Shadow

திரை விமர்சனம்

ஆஹா கல்யாணம் விமர்சனம்

ஆஹா கல்யாணம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நானியின் நேரடி தமிழ்ப்படமிது என்ற போதிலும்.. தெலுங்கு ரசிகர்களுக்கும் சேர்த்துத் தயாரிக்கப்பட்டதாலோ என்னமோ படம் முழுவதும் வண்ணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. முதல் பாதியின் அத்தனை ஃப்ரேமிலும் பாதி ஸ்க்ரீனுக்கு மேல் இடம்பிடிப்பது சிவப்பு நிறம்தான். இதுவே தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும். சக்தியும் ஸ்ருதியும் இணைந்து, ‘ஃபினான்சும் ரொமான்சும் ஒண்ணு சேரக்கூடாது’ என்ற விதிமுறையை ஏற்படுத்திக் கொண்டு ‘கெட்டிமேளம்’ எனும் நிறுவனம் தொடங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ரொமான்ஸ் வந்துவிடுகிறது. பின் என்னானது என்பதுதான் கதை. ‘நான் ஈ’யில் பார்த்தே அதே நானி. ‘வெப்பம்’ படத்தில் அவர் சீரியசாக நடித்தது எதுவும் ஞாபகமில்லை. ஆனால் ‘நான் ஈ’ படத்தில் கொஞ்ச நேரம் வந்தாலும், ‘ஈ’ தான் அதில் நாயகன் என்றாலும்.. நானி மனதில் பதியுமளவு அழகாக நடித்திருப்பார். அங்கு அவருக்கு அற்பாயுசு என்பதால் அவரை படம் நெடுகும்...
இது கதிர்வேலன் காதல் விமர்சனம்

இது கதிர்வேலன் காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கதிர்வேலனின் அப்பாக்கு காதலென்றால் பிடிக்காது. ஆனால் ஆஞ்சனேய பக்தனான கதிர்வேலனுக்கு காதல் வந்துவிடுகிறது. பின் என்னானது என்பதுதான் கதை. ஓகே.ஓகே.வில் நடித்தவரா என அதிசயிக்க வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தலையை மட்டும் வேண்டிய மட்டும் ஆட்டிவந்தவரின் முகத்தில் சில பாவனைகளும் எட்டிப் பார்க்கின்றன. மீண்டும் அவருக்கு தோதான கதாபாத்திரத்தினைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். நடனமும் முயற்சி செய்திருக்கார். கேமிரா பற்றிய பிரக்ஞை கூடியுள்ளதால், சிரமமில்லாமல் தன்னை அழகாக திரையில் எக்ஸ்போஸ் செய்கிறார். சந்தானத்தின் துணையில்லாமலேயேகூட அடுத்த படத்தில் துணிந்து தனியாகவே திரையில் தோன்றலாம். அதற்கு அப்படத்திலாவது கதையிருக்க வேண்டியது அவசியம். அட்லீஸ்ட் சுவாரசியமான திரைக்கதையாவது! மயில்வாகனமாக சந்தானம். கிட்டத்தட்ட அவரின் எல்லாப் படத்தினைப் போலவே, கதாநாயகனின் காதலுக்கு யோசனை சொல்லிச் சேர்த்து வைக்கும் மிக முக்கிய...
கோலி சோடா விமர்சனம்

