Shadow

திரை விமர்சனம்

காதல் சொல்ல ஆசை விமர்சனம்

காதல் சொல்ல ஆசை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகன் தன் காதலை நாயகியிடம் சொன்னானா என்பதுதான் படத்தின் கதை. வாழையடி வாழையாக மகேஷின் குடும்பத்தினர் போலீஸ் வேலையில் இருக்கிறார்கள். மகேஷிற்கு அவ்வேலையில் விருப்பமில்லாததால் வீட்டை விட்டு வெளியேறி வேலை தேடுகிறான். காதலுக்காக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் அடியாளாகச் சேருகிறான். மமேஷாக அஷோக் நடித்துள்ளார். நன்றாக நடித்திருந்தாலும் அவரது முந்தைய படங்கள் போல் இதுவும் அவருக்கு பெயர் வாங்கித் தருவது கடினம்தான். சுசித்ராவாக வாஸ்னா அகமத் நடித்துள்ளார். நாயகன் வில்லனிடமிருந்து தன்னைக் காப்பாற்றியதும் காதலிக்கத் தொடங்குகிறார். பார்த்துப் பழக்கப்படாத சுவாரசியமான காட்சிகள் இல்லாததால், நாயகியின் முகம்கூட படம் முடிந்த பின் நினைவில் நிற்கவில்லை. படத்தின் அழகான ஆச்சரியம் கெளதமாக வரும் மது ரகுராம்தான். இரண்டாம் பாதியில் அசத்தலாக அறிமுகமாகிறார். இவரது வருகையின் பின்னாவது கதையில் ஏதேனும் திருப்பமோ சுவாரசிய...
ஒரு மோதல் ஒரு காதல் விமர்சனம்

ஒரு மோதல் ஒரு காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகனின் முதல் காதல் ஏமாற்றத்திலும், அடுத்த காதல் கல்யாணத்திலும் முடிகிறது. நாயகனாக விவேக் ராஜகோபால். எந்தக் கவலையுமற்ற ஜாலியாக சுத்திச் சுத்தி வரும் பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார். பெரும்பாலான காட்சிகளில் சிரித்தவண்ணமே உள்ளார். ஆனால் அந்த உற்சாகம் பார்வையாளர்களுக்கு ஏற்படவில்லை என்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறையே! அதேபோல் முதல் காதலி காவல் நிலையத்தில் வைத்து ஏமாற்றிவிட, நாயகன் செம சோகமாகிவிடுகிறார். எந்தக் கவலையும் பொறுப்பும் இல்லாத நாயகன் நிஜமாகத்தான் காதலித்திருப்பாரா என சந்தேகம் நமக்கு தீரும் முன்பே, ஒரு பாட்டிலேயே அவர் சோகத்திலிருந்து மீண்டு பாலை வார்க்கிறார். அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என நாயகனின் மொத்த குடும்பமே மருத்துவர்கள். வெளியில் திட்டிக் கொண்டும் உள்ளுக்குள் எதிர்மாறாக இருக்கும் அப்பாவாக பிரமிட் நடராஜனும், கேட்கும் பொழுதெல்லாம் பணம் தரும் பாசக்கார அம்மாவாக மீராகிரு...
ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்

ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1965 இல் வெளியான ஒரு படம் இன்றைய ரசிகர்களுக்குப் பிடிக்குமா? இன்னும் 50 வருடங்களுக்குப் பின் வெளியானாலும் கண்டிப்பாக பிடிக்கும் என்றுதான் சொல்ல வேண்டும். இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் எவர்-க்ரீன் என்ட்டர்டெயினர்களில் இப்படமும் ஒன்று. நெய்தல் நாட்டு மருத்துவர் மணிமாறனையும் அவருடன் பலரையும், அந்நாட்டு கொடுங்கோல் சர்வாதிகாரி கன்னித் தீவில் அடிமைகளாக விற்றுவிடுகிறார். மணிமாறனும் அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பி நெய்தல் நாட்டு சர்வதிகாரியை எதிர்த்து வெற்றி பெற்றனரா என்பதுதான் படத்தின் கதை. சர்வதிகாரம், அடிமைகளைக் கொடுமைப்படுத்தி வேலை வாங்குதல், கொள்ளை, போர் என படம் நீண்டாலும்.. சுபமாய் முடிகிறது. கருப்பு எம்.ஜி.ஆர். போல தமிழ் தெரியாதவர்களிடமும் பேசியே திருத்தி விடவில்லை வாத்யார். அனைவரிடமும் இரக்கத்தைக் காட்டி, எதற்கும் வன்முறை தீர்வில்லை என்ற அணுகுமுறையால் அனைவராலும் ஏகமனதாக தலைவராக ஏற்றுக...
ஆதியும் அந்தமும் விமர்சனம்

