Shadow

கட்டுரை

யார் தாதா?

யார் தாதா?

அரசியல், கட்டுரை
(செவி வழி கதை)மும்பையில ஒரு பெரிய தாதா.. இருக்கேனே அவன் பெயர் என்ன?ஏதோ இப்ராஹிம்னு வருமே!!ஆங்... தாவூத் இப்ராஹிம். பாகிஸ்தானுல இருக்கான் இப்ப. அவன் மதுரையில ஒருபெரிய நகைக் கடை ஆரம்பிச்சிருக்கான். அழகிரி போய் காசு கேட்டிருக்கான்.அவனுங்க தரல. அந்த கடை திறப்பு விழாவிற்கு முன்னாடி நாளு, அந்த கடைஇருக்கிற தெருவை சுத்தி பெரிய பள்ளம் வெட்டி கடைக்கு போக வழி இல்லாமசெஞ்சுட்டாங்க.உடனே தாவூத் கலைஞருக்கு போன் பண்ணி, "உன் பேரனும், கொள்ளுப் பேரனும் இந்தரோட்டுல இந்த கார்ல போயிட்டிருக்காங்க. நீ உன் பணத்த எல்லாம் புதைச்சுவச்சிருக்கிற இடத்துல என் ஆளு 'பெட்ரோலோடும் 'லைட்டரோடும் நிக்கிறான்"என்று சொல்லியிருக்கான்.கலைஞர் வாயே திறக்கல. உடனே மதுரைக்கு போன் பண்ணார். நைட்டோட நைட்டா புதுரோடு போட்டுக் கொடுத்திருக்காங்க. நான் கேட்கிறேன்.. இவங்களுக்கு ஏன் இந்தவேலை? நிழல் உலகத்துல இருக்கிற அவன் ஏதாச்ச...
இது தான்டா போலீஸ்!!

இது தான்டா போலீஸ்!!

கட்டுரை, சமூகம்
1973, சிதம்பரம்..சைக்கிளில் டைனமோ இல்லாமல் சென்ற இருவரை மடக்குகிறார் காக்கி சட்டை காவல்காரர். சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தவர் மிடுக்காக இறங்கி, தனது பையில் கை விட்டு தபால் ஆபீசில் தரப்படும் அடையாள அட்டையை எடுத்து நீட்டுகிறார். காவல்காரர் அதைப் பார்த்து விட்டு, "நீங்க போகலாம் சார்" என்று பம்முகிறார்."இவன் என் பையன்" என்று பின்னால் அமர்ந்திருந்த பையனை காட்டி, "இந்த காலேஜுல தான் படிக்கிறான். ஏதாச்சும் பிரச்சனைன்னா பார்த்துக்குங்க" என்று ஆங்கிலத்தில் சொல்கிறார். "சரிங்க சார்."1989, கடலூர்..வேகமாக சென்றுக் கொண்டிருந்த இரு சக்கர வண்டியை நிறுத்துகிறார் காவல்காரர்."எங்கடா போற?" "சகாயம் சார் ட்யூஷனுக்கு." "துரை ஏன் இவ்ளோ வேகமா போறீங்க? லைசென்ஸ் இருக்கா?" "இல்ல சார்." "ஓ.. துரைக்கு லைசென்ஸ் வேற இல்லையா?" என்று மீசை கீழ் நான்கு பற்கள் தெரிவது போல் நமுட்டு சிரிப்பை உதிர்ந்த...
பொன்மொழியில் புதைந்துள்ள உண்மைகள்

