Shadow

திரை விமர்சனம்

ஜிகர்தண்டா விமர்சனம்

ஜிகர்தண்டா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பொழுதுபோக்கு என்றால் அது சினிமா மட்டும்தான் என்றாகிவிட்டது. சாவு வீட்டிற்கு ஒரு நடிகன் வந்தால், இறந்தவர் பற்றிய நினைவலைகள் தடைபட்டு நாயகனைப் பற்றிய பிம்பம் அவ்விடத்தில் மேலோங்குகிறது. துக்கத்துடன் நடிகர் ஜீவா ஏதேனும் சாவு வீட்டிற்குச் சென்றால், “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்!” எனச் சொல்லச் சொல்லி அவரை தர்மசங்கடத்திற்கு ஆட்படுத்துவார்களாம். இடம் பொருள் ஏவல் என மூன்றிற்கும் கட்டுப்படாமல், ஒரு கனவுநிலையையோ எக்ஸைட்மென்ட்டையோ உருவாக்கும் சர்வ வல்லமை பெற்றது சினிமா. தனது கனவினை அறுவடை செய்ய எவர் தோளிலும் பயணிக்கும் கார்த்திக்கிற்கும், தன் மீதுள்ள பயத்தை இலக்கற்று அறுவடை செய்யும் சேதுவுக்கும் இடையில் நிகழும் கதை. படத்தின் நீளம் 170 நிமிடங்கள் என்றதும் ஒருவித அயர்ச்சி மனதில் எழுகிறது. ஆனால் படம் பார்க்கும் பொழுது அத்தகைய சலிப்புகள் எழாமல் இருப்பதுதான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் வெற்றி. நே...
சரபம் விமர்சனம்

சரபம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சரபம் - சிங்க முகம் கொண்ட பறவை. ஒருவனின் ஆசையைத் தூண்டி, அவனை பகடையாக்கி விளையாடுகின்றனர் கோடீஸ்வர தந்தை ஒருவரும் அவரது மகளும். அந்த விளையாட்டின் முடிவுதான் படம். இது முழுக்க முழுக்க கதாநாயகி சப்ஜெக்ட். சிங்க முகத்தினைக் கொண்ட பறவை என படத்தின் தலைப்பான சரபமும் நாயகியின் அகத்தைத்தான் குறிக்கிறது போல! ஆனால் இந்தப் படத்திலுமேயே அசத்தலாக நடித்துள்ளார் நாயகன் நவீன் சந்திரா. சின்ன சின்ன முகபாவங்களில்கூட கவர்கிறார். பெரிய ஆக்‌ஷன் ஹீரோக்கான கோபங்கள் அவருக்குள் எழுந்தாலும், முடிவில் ஒரு சராசரியாகவே இருப்பது ஆறுதல். நாயகியாக சலோனி லுத்ரா. அறிமுகக் காட்சி முதலே படத்தின் ஓட்டத்திற்கு எண்ணெய் ஊற்றுபவராக உள்ளார். அந்நியமான முகம் என்றாலும் மனதில் சுலபமாகப் பதிகிறது. நடை, உடை, பாவனை என அனைத்திலும் ஒரு அசால்ட்டான தெனாவெட்டை வெளிபடுத்துகிறார். இயக்குநர் அருண்மோகன் நடிகர் அனுமோகனின் (படையப்பரே! பாம்பு பு...
திருமணம் எனும் நிக்காஹ் விமர்சனம்

