Shadow

சினிமா

ஐ விமர்சனம்

ஐ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்றாகிவிட்டது. அதை ஐ படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார். தியாவுக்கும் லிங்கேசனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், லிங்கேசனின் அழகையும் உடற்கட்டையும் ஐவர் கூட்டணி இணைந்து உருக்கலைக்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அந்நியன் அம்பி கூவக்கரையில் பிறந்தால் எப்படியிருக்கும்? அதுதான் லீ எனும் லிங்கேசன். ஆனால் விக்ரமுக்கு சென்னைத் தமிழ்தான் கொஞ்சம் ஒட்டவில்லை. கட்டுடல், மெல்லுடல், கோர முகமென விக்ரம் அபிரிதமான உழைப்பைக் கொட்டியுள்ளார். சுமார் இரண்டே முக்கால் வருட தவம் இவருக்கு! எல்லாத் தவத்திற்கும் வரம் கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டமான விஷயம். அந்நியனில், மல்டிபிள் பெர்ஸனாலிட்டி செய்த வேலையை இப்படத்தில் நாயகியும் வில்லன்களும் செய்கின்றனர். அம்பியை நாயகியே ரெமோவாக்குகிறாள்; வில்லன்கள் அந்நியன் ஆக்குகின்றனர். தியாவாக எமி ஜாக்சன். ஷங்கர்...
வளரும் கலைஞர்கள்…

வளரும் கலைஞர்கள்…

சினிமா
கடந்த 2014 ஆம் ஆண்டில் தமிழில் சுமார் 200 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது. இவற்றில் பெண் இயக்குநர்கள் இயக்கிய படங்களின் எண்ணிக்கை நான்குதான். துணை இயக்குநர்கள், இணை இயக்குனர்கள் மட்டத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் கூட, ஏனோ இயக்குநர்களாக பெரிய அளவில் பெண்கள் வரவில்லை என்பது ஏமாற்றம்தான். முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் தமிழ்த் திரையுலகில் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு கவனிக்கத்தக்க வகையில் இருந்தது என்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி. கோச்சடையான் - நூற்றாண்டைக் கொண்டாடும் இந்திய சினிமாவின் முதல் ‘மோஷன் கேப்சர்’ படம் ஒரு தமிழ்படம், அதிலும் ஒரு பெண் இயக்குனர் இயக்கிய படம் என்கிற வகையில் கோச்சடையான் இந்திய சினிமா வரலாற்றின் முக்கியமான மைல்கல். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றின் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார் செளந்தர்யா அஸ்வின். இனி இந்திய சின...
இளவரசி ஹன்சிகா!

இளவரசி ஹன்சிகா!

சினிமா, திரைத் துளி
தனது வசீகரத்தால் இளைய உள்ளங்களின் மனதைக் கவர்ந்திருந்தாலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் ஈன்றவர் ஹன்சிகா. அவர் பிறக்கப் போகும் 2015 ஆம் ஆண்டை எண்ணி மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். ஏனெனில் அடுத்த வருடம் தனக்கு மிகவும் பொன்மயமாக அமையும் என்ற அவரது நம்பிக்கையே மகிழ்ச்சித் திளைப்பிற்குக் காரணம். அரண்மனை படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பெற்றுத் தந்த விசாலமான இடத்தை, இந்த ஆண்டு டிசம்பரில் வெளிவரவிருக்கும் “மீகாமன்” படம் தக்க வைக்க உதவுமென நம்பிக்கையுடன் இருக்கிறார். ஹாலிவுட படத்துக்கு இணையான அப்படத்தில், ஆர்யாக்கு நிகரான பாத்திரத்தில் நடித்துள்ளதே அவர் மகிழ்ச்சிக்கு காரணம். நடிக ஜெயப்ரதாவின் மகன் சித்துவுக்கு ஜோடியாக நடிக்கும் ‘உயிரே.. உயிரே..’ படத்தில், அவரது வயதுக்கும் துள்ளலுக்கும் ஏற்ப பப்லியான பாத்திரத்தில் வருகிறார். 2015 பொங்கல் நாளன்று வெளியாகும...
சிக்ஸ்-பேக் அருண் விஜய்

