Shadow

திரை விமர்சனம்

நேரம் விமர்சனம்

நேரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காலத்தோடு இயைந்து, “சூது கவ்வும்” என்றே திரைப்படத்திற்கு பெயர் வைக்கும் அளவு தமிழ்த் திரையுலகம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், “தர்மம் வெல்லும்” என்ற காலாவதியான ஆதி நம்பிக்கையை தூசி தட்டி இப்படத்தின் கருவாக வைத்துள்ளார் இயக்குநர்.வேலையை இழந்த வெற்றிக்கு, தங்கை கல்யாணத்திற்கு வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டிய நெருக்கடி. நண்பன் அளிக்கும் பணமும் களவாடபடுகிறது. போதாக்குறைக்கு தங்கையின் கனவன் வேறு மீதமுள்ள வரதட்சனை தொகையைக் கேட்கிறான். மும்முனை தாக்குதலில் சிக்குண்ட வெற்றியின் நிலையென்ன என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு அசட்டுத்தனம் வழியும் முகத்துடன், ‘சூது கவ்வும்’ படத்தில் நடித்திருப்பார் சிம்ஹா. இந்தப் படத்தின் முரட்டு முதுகெலும்பே வட்டிராஜாவாக வரும் அவர் தான். முகபாவம், உடல்மொழி, மிரட்டலான...
நாகராஜ சோழன் MA, MLA விமர்சனம்

நாகராஜ சோழன் MA, MLA விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1994 இல் வெளிவந்து, இன்றளவும் அதன் அரசியல் நையாண்டிக்காக நினைவு கூரப்படும் படம் “அமைதிப்படை”. 19 வருடங்களுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக நாகராஜசோழன் MA, MLA படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மணிவண்ணன்.ஒரு வருட அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு, மீண்டும் தீவிர அரசியலுக்குள் வருகிறார் நாகராஜ சோழன். அவரின் வரவால் என்னென்ன அரசியல் மாற்றங்கள் நடக்கின்றன என்பதுடன் படம் நிறைவுறுகிறது.நாகராஜ சோழனாக சத்யராஜ். முகத்திலொரு நக்கலான சிரிப்புடன் படம் முழுவதும் வருகிறார். தன் பாத்திரத்தை அனுபவித்து நடித்திருப்பார் போலும். எதிர்கட்சித் தலைவரைப் போல் நாக்கைத் துருத்திக் காண்பிப்பது என சில நொடிகள் எங்கேனும் படத்தில் சிரித்த முகமாக இல்லாமல் இருப்பாரேயன்றி, மற்றபடி கடைசிக் காட்சி வரை சிரித்தபடியே உள்ளார். ‘அமைதிப்படை’யில், அமாவாசை பாத்திரத்தில் ஒரு வில்லத்தனம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் நோக்கமே ஆளுங்கட்சி...
சூது கவ்வும் விமர்சனம்

சூது கவ்வும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படம் தொடங்கிய சில நிமிடங்களில் இருந்து படம் முடியும் வரை விலா நோகச் சிரிக்க வைத்துள்ளனர் 'சூது கவ்வும்' குழுவினர்.   ஆட்களைக் கடத்தி, மிரட்டி (!?) பணம் சம்பாதிக்கும் நல்ல கடத்தல்காரர் தாஸ். ஊரை விட்டு சென்னை ஓடி வந்த ஒருவனும், வேலையை இழந்த அவனது இரண்டு நண்பன்களும் தாஸுடன் இணைந்து அமைச்சர் மகனைக் கடத்துகின்றனர். அதன் பின் தாஸ் குழுவினருக்கு என்ன நடந்தது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.   தாஸாக விஜய் சேதுபதி. 2012 இல் இறுதியில், விஜய் சேதுபதி நடிப்பில் வந்து அசத்திய நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை விட பல மடங்கு அசத்துகிறது இப்படம். இரண்டிலுமே நாயகனாக நடித்திருந்தாலும், விஜய் சேதுபதி பின் வரிசையில் நிற்கும் நபர் போலவே வருவார். எனினும் படத்தை சுமப்பவர் அவரே! கதை கேட்டு படங்களை தேர்ந்தெடுப்பதால் தான் பெரிய ஹீரோக்கள் என அறியப்படுபவர்கள் மண்ணை கவ்வும் பொழுது, விஜய் சேதுபதி திரையர...
மூன்று பேர் மூன்று காதல் விமர்சனம்