கோலி சோடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் பாண்டிராஜின் ‘பசங்க’ளை அப்படியே கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அழைத்து வந்து அசத்தியுள்ளார் விஜய் மில்டன். மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் நான்கு பையன்கள், ஆச்சியின் உதவியால் ஒரு மெஸ் திறக்கின்றனர். அதனால் கிடைக்கும் அடையாளத்தை இழந்ததும் அதை மீட்கப் போராடுகின்றனர். இதுதான் படத்தின் கதை. புள்ளி, சேட்டு, சித்தப்பா, குட்டிமணி ஆகியோர் தங்களது பெற்றோர் யாரென அறியாதவர்கள். மெஸ் தொடங்கியதும் ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது. ஒரு பிரச்சனையில் ஆளுக்கொரு திசையாகப் பிரிக்கப்படுகின்றனர். நால்வரில் நாயகன் என கொள்ளத்தக்க ‘புள்ளி’, பெளத்த மடாலயத்தில் வந்து அமரும் புறாவொன்றினால் ஞானதோயம் பெறுகிறான். நால்வருக்கும் இருத்தலைவிட அடையாளத்தை(!?) மீட்டெடுப்பது முக்கியமாகப்படுகிறது (பசங்களுக்கு தாங்கள் ‘மெஸ்’ நடத்துவதால் மதிக்கப்படுகிறோம் என்ற உணர்வே போராட வைக்கிறது. மெஸ் அவர்களது அடையாளமன்று). எட்டு வருடங்களுக...
வீரம் விமர்சனம்

வீரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தீபாவளிக்கு ஒரு படம், பொங்கலுக்கு ஒரு படமென அடித்து ஆடுகிறார் அஜித். அவரது வெள்ளை-கருப்பு முடி திரையில் தெரிந்ததுமே, திரையரங்கம் அதிர ஆரம்பித்து விடுகிறது. அடிதடிதான் வாழ்க்கை என்றிருக்கும் விநாயகம், அகிம்சாவாதியான நல்லசிவத்தின் மகள் கோப்பெரும்தேவி மீது காதல் வயப்படுகிறார். அடிதடி வாழ்க்கையா அல்லது கோப்பெரும்தேவியா என விநாயகம் முடிவெடுப்பதுதான் படத்தின் கதை. விநாயகமாக அஜித். வெள்ளை தாடி , வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை என திரையில் ஜொலிஜொலிக்கிறார். சும்மா வந்து நின்றாலே விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. எத்தனைபேர் வந்தாலும் அடித்து துவம்சம் பண்ணுகிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு, அஜித்தின் குரலையும் தொழில்நுட்ப உதவியால் கம்பீரமாக்கியுள்ளனர். படத்தில் அஜித்திற்கு நான்கு தம்பிகள். தமிழ் சினிமாவின் வழக்கம்போல், அஜித் ஒரு பாசக்கார அண்ணன். பாலா தான் அஜித்தின் பெரிய தம்பி. மலையாளப் பக்க...
ஜில்லா விமர்சனம்

ஜில்லா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தமுறை பொங்கல், தமிழ்த்திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் விசேடமானது. நீண்ட நாள் கழித்து அதிசயமாய் இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்துள்ளது. போதாக்குறைக்கு பொங்கலைச் சிறப்பிக்க ‘கம்ப்ளீட் ஸ்டார்’ மோகன்லாலும் களத்தில் இறங்கியுள்ளார். மதுரையின் தனிப்பெரும் தாதா சிவன். அவர் ஏதேனும் நினைத்தாலே அதை நிறைவேற்றுவான் அவரது வளர்ப்பு மகன் சக்தி. ஒரு விபத்தினைக் காண நேர்ந்து மனம் மாறும் சக்தி, அவனது தந்தையிடம் அடிதடியை விடச்சொல்கிறான். பின் என்னானது என்பதுதான் கதை. பலமுறை பார்த்துச் சலித்துப் போன ‘போக்கிரி’ பாத்திரத்தில் மீண்டும் விஜய். எதிரில் நிற்பவர் முகத்தைப் பார்த்துப் பேச மாட்டேங்கிறார். மோகன் லால் எவ்வளவு பெரிய ஆள்? கேரளாவிலிருந்து நமக்காக வந்திருக்காரே என்றாவது மோகன்லாலில் முகத்தைப் பார்த்துப் பேசியிருக்கலாம். பாடல் காட்சிகளில் மட்டும் அசின், நயன்தாராவின் பின்புறத்தைத் தொட்டவர்.. இப...
விடியும் முன் விமர்சனம்

