Shadow

திரை விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6 ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் தொடர் தொடங்கி 15 வருடங்கள் ஆகிறது. இந்தத் தொடரின் ஆறு படங்களில் ஒன்றில் மட்டும் நடித்திராத முக்கிய கதாநாயகனான பால் வாக்கர், ஏழாவது பாகத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக 2013இல் விபத்தில் இறந்துவிட்டார். இந்தத் தொடர் வரிசை படங்களுக்கு அது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. அதில் இருந்து படக்குழு எப்படி மீண்டது என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. அது மட்டுமில்லாமல், இந்தத் தொடரின் நான்கு படங்களை இயக்கிய ஜஸ்டின் லின்னுக்கு பதிலாக ஹாரர் பட இயக்குநரான ஜேம்ஸ் வான் இப்படத்தை இயக்கியுள்ளது மேலும் எதிர்பார்ப்பைக் கூடுதலாக்கியது. இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம், தாய்லாந்தைச் சேர்ந்த ஏஷியன் ஹீரோவான டோனி ஜா முதல்முறையாக இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். ஜேஸன் ஸ்டாத்தம்தான் படத்தின் வில்லன் என்ற ஆவ...
நண்பேன்டா விமர்சனம்

நண்பேன்டா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஓகே.. ஓகே.. அளித்த நம்பிக்கையில், சந்தானத்தை இணைத்துக் கொண்டு 'நண்பேன்டா" வரை வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். ஒரே நாளில் தனக்குப் பிடித்த பெண்ணை மூன்று முறை பார்த்து விட்டால், சத்யாவின் வாழ்க்கை ஓஹோவென்று ஏற்றம் காணுமென அவனது ஜாதகத்தில் இருப்பதாக சத்யாவின் அம்மா சொல்கிறார். பின் என்ன? அதேதான்.! இயக்குநர் ராஜேஷ் போட்டுக் கொடுத்த கோடில் இருந்து வழுவாதவராய் சத்யா எனும் பாத்திரத்தில் உதயநிதி நாயகனாக நடித்துள்ளார். முந்தைய படத்தை விட, நயன்தாரா உடனான காட்சிகளில் தயக்கம் துறந்து நெருக்கமாக நடித்துள்ளார் உதயநிதி. ஆனாலும் சந்தானம் போதும், புதிதாக கதையில் எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாமென்ற அவரது நம்பிக்கை மெய் சிலிர்க்க வைக்கிறது. சிவக்கொழுந்துவாக மிக வித்தியாசமான பாத்திரத்தில் சந்தானம். இந்தப் படத்தில் உதயநிதியின் காதலுக்கு இவர் யோசனையும் சொல்லவில்லை; உதவியும் செய்யவில்லை. ‘சூப்பர் ஃபிகர்’ ரம்யாவா...
இவனுக்கு தண்ணில கண்டம் விமர்சனம்

இவனுக்கு தண்ணில கண்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சின்னத்திரை நடிகர் தீபக் நாயகனாக நடிக்கும் முதற்படம். இப்படத்தில், ஜீ டி.வி.யின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பயங்கரமாகக் கலாய்த்துள்ளனர். தனக்கு எதுவும் சரியாக நடக்க மாட்டேங்குது என்ற விரக்தியில் நண்பர்களுடன் டாஸ்மாக் செல்கிறான் சரவணன். மிதமிஞ்சிய போதையில் தனக்குத் தானே சரவணன் வைத்துக் கொள்ளும் ஆப்புதான் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தின் கதை. மார்க் எனும் கதாபாத்திரத்தில் வருகிறார் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன். இரண்டாம் பாதியின் நாயகன் இவர்தான். ஓடாத திரையரங்கத்தில் அவர் அறிமுகமாகும் காட்சியே அட்டகாசமாக உள்ளது. அவரது வேதனையும், லட்சியமும்தான் படத்தின் சுவாரசியமே.! ஆரண்ய காண்டத்தில் மறக்க இயலாத பாத்திரத்தில் நடித்திருந்த ‘பாக்ஸர்’ ஆறுமுகம், இப்படத்தில் சூடு பாஸ்கராக வருகிறார். ‘என் பணம் எப்ப வரும்’ என அவர் பணம் கேட்கும் மாடுலேஷன் செமயாக உள்ளது. இயக்குநர் வித விதமான கதாபாத்திரங்களின் ம...
எனக்குள் ஒருவன் விமர்சனம்