மூன்று பேர் மூன்று காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குறிஞ்சி, மருதம், நெய்தல் என மூன்று திணைகளில் வாழும் மூன்று இணைகளின் காதல் பற்றிய படம்.கண்ணுக்கு குளிர்ச்சியாய் மலையில் தொடங்குகிறது படம். வாய் ஓயாமல் பேசும் வருணாக விமல். ஏதாச்சும் பேசிய வண்ணமே உள்ளார். 'உங்க வலதுக் கையைப் பிடிச்சுக்கவா?" என விமல் கேட்பதற்கு மறுக்கிறார் நாயகி. உடனே விமல், 'அப்ப என் கையையாவது நீங்க பிடிச்சுக்குங்க' என்கிறார். உடனே வேறொரு காட்சி. வேறென்னவோ பேசுகிறார். நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். அறிமுக நடிகையான லாசினி அஞ்சனாவாக நடித்துள்ளார். நிச்சயமாகிவிட்ட அஞ்சனாவை துரத்தித் துரத்தி, மன்னிக்க, பேசிப் பேசி காதலிக்கிறார். லாசினிக்கு நிச்சயிக்கப்பட்டவருடன் பிணக்கு ஏற்பட்டு காதல் விலக, விமலின் காதலை ஏற்கிறார். லாசினிக்கு நடிக்க அதிகம் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கிடைத்ததிலும் சோபிக்கவில்லை. விமல் திடீரென லாசினியுடன் பேசுவதை தவிர்க்கிறார்.ஏன...
எதிர்நீச்சல் விமர்சனம்

எதிர்நீச்சல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உங்க பெயர் குஞ்சிதபாதம் என்றிருந்திருந்தால்.. உங்க நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்தப் படத்தின் நாயகனுக்கு அது தான் பிரச்சனை. அவனது பெயருடன் எதிர்நீச்சல் போட்ட வண்ணம் உள்ளான்.நாயகன் ஹரீஷாக சிவகார்த்திகேயன். இவரது பூர்வாசிரம பெயர் தான் குஞ்சிதபாதம். அசட்டுத்தனமாய் சிரித்தபடி முகத்தை வைத்திருப்பதில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார். விஜய் டி.வி.யில் பெற்ற அடையாளங்களை, 3 படத்திற்குப் பிறகு முடிந்த மட்டும் உதறியுள்ளார். நாயகி கீதா மிஸ்ஸாக ப்ரியா ஆனந்த். வாமனன், புகைப்படம், 180 என தமிழில் முன்பே நடித்துள்ளார். ஸ்ரீதேவியின் கம்-பேக்கான இங்கிலீஷ் விங்கிலீஷிலும் நடித்திருப்பார். ஆனால் இப்படம் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கும். இப்படத்தில் குழந்தைகளுடன் சிரித்து சிரித்துப் பேசிப் பழகும் ஆங்கில ஆசிரியையாகவும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பணம் 'கலெக...
நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்

நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன்னை போல் இருக்கும் ராஜாவைத் தேடி, இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து சென்னை புறப்படுகிறான் ஜீவா. ஜீவா ராஜாவை சந்திக்கிறானா இல்லையா என்பதற்கு பதிலுட்ன் படம் நிறைவேறுகிறது.நாயகனாக நகுல். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவரது படம் மீண்டும் வந்துள்ளது. அவரது முதற்படமான 'பாய்ஸ்' வந்து பத்து வருடங்கள் ஆகிறது. எனினும் அவர் கொஞ்சி பேசும் தமிழ் மட்டும் இன்னும் மாறவே இல்லை. இந்தப் படத்தில் கிக்-பாக்சிங் வித்தகராக, திலீப் சுப்பராயனின் ஸ்டன்ட்டில் ரசிக்க வைக்கிறார். ரேனிகுண்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிஷாந்த் நகுலின் நண்பன் வஹாப்பாக நடித்துள்ளார். நன்றாக நடித்திருந்தாலும், அவரது வாயிலும் வசம்பைத் தேய்க்கணும்.நாயகியாக அவின் மோடி. ரீமா என்ற பாத்திரத்தில் நாயகனுக்கு தோழியாக நடிக்கிறார். திடீரென வில்லியாகி அவதாரம் எடுத்து கிலியை ஏற்படுத்துவார் என பல திரைப்படங்கள் பார்த்த அனுபவத்...
யாருடா மகேஷ் விமர்சனம்

