Shadow

சினிமா

ஆந்திர சினிமாவில் ‘தமிழ்க் கடவுள்’

ஆந்திர சினிமாவில் ‘தமிழ்க் கடவுள்’

சினிமா, திரைத் துளி
சுப்ரமணியபுரம் எனும் ஊரிலுள்ள சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஏதோ ஒரு மர்மமான காரணத்தால் மூடப்படுகிறது. அந்தக் கோயிலைத் திறக்க யார் முயற்சி செய்தாலும், அவர்கள் பாம்பால் தீண்டப்பட்டு இறக்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. தமிழில் கார்த்திகேயன் என்றும், தெலுங்கில் கார்த்திகேயா என்றும் எடுக்கப்படும் இப்படத்தில் நிகில் நாயகனாகவும், ஸ்வாதி நாயகியாகவும் நடிக்கின்றனர். நாயகன் நிகிலுக்கு தமிழில் இது முதற்படம். சென்னை, பாண்டி, கும்பகோணத்தில் படப்பிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. நல்லதொரு த்ரில்லர் படமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ‘கார்த்திகேயன் சாமி படமா, சமூகப் படமா?’ என்று கேட்டதற்கு, “இரண்டும் இணைந்ததுதான்” என்கிறார் படத்தின் இயக்குநர் சந்து....
நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோபமோ, மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ என அதீதமாக உணர்ச்சி வசப்படும் நேரங்களில் எல்லாம் தூங்கி விடுவார் இந்திரன். இத்தகைய, ‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட இந்திரன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதுதான் கதை. 29 வருடங்களுக்கு முன், லக்ஷ்மி மேனனுக்கு இப்படத்தில் நடப்பதுபோல், ரஜினியின் தங்கைக்கு நிகழும். ரஜினிக்கு தூக்கம் வராது. பின் ரஜினி சிகப்பு மனிதனாக மாறி, ராபின்-ஹூட் என மக்களால் கொண்டாடப்படுவார். தூங்கி வழியும் விஷாலோ, தன் குறைபாடுகளை மீறி சிகப்பு மனிதனாக மாறி, தன் சொந்த வெறுப்பினை மட்டும் தீர்த்துக் கொள்கிறார். அதோடு அவரது பத்தாவது ஆசையும் பூர்த்தியாகிறது. இந்திரனாக விஷால். மிக மிகத் தெளிவாக இருக்கார். மிகை ஹீரோயிசம், காமெடிக் காட்சிகளில் விஜய்யை இமிடேட் செய்வது போன்றவற்றைலாம் முற்றிலுமாக தவிர்த்து விட்டு, கதைக்குத் தக...
“இது கொண்டாட்ட நேரம்” – ஹீரோ சந்தானம்

“இது கொண்டாட்ட நேரம்” – ஹீரோ சந்தானம்

சினிமா, திரைத் துளி
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைய இருப்பதால், அதைக் கொண்டாட நினைத்த படக்குழுவினருக்கு இன்னொரு கொண்டாட்டத்துக்கான காரணம் காத்திருந்தது . மூத்த ஸ்டுன்ட் இயக்குநர் விஜயன் மாஸ்டரின் பிறந்த நாள் கொண்டாட்டம் தான் அது. பட்டு வேட்டி சட்டையில் சந்தானமும், பட்டுப் புடைவையில் கதாநாயகி ஆஷ்ணா சாவேரியும் ஒரு விசேஷதுக்கான உடையில் வலம் வந்தனர். அதிரடிக் காட்சிகளில் பஞ்ச் அடிக்கும் விஜயனின் பிறந்த நாளை சிரிப்பு சரவெடியில் பஞ்ச் அடிக்கும் சந்தானம் கொண்டாடியதை விஜயன் மாஸ்டர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். காதல் காட்சிகளில் மட்டுமின்றி , அதிரடி சண்டை காட்சிகளில் கூட சோபிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ள சந்தானம் கொண்டாட இதை விட வேறு தருணமோ , வேறு சரியான காரணமோ கிடைக்காது....
“நானே எனக்கு மேனஜர்!” – ஹன்சிகா