சிக்ஸ்-பேக் அருண் விஜய்

சினிமா, திரைத் துளி
2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரவிருக்கும் என்னை அறிந்தால்.. படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கிறார் அருண் விஜய். கடந்த ஆறு மாதங்களாக, ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி வரை உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுகிறார் அருண் விஜய். அப்படி உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுவதை தான் மிகவும் விரும்புவதாக கூறும் அருண் விஜய், “ஷூட்டிங் நாட்களிலும், இரவு ஜிம்க்கு வந்து என் பெர்ஸனல் ட்ரெயினர் ஷிவக்குமாரின் உதவியுடன் வொர்க்-அவுட் செய்வது மிகவும் பிடித்திருக்கிறது” என்கிறார்....
கேரளத் திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும்

கேரளத் திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும்

சினிமா, திரைத் துளி
திக்கெட்டும் பயணித்து, 'பண்ணையாரும் பத்மினியும்’ படம் பல விருதுகளை அள்ளி வருகிறது. ஹபிடெட் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ப்ரேகு ஃபிலிம் ஃபெஸ்டிவல், ஜாக்ரான் ஃபிலிம் ஃபெஸ்டிவல் என பல நாடுகளின் திரைப்பட விழாக்களைப் பார்த்த பண்ணையாரும் பத்மினியும், இந்த வருடம் பெங்களூருவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியப் படங்களுக்கான வரிசையில் தேர்வுக்குழு சிறந்த திரைப்படம் என்ற விருது வாங்கியது. இந்த வருடம் கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஒரே தமிழ் படம் என்ற அந்தஸ்தையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கியுள்ள அருண் கூறுகையில், “இவ்வகையான விருதுகள் எங்களைப் போலுள்ள வளரும் கலைஞர்களுக்கு ஒரு ஊக்கமாய் அமைகிறது” என்கிறார். இப்படம் வரவிருக்கும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிலும் திரையிடப்படவுள்ளது. இவ்வாறான திரைப்படங்கள் அதிகம் தமிழில் வருமானால் தமிழ் ...
ஹீரோவாகும் சிம்ஹா!

ஹீரோவாகும் சிம்ஹா!

சினிமா, திரைத் துளி
இயக்குநரும் தயாரிப்பாளருமான மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் மற்றும் R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் பாம்பு சட்டை. “சதுரங்க வேட்டை” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மனோபாலா தொடுக்கும் புதிய வேட்டையான ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குநர் சங்கரின் இணை இயக்குநர் ஆவார். பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த பாபி சிம்ஹா இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு கச்சிதமாகப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது இந்த கதாபாத்திரம். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற அஸீஸ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பதிவு நாளை முதல் ஆரம்பமாகிறது. திட்டமிட்டப்படி படமெடுத்து வெளியிடும் மனோபாலா இப்படத்தை கோடை வ...
லிங்கா விமர்சனம்