ஆதியும் அந்தமும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு பிரச்சனையின் அந்தத்தை படத்தின் முதற்பாதியிலும், அதன் ஆதியை படத்தின் இரண்டாம் பாதியிலும் சொல்லியுள்ளனர். டாக்டர் கரண் உதகமண்டலத்திற்கு ஒரு மெடிக்கல் ரிசர்ச் ஃபெளண்டேஷனில் பணியில் சேர வருகிறார். அவர் தங்கும் அறையில், தினம் இரவு 1 மணிக்கு ஒரு பெண்ணின் உருவம் வந்து அவரை அலைகழிக்கிறது. யார் அந்தப் பெண், ஏன் எதற்காக அலைக்கழிக்கிறாள் என்பதுதான் படத்தின் கதை. இடைவேளை வரையிலான படம் விறுவிறுப்பாகவும் திகிலாகவும் போகிறது. L.V.கணேசனின் பின்னணி இசையும் D.S.வாசனின் ஒளிப்பதிவும் படத்தின் மிகப் பெரிய பலம். முக்கியமாக சுவாசத்தை பின்னணி இசையாக உபயோகித்திருப்பதைச் சொல்லலாம். அதற்கான காரணம் இரண்டாம் பாதியில் தெரிய வருகிறது. இரண்டாம் பாதி படமோ முதல் பாதிக்கு நேரெதிராக உள்ளது. இரண்டாம் பாதி தொடங்கிய சில நொடிகளிலேயே மர்ம முடிச்சை அவிழ்த்து விடுகின்றனர். அதன்பின் சலிப்பேற்படுத்தும் வகையில் நீண்ட ஃப்ளாஷ்-பே...
தெகிடி விமர்சனம்

தெகிடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நேரத்தைக் கொல்லும் நல்லதொரு த்ரில்லர். டிடெக்டிவ் வெற்றியால் கண்கானிக்கப்படும் ஆட்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்படுகின்றனர். எதற்கு, ஏன், யார் கொலை செய்கின்றனர் என்பதுதான் கதை. மருந்துக்கு கூட வில்லாவில் சிரிக்காத அசோக் செல்வன், இப்படத்தில் சின்னதாய் மிக அழகாய்ப் புன்னகைக்கிறார். அவரின் முதல் இரண்டு படங்களைவிட பார்வையாளர்களுக்கு மிக நெருங்கி வந்துள்ளார். அதற்கு, அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள குரலும் ஒரு காரணம். கண்டிப்பாக அவருக்கு நல்ல பிரேக் கொடுக்கக் கூடிய படமாக இது அமையும். மதுஸ்ரீயாக ஜனனி ஐயர். நீளமான கண்கள். அவர் சிரிக்கும் பொழுது இரண்டு கண்களும் வாயும் ஒரே அளவில் நீள்கின்றன. வழக்கம்போல் காதலிக்கவும் காதலிக்கப்படவும்தான் கதாநாயகி உபயோகப்படுத்தப்பட்டுள்ளார். நாயகனும் நாயகியும் பார்த்துக் கொண்டாலே பாடல் வந்துவிடுகிறது. பாடல்கள் திரைக்கதையின் ஓட்டத்திற்கு ஒரு ஸ்பீட்-ப்ரேக்கர் போன்றவை. முக்கிய...
பிரம்மன் விமர்சனம்