திருமணம் எனும் நிக்காஹ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் அனீஸ் படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாமென யோசிக்கும் பொழுது, வீட்டிலிருந்த ‘நிக்காஹ் எனும் திருமணம்’ என்ற பத்திரிக்கையைப் பார்த்துள்ளார். அதை உல்டா செய்து, ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என தலைப்பு வைத்துள்ளார். அபு பக்கர் என்ற பெயரில் விஜய ராகவாச்சாரியும், ஆயிஷா என்ற பெயரில் விஷ்ணு பிரியாவும் ட்ரெயினில் பயணிக்கின்றனர். ஒருவரை ஒருவர் முஸ்லிம் என நினைத்துக் கொண்டு, தங்களை முஸ்லிமாகக் காட்டிக் கொண்டே காதலிக்கத் தொடங்குகின்றனர். இருவருமே ஐயங்கார் வீட்டைச் சேர்ந்தவர்கள்தான் என்ற உண்மை தெரியவந்ததும் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. விஜய ராகவாச்சாரியாக ஜெய் நடித்துள்ளார். இப்படத்திலும், உளறலாகக் காதலை வெளிப்படுத்தும் வழக்கமான பாத்திரம்தான். அபு பக்கராக தன்னை நாயகியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதால், இஸ்லாம் மதத்தைப் பற்றியும் அம்மதத்தின் சடங்குகள் பற்றியும் தெரிந்து கொள்ள விருப்பம் காட்டு...
ராமானுஜன் விமர்சனம்

ராமானுஜன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கணக்கு, பிணக்கு, ஆமணக்கு என மகாகவி பாரதிக்கே கணிதம் என்றால் அவ்வளவு கசப்பு. சாதாரண மனிதர்களைப் பற்றிக் கேட்பானேன்? அவர்கள் மத்தியில் கணித மேதை ஒருவர் வாழ்ந்தால் அவர் கதியென்னாகும்? அதோ கதிதான். ராமானுஜரை ஒரு ஜீனியஸாக வாழவிடாமல் அவருக்கு கஷ்டங்கள் கொடுத்து அவரை சராசரி மனிதனாக்கத் துடிக்கிறது அவரது சுற்றமும் சமூகமும். இதையெல்லாம் எதிர்கொண்டு, அவரெப்படி உலகம் புகழும் மேதையாக வெற்றி கண்டார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி சுவாரசியமாகவும், இரண்டாம் பாதி கொஞ்சம் இழுவையாகவும் உள்ளது. கோயிலில் தரும் சுண்டல் அளவின் பற்றாக்குறையைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்வது; பள்ளிக்கு அட்டவணை தயார் செய்வதென சிறுவன் ராமானுஜனின் கணித அறிவினை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது அருமை. சிறுவன் ராமானுஜனாக நடித்திருக்கும் அன்மோல் கவர்கிறார். வளர்ந்த பின் டி.டி.ஆரிடம் ராமானுஜன் சொல்லும் Partition Numbers ...
சைவம் விமர்சனம்

சைவம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சைவம் என்ற தலைப்பு மதத்தைக் குறித்ததல்ல. புலால் மறுப்பைப் பேசுகிறது. ஒரு குடும்பம் எப்படி ஏன் சைவ உணவு பழக்கத்திற்கு மாறுகிறது என்பதுதான் கதை. இக்கதையை இயக்குநர் ஏ.எல்.விஜய்க்குச் சொன்னது அவர் தாயார் என்பதை படம் முடிவில் குறிப்பிடுகிறார். தமிழ்ச்செல்வி தனது செல்லப் பிராணியான பாப்பா எனும் சேவல் பலி கொடுக்கப்படக் கூடாதென அதனை மறைத்து வைக்கிறாள். வீட்டிலிருப்பவர்கள் அச்சேவலை கண்டுபிடித்து பலி கொடுக்கிறார்களா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு. சைவம் ஒரு அழகான ஃபேமிலி டிராமா. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் படம் நகர்கிறது. சேவலை விடவும், படத்தின் முக்கிய பங்கு வகித்திருப்பது நாசர் குடும்பம் வசிக்கும் அந்தச் செட்டிநாடு வீடுதான். அவ்வீட்டின் தொழுவம், மாடி, பரண் என அனைத்துமே கதைக்கு உதவும் முக்கிய பங்கு வகிக்கிறது. சினிமாவிற்கு சம்பந்தமே இல்லாத முகங்களாகப் பார்த்து, கதாபாத்திரங்களுக்குப் பொருந்திக...
கோச்சடையான் விமர்சனம்