“நானே எனக்கு மேனஜர்!” – ஹன்சிகா

சினிமா, திரைத் துளி
அநாமதேயர்கள் தாங்கள்தான் எனக்கு மேனஜரெனத் தவறான தகவல் பரப்பி வருவதாக அறிகிறேன். எனது சினிமா தோழமைகளின் கவனத்திற்கு, நானோ என் அம்மாவோ தவிர்த்து, என் படங்களுக்கான தேதிகள் குறித்து தயாரிப்பாளரிடம் பேச வேறெவருக்கும் அதிகாரமில்லை. அநாமதேயர்களின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் எவ்வகையிலும் பொறுப்பில்லை. - ஹன்சிகா...
டமால் ஏன்? டுமீல் ஏன்?

டமால் ஏன்? டுமீல் ஏன்?

சினிமா, திரைத் துளி
அஞ்சு பத்து லஞ்சம் கொடுத்தாவது தன்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சாதாரணமானவன் நாயகன் மணி. வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தவன் சூழ்நிலை காரணமாக வேலையை இழக்கிறான். இதற்கிடையில் இளவரசு, காமாட்சி சுந்தரம் என்ற இரு சமூக விரோதிகளின் பிடியில் சிக்குகிறான். இந்த இருவரில் ஒருவரிடம் சிக்கினாலும் மணியின் உயிர் போவது உறுதியாகிறது. அவன் செய்த தவறு என்ன, ஏன் இவர்கள் இவனைத் தேடுகிறார்கள், மணி இவர்களிடம் சிக்கினானா அல்லது தப்பினானா என்பதே முடிவு. கதையின் நாயகன் மணியாக வைபவ். கதையின் நாயகியாக ரம்யா நம்பீசன். இளவரசாக கோட்டா சீனிவாச ரா காமாட்சி சுந்தரமாக ஷாயாஜி ஷிண்டே நடிக்கின்றனர். இவர்கள் தவிர மனோபாலா, சார்லி முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பணிக்குழு: >> எழுத்து, இயக்கம் - ஸ்ரீ >> தயாரிப்பு - கேமியோ ஃப்லிம்ஸ் சி.ஜே.ஜெயகுமார் >> ப்ரொடக்ஷன் ...
சைவத்தில் சேவல்

சைவத்தில் சேவல்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் விஜய் இயக்கும் ‘சைவம்’ படத்தில் நாசர், சாரா தவிர அனைவருமே புதுமுகங்கள். கூத்துப் பட்டறை கலைஞர்கள், விஞ்ஞானி வித்யா, ஹெலிகாப்டர் மெக்கானிக் விக்கி, நாசரின் மகன் பாஷா என கலந்து கட்டி கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் விஜய். இதற்கு உதவிய ஷண்முகராஜன், தங்கள் பாத்திரங்களை நடிகர்கள் உணர்ந்து நடிக்க ட்ரெயினிங் கேம்ப் ஒன்றும் நடத்தியுள்ளார். “இது என்னுடைய கதை இல்லை. நான் சின்ன பையனாக இருக்கிறப்ப எங்க அம்மா சொன்ன கதை. அவங்கதான் அன்-அஃபீஷியல் ரைட்டர், இந்தப் படத்துக்கு. தெய்வத் திருமகள் படத்தில், விக்ரமுக்கும் சாராவுக்கும் ஒரு போட்டி இருந்தது. இந்தப் படத்தில், அப்படி நாசர் சாருக்கும் சாராவுக்கும் நடிப்பில் ஒரு போட்டி இருக்கும். ஆனா சைலன்ட்டாக ஸ்கோர் செய்திருப்பது ‘ரே பால்’ என்ற பையன்தான். படம் பார்த்து முடிக்கிறப்ப, கண்டிப்பாக இந்தப் பையனைப் பற்றி எல்லாம் பேசுவார்கள்” என்றார் இயக்கு...
தேவதை ஒருவரல்ல.. மூவர்!

தேவதை ஒருவரல்ல.. மூவர்!