எனக்குள் ஒருவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லூசியா எனும் கன்னடப் படத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் பிரசாத் ராமர். லூசியா, தென்னிந்தியத் திரைப்பட ரசிகர்கள் பெருமையாக காலரை உயர்த்திக் கொள்ள உதவிய படம். முறைப்படியாக உரிமை வாங்கி தமிழில் எடுத்துள்ளனர். தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்து திரைத்துறையில் நுழைந்த பவன் குமாரின் பெயரே திரைக்கதையில் வருகிறது. ஒருவன்தான் வாழ நினைக்கும் வாழ்க்கையைப் பற்றி கனவு காண்பதுதான் எனக்குள் ஒருவன் படத்தின் கதை. சித்தார்த்தின் கேரியரில் கண்டிப்பாக இது முக்கியமானதொரு படமாக அமையும். வாழும், வாழ நினைக்கும் என இரண்டு வாழ்க்கையையும் நடிப்பில் வித்தியாசப்படுத்திக் காட்டியுள்ளார். ஜிகர்தண்டா, காவியத் தலைவன் எனும் படங்களுக்குப் பிறகு, படத்தின் தனியொரு பிரதான பாத்திரமாக அவர் நடிப்பில் வந்திருக்கும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. தியேட்டர் ஓனராகவும், நடிகரின் மேனேஜராகவும் வழக்கம் போல் நரேன் அசத்தியுள்ளார்....
தொப்பி விமர்சனம்

தொப்பி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குற்றப் பரம்பரையைச் சேர்ந்த பட்டியல் இனத்தவனான சித்தன், தனது லட்சியமான காவல் துறையில் சேருகிறானா இல்லையா என்ற கேள்விக்கான பதில்தான் கதை. படத்தின் தலைப்பு போடும்பொழுதே, பொம்மலாட்ட பாணியில் குற்றப்பரம்பரை எப்படி உருவாகின என்ற செய்தியைச் சொல்லி விடுகிறார் இயக்குநர் யுரேகா. படத்தின் பலம் அதன் இயல்பான கதாபாத்திரங்கள். படத்தின் முதற்பாதி மிகவும் கலகலப்பாகப் பயணிக்கிறது. மலைவாசிகளின் தலைவராக வரும் G.M.குமார் அதகளம் செய்துள்ளார். திருடச் செல்பவர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்புதல், ஏ.டி.எம். மெஷினைப் பெயர்த்தெடுப்பது, பேயோட்டுவது, பேயைக் கொண்டு போலிஸை ஓட்டுவது என G.M.குமார் படத்தின் கலகலப்பிற்குப் பொறுப்பேற்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் அருள்தாஸும் பிரமாதப்படுத்தியுள்ளார். பில்லி சூனியத்திற்குப் பயப்படுவது, சித்தனின் வளர்ச்சியைக் கண்டு பொறுமுவது, உறவாடிக் கெடுக்கும் நைச்சியத்துடன் நடந்து கொள்வ...
எட்டுத்திக்கும் மதயானை விமர்சனம்

எட்டுத்திக்கும் மதயானை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது முதற்படத்தின் பெயரிலேயே ‘ராட்டினம் பிக்சர்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தனது இரண்டாவது படத்தை இயக்கித் தயாரித்துள்ளார் இயக்குநர் K.S.தங்கசாமி. சாகித்திய அகாதமி விருது வாங்கிய நாஞ்சில் நாடனின் நாவலொனின் தலைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. சாதீயமும் அதிகாரமும் பண ஆசையும் இணைந்து தமிழின் தம்பியான பிரபாவைக் கொன்று விடுகிறது. தமிழ் எப்படிப் பழி வாங்குகிறான் என்பதுதான் கதை. ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடித்துள்ளார். ஆனாலும் இது நாயகனுக்குரிய படமில்லை. நாயகனும் மற்றொரு பாத்திரமாகவே வருகிறார். ஆனால் சாராவாக வரும் ஸ்ரீமுகியை படத்தின் நாயகி எனச் சொல்லுமளவு நடித்துள்ளார். இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியமான கதாபாத்திரமான தமிழாக படத்தில் தோன்றியுள்ளார் K.S.தங்கசாமி. படத்தின் முக்கியமான அந்தக் கதாபாத்திரத்தை வேறு எவரையேனும் நடிக்க வைத்திருக்கலாம் அவர். காவல்துறை அதிகாரி ரகுபதியாக நடி...
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் விமர்சனம்