கோச்சடையான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவின் முதல் முழு நீள மோஷன்-கேப்ச்சர் படம், அதற்கே உரிய மழலை நடையோடு திரையில் அழகாய்த் தத்தித் தாவிப் பிரேவசித்துள்ளது. ராணா எனும் கோச்சடையான் ரணதீரன், தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதோடு அவரது மரணத்திற்கும் பழிவாங்குதுதான் படத்தின் கதை. கதையை எழுதியவர் கே.எஸ்.ரவிக்குமார். அதுவும் ராஜா காலத்துக் கதை என்பதால், அவரது வழக்கமான பாணியில் அப்பா ரஜினி, அண்ணன் ரஜினி, தம்பி ரஜினி என ரஜினிகளை வரிசையாகக் கதையில் இறக்கியுள்ளார். திருப்பங்கள் பல நிறைந்த மிகச் சுவாரசியமான திரைக்கதை. ஆனால் அதை உள் வாங்கிக் கொள்ள முடியாமல், புது விதமான காட்சி அனுபவம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. ரஜினி, நாகேஷ், ஜாக்கி ஷெராஃப், நாசர், ஷோபனா, ஆதி தவிர வேறு எவரையும் சட்டென்று அடையாளம் காண முடியவில்லை. படத்தில் வரும் வீரர்கள், ஊர் மக்கள் என இதர கதாபாத்திரங்கள் அனைவரின் முகமும் மெழுகு பூசினாற்போலவே உள்ளது. ராணா...
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சந்தானம் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம். மேலும் தெலுங்கிலும், ஹிந்திலும் பெரும் வெற்றி பெற்ற இயக்குநர் ராஜமெளலியின் ‘மரியாத ராமண்ணா’ படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வீட்டிற்குள் சிக்கிக் கொள்கிறான் சக்தி. அவ்வீட்டு வாசற்படியைத் தாண்டினால், அவரை வெட்டி கூறு போட அரிவாள்களுடன் பல ஆட்கள் தயாராகக் காத்திருக்கின்றனர். சக்தி எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. சக்தியாக சந்தானம். ‘டக்கரு.. டக்கரு..’ என ஆர்ப்பாட்டமாக திரையில் தோன்றுகிறார். அவர் அறவங்காடு எனும் கிராமத்திற்குப் போகும் வரை சந்தானத்தின் வழக்கமான பாணியில் கதை நகர்கிறது. அதுவும் அதிக கலகலப்பில்லாமல்.. சொல்லப் போனால், சகித்துக் கொள்ள பொறுமையும் கோருகிறது. முக்கியமாக சோலர் ஸ்டார் இராஜகுமாரன், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் வரும் காட்சிகள் எல்லாம் கடியின் உச்சம். அறவங்காடு எனும் கிராமத்திற்கு சந்தானம் சென்றவுடன...
யாமிருக்க பயமே விமர்சனம்