பிரம்மன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நமது பொறுமையைச் சோதித்தறிந்து கொள்ள மீண்டுமொரு ஓர் அற்புத வாய்ப்பை நல்குகிறது பிரம்மன். தான் கோயிலாக மதிக்கும் தியேட்டரைக் காப்பாற்ற புறப்படுகிறான் நாயகன். இது முதற்பாதி. நான்காவதுவரை கூட படித்த உயிர் நண்பனுக்காக எல்லாத்தையும் விட்டுக்(!?) கொடுக்கிறான். இது இரண்டாம்பாதி. தியேட்டரை லீசுக்கு எடுத்து நடத்தும் சிவாவாக சசிகுமார். டி-ஷர்ட், ஜீன்ஸ் என மாடர்ன் உடையில் வருகிறார். இம்முறை, “நண்பன் ஜெயிச்சா நாம ஜெயிச்ச மாதிரி” என்ற பன்ச் வேலைக்காமல் போய்விட்டது. காரணம் அவ்வளவு திராபையான திரைக்கதை. டைட்டில் கிரெடிட் போடும் பொழுது பசங்க இருவரின் ஆர்வம் கொஞ்சம் புதுமையாகத் தெரிந்தது. அதோடு சரி. மனிதருக்கு பணிவு இருக்க வேண்டியதுதான். அறிமுக இயக்குநர் சாக்ரடீஸுக்கு அது மிக அதிகமாகவே இருக்கிறது. படத்தில் ஒரு காட்சி வைத்திருக்கிறார். உதவி இயக்குநராக இருக்கும் சூரியை அணுகி சென்ச்சுரி சினிமாஸ் மேனேஜர் கதை ...
ஆஹா கல்யாணம் விமர்சனம்

ஆஹா கல்யாணம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நானியின் நேரடி தமிழ்ப்படமிது என்ற போதிலும்.. தெலுங்கு ரசிகர்களுக்கும் சேர்த்துத் தயாரிக்கப்பட்டதாலோ என்னமோ படம் முழுவதும் வண்ணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. முதல் பாதியின் அத்தனை ஃப்ரேமிலும் பாதி ஸ்க்ரீனுக்கு மேல் இடம்பிடிப்பது சிவப்பு நிறம்தான். இதுவே தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும். சக்தியும் ஸ்ருதியும் இணைந்து, ‘ஃபினான்சும் ரொமான்சும் ஒண்ணு சேரக்கூடாது’ என்ற விதிமுறையை ஏற்படுத்திக் கொண்டு ‘கெட்டிமேளம்’ எனும் நிறுவனம் தொடங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ரொமான்ஸ் வந்துவிடுகிறது. பின் என்னானது என்பதுதான் கதை. ‘நான் ஈ’யில் பார்த்தே அதே நானி. ‘வெப்பம்’ படத்தில் அவர் சீரியசாக நடித்தது எதுவும் ஞாபகமில்லை. ஆனால் ‘நான் ஈ’ படத்தில் கொஞ்ச நேரம் வந்தாலும், ‘ஈ’ தான் அதில் நாயகன் என்றாலும்.. நானி மனதில் பதியுமளவு அழகாக நடித்திருப்பார். அங்கு அவருக்கு அற்பாயுசு என்பதால் அவரை படம் நெடுகும்...
இது கதிர்வேலன் காதல் விமர்சனம்