சினிமா, திரைச் செய்தி
ஒரு சினிமா விழா போலில்லாமல் கல்யாண நிகழ்வு போல கலை கட்டியது ‘சைவம்’ இசை வெளியீட்டு விழா. விழாவிற்கான அழைப்பிதழுடன், காய்கறிகள் அடங்கிய கவர் ஒன்றினையும் கொடுத்து அசத்தியிருந்தார் இயக்குநர் விஜய். ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு, குடும்பத்துடன் அனைவரும் வந்துள்ளார்களே என வந்திருந்த விருந்தினர் அனைவருமே வியந்தது குறிப்பிடத்தக்கது.சாராவுக்காக பின்னணி பாடியிருந்த உத்ரா உன்னிகிருஷ்ணன், அப்பாடலை மேடையில் பாடிக் காட்டியதும் விசிலும் கைதட்டலும் பிரமாதமாய் எழுந்தடங்கியது. சைந்தவிதான் உத்ராவைப் பாட வைக்கலாம் என ஜீ.வி.பிரகாஷிடம் பரிந்துரைத்துள்ளார். விஷூவலில் சாராவின் லிப்-சின்க் கச்சிதமாய் இருப்பது பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. தெய்வத்திருமகள் படத்தில் சாராவிற்கு பின்னணிக் குரல் கொடுத்த ஷ்ரிங்காதான் சைவம் படத்திலும் கொடுத்துள்ளார். ஷ்ரிங்கா, சாரா, உத்ரா, ஆகிய மூவரும் மேடையில் தோன்றி...
“என் குடும்பம் இது!” – நாசர்

“என் குடும்பம் இது!” – நாசர்

சினிமா, திரைச் செய்தி
சைவம் படத்தில் காரைக்குடி வாழ் செட்டியாராக நடித்துள்ளார் நாசர். ‘இந்தப் படம் தனக்கு இன்னொரு குடும்பத்தைத் தந்துள்ளது’ என நெகிழ்வுடன் ‘சைவம்’ இசை வெளியீட்டு விழா மேடையில் சொன்னார் நாசர். படத்தில் தன்னுடன் நடித்தவர்கள் ஒவ்வொருவரையும் அந்தக் கதாபாத்திரத்தின் உறவுமுறையை வாஞ்சையுடன் சொல்லி, சைவம் இசை வெளியீட்டு விழாவில் அறிமுகம் செய்து வைத்தார். கண்ணு பட வைக்கும் அழகான பெரிய குடும்பம்தான் அது என்பதில் சந்தேகமில்லை. “எனக்கு மகள் இல்லாத குறை இந்தப் படத்தில்தான் தீர்ந்தது” என தனக்கு மகளாக நடித்தவரை மேடையில் இருந்தே தேடினார் நாசர். விழாவிற்கு சர்ப்ரைஸாக வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த அனுஷ்காவும், இரு பக்கமும் திரும்பி அவரது மகள் யாரெனப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த நாசர், “எனக்கு ஒரு மகள் இருக்கா.. ஆறடி உயரத்தில்” என்றார் அனுஷ்காவைப் பார்த்து. “நான் உன்னைத்தான் என் மகள் என ச...
மான் கராத்தே விமர்சனம்

மான் கராத்தே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆபத்து சூழும்பொழுது, அவ்விடத்தை விட்டு மான் போல் துள்ளிக் குதித்தோடித் தப்பிக்கும் கலைக்குத்தான், ‘மான் கராத்தே’ என்று பெயர். ஆனால் போட்டி சண்டை என வந்துவிட்டால், தாங்கள் எதற்கும் சளைத்தவர்களில்லை என மான்கள் முரட்டுத்தனமாக தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்ளும். முக்கியமாக பெண் மானிற்கான போட்டியில். படத்தின் தலைப்பிற்கு நியாயம் செய்துள்ளனரா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். சித்தர் அளிக்கும் எதிர்காலத்தைச் சொல்லும் செய்தித்தாளிலிருந்து படம் ஜோராய் ஆரம்பிக்கிறது. பின் பலமுறை பார்த்துச் சலித்த வழக்கமான வட்டத்திற்குள் உழலத் தொடங்கி விடுகிறது. அதுவும் சுவாரசியமின்றி. வெட்டியாய்ச் சுற்றித் திரியும் பீட்டருக்கு, வெண்ணெயால் செய்தது போலிருக்கும் யாழினி மீது காதல் வந்துவிடுகிறது. தானொரு பாக்ஸர் என பீட்டர் விட்டு யாழினியையும் காதலிக்க வைத்துவிடுகிறான். காதலுக்காக, பீட்டர் சொன்ன பொய் அவனை எங்கு கொண்...
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் விமர்சனம்