யாமிருக்க பயமே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொள்ளியூர் கிராமத்தில் இருக்கும் கழுகு எஸ்டேட்டைப் புணரமைத்து, ‘குளுகுளு ரிசார்ட்’ ஆகத் திறக்கிறார் கிரண். அங்கே நிகழும் அமானுஷ்ய சம்பவங்களால் செய்வதறியாது திகைக்கும் கிரணின் கதியென்ன என்பதுதான் படத்தின் கதை. கழுத கெட்டா குட்டிச் சுவர் என்பது போல் பேய் கெட்டா பாழடைந்த பங்களா போலும். எப்பொழுதாவது பாழடைந்த குடிசையில் பேய் உலாவுவதாகக் கேள்விப்பட்டுள்ளீரா? வாரிசில்லாத பணக்காரர்கள்தான் பேய்களாக மாறுகிறார்களோ என்னவோ! தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது பேயான பின்னும் பொருந்தும் போலும். தான் வாழ்ந்த மாளிகைக்கு அந்நியர் வந்தால்தான் பேயுக்கு கோபம் வந்து விடுகிறது. ‘தனது’ என்ற பிடிப்பும், தீராத மோகமும் மனிதனுக்கு மட்டுமல்ல பேயுக்கும் உண்டு என்பதே இந்தப் படத்தின் மையக்கரு. மேலே உள்ள பத்தியில் பேய் என்ற சொல்லுக்கு பொதுப்படையான பொருள் எடுத்துக் கொள்ளக்கூடாது. மேற்கூறிய இலக்கணங்கள், “பங்களா பேய்”க...
நீ எங்கே என் அன்பே விமர்சனம்

நீ எங்கே என் அன்பே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரிதினும் அரிதாக வரும் நாயகிக்கு முக்கியத்துவுமுள்ள படமிது. வித்யா பாலன் நடித்த ‘கஹானி’ எனும் ஹிந்திப் படத்தினைத் தழுவி, இயக்குநர் சேகர் கம்முலா தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் இப்படத்தை எடுத்துள்ளார். ஒரு ப்ராஜெக்ட்டிற்காக, அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத்திற்கு வரும் அனாமிகாவின் கணவர் திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். அவரைத் தேடி, அனாமிகா ஹைதராபாத் வருகிறார். அனாமிகாவின் கணவருக்கு என்னானது? அவர் கிடைத்தாரா? என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது. இயக்குநர் நயன்தாராவை தமிழ்ப் பெண்ணாக்கி ஹைதராபாத்தில் சாமர்த்தியமாக நடமாடவிட்டுவிடுவதால், படத்தின் தெலுங்கு நெடி ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. அனாமிகா தங்கியிருக்கும் விடுதியின் ஒரு பக்கம் மசூதி, மறு பக்கம் பெரிய காளி சிலை வைத்துக் கொண்டாடப்படுகிறது. ‘அனாமிகா’ தைரியமானவர்; சக்தி மிகுந்தவர் என்பதன் உருவகமாக காளி சிலை உபயோகிப்படுத்தப்படுவதோடு...
என்னமோ நடக்குது விமர்சனம்

என்னமோ நடக்குது விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐந்து லட்ச ரூபாய் அவசரத் தேவைக்கு, பர்மாவிடம் வேலைக்குச் சேருகிறான் விஜய். வேலைக்குச் சேர்ந்த நாலாம் நாளில், விஜய்யிடமிருந்து யாரோ சுமார் 15 கோடிக்கு மேல் திருடி விடுகின்றனர். பணத்தை தவறவிட்ட விஜய்யின் கதியென்ன? அவனுக்கு ஏன் ஐந்து லட்சம் தேவைப்படுகிறது? அந்தப் பணம் விஜய்யுக்குக் கிடைத்ததா? பர்மாவின் பணத்தைக் கொள்ளையடித்தது யார்? ஏன்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலை விறுவிறுப்பான கதையில் அமைத்துள்ளார் இயக்குநர் ராஜபாண்டி. நாயகனாக விஜய் வசந்த். போஸ்டர் ஒட்டும் வேலை செய்பவர். அவரும், அவருக்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணனும் சென்னைத் தமிழ் பேசுபவராக நடித்துள்ளனர். பாச மிகுதியில் சரண்யா பொன்வண்ணனை காலால் எட்டி உதைக்கும் பாசக்காரர் விஜய் வசந்த். இப்படத்திலும், ‘என் மொவனுக்கு லட்டு மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சிருக்கு!’ என கண்களைப் பெரிதாக்கி மகிழும் பாத்திரமே! ஆனால் அதையும் மீறி, அவரது...
வாயை மூடி பேசவும் விமர்சனம்