யாருடா மகேஷ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் ட்ரெயிலர் தான் படத்தின் மூளதனமே!! ('ல' குறில் அல்ல நெடிலே!! மூளையின் மழூஉ.)பொறுப்பற்ற ஞாபக மறதிக்காரனான ஷிவா சிந்தியாவைக் காதலிக்கிறான். கல்யாணம் செய்துக் கொள்கிறான். அவர்களுக்கு குழந்தையும் பிறந்து விடுகிறது. மகேஷ் என்பவரிடமிருந்து சிந்தியாவிற்கு ஒரு அழைப்பு வருகிறது. யார் "அந்த" மகேஷ் என்றும், அவனை சிவா கண்டுபிடித்தானா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது. இந்தப் படத்தில் வரும் அனைத்தும் "குறியீடுகள்" என்ற வாசகம் எழுத்தாகவும், அதை மேஜர் சுந்தரராஜன் குரலில் படித்தும் காட்டுகின்றனர். படத்தின் தொடக்கத்தில் இருந்தே இயக்குநரின் சேட்டை தொடங்கி விடுகிறது. கூட்டமாக நிற்பவர்களில் ஒருவர் மீது மட்டும் ஏன் கல் விழுகிறது என தமிழிலும், ஆங்கிலத்திலும் சொல்லி கதையை அனிமேஷனில் தொடங்குகின்றனர். அரைத்த மாவை அரைக்காமல் புதிதாக முயற்சி செய்துள்ளனர். முதல் பாதி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்...
உதயம் விமர்சனம்

உதயம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மழைப் பொய்த்த மாரிக் காலத்திற்கு பின் வரும் கடும்கோடையின் வறட்சி போல தமிழ்த் திரைப்படங்களில் கதைக்கான வறட்சி நிலவுகிறது.கதையில் பல ‘மீண்டும்’. பதின்மத்தில் இருக்கும் நாயகி காதல் வயப்படுகிறாள். அவளை, காவலை மீறி நாயகன் தூக்கிச் செல்கிறான். தங்களை துரத்துபவர்களிடம் இருந்து காதலர்கள் தப்பினரா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வியக்க வைக்கிறார். இது அவரது முதற்படமாக வர வேண்டிய திரைக்கதை என சொல்லப்படுகிறது. பிருத்விராஜ் – சம்யுக்தா கதை எண்ணற்ற முறை சொல்லப்பட்டு விட்டாலும், அதை மற்றொரு முறை சுவாரசியமாக சொல்ல முயன்றுள்ளார். படத்திலிருந்து பார்வையாளனை விலகாமல் பார்த்துக் கொள்கிறார். ஆனால் படம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. உதாரணம் நாயகி போலவே நாயகன் “எப்படி”யும் வந்த...
சேட்டை விமர்சனம்

சேட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த 'டெல்லி-பெல்லி' ஹிந்திப் படத்தின் தமிழ் ரீ-மேக். கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் மூன்று பத்திரிகையாளர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பது தான் கதை.காமெடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார் சந்தானம். மேலும் படத்தின் நகைச்சுவைப் பகுதிக்கும் (ஸ்க்ரிப்ட்) பொறுப்பேற்கிறார் சந்தானம். பாட்ஷா ரஜினி போல் டையமன்ட்டை ஒப்படைத்து விடாலும் என்ற பிரேம்ஜியின் யோசனைக்கு,  'ரஜினி நக்மாவை உஷார் பண்றதுக்காக டையமன்ட்டைக் கொடுத்தார்' என சிந்தாமல் சிதறாமல் கவுன்ட்டர் வசனம் பேசி.. எப்பொழுதும் போல் படத்தின் கலகலப்பிற்கு காரணமாகிறார். யாரோ வீட்டிற்குள் புகுந்து விட்டார்கள் என அடிக்க வரும் வீட்டினர்.. ஃபர்தா அணிந்திருந்தவரைப் பார்த்ததும் அடிக்காமல் தயங்கி நிற்பார்கள் டெல்லி-பெல்லி படத்தில். ஆனால் ஃபர்தாவால் முகத்தை மூடாத சந்தானம், "முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி;  கேட்காம உங...
சென்னையில் ஒரு நாள் விமர்சனம்