லிங்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேரன் லிங்கா திருடன்; அவனது தாத்தா லிங்கேஸ்வரனோ மஹாராஜா. மஹாராஜாவின் பேரன் ஏன் திருடனானான் என்பதுதான் கதை. கன்னக்கதுப்புகளில் வயோதிகம் எட்டிப் பார்த்தாலும், ரஜினியின் சின்ன கண்களின் ஷார்ப்னெஸும், துள்ளலான உடல்மொழியும் ஈர்க்கவே செய்கிறது. அதனால்தான் மூன்று மணி நேரம் திரையரங்கில் அமர முடிகிறது. ரஜினிக்கு நிச்சய வெற்றிய அளிக்கும் இரு வேடங்களில் வருகிறார். ஃபிளாஷ்-பேக்கில் பணக்காரராகவும், நடப்பில் சாமானியாகவும் வருகிறார். ஆனால் சாமானியன் திருடனாக உள்ளான் இப்படத்தில். 'சூது கவ்வும்' காலத்துக்கு ஈடு கொடுக்க இருக்குமோ என்னவோ? நறுக்கு தெறித்தாற்போல் இருக்கும் பணக்கார ரஜினியின் ஃபிளாஷ்-பேக். ஆனால் லிங்காவில் படமே அதன் நீண்ட ஃபிளாஷ்-பேக்தான். அத்தனை பெரிய கூட்டத்திலும் தனித்து ஜொலிக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. ஆனால் தன் வயது காரணமான பிரக்ஞையுடன் ரஜினி நடித்திருப்பது படத்தின் சுவாரசியத்தை மட்டுபடுத்தவே...
நண்பேன்டா ரஜினி!!

நண்பேன்டா ரஜினி!!

சினிமா, திரைத் துளி
'நினைத்தாலே இனிக்கும்' உட்பட பல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயப்ரதா. இவர்களின் நட்பு இன்றளவும் தொடர்ந்து வருவது உலகமறிந்ததே! மேலும் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த பல படங்களிலும் ஜெயப்பிரதா நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு, ஜெயப்பிரதா அவர்கள் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக லிங்கா படப்பிடிப்பின்போது சந்தித்துள்ளார். அப்போதுதான் தயாரித்துக் கொண்டிருக்கும் உயிரே.. உயிரே.. படத்தின் முன்னோட்டத்தைக் காண்பித்துள்ளார். படத்தை வெகுவாகப் பாரட்டிய சூப்பர் ஸ்டார் ‘உயிரே.. உயிரே..’ படத்தின் முன்னோட்டத்தை தன் படம் லிங்கா வெளியாகும் திரையரங்குகளில் இணைக்குமாறு தயாரிப்பு தரப்பிடம் கேட்டுள்ளார். சூப்பர் ஸ்டாரின் பெருந்தன்மையைக் கண்டு பெருமகிழ்ச்சியுற்ற நடிகை ஜெயப்ரதா தனது நன்றியைத் தெரிவித்தார். ஏனெனில் அப்படத்தில் அவரின் மகன் சித...
அரசியலைக் கலாய்க்க வரும் பவர் ஸ்டார்

அரசியலைக் கலாய்க்க வரும் பவர் ஸ்டார்

சினிமா, திரைத் துளி
அரசியல்வாதிகளின் உண்ணாவிரதம் முதல் கண்டன அறிக்கைவரை எல்லாத்தையும், ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்டா!’ எனக் கடந்து செல்லும் மனநிலையை மக்கள் எப்பவோ பெற்றுவிட்டனர். ஆனால், சூரியன் படத்தில் மகான் கவுண்டர் (சமூகத்தளம் கவுண்டமணிக்குச் சூட்டியுள்ள கெளரவப்பட்டம்), “அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா” என பகடி செய்ததற்கு பின், பரவலாக இது பேச்சு வழக்குத் தொடராக மாறியது. தற்போதைய அரசியல் நடப்புகளை மையமாக வைத்து, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற தலைப்பில் படம் எடுத்து வருகின்றனர். டிசம்பர் 11, கொடைக்கானலில் இப்படத்திற்கான படப்பிடிப்புத் தொடங்கியது. பவர் ஸ்டார், ஜான் விஜய், மனோ பாலா, சுப்பு அருணாசலம் முதலியோர் நடிக்கின்றனர். தற்காப்பு, கரையோரம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த கணேஷ் பிரசாத்தான் படத்தின் நாயகன். ‘இந்தப் படம் உண்மையை, நகைச்சுவையுடன் உரக்கச் சொல்லும் படமாகும்' என்கிறார் பல்வேறு வெற்றிப் படங்களுக்கு...
குட்டீஸ் சாய்ஸ் சுசித்ரா சிவராமன்