இது கதிர்வேலன் காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கதிர்வேலனின் அப்பாக்கு காதலென்றால் பிடிக்காது. ஆனால் ஆஞ்சனேய பக்தனான கதிர்வேலனுக்கு காதல் வந்துவிடுகிறது. பின் என்னானது என்பதுதான் கதை. ஓகே.ஓகே.வில் நடித்தவரா என அதிசயிக்க வைக்கிறார் உதயநிதி ஸ்டாலின். தலையை மட்டும் வேண்டிய மட்டும் ஆட்டிவந்தவரின் முகத்தில் சில பாவனைகளும் எட்டிப் பார்க்கின்றன. மீண்டும் அவருக்கு தோதான கதாபாத்திரத்தினைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். நடனமும் முயற்சி செய்திருக்கார். கேமிரா பற்றிய பிரக்ஞை கூடியுள்ளதால், சிரமமில்லாமல் தன்னை அழகாக திரையில் எக்ஸ்போஸ் செய்கிறார். சந்தானத்தின் துணையில்லாமலேயேகூட அடுத்த படத்தில் துணிந்து தனியாகவே திரையில் தோன்றலாம். அதற்கு அப்படத்திலாவது கதையிருக்க வேண்டியது அவசியம். அட்லீஸ்ட் சுவாரசியமான திரைக்கதையாவது! மயில்வாகனமாக சந்தானம். கிட்டத்தட்ட அவரின் எல்லாப் படத்தினைப் போலவே, கதாநாயகனின் காதலுக்கு யோசனை சொல்லிச் சேர்த்து வைக்கும் மிக முக்கிய...
கோலி சோடா விமர்சனம்

கோலி சோடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் பாண்டிராஜின் ‘பசங்க’ளை அப்படியே கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அழைத்து வந்து அசத்தியுள்ளார் விஜய் மில்டன். மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் நான்கு பையன்கள், ஆச்சியின் உதவியால் ஒரு மெஸ் திறக்கின்றனர். அதனால் கிடைக்கும் அடையாளத்தை இழந்ததும் அதை மீட்கப் போராடுகின்றனர். இதுதான் படத்தின் கதை. புள்ளி, சேட்டு, சித்தப்பா, குட்டிமணி ஆகியோர் தங்களது பெற்றோர் யாரென அறியாதவர்கள். மெஸ் தொடங்கியதும் ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது. ஒரு பிரச்சனையில் ஆளுக்கொரு திசையாகப் பிரிக்கப்படுகின்றனர். நால்வரில் நாயகன் என கொள்ளத்தக்க ‘புள்ளி’, பெளத்த மடாலயத்தில் வந்து அமரும் புறாவொன்றினால் ஞானதோயம் பெறுகிறான். நால்வருக்கும் இருத்தலைவிட அடையாளத்தை(!?) மீட்டெடுப்பது முக்கியமாகப்படுகிறது (பசங்களுக்கு தாங்கள் ‘மெஸ்’ நடத்துவதால் மதிக்கப்படுகிறோம் என்ற உணர்வே போராட வைக்கிறது. மெஸ் அவர்களது அடையாளமன்று). எட்டு வருடங்களுக...
வீரம் விமர்சனம்

வீரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தீபாவளிக்கு ஒரு படம், பொங்கலுக்கு ஒரு படமென அடித்து ஆடுகிறார் அஜித். அவரது வெள்ளை-கருப்பு முடி திரையில் தெரிந்ததுமே, திரையரங்கம் அதிர ஆரம்பித்து விடுகிறது. அடிதடிதான் வாழ்க்கை என்றிருக்கும் விநாயகம், அகிம்சாவாதியான நல்லசிவத்தின் மகள் கோப்பெரும்தேவி மீது காதல் வயப்படுகிறார். அடிதடி வாழ்க்கையா அல்லது கோப்பெரும்தேவியா என விநாயகம் முடிவெடுப்பதுதான் படத்தின் கதை. விநாயகமாக அஜித். வெள்ளை தாடி , வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை என திரையில் ஜொலிஜொலிக்கிறார். சும்மா வந்து நின்றாலே விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. எத்தனைபேர் வந்தாலும் அடித்து துவம்சம் பண்ணுகிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு, அஜித்தின் குரலையும் தொழில்நுட்ப உதவியால் கம்பீரமாக்கியுள்ளனர். படத்தில் அஜித்திற்கு நான்கு தம்பிகள். தமிழ் சினிமாவின் வழக்கம்போல், அஜித் ஒரு பாசக்கார அண்ணன். பாலா தான் அஜித்தின் பெரிய தம்பி. மலையாளப் பக்க...
ஜில்லா விமர்சனம்

