
இரண்டாம் உலகம் விமர்சனம்
இரண்டு அனுஷ்கா. இரண்டு ஆர்யா. இரண்டு காதல். இரண்டு உலகம். ஒன்று நாம் வாழும் உலகம்; இன்னொன்று காதலற்ற உலகம்.படத்தில் இரண்டு காதல்கள் இருந்தாலும் அவைகள் வழக்கமானவையே. செல்வராகவனின் நாயகர்கள் நாயகியைச் சுற்றிச் சுற்றி வம்படியாகவும் வலுக்கட்டாயமாகவும் ஒரு நெருக்கடியை உருவாக்கிக் காதலிக்க வைப்பார்கள். பெரும்பாலான தமிழ்ப்பட நாயகர்கள் அப்படித்தான். இந்த உலகத்தைச் சேர்ந்த மருத்துவர் ரம்யாவை, மதுபாலகிருஷ்ணன் அப்படித்தான் காதலிக்க வைக்கிறார். செல்வராகவனின் அந்த இன்னொரு உலகம் வண்ணமயமாக ஜொலிக்கிறது. மின்னும் காளான்கள், ஒளிக்கும் மரங்கள், மனித தலை கொண்ட விநோத மிருகம் (சிங்கம்), வண்ண நிலா என சி.ஜி. வேலைகளின் அசுர உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. இவ்வளவு இருந்தும் அந்த உலகத்தில் பூக்கள் பூப்பதில்லை. அதற்கு அங்கு ஒரு காதல் தோன்ற(!?) வேண்டும். வர்ணாவின் மீதுள்ள காதலால் மருவன் இரண்டு முறை உயிரைவிட...
