குட்டீஸ் சாய்ஸ் சுசித்ரா சிவராமன்

சினிமா, திரைத் துளி
இதுவரை 15 தமிழ்ப்படங்களில் நடித்துள்ள சுசித்ரா சிவராமன், குறிப்பிடும்படியான குழந்தை நட்சத்திரமாக இருந்து தனக்கென தனித்த அடையாளங்களுடன் வளர்ந்து வருகிறார். இளைய தளபதி விஜய்யின் “ஆதி” படத்தில் சிறு வயது த்ரிஷா பாத்திரத்தில் அறிமுகமாகி.. அய்யனார், வேட்டைக்காரன், ஆதவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘லிங்கா’ படத்திலும், சிவ கார்த்திகேயன் தங்கையாக ‘காக்கி சட்டை’ படத்திலும் நடித்து வருகிறார். மேலும், 2005 முதல் இதுநாள் வரை சன் டி.வி.யில் குழந்தைகளுக்கான ‘குட்டீஸ் சாய்ஸ்’ நிகழ்ச்சி நடத்தி வருகிறார். சுட்டி டி.வி.யில் செய்தி வாசிப்பாளராகவும் உள்ளார். விஜய் டி.வி.யின் பிரபல சீரியல்களான சரவணன் மீனாக்ஷி, தாயுமானவன் முதலியவற்றிலும் நடித்துள்ளார். எட்டு வயது முதல் பரதநாட்டியம் பயின்று வரும் அவர்.. நாகர்கோயில், மெட்ராஸ் மியூசிக் காலேஜ் போன்ற பல ஊர்களில் அரங்கேற்றமு...
1 பந்து 4 ரன் 1 விக்கெட் விமர்சனம்

1 பந்து 4 ரன் 1 விக்கெட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யோசிக்கவே விடாமல் வயிறைப் புண்ணாக்கச் செய்யும் நகைச்சுவை பேய்ப் படம். 1 பந்தில் 4 ரன் எடுத்தா இந்தியா பாகிஸ்தானை ஜெயித்துவிடும். அந்த நேரத்தில் காதம்பரி தூக்கில் தொங்கி உயிரைவிடுகிறாள். இதான் படத்தின் தலைப்புக்குக் காரணம். வீட்டை விட்டு ஓடி வரும் ரம்யாவை அழைத்துக் கொண்டு, தற்காலிமாகத் தங்க ஒரு பங்களாவிற்குச் செல்கிறான் விஸ்வா. ரம்யா உடம்புக்குள் பேய் புகுந்து விடுகிறது. யாராவது ரம்யாவைத் தொட்டால் பேய் விழித்துக் கொள்ளும். அந்த பங்களாவை விட்டு யாரையும் வெளியிலும் போகவிடாமல் அனைவரையும் பங்களா அரெஸ்ட் செய்து விடுகிறது பேய். பின் என்னானது என்பதுதான் கதை. நாயகனாக வினய் கிருஷ்ணா எனும் ஆந்திராவாலா அறிமுகமாகியுள்ளார். லிப் சின்க் பிரச்சனை கூட இல்லாமல் அழகாக கதாபாத்திரத்திற்குப் பொருந்தியுள்ளார். நாயகியாக ஹஷிகா தத். நாயகி பாத்திரத்துக்குப் பொருந்துவதைவிட பேய் பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துக...
எக்சோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ்