வாயை மூடி பேசவும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் பாலாஜி மோகன் அசத்தியுள்ளார். பனிமலை என்னும் ஊரில் மனிதர்களை ஊமையாக்கிவிடும் விநோதமான வைரஸ் பரவுகிறது. பேசுவதால் அவ்வைரஸ் பரவுகிறது என்பதால், அவ்வூரில் பேசுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்துவிடுகிறது அரசு. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நாயகனாக இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். பேசியே ஆளைக் கவிழ்க்கும் சேல்ஸ் மேன் பாத்திரத்தில் மிக அழகாகப் பொருந்துகிறார். பேசிப் புரிய வைக்க முடியாத விஷயமே உலகில் இல்லை என நம்பும் குணாதிசயம் கொண்டவன் அரவிந்திற்கு நேரெதிர் பாத்திரத்தில் நஸ்ரியா நசிம். பேசுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்ததற்கு மகிழும் அஞ்சனாவாகக் கலக்கியுள்ளார். தானே வகுத்துக் கொண்ட மனத்தடைகளில் சிக்கி உழல்பவரை, அரவிந்த் தான் மீட்கிறான். வழக்கம்போல் காதல்தான் என்றாலும், சலிப்பு ஏற்படுத்தாமலும் உறுத்தாமலும் காட்சிப்படுத்தியுள்...
தெனாலிராமன் விமர்சனம்

தெனாலிராமன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மக்களின் நிலைமையை அறிந்திராத நல்ல அரசரும், பேராசை மிகுந்த எட்டு அமைச்சர்களும் உள்ள விகட நகரத்து அரண்மனையில்.. ஒன்பதாவது அமைச்சராக கிளர்ச்சியாளர் தெனாலிராமன் நுழைகிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. மறுபிரேவசம் பிரம்மாண்டமாக இருக்கணும் என்பதற்காகக் காத்திருந்து வடிவேலு நடித்திருக்கும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. கதையின் நாயகன் தெனாலிராமன்தான் என்ற பொழுதும், கலக்குவது என்னவோ மன்னராக வரும் வடிவேலுதான். ‘எந்த அறை?’ என 36 மனைவிகள் கொண்ட மன்னர் வடிவேலுக்கு ஏற்படும் குழப்பத்தை அவர் உடல்மொழியில் காட்டுவதைக் குறிப்பிடலாம். இப்படியாக சின்னஞ்சிறு சுவாரசியங்கள் ஆங்காங்கே இருந்தாலும், மையக்கருவுடன் ஒட்டாமல் திரைக்கதை பயணிக்கிறது. இக்கட்டில் மாட்டிக் கொள்ளும் வடிவேலு காட்டும் பரிதவிப்பான உடல்மொழிதான் அவரது பலமே! ஆனால் தெனாலிராமன் மதியூகி என்பதால்.. மிகப் பொறுமையாக எந்த உணர்ச்சியும் கா...
டமால் டுமீல் விமர்சனம்

டமால் டுமீல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நன்னாளில், மணிகண்டனுக்கு வேலை போய் விடுகிறது. அடுத்த நாள், அவன் வீட்டு வாசலில் 5 கோடி ரூபாய் பணம் கொண்ட அட்டைப்பெட்டி ஒன்றைப் பார்க்கிறான். பின் என்னானது என்பதுதான் படத்தின் கதை. MONEYKANDAN. நியூமராலஜி பார்த்து நாயகன் வைத்துக் கொள்ளும் பெயர். பணத்தைத் தனதாக்கிக் கொள்ள மணிகண்டன் கற்பித்துக் கொள்ளும் சமாதானம், தானொரு சாமானியன் என்பது. வர வர தமிழ் சினிமா சாமான்யர்களுக்கு நிறையதான் சலுகை தருகிறது. சாமானியன் மணிகண்டனாக வைபவ் நடித்துள்ளார். நாயகனாக அவர் அறிமுகமாகும் முதற்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு போலீஸ்காரரும், ஒரு ரெளடியும் அவரது வீட்டுக்குள் வந்து ஒருவருக்கு ஒருவர் சுட்டுக் கொண்டு இறக்கும்பொழுது, அவர் காட்டும் பாவனை ரசிக்க வைக்கிறது. மீராவாக ரம்யா நம்பீசன். காதலிக்கவும் காதலிக்கப்படவும்தான் படத்தில் அவர் இருந்தாலும், சினிமாத்தனம் இல்லாத நாயகியாக வருகிறார். சில இடங்களில் வைப...
நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