விடியும் முன் விமர்சனம்

திரை விமர்சனம்
பிரதான கதாபாத்திரங்களை நாயகன், வில்லன் என்ற இரண்டுக்குள் தமிழ்த் திரைப்படம் அடக்கி விடும் (மிக அரிதினும் அரிதாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதால் கணக்கில் எடுக்கவில்லை). இந்த இரண்டையும் கூட இன்னும் சுருக்கி நல்லவனுக்கம் கெட்டவனுக்குமான போராட்டம் என்ற ஒற்றை பரிமானத்தை அடையலாம். ஆனால் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு மெல்லிய முக்கியத்துவத்தையாவது கொடுத்து விடுமளவு திரைக்கதை கொண்ட படம் மிக அபூர்வம். அப்படியொரு அபூர்வம் தான் ‘விடியும் முன்’ திரைப்படம்.   விலைமகளான ரேகாவையும், சிறுமி நந்தினியையும் ஒன்றுக்கும் மேற்பட்ட கும்பல் தேடி அலைகிறது. ஏன் எதற்காக என்பது தான் படத்தின் கதை.   உங்களுக்கு வினோத் கிஷனைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரது குத்திட்ட பார்வை நமக்கு நன்றாக அறிமுகமானதே! ‘நந்தா’ படத்தில் தன் தந்தையை அடித்துக் கொன்றுவிடும் அந்த சிறுவன் தான்...
நவீன சரஸ்வதி சபதம் விமர்சனம்

நவீன சரஸ்வதி சபதம் விமர்சனம்

திரை விமர்சனம்
‘மெஸ்சேஜ்’ சொல்லும் படம் வந்து நாளாகிவிட்டது என்ற குறையை மட்டும் தீர்த்துள்ளது படம்.கார்ப்பரேட் கைலாசத்திலிருந்து படம் தொடங்குகிறது. சிவன் திருவிளையாடல் நிகழ்த்த நால்வரை பூமியிலிருந்து தேர்ந்தெடுக்கிறார். சிவன் வைக்கும் சோதனையில் அந்த நால்வரும் தப்புகின்றனரா என்பது தான் படத்தின் கதை.படத்தில் சேலம் சித்தராஜ் வைத்தியசாலையை சகட்டுமேனிக்குக் கலாய்த்துள்ளனர். கோவை காமராஜ் வைத்தியசாலை எனப் பெயர் மாற்றி சித்ரா லக்ஷ்மணனை நடிக்க வைத்துள்ளனர். அவரது வாரிசாக ஜெய். சிவன் தேர்ந்தெடுக்கும் நால்வரில் ஒருவர். இரண்டாம் நபர் ஊழல் அரசியல்வாதி மகனாக வரும் சத்யன். மூன்றாம் நபர் சொர்ணாக்காவின் கணவராக வரும் வி.டி.வி. கணேஷ். நான்காம் நபர் பவர் ஸ்டாரின் வளர்ச்சி கண்டு வயிறெரியும் ராஜ்குமார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் இவர் பஜ்ஜியாக நடித்திருப்பார். நால்வரும் தண்ணியில் இருந்து தண்ணீரில் மிதக்க...
இரண்டாம் உலகம் விமர்சனம்

