா தன் தம்பி சத்யாவை வைத்துத் தயாரிக்கும் ‘அமர காவியம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை, அமரத்துவம் வாய்ந்த விழாவாக நிகழ்த்திக் காட்டினார். பொதுவாக இசை வெளியீட்டு விழாவில், இசை குறுந்தகடை ஆண்கள்தான் வெளியிடுவார்கள். ஆனால் நடிகையில் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நடிகரான, நாயகி ஒருவரை இசை குறுந்தகடை வெளியிட வைத்து இன்னொரு நாயகியைப் பெற்றுக் கொள்ளச் செய்தார். இயக்குநர் பாலா முன்னிலையில், குறுந்தகடை நயன்தாரா வெளியிட த்ரிஷா பெற்றுக் கொண்டார். விழாவிற்கு வந்தவர்கள் படத்தைப் பற்றிப் பேசியதோடு ஆர்யாவைத்தான் வஞ்சனை இல்லாமல் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர் நடிகைகளுக்கு மட்டுமா நண்பர்? நடிகர்களுக்கும்தான் உற்ற நண்பர்; இயக்குநர்களுக்கும் ஆத்ம நண்பர்; தயாரிப்பாளர்களுக்கும் நெருங்கிய நண்பரென! “உங்க பாடல் வெளியீட்டு விழாவிற்கே வர மாட்டீங்களே.. ‘அமர காவியம்’ பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருக்கீங்க...
சைவம் விமர்சனம்

சைவம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சைவம் என்ற தலைப்பு மதத்தைக் குறித்ததல்ல. புலால் மறுப்பைப் பேசுகிறது. ஒரு குடும்பம் எப்படி ஏன் சைவ உணவு பழக்கத்திற்கு மாறுகிறது என்பதுதான் கதை. இக்கதையை இயக்குநர் ஏ.எல்.விஜய்க்குச் சொன்னது அவர் தாயார் என்பதை படம் முடிவில் குறிப்பிடுகிறார். தமிழ்ச்செல்வி தனது செல்லப் பிராணியான பாப்பா எனும் சேவல் பலி கொடுக்கப்படக் கூடாதென அதனை மறைத்து வைக்கிறாள். வீட்டிலிருப்பவர்கள் அச்சேவலை கண்டுபிடித்து பலி கொடுக்கிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு. சைவம் ஒரு அழகான ஃபேமிலி டிராமா. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் படம் நகர்கிறது. சேவலை விடவும், படத்தின் முக்கிய பங்கு வகித்திருப்பது நாசர் குடும்பம் வசிக்கும் அந்தச் செட்டிநாடு வீடுதான். அவ்வீட்டின் தொழுவம், மாடி, பரண் என அனைத்துமே கதைக்கு உதவும் முக்கிய பங்கு வகிக்கிறது. சினிமாவிற்கு சம்பந்தமே இல்லாத முகங்களாகப் பார்த்து, கதாபாத்திரங்களுக்குப் பொருந்திக...