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிம்புதேவன் இயக்கம் என்ற எதிர்பார்ப்புடன் செல்பவர்களை ஏமாற்றாமல், தனது நேர்த்தியான திரைக்கதையால் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்துள்ளார் இயக்குநர். நேரத்துக்கும் விதிக்கும் தொடர்புள்ளதா என நாரதருக்கு ஒரு சின்ன சந்தேகம். உலகின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் பிஸியாகிட்டேன் எனச் சொல்லும் பிரம்மா, தன் வேலையெல்லாம் விட்டுவிட்டு சிவபெருமானிடம் அந்தக் கேள்வியைக் கொண்டு செல்கிறார். நேரத்துக்கும் விதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என நாரதருக்கு சிவபெருமான் ‘லைவ் ஷோ’ காட்டி விளக்குவதுதான் படத்தின் கதை. இசபெல்லாவை, அவளது திருமணத்தன்று கடத்த திட்டமிடுகிறான் தமிழ். அவன் வீட்டை விட்டு காலை 08:59க்குக் கிளம்பினால் என்னாகும், பின் ஒரு நிமிடம் கழித்து 09:00க்கும், இரண்டு நிமிடம் கழித்து 09:01க்கும் கிளம்பினால் என்னாகும் என்பதுதான் சிவன் நாரதருக்கு காட்டும் டெமோ! மூன்று களவாணிகளாக அருள்நிதி, பிந்து மாதவி, ப...
ஓல்ட் பாய் (2003)

ஓல்ட் பாய் (2003)

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘பழிக்குப் பழி’ என்ற கதைக்கரு கொண்ட தென் கொரியத் திரைப்படம் இது. ஆனால், கண்ணுக்குக் கண், இரத்தத்திற்கு ரத்தம் என நாம் வழக்கமாக யூகிப்பது போன்ற கதையம்சம் கொண்ட படமில்லை. படம் மனிதனின் பழி வாங்கும் மனநிலையை மட்டும் பேசாமல், தான்வகுத்த சமூகக் கட்டுபாடுகளுக்குத் தன்னை எந்தளவுக்கு ஒப்படைத்துள்ளான் என்பதையும் நுணக்கமாகச் சித்தரிக்கிறது. ஒரு மனிதனைப் பதினைந்து வாருடங்கள் தனியாக ஓர் அறையில் அடைத்து வைத்தால் அவன் மனநிலை எப்படியிருக்கும்? ஓ-டேசு என்பவரை ஓரிரவு கடத்தி விடுகின்றனர். அவரது மனைவியும் கொல்லப்பட, அந்தப் பழியும் ஓ-டேசு மீது விழுகிறது. யார் கடத்தினார்கள், எதற்குக் கடத்தினார்கள் என்று தெரியாமல் பதினைந்து வருடம் அறையில் அடைப்பட்டு உள்ளார். அறையில் இருக்கும் தொலைக்காட்சிதான் ஒரே துணை. மனைவி கொல்லப்பட்டதையும் அதில்தான் தெரிந்து கொள்கிறார். அந்தக் கொடும் தனிமையால் அவர் பைத்தியமாகிவிடாமல் ...
பெரும் விருட்சத்தின் விழுது நான் – ‘பத்மபூஷன்’ கமல்

