
உழுத வயலின் சேறு வாசனை
தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று நம் நாசியைத் துளைத்திடும் வாசனைகள் பல உண்டு. மண்பானை வாசனை, பொங்கல் வாசனை, கரும்பு வாசனை, மஞ்சள் கிழங்கு வாசனை, ஜல்லிக்கட்டு வாசனை என சொல்லிக் கொண்டே போகலாம்.
ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைத்துள்ள வானவில் வாழ்க்கை திரைப்படத்தில் கவிஞர் யுகபாரதி எழுதியுள்ள வாசனை என்னும் பாடல் தமிழர் மரபின், மண்ணின் வாசனைகளை எடுத்துக் கூறும் வரிகளைக் கொண்டுள்ளது.
"அறுவடை திருநாளாம் பொங்கல் அன்று கிராமங்களில் வைக்கோல் வாசனை, வெல்லம் வாசனை, காளைமாட்டு கொம்பு வாசனை என தொன்மையான பல வாசனைகள் வீசக்கூடும். அதை மையமாகக் கொண்டு தினசரி வாழ்வில் நாம் நுகரும் பல வாசனைகளைப் பட்டியலிட்டிருக்கிறோம் இப்பாடலில் " என்கிறார் கவிஞர் யுகபாரதி.
வாசனை
ஈச்சம்பழத்து ஈர வாசனை
இஞ்சி முரபா கார வாசனை
எலந்தபழத்து புளிப்பு வாசனை
பலா இனிப்பு வாசனை
கரிச காட்டு மண்ணு வாசனை
காத்திரு அடிச்ச நெல்லு வாச...
















