
சிங்கம் II விமர்சனம்
சிங்கம்வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மூன்று வருடங்களுக்குப் பின் வந்துள்ளது.தூத்துக்குடியில் நடக்கும் போதைப் பொருள் வியாபாரத்தை எப்படி துரைசிங்கம் வேரோடு சாய்க்கிறார் என்பது தான் படத்தின் கதை.துரைசிங்கமாக சூர்யா. கையிலும், கண்ணிலும் நெருப்பு எரிகிறது. சராமாரியாக அனைவருக்கும் அட்வைஸ்களை வாரி வழங்குகிறார். ஆனால், “ஆஃப்ரிக்க குரங்கு” என இனவெறியில் பிரதான வில்லனைத் திட்டுறார் ஊருக்கு உபதேசம் செய்யும் சிங்கம். சமீபத்தில் வெளிவந்த எதிர்நீச்சல் படத்தில், மராத்தான் போட்டியில் ஓடும் நைஜிரீயர் ஒருவர் தாகத்தில் தவிக்கும் சிவகார்த்திகேயனுக்கு தண்ணீர் தரும் காட்சி ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கிறது. நீதியையும், தர்மத்தையும் காப்பாற்ற துரைசிங்கம் சுமார் 25 பேரை சுட்டுக் கொல்கிறார். அதில் 14 பேர் இந்தியர்கள். மற்றவர்கள் தென் ஆஃப்ரிக்காவினர். ‘காத்திருத்தல் தான் காதல்’ எனச் சொல்வதற்கு மட்...