பெரும் விருட்சத்தின் விழுது நான் – ‘பத்மபூஷன்’ கமல்

சினிமா, திரைத் துளி
ஜனாதிபதி மாளிகையின் சரித்திர அழுத்தமும், என்னுடன் விருது பெற்றவர்களின் தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு மீண்டும் பணிவு கற்றுத் தந்தது. இத்தகைய விழாக்களை நடத்தவேண்டிய அவசியமென்ன என்ற கேள்விக்கான பதில் எனக்குக் கிடைத்தது. எனக்கு வழங்கப்படும் விருது என்னை பெருமைப்படுத்த மட்டுமன்று. என் மண்ணையும் பெருமைப்படுத்தும் செயல். மீண்டுமொரு குடிமகனாக என் கடமைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளிக்கும் விழாவாகவும் நான் இதை உணர்ந்தேன். தேசிய கீதம் இசைத்த பொழுது மனது ஏனோ நெகிழ்ந்தது. நான் ஒரு பெரும் விருட்சத்தின் விழுது என்பதுனர்ந்து நெஞ்சம் விம்மியது. மனத்திரையில் தேசபக்தியுள்ள என் தாய் தந்தையாரின் முகம் தோன்றி மறைந்தது. கொஞ்சம் குழந்தைத்தனமான உணர்வு என்றாலும் பிடித்திருந்தது. ஒரு சிலர் இந்தியா கிரிக்கெட் விளையாடி வென்றால் புல்லரித்துப் போவார்கள். நான் இந்தியா எத்துறையில் வென்றாலும் பூரிப்படைவேன். இன்று பல்துறை வித...
49ஓ – மழைப் பாடல்

49ஓ – மழைப் பாடல்

சினிமா, திரைத் துளி
மழைதான் நம் வாழ்வின் ஆதாரம் என்பதைக் குறிக்கும் வகையில் 49ஓ படத்தின் பாடல் ஒன்று இசையமைப்பாளர் கே இசையில், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில், “பொண்ணுங்களே இப்படித்தான்” என்ற பாடலைப் பாடிக் கவர்ந்த ஜெயமுர்த்தியின் குரலில், யுக பாரதியின் அருமையான வரிகளில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. திரையில் கவுண்டமணி விவசாயியாகத் தோன்றி மழை வேண்டிப் பாடும் இப்பாடல் (சிங்கிள் ட்ராக்), இந்த மாதம் இறுதியில் 31ஆம் தேதி, ரேடியோ மிர்ச்சியில் வெளிவர உள்ளது. விரைவில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மண்டம்மாக நடைப்பெற உள்ளது .பாடல் வரிகள் இதோ!! அம்மா போல அள்ளித்தரும் மழைதான், அவ ஆதாரமா நின்னா இல்லை குறைதான், அவ நட்டு வச்ச நாத்தை எல்லாம் கதிர் ஆக்குறா, எங்க புள்ள குட்டி அத்தனைக்கும் பசி ஆத்தறா!!...
பாடகி கீர்த்திகா

பாடகி கீர்த்திகா

சினிமா, திரைத் துளி
நடிகர் உதயாவின் மனைவியும், ‘ரா ரா’ படத்தின் தயாரிப்பாளருமான கீர்த்திகா உதயா, பின்னணிப் பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றி வருகிறார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘இனம்’ படத்தின் நாயகிக்கு மூன்று மொழிகளில், பின்னணிக் குரல் ¬¬கொடுத்திருக்கிறார் கீர்த்திகா உதயா. இப்படத்திற்கு முன்னதாக விஜய் இயக்கத்தில் வெளிவந்தா ‘தாண்டவம் படத்திற்காக நடிகை லட்சுமி ராய்க்கும், ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள ‘நான்தாண்டா’ படத்திற்காக நாயகி அனைகாவிற்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தற்போது, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தின் நாயகி அர்ஷிதாவிற்கும், ‘யாமிருக்க பயமே’ நாயகி ரூபா மஞ்சரிக்கும் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். “ரா ரா, நாந்தாண்டா, இனம்’ ஆகிய படங்களில் பாடல்களைப் பாடியும் இருக்கிறார். மாமனார் ஏ.எல்.அழகப்பன் - தயாரிப்பாளர், கணவர் உதயா – நடிகர், மைத்துனர் விஜ...