எக்சோடஸ்: காட்ஸ் அண்ட் கிங்ஸ்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
Exodus: Gods and Kings எக்சோடஸ் என்றால் கிரேக்க மொழியில் பெருந்திரளான மக்களின் வெளியேற்றம் அல்லது பயணம் என பொருள்படும். இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எடுக்கப்பட்ட மிகப் பிரம்மாண்டமான படம். பலமுறை படமாக்கப்பட்ட மோசஸின் கதையை, கிளாடியேட்டர் படத்தின் இயக்குநர் ரிட்லி ஸ்கோட் இயக்குகிறார் என்பதுதான் அனைத்து எதிர்பார்ப்புகளுக்கும் காரணம். வருடம் 1500 கி.மு. எகிப்தின் மெம்ஃபிஸ் எனும் நகரத்திலுள்ள அரண்மனையில் இளவரசனாக வளரும் மோசஸ், 400 வருடமாக அடிமைகளாக இருக்கும் ஹீப்ருகள் வேலை செய்து கொண்டிருக்கும் பைதோம் நகரத்துக்குச் செல்கிறான். ஹீப்ருகளின் மதகுரு ஒருவரின் மூலம் தானும் ஒரு ஹீப்ருதான் எனத் தெரிந்து கொள்கிறார் மோசஸ். இந்த உண்மை தெரிய வந்ததும் புதிய மன்னரான ரம்சீஸ் – II, மோசஸை நாடு கடத்துகிறார். செங்கடல் அருகிலிருக்கும் டைரனுக்குச் (...
ர விமர்சனம்

ர விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ர - ஒரு பேய்ப் படம்; இல்லை அமானுஷ்யப் படம்; இல்லை இல்லை சாத்தான் பற்றிய படம். தலைப்பின் பெயர் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு படத்தில் பதிலில்லை. கல்யாணம் ஆனவுடனே ரென்யா மர்மமான முறையில் இறந்து விடுகிறாள். அவளுடன், அவள் கணவன் அஜய் பேச எடுக்கும் முயற்சி விபரீதமாகி, அவனைச் சுற்றி படு அமானுஷ்யமான சம்பவங்கள் நிகழ்கின்றன. எதனால் அவை நிகழ்கின்றன என்பதுதான் படத்தின் கதை. அஜயாக அஷ்ரஃப். பெரும்பாலான காட்சிகளில் இவர் மட்டுமே திரையில் இருக்கிறார். அதுவும் அசையாமல் வருத்தப்பட்டப்படியோ வெறித்தப்படியோ இருக்கிறார். எனினும் திரைக்கதையின் ஓட்டத்தால் அஷ்ரஃப், இந்த சவாலை சுலபமாகக் கடக்கிறார். அஜய்க்கு, ஒரு வரம் கிடைக்கிறது. யாராலும் அவனைக் கொல்ல முடியாது; அதே போல் உயிர் போகும் விபத்து எதுவும் அவனுக்கு நிகழாது. இப்படி சூப்பர் ஹீரோவாக அவனுக்கு வாய்ப்புக் கிடைச்சும், வழக்கமான தமிழ் சினிமாகளில் வரும் ...
ஜித்தனுக்கு ஏற்றவர் ஸ்ரீகாந்த் தேவா

ஜித்தனுக்கு ஏற்றவர் ஸ்ரீகாந்த் தேவா

சினிமா, திரைத் துளி
மர்ம மனிதனான ஜித்தன்-2 கதாபாத்திரத்தை வலுவாகக் கட்டமைக்க படத்தின் இசைத்தரம் மிக மிக அவசியம் எனக் கருத்துகிறார் படத்தின் இயக்குநர் ராகுல். “இசையில் அத்தகைய மேஜிக் செய்ய ஸ்ரீகாந்த் தேவாதான் பொருத்தமான நபர். காட்சிகளின் தரத்துக்கு ஏற்றாற்போல் பின்னணி இசை அமைய வேண்டுமென, சில பிரபலமான உலக இசைக் குழுக்களோடு இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளோம். படத்தை அழகாகச் செதுக்க போதிய கால அவகாசம் எடுத்துக் கொண்டு, மிகச் சிறந்த படமாக ஜித்தனைக் கொண்டு வருவோம்” என நம்பிக்கையுடன் கூறினார் ராகுல்....