இரண்டாம் உலகம் விமர்சனம்

திரை விமர்சனம்
இரண்டு அனுஷ்கா. இரண்டு ஆர்யா. இரண்டு காதல். இரண்டு உலகம். ஒன்று நாம் வாழும் உலகம்; இன்னொன்று காதலற்ற உலகம்.படத்தில் இரண்டு காதல்கள் இருந்தாலும் அவைகள் வழக்கமானவையே. செல்வராகவனின் நாயகர்கள் நாயகியைச் சுற்றிச் சுற்றி வம்படியாகவும் வலுக்கட்டாயமாகவும்  ஒரு நெருக்கடியை உருவாக்கிக் காதலிக்க வைப்பார்கள். பெரும்பாலான தமிழ்ப்பட நாயகர்கள் அப்படித்தான். இந்த உலகத்தைச் சேர்ந்த மருத்துவர் ரம்யாவை, மதுபாலகிருஷ்ணன் அப்படித்தான் காதலிக்க வைக்கிறார். செல்வராகவனின் அந்த இன்னொரு உலகம் வண்ணமயமாக ஜொலிக்கிறது. மின்னும் காளான்கள், ஒளிக்கும் மரங்கள், மனித தலை கொண்ட விநோத மிருகம் (சிங்கம்), வண்ண நிலா என சி.ஜி. வேலைகளின் அசுர உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. இவ்வளவு இருந்தும் அந்த உலகத்தில் பூக்கள் பூப்பதில்லை. அதற்கு அங்கு ஒரு காதல் தோன்ற(!?) வேண்டும். வர்ணாவின் மீதுள்ள காதலால் மருவன் இரண்டு முறை உயிரைவிட...
வில்லா விமர்சனம்

வில்லா விமர்சனம்

திரை விமர்சனம்
 ஒரு விளம்பரத்திற்காக மட்டும் பீட்சா – 2 என உபயோகப்படுத்தியுள்ளனர். எதிர்மறை சக்திகள் (Negative energy) சூழ்ந்த ஒரு மாளிகையில் தங்குபவர்கள், அவர்களுக்கே தெரியாமல் எதிர்காலம் குறித்துக் கணிக்க வல்லவர்களாக மாறுகின்றனர்.    எழுத்தாளர் ஜெபினாக அசோக் செல்வன். சூது கவ்வும் படத்தில், ஒரு பெண்ணால் வேலையிழக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் தாடி வைத்த முகத்துடன், மருந்துக்குக் கூட சிரிக்காத விரக்தியில் உழல்பவராக வருகிறார். தனக்கு சொந்தமாக மாளிகை இருக்கு என்று அறியும் பொழுதும், நாவலுக்காக ஐந்து லட்சம் ரூபாய் முன் பணம் பெறும் பொழுதும் கூட முகமலர மாட்டேங்கிறார். அவனது தந்தை வரைந்த ஓவியங்களில் உள்ளவை அனைத்தும் ஏன் அப்படியே நிகழ்கின்றன என்ற குழப்பமும், அதற்கான தேடலும் தான் முழுப்படமுமே!நாயகன் என்றால் உத்தமனாக இருக்க வேண்டுமென்ற திரை இலக்கணங்கள் எல்லாம் என்றோ மண்ணோடு மண்...
ஆரம்பம் விமர்சனம்

ஆரம்பம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஜீத், விஷ்ணுவர்தன், சுபா, ஆர்யா, நயன்தாரா என ஏகத்துக்கும் கூட்டப்பட்ட எதிர்பார்ப்பு, கிஞ்சித்தும் குறையாமல் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளது. அஜீத் ரசிகர்களுக்கும், தமிழ்த்திரை  ரசிகர்களுக்கும் இந்த தீபாவளி நல்லதோர் ஆரம்பமாக இருக்கும்.ஊழல் செய்யும் அரசியல்வாதி ஒருவர் லஞ்சம் வாங்கிக் கொண்டு, தீவிரவாதி ஒருவனைத் தப்பிக்க வைக்கப் பார்க்கிறார். பின் என்னானது என்பதுதான் கதை.அமர்க்களமாக அறிமுகமாகிறார் அஜித். மங்காத்தாவில் மிச்சம் வைத்திருந்த வில்லத்தனத்தை இப்படத்தில் தொடர்கிறார். தனது வயதிற்கேற்ற பாத்திரத்தில் தோன்றுகிறார். இளம் வெண்தாடியிலும் செம ஸ்டைலிஷாக இருக்கிறார். ‘டொக்.. டொக்..’ என சத்தமிட்டு அனைவருக்கும் டைம் ஃபிக்ஸ் செய்கிறார். படத்தில் இவருக்கு ஜோடியும் இல்லை; டூயட்டும் இல்லை. நாயகனாக நடிப்பவருக்கு 60 வயது என்றாலும், திரையில் கண்டிப்பாக 20>30 வயதுடைய நாயகி, காதலியாக இருந்தே ஆகவே...
சுட்ட கதை விமர்சனம்