நான் சிகப்பு மனிதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோபமோ, மகிழ்ச்சியோ, அதிர்ச்சியோ என அதீதமாக உணர்ச்சி வசப்படும் நேரங்களில் எல்லாம் தூங்கி விடுவார் இந்திரன். இத்தகைய, ‘துயில் மயக்க நோய் (Narcolepsy)’ என்னும் நரம்பியல் ஒழுங்கின்மையால் பாதிக்கப்பட்ட இந்திரன், தனக்கு நேர்ந்த கொடுமைகளை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதுதான் கதை. 29 வருடங்களுக்கு முன், லக்ஷ்மி மேனனுக்கு இப்படத்தில் நடப்பதுபோல், ரஜினியின் தங்கைக்கு நிகழும். ரஜினிக்கு தூக்கம் வராது. பின் ரஜினி சிகப்பு மனிதனாக மாறி, ராபின்-ஹூட் என மக்களால் கொண்டாடப்படுவார். தூங்கி வழியும் விஷாலோ, தன் குறைபாடுகளை மீறி சிகப்பு மனிதனாக மாறி, தன் சொந்த வெறுப்பினை மட்டும் தீர்த்துக் கொள்கிறார். அதோடு அவரது பத்தாவது ஆசையும் பூர்த்தியாகிறது. இந்திரனாக விஷால். மிக மிகத் தெளிவாக இருக்கார். மிகை ஹீரோயிசம், காமெடிக் காட்சிகளில் விஜய்யை இமிடேட் செய்வது போன்றவற்றைலாம் முற்றிலுமாக தவிர்த்து விட்டு, கதைக்குத் தக...
மான் கராத்தே விமர்சனம்

மான் கராத்தே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆபத்து சூழும்பொழுது, அவ்விடத்தை விட்டு மான் போல் துள்ளிக் குதித்தோடித் தப்பிக்கும் கலைக்குத்தான், ‘மான் கராத்தே’ என்று பெயர். ஆனால் போட்டி சண்டை என வந்துவிட்டால், தாங்கள் எதற்கும் சளைத்தவர்களில்லை என மான்கள் முரட்டுத்தனமாக தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்ளும். முக்கியமாக பெண் மானிற்கான போட்டியில். படத்தின் தலைப்பிற்கு நியாயம் செய்துள்ளனரா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். சித்தர் அளிக்கும் எதிர்காலத்தைச் சொல்லும் செய்தித்தாளிலிருந்து படம் ஜோராய் ஆரம்பிக்கிறது. பின் பலமுறை பார்த்துச் சலித்த வழக்கமான வட்டத்திற்குள் உழலத் தொடங்கி விடுகிறது. அதுவும் சுவாரசியமின்றி. வெட்டியாய்ச் சுற்றித் திரியும் பீட்டருக்கு, வெண்ணெயால் செய்தது போலிருக்கும் யாழினி மீது காதல் வந்துவிடுகிறது. தானொரு பாக்ஸர் என பீட்டர் விட்டு யாழினியையும் காதலிக்க வைத்துவிடுகிறான். காதலுக்காக, பீட்டர் சொன்ன பொய் அவனை எங்கு கொண்...