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைப்பு மட்டுமன்று படமும் வித்தியாசமாகவே உள்ளது. ஆனால் கதைக்குப் பொருந்தும் தலைப்பாகத் தெரியவில்லை. சூரியனின் மேற்பரப்பில் எழும் வெப்ப அலைகளால் பூமியில் காந்தப் புயல் வீசுகிறது. அதனால் செல்ஃபோன் சிக்னல்கள் வேலை செய்யாமல் போகின்றன. மீண்டும் எப்படி வேலை செய்கிறது, அதுவரை என்ன நிகழ்ந்தது என்பதே கதை. வழக்கமான தமிழ்ப் படமாக இல்லாமல் படம் நெடுகவே நிறைய சுவாரசியங்கள் உண்டு. உதாரணத்திற்கு பிக்பாக்கெட் திருடனாக வரும் அஜய்யின் கதாபாத்திரம். எல்லாப் பாத்திரத்துக்குமே சம அளவு முக்கியத்துவம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனித்துவ அடையாளங்களையும் தந்துள்ளார். அடுக்குமாடிக் குடியிருப்பு முகவர் முகிலாக வரும் அட்டகத்தி தினேஷ், கண்ணை உருட்டியவாறே இருக்கார் இப்படத்திலும். சிமியாக வரும் பிந்து மாதவியினுடனான காட்சிகள் ஈர்க்கவில்லை எனினும் அலுக்கவில்லை. சிமியின் குழந்தைப் பருவ ஃப்ளாஷ்-பேக், பிந்து மாதவியின் பாத்த...
பொங்கி எழு மனோகரா விமர்சனம்

பொங்கி எழு மனோகரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அம்மா செண்ட்டிமென்ட் கொண்டு படம் வந்து நாளாகும் குறையைத் தீர்க்க வந்துள்ள படம். சிக்கரசம்பாளையத்தைச் சேர்ந்த மனோகரன் தன் சிறு வயதிலேயே தாயை விட்டுப் பிரிகிறான். மீண்டும் தனது அன்னையுடன் இணைகிறானா இல்லையா என்பதுதான் கதை. சுமார் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்த் திரைப்படங்களை நினைவுப்படுத்தும் கதையும் திரைக்கதையும். திரைக்கதையிலேனும் சுவாரசியப்படுத்தல்களை கவனம் செலுத்தியிருக்கலாம். எழுதி இயக்கி இருப்பவர் ரமேஷ் ரங்கசாமி. மனோகரனாக, சுண்டாட்டம் படத்தில் நாயகன் இர்ஃபான் நடித்துள்ளார். தந்தையின் மிரட்டலுக்குப் பயப்படுவது, அம்மாவின் பாசத்துக்கு ஏங்குவது, நண்பர்களுடன் இணைந்து கும்மாளம் அடிப்பது, காதலிக்கிறேன் பேர்வழி என பேருந்துக்காகக் காத்திருப்பது, பெட்டிக் கடை வைத்திருக்கும் பெண்ணிடம் வழிவது, பால் கறந்து கேனில் சைக்கிளில் பால் கேன் கொண்டு செல்வதென படம் முழுவதும் பரபரப்பாக நடித்துள்ளார்...
என்னை அறிந்தால்… விமர்சனம்

என்னை அறிந்தால்… விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஜித்தும், கெளதம் வாசுதேவ் மேனனும் இணைகிறார்கள் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினைக் கேட்கவும் வேண்டுமா? காதலியின் மரணம் சத்யதேவ் ஐ.பி.எஸ்.-ஐ மிகவும் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. அஜித்தின் முகத்தையும், நடையையும் எந்தக் கோணத்தில் காட்டினால் திரையில் நன்றாக இருக்குமென்ற புரிதல், அவரை வைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு வந்துவிட்டதெனத் தெரிகிறது. எல்லாம் வெங்கட் பிரபு வகுத்துக் கொடுத்த பாதை. மங்காத்தாக்கு பின்னான அஜித் திரையில் அங்குமிங்கும் நடந்தாலே போதுமென்பது கதையற்ற வீரம் படத்தின் திரையரங்கக் கொண்டாட்டத்தில் நிரூபணமாகிவிட்டது. சாதாரணமாகவே தன் படத்தில் நடிக்கும் நாயகர்களை பளிச்சென மாற்றிவிடுவார் கெளதம். அஜித் கிடைத்தால்? மீசையை கச்சிதமாக வெட்டியிருக்கும் இளமையான அஜித், தாடி வைத்த அஜித், தலை நரைத்த அஜித் என விதவிதமாய் அஜித்தை அழகாக திரையில் காட்டியுள்ளார். காக்...
இசை விமர்சனம்