சென்னையில் ஒரு நாள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ட்ராஃபிக் என்ற மலையாளப் படத்தின் அழகான தமிழ் ரீ-மேக்.ஓர் உயிரைக் காப்பாற்ற ஒன்றரை மணி நேரத்தில் 170 கி.மீ. தரை வழியாக பயணித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்தப் பயணம் வெற்றிப் பெற்றதா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.ட்ராஃபிக் கான்ஸ்டபிள் சத்தியமூர்த்தியாக சேரன். லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்ட அவமானத்தில் இருந்து மீள ஒரு சாகசத்திற்கு தயாராகும் நல்லவர். எதையோ இழந்தாற் போலவே முகத்தை வைத்துள்ளார். பயணத்தில் வெற்றியடைந்த பின்பும் கூட அவருக்கு அகமும், புறமும் மலருவேனா என்கிறது. பழித் தீர்க்க ஒரு காரியம் செய்யும் பொழுது முகம் அப்படித் தானே இருக்கும். கெளதம் கிருஷ்ணா என நட்சத்திர அந்தஸ்த் நடிகராகவே பிரகாஷ் ராஜ். "நான் யார் தெரியுமா?" என தலையில் பெரிய கனத்தை வைத்துக் கொண்டிருக்கும் பாத்திரத்தில் நிறைவாக செய்துள்ளார். ஆனால் அதிக அலட்டலின்றி தன் உடல்மொழியால் குற்றவுணர்வைக் காட்டுகிறார...
கேடி பில்லா கில்லாடி ரங்கா விமர்சனம்

கேடி பில்லா கில்லாடி ரங்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது முதல் மற்றும் மூன்றாவது கதாநாயகனுடன் இணைந்து தனது நான்காவது படத்தைப் படைத்துள்ளார் இயக்குநர் பாண்டிராஜ்.கேசவனும், பட்டை முருகனும் இணைப்பிரியா நண்பர்கள். வேலையும் பொறுப்பும் அற்றவர்கள். எங்கே காதலித்தால் நட்பு பிரிந்து விடுமோ என காதலிக்காத உத்தமர்கள். ஆனால் விதியாகப்பட்டது வலியது என்பதால்.. பட்டை முருகன் பாப்பாவைப் பார்க்கிறான்; கேசவன் மித்ர மீனலோஷனியைப் பார்க்கிறான். காதல் வந்தாலும் பொறுப்பு வந்தபாடில்லை. வியர்வை சிந்தாமல் அரசியலில் குதித்து பொறம்போக்கு நிலங்களை தங்கள் போக்கு நிலங்களாக மாற்றிக் கொள்ளும் உயரிய லட்சியத்துடன் வலம் வருகிறார்கள்.தங்கள் காதலிகளையும் லட்சியத்தையும் அடைந்தார்களா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.கேடித்தனம் இல்லா பில்லா கேசவனாக விமல். பசங்க, களவாணி, தூங்கா நகரம், கலகலப்பு என தொடர்ந்து பிரதி மாறாத கதாபாத்திரங்கள் கொண்ட படத்தின் வரிசையில் மேலும் ஒன்ற...
பரதேசி விமர்சனம்

பரதேசி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இன்னுமொரு படமென ஒதுக்க முடியாதவைகளே பாலாவின் படைப்பு. மீண்டும் அதை, முன்பை விட அழுத்தமாக உணர்த்துகிறது 'பரதேசி'. லட்சணமாய்ப் பார்த்துப் பழகிய நாயகன் முகத்தை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு அழுக்குப்படுத்தி விடுவார் பாலா. அத்தகைய நாயகனின் பிம்பம் கொண்டு பார்வையாளர்கள் மீது முதல் தாக்கத்தினை ஏற்படுத்துவார். அந்த அழுக்கு முகம் கொண்ட நாயகர்கள், மற்ற தமிழ்ப்பட நாயகர்களைப் போல சராசரியானவர்களே. உதாரணம் ஷங்கரின் நாயகர்களுக்கு லஞ்சம் வாங்குவதும், பேரரசின் நாயகர்களுக்கு ரவுடியிசமும் பெருங்குற்றம். பாலாவின் நாயகர்களுக்குத் தங்களை ஆதரவளிப்பவர்களைக் கொன்றால் பெருங்குற்றம். 'பாவத்தின் சம்பளம் மரணம்' என்பதே பெரும்பாலான தமிழ்ப்படங்கள் முன் வைக்கும் நீதி, நியாயம், தர்மம் இத்யாதி எல்லாம். சமீபத்திய விதிவிலக்கு: வத்திக்குச்சி. "எது பாவம்?" என்று நிர்ணயிப்பதில் மட்டுமே இயக்குநர்கள் மாறுபடுகிறார்கள். நாயகர்களி...
வத்திக்குச்சி விமர்சனம்