சுட்ட கதை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சுட்ட கதை – முழு நீள ஃபேண்டசி தமிழ்ப்படம்.‘பாஸ்மார்க்’கில் (BOSSMARK) குடித்து விட்டு ஒருவரை ‘சுட்டு’க் கொலை செய்து விடுகிறார் கோரமலை கான்ஸ்டபிள் ராம்கி. பின் என்னானது என்பது தான் சுட்ட கதை.கான்ஸ்டபிள் ராம்கியாக பாலாஜி. அவர் அனிச்சைத் திருட்டு (Kleptomania) எனும் உளக்குறையால் பாதிக்கப்பட்டவர். இவரும் வலப்பக்க காது கேளாதவருமான கான்ஸ்டபிள் சங்கிலிராயனும் லட்சியவாதிகள். கோரமலையில் தர்மத்தை நிலைநாட்டுவது தான் அவர்களின் அந்த உயரிய லட்சியம். சிலந்தி எனும் மலைவாசிப் பெண்ணால் அவர்களின் லட்சியம் கொஞ்சம் சறுக்கினாலும், ஒரு கட்டத்தில் “ஃபிகரை விட தர்மமே முக்கியம்” என சிலந்தியையே தூக்கி எறிகின்றனர். கான்ஸ்டபிள் சங்கிலிராயனாக வெங்கி. இந்த இருவர் தான் படத்தின் கதாநாயகர்கள்.  சிலந்தியாக லக்ஷ்மி பிரியா. அறிமுக நாயகி. கோரமலையின் மலைவாழ் மக்களின் சாமி (அ) வீராங்கனை. இடுப்பில் ஒரு குறுவாள...
ரகளபுரம் விமர்சனம்

ரகளபுரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரகளபுரம் - கருணாஸ் மிக சிரமப்பட்டு தயாரித்து நடித்துள்ள படம். பயந்தாங்கொள்ளி வேலுவிற்கு கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. பிறகு என்னாகிறது என்பது தான் கதை.படத்தின் கதாநாயகன் தொடைநடுங்கி வேலுவாக கருணாஸ். தன்னை ‘கதையின் நாயகன்’ என்றே சொல்லிக் கொள்கிறார். கதாபாத்திரத்திற்கு அவர் முகம் பொருந்துகிறது. நன்றாக நடனம் ஆடுகிறார். கதைப்படி, துப்பறியும் சாம்பு பாணியில் இன்ஸ்பெக்டராகி விடுகிறார். ஆனால் அதற்கான சுவாரசியமும் திருப்பமும் போதிய அளவு திரைக்கதையில் இல்லை. மேலும் கருணாஸ் நாயகன் என்றால் நகைச்சுவைப் படமாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், முழுவதுமாக திருப்திப்படுத்தப்படவில்லை. அறிமுக நாயகியாக அங்கனா ராய். அதாவது கருணசுக்கு ஜோடியாக ஒருவர் தேவை என்பதால் படத்தில் உள்ள ஒரு பாத்திரம். கருணாசின் அம்மாவாக உமா பத்மநாபன். சரண்யா பொன்வண்ணனை ஏனோ ஞாபகப்படுத்துகிறார். கோவை சரளா, சிங்கம்புலி ...
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘ரெளத்திரம்’ பட இயக்குநர் கோகுலின் இரண்டாவது படமிது. காந்திஜியின் பிறந்தநாளன்று படத்தினை வெளியிட தோதாய் படத்தில் ஒரு மெஸ்சேஜும் வைத்துள்ளார். பாலா என்பவர் குடித்ததால் விபத்து நேர்கிறது; குமார் என்பவர் குடிக்காமல் இருப்பதால் இரு உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.   சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி. இன்றைய ட்ரென்டின் படி, பொறுப்பில்லாத இளைஞராக வருகிறார். அவரது ஒரே வேலை, எதிர் வீட்டு குமுதாவை ‘ஹேப்பி’ செய்வதும் குடிப்பதும் தான். படத்தின் கடைசிக் காட்சிகளில் அவர் செய்யும் ரொமான்ஸ் எல்லாம் செம அருமை. இவரும் இவரது அசிஸ்டென்ட் ‘ரொம்ப சுமார் மூஞ்சி’ குமாரும் மதுவிற்காக அலையும் காட்சிகள் எல்லாம் அலப்பறை. அதுவும் விஜய் சேதுபதியின் மனநிலையைச் சொல்லும் ‘ரொம்ப சுமார் மூஞ்சி’ குமாரின் தொடர் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. விஜய் சேதுபதியை முறைப்பதற்கு மட்டும் நந்திதா. எதிர்நீச்சலில் ‘கோச்’ வள்ளியா...
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஏராளமான ஆச்சரியங்கள். அதில் பேராச்சரியமாக, ‘டாஸ்மாக்’ பாடலில்லாமல் வந்திருக்கும் மிஷ்கினின் படமிது. ஏன் மருந்துக்குக் கூட படத்தில் ஒரு பாடல் இல்லை. அதனால் படத்தில் கதாநாயகியும் இல்லை.படத்தைச் செலுத்துவது இளையராஜாவின் பின்னணி இசை. படக் கதையின் கருவிற்கு நம்மை தயார்படுத்தி, அதிலிருந்து நம்மை விலகாமல் பார்த்துக் கொள்கிறார் இசைஞானி. அவரை கெளரவப்படுத்தும் வகையில் ‘முன்னணி இசை கோர்ப்பு’ எனப் படம் தொடங்கும் முன் எழுத்துகள் வருகின்றன. இரவில் நடக்கின்ற கதை. ஒரு படம் முழுவதும் பார்வையாளரை இருட்டினிலேயே தடுமாற்றமின்றி அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி வி.ரங்கா. ஆக படத்தின் ஒளியும் ஒலியும் படத்தின் ‘மூடை’ கன கச்சிதமாக பார்வையாளர்களிடம் கடத்துகிறது.ஆட்டுக்குட்டி சந்துருவாக ஸ்ரீ. ‘வழக்கு எண்:18/9’ படத்தில் அறிமுகமானவரின் இரண்டாவது படம். எத்தனை பேருக்கு இத்தகைய வாய்ப்பு அமையும்? மருண்ட வி...
ராஜா ராணி விமர்சனம்

ராஜா ராணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எந்திரன் படத்தில் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அட்லியின் முதல் படம். எனினும் பெரிய படங்களுக்கு ஒப்பான விளம்பரத்தினை தயாரிப்புக் குழு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.காதல் தோல்விக்கு பின்பும் காதலும்/வாழ்க்கையும் உண்டு என்பது தான் படத்தின் ஒரு வரிக் கதை.ஏர்வாய்ஸ் கம்பெனியின் கஸ்டமர் கேரில் வேலை செய்யும் டெலிகாலர் சூர்யாவாக ஜெய். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தினைத் தொடர்ந்து மீண்டும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படத்தில் அதே போன்ற கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். பயந்த சுபாவத்துடனும் கொச்சையான ஆங்கில உச்சரிப்புடனும் படத்தின் முதல் பாதி கலகலப்பிற்கு உதவுகிறார். நயன்தாராவிற்குக் கோபமாக ஃபோன் செய்து அழும் பொழுது, ‘எங்கப்பாக்கு மட்டுந்தாங்க பயப்படுவேன். மத்தபடி ஐ லவ் யூங்க’ என நயன்தாராவிடம் சொல்லும் பொழுது என பல இடங்களில் ரசிக்க வைக்க...