இசை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்குக் கிடைக்கும் புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் தனது திறமை மட்டுமே காரணமென நம்பும் ஒருவன், அவனுக்கு ஏற்படும் தொய்வுக்கும் இயலாமைக்கும் மட்டும் மற்றவர் செய்யும் சதிதான் காரணமென நம்புவான். செயலூக்கம் குறைந்த சாமானிய மனிதனின் கற்பிதமிது. அப்படித்தான் மகத்தான இசைக் கலைஞரான வெற்றிச்செல்வன் தன் சறுக்கலுக்கு தனது சிஷ்யன் ஏ.கே.ஷிவாதான் காரணமென கோபம் கொள்கிறார். தனது கோபத்தை வெற்றிச்செல்வன் எப்படித் தணித்துக் கொள்கிறார் என்பதுதான் இசை படத்தின் கதை. சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் படம் வந்துள்ளது. சம கால பாணி பற்றிலாம் கவலைப்படாமல், தனது பிரத்தியேக முத்திரையுடன் அசராமல் களமிறங்கியுள்ளார். ரத்தமும் சதையுமாக பழி வாங்கப் புறப்படும் தமிழ்ப்பட வில்லன்களைப் போலன்றி, நாயகனுக்கு உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்த முயல்கிறார் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன். இது போன்ற உளவியல...
தொட்டால் தொடரும் விமர்சனம்

தொட்டால் தொடரும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகி எதைத் தொட்டதால் என்ன தொடர்கிறது என்பதே படத்தின் கதை. காதல், அதனால் எழும் ஊடல், மெகா சீரியலில் காட்டப்படும் குடும்பப் பிரச்சனை, தமிழ்த் திரைப்படங்களின் ஆதிகாலம் தொட்டே வரும் சித்தி கொடுமை, மொக்கை போட்டே சாகடிக்கும் நாயகனின் நண்பன், கொல்லத் துரத்தும் வில்லன் என அக்மார்க் தமிழ்ப்படத்துக்குரிய சகல விஷயங்களையும் ஒன்று விடாமல் காட்சிப்படுத்தியுள்ளார் கேபிள் சங்கர். இதில் புதுமை எனப் பார்த்தால், வில்லனாக வரும் வின்சென்ட் அசோகன் ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மிரட்டியுள்ளார். படத்தின் தொடக்கத்திலேயே பாத்திரங்களைச் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஹீரோக்கு அநாவசியமான அறிமுகப் பாடல் கிடையாது; நாயகியும் லூசு போலவோ, கவர்ச்சி உடையிலோ அறிமுகமாகவில்லை. நாயகனைக் காதலிக்க மட்டுமே அவர் படத்தில் இல்லை. துக்கம், மகிழ்ச்சி, பொறுப்புணர்ச்சி, குறும்புத்தனம், கோபதாபமுள்ள பெண்ணாக உள்ளார் நாயகி. ஆனால் படத்த...
தி தியரி ஆஃப் எவரிதிங்

தி தியரி ஆஃப் எவரிதிங்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
The THEORY of EVERYTHING ஸ்டீஃபன் ஹாக்கிங் – நம் காலத்தின் மாபெரும் விஞ்ஞானி (கோட்பாட்டு இயற்பியலாளர்). அவரது மனைவி ஜேன் ஹாக்கிங்ஸ், ஸ்டீஃபன் ஹாக்கிங்குடன் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுகூரும் விதமாக எழுதிய Travelling to Infinity: My Life with Stephen என்ற நூலினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர். பத்தொன்பது வயது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான ஸ்டீஃபனுக்கு சக மாணவியான ஜேன் மீது காதல் வருகிறது. இருபத்தியொரு வயதில் ஸ்டீஃபன் ஹாக்கிங், நரம்பியல் இயக்க நோயால் (Motor neuron disease) பாதிக்கப்படுகிறார். அவர் அதிகபட்சம் இரண்டு வருடம்தான் வாழ்வாரென மருத்துவர் கெடு விதிக்கிறார். அச்சூழ்நிலையில் ஜேன், ஹாக்கிங்கின் பெற்றோர்களைச் சந்தித்து ஹாக்கிங்கை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெறுகிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பின்னர்தான் படத்தின் உண்மையான கதை தொடங்குகிறது. அத்தம்பதிக்குள் நிலவும...
ஐ விமர்சனம்