ஜில்லா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தமுறை பொங்கல், தமிழ்த்திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் விசேடமானது. நீண்ட நாள் கழித்து அதிசயமாய் இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்துள்ளது. போதாக்குறைக்கு பொங்கலைச் சிறப்பிக்க ‘கம்ப்ளீட் ஸ்டார்’ மோகன்லாலும் களத்தில் இறங்கியுள்ளார். மதுரையின் தனிப்பெரும் தாதா சிவன். அவர் ஏதேனும் நினைத்தாலே அதை நிறைவேற்றுவான் அவரது வளர்ப்பு மகன் சக்தி. ஒரு விபத்தினைக் காண நேர்ந்து மனம் மாறும் சக்தி, அவனது தந்தையிடம் அடிதடியை விடச்சொல்கிறான். பின் என்னானது என்பதுதான் கதை. பலமுறை பார்த்துச் சலித்துப் போன ‘போக்கிரி’ பாத்திரத்தில் மீண்டும் விஜய். எதிரில் நிற்பவர் முகத்தைப் பார்த்துப் பேச மாட்டேங்கிறார். மோகன் லால் எவ்வளவு பெரிய ஆள்? கேரளாவிலிருந்து நமக்காக வந்திருக்காரே என்றாவது மோகன்லாலில் முகத்தைப் பார்த்துப் பேசியிருக்கலாம். பாடல் காட்சிகளில் மட்டும் அசின், நயன்தாராவின் பின்புறத்தைத் தொட்டவர்.. இப...
விடியும் முன் விமர்சனம்

விடியும் முன் விமர்சனம்

திரை விமர்சனம்
பிரதான கதாபாத்திரங்களை நாயகன், வில்லன் என்ற இரண்டுக்குள் தமிழ்த் திரைப்படம் அடக்கி விடும் (மிக அரிதினும் அரிதாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதால் கணக்கில் எடுக்கவில்லை). இந்த இரண்டையும் கூட இன்னும் சுருக்கி நல்லவனுக்கம் கெட்டவனுக்குமான போராட்டம் என்ற ஒற்றை பரிமானத்தை அடையலாம். ஆனால் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு மெல்லிய முக்கியத்துவத்தையாவது கொடுத்து விடுமளவு திரைக்கதை கொண்ட படம் மிக அபூர்வம். அப்படியொரு அபூர்வம் தான் ‘விடியும் முன்’ திரைப்படம்.   விலைமகளான ரேகாவையும், சிறுமி நந்தினியையும் ஒன்றுக்கும் மேற்பட்ட கும்பல் தேடி அலைகிறது. ஏன் எதற்காக என்பது தான் படத்தின் கதை.   உங்களுக்கு வினோத் கிஷனைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரது குத்திட்ட பார்வை நமக்கு நன்றாக அறிமுகமானதே! ‘நந்தா’ படத்தில் தன் தந்தையை அடித்துக் கொன்றுவிடும் அந்த சிறுவன் தான்...
நவீன சரஸ்வதி சபதம் விமர்சனம்

நவீன சரஸ்வதி சபதம் விமர்சனம்

திரை விமர்சனம்
‘மெஸ்சேஜ்’ சொல்லும் படம் வந்து நாளாகிவிட்டது என்ற குறையை மட்டும் தீர்த்துள்ளது படம்.கார்ப்பரேட் கைலாசத்திலிருந்து படம் தொடங்குகிறது. சிவன் திருவிளையாடல் நிகழ்த்த நால்வரை பூமியிலிருந்து தேர்ந்தெடுக்கிறார். சிவன் வைக்கும் சோதனையில் அந்த நால்வரும் தப்புகின்றனரா என்பது தான் படத்தின் கதை.படத்தில் சேலம் சித்தராஜ் வைத்தியசாலையை சகட்டுமேனிக்குக் கலாய்த்துள்ளனர். கோவை காமராஜ் வைத்தியசாலை எனப் பெயர் மாற்றி சித்ரா லக்ஷ்மணனை நடிக்க வைத்துள்ளனர். அவரது வாரிசாக ஜெய். சிவன் தேர்ந்தெடுக்கும் நால்வரில் ஒருவர். இரண்டாம் நபர் ஊழல் அரசியல்வாதி மகனாக வரும் சத்யன். மூன்றாம் நபர் சொர்ணாக்காவின் கணவராக வரும் வி.டி.வி. கணேஷ். நான்காம் நபர் பவர் ஸ்டாரின் வளர்ச்சி கண்டு வயிறெரியும் ராஜ்குமார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் இவர் பஜ்ஜியாக நடித்திருப்பார். நால்வரும் தண்ணியில் இருந்து தண்ணீரில் மிதக்க...
இரண்டாம் உலகம் விமர்சனம்