பொன்மொழியில் புதைந்துள்ள உண்மைகள்

கட்டுரை, மற்றவை
பெண் புத்தி பின் புத்தி இதற்கு பெரும்பாலனோர் கொண்டுள்ள பொருள் பெண் தவறாக/பிற்போக்காக/மடமையாக/ சிந்திப்பாள் என புரிந்து கொண்டுள்ளனர்.இதற்கு சரியான பொருள் பெண் எப்பொழுதும் எதிர்காலம்/பின்னால் வரக்கூடிய/முன் எச்சரிக்கையாக/ யோசிப்பவள் என்பதுதான் அர்த்தம்.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் இதற்கு பெரும்பாலனோர் கொண்டுள்ள பொருள் வேறு ஒருத்தருடைய குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன்னுடைய பிள்ளை தானாக வளரும் என புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் தன்னுடைய மனைவி என்பவள் வேறுஒருத்தனுடைய குழந்தை ஆகையால் தன் மனைவியை நன்றாக(கர்ப்ப காலம்/ எப்பொழுதுமே) ஊட்டி வளர்த்தால் அவள் அவனுடைய குழந்தையாய் நன்றாக கவனித்துக் கொள்வாள். எப்படியோ யாருடைய குழந்தையாக இருந்தாலும் சரி ஊட்டி வளருங்கள் அது யாராக இருந்தாலும். போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை..  வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை  போலீஸையும் வாத்தியார...
BJP – ஜஸ்வந்த் சிங் நீக்கமும் அதன் பின்பக்கமும்

BJP – ஜஸ்வந்த் சிங் நீக்கமும் அதன் பின்பக்கமும்

அரசியல், கட்டுரை
சிம்லாவில் நடைபெற்றுவரும் ''சைதன் பைதக்'' எனும் செயற்குழு அவசர அவசரமாக 30 வருடங்களாக BJP யில் உழைத்த '' ஜஸ்வந்த் சிங் '' நீக்கப்பட்டதாக அறிவித்தது. ஜஸ்வந்த் சிங் உடனே தான் அனுமனாக BJP யில் இருந்ததாகவும் தற்பொழுது ராவணனாக  என்னை மாற்றி உள்ளனர் என்றும் சொல்கிறார்.அவருக்கு விளக்கமளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. TV மீடியாக்கள் தொடர் செய்தியாக இதை ஒளிபரப்பி வருகின்றன. ஜஸ்வந்த் சிங் செய்த பிழை தான் என்ன? ஒரு புத்தகம் எழுதினர் என்பது தான் குற்றச்சாட்டு. பாகிஸ்தான் தேசத்தை, பாகிஸ்தான் தனிநாடு தோன்றுவதற்கு காரணமான ஜின்னா புகழதக்கவரா? அதுவும்  BJP எனும் இந்துமத கொள்கையுடைய கட்சியை சார்ந்தவர் புகழ்வதா? இது எப்படி நிகழ்ந்தது ஜஸ்வந்த் சிங் மட்டும் ஏதோ வாய்தவறி (கைதவறி) புகழ்ந்துவிட்டார் என்று சொல்லமுடியாது. 2005 -ம் ஆண்டு L.K. அத்வானி பாகிஸ்தான் சென்ற போது ஜின்னாவை புகழ்ந்தார் உடனடியாக அ...
அது என்ன… காதல்!

அது என்ன… காதல்!

கட்டுரை, மற்றவை
யார பார்த்தாலும் நான் அவள காதலிக்கிறேன், இவன காதலிக்கிறேன் என்று சொல்றாங்க. ஆனா.. எனக்கு இந்த காதல் மட்டும் ஒரு புரியாத விஷயாமாகவே இருக்கு. ஏன் எரிச்சலா கூட தான் இருக்கு? இத சொன்னா என்னை இதயம் இல்லாதவன் என்று சொல்றாங்க.சரி காதல் என்ற வார்த்தைக்கு இலக்கண இலக்கியத்தில் பொருள் தேடி, ஓலைச் சுவடி எல்லாம் கூட ஒன்றிரண்டு புரட்டினேன். காதல் என்பது பெரும்பாலும் வினைச் சொல்லாகவும்(Verb), சில இடத்தில் பெயர்ச் சொல்லாகவும்(Noun) உபயோகிக்கப் படுகிறது.ஓடுபவன் -ஓடுகிறவர்களை குறிக்கின்றது. சாப்பிடுகிறவன் - சாப்பிடுபவர்களை குறிக்கின்றது. காதலன் -காதலிப்பவர்களை குறிக்க வேண்டும் அல்லவா.. ஆனால்? "அவன் தான் என் காதலன்" என்றல்லவா சொல்கிறோம். சரியாக புரிந்து கொள்ள முடியாதவர்கள் மீண்டும் படியுங்கள். "அவன் தான் என் சாப்பிடுகிறவன்/ஓடுபவன்" என்பது எவ்வளவு முட்டாள் தனமான வாக்கியமாக படுகிறது. "நான் தான் காதலன்/...