ஐ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்றாகிவிட்டது. அதை ஐ படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார். தியாவுக்கும் லிங்கேசனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், லிங்கேசனின் அழகையும் உடற்கட்டையும் ஐவர் கூட்டணி இணைந்து உருக்கலைக்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அந்நியன் அம்பி கூவக்கரையில் பிறந்தால் எப்படியிருக்கும்? அதுதான் லீ எனும் லிங்கேசன். ஆனால் விக்ரமுக்கு சென்னைத் தமிழ்தான் கொஞ்சம் ஒட்டவில்லை. கட்டுடல், மெல்லுடல், கோர முகமென விக்ரம் அபிரிதமான உழைப்பைக் கொட்டியுள்ளார். சுமார் இரண்டே முக்கால் வருட தவம் இவருக்கு! எல்லாத் தவத்திற்கும் வரம் கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டமான விஷயம். அந்நியனில், மல்டிபிள் பெர்ஸனாலிட்டி செய்த வேலையை இப்படத்தில் நாயகியும் வில்லன்களும் செய்கின்றனர். அம்பியை நாயகியே ரெமோவாக்குகிறாள்; வில்லன்கள் அந்நியன் ஆக்குகின்றனர். தியாவாக எமி ஜாக்சன். ஷங்கர்...
லிங்கா விமர்சனம்

லிங்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேரன் லிங்கா திருடன்; அவனது தாத்தா லிங்கேஸ்வரனோ மஹாராஜா. மஹாராஜாவின் பேரன் ஏன் திருடனானான் என்பதுதான் கதை. கன்னக்கதுப்புகளில் வயோதிகம் எட்டிப் பார்த்தாலும், ரஜினியின் சின்ன கண்களின் ஷார்ப்னெஸும், துள்ளலான உடல்மொழியும் ஈர்க்கவே செய்கிறது. அதனால்தான் மூன்று மணி நேரம் திரையரங்கில் அமர முடிகிறது. ரஜினிக்கு நிச்சய வெற்றிய அளிக்கும் இரு வேடங்களில் வருகிறார். ஃபிளாஷ்-பேக்கில் பணக்காரராகவும், நடப்பில் சாமானியாகவும் வருகிறார். ஆனால் சாமானியன் திருடனாக உள்ளான் இப்படத்தில். 'சூது கவ்வும்' காலத்துக்கு ஈடு கொடுக்க இருக்குமோ என்னவோ? நறுக்கு தெறித்தாற்போல் இருக்கும் பணக்கார ரஜினியின் ஃபிளாஷ்-பேக். ஆனால் லிங்காவில் படமே அதன் நீண்ட ஃபிளாஷ்-பேக்தான். அத்தனை பெரிய கூட்டத்திலும் தனித்து ஜொலிக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. ஆனால் தன் வயது காரணமான பிரக்ஞையுடன் ரஜினி நடித்திருப்பது படத்தின் சுவாரசியத்தை மட்டுபடுத்தவே...
1 பந்து 4 ரன் 1 விக்கெட் விமர்சனம்

1 பந்து 4 ரன் 1 விக்கெட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யோசிக்கவே விடாமல் வயிறைப் புண்ணாக்கச் செய்யும் நகைச்சுவை பேய்ப் படம். 1 பந்தில் 4 ரன் எடுத்தா இந்தியா பாகிஸ்தானை ஜெயித்துவிடும். அந்த நேரத்தில் காதம்பரி தூக்கில் தொங்கி உயிரைவிடுகிறாள். இதான் படத்தின் தலைப்புக்குக் காரணம். வீட்டை விட்டு ஓடி வரும் ரம்யாவை அழைத்துக் கொண்டு, தற்காலிமாகத் தங்க ஒரு பங்களாவிற்குச் செல்கிறான் விஸ்வா. ரம்யா உடம்புக்குள் பேய் புகுந்து விடுகிறது. யாராவது ரம்யாவைத் தொட்டால் பேய் விழித்துக் கொள்ளும். அந்த பங்களாவை விட்டு யாரையும் வெளியிலும் போகவிடாமல் அனைவரையும் பங்களா அரெஸ்ட் செய்து விடுகிறது பேய். பின் என்னானது என்பதுதான் கதை. நாயகனாக வினய் கிருஷ்ணா எனும் ஆந்திராவாலா அறிமுகமாகியுள்ளார். லிப் சின்க் பிரச்சனை கூட இல்லாமல் அழகாக கதாபாத்திரத்திற்குப் பொருந்தியுள்ளார். நாயகியாக ஹஷிகா தத். நாயகி பாத்திரத்துக்குப் பொருந்துவதைவிட பேய் பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துக...