இரண்டாம் உலகம் விமர்சனம்

திரை விமர்சனம்
இரண்டு அனுஷ்கா. இரண்டு ஆர்யா. இரண்டு காதல். இரண்டு உலகம். ஒன்று நாம் வாழும் உலகம்; இன்னொன்று காதலற்ற உலகம்.படத்தில் இரண்டு காதல்கள் இருந்தாலும் அவைகள் வழக்கமானவையே. செல்வராகவனின் நாயகர்கள் நாயகியைச் சுற்றிச் சுற்றி வம்படியாகவும் வலுக்கட்டாயமாகவும்  ஒரு நெருக்கடியை உருவாக்கிக் காதலிக்க வைப்பார்கள். பெரும்பாலான தமிழ்ப்பட நாயகர்கள் அப்படித்தான். இந்த உலகத்தைச் சேர்ந்த மருத்துவர் ரம்யாவை, மதுபாலகிருஷ்ணன் அப்படித்தான் காதலிக்க வைக்கிறார். செல்வராகவனின் அந்த இன்னொரு உலகம் வண்ணமயமாக ஜொலிக்கிறது. மின்னும் காளான்கள், ஒளிக்கும் மரங்கள், மனித தலை கொண்ட விநோத மிருகம் (சிங்கம்), வண்ண நிலா என சி.ஜி. வேலைகளின் அசுர உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது. இவ்வளவு இருந்தும் அந்த உலகத்தில் பூக்கள் பூப்பதில்லை. அதற்கு அங்கு ஒரு காதல் தோன்ற(!?) வேண்டும். வர்ணாவின் மீதுள்ள காதலால் மருவன் இரண்டு முறை உயிரைவிட...
வில்லா விமர்சனம்

வில்லா விமர்சனம்

திரை விமர்சனம்
 ஒரு விளம்பரத்திற்காக மட்டும் பீட்சா – 2 என உபயோகப்படுத்தியுள்ளனர். எதிர்மறை சக்திகள் (Negative energy) சூழ்ந்த ஒரு மாளிகையில் தங்குபவர்கள், அவர்களுக்கே தெரியாமல் எதிர்காலம் குறித்துக் கணிக்க வல்லவர்களாக மாறுகின்றனர்.    எழுத்தாளர் ஜெபினாக அசோக் செல்வன். சூது கவ்வும் படத்தில், ஒரு பெண்ணால் வேலையிழக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் தாடி வைத்த முகத்துடன், மருந்துக்குக் கூட சிரிக்காத விரக்தியில் உழல்பவராக வருகிறார். தனக்கு சொந்தமாக மாளிகை இருக்கு என்று அறியும் பொழுதும், நாவலுக்காக ஐந்து லட்சம் ரூபாய் முன் பணம் பெறும் பொழுதும் கூட முகமலர மாட்டேங்கிறார். அவனது தந்தை வரைந்த ஓவியங்களில் உள்ளவை அனைத்தும் ஏன் அப்படியே நிகழ்கின்றன என்ற குழப்பமும், அதற்கான தேடலும் தான் முழுப்படமுமே!நாயகன் என்றால் உத்தமனாக இருக்க வேண்டுமென்ற திரை இலக்கணங்கள் எல்லாம் என்றோ மண்ணோடு மண்...