வத்திக்குச்சி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"வத்திக்குச்சி பத்திக்காதுடா.. யாரும் வந்து உரசுற வரையில.." ஏ.ஆர்.முருகதாசின் இயக்கத்தில் வந்த முதல் படமான தீனாவில் வரும் பாடல் வரிதான் அவரது தயாரிப்பில் இரண்டாவது படமாக வந்திருக்கும் வத்திக்குச்சி படத்தின் ஒரு வரி கதை. ஏ.டி.எம். வாசலில் சக்தி என்னும் இளைஞனின் கழுத்தில் கத்தி வைத்து பணம் பறிக்கிறது ஒரு கும்பல். இந்த உரசலில் பத்திக் கொள்ளும் நாயகனின் எதிர்வினை தான் படம். சும்மா கொழுந்து விட்டு எரிகிறது. ஆனால் அதனால் எவரும் எரியப்படவில்லை என்பது தான் படத்தின் பிரத்தியேக விசேஷம். நாயகன் சக்தியாக புதுமுகம் திலீபன் நடித்துள்ளார். இவர் ஏ.ஆர்.முருகதாஸின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் சாலையில் பார்க்க கூடிய எண்ணற்ற முகங்களில் ஒன்றைப் பெற்றுள்ளார். வாட்டசாட்டமாய் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். வேறு எவரேனும் நடித்திருந்தால், முக்கியமாக முன்னணி நாயகர்கள் யாராவது நடித்திருந...
சுண்டாட்டம் விமர்சனம்

சுண்டாட்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கேரம்-போர்ட் விளையாட்டை மையமாக கொண்டு வந்திருக்கும் படம் என்பதை தான் 'சுண்டாட்டம்' என்ற தலைப்பு உணர்த்துகிறது.படத்தின் களம் வடச் சென்னை என்பதிலிருந்தே கதையை யூகிக்கலாம்.'படத்தில்இரண்டு நாயகன்கள். ஒன்று இர்ஃபான். இன்னொன்று மது' என சொல்லியுள்ளார் இயக்குநர் பிரம்மா G. தேவ். காசி என்னும் பாத்திரத்தில் நடித்துள்ள மதுவைநாயகன் என சொல்ல முடியாது. ஆனால் படத்தின் முதுகெலும்பு அல்லது மிக முக்கியமான கதாபாத்திரம் இவர் தான். அவரது போதையில் சொருகிய கண்கள், வசனம்உச்சரிக்கும் தொனி, தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் உடல்மொழி, உள்ளுக்குள் குமுறி அவமானத்தை வெறியாக வளர்த்துக் கொள்ளும் இயல்பு, செம்பட்டை தலைமுடி என மிரட்டுகிறார் மது.கேரம் விளையாட்டில் பெரும் விருப்பம் கொண்ட நாயகன் பிரபாகரனாக இர்ஃபான். கையில் ஸ்ட்ரைக்கர் கிடைத்தால்.. அனைத்து காயின்களையும் குழிக்குள் கச்சிதமாக சுண்டி விட்டுவிட...
ஒன்பதுல குரு விமர்சனம்

ஒன்பதுல குரு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒருவருக்கு ஒன்பதுல குரு இருந்தால் அவர் மேற்கொள்ளும் செயல்கள் எல்லாம் வெற்றியடையும் என்கிறது ஜோதிடம்.நண்பர்கள் நால்வர் 'பேச்சுலர் பார்ட்டி'க் கொண்டாட பெங்களூரு செல்கின்றனர். அவர்களுக்கு அங்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து எப்படி மீண்டனர் என்பது தான் படத்தின் கதை().தமிழ்ப்படம் போல முயன்றுள்ளனர். நாயகன் பில்லா டேவிட்டாக வினய். படத்தில் வரும் அவரது நண்பர்களின் பெயரும் அப்படியே. ரங்காவாக சத்யன், கோச்டையானாக அரவிந்த் ஆகாஷ், குருவாக சாம்ஸ்.இவர்கள் நால்வரும் தான் டைட்டில் கேப்ஷனில் வரும் 4 இடியட்ஸ். அந்த நால்வரும் படம் பார்க்க வரும் அனைவரையும் தங்களைப் போலவே மாற்ற முயல்கின்றனர். சத்யம், வினய், அரவிந்த் ஆகாஷ் மூவருக்கும் திருமணமாகி விடுகிறது. திருமண நாள் நிச்சயிக்கப்பட்டிருந்த சாம்ஸை பெங்களூரு அழைத்துக் கொண்டு செல்கின்றனர். போன இடத்தில் சாம்ஸ் காணாமல் போய் விடுகிறார். போதும் போதும் என்று ப...